http://i57.tinypic.com/2kiqt0.jpghttp://i61.tinypic.com/1zqd4w3.jpg
http://i62.tinypic.com/2nld4cj.jpg
Printable View
சிவாஜி செந்தில் : மீண்டும் ஒரு தவறான கண்ணோட்டம் - திருடன் , 100 நாட்களையும் கடந்து ஓடியபடம் - தங்க பதுமை , தூக்கு தூக்கிக்கு கிடைத்த அதே ஆர்வமும் , வசூலும் , வெற்றியும் இந்த படத்திற்கும் கிடைத்து - நாமே நம் படங்களை ஓடவில்லை என்ற கண்ணோட்டத்தில் பதிவுகள் போட்டால் , இதற்காகவே காத்து இருக்கும் சிலருக்கு அல்வா சாப்பிடுவது போல இருக்கும்
வருடம் - 1969
1. இந்த வருடம் வெளியான படங்கள் - 9
100 நாட்களை கடந்த படங்கள் - 3
தெய்வ மகன்
திருடன்
சிவந்த மண்
திருடன் Colombu விலும் அதிகமாக ஓடிய படம் - சிவாவிடம் ஆவணம் இருக்கும் என்று நம்புகிறேன்
வினோத் - அருமையான பதிவு , ஆவணம் - பதிவிட்டதிர்க்கு மிகவும் நன்றி - எவ்வளவு எளிமை , வில்லனாக நடிக்க இருந்தும் ஒரு உண்மையான ஹீரோ வைபோல் நடந்து கொண்டார் - தொழில் மீது அவருக்கு இருந்த பக்தியும் , தயாரிப்பாளர்களுக்கு உதவும் எண்ணமும் அவருக்கு இருந்ததால்தான் , போட்டிகளை கண்டு துவளாமல் மிகவும் எளிதில் வெற்றி கொடியை அவர் எட்டி பிடித்தார் - இவர்கள் இருவரும் இன்னும் பல படங்களில் நடித்திருந்தால் இன்று நம் இரண்டு திரிகளுக்கும் வேலை இருந்திருக்காது
dear ravi. In koondukkili, NT was the hero as well as the anti-hero and the story revolves around him. Enjoy his close-up expressions and the inimitable style in the song (TMS) sequence 'Konjum Kiliyana pennai...". MG Ramachandran just filled the bill but his scenes are very less like Muthuraman or SSR in NT movies. Before interval he goes to prison and after interval after a long time only he appears in the climax! As a senior to NT he was given the first in the title! When we come out of the movie hall only NT dominates our minds! Since the movie was not well received, this combo could not work again. Another thing is in MGRamachandran movies, other actors will not be given equal weightage and he was careful to see that his character alone gets boosted and others should be just supporting or praising him.Will this formula work out for our NT,who on the other hand boosts others characters too without minding for reduction in his scenes?!
ராகுல்ராம். திருடன் பற்றிய பதிவு அபாரமானது. இன்னும் நல்ல முன்னேற்றத்தை காணமுடிகிறது. நடிகர் பாலாஜி நடிகர் திலகத்தை வைத்து திரைப்படங்கள் எடுத்ததையும், அவைகள் எவ்வாறு வசூல் செய்தன என்பதையும், அப்போது நடிகர் திலகத்தின் படங்கள் எப்படி போய்கொண்டிருந்தன என்பதையும் சுருக்கமாக அலசியிருந்தீர்கள். நீங்களும் பஞ்ச் வைத்து முடிக்க எழுதிய "திருடன் தானே , மக்கள் வந்தால் ஓடுவான் , மக்கள் வந்தார்கள் திருடன் ஓடினான்" - நன்றாகவே இருக்கிறது. ரவியின் கமெண்ட்டும் அதையே எடுத்துக்காட்டியது.
கோபால், இந்த அபூர்வ மறந்த பட எழுத்து சித்தர், இக்கால முனுசாமி பதிவை எப்படி சொல்லவேண்டும் என்று சொல்லவேயில்லையே. பின்னால எதுக்குங்க பிரச்சினை?
MTயே முகம் சுளித்துகொண்ட தன் படங்களைகூட:banghead: வினோத் சார் எவ்வளவு பெருந்தன்மையோடும் , நகைச்சுவையோடும் ஒரே வரியில் விமர்சிக்கிறார் பாருங்கள்
நவரத்தினம் - எங்கள் பொக்கிஷம் .
இன்று போல் என்றும் வாழ்க - வாழ்த்துவோம் .
மீனவநண்பன் - மக்களுக்காகவே வாழ்ந்தவர் .
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் - உலக மகா பேரழகன் .
நாம் நம் திரியில் இவ்வளவு கற்பனைதிறனுடனும் , உயர்வாகவும் எழுத வேண்டாம் , நன்றாக ஓடின படங்களை சரியாக ஆராயாமல் இவைகள் ஓடாத படம் என்று நாமே ஏன் முத்திரை குத்தவேண்டும் ? NT யின் படங்களில் பெரும்பான்மை தரமான , குடும்பத்துடன் பார்க்கும் படங்கள் - தமிழின் எழிலும் , அர்த்தமுள்ள பாடல்களும் நிறைந்துள்ள படங்கள் - இவைகள் அனைத்தும் கேவலம் 100 நாட்கள் என்ற ஒரு சின்ன இலக்கினில் கட்டு படுத்த முடியாது - காலங்கள் மாறலாம் , காட்சிகள் மாறலாம் , என்றும் மாறாமல் தமிழனைதலை நிமிர்த்தி நிக்க வைக்கும் படங்கள் - அவரின் படங்கள் ஓட்ட பட்டவைகள் அல்ல , இயற்கையாக ஓடினவைகள் - மக்கள் மனங்களில் இன்றும் ஓடி கொண்டிருக்கும் படங்கள் ! Tickets யை மொத்தமாக விலை பேசி வாங்கப்பட்ட படங்கள் அல்ல - black இல் விற்க பட்டு ஓடிய படங்கள் - கொஞ்சம் அதிக கவனம் எடுத்துக்கொண்டு , சற்றே ஆராயிந்து , இந்த திரியின் stalwarts இடம் விசாரித்துக்கொண்டு அல்லது பழைய பதிவுகளை பார்த்துவிட்டு வெற்றி தோல்விகளை குறுப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து - இங்கே திரியை எப்படியாவது ரொப்புவது என்பது நமது குறிக்கோள் இல்லை - ஒரு நாளில் ஒரே ஒரு பதிவை போட்டாலும் சற்றே homework செய்துவிட்டு பதிவுகளை போட்டால் , நாளை நம் ஒவ்வொரு பதிவும் சிறந்த ஆவணமாக மாறும் - நாம் எல்லோருமே பிறகு பம்மலார் தான் -----
dear ravi. I agree but sometimes we run out of memory. What I was told was that thirudan approached 100 days but due to NT vs NT inflow of movies, it could not touch that bench mark but it ran more than 100 days in Ceylone. I also browsed but could not get the correct hub indicator. It is between us within our thread only ravi. By the same token, in Koondukkili NT was the hero turned anti-hero and not a villain to anyone! He was a villain to himself in Uththamaputhiran, but an anti-hero in Andha Naal and Thirumbippaar. When he is the hub of the story why we should brand him as a villain to another actor whose screen presence was not at all felt!!
சிரிப்பு பாதி அழுகை பாதி…
*
அத்தியாயம் எட்டு
*
அது ஒரு காலம்ங்க.. என்ன காலம்னாக்க….
*
அள்ளும் அழகுகள் ஆர்வத்தைத் தூண்டிடும்
துள்ளும் இளமையில் நான்..
*
ஆமாங்க ஃப்ளாஷ் பேக் தான்..
*
இடம்: துபாய்
*
வருடம் : பல வருடங்களுக்கு முன்..(ஹை சொல்ல மாட்டோம்ல)
*
வெங்க்கி கையைக் காலை ஆட்டி உரத்துப் பேசிக் கொண்டிருந்தான்.. இடம் எனது சகோதரியின் வீடு..அங்கு தான் நான் தங்கியிருந்தேன்..
*’
வெங்க்கி என் அலுவலக நண்பன். அவன் என்ன விஷயத்தை உரக்க ப் பேசிக்கொண்டிருந்தான் என்பதற்கு முன்..
*
துபாயில் வேலைக்குச் சேர்ந்த பொழுது..அங்கு ஒரு குணாதிசயம் கண்டேன்.. மலையாளம் பேசுபவர்கள் கூட மலையாளம் பேசுபவர்களைப் பார்த்தாலே முகத்தில் மலர்ச்சியுடன் பேசுவார்கள்..ஹிந்தி-ஹிந்தி, தெலுகு-தெலுகு, கன்னடா-கன்னடா எல்லாம் அப்படியே..ஆனால் தமிழ்..? நாம் தமிழன் என்று தெரியும் (அது தான் முகத்திலேயே இருக்குமே) அவரும் தமிழன் என்றால் கூட தமிழில் பேச மாட்டார்கள்..இது தான் பர்துபாயில் உள்ள கடைக்குப் போகும் வழியா.. என ஆங்கிலத்தில் கேட்டு நம்மிடம் பதில் வாங்கி சிரிக்காமல் போவார்கள்..(இது நிறைய தடவை – நிறைய நாடுகளில் எனக்கு ஏற்பட்டிருக்கிறது)
*
வெங்க்கியும் தமிழ் பேசுபவன் தான்..ஆனால் அவன் வேறு தமிழ்க்காரன்… நான் வேறு தமிழ்க்காரனாம்..அவனே சொல்வான்..
*
ஏனெனில் அவன் மும்பையில் பிறந்து வளர்ந்த தமிழ்ப்பையன் ( நார்த் இண்டியன் தமிழ்) நான் மதுரைக்காரன்..
*
இன்னொன்றும் உண்டு வார்த்தைக்கு வார்த்தை அந்தப் படங்கள் போல வராது…என்று அவனிடம் இருந்து பேச்சு வரும்..
*
அன்றும் அப்படித் தான்.. ஒரு படத்தைப் பற்றிப் பேச்சு வந்த போது- இதோட ஹிந்தி வெர்ஷன் ரொம்ப நல்லாருக்கும் தெரியுமா..சான்ஸே இல்லை..”
*
எனக்குள் மெளனமான கோபம் கொஞ்சம் பற்றிப் புகைய.. அவனைப் பேச விட்டேன்..
*
அவன் பேசி முடித்த பிறகு வாங்கி வைத்திருந்த பட கேசட் வீடியோவில் போட்டு செலக்டிவ்வாக சில காட்சிகள் காண்பித்தேன்..
*
பதில் வரவில்லை.. முகத்தில் கொஞ்சம் தோல்விக் களை..
*
லுக் இதோட ஹிந்தி வெர்ஷன் ஏப்ரல்ல அந்த வருஷத்துல வந்துச்சு..ஆறே மாசத்துல அக்டோபர்ல தமிழ் வெர்ஷன்..தீபாவளி ரிலீஸ்..பாட்டு, நடிப்பு எத வேணும்னாலும் சொல்லு..இது தான் பெஸ்ட்.. நீ தான் பார்த்தியே..
*
எதுக்கும் நான் முழுக்கப் பார்த்துட்டு தான் சொல்லுவேன்..
*’ஒழி” என கேஸட் எடுத்துக் கொடுக்க எடுத்துச் சென்று மறு நாள் மாலை திரும்பக் கொண்டுவந்தான்..
*
“நல்லாத் தான் இருக்கு.. ஹிந்திய விட..” எனத் திருப்பிக் கொடுத்தான்.. ஆனா எல்லாப் படத்தையும் இந்த மாதிரி சொல்ல முடியாது தெரியுமா..
*
காப்பி சாப்பிடறயாடா என்றேன் வாஞ்சையாய்.. சரி எனச் சொல்ல கிச்சனில் காப்பி சுடச்சுட கலந்து கொடுத்தேன்.. வாங்கிக் கொண்டு பருகியவன் முகம் சுளித்தான்..என்னடா இது..சர்க்கரை போடலையா..
*
பின்ன நேத்து நீ பேசின பேச்சுக்கு உப்புப் போட்டிருக்கணும்..என்று முறைத்துக் கலாய்த்தேன்..
*
அந்தப் படம் ந.தியின் சிறந்த படங்களில் ஒன்றான எங்கிருந்தோ வந்தாள்.. ஏ.சி.தி இயக்கம்.. ந.தி, ஜெயலலிதா, நாகேஷ், முத்துராமன், தேவிகா என்ற நடிப்புத் திறமைகளோடு அழகிய காலத்தால் மறக்கமுடியாத கண்ணதாசன் வரிகள் கொண்ட சிறந்த இசைகொண்ட பாடல்கள் கொண்ட படம்..ஹிந்தியில் கிலோனா என்ற பெயரில் எல்.விபிரசாத் தயாரிப்பில் சஞ்சீவ்குமார் மும்தாஜ் நடித்திருந்தார்கள்..
*
ந.தியின் காதலி மறைவினால் பைத்தியமாய் உருகும் நடிப்பை விட -காதல் கிளிகள் பறந்த காலம் கண்ணில் தெரியும் நெஞ்சம் உருகும் என்ற வரிகளின் சோகம் திரையில் அழகாக மின்னியிருப்பதை விட
*
எனக்குப் பிடித்தது பைத்தியம் தெளிந்த பின் ஜெயலலிதாவிடம் பேசும் காட்சி
*
இந்தப் பணத்தைக் கொடுத்துட்டு வாங்கன்னு சொன்னாங்க” சொல்கையில் கண்கள் உதடு முகம் என மலர்ந்து சிரிப்பது மிக நன்றாக இருக்கும்..பதிலுக்கு ஜெயலலிதாவும் முகம் கண்கள் துடிக்க நடித்திருப்பார்..
*
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே யில் வரும் சிரிப்பை மறக்கமுடியுமா என்ன
*
நான் உன்னை அழைக்கவில்லை, காளிதாச மகாகவி காவியம் பாடல்களும் பிடிக்கும்..
*
தோழிகள் என்னும் மான்கள் நடுவிலே தூயமானெனப் பள்ளிகொண்டனள்..
அந்த மானை மறந்து போனவன் இந்த மான்மகள் அழகில் ஆழ்ந்தனன்.. ந.தியின் கம்பீரம்
*
துடிக்கின்ற சினமே துணையாய்க் கொண்ட துர்வாச முனிவன் தவமுடித்து கொடிக்கன்று நிற்கும் குடில் வந்தான்
குரல் தந்தான் யாரங்கே அங்கே யாரங்கே யாரங்கே
எந்த எண்ணம் உன்னைக் கொண்டதோ அதனை இன்று தீர்த்துவிடுகின்றேன்
அந்த ஞாபகம்மறந்து போவென இன்று சாபமிடுகின்றேன்..மறந்து போ துஷ்யந்தா இவளை மறந்து போ –
*
என கண்ணதாசனின் வரிகளில் சீர்காழி கோவிந்தராஜனின் கணீர்க் குரலில் அந்தப் பாடல்காட்சி மறக்குமா என்ன..அதைத் தொடர்ந்து ந.திக்கு சுய நினைவு வரும் காட்சி மிக நன்றாக இருக்கும்..
*
அச்சோ..கதையைப் பத்திச் சொல்லவே இல்லையே..எல்லாரும் சொல்லியிருப்பாங்க..ஆனா என் பங்குக்கு
*
நடனம் ஆடும் நங்கை அவள்..அவளிடம் பெரிய மனிதர் ஒருவர் தன் மகனின் பைத்தியத்தைக் குணப்படுத்த உதவச் சொல்கிறார்.. அங்கே பைத்தியமாக இருக்கும் மனிதர் – காதலி மறைவினால் பைத்தியமானவர்..கவிஞர் எனத் தெரிய வருகிறது..கொஞ்சம் கொஞ்சமாய் குணப்படுத்த முயலுகையில்…
*
இடி மழை இளமை தனிமை என இருந்த ஒரு நாளில் – என்ன தான் மன நிலை பாதிக்கப் பட்டவராய் இருந்தாலும் ஆண்மகன் தானே.. அந்த நங்கையிடம் பலத்தைக் காண்பிக்க- அடித்துத் தப்பிக்கலாம் என்றால் ஆயுதம் எதுவும் இல்லை..ஒரே ஒரு டார்ச் மட்டும் தான்..அதுவும் இசகுபிசகாக ஒரு நாற்காலியில் மாட்டிக்கொண்டுவிட..
*
பெண்மை களங்கப் பட்டு விடுகிறது..சொல்லிக் கொள்ளாமல் செல்லலாம் என்றால் குணசேகரனுக்கு உறுத்தல் அழுகை பாடல் எல்லாம் வர, மனம் மாறி திரும்ப வந்து கொஞ்சம் கொஞ்சமாய்த் தெளிவாக்க வைத்தால்..
*
யெஸ்.. சூரியன் மேற்கே உதித்தால் தான் சாத்தியம், அவனுக்கு சுயநினைவு வராது என்று சொன்னவர்கள் மத்தியில் சுயநினைவு வந்து விடுகிறது..பிறகென்ன..இருப்பது பெரிய அந்தஸ்தான குடும்பம்..அந்தப் பெரியவருக்கு கேவலம் நடன மங்கை தானே காசு கொடுத்து அனுப்பு என்று குண சேகரனிடமே சொல்ல- அவர் வந்து அந்த நங்கையிடம் சொல்ல அவளுக்குள் தவிப்பு..
*
நானா..இங்கிருந்தது இந்தப் பணத்திற்கா..இல்லை இல்லை..இந்தக் கவிஞனைத்தான் கண்ணுக்குள் வைக்க ஆசைப்பட்டேன்.. நெஞ்சுக்குள் வைத்துப் பூட்டி வைத்திருக்கிறேன்..இன்னும் என்ன.உடலையே தந்தும் விட்டேனே..என்னையா போகச் சொல்கிறீர்கள்..
*
குமுறிக் குமுறி க் கொந்தளித்து அவள் சொன்ன வார்த்தைகளை, பெண்மையின் தவிப்பை, புலம்பல்களை யாரும் புரிந்து கொள்ளவில்லை..கடைசியில் எல்லோருக்கும் புரிய வைக்கிறார் குணசேகரனின் தம்பி முத்துராமன்..பிறகென்ன.. ந.தியும் அவரை மணமுடிக்கிறார்..
*
நல்ல கதை..தீபாவளி முடிந்து சில நாட்களில் அன்னையுடன் விவரமறியா வயதில் ஸ்ரீதேவி தியேட்டரில் பின் சில பல தடவைகள் பார்த்திருக்கிறேன்.. ந.தியின் நடிப்புக்காக, பாடல்களுக்காக..
*
அழுகை எனப்படுவது ஏதென்றால் நெஞ்சம்
பழுதான போதில் வரும்
*
நெஞ்சம் எப்போது பழுது வரும்… துன்பத்தில்.. மீளாத் துயரில்…அப்போது என்னாகும்..கண்ணில் ஒரு காலத்தில் வைகையில் வந்த வெள்ளம் போல பெருக்கெடுத்து நீர் வரும்…
*
ஆனால் அப்படி வெள்ளமாகப் பெருக்காமல் ஆச்சர்யத்தில், அன்பை உணர்ந்த தவிப்பில் வரும் கண்ணீர் எப்படி இருக்கும்..
*
மெல்லச் சிரிப்பு வரும் – பின்னே
மேவி விழிகளினிடை
துள்ளித் துளிர்த்திடுமே ஒரு
சின்னத் துளியாக
*
அப்படி ஒரு துளி சொட்டுகண்ணீர் விடும் ந.தியின் இந்தக் காட்சி எனக்கு வெகுவாகப் பிடிக்கும்..படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் மின்னினாலும் ந.தி பாதிச் சந்திர வேஷம் ஏற்றிருப்பார்..(கண்டுபிடிச்சுட்டீங்களா)
**
ம்ம்.. ஆஃபீஸ் முடித்து வந்து இதை டைப்படிக்கிறேன்.. கொஞ்சம் காஃபி சாப்பிடலாம் போல இருக்கு..வர்றீங்களா :)
*
(தொடரும்)
சின்னக்கண்ணன் அய்யா!
சிரத்தை எடுத்து 'எங்கிருந்தோ வந்தாள்' பதிவை அளித்துள்ளீர்கள். ரசித்'தேன்'.
இப்படத்தில் நடிகர் திலகம் நடிப்பை ஒரு பக்கம் விட்டுவிடுவோம். 'சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே' பாடலைப் பாருங்கள். அவர் குழந்தை போல அப்பாவியாய் மைசூர் பிருந்தாவனத்தில் ஜெயாவுடன் துள்ளி ஓடி ஆடும் காட்சி மகா ரம்மியம். அதுவும் கண்களில் ஒளி மின்ன அவர், கைகால்களை வெடுக்வெடுக்கென்று அசைத்து நடந்து வருவது கண்கொள்ளாக் காட்சி.
அதுமட்டுமல்ல.... உயர்கலைஞர் கமலஹாசன் அவர்கள் நடித்த 'சிப்பிக்குள் முத்து' படத்தில் துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா....என்றொரு பிரபலமான பாடல் உண்டு. கமல் அவர்கள் சிறு குழந்தை போல அப்பாவியாயான ரோலில் ஆடிவருவார்.
என்னவொரு ஆச்சர்யம்! கமல் இப்பாடலில் செய்யும் ஒவ்வொரு அசைவும் அப்படியே எங்கிருந்தோ வந்தாளில் நடிகர் திலகம் செய்யும் அசைவுகளை அச்சு அசலாக ஒத்திருக்கும். நான் தங்கள் பதிவைப் படித்து மேற்குறிப்பிட்ட இரண்டு பாடல்களையும் ஒளிக்காட்சிகளாகப் பார்த்தபோது என் ஆச்சர்யம் பலமடங்கு விரிந்தது.
இந்த யுகக்கலைஞர் செய்து காண்பிக்காத நடிப்பு என்று ஒன்று உலகத்தில் ஏதேனும் இருக்கிறதா? அவரை காப்பி அடிக்காத நடிகர்கள் எவரேனும் இருக்கத்தான் செய்கிறார்களா?
அப்பேற்பட்ட கலைஞரின் ஈடுசெய்யமுடியாத புகழ் என்ற வெண்கொடியின் மேல் வசூல், படம் ஓடிய நாட்கள் என்ற தேவையில்லாத சேற்றை நாம் யாரோ ஒருசிலருக்கு பதில் தருகிறோம் என்ற பெயரில்
வாரி இறைத்து வருவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இதையெல்லாம் தாண்டிய அற்புத புருஷர் அவர். கேவலம் வசூலும், ஓடிய நாட்களுமா அவருக்கு புகழை அளித்தது? அவர் திறமைகளைப் பற்றி எழுத எத்தனை யுகங்கள் ஆனாலும் போதாது. அதை விடுத்து சந்தனமான நாம் ஏன் சகதியோடு சேர வேண்டும்?
அவர் புகழைப் பாடுங்கள். அவர்தம் நடிப்பை போற்றி எழுதுங்கள். அவரது மனித நேயம் பற்றி எடுத்துரையுங்கள். இப்போது இரண்டு ஒளிக்காட்சிகளையும் பார்த்து நடிகர் திலகம் அனைத்திலும் முன்னோடி என்று அனைவருக்கும் உணர்த்துங்கள்.
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே...
http://www.youtube.com/watch?v=NSN1v...yer_detailpage
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா....
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=teVe7sqF8xk