Originally Posted by
gopal,s.
அருவருப்பின் உச்சத்தை தொடுகிறது பா.ஜ.கா. இதை போல ஒரு மோசமான பாசிஸ்ட் கட்சியை உலகத்திலேயே பார்க்க முடியாது. இந்துத்துவம், உயர்ஜாதி ஆதிக்கம்,சமஸ்கிருதம் இவற்றையெல்லாம் தூக்கி பிடித்து இந்தியாவை துண்டாட பிறந்த தீய சக்திகள். யாருக்கும் அதிகாரத்தை பிரித்து கொடுக்காமல் ,இந்தியாவில் சில நாட்கள் கூட தாங்காமல்,தானில்லாத போது நிர்வாகம் யார் கையில் ,என்று கூட நிர்மாணிக்காத டீ கடை பிரதமர். பத்ம விருதுகளை தகுதியில்லாதொருக்கு அள்ளி வழங்கி ,அந்த விருதுகளையே தலை குனிய வைக்கிறது.
ஹிந்துத்துவ சார்புள்ள ரஜினி ,ரவிசங்கர்,ஜெயமோகன் போன்றோருக்கு ஒவ்வாத விருதுகள்.
சிவாஜி ,இறந்த போது நேரில் வராத வாஜ்பாய், பூலான் தேவி சாவுக்கு போனார்.நிறைய பேர் பேசியும் சிவாஜிக்கு பாரத் ரத்னா தரவில்லை.(ஒரு வீரபாண்டிய கட்டபொம்மன் ,ஒரு கப்பலோட்டிய தமிழன்,ஒரு திருவிளையாடல்,ஒரு திருவருட்செல்வர்)இவற்றுக்காக தேச ஒற்றுமை, தெய்வ நம்பிக்கை ஊட்டும் படங்கள் இவைகளை முன்னிட்டாவது அந்த உலக நடிகனுக்கு வழங்க பட்டிருக்கலாமே?வாஜ்பாய் ஹிந்தி வெறியன்.கமல் போன்ற கலைஞனுக்கு காலம் கடந்த கௌரவம். பட்டங்களை பெற தமிழ் நாட்டில் வசித்தாலும் வேறு மாநிலமாய் இருந்தால்தான் மரியாதை போலும். சிவாஜி,கமல் போன்ற கலைஞர்களுக்கு வெளிநாட்டு அங்கீகாரம் மட்டுமே போலும்.
ரவி சங்கரை வாதுக்கு அழைத்து புறமுதுகு காட்டி ஓட வைத்த ஜாகீர் நாயக் என்ற அனைத்து மத நூல்களிலும் தேர்வு கண்ட ,சிறந்த பேச்சாளருக்கு அல்லவா வழங்க பட வேண்டும்?ரவிசங்கர் என்ன சாதித்தார்?
அசோக மித்திரனின் தண்ணீர்,பதினெட்டாவது அட்ச கோடு போன்ற நோபெல் தர நாவல்களுக்கு உரிய மரியாதையாய் பத்மபூஷன் கொடுக்காமல்,இந்துத்துவ ஜெயமோகனுக்கு பத்ம விருது கொடுப்பது என்ன ஞாயம்.?(அதை வெட்கத்தோடு நிராகரித்தார் ஜெயமோகன். ரஜினியிடம் அதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது)
நடப்பது அசிங்கம்.