-
நடிகர்திலகத்திற்கு அரசியலில் நடிக்கத் தெரியாது-ன்னு சிலர் சொன்னதால், நொந்து போய் அவர்களிடம் ஒரு கேள்வி என்று ஆரம்பித்து ஒன்பதிற்கும் மேல் கேள்வி கேட்டவருக்கு 'ஒரு' என்றால் என்னவென்று சொல்லிக்கொடுக்காமல், அவர் கேட்ட கேள்விகளையெல்லாம் பிரசுரித்து, 'ஒரு' கேள்வி கேட்டவரை கிண்டல் செய்ததை என்னவென்று சொல்வது!!! இதை ரவிகிரண் கேட்பதுபோல் அவர்கள் நீக்கினால் 'ஒரு' கேள்வி கேட்டவரை நமக்கெப்படித் தெரியும். அதனால் பிரசுரித்தவருக்கு நன்றி சொல்வோம்!!!
-
-
Kasturi Nivasa 1971: Full Kannada Movie: http://youtu.be/fx1ccAFf7jE
கஸ்தூரி நிவாஸா கன்னட படத்தின் ரீமேக் அவன் தான் மனிதன்
ராஜ்குமார் நடித்த இந்த கறுப்பு வெள்ளை படம் தற்போது இரண்டு கோடி செலவில் வண்ணத்தில உருவாகி கர்நாடகாவில் ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அதனால் தெய்வமகனையும் வண்ணத்தில் வெளியிட்டால் மகிழ்ச்சி
Sent from my GT-S7562
-
நெல்லை சென்ட்ரலில் மக்கள் தலைவர் சிவாஜி நடித்த வெள்ளைரோஜா 14.11.2014 வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகள்
http://i59.tinypic.com/2lvhamq_th.jpg
தீபாவளிக்கு வெளியான நீதியின் வெற்றியை தொடர்ந்து குறுகிய கால இடைவெளியில் மீண்டும் நடிகர்திலகத்தின் வெற்றி பவனி.
இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.
-
நெல்லை சென்ட்ரலில் மக்கள் தலைவர் சிவாஜி நடித்த வெள்ளைரோஜா 14.11.2014 வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகள்
http://oi59.tinypic.com/zkq3ia.jpg
இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.
-
http://oi57.tinypic.com/2ah9qfr.jpg
இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.
-
சென்னை, திருச்சி, கோவை வெற்றியை தொடர்ந்து டிசம்பரில் மதுரையை கலக்க வருகிறார் டாக்டர் ரமேஷ்.
http://oi62.tinypic.com/33kepl3.jpg
இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.
-
https://fbcdn-sphotos-f-a.akamaihd.n...77f4448430ea61
‘பராசக்தி’ படத்தில் கதாநாயகனாகப் போட கே.ஆர்.ராமசாமி உள்பட பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. குழம்பிய இரட்டை இயக்குநர்களான கிருஷ்ணன் - பஞ்சு இருவரும் அறிஞர் அண்ணாவிடம் சென்று ஆலோசனை கேட்டனர். அண்ணாவின் பலமான சிபாரிசு சிவாஜிக்குதான் இருந்தது. எனவே, ‘பராசக்தி’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் சிவாஜி.
பின்னாளில் சிவாஜி பெரிய நடிகராகிப் புகழ்பெற்ற பின்பு, பலமுறை விழுப்புரம் வந்திருக்கிறார். நான் அங்கே பள்ளியிலும், கல்லூரியிலும் படித்துக்கொண்டு இருந்த காலங்களில் கூட வந்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் அங்கே அவர் பேசும்போது, “நான் பிறந்த பொன்னாடான விழுப்புரம் நகரத்துப் பெருமக்களே!” என்றுதான் நெகிழ்ச்சியாகத் தன் பேச்சைத் தொடங்குவார்.
ஒருமுறை, விழுப்புரம் நகரசபையில் சிவாஜிக்குப் பெரிய வரவேற்பு கொடுத்தார்கள். அப்போது அங்கே சிவாஜிக்கு ஒரு பரிசு கொடுத்தார்கள். அது ஒன்றும் விலை உயர்ந்த பரிசு அல்ல. ஆனாலும், அதை வாங்கிக் கொண்டபோது சிலிர்த்துப் போய்விட்டார் சிவாஜி. அதைப் பரிசாகக் கொடுத்த நகர சபையினருக்கு எப்படி நன்றி சொல்வதென்றே அவருக்குத் தெரியவில்லை. அந்த அளவுக்கு வார்த்தை வராமல் நெகிழ்ந்துவிட்டார்.
அப்படி என்ன பரிசு அது? வேறொன்றுமில்லை. சிவாஜி விழுப்புரத்தில் பிறந்த சமயத்தில், அது சம்பந்தமாக நகரசபை அலுவலகத்தில் எழுதப்பட்ட ஜனனக் குறிப்புதான் அது. அந்த விவரங்கள் அடங்கிய ஜனனக் குறிப்பை அப்படியே எடுத்து ஃபிரேம் செய்து கொடுத்திருந்தார்கள்
-
Quote:
Quote:
Originally Posted by
SUNDARAJAN
நெல்லை சென்ட்ரலில் மக்கள் தலைவர் சிவாஜி நடித்த வெள்ளைரோஜா 14.11.2014 வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகள்
http://oi59.tinypic.com/zkq3ia.jpg
இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.
MEGA REAL WINNER OF 1983 DEEWALI - ONE AND ONLY VELLAI ROJA
1983ம் ஆண்டு தீபாவளி திருநாளில் கடும் போட்டியில் வெளியாகிஎந்த வித பேனர் வெயிட் இல்லாமல் தன்னுடைய அசத்தலான நடிப்புத்திறமையால் சாதாரண தயாரிப்பு நிறுவனமான பிலிம்கோ பேனரில் தயாரிக்கப்பட்ட வெள்ளை ரோஜா தீபாவளிப்போட்டியில் முதலிடம் பெற்று அதிக 50 நாள் கண்ட ஒரே படமாகவும் 12 திரைகளில் 100 நாள் கண்ட படமாகவும் விளங்கி1983ம் ஆண்டு வசூல் சக்ரவர்த்தியாக வலம் வந்தவர் நடிகர் திலகம்.
மேலும் திருவொற்றியூர் வெங்கடேஸ்வரா திரையரங்கில் 100 நாட்கள் ஒடிய ஒரே படம் நடிப்புச்சுரங்கத்தின் வெள்ளைரோஜா
திருச்சி ரம்பா A/C யில் 100 நாட்கள் ஓடிய முதல் படம். சென்னையில் முதன் முதலாக 6 தியேட்டர்களில் 100 நாள் கண்ட முதல் படம் வெள்ளைரோஜா
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...a9f5a02b0c232b
-
இன்று நவம்பர் 14 - சிறிது கால தாமதமானாலும் மறக்க முடியாத நாள் அல்லவா..!
குழந்தைகள் தினவிழா ...பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களுடைய பிறந்த நாள் விழா குழந்தைகள் தினவிழாவாக கொண்டாடபடுகிறது.
பாரத பிரதமர் திரு ஜவஹர்லால் நேஹ்ருவும் சரி, கர்ம வீரர் காமராஜரும் சரி, வருங்கால சமுதாயத்தின் பிரதிநிதிகளாக உருவாகும் குழந்தைகள் நலனில் மிகுந்த அக்கறை செலுத்தியவர்கள்.
ஏழை குழந்தைகள் பசியறியாமல் நல்ல சுகாதார உணவு உண்டு, படிப்பில் கவவனம் செலுத்தி நல்ல நிலையில் வரவேண்டும் என்று விரும்பியவர்கள்.
அதனால் கல்வி பயிலும் ஏழை குழந்தைகளுக்காக தான் மதிய உணவு திட்டம் என்ற ஒரு திட்டத்தை முதல் முதலில் தமிழகம் முழுதும் செயல்படுத்தினர் .
1959இல் முதன் முதலில் குழந்தைகளுக்காக கர்ம வீரர் காமராஜர் கொண்டுவந்த திட்டம் மதிய உணவு திட்டம். பிற்காலத்தில் அது சத்துணவு திட்டமாக தொடரப்பட்டு இன்றுவரை தொடர்கிறது.
தமிழகத்தை பொருத்தவரை கர்ம வீரர் காமராஜர் அவர்களுடைய தொலைநோக்கு பார்வை என்பது இன்றளவும் உலகையே வியக்க செய்யும் பார்வையாகும்.
மேலும், தமிழகத்தில் என்னவெல்லாம் பயனுள்ள திட்டங்களாக தொடங்க பட்டு இன்றுவரை உள்ளதோ அவைகளில் முக்கால் வாசிக்கும் மேல் கர்ம வீரர் காமராஜரால் கொண்டுவரப்பட்ட திட்டங்களாகும் !
பண்டித நேரு அவர்களுடைய குடும்பத்துடன் மிக நெருங்கி பழகிய வெகு சிலரில் ஒருவர் தென்னகத்தில் நம்முடைய நடிகர் திலகம் மட்டும் தான் !
தனது நடிப்பு என்ற ஒரு திறமையை வைத்து உலகளவில் பல ஜாம்பவான்களை ஆட்கொண்டிருந்தாலும், இந்தியாவில் நேஹ்ருவையும் அவர் குடும்பத்தையும் ஆட்கொண்டவர் நமது நடிகர் திலகம்.
http://i501.photobucket.com/albums/e...ps7aeb0e2f.jpg
1959இல் குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டம் கொண்டுவந்தபோது, இந்திய அளவில் முதல் முதலில் ரூபாய் ஒரு லட்சம் தனது நிதியாக கொடுத்தவர், நம்முடைய, எண்ணிக்கையில் அடங்கா, அடக்க முடியாத வள்ளல் நடிகர் திலகம் அவர்கள்.
http://i501.photobucket.com/albums/e...ps3da27c70.jpg
பண்டித நேஹ்ருவிர்க்கு பிறகு திருமதி இந்திரா காந்தி அம்மையார், பிறகு ராஜீவ் காந்தி என்று நேஹ்ருவின் பரம்பரையில் உள்ள அனைவரும் நமது நடிகர் திலகம் மீது மற்ற எவரை காட்டிலும் மிகுந்த அன்பும், பாசமும் வைத்திருந்ததை இந்த நாடே அறியும்.
http://i501.photobucket.com/albums/e...ps77661bad.jpg
பிரதமரிடம், அமைச்சரோ, மந்திரியோ, முதல்வரோ மற்றும் எவராயினும், அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் வெளியில் ஆயிரம் பந்தா காட்டினாலும், நேரு பரம்பரை முன் கை கட்டிதான் சேவனம் செய்துள்ளனர், என்பதை அனைவரும் அறிவர்.
http://i501.photobucket.com/albums/e...ps29c67b1b.jpg
ஆனால் நம் நடிகர் திலகம் அவர்கள் எந்த அளவிற்கு திரு நேரு அவர்கள் குடும்பத்திற்கு நெருக்கமானவர், நேரு பரம்பரையும் நடிகர் திலகத்திடம் எந்தளவிற்கு அன்பும், மரியாதையும் வைத்துள்ளனர் என்பதற்கு மேற்கோள்காட்டிய புகைப்படங்களே சாட்சி !