சிறப்பு நிழற்படம்
http://i1087.photobucket.com/albums/...g?t=1317535743
அன்புடன்,
வாசுதேவன்.
Printable View
சிறப்பு நிழற்படம்
http://i1087.photobucket.com/albums/...g?t=1317535743
அன்புடன்,
வாசுதேவன்.
அன்பு பம்மலார் சார்,
நடிகர் திலகத்தின் 43வது பிறந்ததின விழா பொம்மை இதழ் சிறப்புப் பதிவை வெளியிட்டு ஒரு உலுக்கு உலுக்கி விட்டீர்கள். செம ரகளை. அவையெல்லாம் பொற்காலங்கள் அல்லவா...நடிகர் திலகத்தை வைத்து படம் எடுத்ததின் மூலம் என் வருங்கால சந்ததிகள் பெருமையடைவார்கள் என்று திரு k.s.கோபாலகிருஷ்ணன் கூறியிருந்தது மெய் சிலிர்க்க வைத்தது.
சிவாஜி ரசிகன்" சிறப்பு மலர் ஸ்டில்கள், சிறப்பு ஆல்பத்தின் அட்டகாசமான ஆரம்பப் பக்கங்கள், 84வது சிவாஜி ஜெயந்தி போஸ்டர்கள் அனைத்தும் அருமை. நன்றி!
அன்புடன்,
வாசுதேவன்.
அன்பு பார்த்தசாரதி சார்,
கவிதை நடையில் நம் கடவுளுக்கு தங்களது பிறந்த நாள் பதிவு அழகான ஓவியமாய் இருந்தது. பாராட்டுக்கள்.
அன்புடன்,
வாசுதேவன்.
அன்பு முரளி சார்,
பம்மலார் மற்றும் என் உடல்நலம் மீது தாங்கள் கொண்டுள்ள அக்கறையை நினைக்கும் போது என் கண்கள் பனிக்கின்றன. இப்படிப்பட்ட சகோதரர்களை எனக்களித்த நம் பெருமகனாரின் அருளை எண்ணி பூரிப்படைகிறேன். தவமிருந்தால் கூட இப்பேர்ப்பட்ட சொந்தங்கள் கிடைக்காது. தங்கள் அன்பிற்கும்,பாசத்திற்கும் என் உளமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் ஏன் சார் மன்னிப்பெல்லாம் கேட்டுக் கொண்டு?.. நீங்கள் உத்தரவு போடுங்கள். நீங்கள் கூறியுள்ளது போலவும் செய்தாலும் அதுவும் பிரமாதமாகத்தான் இருக்கும். ஒவ்வொரு படமாக பிரித்து மேய்ந்து விடலாம்.
பாசத்துடன் நன்றி கலந்து
வாசுதேவன்.
பிறந்த நாளா - தெரியாது... நினைவு நாளா - தெரியாது... எந்த நாள் -யாருக்குத் தெரியும்...
எங்களுக்கு தெரிந்த தெல்லாம் நடிகர் திலகம் மட்டும் தான்...
எங்களுக்கு பிறந்த நாளுக்கு போலியாக மாலை போட்டு போஸ் கொடுத்து வேஷம் போட தெரியாது..
நினைவு நாளுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி போஸ் கொடுக்கும் வேஷம் போடவும் தெரியாது ...
மற்ற நாட்களில் மறந்து போகும் நன்றி கெட்ட தன்மையும் தெரியாது...
எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்று தான் --
நினைதது நினைத்து கண்ணீர் விடுவோம் ....
அது எந்த நாள் என்று கவலையில்லை..
நினைத்தாலே உணர்ச்சி வசப்பட வைத்து எங்களை ஆட்கொள்ளும் ஒரே தலைவர்..
நிஜ வாழ்வில் நடிக்க
அவருக்கு மட்டுமல்ல-
எங்களுக்கும் தெரியாது...
டியர் ராகவேந்தர் சார்,
உண்மையான, சத்தியமான வார்த்தைகள்...
டியர் முரளியண்ணா,
தங்கள் பதிவு வருத்தமடையச்செய்யவில்லை, மாறாக நான் விடுக்கவிருந்த வேண்டுகோளை சுலபமாக்கி விட்டது. சமீப காலமாக, குறிப்பாகச்சொன்னால் ஜூலை 3 'சவாலே சமாளி' வெளியீட்டிலிருந்து, அந்தந்த மாதம் வெளியான ஒவ்வொரு படத்துக்கும், அப்படங்களுக்கான ஆவணங்களைத்தருவதில் ஆர்வம் காட்டிய சகோதரர் பம்மலார் அவர்கள், பின்னர் படிப்படியாக தனது எல்லைகளை விரித்து, அத்திரைப்படங்கள் வெளியானபோது பல்வேறு பத்திரிகைகளில் வெளியான செய்திகள், புகைப்படங்கள், விமர்சனங்கள், சிறப்புக்கட்டுரைகள் என பல்வேறு ஆவணங்களையும் பதிப்பிக்கத்துவங்கினார், அதற்கு இணையாக சகோதரர் வாசுதேவன் அவர்களும் திரைப்படங்களின் காட்சிகளை நிழற்பட வடிவில் தரத்துவங்கினார். நாளடைவில் இவர்களின் இந்த அதிகப்படியான சேவை நம்மை மலைக்க வைத்ததோடு, இவற்றுக்காக இவ்வளவு சிரமம் எடுத்துக்கொள்கிறார்களே என்ற வலியையும் நம்முடைய மனதில் தோற்றுவித்தது உண்மை. அதை எப்படி வெளிப்படுத்துவது என்று எண்ணிய நேரத்தில்தான் உங்கள் பதிவு பாதையைத் திறந்து விட்டது போல் ஆனது.
எனது தாழ்மையான எண்ணம் என்னவெனில், அதற்காகப் பதிவுகளை நிறுத்தாமல், மாறாக குறைத்துக்கொண்டு அவசியப்பட்ட ஆவனங்களை மட்டும் தரலாம் என்பதுதான். பம்மலாரின் சில பதிவுகளின் நேரங்களைப்பார்க்கும்போது, நள்ளிரவுகளில் எல்லாம் கூட பதிவுகளை இட்டிருக்கிறார் என்ற உண்மை அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. முதலில் அவரது உடல் நலமும், அவர் குடும்பத்திற்கு அவர் ஆற்ற வேண்டிய கடமைகளும் மிக முக்கியம். இதை ஏற்கெனவே ஒரு பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். நமது திரியும் பதிவுகளும் ஏதோ இன்றோடு முடிந்து விடப்போவதல்ல. காலத்துக்கும் தொடரப்போவது. அதைத்தொடர புதிய புதிய ரசிக நெஞ்சங்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
எனவே படங்கள் வெளியானபோது, பத்திரிகைகளில் அவைதொடர்பாக வந்த செய்திகளையெல்லாம் பதிப்பதற்கு மாறாக (ஒவ்வொரு ஆவணத்தையும் ஸ்கேன் செய்து இங்கே பதிப்பிப்பது என்பது எவ்வளவு பிரம்மப்பிரயத்தனம் என்பதை நம் அனைவராலும் உணர முடிகிறது), மிக முக்கிய ஆவணங்களான '100-வது நாள்' மற்றும் 'வெள்ளி விழா' விளம்பரங்களை மட்டும் பதிப்பித்தால் போதுமானது. நடிகர்திலகத்தின் திரைப்படங்களின் வெற்றிகளைப்பற்றிய பொய்ப்பிரச்சாரங்களை உடைத்து நொறுக்கும் ஆயுதங்கள் அவை மட்டுமே.
அந்த வகையில் பார்த்தால், நான் அளித்துள்ள பட்டியலில் இம்மாதம் (அக்டோபர்) மூன்று வெள்ளிவிழாப்படங்கள், மற்றும் எட்டு 100 நள் படங்கள் மட்டும் இடம் பெற்றுள்ளன. ஆக, இந்த பதினோரு விளம்பரங்களை மட்டும் (அவற்றிலும் கைவசம் இருப்பவற்றை மட்டும்) பதிப்பித்தால் போதுமானது என்பது என் எண்ணம். இதுபற்றி உங்கள் எண்ணத்தை எழுதுங்கள்.
மற்றபடி, பல்வேறு படங்களின் சிறப்புக்கள் பற்றி பொம்மை, பிலிமாலயா, பேசும் படம் போன்ற இதழ்களில் வந்தவையெல்லாம் அப்படங்கள் வெளியாகும் முன்னர் அவற்றின் சிறப்புகளைப்பற்றி மக்களுக்கு எடுத்துச்சொல்லி மக்களின் எதிர்பார்ப்புக்களை அதிகரிப்பதற்காக வெளியானவை. ஆனால் இப்போது நாம் அப்படங்களைப் பார்த்து விட்டோம். எனவே இப்போது படிக்கும்போது அவ்வளவு சுவாரஸ்யங்களை ஏற்படுத்தவில்லை, மாறாக பார்த்த படங்களின் விமர்சனம் போல அசைபோட உதவுகின்றன என்பது உண்மை. அதே சமயம் ஏற்கெனவே நடந்த பல்வேறு விழா நிகழ்ச்சிகளின் பதிவுகளைக்காணூம்போது அவை நம்மைப் பரவசப்படுத்துகின்றன என்பதை மறுக்க முடியாது.
டியர் பம்மலார்,
மேலே எழுதிய விஷயங்கள் முரளியண்ணாவுக்குச் சொன்ன பதில் என்பதை விட, முக்கியமாக உங்களுக்குத்தான். புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். (இதுபோக நான் தனிப்பட்ட முறையில் உங்கள் தலையில் ஒரு சுமையை சுமத்தியிருக்கிறேன். அதை வசதியேற்படும்போது மட்டும் செய்யுங்கள். சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டாம்). உங்கள் ஆர்வத்துக்கும் உழைப்புக்கும் இன்னும் வருங்காலத்தில் எவ்வளவோ வேலைகள் காத்திருக்கின்றன. எனவே முழு எனர்ஜியையும் இப்போதே செலவழித்து விடாதீர்கள்.
டியர் வாசுதேவன்,
சமீப காலமாக நீங்களும் அளவுக்கு அதிகமாகவே சிரமங்களை எடுத்துக்கொண்டு நிழற்படங்களைப் பதித்து வருகிறீர்கள். (பானை சோற்றுக்கு ஒரு சோறு: 'இசைக்கருவிகளுடன் இணையில்லாக்க்கலைஞர்' சேகரிப்புகள்). அதே சமயம், திரைப்படங்களின் நிழற்படக்காட்சித் தொகுப்புக்கள் அவசியம்தானா என்பது நமது எண்ணம். ஏனென்றால், அந்தத்திரைப்படங்களை நாம் பார்த்திருக்கிறோம், பார்த்து வருகிறோம், மீண்டும் மீண்டும் பார்க்க இருக்கிறோம். முன்போல 'எபோது தியேட்டரில் போடுவார்கள் போய்ப்பார்ப்பதற்கு?' என்ற காலத்தில் நாம் இல்லை. வீட்டு அலமாரியில் இருக்கும் டி.வி.டி.க்களை நினைத்தபோது எடுத்துப்போட்டுப் பார்க்கும் காலத்தில் இருக்கிறோம். எனவே திரைப்படக்காட்சிகளை இவ்வளவு சிரமம் எடுத்து பதிப்பித்தல் அவசியமா என்பதே நமது ஆதங்கம் (உதாரணம் சமீபத்தில் நீங்கள் தந்த 'வசந்த மாளிகை' காட்சிகள்). உங்களை சிரமங்களைக்குறைக்கவே நானும் சரி, முரளியண்ணாவும் சரி வேண்டுகோள் வைக்கிறோம்.
Earlier during my school days, I have only relied upon newspapers and word of mouth for info. about NT films. for example, in 1979 Thrisoolam was main topic of discussion among students. I was in 4th standard that time. It celebrated 200 days in Central-Nellai. It rocked. Also heard, flowers were strewn in the theatre. Central was biggest cinema next to Madurai theater.
Now a days, i am happy we have this thread which gives opportunity to read and enjoy photos of NT's films published in various magazines from time to time.
But my salute to the stalwars of this thread, Murali, Saaratha, Pammalar, Vasu, and others who not only have good memory also they preserve various information
This is because of we love Sivaji the great and we also thank the software advancement which helps as stay united.
'சபாஷ் மீனா' திரைப்படத்தில் சத்திய வேந்தர். (3.10.1958)
http://74.208.147.65/ahtees/admin/mo...20%20Meena.jpg
http://bp3.blogger.com/_Hj1mom2H_lI/...bash+meena.JPG
http://i1087.photobucket.com/albums/...g?t=1317578025
சித்திரம் பேசுதடி......
http://www.youtube.com/watch?v=H7sAS...yer_detailpage
அன்புடன்,
வாசுதேவன்.
காணா இன்பம் கனிந்ததேனோ...அற்புதப் பாடல்.
http://www.youtube.com/watch?v=MewOsMqwg3Y&feature=player_detailpage
அன்புடன்,
வாசுதேவன்.
இன்று மாலை காமராஜர் அரங்கில் நடிகர் திலகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஒய்.ஜி.மகேந்திரா அவர்களால் நடத்தப்பெற்ற இசைவிழா மிக சிறப்பாக நடைபெற்றது. அரங்கம் நிறைந்து வழிந்த நடந்த விழாவில் நடிகர் திலகத்தின் புகழ் பெற்ற பாடல்களையும் அவற்றோடு சில rare songs என்று இனத்தில் வருகின்ற பாடல்களும் பாடப்பெற்றன.
குறிப்பாக டி.எம்.எஸ். தவிர மற்ற பாடகர்கள் பாடிய பாடல்களை மேடையேற்றியது ஒரு புதுமையான முயற்சி.
நமது திரியில் பதிவிட்ட இசைக்கருவிகளுடன் நடிகர் திலகம் அங்கே அரங்கத்தில் வீடியோ வடிவில் சங்கீத சக்ரவர்த்தி சிவாஜி என்ற பெயரில் திரையிடப்பட்டது.
இயக்குனர் திலகம் கே.எஸ்.ஜிம் வியட்நாம் வீடு சுந்தரம் மற்றும் குட்டி பத்மினிக்கு சிவாஜி விருது வழங்கப்பட்டது. சீர்காழி நகரில் இயங்கி வரும் அன்பாலே என்ற மாற்று திறனாளிகளின் பள்ளி ஒன்றுக்கும் சிவாஜி மன்றத்தை சேர்ந்த இறந்து போன ஒருவரின் மனைவிக்கும் நிதி உதவி வழங்கப்பட்டன.
மெல்லிசை மன்னர் மேடையேற்றப்பட்டபோது standing ovation கொடுக்கப்பட்டது. ஒய்.ஜி.எம். குழுவில் தொடர்ந்து பாடுபவரும் தூர்தர்சன் இசை நிகழ்சிகளில் இடம் பிடிப்பவரும் அண்மையில் ஆசியாநெட் சானலில் ஐடியா ஸ்டார் சிங்கர் பரிசு பெற்றவருமான கல்பனாவிற்கு [நடிகர் இசையமைப்பாளர் ராகவேந்தர் மகள்] மெல்லிசை மன்னரின் கையால் பரிசளிக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், இளைய திலகம் பிரபு, இயக்குனர் சேரன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். தமிழகத்தில் அறியப்படுகிற ஒரு அரசியல்வாதியாக தான் இருப்பதே நடிகர் திலகத்தால்தான் என்றார் இளங்கோவன். விழாவின் ஹைலைட் சேரனின் உணர்ச்சி மிகுந்த பேச்சு. நடிகர் திலகம் வாழ்க என்று முழக்கமிட்டவாறே பேச்சை தொடங்கிய சேரன் தன்னை சிறு வயதில் வார்த்தெடுத்த சிவாஜி படங்களைப் பற்றி சொன்னார். தேசிய கீதம் படத்தில் அவரை நடிக்க வைக்க முயற்சி எடுத்ததைப் பற்றி, அவருக்கு கதை சொல்ல சென்றபோது நடந்த நிகழ்வுகளையெல்லாம் நெகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்தார். நடிகர் திலகத்தின் இறுதி ஊர்வலத்தைப் பற்றி பேசும்போது கண் கலங்கிய சேரன் அவரை பற்றி ஒரு ஆவணப்படம் [டாகுமெண்டரி] எடுக்க இருப்பதை குறிப்பிட்டு இங்கே சிறப்பு விருந்தினராக தான் பெற்ற சிவாஜி விருது தேசிய விருதை விட மேலானது என்று சொல்லி விடை பெற்றார். இளைய திலகம் பிரபு, ரசிகர்களுக்கும் மகேந்திரனுக்கும் சேரனுக்கும் நன்றி தெரிவித்தார். இறுதியில் மகேந்திரன் நன்றி நவின்றார்.
அன்புடன்