-
மாலை மதுரம்.
'கண்ணீரின் வெள்ளம் இங்கே ஓடுதய்யா
கரை கூடும் ஆளைக் காணத் தேடுதய்யா
கருணையுள்ளோரும் இல்லையா அய்யா'
'ஆயிரத்தில் ஒருவன்' பாணியில் வைஜயந்திமாலாவை ஏலம் விடும் எத்தன். கண்ணீர்ப் புலம்பல் பாட்டுடன் என்னைக் காப்பற்ற யாருமில்லையா என்று தவிக்கும் வை.மாலா.
சுசீலாம்மாவின் உருகும் குரல். உருக்கும் குரல்.
'பாக்தாத் திருடன்' திரைப்படத்தில்.
http://www.youtube.com/watch?v=fg9Ex...yer_detailpage
-
சித்தூர் வாசுதேவன் சார்,
இடம் பார்த்து அடிச்சீங்களே ஒரு அடி. அப்படியே பிளாட் ஆயிட்டேன்.
'கருடா சௌக்கியமா' என் ஆவி குடி கொண்ட படம்.
'கீதை சொல்ல கண்ணன் வந்தான்' அருமையான பாடல்.
தலைவருக்கு இதில் ஒரு வரி வரும்.
'பலர் ஏளனமாய் சிரித்த போது மனம் ஒடிந்தது
வன்முறைகள் செய்திடவே துணிச்சல் வந்தது
அந்த வரலாற்றை கடந்த காலம் எழுதுகின்றது'
எவ்வளவு பொருத்தமான வரிகள்! இப்போதைய என் நிலைமைக்கும் கூட. தலைவர் தலைவர்தான்.
தலைவர் அசத்தல் ஆக்டிங். பாடி லாங்க்வேஜும், ஸ்டைலும் சும்மா அதம் பறக்குமில்ல!
சித்தூராரே!
'இதைச் சொல்ல வந்தாயோ!
எனை (இந்தப் பாடலைப் போட்டு வெல்ல) வந்தாயோ!'
ரொம்ப நன்றி வாசு சார்.
ஆனாலும் உமக்கு என்ன துணிச்சல்? ந.தி.பாட்டை இங்கே எப்படி போடப் போச்சு? இரும். உம்மை அப்புறம் கவனிச்சுக்குறேன்.:)
-
-
மாலை மதுரம்
ராகவேந்திரன் சார்,
தங்களுக்காக இந்த பாடல். இந்தப் படத்தைப் பற்றி சில தடவை இணையத்தில் பகிர்ந்து கொண்டுள்ளோம். அலை பேசியிலும் பேசி மகிழ்ந்துள்ளோம்.
'கானல் நீர்' படத்தில் ஓர்.அற்புத பாடல். டப்பிங் ஆக இருந்தாலும் பானுமதி அவர்களின் சோகக் குரலால் நம்மை ஈர்க்கிறது. நம் கண்களை ஈரமும் ஆக்குகிறது.
'கண்ணாலே காணாமலே
சொன்னாலும் கேளாமலே
பெண் மேலே பழி சொல்வதே
பேரின்பமா'
http://www.youtube.com/watch?v=GP7-jOJ6RIA&feature=player_detailpage
-
அருமை! அருமை! வினோத் சார். பல நூறு நன்றிகள். பாவிகள் 'பாவ மன்னிப்பு' பெறட்டும்.
-
காலம் பல கடந்து
அத்தான்
வந்த நாள் முதல்
காலங்களில்
ஓவியம் கலைந்ததென்று
பாலிருக்கும்
எல்லோரும் கொண்டாடுவோம்
சாயவேட்டி
-
முரளி சார்,
'சபதம்' பதிவு தங்கள் கடந்தகால இளமைக்கால நினைவுகளை அசை போட வைத்து தங்களிடமிருந்து ஓர் அருமையான பிளாஷ்பேக் பதிவை இங்கே இடச் செய்திருக்கிறது என்பது எனக்கு ரொம்பப் பெருமை.
அடடா! என்ன ஒரு ஞாபக சக்தி! ரயில் பெட்டிகளின் நிறங்களைக் கூட விட்டு வைக்காமல். படிப்பவர்களை அப்படியே கட்டிப் போட்டு வைக்கும் கலை தங்களுக்கே உரித்தானது.
ரவியைப் பற்றி நீங்கள் கூறிய கருத்துக்கள் நூறு சதம் உண்மை என்றாலும் அதையும் மீறி கோபாலையும், என்னையும் அவர் கவர்ந்த மாயம்தான் புரியவில்லை. இளம் வயதில் நாம் எதிர்பார்த்த அனைத்தையும் தந்தவர் என்பதாலோ?! அழகு, பாடல்கள், நடனம், பைட் என்று கவர்ந்து விட்டார்.
(ரவி ஒருமுறை நமது 'மெக்கா'வுக்கு வந்து தலைவர் படம் பார்த்து, போதையில் கூடாத விமர்சனம் பண்ணிவிட்டு, நமது ஆட்களிடம் கும்மாங்குத்து வாங்கிக் கட்டிக் கொண்டாராமே... அப்படியா முரளி சார்?)
நம்ப 'மெக்கா' வை ரொம்ப ரசித்தேன். பாரதத்தின் பெருமையை பாருக்குள்ளே பரவ வைத்த பரம்பொருள் அல்லவோ நம் 'பாரத்'.
தங்கள் சென்னை அனுபவங்களும் சிறகடிக்கின்றன.
இது போன்ற தங்களின் அனுபவப் பதிவுகளுக்காக ஆயிரம் 'சபதம்' போட நான் ரெடி.
நன்றி முரளி சார்.
-
மாமழைக்காலம் போனது ஒரு மாசம் ஆனது..
மார்கழி மாசம் போனது வெயில் வந்தே காயுது
தென்றலும் கன்னலும் தென்னையும் ஓங்குது..
வண்ணக் கமுகும்குலை தாங்குது அடுத்த வரி வேகமாயோடி தூங்குது என முடிகிறது.. – கலக்கல் பாட்டு வாசு சார்.. தாங்க்ஸ்.. அதுவும் என்ன ஒரு எளிமையான இசை என்ன ஒரு இயல்பான நடிப்பு.. நடுவில் கைப்பை குடையுடன் வரும் அம்மணி யார்.. அகெய்ன் தாங்க்ஸ்..
சின்னச் சின்னக் கண்ணனுக்குஎன்ன வேண்டும் சிங்கார மொழி சொல்லும் பொண்ணு வேண்டும்..எஸ் எஸ் ஆர் பத்மினி.. பாட்டு கேட்டிருக்கிறேன்..இப்போது தான் பார்க்கிறேன்.. தாங்க்ஸ் அகெய்ன்.. ஆமா அப்படி இப்படின்னு எஸ்.எஸ். ஆருக்குன்னு சில பல நல்ல பாட்டு அமைஞ்சுருக்குல்ல.. நினைவுக்கு வர்ற லிஸ்ட் பாத்தா
என்னை விட்டு ஓடிப் போக முடியுமா
பூப்போலப் பூப்போலப் பிறக்கும்
கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும்
கல்லிலே கலைவண்ணம்கண்டான்
ஏட்டில் எழுதி வைத்தேன்
வாராதிருப்பாளோ வண்ண மலர்க் கன்னியவள்
கண்ணான கண்ணனுக்கு அவசரமா
சாந்துப் பொட்டு சிலுசிலுக்க சந்தனப் பொட்டு கமகமக்க
வாழ்ந்து பார்க்க வேண்டும் மனிதனாக வேண்டும்
எஸ்.எஸ்.ஆரை டி.ஆரும் இன்னொரு நடிகையும் கேலிசெய்யும்பாடல் – நில் கவனி புறப்படு (இதுபற்றி வாசு சார் விலா, வாரியாக எழுதலாம்)
ம்ம் இன்னும் இருக்கு என்று தெரியும் மறந்து போச்…
-
chinnakkaNNan: We are leaving for San Francisco tomorrow. You are welcome to join us ! :)
-
//என்னை விட்டு ஓடிப் போக முடியுமா// இதோ வந்துக்கிட்டே இருக்கேன்.. (இப்போ ரொம்பக்குளிருமா ராஜ்ராஜ்சார்)