நண்பர்களே,
பராமரிப்பு பணி காரணமாக நமது நடிகர் திலகம் இணைய தள இணைப்புகள் இயங்காமல் அமைக்கப்பட்டுள்ளன. ஓரிரு நாட்களில் வழக்கம் போல் இயங்கும்.
சிரமத்திற்கு வருந்துகிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்
Printable View
நண்பர்களே,
பராமரிப்பு பணி காரணமாக நமது நடிகர் திலகம் இணைய தள இணைப்புகள் இயங்காமல் அமைக்கப்பட்டுள்ளன. ஓரிரு நாட்களில் வழக்கம் போல் இயங்கும்.
சிரமத்திற்கு வருந்துகிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்
திரியின் வணக்கத்திற்குரிய
பெரியவர்களால் நானும், என்
எழுத்துக்களும் ஆசீர்வதிக்கப்
பட்டிருக்கிறோம்.
"நினைப்போம்.மகிழ்வோம்"
பதிவுகளுக்கு நல்லவர்கள்
தரும் ஆதரவு மெய்சிலிர்க்க
வைக்கிறது.
பிம்பமாய் எல்லோரும் வந்து
போன சினிமாத் திரைகளில்..
ஜம்பமாய் வாழ்ந்து போன
நடிகர் திலகத்தின் ஒவ்வொரு
அசைவையும் எழுதி விடத்
துடிக்கும் (வேடிக்கையான?)
மனிதப் பேனா நான்.
இந்தப் பேனாவின் சந்தோஷம்..
எப்படி எழுதினோம் என்பதில்
இல்லை.
யாரை எழுதினோம் என்பதில்.
ஆசீர்வதித்த, வாழ்த்திய அன்பு
நெஞ்சங்கள் அத்தனைக்கும்,
இந்தப் பேனா நன்றி எழுதுகிறது.
இமயத்தை வியக்கும் தனது
இனிய மனதால் இந்தச்
சிறுவனையும் வியந்த
திரு.வாசு சாருக்கு சிறப்பு
நன்றி எழுதுகிறது.
அஜீத் பாஷையில் சொன்னால்..Quote:
(ஹைய்யா 90களின் படங்களையும் இங்கே குறிப்பிட்டுவிட்டேன் இனி ராகவேந்திரா சார் என்னையும் ஒரு உண்மையான நடிகர்திலகத்தின் ரசிகனாக ஏற்றுகொள்வார் என்று நம்புகிறேன்)
"அது" ...
தலைவரின் பரிபூரண ஆசி தங்களுக்கு உண்டாகக் கடவது...
வாசு சார்
ரவியின் நினைப்போம் மகிழ்வோம் தொடரைப் பற்றிய தங்களுடைய பதிவு, நமது ஆருயிர் நண்பர் பெங்களூர் செந்தில் சார் அவர்களுடைய பதிவு உள்பட அனைவருமே ஒருமித்துப் பாராட்டுவது உள்ளபடியே மகிழ்ச்சியாக உள்ளது. மற்ற நண்பர்களும் ஒருவர் விடாமல் இது போன்ற பதிவுகளைப் பாராட்ட வேண்டும் என்பதே என் அவா.
ஆதவன் ரவிக்கு இந்தப்பரிசு
http://i1065.photobucket.com/albums/...psfeog42m5.jpg
நினைப்போம்.மகிழ்வோம்-61
"வாழ்க்கை".
'காலம் மாறலாம்' பாடல்.
"தோள்களில் தூங்கும்
பாரிஜாதம்"எனும் வரியைப்
பாடிக் கொண்டு வரும் போது
நடந்து வரும், அறுபதுகளில் நாம் பார்த்து அசந்து போன அதே துள்ளல் நடை.
நினைப்போம்.மகிழ்வோம்-62
"உத்தமபுத்திரன்."
"யாரடி நீ மோகினி" பாடல்.
ஆடிக்கொண்டே நகரும் அழகி
'பேரின்பமே காண்போம் வா
மன்னவா" எனப் பாடிச்
செல்ல...
அந்தப் பெண்ணைப் பிடிக்க
முனையும் போது, மதுவின்
போதை கொஞ்சம்,கொஞ்சமாக
ஏறுவதைக் காட்டும் அந்த
மெல்லிய தள்ளாடல்.
நினைப்போம்.மகிழ்வோம்-63
"திரிசூலம்."
"காதல் ராணி"பாடல்.
'பூஜை நேரம்' என்ற வரி பாடும் போது, அகன்ற வெளியில், அட்டகாசமான
ஆடைகளை அணிந்து கொண்டு, பகவான் கிருஷ்ணரின் பாணியில் ஒரு
காலை ஒயிலாக வளைத்து நின்று கொண்டு, தோள்களை
மட்டும் குலுக்கிச் செய்யும்
அற்புத அசைவுகள்.
நினைப்போம்.மகிழ்வோம்-64
"கௌரவம்."
பிள்ளையோடு சதுரங்கம் விளையாடும் பெரியவர்,
வெற்றியை நோக்கி தான் போகிற ஒரு சந்தோஷத்தில்,
ஒரு கிண்டலான தொனியில்
பாடுகிற...
"பொடிப் பயலே.. பொடிப் பயலே.. என்னடா செய்வே?"