Was the 1989 Rajni film Called "Shiva" a remake from a telugu movie ? If so was the MD IR as well?
Printable View
Was the 1989 Rajni film Called "Shiva" a remake from a telugu movie ? If so was the MD IR as well?
MD was IR yes.
Thank SS
கே.ராஜாக்கண்ணு, கோயம்புத்தூர்.
'' 'எந்திரன்’ படப்பிடிப்பு சமயம் ரஜினி யோடுதான் பெரும்பாலான நேரத்தைக் கழித்திருப்பீர்கள்... அப்போது நீங்கள் சொல்லி ரஜினி மாற்றிக்கொண்ட ஒரு விஷயமோ அல்லது ரஜினி சொல்லி நீங்கள் மாற்றிக்கொண்ட ஒரு விஷயமோ இருக்குமே... அதை எங்களுடன் பகிர்ந்துகொள்ள லாமே?''
'' 'எந்திரன்’ சமயத்துலனு இல்லை... அவரோட படம் பண்றதுக்கு முன்னாடியே அவர்கிட்ட இருந்து ஒரு நல்ல பழக்கத்தை நான் கத்துக்கிட்டேன். ஒரு விழாவுக்கு ரஜினி சார் வந்திருந்தார். எல்லாரும் அவரைப் போய்ப் பார்த்து 'ஹலோ’ சொல்லிட்டு இருந்தாங்க. 'நாம போய் ஹலோ சொல்ல ணுமா?’னு சங்கோஜத்தோட, தயக்கத்தோட, கொஞ்சம் தள்ளியே நின்னுக்கிட்டு இருந் தேன். ஆனா என்னைக் கவனிச்சவர், கிட்ட வந்து, 'ஹலோ ஷங்கர்... எப்படி இருக்கீங்க?’னு கேட்டாரு. எனக்கு 'ச்சே’னு ஆகிடுச்சு.
விழாக்களில் பலர் இப்படித்தான் நடந்துப்பாங்க. பக்கத்துலயே இருந்தாலும், நேருக்கு நேர் நின்னாலும், யார் முதல்ல ஹலோ சொல்றதுன்னு, யாரு நகர்ந்து கிட்ட போறதுன்னு, நீ பெரியவனா நான் பெரியவனான்னு உள்ளுக்குள்ள ஒரு பெரிய போராட்டமே நடக்கும். ஆனா, அதை வெளிக்காட்டிக்காம, கண்டுக்காம பக்கத் துல இருக்கிறவங்ககிட்ட சிரிச்சுப் பேசிட்டு இருக்கிற மாதிரி பாசாங்கு பண்ணுவாங்க. அதை உடைச்சவர் ரஜினி. அன்னைல இருந்து... என் கண்ணுக்கு முன்னால தெரிஞ்சவங்க இருந்தா... பெரியவங்களோ, சின்னவங்களோ நானே முதல்ல போய் 'ஹலோ’ சொல்லிடுவேன்!
ஒரு தடவை ரஜினி சார்கிட்ட, நான் சிகரெட் பிடிக்கிறதை நிறுத்திட்டேன்னு சொன்னேன். அவரால நம்ப முடியலை. 'எவ்ளோ நாளாச்சு?’னு கேட்டார். 'அஞ்சு வருஷமாச்சு’ன்னேன். 'எப்டி... எப்டி?’ன்னார். நான், 'நிறுத்தணும்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா, முடியல. ஒரு தடவை எனக்கு மலேரியா வந்துச்சு. தினமும் ஊசி போட வேண்டியிருந்ததால நான் சிகரெட் பிடிக்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டார். 15 நாள் சிகரெட் பிடிக்கலை. 16-வது நாள் 'இத்தனை நாள் விட்டதை மறுபடி ஆரம்பிக்கணுமா?’னு யோசிச்சு விட்டுட்டேன். அப்புறம் ஒரு மாசம்... ஆறு மாசம்... ஒரு வருஷம்னு, அஞ்சு வருஷம் பிடிக்கலே’னு சொன்னேன். ஏன்னா, 'சும்மா ஆறு மாசம், ஒரு வருஷம் விட்டா சிகரெட் பழக்கத்தை விட்டதா அர்த்தம் இல்லை. அஞ்சு வருஷம் நிறுத்தினாதான் உண்டு’னு சுஜாதா சார் என்கிட்ட சொல்லிஇருக்கார். அப்புறம் ரஜினி சாரும் படிப்படியா குறைச்சு, ஒரு நாளைக்கு மூணு... அப் புறம் ஒண்ணுங்கிற அளவுக்கு வந்துட்டார்!
'எந்திரன்’ படத்துக்காக சிட்டி மேக்-அப் இங்கே செட் ஆகாததால, அமெரிக்கால ஸ்டேன்வின்ஸ்டன் ஸ்டுடியோவுக்கு மேக்-அப் டெஸ்ட்டுக்காகப் போயிருந்தோம். ரெண்டு நாளாகியும் அங்கேயும் செட் ஆகலை. லஞ்ச் பிரேக்ல நான் தனியா நின்னு டென்ஷன்ல டேபிளைக் குத்திக்கிட்டு இருந்தேன். என்னைக் கடந்து போன ரஜினி சார், 'இந்தப் படம் முடியறதுக்குள்ள மறுபடி சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சுடுவீங்கனு நினைக்கிறேன்’னு சொன்னார். அவர் சொன்ன மாதிரியே படம் முடியற நேரத்துல டென்ஷன் டெரா பைட்டுக்கு ஏறி சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சுட்டேன். ஆனா, அப்புறம் சுத்தமா விட்டுட்டேன். அவரும் விட்டுட்டார்!''
பி.குமரன், வந்தவாசி.
''ரஜினி, கமல்பற்றி இதுவரை யாருக்கும் தெரியாத எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்றைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்... இது உங்கள் ரசிகனின் அன்புக் கட்டளை... மீறாதீர்கள் ஷங்கர்...''
'' 'இந்தியன்’ கதையை முதன்முதலில் ரஜினி சாருக்குத்தான் சொன்னேன் என்பது பலருக்குத் தெரியாது. கதை, திரைக்கதை, முழுமை அடையாத ஆரம்பக் கட்ட நிலையில் சொன்னதால் அதைச் செய்வதில் ரஜினி சாருக்குத் தயக்கம் இருந்தது. 'இந்தியன்’ படம் முடிந்து, அவருக்குப் போட்டுக் காட்டினேன். படம் முடிந்ததும் ஓடி வந்து என்னை இறுக்கிக் கட்டியணைத்து, 'சூப்பர்... சூப்பர்...’ எனத் தட்டிக்கொடுத்து, 'இப்படி எனக்கு நீங்க சொல்லவே இல்லியே’ என்று ஆச்சர்யப்பட்டார்.
நீங்கள் உற்றுப்பார்த்தீர்களானால் 'இந்தியன்’ தாத்தா, இன்டர்வெல் காட்சியில் உட்கார்ந்தபடியே ஈஸி சேர் பலகையால் நெடுமுடி வேணுவைத் தட்டிவிடுவார். வர்மக் கலையில் அவரை வீழ்த்திக் கீழே கிடக்கிற துண்டை எடுத்து ஸ்டைலாகத் தோளில் போடுவார். பிறகு, எழுந்து கலைந்த முடியை ஸ்டைலாகக் கோதி சரி செய்வார். இது ரஜினி சாரை மனதில்வைத்து நான் உருவாக்கிய காட்சி என்பது கமல் சாருக்குத் தெரியாது. அதை முற்றிலும் அவரது ஸ்டைலில் வேறுவிதமாகச் செய்து அசத்தி இருப்பார்.
ரஜினி சார் இப்போதுகூட, 'நான் முதல்வன் பண்ணாததுகூட எனக்கு வருத்தம் இல்ல... 'இந்திய’னைத்தான் மிஸ் பண்ணிட்டேன்!’ என்று சொல்வார்.
Thalaivar as Indian thaaththaa? What do you think :?
Nerd
Kamal never gave so much importance to style as he did for Indian Thaththa. Kamal always relied to body language and voice modulation for various roles. But in Indian thaththa there was more than that. There was no wonder that Shankar had Rajini in his mind when he wrote the role for Indian thaththa.
Rajini would have definitely done much different that what Kamal had to offer. Because they are totally two different actors but Rajini would have done justice also to that role with more style. Kamal had subtle style but Rajini would have made that part more obvious I think.
thaattha character, rajini would hav made justice in his own style...
but chandru, he would not fit there... or maybe shankar would made the character differently than what he did for kamal.
but there is no reason why the two roles has to be done by the same actor... weak character dhaan, so vera hero yaarachum kooda potrukkalaam.
bottomline: nammaalu vayasaana role'laam pichi odhariduvaar... yengster roles dhaan suit aagadhu...
Yes Thatha Rajni would have excelled, but Chandru I think only Kamal possible!
Yeah so Rajini as the badass thaaththaa and Kamal as the wimpy son :smokesmile: :yessir: