http://d2na0fb6srbte6.cloudfront.net...0-ac48d66f7e49
Printable View
சத்யம் என்ற இசையமைப்பாளர் ..
அதை இதை உல்டா செய்து டியூன் செய்வதில் வல்லவர்
அதே சமயம் நல்ல சில டியூன்களையும் கொடுத்துள்ளார்
இதோ அற்புதமான கன்னட பாடல் சத்யம் இசையில் பி.பி.எஸ் மற்றும் இசையரசி குரல்களில்
https://www.youtube.com/watch?v=zTmvkDuLXgM
இதே மெட்டை தெலுங்கில் சோலாவாக்கினார்
https://www.youtube.com/watch?v=Bdxs_alRxI4
ராகவேந்திரன் சார் (உறுதிப் படுத்தவும்)
உடுத்தா சரோஜினி இவர்தானாம்
http://1.bp.blogspot.com/_BbJAArGDIE...0/IMG1634A.jpg
இவர் கே.ராணி
http://4.bp.blogspot.com/_BbJAArGDIE...0/IMG1636A.jpg
இவர் ஏ.பி.கோமளா
http://4.bp.blogspot.com/_BbJAArGDIE...0/IMG1632A.jpg
இவர் பாலசரஸ்வதி தேவி
http://4.bp.blogspot.com/_BbJAArGDIE...0/IMG1623A.jpg
இவர் ஜமுனாராணி
http://1.bp.blogspot.com/_BbJAArGDIE...0/IMG1633A.jpg
லதிகா என்ற பாடகி 80’களில் சில நல்ல பாடல்கள் பாடினார்
இதோ கிருஷ்ணசந்திரனுடன் பாடும் அழகான பாடல்
https://www.youtube.com/watch?v=UKsgnUfdH6Q
வாசு ஜி
உடுத்தா சரோஜினிக்கு இசையரசியின் டிரஸ்ட் மூலமாக உதவி செய்தார்
இதோ உடுத்தா சரோஜினி இப்பொழுது
https://www.youtube.com/watch?v=YMgUSNF3V-4
arumaiji! mugam appadiyethaan irukku
பாலசரஸ்வதி முதலில் நடிக்கவும் செய்தார்.
ராஜேஸ்வரராவ் - பாலசரஸ்வதி சேர்ந்து கச்சேரிகளும் பாடுக்களும் நிறைய பாடியது உண்டு.
எல்லோருக்கும் வணக்கமுங்க... கொஞ்சம் உடல் நிலை மக்கர் செய்யுது..
பல்லாக்கு போல வண்டி பாதியிலே நிப்பதாலும் தள்ளாத வயது என்பதாலும் கொஞ்சம் ரெஷ்ட் எடுத்துக்கிட்டு வர்ரேன்.
அதுவரைக்கும் மன்னிச்சுக்குங்க சாரே !
மதுண்ணா!
உடல்நிலையை முதலில் கவனித்துவிட்டு நன்கு ஒய்வு எடுத்துவிட்டு வாருங்கள். உடல்நிலைதான் மிக முக்கியம்.
மதுண்ணாவ்..டேக் கேர் ஆஃப் யுவர் ஹெல்த். அப்பப்ப முடிஞ்சப்ப வந்து க்ளக்ஸ் சொல்லிட்டுப் போய்டுங்க..:)
வாசு, ஒரே படத்தை ரெண்டு வாட்டி கண்டின்யுவஸ்ஸாவா.. அது கொஞ்சம் கஷ்டமோன்னோ.. உங்களை யாரு குருவில்லாம் பாக்கச் சொன்னா..கத்தின்னு இன்னொண்ணு இருக்கு (எல்லாரும் பயமுறுத்தினதால நான் டிவில கூட பாக்கலை) விஜய் படத்துல துப்பாக்கிக்கப்புறம் சொல்லிக்கற மாதிரி எதுவும் வரவில்லை என்று தான் சொல்லவேண்டும்..சூர்யா இன்னும் பின் செல்லவேண்டும் - கஜினி. அஜீத் வீரம் படத்தில் கொஞ்சம் பார்க்க வைத்துவிட்டார்..வேதாளம் எப்படியோ தெரியாது..பத்து என்றதுக்குள்ளயும் ரிசல்ட் ரிவ்யூ..அவ்வளவாக மனம் தொடவில்லை..தீபாவளிக்கு முன்னால்யே தூங்காவனம் ரிலீஸாம் உண்மையா..
எனிவே தியேட்டர்ல க்யூல நின்னு பார்த்த வழக்கம் அறவே நின்னு ரொம்ப நாளாச்சு இல்லியோ..
வாஸ்ஸு.. தீபாவளிக்காவது புது பக்கெட் வாங்குங்க..பழைய பக்கெட் தொல்லைதாங்க முடியலை :) ஒரே பாட்டி படமாப் போடுது :)
சின்னாச்சி!
அவுங்களையெல்லாம் யாருன்னு நெனச்சீக. ம்.. அதெல்லாம் பாட்டிதான். ஆனா பாட்டு பா(ர்)ட்டிங்க.:) காலத்தை குரலால் ஜெயிச்சவங்க. அவுங்க போட்டோ கிடைக்கறது குதிரைக் கொம்பு. அவங்க யாருன்னு எல்லோரும் தெரிஞ்சிக்கணும் இல்லையா? ஒவ்வொருத்தவங்க குரலும் மணி மணி.
குறிப்பா ராணி பாட்டை கூகுள் பண்ணி கேட்டுப் பாருங்க. பாலசரஸ்வதி என்ன அழகு பார்த்தீங்களா?:)
//வாசு, ஒரே படத்தை ரெண்டு வாட்டி கண்டின்யுவஸ்ஸாவா//
'ஞானஒளி' காவியத்தைத் தொடர்ந்து 3 தரம் பார்த்திருக்கேன்.
vanakkam
//குறிப்பா ராணி பாட்டை கூகுள் பண்ணி கேட்டுப் பாருங்க. பாலசரஸ்வதி என்ன அழகு பார்த்தீங்களா// பாலசரஸ்வதி ரொம்ப அழகாக்கும்னு என் தாத்தா சொன்னது நினைவில் - காலங்கார்த்தாலே கார்க்கண்ணாடியில்படிந்திருக்கும் பனித்துளிகளை காருள்ளிருந்து பார்த்தால் எப்படி காட்சி மங்கலாகத் தெரியுமோ அதுபோல - மங்கலாக வருகிறது..
கே. ராணிய கூகுள்பண்ணிப் பார்க்கணுமாங்காட்டியும்.. பின்ன எதுக்கு நாங்க ஒம்ம வச்சிருக்கோம் :) சரி ஈஈ.. தேவதாஸ்ல பாட் பாடியிருக்காங்க போல இருக்கே..( நாகூர் ஹனீபா கூடவும் பாடியிருக்கார்..பாடல்கள் கேட்டதில்லை)
உறவும் இல்லை பிரிவும் இல்லை ஒன்றுமே இல்லை
எனது வாழ்வின் இன்ப ஜோதி எங்கே போனாயோ
https://youtu.be/C7HUrJJPi3w
ராணி பாடல்கள் என யோசித்துப் பார்த்தால் முதலில் நினைவுக்கு வருவது...
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்குத் தான் எனச் சொல்லவேண்டும்..
ஹப்புறம்
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்..
சீட்டுக்கட்டு ராஜா ஓ இதில் ராணியில்லியோ.. :) ராஜாராணி ஜாக்கி வாழ்வில் என்னபாக்கி
ராணி மகாராணி வேகவேகமாகவந்த நாக ரீக ராணி
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுமே நீ கண்ணே என் மனசை விட்டுச் செல்லாதே..
நான்மங்காத்தா ராணி போல வாரேன்
ஒரே ஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை
சரி லிஸ்ட் தொடரலாம்.. கே. ராணி பாட் கேட்டுக்கிட்டே..
நிலாவிலே ஒய்யாரம் உலாவுதே அனுராகம்..
பெற்ற தாய் படத்திலிருந்து எம். என் நம்பியார், பி.ஷாந்த்தா.. பாடியவர் கே.ராணி ஏ.எம்.ராஜா
https://youtu.be/z6TRXARSgR8
ராணி கானலிஸ்ட் தொடர்கிறது..
மகராஜா மகராணி இந்த இருவருக்கும் ஒரு குட்டி ராணி
மகாராஜன் உலகை ஆளுவான் இந்த மகாராணி அவனை ஆளுவாள்
//நீச்சல் குளம் இருக்கு நீரும் இல்லை
இதில் எங்கு நீச்சலடிக்க?
அத்தர் கொண்டு அதை நிரப்ப வேண்டும்
இந்த அல்லி ராணி குளிக்க// அப்ப சோப் இல்லியா..சே அழுக்கே போகாது..
ராஜா வாடா சிங்கக்குட்டி ராணி வாடி தங்கக் கட்டி பூவும்பொட்டும் அள்ளிக்கட்டி
**
கே.ராணி பற்றி வேம்பார்மணிவண்ணன் என்ன சொல்கிறார்..
///இன்னிசை ராணி" பாடகி - கே ராணி--
************************************************** *******
21-7-1951-ல் வெளிவந்த " மோகனசுந்தரம்" படத்தில் பி லீலாவுடன் இணைந்து "ஒயிலான மயிலாட்டம்" என்கிற பாடலை பாடி அறிமுகமானார் கே ராணி... ஆனால் அதே வருடம் (29-10-1951) சிங்காரி படத்தில் எஸ் வி வெங்கட்ராமன் இசையில் கே ஹெச் ரெட்டியுடன் இணைந்து அவர் பாடிய தஞ்சை ராமய்யா தாசின் " ஒரு ஜான் வயிறே இல்லாட்டா" பாடல் கே ராணிக்கு மிகப்பெரிய புகழைப் பெற்றுத்தந்தது ... அதே படத்தில் இன்னொரு பாடல் "கோணாத மரத்தினிலே" - பாடல் தஞ்சை ராமையாதாஸ் - இணைந்து பாடியவர் கே ஹெச் ரெட்டி ...
1952-ல் டி எம் எஸ் சுடன் அவர் இணைந்து பாடிய "கல்யாணி" படத்தில் இடம் பெற்ற " இனி பிரிவில்லாமலே வாழ்வோம் நாம் உலகிலே" பாடல் தமிழ் திரை உலகின் சிறந்த பாடல்களில் ஒன்றாய் பதிவாகியது... "தர்மதேவதா" 1952-ல் ராமசந்திரனுடன் அவர் இணைந்து பாடிய " ஜோரான மின்னல் போலே" பாடலும் புகழ் பெற்றது...
தொடர்ந்து 1953-ல் சி ஆர் சுப்பாராமன் இசையில் வெளிவந்த "தேவதாஸ்" பாடல்கள் - "எல்லாம் மாயை தானா" , "உறவும் இல்லை பகையும் இல்லை" இரண்டும் தேவ கானமாய் ஒலித்தன.. இதே ஆண்டு "திரும்பிப்பார் படத்தில் ஏ எம் ராஜாவுடன் இணைந்து "கன்னியரின் வெள்ளை மனம் போல்"- "சண்டிராணி" படத்தில் தனியாக "வாராமலே வந்த நாளிதே" பாடல்களைப் பாடினார் ...
பி சுசீலா அறிமுகமாகிய "பெற்றதாய்" (1953) படத்தில் இரண்டு பாடல்கள் கே ராணிக்கு... "மாமயில் போல் ஆடி"( "நிலாவிலே ஒய்யாரம்" ... இரண்டுமே மெய்மறக்க செய்யும் பாடல்கள்...
சுசீலாவிற்கு இணையான இனிய குரல் கொண்ட ராணி அவர்களுக்கு பின்னாட்களில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை... இது தமிழ் திரை இசை உலகிற்கு ஒரு இழப்புதான்... பின்னாட்களில் ஒன்றிரண்டு பாடல்களையே அவர் பாடினார்... அதில் குறிப்பிடத்தகுந்தவை... அழகிய தாமரை கண்ணா( -(குழந்தைகள் கண்ட குடியரசு 1960) இன்பம் கொண்டாடும் மாலை -(இந்திரா என் செல்வம் 1962),
"இன்னிசை ராணி" பட்டம் கே ராணிக்கு "கர்மவீரர்" காமராஜர் அளித்தது... இதிலிருந்தே ராணி அவர்களின் குரல் இனிமையை நாம் உணரலாம்... //
**
ஸோ கே. ராணியைப்பத்தித் தெரிஞ்சுக்கிட்டதால மகுடம்காத்த மஙகையில் டி.ஏ. மோத்தி,ஜிக்கி டூயட் பாக்கலாம் கேக்கலாம் :)
ஆஹா என்னைப் பார் மன்னா - அந்தக்காலத்திலேயே அழகா சுடிதார் அண்ட் பெண்டண்ட்.. வெரி நைஸ் இல்லியோ.. யாராக்கும் இருவரும்..(திட்டினாலும் விளக்கம் கிடைக்குமே)
https://youtu.be/czIe3-xYbos
இருந்தாலும்கே.ராணியின் ஒயிலான மயிலாட்டம் தான் முதல் பாடலாமே..
குமாரி கமலாவின் ஒயிலான மயிலாட்டம்..
https://youtu.be/2a8Ze9brR8w
துடிக்கும் வாலிபமே
நொடிக்குள் போய்விடுமே
அதற்குள் காண்பதெல்லாம்
ஆனந்தமே!ஆனந்தமே!
ம்ம்ம்..
பாலசரஸ்வதி பாடல் லில்லி ராஜ சுலோச்சனா..ஸேட் டி.எஸ். பாலையா நடித்த படம் மர்ம வீரன்.. பாடல் எழுதியவர் தான் இனிய சர்ப்ரைஸ்..
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்..
https://youtu.be/WSm32IYa_mc
ராணி பாடல்கள்...
ஒரு ராஜா ராணியிடம் வெகுநாளாக ஆசை கொண்டாள்
அந்தப்புரத்தில் ஒரு மகராணி
எ.ரா.பொ.மே.
ராணி மகா ராணி .... அவங்க பாட்டு மயம் போநீ...
என்று கூறாமல் கூறுகிறார்களோ நண்பர்கள்..
இதோ ஒரு ராணி இறுமாப்புடன் கூறுகிறார்...
இவர் ஆடாத ஆட்டமில்லையாம், பாக்காத உலகமில்லையாம்,,கேக்காத சேதியில்லையாம்...
சி.க. சார் இந்தப் பாட்டு உங்களுக்காக... பக்கெட்டாக தண்ணி இறைத்து துள்ளி விளையாடுங்கள்...
மெல்லிசை மன்னரின் தூள் துள்ளல் பாடல்...
https://www.youtube.com/watch?v=dktadb2ZWyk
ஆயிரம் ஜென்மங்கள் படத்திலிருந்து..
ஆஹா.. இந்தக் குரலுக்கு இந்த உலகமே ஆடுகிறதே,,, இந்தக் குரலுடன் இந்த உலகமே பாடுகிறதே...
இசையரசி இருக்க நமக்கென்ன மனக்கவலை..
For ChinnakkaNNan and other kumari kamala fans ! :)
From Parthiban Kanavu(1960)
munnam avanudaiya naamam kEttaaL........
http://www.youtube.com/watch?v=LNpUXxr1ERk
The singer is MLV. It is appar thevaram !
சின்னா!
ஹாய் உம்மை ராணி காலத்துப் பாட்டிப் பாட்டைப் போட வச்சு ராணி பத்திய குறிப்பையும் எழுத வச்சுட்டேன் பார்த்தீங்களா? சக்சஸ் கிராண்ட் சக்சஸ்.:)
ஆனால் கலக்கிட்டீரே அய்யா! ராணி தாண்டவம் ஆடிட்டீரே! பாஸ் மார்க்குக்கு மேலே வாங்கிபுட்டீர்.:)
ராணி வார்த்தைப் பாடல்களும் கன ஜோர். எல்லாவத்தையும் நீயே போட்டுட்டீர். சரி! ராத்திரி பன்னெண்டு மணிக்கு நைட் ஷிப்ட்ல ரோசன பண்ணிப் பார்த்தா ராணி எதுவும் சிக்கல. காலையில பஸ்ல வர்றச்ச டபக்குன்னு இந்த ராணி ஞாபகத்துக்கு வந்தா. இது ராஜா உங்களுக்கு.:)
https://youtu.be/Tds0mQpiXb0
நீ ஒரு மகராணி
நான் ஒரு கலைஞானி
நேரம் சொல்லுது நெருங்கு நெருங்கு என்று
காலம் சொல்லுது தொடங்கு தொடங்கு என்று
https://youtu.be/BvP7bGPvQmU
ஹ்ம்ம்
சின்னாவிற்கு கலக்க கற்றுக்கொடுக்கனுமா என்ன
ராணி ராணின்னு ஒரே புலம்பல்
போதாதற்கு நீர் வேற எடுத்து கொடுக்கிறீர்.... என்ன நடக்க போகுதோ??
சரி சரி ராணி மகாராணி போட்டாயிற்றா...
மலை ராணி முந்தானை
ஒரு ராஜா ராணியிடம்
இப்படி பட்டியல் நீண்டுகொண்டே போகுமே
ராஜா வாடா தங்கக் கட்டி
ராணி வாடி சிங்கக்குட்டி
பூவும் பொட்டும் அள்ளிக் கொட்டி
பொங்கும் அழகு பவழப்பெட்டி
சின்னா!
அதியற்புதமான பாடல். ஜானகி அருமையாகப் பாடியிருப்பார். (அந்த சிரிப்புதான் கொஞ்சம் இடிக்கும். 'உம்மா'வும்) ஜென்டில் மேனும், சுமலதாவும் குழந்தைகளுடன். ஜெயச்சந்திரன் அசத்தல்.
https://youtu.be/sCQiynBwteI
//ராணி ராணின்னு ஒரே புலம்பல்//
ஆமா! 'ராணி யார் குழந்தை'? :)
சின்னா!
இந்த பாட்டு உமக்கு உமக்காகவே மட்டும்.:) வேற யாருக்கும் கிடையாது.:) இந்தப் பாட்டைப் போட்டு நேத்து செஞ்ச பாவத்தை போக்கிக்கிறேன்.:)
'ராஜாராணி ஜாக்கி
வாழ்வில் என்ன பாக்கி?
கிழ ரஜினி 'நெற்றிக்கண்'ணில் யாரை பாக்கி வைத்தார்? என்னா கும்மாளம்?
https://youtu.be/OLa9B-r5hns
காதல் மகராணி
மகராணி மகராணி மாளிகை மகராணி
மங்கையரில் மகராணி
அந்தப்புரத்தில் ஒரு மகராணி
என்ன மகராணி அழகு அழகு அழகு
காட்டு ராணி கோட்டையிலே கதவுகள் இல்லை
காட்டு ராணி முகத்தைக் காட்டு ராணி
என்னம்மா ராணி பொன்னான மேனி ஆலவட்டம் போட வந்ததோ
காதல்ராணி கட்டிக்கிடக்க
ராஜா மகன் ராஜாவுக்கு
ராஜாவோட கூட வந்தா ராணிப் பொண்ணு சிங்காரி
காட்டு ராணி கோட்டையிலே
காட்டு ராணி முகத்தை காட்டு ராணி
ராஜா ராணி ராஜ்ஜியம்
எகிப்து ராணி உனக்கு எதுக்கு தலகாணி
காதல் ராணி இல்லையே கலந்து மகிழவே( செவ்வந்தி )
நானே மகராணி மகாராணி இந்த நாடாளும் ( எஸ்.வரலெட்சுமியின் குரலில் எனக்கு பிடித்த பாடல்)
//எனது வாழ்வின் இன்ப ஜோதி எங்கே போனாயோ//
அது
'எனது வாழ்வின் புனிதஜோதி எங்கே சென்றாயோ?' சின்னா!:)
இந்தப் பாட்டைக் கேட்டால் கண்கள் கலங்கி விடும் சின்னா!:(
கெடுது செய்வார் தனிலும் மேலாம் நண்பர் வேறேது? நீர் கண்டிப்பாக இல்லை சின்னா!:)
ரொம்ப பாடல்கள் போட்டுவிட்டேன்
கடைசியாக எனக்கு பிடித்த மகராஜனோடு ராணி வந்து சேரும்
//நானே மகராணி மகாராணி இந்த நாடாளும் ( எஸ்.வரலெட்சுமியின் குரலில் எனக்கு பிடித்த பாடல்)//
பாட்டு போடுங்களேன்...கேப்போம்.