-
as jaiganes said yes her talent was not fully utilized.
She is a very natural actress and can do any character at Ease.
Her character in noolveli is the best and only she can pull it off so easily.
So was her character in Paritchaikku neramachu
A great actress & a nice lady. RIP
சுஜாதா ..
பாலசந்தரின் பெருமைக்குரிய அறிமுகம் இவர்.
ஆம் அவள் ஒரு தொடர்கதையில் அறிமுகம் அதன் பின் இவரது சினிமா வாழ்கை ஒரு தொடர்கதை
தான்.
இன்றளவும் இவரைப்போல் முகபாவத்துடன் வசனம் பேச ஆளில்லை..
எந்த வேடமேற்றாலும் அதில் தன்னை புகுத்திக்கொண்டுவிடுவதில் வல்லவர்
மாறுபட்ட கோணங்கள் இதோ ..
அவள் ஒரு தொடர்கதை - குடும்பத்தை தோளில் சுமக்கும் பாத்திரம் ..
" கல்யாணத்திற்கு முன்னாடி கர்வமா இருக்கலாம் கர்ப்பமா இருக்கத்தான் கூடாது " என இவர் பேசும்விதம் அருமை.
துணையிருப்பாள் மீனாட்சி - என்ன அருமையான நடிப்பு
நூல்வேலி -- எழுத்தாளராகவும் சென்சார் போர்ட் உறுப்பினராக இவர் நடித்த விதம் அபாரம்
பரீட்சைக்கு நேரமாச்சு .. இதில் ஐயங்கார் மாமி வேடத்தில் ஜொலித்திருப்பார்
அதில் வி.கோபாலகிருஷ்ணனுக்கு சமைத்து போடுவார்
இப்படி இவர் போட்டும் மகன் ஒய்.ஜிக்கு வேலை கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தில்
இவர் "அவருக்கு வடிச்சு போட்டு போட்டு என்னத்த கண்டோம் " என்று பேசுவதை பார்த்து கொண்டே இருக்கலாம்
அவர்கள் : கொடுமைக்கார கணவனிடமிருந்து மீண்டு சுயமாக வாழமுடியும் என நிரூபிப்பார் அபார நடிப்பு.
அன்னக்கிளி -- தான் காதலித்தவரை தன் சிநேகிதியும் காதலிக்கிறாள் என தெரிந்து விட்டுக்கொடுத்து
பின் அவர்கள் குழந்தையையும் காப்பாற்ற தன் உயிர் தரும் வேடம்
சுஜாதாவின் நடிப்பு மிளிரியது.
ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது .. இதிலும் திறம்பட நடித்திருப்பார்
மாரியம்மன் திருவிழா - இதில் டெல்லிகணேஷிற்கு இணை .. பட்டணத்திலிருந்து கிராமத்துக்கு
வாழ்கைப்பட்டு வரும் பெண் வேடம் ஜமாய்த்திருப்பார். நான் ரசித்த வேடம்
லலிதா -- கோரா காகஸ் படத்தின் தமிழ் வடிவம் .. என்ன அருமையான நடிப்பு
அந்தமான காதலி - சொல்லவும் வேண்டுமோ ..
பின் பல குணச்சித்திர வேடங்கள்
உன்னை நான் சந்தித்தேன்,
விதி - இதில் பூர்ணிமாவிற்காக வாதாடும் வேடம் பின்னியிருப்பார் ..
உயிரே உனக்காக - அருமையான வேடம்
ரஜினிக்கு அம்மாவாக உழைப்பாளி
சமீபத்தில் பாபாவிலும் பாந்தமான நடிப்பு ..
இவர் பதித்த முத்திரை ஏராளம் ..
ராஜ்
என்னால் அவரது மறைவை ஜீரணிக்க முடியவில்லை. எந்த திரையுலகும் அவரது திறமையை நன்றாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குறியது
http://youtu.be/O3C_JuW4bqs
-
A dreadful thread, and yet, a reminder of our mortality.
Irreplaceable loss. Really shocking.
-
Shocking indeed! Great actress and she lived in all her characters. Very sad and great loss :sad: RIP
-
ரொம்ப இயல்பாக நடிப்பாங்க... சின்ன வயசுலேயே இறந்தது ரொம்ப சோகம் (58 என்பதாகப்படித்தேன் ) :-(
இலங்கையில் பிறந்த மலையாளி (எம் ஜி ஆர் மாதிரி). மென்மையாகவும் அடக்கமாகவும் தான் நான் பெரும்பாலும் பார்த்திருக்கிறேன்.
விதி - இவரது கேரியர் பேஸ்ட் என்று சொல்லலாம்.
நல்ல மாடுலேஷன் உள்ள குரலும்.
நான் ஸ்கூல் படிக்கும் பொது அந்த நிறுவனத்தின் கிளார்க் எங்க பக்கத்து வீடு. அவருக்கு இவங்களை ரொம்பப்பிடித்து தன் ஒரு குழந்தைக்கு சுஜாதா என்று பெயர் வைத்தது நினைவிருக்கிறது. (பாவம், அந்தக்குழந்தையும் சில வருடங்களுக்குள்ளேயே இறந்து விட்டது).
இவர் முகத்தைப்பார்த்தாலே ஒரு அனுதாபம் வரும். பாவம்...
-
நடிகர்திலகத்தின் சிறந்த ஜோடிகளில் ஒருவராகத் திகழ்ந்த திருமதி. சுஜாதா அவர்களின் மறைவு மிகவும் வருத்தமடைய வைக்கிறது. பத்மினி, தேவிகா, ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா வரிசையில் நடிகர்திலகத்தின் மிகப்பொருத்தமான ஜோடி சுஜாதா. வயது 58 தான் என்பது இன்னும் வருத்தமடைய வைக்கும் விஷயம்.
சென்ற மாதம்தான் இருவரும் நடித்த 'வா கண்ணா வா' படத்தை மீண்டும் பார்த்தேன். என்ன ஒரு பொருத்தமான ஜோடியென்று வியந்தேன். நேற்றிரவு இச்செய்தி கேட்டதும் அந்த நினைவுகள்தான் என்னைச்சூழ்ந்தன.
அவர் விட்டுச்சென்றிருக்கும் அவர் நடித்த படங்கள்தான் இனி அவரது நினைவுச்சுவடுகள்.
-
-
-
-
KS Chitra's daughter passes away in a swimming pool accident in Dubai.
Source: Twitter.
-
Oh god.. :-( She was born very late and Chitra's joy is short lived.