-
நவம்பர் 14 - குழந்தைகள் தினம் ! - நடிகர் திலகத்தின் பாடல்கள் இல்லாமலா ?
பருப்பில்லாத கல்யாணமா என்பது போல மனித வாழ்வில் ஒவ்வொரு நிகழ்விற்கும் நடிகர் திலகம் அவர்கள் பாடல்களே மிக பொருத்தமானவை என்பதை நாம் கூறதான் வேண்டுமோ ?
தங்கங்களே நாளை தலைவர்களே நம் தாயும் மொழியும் கண்கள் ......
https://www.youtube.com/watch?v=Xr4gvXXgCnU
நான் தன்னந்தநிகாட்டு ராஜா ...
https://www.youtube.com/watch?v=2BqghZZSNnQ
இது புரியாத வெள்ளாடு தெரியாமே ஓடுது......
https://www.youtube.com/watch?v=9TCbJhMx7ak
செல்லக்கிளிகளாம் பள்ளியிலே .....
https://www.youtube.com/watch?v=6-ZUJLjz0Z8
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே ...நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே ....
https://www.youtube.com/watch?v=k3YN6RCZHs0
கிண்கிணி கிண்கிணி என ......
https://www.youtube.com/watch?v=tIu-muoZNls
-
யாருக்கு இந்த சமூகத்தின் மீது அக்கறை ?
யாரோ யாரைபற்றியோ ஒரு சில மாதத்திற்கு முன் யார் வீட்டு விழாவிலோ கூறியதை கூட பொறுத்துக்கொள்ளமுடியாமல், "இந்த சமூகத்தின் மீது அக்கறை கொண்ட எழுத்தாளன் என்ற முறையில்" என்று கூறிக்கொண்டு புலம்பி தீர்த்துள்ளார் ஒரு எழுத்தாளர் ????
இதை படித்த பிறகு நமது தரப்பில் இருந்து ஒரு விண்ணப்பம் வைத்தோம். அதாவது இரு திரிகளுக்கும் உள்ள நல்லுறவின் பொருட்டு அந்த 3 பக்கங்களை நீக்க. ஆனால் வந்த பதிலோ வேறு. இது போதாதென்று சுவற்றில் எறிந்த பந்து உதாரணம் வேறு கடல் கடந்து...
நாம் நிறுத்தினாலும், நம்மை நிருத்தவிடமாடோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வம்பிழுத்தால் என்ன செய்வது ?
அந்த சமூகத்தின் மீது அக்கறை கொண்ட எழுத்தாளர் பதிவு செய்யும்போது, நமக்கு மட்டும் சமூகத்தின் மீது அக்கறை இருக்காத என்ன?
இருப்பினும் கற்பனை வளம் அதிகம் கொண்டு எழுதியுள்ள எழுத்தாளர் அளவிற்கு வர இயலாவிட்டாலும் உண்மையை நமக்கு தெரிந்தவரை எழுதலாமே என்று முடிவெடுத்ததால் வந்த பதில் பதிவு இது....!
இந்த பதிவு திரு. Mgr அவர்களை தாக்கி எழுதும் பதிவல்ல. அந்த எழுத்தாளர் கூறிய விஷயங்களுக்கு திரியில் பதிவிடும் பதில் பதிவு மட்டுமே...!
-
நடிகர் திலகத்தை பற்றிய தவறான செய்திகளை, பொய்யான பித்தலாட்டமான தகவல்களை மட்டுமே தொடங்கிய காலத்தில் இருந்து சமீபத்திய edition வரை பதிவு செய்துவரும் சமீபத்திய மஞ்சள் நிற அட்டைகொண்ட பத்திரிகைதான் அது.
பத்திரிகை 20 முதல் 25 பக்கம் என்றால் ..அதில் ஒரு 20 முதல் 25 சதவிகிதம் நடிகர் திலகத்தை திட்டியோ, அவரை, அவர் படங்களை பற்றி குறை கூறியோ, இப்படி ஒட்டிகொண்டிருக்கும் ஒரு பத்திரிகைதான் அது.
சமூகத்தின் மீது அக்கறைகொண்ட எழுத்தாளன் என்ற போர்வை எதற்கு என்பது தான் புரியவில்லை. ஒரு வேளை கோர்வையாக இருக்கிறதென்று இந்த எழுத்தாளர் நினைத்துவிட்டாரோ என்னவோ.
-
நடிகர் திலகம் உலகில் சிறந்த நடிகர் என்று 1959இல் உலக அரங்கிலேயே பிரகடனபடுத்தி விருதும் கௌரவமும் கொடுத்தாகிவிட்டது. அதற்க்கு அடுத்தபடியாக உலக வல்லரசாக விளங்கிய, விளங்குகின்ற அமெரிக்காவும், அதற்க்கு அச்சாரமாக எங்கள் மாநிலத்தின் ஒரு நாள் மேயரும் நீங்கள் என்று சாவியும் கொடுத்தாகிவிட்டது. இன்று வரை எவருக்கும் கிட்டாத பாகியம் !
அமெரிக்க அதிபர் கென்னெடி அவர்கள் ஒரு படி மேலே சென்று நடிகர் திலகத்தை கலாசாரா தூதுவராக அறிவித்தேவிட்டார் ! அமெரிக்க hollywood நடிகர் திலகத்தை அழைத்து golden carpet welcome & dinner கொடுத்தது. இவை எல்லாம் கனவில் கூட ஏழு ஜென்மம் அல்ல எத்துனை ஜென்மை எடுத்தாலும் மற்றவர்களால் நினைத்து பார்க்க முடியாத விஷயம்...
உலக விற்பன்னர்களும், மா மேதைகளும் என்றோ ஒத்துகொண்ட விஷயத்தை பல வருடங்கள் கழித்து இன்னொருவர் வழிமொழிந்தது ஒரு பெருந்தன்மையான விஷயம் ஒன்றும் இல்லை. இந்தியாவின் உண்மையான உலக நடிகராக ஒத்துக்கொள்ளப்பட்டு அங்கீகாரமும் கொடுத்தாயிற்று. அதற்க்கு பிறகு தான் வேண்டா வெறுப்பாக நாங்களும் ஒத்துகொள்கிறோம் என்று அன்று கட்சி நடத்தியவர்கள் ஒரு சில காரியங்களை இவரை முன் நிறுத்தி செய்தார்கள்.
சமூகத்தின் மீது அக்கறை என்றால் இந்த மக்கள் விரோத அரசு பதவி ஏற்றவுடன் கொண்டுவந்த மக்கள் விரோத பால் விலை ஏற்றம், மின்சார விலை ஏற்றம், bus charge ஏற்றம்...இப்படி தொடர்ந்து சமூகத்தை நேரடியாக கடுமையாக பாதித்த விஷயத்தை எழுதியிருக்கலாம் அந்த அந்த சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட எழுத்தாளர்.
அல்லது சமீபத்தில் மீண்டும் இந்த மக்கள் விரோத அரசு, பால் விலையை ஏற்றியதே..அப்போது சமூகஅக்கறை கொண்ட எழுத்தாளராக போர்வையால் போர்த்தி எழுதியிருக்கும் எழுத்தாளர் அதை சாடியிருக்கலாம்.
அல்லது தொடர்கொலைகள், கொள்ளைகள், வழிப்பறி தமிழகம் முழுதும் தலைவிரித்து ஆடுகிறது சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து...சமூகத்தின் மீது அக்கறை என்றால் அதை பற்றி எழுதி இருக்கலாம்...அந்த சமூகத்தின் மீது அக்கறை கொண்ட எழுத்தாளர்..
அல்லது சென்னையில் conjunctivitis பரவுகிறது வேகமாக. அதற்க்கு இன்னது செய்யுங்கள் precaution ஆக என்று அறிவுரைத்திருக்கலாம் இந்த சமூகத்திற்கு அந்த சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட எழுத்தாளர்.
இப்படி சமூகத்திற்கு அக்கறையோடு ஒரு விஷயமும் செய்யாமல், எழுதாமல், தனக்கு துளி கூட சம்பந்தம் இல்லாமல் இருக்கும் ஒரு விஷயம் அதுவும் வேறு யார் வீட்டிலோ எல்லா வருடமும் கொண்டாடப்படும் ஒரு விழாவில் அந்த வீடுசொந்தக்காறரை பற்றி இந்த உலகில் உள்ள உண்மை தமிழர்கள் மட்டுமல்ல...அவரை நன்கு அறிந்தவர்கள் கூட காலம் காலமாக உணர்ந்து, அனுபவித்து கூறிய ஒரு விஷயத்தை ஒருவர் மீண்டும் நினைவு கூர்ந்து உரைத்தார்...
அது கூட பொறுக்க முடியாமல் வெறும் வயிதெரிச்சலில், காழ்புணர்ச்சியில்..."அய்யயோ அவரை இவர்களும் மட்டும்தான் இப்படி கூறவில்லை ..இப்போது கூறிவிட்டார்களே...என்று வேதும்பலில் தங்களுடைய சொந்த பத்திரிகை மூலம் புலம்ப முடிவெடுத்து அதற்க்கு சமூகத்தின் மேல் உள்ள அக்கறையுள்ள எழுத்தாளன் என்ற ஒரு ஓட்டை போர்வையை போர்த்திக்கொண்டு ஒரு calligraphic diarrhea வை பூசி மொழுகி வைத்துள்ளார் அந்த கற்பனை எழுத்தாளர்.
இவருக்கு எந்த காலத்தில் சமூகத்தின் மீது அக்கறை இருந்தது...?
-
சமூகத்திற்காக உருப்படியாக எதுவும் செய்யாத ஆனால் சமூகத்தின் மீது அக்கறை என்று கூறிக்கொண்டு சமூகத்திற்கு துளி கூட சம்பந்தம் இலாத விஷயத்தை உன்னுடைய சொந்த விருப்பு வெறுப்பு காரணத்தால் பத்திரிகையில் புலம்புகின்றீரே...எதற்கு உமக்கு இந்த பொய் பித்தலாட்டம் ?
இனியாவது உன்னுடைய சொந்த புகழ் மட்டும் பாட பழகிகொள்ளுங்கள் எழுத்தாளரே !
ஒன்று மட்டும் உறுதி...அது யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் ......எவருமே ஒரு முழுமையான யோகியன் அல்ல இந்த உலகத்தில் !
சுவற்றில் பந்து எரியும்போது அது கடல் கடந்து கூட திரும்ப செல்லும் என்றும் ஒரு சிலர் அறிந்துகொள்ளட்டும் !
கிரீடம் பற்றி சிந்திப்பவர்கள் என்றும் செருப்பை பற்றி சிந்திக்க மாட்டார்கள். ஆனால் செருப்பை பற்றி சிந்திப்பவர்கள் என்றுமே கால்களை மட்டுமே தேடிகொண்டிருப்பார்கள்.
அப்படியாவது ஆதாயம் கிடைக்குமா என்று 180 டிகிரி வளைந்து கூன் விழுந்து, தினமும் எங்கோ வருபவர்களுக்கு... இங்கிருந்தே மண்டியிட்டு வணக்கம் போட்டு ...வணக்கம் போட்டு.... ஆதாயத்திற்காக அடிமை வாழ்க்கை பழகுபவர்களுக்கு பாவம், கிரீடம் எங்கே கண்களில் தெரிய போகிறது...
செருப்பு போடும் கால்கள் மட்டுமே இவர்கள் கண்களுக்கு தெரியும் ! புரியும் !
மாணிகியத்தின் மதிப்பு மண் பானை விற்பவனுக்கா புரியும் ?
-
-
-
Quote:
Originally Posted by
Yukesh Babu
just relax rks
Yeah...I will Yukesh !
Thanks for the concern !
RKS
-
"மேலும், தமிழகத்தில் என்னவெல்லாம் பயனுள்ள திட்டங்களாக தொடங்க பட்டு இன்றுவரை உள்ளதோ அவைகளில் முக்கால் வாசிக்கும் மேல் கர்ம வீரர் காமராஜரால் கொண்டுவரப்பட்ட திட்டங்களாகும் ! "
Great RKS. This is the Truth!!!!.
கர்மவீரரால் தொடங்கப்பட்டு எந்தவிதப் பெயரும் இல்லாமல் "மதிய உணவுத்ததிட்டம்" என்றே அறியபட்டதை தங்களுடைய பெயரை சேர்பதற்காக அதன் பெயரை மாற்றி விட்டார்கள்!!!!
இப்பொழுது அவருடைய ரசிகர்கள் அவர்தான் அதைக் கொண்டு வந்ததைப் போல் பேசுகிறார்கள்!!!!
ANM
-