Anbu Enum Nalla - Movie: Madi Veetu Ezhai
http://www.youtube.com/watch?v=_4ndKLlnMa4
Printable View
Anbu Enum Nalla - Movie: Madi Veetu Ezhai
http://www.youtube.com/watch?v=_4ndKLlnMa4
Deleted.
நிறைய பேருக்கு தெரியாத விஷயங்கள்-
1)1968 முதல்தான் சிறந்த நடிகர் பட்டம் , கொடுக்க பட ஆரம்பித்தது.
2)மொழி மாற்று படங்கள் தகுதி பெற முடியாது. (பாபு) .சவாலே சமாளிதான் தகுதி பெற்றது..
3)துக்ளக் இதழ் மூன்று வாரங்கள் இதை பற்றி விவரமாக எழுதியது. ஒரு வடக்கிந்தியர் ,சிவாஜி பெயரை முன்மொழிந்தார்.சௌந்தரா கைலாசம் எல்லோரிடமும் ,இந்த முறை சிவாஜிக்குதான் என்று சொல்லி கொண்டிருந்தாராம்.துக்ளக்கிற்கு பேட்டி கொடுத்த அத்தனை award committee அங்கத்தினர்களும் மென்று முழுங்கினார்கள்.
4)வேறு யார் பெயரையோ முன்மொழிந்த பின் ,சௌந்தரா கைலாசத்திடம் இதை பற்றி கேட்ட போது ,கூல் ஆக, ஐயய்யோ ,நான் சிவாஜி பெயரை முன்மொழிய பேச ஆரம்பித்த போது ,பதட்டத்தில் இன்னொரு பெயரை மாற்றி சொல்லி விட்டேன் .(இது பிலிம் நியூஸ் ஆனந்தன் சொன்னது)
9, 3 , 2 என்று நடிப்புலக இறைவனை வரிசை படுத்தும் ஒரு பதிவு இது - சற்றே மாறுதலாக தர எண்ணிய ஒரு முயற்சி இது . அடியும் , முடியும் காண முடியாத அளவிற்கு நடித்த மனிதனை எப்படியெல்லாம் பார்க்கலாம் , எப்படியெல்லாம் அலசலாம் என்று எண்ணும் போது இந்த ஒரு ஜென்மம் நமக்கு போறவே போறாது என்று தான் தோன்றுகிறது- இவரை பற்றி யார் அலசினாலும் , எழுதினாலும் ஒரு திருப்தி என்பது அவர்களுக்கு இன்னும் பூரணமாக கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே!! இன்னும் அவரை பற்றி 100 திரிகள் வந்தாலும் , அவரை பற்றிய சாதனைகளின் வருணனைகள் ஒரு பெரிய சமுத்தரத்தில் இருந்து ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்து போலத்தான் இருக்கும் - முழுமை பெற்றிருக்க வாயிப்பே இல்லை - இறைவனை நான் முழுதும் புகழ்ந்து விட்டேன் என்று சொல்வது போல இருக்கும் - கிளாஸ் தண்ணீரை எடுத்தவர்களின் நடுவே ஒரு உத்திரினியில் தண்ணீரை எடுத்துக்கொண்டு இந்த பதிவை இடுகிறேன் ----
தொடரும்
9 வேடங்கள்*
நவராத்திரி *: இந்த படம் NT இடமிருந்து 100வது என்ற பெருமையை வாங்கி கொண்டது - ஒருவர் இருவராக நடிக்கலாம் - ஆனால் ஒரே படத்தில் 9 different வேடம் போட்டு 9 பேர்கள் நடித்தார்கள் என்ற உணர்வை உண்டாக்க முடியுமா ? 9 இல் ஒருவர் இறந்து விடுவாரே - பார்த்து கண்ணீர் விட்டவர்கள் கணக்கில் அடங்குவார்களா ? அவர் கடைசியில் வந்து விட மாட்டாரா என்று ஏங்கி படத்தை விடாமல் தினமும் பார்த்தவர்கள் எவ்வளவு பேர்கள் ? ஒரு குஷ்ட்டரோகி யை கண்டு மனம் பதைத்தவ்ர்கள் எவ்வளவு பேர் ? - "இரவினில் ஆட்டம் , பகலினில் தூக்கம் - இதுதான் எங்கள் உலகம் " இந்த உலகத்தை பார்க்க துடித்தவர்கள் எவ்வளவு பேர் ? எந்த வேடத்தை சொல்வது எதை விடுவது என்று புரியாமல் தவித்த படங்களில் இதுவும் ஒன்று - மிக பெரிய வெற்றி வாகை சூடிக்கொண்ட படம்*
3 வேடங்களில் :
---- தெய்வ மகன்
----- திரி சூலம்
---- பலே பாண்டியா
தெய்வ மகன் - இந்த படத்தை அலசுவதும் ஒன்றுதான் , வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களை எண்ணுவதும் ஒன்றுதான் - ஆஸ்கார் போட்டிக்கு தேர்ந்து எடுத்த படம் - இன்னும் இந்த படத்தின் தாக்கத்தை மீற ஒரு படமும் வந்ததில்லை , வரப்போவதும் இல்லை - கண்ணனை மறுப்பார் இல்லை , கண்டு வெறுப்பார் இல்லை என்று பாடினாள் ஒருத்தி - ஆனால் இங்கோ அவனை வெறுத்தவர் பலர் - அவன் தந்தை உள்பட ---- நாய்களை ஏவி விட்டனர் அவனை கடிக்க - அவன் நடத்திய பாரத போரில் அவனுக்கு ஒரு அர்ஜுனன் இல்லை - உபதேசம் கேட்க்க யாருமே இல்லை - கேலி பேச்சுக்கள் அவனை அம்பாக தைத்தன - தாய் தந்தையின் பாசமின்மை அவனை முள்ளாக குத்தின - பிறருக்காக வாழ்ந்தான் - அதில் தான் எவ்வளவு இன்பம் - தனக்கு என்று ஒரு வாழ்வு இல்லை - ஆனால் ஓசியில் கிடைத்த வாழ்வுக்குத்தான் எவ்வளவு பெருமை சேர்த்தான் ... வசூலிலும் , ஓட்டத்திலும் ஒரு சாதனையை அன்றும் இன்றும் நாளையும் ஏற்படுத்திய , ஏற்படுத்திகொண்டிருக்கும் , ஏற்படுத்தும் படம் ஒன்று உண்டு என்றால் அது இதுதான் !
திரிசூலம் : சூலத்தால் தோல்விகளை குழி தோண்டி புதைத்த படம் - வசூலில் தனக்கு மிஞ்சியவர்கள் யாருமே என்றும் இல்லை என்று உலகத்திற்கு பறை சாற்றும் படம் - இரன்று கைகள் நாலானால் என்னவாகும் என்பதை உலகிற்கு உரைத்த படம்
பலே பாண்டியா : குறைந்த பண செலவில் , நிறைந்த நடிப்பில் , கவர்ந்த நகைச்சுவையில் , ஒரு படம் வருமா என்று அன்று ஏங்கியவர் பலர் - அது வரை சிரிக்க தெரியாதவர்கள் சிரிக்க கற்று கொண்டனர் - சிரிப்பை தொலைத்தவர்கள் , தான் இழந்த நகைச்சுவை உணர்வை திரும்ப பெற்று கொண்டனர் - படத்தை பார்த்தவர்கள் உடனே பாடிய பாடல் " நீயே உனக்கு நிகரானவன் " - வாழ வழியில்லாமல் தன் நம்பிக்கையை இழந்தவர்கள் அன்று பலர் - இந்த படத்தை பார்த்தவுடன் வாழ பல நல்ல வழிகளை கண்டு பிடித்தனர் - இந்த படம் ஏற்படுத்திய தாக்கம் இன்றும் குறைய வில்லை - யாரை எங்கே வைப்பது என்று தெரியாமல் NT பந்தலுவிற்கு பணம் வாங்காமல் குறைந்த நாட்களில் நடித்து கொடுத்த படம் - இந்த படத்தை பார்த்தபின் சிரிக்க கற்று கொண்டவர்கள் முதலில் சிரித்தது பந்துலுவை பார்த்துதான் !!
தொடரும்
இரண்டு வேடங்களில்
1. உத்தம புத்திரன்
முதல் இரட்டை வேடம் - சும்மா ஊதி தள்ளியிருப்பார் - படத்தை யார் அலசினாலும் , எவ்வளவு தடவை அலசினாலும் சுவை குறையவே குறையாது - ஸ்ரீதருக்கு வெற்றியின் தத்துவத்தை உணர்த்தின படம் - வசூலிலும் புரட்ச்சியை உண்டாக்கின படம் - இந்த படத்தின் தாக்கத்தை தாள மாட்டாமல் நாடோடியாக திரிந்த படங்கள் ஏராளம் .
2. அன்னையின் ஆணை
இதில் தந்தை - மகன் இரண்டு வேடங்கள் - இருவரும் படத்தில் சந்திக்க மாட்டார்கள் - சிவனாகவும் நக்கீரனாகவும் ஒருவரே ஒரு படத்தில் வரும் ஒரு சிறிய நாடகத்துள் வரும் காட்சி மெய் சிலிர்க்க வைக்கும் - அன்னையின் பெருமையை இந்த படம் சொன்னதுபோல் வேறு எந்த படமும் இது வரை வந்ததில்லை .
3. சரஸ்வதி சபதம்
இரண்டு தனிப்பட்ட வேடங்கள் - இருவருக்கும் ஜோடி இல்லை - நாரதராக வும் , வித்யாபதியாகவும் - அருமையான படம் , நடைக்காகவும் , நடிப்புக்காகவும் பல நாட்கள் ஓடியபடம் .
4. எங்க ஊர் ராஜா
மகனாகவும் , தந்தையாகவும் - யாரை நம்பி நான் பொறந்தேன் என்று ஒவ்வாருவரையும் கேள்வி கேட்க்க வைத்து பொருள் உணர்த்திய படம் - பிறருக்கும் உதவிசெய்வதில் கிடைப்பதுதான் உண்மையான சந்தோஷம் என்று உணர வைத்த படம் .
5. என் மகன்
வளர்ப்பு மகனாகவும் தந்தையாகவும் இரண்டு வேடங்கள் - அருமையான கருத்துக்கள் , பாடல்கள் - அடைந்த வெற்றியை கேட்கவும் வேண்டுமோ !?
6. எமனுக்கு எமன்
தெலுங்கு தேசத்தில் , படத்தில் நடிப்பவர்களிடம் ஒரு நம்பிக்கை உள்ளது - எமனாக நடிப்பவருக்கு ஆயுள் கூடவாம் -- பாவை விளக்கில் ஒரு வசனம் வரும் - NT யை பார்த்து ஒருவர் சொல்லுவார் - உங்களுக்கு 100 வயது என்று - உடனே NT - "இருக்கலாம் எமன் இளிச்சவாயனாக இருந்தால் " - அவரே எமனாக நடித்த படம் - தான் எமனாக நடித்ததினால் கிடைத்த கூடுதல் ஆயுளையும் அவர்தான் மூ .க விற்கு தானமாக கொடுத்து விட்டாரே !! -- படம் ஒரு மாறுதலை உருவாக்கியது - வசூலிலும் புரட்ச்சியை ஏற்படுத்தியது .
7. ரத்த பாசம்
அண்ணன் -தம்பியாக நடித்த படம் - வெளிநாடுகளில் எடுத்தபடம் - விஜயன் படத்தை முழுவதும் direct பன்னாவிட்டாலும் , படம் வெற்றியை தவற விட வில்லை.
8. புண்ணிய பூமி
கணவராகவும் , தன் பிள்ளையாகவும் நடித்த படம் - இருவரும் சந்திக்க மாட்டார்கள் - Mother India வை தமிழில் அதிகமாக ரசிக்க முடியாமல் போய் விட்டது நம் துரதிஷ்ட்டமே !
9. மனிதனும் தெய்வமாகலாம்
நாத்திகனாகவும் , ஆஷ்திகனாகவும் நடித்து தூள் கிளப்பிய படம் - ஒரு தெய்வ மகன் சாதாரண மக்களும் தெய்வமாகலாம் என்று உணர்த்திய படம் .
10. என்னை போல் ஒருவன் .
" தங்கங்களே " என்று நம்மை எல்லோரையும் அழைத்து விருந்து படைத்த படம் - மன்மதன் சிவாஜியாக நடித்த படம் .
11.கெளரவம்
பெரியப்பா , வளர்ப்பு மகன் என்று இருவர் நடித்த படம் - எங்குமே ஒருவர் என்று சொல்ல முடியாத படம் - மூன்றடி மண் கேட்டான் வாமணன் உலகிலே - முன்றன வைத்ததோ , மன்னவன் தலையிலே --- அறுபதை இருபது வெல்ல முடியாது என்பதை நிரூபித்த படம் - பாரிஸ்டர் தானே எப்பவும் நினைவில் இருக்கிறார் !!!
12.பாட்டும் பரதமும்
தந்தை , மகனாக - ஓட வேண்டிய படம் - ஓட்டாமல் ஒதுங்கி விட்டது அரசியல் என்னும் சாக்கடையில் இருந்து எழுந்த தூசி காற்றினால் - அருமையான கதை , அற்புதமான பாடல்கள் - இத்தனையும் இருந்தும் "no peace of mind "
13. விஸ்வரூபம்
தந்தையாகவும் , மகனாகவும் - original ஆக விஸ்வரூபம் எடுத்த படம் .
14.. சந்திப்பு
தந்தையாகவும் , மகனாகவும் - சந்திப்பு இனிதாக நடந்தது - அருமையாக ஓடியது .
தொடரும்
பாடல்களில் பல வேடங்கள் :
1. திருவிளையாடல்
இந்த ஒரு படம் போதும் , பாட்டும் நானே - ஒரு பாடல் போதும் - நடிப்பு திறமை என்றால் என்னவென்று உலகத்திற்கு எடுத்து சொல்ல - ஒரு நாள் போதுமா வர்ணிக்க ? போதவே போதாது -----
2. ராஜரிஷி
ஒரு பாடல் -பல வேடங்கள்
3. இல்லற ஜோதி
"கேட்பதெல்லாம் காதல் கீதங்களே" - ஒருவர் இருவராகி , இருவர் ஒருவராகி வசிப்பதை கேளுங்கள்
http://youtu.be/CBVnFCSY_qo
4. தீபம்
பேசாதே - வாயுள்ள ஊமை நீ ---- மனசாட்சி பாடும் பாடல் இது
5. பாவ மன்னிப்பு
"சிலர் சிரிப்பார் - சிலர் அழுவார் " -- இது CK வின் பதிவுகள் அல்ல - ஆனால் அவருடைய பதிவுகள் போல் சிரஞ்சீவியாக இருக்கும் பாடல் இது
சில படங்கள் என் list இல் இருந்து விடு பட்டு போய் இருக்கலாம் - அவைகளை சுட்டி காட்டுபவர்களுக்கு என் நன்றி in advance !
முற்றும்
நண்பர்களே
போன வாரம் சன் லைப் -இல் தெய்வ மகன் பார்த்த போது கவனித்த ஒன்று... அப்பா வேட சங்கரின் இடது புருவம் மிகவும் அடர்த்தியாகவும் வலது புருவம் சற்று அளவில் சிறிதாகவும் காணப் பட்டது... இது முகம் விகாரமானதாலா ? அல்லது எனக்கு அப்படி தெரிந்தா ? நிறைய முறை திரையில் பாரத்த நண்பர்கள் சொல்லவும்.
நன்றி