Dear Gopal,
Happy Pongal to you and all your family members
Dear Gopal,
Happy Pongal to you and all your family members
இன்று பொங்கல் தினம். நம் கோடீஸ்வரனை நினைக்காமல் இருக்க முடியுமா? பொங்கல் ராசியை, எங்க மாமா முறியடிப்பார் என்ற எதிர்பார்ப்பு பொய்த்து போனாலும், சிவந்த மண், எங்க மாமா போன்றவற்றில் சிவாஜியின் அழகு ,இளமை,துடிப்பு அவ்வளவு பிரமாதம். இந்த படம் முதலில் எம்.ஜி.ஆரை வைத்து எடுப்பதாக இருந்து, நம் முகாமுக்கு மாறியது. லைட் weight ரோல், மூல படம் பிரம்மச்சாரி என்ற ஷம்மி நடித்த ,பிரம்மாண்ட வெற்றி படம்.
எனக்கென்னவோ ,இந்த படம் முதலில் பிடித்தே இருந்தது. பாவை பாவைதான்,என்னங்க(தாளம் அருமை), சொர்க்கம் பக்கத்தில், எல்லோரும் நலம் வாழ பாடல்கள் அருமை. குகநாதன் வசனம் ரொம்ப சவ,சவ என்று இருக்கும். திருலோகச்சந்தர் ,சிவாஜிக்கு செய்த முதல் கலர் படம், இன்னும் நன்றாக treatment பண்ணியிருந்தால், range எங்கேயோ போயிருக்கும். ஆனால் தலைவர், சொர்க்கம் பக்கத்தில் துள்ளல், என்னங்க பாட்டில் ஜாலி டான்ஸ், எல்லோரும் நலம் வாழ பியானோ உருக்கம் ,என்று நம்மை சொக்க வைத்து விடுவார்.
தலைவரின் உடையலங்காரம், அவ்வளவு அழகாக ,வடிவமைக்க பட்டு, தலைவரால் இன்னும் மெருகு பெரும். (தெலுங்கு தயாரிப்பாளர்கள் சூழாத பொற்காலம் உடையலங்காரங்கலில் ).சங்கு மார்க் லுங்கி விளம்பரத்தில் ,இந்த பட தலைவரின் pose ஒன்றை விளம்பரம் செய்தனர். இதற்கு முன் புது நாடகத்தில், ஊட்டி வரை உறவு pose ஒரு பனியன் விளம்பரத்தில் உபயோக படுத்த பட்டது. பின்னிருந்து ,தயாரித்தவர்கள் ஏ .வீ.எம். (ஜேயார் மூவீஸ் ) என்று கேள்வி.
சுமாரான வெற்றி படம் என்றாலும், நடிகர்திலகத்தின் தோற்றம் best என்றால்,இந்த படம்தான்.
எனக்கு பெரும்பாலும் NT தனது natural hair style இல் வந்தால் தான் பிடிக்கும். அப்படி பார்க்கும்போது, சிவந்த மண், மற்றும் ஊட்டி வரை உறவில் அவர் மிகவும் அழகாக இருப்பார். B &W படங்களிலும் பேசும் தெய்வம், பாலாடை போன்றவை. அவர் இன்னும் இளமையாக இருந்தபோது மனோஹரா மற்றும் அம்பிகாபதி இல் (wig வைத்திருந்தாலும் கூட) குழந்தை போன்ற தோற்றத்துடன் காணப்படுவார். மனோஹராவில் அவரையும் கிரிஜா (?) வையும் பார்த்தால் teenage ஜோடி போலிருக்கும்.
ஹேர் ஸ்டைல்
nam sivaji ஒரு படத்தில் உபயோஹா படுத்திய விக் வேறு படங்களில் உபயோஹா படுத்தியதில்லை -engo padithathu
நடிகர்திலகம் ரசிகர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள் .
இந்த திரியின் விலைமதிப்பில்லா பொக்கிஷம் திரு நெய்வேலி வாசுதேவன் அவர்களை மனம் நோக செய்த ஆதிராமுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் அதே நேரத்தில் அதை தவறென்று உணர்ந்து மன்னிப்பு கேட்டதற்காக மிக்க நன்றி
திரு கோபால் சார்,
திரு ராகவேந்தர் அவர்கள் ஒரு குழந்தையை போன்றவர் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர் .தயவு செய்து அவரை விமர்சிக்கும்போது கடும் சொற்களை பயன்படுத்தாதீர்கள் என்று மிக்க பணிவோடு தங்களை கேட்டுகொள்கிறேன்