http://i1170.photobucket.com/albums/...psb29ab4fb.jpg
Printable View
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்க நிர்வாகி திரு.கே.பாபு அவர்களின்
அன்புத் தாயார் நேற்று காலை இயற்கை எய்தினார் .
அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்பு தோழர்கள் நேற்று முதல் இறுதி
அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
திரு.கே. பாபு அவர்களின் தாயாரின் பூத உடல் சென்னை மடிப்பாக்கத்தை
அடுத்த கோவிலம்பாக்கத்தில் உள்ள மயானத்தில் இன்று மாலை 4 மணியளவில் இறுதி மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.
தாயை இழந்து வாடும் திரு.கே.பாபு அவர்களுக்கும் , அவரின் குடும்பத்தினருக்கும் என் சார்பாகவும் ,அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்
ஆர். லோகநாதன்.
சென்னை ஆல்பர்ட் அரங்கில் மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் 100வது நாள் சிறப்பு காட்சி திரு விழா ரசிகர்கள் வெள்ளத்தில் தமிழகம் - புதுவை - கர்நாடக எம்ஜிஆர் மன்றங்கள் சார்பாக பல ரசிகர்கள் ஒன்று கூடியுள்ளனர் .
பெங்களுர் எம்ஜிஆர் மன்றம் சார்பாக பிரமாண்ட வண்ண மாலைகள் பதாகைகளுக்கு அணிவித்தார்கள் . பட்டாசுகள் வெடித்து ரசிகர்களும் பொது மக்களும் கலந்து கொண்டு விழாவை .சிறப்பித்து வருகிறார்கள்
இன்று மாலை காட்சி 1070 இருக்கைகள் கொண்ட ஆல்பர்ட் அரங்கில் முன் பதிவு மூலம் ஹவுஸ் புல் ஆகியுள்ளது .சத்யம் அரங்கிலும் இன்று மாலை காட்சி அரங்கு நிறைந்துள்ளது .
மறு வெளியீட்டில் ஆயிரத்தில் ஒருவன் 100வது நாளில் அரங்கு நிறைந்த காட்சிகளுடன் சிறப்பு விழாவுடன் ரசிகர்கள் வெள்ளத்தில் விழா நடை பெறுவது இந்திய திரை உலகில் ஒரு மாபெரும் சாதனை .
ஆல்பர்ட் அரங்கில் தற்போது 4.30 மணி நிலவரத்தை அங்கிருந்து அலைபேசி மூலம் தகவல் தந்த இனிய நபர் திரு பாலா , பெங்களுர் அவர்களுக்கு நன்றி .
மீண்டும் சரித்திரம் படைத்த ஆயிரத்தில் ஒருவன்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், தமிழக முதல்வர் ஜெயலலிதா இணைந்து நடிதத காவியம் ஆயிரத்தில் ஒருவன். பி.ஆர்,பந்துலு இயக்கினார். விசுநாதன் ராமமூர்த்தி இசையில் கண்ணதானின் காலத்தால அழியாத பாடல்களை கொண்ட படம்.
40 ஆண்டுகளுககு முன்பு வெளிவந்த இந்தப் படத்தை திவ்யா பிலிமஸ் சொக்கலிங்கம் டிஜிடடல் மயமாக்கி, நவீன ஆடியோ வசதிகள் செய்து சினிமாஸ்கோப் வடிவில் மறு வெளியீடு செய்தார். சத்யம் மற்றும் ஆல்பர்ட் தியேட்டரில் 100 வது நாளை இன்று (ஜூன் 22) எட்டியுள்ளார் ஆயிரத்தில் ஒருவன்.
படத்தின் 50வது நாள் விழாவையே ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். இன்று 100வது நாள் விழாவையும அதே உற்சாகத்துடன் மாலை 6 மணிக்கு ஆல்பர்ட் தியேட்டரில் கொண்டாடுகிறார்கள். இந்த விழாவில் எம்.எஸ்.விசுவநாதன் உள்ளிட்ட ஆயிரத்தில் ஒருவன் படம் சம்பந்தப்பட்ட கலைஞர்களை அழைத்து கவுரவிக்கிறார்கள். இதனால் ஆல்பர்ட் தியேட்டர் வளாகமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=flDi...t=HL1403359088