-
FIlimography கூறுபவர்கள். சற்று நடுநிலையாக இருப்பது அவசியம். தங்கள் மனதிற்கு பிடித்த நடிகர் படம் அதனால் வெள்ளிவிழா என்ற ரீதியில் பொய் தகவல் பதிவு செய்வது மிக மிக தவறு. வேட்டைக்காரன் படம் 100 நாள் இவ்வளவுதான் உண்மை. வெள்ளிவிழா எல்லாம் சுத்த கடைந்தெடுத்த பொய்.
Randurguy - இவர் blast from past படித்தால் பல தவறுகள் தெரியும். மேலும் இவர் எழுதிய சிவாஜி படத்தில் வலுக்கட்டாயமாக திரு எம் ஜி ஆர் பற்றி சம்பந்தமே இல்லாமல் திணிப்பவர். ஒரு காலத்தில், நடிகர்திலகத்திடம் பலமுறை உதவி பெற்று,ஒரு கட்டத்தில் அதையே வழக்கமாக கொள்ள அது ஒரு nuisance ஆனது. நடிகர் திலகம் இவரை ஒட்டு மொத்தமாக தவிர்த்தார் என்ற ஒரு தகவல் திரு Film News Anandhan பகிர்ந்ததாக ஒரு தகவல் 80 களிலேயே உண்டு.
இவர் எம் ஜி ஆர், சிவாஜி படங்களுக்கு எழுதிய Blast from Past படித்தாலே தெரியும், இவர் பக்கா பாராபட்சம் பார்க்கும் மனிதர் என்று.
மேலும், கர்ணன் எந்த காலத்திலும் தோல்வி படம் கிடையாது. அது தோல்வி என்று பறைசாற்றப்பட்டது திராவிட முன்னேற்ற கட்சியின் பொய் புளுகு பிரச்சாரம். 21 அரங்குகளில் கர்ணன் 80 நாள் ஓடிய கணக்கு உண்டு. வேட்டைக்காரன் படத்திற்கு உண்டா என்ற கதை தெரியாது. காரணம், நடிகர்திலகத்தின் பச்சை விளக்கு படத்திற்கு கர்ணன் ஓடிக்கொண்டு இருந்த 17 அரங்குகள் கொடுக்கப்பட்டது உலகறிந்த விஷயம். மீதி நான்கு அரங்கில் 100 நாட்களை கடந்தது கர்ணன். 50 நாட்களை அனைத்து அரங்கிலும் கடந்தது கர்ணன். இதுவும் அனைவருக்கும் தெரியும்.
பந்துலுவை கர்ணன் காப்பாற்றிவிட்டான் என்ற பத்திரிகை செய்தியே உண்டு, வெற்றிவிழா செய்தியும் உண்டு. ஹோட்டல் அசோகா வில் விழா கொண்டாடப்பட்டது.
இதெல்லாம் நடந்த உண்மை. இது தெரியாமல், ஒரு சில காழ்ப்புணர்ச்சி கொண்ட மனிதர்கள் இன்னும் புளுகு
மூட்டையை அவிழ்த்துக்கொண்டு இருக்கிறார்கள்
Thanks Subramanian Subbraman
-
நடிகர் திலகம் வேட்டையாடும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
நன்றி:Viral -Legendary #Tamil actor's hunting snap goes viral
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...61&oe=5F868129
Thanks Raja Lakshmi (Nadigar thilakam sivaji visirikal)
-
நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் நூறு நாள்களைக் கடந்த வெற்றிப் படங்களின் வரிசையில் 57-வது நூறுநாள் படம் படிக்காதவன் 1985 இது மதுரையில் அவர் நடித்து ஓடிய பத்தாவது வெள்ளிவிழா படமும்கூட!
படிக்காதவன் திரைப்படத்தின் நாயகன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தான் என்றாலும், சிறப்பு வேடமேற்று நடித்திருந்த நடிகர்திலத்தின் கதாப்பாத்திரம் இடைவேளைக்குப் பிறகு படம் முழுக்க நிரவியிருந்ததை யாரும் மறுக்க இயலாது. அதுவும், உச்சக்கட்ட காட்சிகளின் நகர்வு (சண்டைக் காட்சிகள் நீங்லாக) முழுக்கமுழுக்க நடிகர்திலகத்தின் கதாப்பாத்திரத்தைச் சுற்றியே அமைக்கப்பட்டிருப்பதைப் படத்தைப் பார்த்தவர்கள் உணரலாம். இப்படத்தில் "ஒரு கூட்டுக் கிளியாக" என்ற சூப்பர்ஹிட் பாடலும் அவருக்கு தரப்பட்டிருந்தது.
1985 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடான இவ்வெற்றிப்படம் நடிகர்திலகம், சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் மட்டுமல்லாது பொது ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பினை விருப்பு வெறுப்பின்றி பெற்றிருந்தது.
சென்னையில் இத்திரைப்படம் 5 திரைகளில் 100 நாளினைக் கடந்து பாலஅபிராமியில் 175 நாட்கள் ஓடியது.( இங்கு 200 நாளினைக் கடந்ததாக ஒரு செய்தி உண்டு) நடிகர்திலகத்திற்கும், ரஜினிகாந்துக்கும் படிக்காதவன் திரைப்படம் சென்னையில் 5 திரைகளில் 100 நாள் கடந்த இரண்டாவது திரைப்படம் என்பது கூடுதல் விசேஷம்!
நிற்க.
சொல்ல வந்த சேதி பின் வருவனதான்.
ஏவி.எம். நிறுவம் தயாரித்த சூப்பர்ஹிட் திரைப்படமான முந்தானைமுடிச்சு(1983) திரைப்படம்தான் அன்றைய பொழுதினில் மதுரை மாநகரில் அதிக வசூல் சாதனை படைத்தத் திரைப்படமாகத் திகழ்ந்தது... படிக்காதவன் வரும்வரை!
மதுரை சிந்தாமணியில் 175 நாட்கள் ஓடி 9,45,884.05 (Nett : ரூ.4,69,080.81) ரூபாயும், சரஸ்வதி அரங்கில் 105 நாள் ஓடி 5,66,467.60 (Nett : ரூ.2,67,858.24) ரூபாயும் வசூலித்திருந்தது. இரு அரங்குகளிலும் இணைந்த 280 நாள் ஓட்டத்தில் 15,12,351.65 ரூபாயினை முந்தானைமுடிச்சு திரைப்படம் வசூலித்திருந்தது.
1985 ல் வெளிவந்த நடிகர்திலகம் நடித்திருந்த முல்மரியாதை திரைப்படம் மது & குரு ஆகிய இரு அரங்குகளில் இணைந்த 215 நாள் ஓடியதில் 13,44,755.70 ரூபாயினை வசூலித்திருந்தது. ஒருவேளை மது அரங்கில் 100 நாளைக் கடந்திருந்தாலோ, அல்லது குரு அரங்கில் வெள்ளிவிழா எட்டியிருந்தாலோ முதல் மரியாதை திரைப்படமே முந்தானை முடிச்சு வசூலை சமன் செய்திருக்க வாய்ப்பு அமைந்திருக்கும். துரதிர்ஷ்டமாக அஃது நிகழவில்லை.
ஆனால், அதே ஆண்டில் இரு நாயகர்கள் ஒன்றிணைந்து ஒரே அரங்கில் வெளிவந்த படிக்காதவன் திரைப்படம் வெறும் 175 நாட்களில், 15,50,910.35 ரூபாய் வசூலித்து முந்தானைமுடிச்சு வசூலை முறியடித்தது என்பது மகத்தான சாதனைதான்.
பின்குறிப்பு :
1990 க்குப் பின்பான மதுரை நகர திரைப்படங்களின் வசூல் விபரங்களை ரசிகர்களுக்கோ, மன்ற அமைப்பினருக்கோ தர விநியோகஸ்தர்கள்/அரங்க உரிமையாளர்கள் மறுத்துவிட்டதால் நடிகர்திலகம் நடித்து மதுரையில் 100+ நாள்ஓடிய 58 & 59 வது படங்களான தேவர்மகன், படையப்பா போன்றவற்றின் வசூல் விபரம் இடம் பெறாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்
மாறாக, அப்படங்களின் ஓடிய நாட்களின் பட்டியல் பதிவாக இடம்பெறும். அடுத்ததாக 60-வது நூறுநாள் படத்தின் வசூல் விபரம் இடம்பெறும்.
#மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
#வெற்றிப்பட்டியல்
பகுதி 57
வெளியான நாள் நவம்பர் 11 1985
திரையிட்ட அரங்குகள் சென்ட்ரல்
ஓடிய நாள் 175 நாள்
மொத்த வசூல்...................15 50 910.35
நிகர வசூல்........................07 65 352.75
வி பங்குத் தொகை.............03 34 679.08
நடிகர் திலகத்தின்திரையுலக வருகைக்குப்பின்மதுரை மாநகரில்
3 லட்சத்தித்குமேல் வசூலித்த முதல் படம் பாகப்பிரிவினை
5 லட்சத்திற்குமேல் வசூலித்த முதல் படம் பட்டிக்காடா பட்டணமா?
10 லட்சத்திற்குமேல் வசூலித்த முதல் படம் திரிசூலம்
15.50 லட்சம் தனித்திரையரங்கில் வசூலித்த முதல் படம் படிக்காதவன்
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...80&oe=5F884767
நன்றி நிலா
-
இப்படி ஒரு நியூஸ் வரவைக்க 50 ஆண்டுகளாக போராடுகிறார்களாம் எம்ஜிஆர் கட்சியினர்,
ஆனால் தினத்தந்தி அது எப்படி பதிவிட முடியும் என ஏற்க மறுத்து வருகிறதாமே??
அப்படி முடியுமா??
90 களின் போது கூட இப்படித் தான் ஒரு வாசகர் வீம்புக்கு கேள்வியை கேட்டு வைத்திருந்தார்,
அதற்கு தந்தியின் குருவியார் படாத பாடுபட்டு பதில் சொல்லி இருந்தார்,
வாசகர் கேள்வி:-
குருவியாரே சிவாஜி எம்ஜிஆர் இருவரில் (திரைப்படங்களில்) முதலில் வெள்ளி விழா கொண்டாடியது யார்??
குருவியார் பதில்:-
சிவாஜி நடிக்க வந்த 1952 ஆம் ஆண்டில் வெளியான பராசக்தி முதல் திரைப்படமே இந்தியா மற்றும் இலங்கையிலும் வெள்ளி விழா கொண்டாடியது
ஆனால் எம்ஜிஆர்க்கோ 1946 ல் நாயகனாக நடிக்க ஆரம்பித்தும் கூட 1956 ல் தான் வெள்ளி விழா திரைப்படமாக மதுரை வீரன் அமைந்தது,
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...90&oe=5F88E6A1
சன்றி சேகர்
-
நடிகர் திலகத்தை விட்டு விலகி எம்.ஜி.ஆரை வைத்து படமெடுத்தோருக்கு பாதிப்படத்தில் ஒரு நிர்ப்பந்தம் விதிக்கப்படும். அதாவது, இதற்கு முன் சிவாஜியை வைத்து தயாரித்த படங்களைக் குறித்து ஏதேனும் நெகட்டிவ் அறிக்கை அல்லது பேட்டி வெளியிட வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே மேற்கொண்டு கால்ஷீட் கொடுக்கப்பட்டு படம் முடித்துத் தரப்படும். இல்லையேல் தொங்கல்தான். அப்போது காட்சி ஊடகங்கள் இல்லாததால் அந்த அறிக்கை அல்லது பேட்டி அப்போதிருந்த எம்.ஜி.ஆர். ஆதரவு செய்தித்தாள்களில் வெளியாகும். அதை அவரது ரசிகர்கள் எடுத்து வைத்துக் கொண்டு, "பார்த்தீர்களா அவரே சொல்லி விட்டார் சிவாஜி பற்றி" என்று கூறி வருவார்கள்.
அப்படி சொல்லப்பட்டவைதான்
1) ஸ்ரீதர் தன் முந்தைய படங்களில் நஷ்டமடைந்ததாக ஸ்டேட்மெண்ட் (அவர் எந்தப் படம் என்று சொல்லவில்லை. இவர்களாக அது சிவந்த மண் என்று சேர்த்துக் கொண்டனர்)
2) ஏ.பி., நாகராஜன் " மற்றவர்களை வைத்து படமெடுத்தேன். பணம் எடுக்கவில்லை" என்ற அறிக்கை. (அவர் மற்றவர்கள் என்று தான் சொல்னார். இவர்கள் சிவாஜி என்று சேர்த்துக் கொண்டனர். அவர் எடுத்த கண்காட்சி, திருமலை தெய்வம், காரைக்கால் அம்மையார் படங்களும் சரியாக போகவில்லை. ஆனால் திலகத்தை வைத்து தயாரித்த நவராத்திரி, திருவிளையாடல், சரஸ்வதி சபதம், தில்லானா போன்றவை பெரும் வெற்றி கண்டவை).
3) கோவை செழியன் தன் ஊட்டி வரை உறவு பெரும் வெற்றி பெற்து வசூலை கொட்டியும், தொங்கலில் நிற்கும் குமரிக் கோட்டம் முடிய வேண்டுமே என்பதற்காக, மனசாட்சிக்கு விரோதமாக ஊட்டி வரை உறவு சரியாக வசூலாகவில்லை என்று பேட்டி கொடுத்தார். வசூல் ஆகாமலா 100-வது நாள் விழா நடத்தி அமைச்சர் மதியழகளைக் கொண்டுஷீல்டுகள் கொடுத்தார்?. இதைத் தான் நடிகர் திலகம் தனது ஒன்லைனரில் தெரிவித்திருந்தார். உடனே அவர்கள் சிவாஜியும் ஒப்புக் கொண்டார் என்று புலம்பினர். திலகம் கோவை செழியனின் மனசாட்சிக்கு விரோதமான பேட்டியைத் தான் குறிப்பிட்டார்.
நன்றி மொகமட தமீம்
.........................................
பின்னூட்டம்
எதன் அடிப்படையில் இதை கூறுகிறீர்கள் சார் ?
.................................................. ...
இது குறித்து நிருபர்கள் ஏ.பி.என். இடம் 'சிவாஜி படங்கள் நன்றாகத்தாளே வசூலாயின, ஏன் இப்படி பேட்டியளித்தீர்கள்?' என்று கேட்டபோது மழுப்பலாக 'என்ன செய்வது நிர்ப்பந்தம்தான்' என்று கூறியிருந்தார்.
.................................................. ..
கோவை செழியன் 100வது நாளை சிறப்பாகத்தான் கொண்டாடினார். உணவுத்துறை அமைச்சர் மதியழகன் கையால் ஷீல்டுகள் வழங்க வைத்தார். ஆனால் பின்னர் குமரிக் கோட்டம் படம் தயாரிப்பில் இருந்த போது அப்படி ஒரு பேட்டி கொடுத்தார்.
-
நடிகர் திலகத்தை விமர்சனம் செய்த எம்ஜிஆர் குழுவிற்கு பதில் சொல்லியிருக்கிறார் நடுநிலையாளர்
திரு ஸ்ரீநிவாசன் கண்ணன் அவர்கள்,
பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்களைப் பற்றி மிகச் சிறந்த கருத்துகளை கூறி வரும் பொழுது அவருக்கு சரிசமமான திறமை உள்ள நடிகர் திலகம் அவர்களை சற்றே சிறுமைப் படுத்துவது என் இதயத்தில் தாங்கொணா வலியை ஏற்படுத்துகிறது இருவரும் இரு வகையில் சிறந்தவர்கள் இருவரும் கலைத் தாய் பெற்றெடுத்த தவப்புதல்வர்கள் இருவருக்குமே நல்ல திறமைகள் உண்டு நடிகர் திலகம் அவர்களின் நடிப்பு மிகை நடிப்பு என்றாலும் அது கலை நெஞ்சங்கள் ஆல் ஏற்றுக்கொள்ளப்பட்டது நடிகர் திலகம் செய்த மிகப் பெரிய தவறு அவர் தமிழ் படங்களில் நடித்தது ஒன்றுதான் அவர் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து இருந்தாள் இன் நேரம் உலகின் மிகச் சிறந்த நடிகராக சர்வதேச அளவில் புகழ பட்டிருப்பார் ஒரு தமிழனின் பெருமையை தமிழன் உணர வேண்டும் நடிகர் திலகம் அவர்களின் நடிப்பை ஒரு தமிழ் தேசம் பாராட்டியது இல்லையோ எத்தனையோ ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ள பிரஞ்சு தேச காரர்களுக்கு புரிந்துவிட்டது அதனால்தான் அவர்கள் செவாலியே விருது கொடுத்து கௌரவித்தார்கள் எத்தனையோ ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ள எகிப்து தேசத்துக்கு தெரிந்து விட்டது அதனால் தான் எகிப்து தேசத்தின் அதிபர் நடிகர் திலகத்திற்கு அவர் தேசத்தின் மிக உயர்ந்த விருது கொடுத்து கௌரவித்தார் வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற படத்திற்காக எகிப்து அதிபர் நாசர் இவ்வாறு கூறுகிறார் எனக்கு மொழி தெரியவில்லை அந்த மனிதர் திரைப்படங்களில் அழுகின்றார் நானும் அழுகின்றேன் அவர் சிரிக்கிறார் படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது நானும் சிரிக்கின்றேன் என்னை அப்படியே ரிமோட் கண்ட்ரோல் போல அவர் படத்தை பார்க்கும்போது இயக்குகின்றார் இது ஒன்றே போதும் அவர் மிகச்சிறந்த நடிகர் என்பதற்கு ஒரு முஸ்லிம் தலைவருக்கு இருக்கும் நமது தேசத்து கலைஞனின் மீது கொண்ட பற்று கூட நமக்கு இல்லாமல் போகக் கூடாது சிவாஜி என்ற தமிழனை அவரின் திறமைகளை குறைத்து மதிப்பிடக்கூடாது ஒரு பிராமணன் ஆகிய எனக்கு இருக்கும் தமிழ் பற்று கூட தமிழன் என்று தன்னை சொல்லிக்கொள்ளும் மற்றவர்களுக்கும் வரவேண்டும் சிவாஜி கணேசன் என்ற நடிகர் காலத்தை வென்றவர் மாபெரும் நடிகர் ஒரு பச்சை தமிழன் தமிழ் இனத்தின் பெருமையை சர்வதேச அரங்கில் நிலைநாட்டியவர் அந்த மாபெரும் மனிதன் வாழ்ந்த திசை நோக்கி கையெடுத்து வணங்குகின்றேன்
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...64&oe=5F877631
நன்றி சேகர்
-
1936 ம் ஆண்டில் நடிக்க வந்து
1977 ம் ஆண்டு வரை 41 வருடங்களில்
நடித்த படங்களின் எண்ணிக்கை 136
இதில்
துண்டு
துக்கடா.
ஓட்டை
உடைசல்
அறுந்து போனது
கிழிந்து போனது
என்று 60 படங்கள் இருக்கும்..
சராசரியாக .ஆண்டுக்கு
4 படம் கூட இல்லை ,
அதே நேரத்தில் 1952ம் ஆண்டு நடிக்க வந்த சிவாஜி 1979 ம் ஆண்டில் 200 படங்கள் நடித்து முடித்தார் அதிலும் உண்மையான ஆண் மகனாக கதாநாயகன் என்றே நடித்தார் .
சராசரியாக ஆண்டுக்கு 7 படங்கள் .
யாரை யாரோடு ஓப்பிடுவது என்று விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது ,.
அந்த நடிகன் மட்டும் அரசியலில் இறங்கி மக்களை ஏமாற்றி முதல்வர் ஆகவில்லையென்றால்
ஜெமினி கணேசன்
ரவிச்சந்திரன்
ஜெய்சங்கர்
s s r
a v m ராஜன்
முத்துராமன் போன்ற நடிகர்களுக்கு கீழேதான் இருந்திருப்பான் ,
சிவாஜி அரசியலில் தோற்றார் என்று பிதற்றும் அந்த கட்சிகாரன்களுக்கு
தன்னை முதல்வர் ஆக்குங்கள் என்றா சிவாஜி வாக்கு கேட்டார்
மறைந்த அண்ணன் மனைவியை முதல்வர் ஆக்குங்கள் என்றுதானே வாக்கு கேட்டார் .
அந்த நடிகன் முதல்வர் ஆனவுடன்
காக்கா பிடித்த கூட்டம்
மறைந்தவுடன்
பறந்து விட்டதே
நாற்பது வருடம் அவர்கள் தலைவன் என்று அழைத்தவரின் மனைவியை நட்டாற்றில் வீட்டு ஓடிபோன கூட்டத்திற்கு சிவாஜியை குறை சொல்ல என்ன தகுதி இருக்கிறது .
கொடுக்கிற கையை எடுக்குறதுக்குள்ளே வெடுக்குன்னு கடிக்கிற நாய் என்பார்கள் அது சரியாகதான் இருக்கிறது .
தன்னை அறிமுகபடுத்திய தயாரிப்பாளர் பெருமாள் முதலியாருக்கு
நடிகர்திலகம் வாழ்ந்த காலத்திலும்
அவர் மறைவிற்கு பிறகும் அவரின் வாரிசுகளும் நன்றி கடன் செய்து வருகிறார்கள்
அந்த நடிகனுக்கு நன்றி என்றால் என்னவென்று தெரியுமா?
தொடர்ந்து இரண்டு முறை அந்த நடிகன் ஆரம்பித்த கட்சி ஆட்சிக்கு வரவில்லையென்றால் காற்றடித்தால் தொப்பி பறப்பது போன்று இந்த காக்கை கூட்டமும் பறந்து விடும்..
53 ஆண்டுகளாக அந்த நடிகர் சார்ந்த கட்சி ஆட்சியில்
அதற்குள்
அந்த நடிகனே
10 ஆண்டுகள் ஆட்சியில்
அதிலும் அந்த நடிகனின் பிரியமான நடிகை 15 ஆண்டுகள் ஆட்சியில்
அதற்குமேல் அந்த நடிகனின் விசிலடிச்சான் குஞ்சுகள் 5 ஆண்டு ஆட்சியில்
இவைகள் எதுவுமே இல்லாமல் தன் திறமை ஒன்றை மட்டும் வைத்து அந்த நடிகனுக்கு சரி சமமாக நிற்கும் அந்த ஆண்மை
வேறு எவனுக்காவது உண்டா.?
இறுதியாக "தியாகம்"
படத்தில் சொல்வதுதான் .
எச்சை இலை மேலே பறந்தாலும்
அது எச்சை இலைதான்
(இலையை நன்கு கவனிக்கவும்)
கோபுரம் கீழே விழுந்தாலும்
அது கோபுரம்தான்,.
பின்னூட்டம் நன்றி முகநூல்
-
'டைட்டானிக் மாபெரும் தோல்விப் படம்"
"என்னய்யா சொல்றே, உலக முழுக்க ஓடியிருக்கே"
"எங்க தூத்துக்குடியில் ஓடலையே, அப்புறம் எப்படி வெற்றிப்படம்?"
..................................
சார்.. இந்த காமெடிசென்ஸ் ...ஐ லைக் இட்...
பின்னூட்டம் நன்றி முகநூல்
-
நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் நூறு நாள்களைக் கடந்த வெற்றிப் படங்களின் வரிசையில் 58-வது படமாக சிறப்புத் தோற்றத்தில் ஜொலித்த
தேவர் மகன் 1992
#மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
#வெற்றிப்பட்டியல்
பகுதி 58
வெளியான நாள் அக்டோபர் 25 1992
திரையிட்ட அரங்குகள் ஶ்ரீ மீனாட்சி
....................................சுகப்பிரியா
....................................மினிப்பிரியா
ஓடிய நாட்கள் .மினிப்பிரியா 81 நாட்கள்
.......................சுகப்பிரியா 116 நாட்கள்
ஶ்ரீ மீனாட்சி 61 நாள் ஓடி மீனாட்சி பரடைசில் மாற்றப்பட்டு
அதில் 119 நாள்/ மொத்தம் 61+ 119 = 180 நாட்கள்
சென்னையில் 4 திரைகளில் 100 நாளும்
அன்னை அபிராமியில் வெள்ளி விழாவும் ஓடியது.
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...0e&oe=5F888DF9
நன்றி நிலா
-
நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் நூறு நாள்களைக் கடந்த வெற்றிப் படங்களின் வரிசையில் 59-வது படமாக சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்த
படையப்பா 1999
#மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
#வெற்றிப்பட்டியல்
பகுதி 59
பின்குறிப்பு : நடிகர்திலகத்தின் கலையுலக வரலாற்றில் அவர் நடித்து வெள்ளிவிழா கொண்டாடிய எந்தவொரு படமும் வெறும் பகல்காட்சி /காலைக்காட்சியில் மட்டும் ஓடியதாக வரலாறில்லை... வேண்டுமானால் ரெகுலர் காட்சிகளில் ஓடி, கூடுதல் திரையரங்குகளாக பகல்காட்சிகளில் ஓடியிருக்கும்... அவர் சிறப்பு வேடங்களில் நடித்த தேவர்மகன், படையப்பா திரைப்படங்கள் உட்பட அத்தனைப் படங்களும் தினசரி மூன்று காட்சிகளில் ஓடியவையே... இந்த சாதனைகூட இன்றைய திரையுலக நட்சத்திரங்களுக்கு சிம்மசொப்பனமே!!
வெளியான நாள் ஏப்ரல் 10 1999
திரையிட்ட அரங்குகள் அமிர்தம்
....................................குரு
....................................ஷா
...............................................ஹாஜ ிரா
ஓடிய நாட்கள் .
....................... அமிர்தம் 175 நாட்கள்
.......................குரு .......118 நாட்கள்
.......................ஷா.........150 நாட்கள்
.......................ஹாஜிரா .069 நாட்கள்
சென்னையில் ஆல்பர்ட காம்ப்ளக்ஸ்....212 நாட்கள்
......................அபராமி காம்ப்ளக்ஸ்....212 நாட்கள்
......................உதயம் காம்ப்ளக்ஸ்.....181 நாட்கள்
.......................ஶ்ரீபிருந்தா............... ....181 நாட்கள்
.........................பாரத்.................... .....117 நாட்கள்
கோவை..............ராகம் காமன்ளக்ஸ்....212 நாட்கள்
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...91&oe=5F87CD81
நன்றி நிலா