மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் "பறக்கும் பாவை " வெளியான தினம்.-11/11/1966. 49 ஆண்டுகள் நிறைவு பெற்றது.
இயக்குனர் ராமண்ணா தயாரித்த முதல் முழு நீள வண்ணப்படம்.
மெல்லிசை மன்னரின் இனிமையான பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தது.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பல வண்ண உடைகளில் ஜொலித்தார்.
புதுமையான, வித்தியாசமான, மாறுபட்ட சண்டை காட்சிகள் நிறைந்தது.
குறிப்பாக ஸ்டன்ட் நடிகர் புத்தூர் நடராஜனிடம் புரியும் சண்டை காட்சிகள்
வேறு எந்த படத்திலும் இடம் பெறாதது போல் சுவையாகவும், சுறுசுறுப்பாகவும்
விறுவிறுப்பாகவும் , அடிக்கடி காணும் ஆவலை தூண்டுவது போலும் இருந்தன.
கதாநாயகிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட படம்.
நகைச்சுவை காட்சிகள் நல்ல கலகலப்பு.
படத்தின் டைட்டில் காட்சியிலும், சர்க்கஸ் காட்சிகளிலும், மெல்லிசை மன்னரின்
பின்னணி இசை மிகப் பிரமாதம்.
காதல் காட்சிகளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். - சரோஜாதேவி (கெமிஸ்ட்ரி )
நெருக்கம், அபிநயம், நடனம், - அழகு, அருமை. இனிமை.
கதாநாயகிக்கு வரும் பல்வேறு ஆபத்துகளில் இருந்து காப்பாற்றி கரை சேர்ப்பது தான் கதாநாயகனுக்கு முழு வேலையும், பொறுப்பும், கடமையும். அதை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நிறைவாகவும், இயல்பாகவும், அசத்தலாகவும் செய்துள்ளார் .
பாடல்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நடன அசைவுகள் வித்தியாசமாகவும்,
ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்வது போல் இருந்தன.
இந்த திரைப்படம் வெளியாகி ஒரு மாத இடைவெளியில் , பெற்றால்தான் பிள்ளையா வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்ததால் , எதிர்பார்த்த
வெற்றி இலக்கை இந்த திரைப்படம் அப்போது அடையவில்லை.
ஆனால் மறுவெளியீட்டில் பறக்கும் பாவை சக்கை போடு போட்டுள்ளது.
இப்போதும் அடிக்கடி திரை அரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போடுகிறது.