நிலாப் பாடல் 12: "ஆயிரம் நிலவே வா... ஓராயிரம் நிலவே வா."
-----------------------------------------------------------------------
மக்கள் திலகத்தின் மற்றும் ஒரு நிலவுப் பாடல். என்ன இங்கே நாயகியை ஆயிரம் நிலவாய் அழைக்கிறார் அவ்வளவுதான். SPB-யின் ஆரம்ப காலப் பாடல். பின்னாட்களில் இருந்த குரலுக்கும் இதுக்கும் அவ்வளவு வித்தியாசம் தெரிகிறது. இசை K.V. மஹாதேவன். பாடலை எழுதியவர் புலமைப் பித்தன். இதுவும் இன்றும் ஸூபர் டூபெர் ஹிட் பாடலே
பாடலின் வரிகள் இதோ:
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவைதேட புதுப் பாடல் விழி பாடப் பாட
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவைதேட புதுப் பாடல் விழி பாடப் பாட
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன நடை தளர்ந்து போனதென்ன
நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன நடை தளர்ந்து போனதென்ன
இல்லை உறக்கம் ஓரே மனம் என்னாசை பாராயோ?
இல்லை உறக்கம் ஓரே மனம் என்னாசை பாராயோ?
என்னுயிரிலே உன்னை எழுத பொன்மேனி தாராயோ?
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
மன்னவனின் தோளிரண்டை மங்கை என்தன் கை தழுவ
கார்குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
மன்னவனின் தோளிரண்டை மங்கை என்தன் கை தழுவ
கார்குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ
இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ
அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவைதேட புதுப் பாடல் விழி பாடப் பாட
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
பொய்கை எனும் நீர்மகளும் பவாடை போர்த்திருந்தாள்
தென்றலெனும் காதலனின் கைவிலக்க வேர்த்து நின்றாள்
பொய்கை எனும் நீர்மகளும் பவாடை போர்த்திருந்தாள்
தென்றலெனும் காதலனின் கைவிலக்கவேர்த்து நின்றாள்
என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ?
என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ?
அந்த நிலையில் அந்த சுகத்தை நானுணரக் காட்டாயோ?
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவைதேட புதுப் பாடல் விழி பாடப் பாட
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
பாடலை கேளுங்கள் இதோ:
https://www.youtube.com/watch?v=yHfBRUdJ0Ts
ஆயிரம் நிலவே வா என்று அடிமைப்பெண்ணையே அழைத்தால், சுதந்திரப்பெண்ணைஎத்தனை நிலவாய் அழைப்பது?