இனியாவது இந்த ஜென்மங்கள் திருந்துமா?
நேற்றைய தினமலர்
http://i812.photobucket.com/albums/z...psafe07ba4.jpg
Printable View
இனியாவது இந்த ஜென்மங்கள் திருந்துமா?
நேற்றைய தினமலர்
http://i812.photobucket.com/albums/z...psafe07ba4.jpg
சிவாஜி ஒரு பண்பாட்டியல் குறிப்பு
http://www.youtube.com/watch?v=M3w9i...&feature=share
டியர் முரளி சார்
"சிவாஜி-பிரபு சாரிட்டீஸ் டிரஸ்ட்" சார்பில் நடைபெற்ற நடிகர்திலகத்தின் பிறந்தநாள் விழாத் தொகுப்பு அருமை.
டியர் வாசுதேவன் சார்,
நடிகர்திலகத்தின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகளை, புகைப்படங்கள், செய்தித்தாள் தொகுப்பு என்று வழக்கம்போல அசத்திவிட்டீர்கள். நன்றி.
Dear All,
Just as i was watching the songs in you tube, i came across the following video too...
it says Nanvazhavaippen re-release on account of 85th birthday of Sivaji Sir..
lot of fans also giving their comments about this film. good crowd i can see.
where is this theater? can any of you tell me? i want to see this movie if it is still running.
am glad to present it here. good video.
Take Care
https://www.youtube.com/watch?v=KPGALWi4WeI
Sir,
The association has inferiority complex and that's why they are deliberately insulting. what they fail to realise is, by insulting Sivaji Sir, they are insulting themselves.
Also, i think they are all now politicians and their priorities are making money in all possible ways than to honor legends.
LS
லக்ஷ்மி கடாட்சத்தோடு நமது திரிக்கு வருகை தரும் சகோதரி சரஸ்வதி லக்ஷ்மி அவர்களே வருக!
(என்னுடைய தாயார் பெயரும் தங்கள் பெயரில் பாதியே. சரஸ்வதி)
டியர் கார்த்திக் சார்,
தங்களுடைய / தங்களைப் போன்ற மூத்த ரசிகர்களின் வாழ்த்தே என்னை மேலும் மேலும் பணியாற்றத் தூண்டுகோலாக அமைகிறது.
தாங்கள் அன்னதானம் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். வருடா வருடம் நினைவு நாள் மற்றும் பிறந்த நாளில், கபாலீஸ்வரர் கோவில் அன்னதானம் மற்றும் பிறந்த நாளன்று எல்லா மாவட்டங்களிலும் நிகழ்ச்சிகளை நடத்துவதோடு, அக்டோபர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில், வெளி மாவட்டத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி என வரையறுத்துகொண்டு நிகழ்ச்சிகளை நடத்திகொண்டிருந்தோம்.
இந்த வருடம், ஜூலை 21 - நினைவு நாளையும் வெளி மாவட்டத்தில் (திருநெல்வேலியில்) பேச்சுப்போட்டி நடத்தி அனுசரித்தோம்.
அடுத்து, அக்டோபர் 1 - உலக முதியோர் தினமாக இருப்பதால் முதியோர் இல்லத்திலும் அன்னதானம் செய்யலாம் என்று யோசித்து செயல்படுத்தினோம். இதற்கு திரு.சீனிவாசன், பாஸ்கர், ராமஜெயம், சங்குராஜன் போன்ற நண்பர்களும் உறுதுனையாக இருந்தார்கள்.
மயிலாப்பூர், கிழக்கு மாடவீதியில் அமைந்துள்ள, அன்னை இல்லம் முதியோர் காப்பகத்தில் 100 வயதான ஒரு மூதாட்டி காலை சிற்றுண்டியைப் பெற்றுக்கொண்டு எங்களையெல்லாம் மனதார வாழ்த்தியது இன்னும் என் மனக்கண் முன்னே நிற்கிறது.
சென்னை தவிர, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை போன்ற சில ஊர்களிலும் முதியோர் இல்லங்களில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடிகர்திலகம் சிவாஜிசமூகநலப் பேரவை சார்பில் நடத்தப்பட்டிருக்கிறது.
அதேபோல நடிகர்திலகத்தின் 86-வது பிறந்த நாள், எப்போதும் ஒரு வெளி மாவட்ட சிறப்பு நிகழ்ச்சி என்பது விரிவடைந்து இந்த வருடம், நேற்று, (அக்டோபர் -2) திருச்சியில் நிகழ்ச்சி சிறப்பாக முடிவடைந்த நிலையில் வரும் அக்டோபர் - 6 ஆம் நாளன்று திருப்பூரில் பிறந்தநாள் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
வெளி மாவட்டங்களில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஏழை மாணவ, மானவிகள் சிலருக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்குதல் பொன்ற சில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் நேற்று திருச்சியில் நடைபெற்ற விழாவில் 11 மாணவ, மானவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது (தலா ரூ.2000/- மற்றும் ரூ.1000/-). அதேபோல் திருச்சியில் சமீபத்தில் மறைந்த நமது சிவாஜி ரசிகர் திரு.சிவாஜி ஸ்ரீதர் குடும்பத்திற்கு ரூ.5000/- உதவி வழங்கப்பட்டது. மற்றும், மூத்த சிவாஜி ரசிகர்கள் 10 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஜூனியர் பிரிவு தேசிய சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற திருச்சியை சேர்ந்த மாணவிக்கு கேடயம் வழங்கப்பட்டது. திருச்சியில் நடிகர்திலகம் சிவாஜிக்கு சிலை நிறுவப்பட்டு மூடப்பட்ட நிலையிலேயே இருந்தாலும், அதனைச் சுற்றியுள்ள ரவுண்டானாவை அழகான புல்வெளிகள் அமைத்து, தொடர்ந்து சிறப்பாகப் பராமரித்து வரும் b .g . நாயுடு ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மேடையில் கெளரவிக்கப்பட்டார்.
தங்களின் பாராட்டுக்கு மீண்டும் நன்றி.
சரஸ்வதி லக்ஷ்மி அவர்களே,
வருக.
டியர் சந்திரசேகரன் சார்,
சிவாஜி சமூக நலப் பேரவை சார்பாக நடிகர் திலகத்தின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு நலத்திட்ட உதவிகள், அன்னதானங்கள் என்று சமூக அக்கறையோடு நடைபெற்றது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. அன்னதானம் என்பது மிக புண்ணியமானதொரு விஷயம். அதுவும் அனாதை சிறார்களுக்கும், ஆதரவற்ற முதியோர்களுக்கும் பேரவை மூலம் அன்னமும், பிற உதவிகளும் கிடைப்பது ஒவ்வொருவரும் பெருமைப் படத்தக்க விஷயம். தங்கள் தலைமையில் அது தொடர்வது சிறப்பு. தங்கள் நலத்திட்ட உதவிகள் மேன்மேலும் தொடரட்டும். தங்களுக்கும், சிவாஜி சமூக நலப் பேரவை அமைப்புக்கும் என் இதயம் கனிந்த பாராட்டுக்களும், மற்றும் நல்வாழ்த்துக்களும். தங்கள் அன்புப் பாராட்டிற்கும் எனது நன்றி!