Reminds me of what Shashank (flute player) said to me when I asked him to autograph a cassette ---" innum cassette-aa?" This was more than 30 years back when carnatic music on CDs were not that common ! :lol:
Printable View
kalnayak,
arunmozhi sang till 2000's i guess . he sang for S.A.rajkumar, sirpi etc and then disappeared.
எம்எஸ்வி டைம்ஸ் விழா தொடர்ச்சி
அதன் பிறகு தாயன்பன் அடுத்த பாடலைப் பற்றிய ஒரு முன்னுரையை சொன்னார். விருப்பத்தோடு மனம் புரியாமல் விதி வசத்தால் திருமணம் செய்துக் கொண்ட தம்பதியர். அவர்களுக்கு சந்தர்ப்ப சூழலால் இணைய முடியவில்லை. ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாக இருந்து இரு மனமும் ஒன்றுபட்டு முதல் இரவிற்கு தயாராகும் அந்த தம்பதியினரின் குரலாக ஒலிக்கும் இந்தப் பாடல் என்று தாயன்பன் முடிக்க என்ன பாடலாக இருக்கும் என்று சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது. உஷாராஜ் குத்து விளக்கெரிய என்று ஆரம்பிக்க பச்சை விளக்கு தெரிந்தது. கூடவே ஒரு சில நினைவலைகளும்
பச்சை விளக்கு மிக சின்ன வயதில் பார்த்திருக்கிறேன். ஒளிமயமான எதிர்காலமும், கேள்வி பிறந்தது அன்று பாடலும் அதன் காட்சிகளும் மங்கலாக நினைவில் இருந்தது. ஆனால் இந்த வாராதிருப்பாளோ வண்ண மலர் பாடல் காட்சி மட்டும் நினைவிற்கே வரவில்லை. அன்றைய நாட்களில் டிவி இல்லாததனால் ரேடியோவே கதி. நடிகர் திலகத்தின் படம் டிஎம்எஸ் சுசீலா, எனவே ஒரு டூயட் பாடலாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் சௌகார் ஜோடி என்று தெரியும். ஒரு சந்தேகம் இருந்தது.
கல்லூர்ரியில் படித்துக் கொண்டிருக்கும்போது பச்சை விளக்கு மறு வெளியீடாக வெளியானது. மதுரையில் போத்திராஜா என்று ஒரு தியேட்டர் இருந்தது. செல்லூர் என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்திருந்த அந்த தியேட்டருக்கு செல்ல வேண்டுமென்றால் வைகை ஆற்றை கடந்து போக வேண்டும். அப்படி ஒரு மதியக் காட்சிக்கு ஒரு சில நண்பர்கள் போகிறோம். படம் பார்க்கிறோம். இடைவேளைக்கு பிறகு இந்த பாடல். குத்து விளக்கெரிய என்று விஜயகுமாரி ஆரம்பிக்க மனதில் ஒரு சின்ன பகீர். இருந்தாலும் இந்தப் பக்கம் விஜயகுமாரி பாடுவாராக இருக்கும். டிஎம்எஸ் பாடும்போது தலைவர் காட்சிக்குள் வந்துவிடுவார் என்று எங்களுக்குள் பேசிக் கொள்கிறோம். அப்படி நினைக்க காரணம் குலமா குணமா படத்தில் உலகில் இரண்டு கிளிகள் பாடல் காட்சியில் முதலில் ஜெய் வாணிஸ்ரீ ஜோடியை காண்பித்தாலும் அடுத்த சரணத்தில் நடிகர் திலகம் பத்மினி ஜோடி பாடுவது போல் வரும். இங்கும் அது போன்று இருக்கும் என்று நினைக்கிறோம்.
சுசீலா பல்லவி பாடி முடித்து இடை இசை முடிந்து சரணம் துவங்கும் நேரம். தென்னை மரத்தில் சாய்ந்து நிற்கும் எஸ்எஸ்ஆர் "கண்ணழகு பார்த்திருந்து" என்று ஆரம்பிக்க அப்படியே வெறுத்துப் போனோம்.[எஸ்எஸ்ஆர் பிரியர்கள் குறிப்பாக கலைவேந்தன் போன்றவர்கள் மன்னிக்க] எங்களோடு வந்திருந்த இரண்டு நண்பர்கள் எழுந்து வெளியே போய்விட்டார்கள் [இதற்கும் தம்மடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள்].அன்று முதல் இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் பின்னாட்களில் டிவியில் பார்த்தாலும் அந்த ஏமாற்றம்தான் நினைவிற்கு வரும்.
இந்தப் பாடல் முடியும்போதே இரவு மணி 9.50 ஆகிவிட்டது. ஆனால் இசைக்குழுவினர் இனியும் பாடல்கள் இருக்கின்றன என்கிறார்கள். அடுத்த பாடல் என்னவென்று கேட்டுவிட்டு கிளம்பலாம் என்றால் அப்போது வருகிறது அறிவிப்பு அடுத்த பாடல் பிராப்தம் திரைப்படத்தில் இடம் பெற்ற சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் என்று. எழுந்தவன் உட்கார்ந்து விட்டேன். கிருஷ்ணராஜும் உஷாராஜும் அருமையாக பாடினார்கள். மணி 10. அடுத்த பாடல் பற்றி சொல்ல வந்த தாயன்பன் எப்போதும் எஸ்பிபிக்கும் சிந்து பைரவி ராகத்திற்கும் ஒரு chemistry உண்டு என்றும் அந்த ராகத்தில் எஸ்பிபி பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் என்று சொல்லிவிட்டு அவர் அறிவித்த பாடல் சிம்லா ஸ்பெஷல் படத்தில் இடம் பெற்ற உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா. ஞானசேகர் பாட ஆரம்பிக்க கிளம்ப மனமில்லையென்ற போதும் அதற்கு மேல் இருந்தால் ரொம்ப லேட்டாகி விடும் என்பதனால் ஹாலிலிருந்து வெளியேறினேன். அதன் பிறகும் கச்சேரி தொடர்ந்து நடந்துக் கொண்டிருந்தது.
(முற்றும்) .
.
அன்புடன்
நிலாப் பாடல் 10. அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
-----------------------------------------------------------------------------------------------------
இந்தப் பாட்டை எழுதறப்போ எனக்கு என்னவோ ஒரு சிட்டுக்குருவி இமயமலையைப் பார்த்து வியந்து அதைச் சொல்ற உணர்ச்சிதான் எனக்கு வருது. இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சம் எனக்கும் தமிழ் தெரியுது-ன்ற தைரியத்துல எழுதுறேன். பாட்டை என்ன சொல்றது. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா இவ்வுலகில்?
முதலில் கவியரசர். இன்னும் தமிழ்நாட்டுலய பலபேருக்கு இந்த பாட்டோட பொருள் தெரியலை. அவங்க இந்த பாட்டை சும்மா எங்கயாவது கேட்டிருப்பாங்க. ஏதோ காய் கறிகளை பத்தி சொல்லியிருக்கார்னு நெனைப்பாங்க. படத்தை பார்த்தவங்களுக்கு கொஞ்சம் புரிய ஆரம்பித்திருக்கும். கவியரசர் தன்னோட திறமையை காட்டணும்னு எழுதினாரோ இல்லை அதுக்காக நெறய மெனக்கெட்டாரோ தெரியலை. மன்னிக்கணும், கவியரசர் மெனக் கெட்டுதான் தன்னோட கவித்திறமையை காட்டணும்ங்கிற நெலமையில் இருந்ததில்லை-ன்னு நெறய பேர் சொல்லியிருக்காங்க. ஜஸ்ட் லைக் தட் இது அமைஞ்சிருக்கும். இல்லை சிலவரிகளை சொன்ன பின்னாடி பாடல் முழுவதும் இப்படியே சொன்னால் என்னன்னு சொல்லியிருக்கணும். ஆக மொத்தத்துல இந்த பாட்டுல அவரோட தமிழ் ஆளுமை அழகாப் புலப்படுது. இந்தப் பாட்டை வைத்து ஒரு பெரிய பாடமே நடத்த்தலாம் அவ்வளவு மேட்டர் இருக்கு. எத்தனை காய்கள் வருதுன்னு எங்கயோ படிச்சேன். நினைவில் இல்லை இப்ப. தெரிஞ்சவங்க சொல்லுங்க.
ரெண்டாவது மெல்லிசை மன்னர்கள். பாட்டை எழுதின பின்பு மெட்டு போட்டாங்களோ, மெட்டு சொல்லி பாட்டு எழுதினாங்களோ.எனக்குத் தெரியலை. அளவான இசையை இனிமையாகூட்டியிருக்காங்க இந்த பாடலுக்கும். கேட்க கேட்க சலிக்கலை. பாட்டு வரிகளைப் பத்திதான் மனசு யோசிக்குது - இந்த காய் வச்சு என்ன சொல்றாங்க. எத்தனைப் பாடல்களில் நாம் வரிகளைப் பற்றி இப்படி யோசனை செய்து கேட்க முடியும்? அங்கயெல்லாம் இசை, வார்த்தைகளை மூழ்கடித்த்து இருக்கும். இங்க அப்படியா?
அப்புறம் நடிகர் திலகம், தேவிகாம்மா. பாட்டுக்கு ரெண்டு ஜோடி. ரெண்டாவது ஜோடி பாலாஜி மற்றும் வசந்தி. காதல் கல்யாணத்தில் முடிந்து முதல் இரவில் (இல்லை இல்லை தேன்-நிலவில்-னு சொன்னா ரொம்ப பொருத்தமாய் இருக்கும்இல்லையா நிலாவை பார்த்து பாடுவதினால்? ) பாடுவதாக அமைந்த பாடல். நடிகர் திலகம் அந்த குறும்பு கொப்பளிக்க கொஞ்சி கொஞ்சி பாடுவதை (சாளரக் கதவை மூடி பாடிக்கொண்டே கண்ணை மூடி தலையை தலையை ஆட்டிக்கொண்டு அறையின் உள்ளே போவார் பாருங்கள். அடுத்து அந்த தோள் இரண்டையும் கீழிறக்கிகண்ணை மூடி தேவிகாவை தொடருவார். பார்க்க பார்க்க சுகமாய் இருக்கும். இதனால்தான் என்னவோ பெரும்பாலான நடிகர் திலகம் ரசிகர்களுக்கு தேவிகான்னா மிகவும் பிடித்த்திருக்கிறது. பாலாஜியும் தன் குறும்புத்தனத்தை வசந்தியிடம்நன்றாக வெளிப்படுத்துவார். நகைச்சுவை படம் வேறு ஆச்சா. படம் பார்ப்பவர்களுக்கு பெரிய விருந்துதான் இந்த பாடல்.
பாடலை பாடியவர்களைசொல்ல மறந்தால் எழுத கணினி கிடைக்காதே. பாடகர் திலகம், இசையரசி, PBS மற்றும் ஜமுனாராணி. இவர்களைப் பற்றி சொல்வதற்கு எனக்கு என்ன தெரியும்?
இப்படி கூட்டணி கெடச்சு அருமையாய் கொடுத்த B.R. பந்துலுவின் அருமையான டீம் வொர்க் இந்த முழு படமுமே. சரி. பாட்டு வரிகளைப் பாப்போமே.
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ
நீ என்னைப்போல் பெண்ணல்லவோ
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ
என்னுயிரும் நீயல்லவோ
(அத்திக்காய்..)
கன்னிக்காய் ஆசைக்காய் காதல்கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக் காய்
(கன்னிக்காய்..)
மாதுளங்காய் ஆனாலும் என்னுள்ளங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ
இரவுக்காய் உறவுக்காய் எங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக்காய்
(இரவுக்காய்..)
உருவம் காய் ஆனாலும் பருவம் காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
(அத்திக்காய்..)
ஏலக்காய் வாசனைப்போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமை இன்பம் கனியக்காய்
(ஏழக்காய்..)
சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவிளங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
(அத்திக்காய்..)
உள்ளமெல்லாம் மிளகாயோ ஒவ்வொரு பேர்குரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்ததுப்போல் வெண்ணிலவே சிரித்தாயோ
(உள்ளதெல்லாம்..)
கோதை என்னை காயாதே கொற்றவரைக் காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா
பாட்டை இப்போது பார்ப்போம்.
https://www.youtube.com/watch?v=muWBARd3oAk
இப்படிப்பட்ட ஒரு பாட்டை பாண்டியன் பாடினால் யாருமே "பலே பாண்டியா"ன்னு தான் சொல்வாங்க இல்லையா?
(எழுத்துப் பிழையிருப்பின் பொறுத்தருள்வீர்)
முரளிங்ணா.. வெகு அழகிய பதிவு.. நாங்களும் இன்னிசைக் கச்சேரி கேட்ட உணர்வு.. நன்றி..போத்திராஜாவில் தான் ஆண்டவன் கட்டளை பார்த்தகதை முன்பு எழுதியிருந்தேன்.. பச்சை விளக்கு எனக்கும் அந்த எஸ் எஸ் ஆர் பாட்டு கொஞ்சம் ஏமாற்றமே..படமும் இப்போது நினைவில்லை..ஒரே ஒரு ஜோக் மட்டும் நாகேஷின் நினைவுக்கு வருகிறது.. இவளா இவ பதினெட்டு மாசம் என்பது போல் வரும்..
இன்னும் எழுதுங்கள்..
கல் நாயக்.. சமர்த்தாய் அழகாய் எழுதியிருக்கிறீர்கள்..அத்திக்காய் பிடிக்காதவர் உண்டோ..ம்ம் ஈவ்னிங் வீட்டுக்குப் போய் ஃபர்தர் அலசப்பார்க்கிறேன்.. இப்போதைக்கு - உள்ளமெலாம் மிளகாயோ ஓவ்வொருபேச் சுரைக்காயோ என வரும்.. நார்மலா தூதுவிளங்காய் என எழுத்தில் சொல்லப்படும் காய் கடையில் கேட்கும்போது தூதுவளங்காய் என்றுதான் கேட்கப்படும்..அதை சாமர்த்தியமாக தூது வழங்காய் வெண்ணிலா என எழுதியிருப்பார்..
ஞாயிற்றுக் கிழ்மை சந்தை மதுரையில் என் அண்ணா இந்த தூதுவளைக் கீரை தான் வாங்கி அதன் இலைகளை ஆய்ந்து (ரொம்பக் கஷ்டங்க.. முழுக்க முள்ளா இருக்கும்..பார்த்து ப் பிய்க்கணும்..அம்மா பின் மன்னி செய்து தருவார்கள்)அதை நெய்யில் வறுத்து தினசரி உண்பார்..( நெஞ்சுக்கபம், அப்பறம் ஜெனரலா நலல்து என்பதற்காக)..தூதுவளங்காய் எதற்கு உபயோகம் எனத் தெரியவில்லை..ஆனால் அந்த இலைகளினூடே கொஞ்சம் குட்டி க் குட்டியாய் இருக்கும்..வெகு குட்டி நெல்லிக்காய் இந்த அரை நெல்லிக்காயின் விதைசைஸில் பச்சை உருண்டையாய் இருக்கும்..
கொத்தவரங்காய் என்பது லோகல் தமிழ்..கொற்றவரைக்காய் என்பது செந்தமிழ்..எவ்ளோ அழகு..
ஆலங்காய் ஆலமரத்துக்காய்.. ஆனால் ரொம்பக் கசக்குமாம்..அதுவும் இந்த ஆலம் இருக்கிறதே (அட நடிகையை இல்லீங்ணா) அந்த வார்த்தைக்கு இன்னொரு பொருள் உண்டு.. விஷமாம்.. கசக்கின்ற வெண்ணிலவேன்னு பொண்ணும் பையனும் சொல்றதா வச்சுக்கலாம்..ஆனா அது இடிக்குதே..சரி..ஆலங்காய் வெண்ணிலவு என்றால் ஆலமரத்தின் மேல் காய்கின்ற வெண்ணிலவு.. என்றும் கொள்ளலாம் இல்லியோ..
என்ன ஜாலி மூட்ல இருக்கற திருமணத் தம்பதிகளுக்கு நிலவோட கிரணங்களே சூடா இருக்குதாம்..பொண்ணு வந்து.. ஹே நிலாக்குட்டி சமர்த்தோல்லியோ என்னவர் திக்குல காய்.. என்று சொல்கிறாள் என்று ஆரம்பித்துப் போகிறது பாட்டு..
மங்கை எந்தன் கோவைக்காய்க்கு ரொம்ப மண்டை காய்ந்தேன் முன்னாலே.. கடைசில தான் அவ தன்னோட கோவை - தன் மன அரசனைச் சொல்றான்னு புரிஞ்சுது..
ம்ம் நல்ல பாட்டுக்கும் நினைவூட்டலுக்கும் நல்ல ரைட் அப்புக்கும் தாங்க்ஸ் :) யாரங்கே இவருக்கு ஒரு கொத்தவரங்காய்ப் பருப்பு உசிலி செய்து கொடுங்கள் (எனக்குப் பிடிக்குமே) :)
சி.க.
உண்மையாவே அதுல சொன்ன எத்தனைக் காய் (ஹா இப்பிடின்னு ஒரு 'எத்தனைக்' காயா?) இருக்குன்னு எனக்குத் தெரியாது. ஒரொரு காயா சொல்லி இந்த காய்தான் இதுன்னு உங்களை மாதிரி யாராவது சொன்னாதான் எனக்கு தெரியும். அந்த ஆலங்காய்க்கு வெள்ளையாய் இருக்கிற காய் என்று பொருள் வருமா? இந்த பாட்டோட ஸப்-டைடில் ஆங்கிலத்தில பாருங்களேன்.
ரொம்ப நன்றிங்ணா.
முரளி,
எம்எஸ்வி டைம்ஸ் விழாவை 4 பகுதிகளாக விவரித்து எழுதியமைக்கு மிக்க நன்றி. நேரில் பார்க்காத குறையை போக்கியது. குத்து விளக்கெரிய பாடலில் ஏற்பட்ட அனுபவம் பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். எனக்கும் இதைப் போன்ற அனுபவம் உண்டு. தங்கப்பதுமை படத்தில் ஜிலுஜிலுப்பான பாடலான ‘முகத்தில் முகம் பார்க்கலாம்..’ பாடல் திரு.சிவாஜி கணேசனுக்கும் பத்மினி அவர்களுக்கும் போலிருக்கிறது என்று படத்தை பார்க்கும் முன் நினைத்திருந்தேன். படத்தில் அந்த பாடலுக்கு டி.ஆர்.ராஜகுமாரி அவர்கள் நடித்திருப்பார். ஆனாலும், கணிப்பு தவறியது என்று சொல்லலாமே தவிர, (ஏற்கனவே சொக்கட்டான் ஆடி மன்னர்களை அடிமைப்படுத்தும் லக் பேஷ்வாவை பிடித்துப் போனதாலோ என்னவோ)ஏமாற்றமில்லை.
கல்நாயக்,
அத்திக்காய் காய் காய்... பாடல் எனக்கும் மிகவும் பிடித்த பாடல். அருமையாக அலசியுள்ளீர்கள்.
‘கரிக்காய் பொறித்தாள், கன்னிக்காய் தீர்த்தாள்...’ என்ற காளமேகப் புலவரின் பாடல் தந்த தாக்கத்தால் கவியரசர் எழுதியது இந்தப் பாடல். இதே போல, ராமச்சந்திர கவிராயர் எழுதிய,
‘கல்லைத்தான் மண்ணைத்தான்
காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?
இல்லைத்தான் பொன்னைத்தான்
எனக்குத்தான் கொடுத்துத்தான் ரட்சித்தானா?’
என்ற பாடலின் தாக்கத்தால் பாவமன்னிப்பு படத்தில் கவியரசர், எழுதிய பாடல், ‘அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்.....’
நீங்கள் குறிப்பிட்டுள்ள அத்திக்காய் பாடலில் ஒரு சிறு திருத்தம். 5வது பாராவில் ‘இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏலக்காய்’ என்று உள்ளது. அதில் ‘ஏலக்காய்’ என்பதற்கு பதிலாக ‘ஏழைக்காய்’ என்று இருக்க வேண்டும். உங்களுக்கும் இது தெரிந்திருக்கும். இருந்தாலும் டைப் செய்யும்போது ஏற்பட்ட எழுத்துப் பிழையாக இருக்கும் என்று கருதுகிறேன்.
நிலவு ஒரு பெண்ணாகி பாடலில் ரசிக்க எவ்வளவோ இடம் இருக்கு என்று நீங்களும் சின்னக் கண்ணனும் பேசிக் கொண்டீர்களே. பொன்னூஞ்சல் படத்தில் ‘முத்துச்சரம் சூடி வரும் வள்ளிப் பொண்ணுக்கு.... ’ பாடலைக் கேளுங்கள். ரசிக்க வேண்டிய இடம் இன்னும் அதிகம்.
சின்னக்கண்ணன்,
‘ஆலம் இருக்கிறதே (அட நடிகையை இல்லீங்ணா)’ ........... வேலை டென்ஷன் மறந்து சிரித்தேன். கோவைக்காய்க்கு நீங்கள் கொடுத்த விளக்கம்.... கொன்னுட்டீங்கப்பு. அப்புறம்... எனக்கு வாழைப்பூ பருப்பு உசிலி பிடிக்கும்.
நிறைய எழுத வேண்டும், கருத்துக்களை பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று ஆசை. நேரம் கைகளை கட்டிப் போடுகிறது.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்