http://www.buycinemovies.com/images/...vcdsongs-3.jpg
http://upload.wikimedia.org/wikipedi...iya_Sivaji.jpg
Printable View
http://files.prokerala.com/movies/pi...sree-15452.jpg
https://fbexternal-a.akamaihd.net/sa..._DVD_Cover.jpg
http://www.findinternettv.com/images...andra_1943.jpg
http://upload.wikimedia.org/wikipedi...ama_poster.jpg
http://udhayamgold.files.wordpress.c.../anbalippu.jpg
http://ts4.mm.bing.net/th?id=H.5057084501657755&pid=1.7
http://1.bp.blogspot.com/_fzoE6P0eI4...malperumai.jpg
http://fundoomovies.com/ups/philosop...-of-sivaji.jpg
http://playtamil.files.wordpress.com...ages.jpg?w=173
http://4.bp.blogspot.com/__vnK9wWtIw...tubevidcom.jpg
http://3.bp.blogspot.com/-EK7Fr5_0dC...fee5c123-1.jpg
http://fundoomovies.com/ups/imaigal.jpg
http://2.bp.blogspot.com/-7L2tJzj1pA.../rajarishi.jpg
http://123tamilforum.com/imgcache2/2...ragatham-1.jpg
பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜ் அவர்களின் சாதனைகளைப் பட்டியலிட்ட முரளி சார் அவர்களுக்குப் பாராட்டுக்கள். பெருந்தலைவரின் சாதனைகளையும் அவரது எளிமையையும் காலாகாலத்துக்கும் பேசிப்பெருமைப்படலாம். அத்தகைய சாதனை வீரர் அவர்.
சுதந்திரப்போராட்ட காலத்தில் இருபது நாட்கள் அல்ல, இருபது வாரங்கள் அல்ல, இருபது மாதங்கள் அல்ல, இருபது ஆண்டுகள் வெள்ளையனின் சிறையில் அடைபட்டுக் கிடந்த தலைவன் தன் வாழ்நாளில் ஒருமுறைகூட அதைச் சொல்லிக்காட்டியதில்லை.
(இரண்டுமாதங்கள் பாளையங்கோட்டையில் சிறையில் இருந்ததை இரண்டு தலைமுறைகளாக சொல்லிக்கொண்டிருப்பவர்களையும், திரைப்படங்களில் மட்டுமே சிறையைப் பார்த்தவர்களையும், ஊழலுக்காக கைதாகி சிறைசென்றவர்களையும் முதலமைச்சர்களாக பெற்றிருப்பது நாம் செய்த பாவமன்றி வேறென்ன) .
ஒரு பிச்சைக்காரனின் பையில் கூட 500 ரூபாய் இருக்கும் இந்நாட்டில், இறக்கும்போது வீட்டு அலமாரியில் 126 ரூபாயும் வங்கிக்கணக்கில் 460 ரூபாயும் வைத்திருந்த தலைவனை உலகெங்கும் தேடினாலும் பார்க்க முடியுமா?.
அவரைத்தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பிய இந்த தமிழ்நாடு என்ன சுபிட்சத்தைக் கண்டுவிட்டது?...
பெருந்தலைவரின் சாதனைகளில் ஒன்று தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 'சாத்தனூர் அணைக்கட்டு'. அந்த அணை கட்டப்பட்டதிலிருந்து சமீப காலம் வரை எண்ணற்ற திரைப்படங்களின் படப்பிடிப்பு அங்கு நடந்துள்ளது. ஒவ்வொரு படப்பிடிப்புக்கும் தயாரிப்பாளர் ஒரு தொகையை பொதுப்பணித்துறைக்குக் கட்ட வேண்டும். அப்படி திரைப்படங்களின் படப்பிடிப்புக்களின் மூலம் கிடைத்த வருமானம் அணைகட்டிய செலவுத்தொகையைத் தாண்டிவிட்டதாம்.
பெருந்தலைவரின் சாதனைகள் இப்படி எத்தனையெத்தனை.
ஒன்பதே ஆண்டுகளில் 8,600 பள்ளிக்கூடங்களை உருவாக்கிய தலைவனை (சராசரியாக ஆண்டொன்றுக்கு 933 பள்ளிகள்) உலகில் எந்தவொரு நாட்டிலும் காணமுடியாது...
ஒருமுறை ஒரு அணைக்கட்டு கட்டி முடிந்ததும் அதிகாரிகள் ஆர்வத்தில் அந்த அணைக்கு 'காமராஜ் சாகர்' என்று பெயர்வைத்துவிட்டனர். அணையைத்திறக்க வந்த பெருந்தலைவர் காமராஜ் அதைப்பார்த்து அதிர்ந்து விட்டார்.
"ஏண்ணே, எதுக்கு என்பேரை வச்சிருக்கே. என் சொந்தக்காசிலையா கட்டினேன்?. மக்களுடைய வரிப்பணத்துல கட்டுனதுண்ணே. மொதல்ல என் பேரை எடு. அப்புறம் வந்து தொறந்து வக்கிறேன்" என்று கோபத்துடன் போய்விட்டார். அவர் பெயரை நீக்கிய பிறகே வந்து அணையைத்திறந்து வைத்தார்.
(சிவாஜி, எம்.ஜி.ஆர். என்ற இரண்டு திரை ஜம்பவான்கள் இருந்தும் அவர்கள் பெயரை வைக்காமல் தன்பெயரில் 'ஜெயலலிதா திரைப்பட நகர்' என்று அமைத்து அதை வெட்கமில்லாமல் தானே திறந்து வைத்த நிகழ்ச்சியை இப்போது ஏன் நினைக்கிறீர்கள்?)
மதிய உணவுத்திட்டம் அமல்படுத்தியபின் கலெக்டர்கள் மீட்டிங்கைக் கூட்டினார் முதல்வர் காமராஜ். "ஏண்ணே, இப்போ எல்லாபசங்களும் பள்ளிக்கூடத்துக்கு வர்றாங்களா?" என்று கேட்க, அதற்கு கலெக்டர்கள் "எல்லாரும் வரலை, ஓரளவுக்கு வர்றாங்க. காரணம் என்னன்னா, பணக்கார வீட்டுப்பசங்க பளபளன்னு சட்டை போட்டுக்கிட்டு வர்றாங்க. இவனுங்களோ கோவணாண்டிகள். அவங்களோடு உட்கார கூச்சப்படுறாங்க" என்று சொன்னதும், தலைவர் யோசித்தார்.
"சரி இனிமேல் எல்லாரும் ஒரேமாதிரி யூனிபார்ம் போட்டுக்கிட்டு வரணும்னு சட்டம் போட்டுடறேன். வசதியுள்ளவர்கள் அவர்களே வாங்கிக்கட்டும். ஏழைகளுக்கு அரசாங்க சார்பில் இலவச சீருடை வழங்குவோம்" என்று சொன்னதோடு சட்டமும் பிறப்பித்தார்.
இலவச சீருடை அணிந்து பள்ளிக்குச்சென்ற ஏழை மாணவனுக்கு அங்கே ஆச்சரியம். நேற்றுவரை தங்க ஜரிகை சட்டைபோட்டு வந்த பஸ் கம்பெனி முதலாளி மகனும் தன்னைப்போலவே சீருடை அணிந்திருப்பதைப் பார்க்கிறான். அவனுடைய தாழ்வு மனப்பான்மை துடைத்தெரியப் படுகிறது.
துடைத்தெரிந்தவர் எங்கள் பெருந்தலைவர்...
எத்தனை முறை திரையிடப்பட்டால் என்ன? எத்தனை முறை பார்த்தால் என்ன? அழகாபுரி சமஸ்தானத்தின் இளவரசன் அழகன் ஆனந்தை காண கசக்குமா என்ன? அதுவும் என்றென்றும் நடிகர் திலகத்தை நேசிக்கும் மதுரை மாவட்ட மக்களுக்கு?
இந்த வாரம் திருமங்கலம் - ஆனந்த், மானாமதுரை சீனிவாசா மற்றும் ராஜபாளையம் ஜெயா ஆனந்த் ஆகிய ஊர்களில் காலத்தை வென்ற காவியம் வசந்த மாளிகை வெற்றிகரமாக ஓடியது.
மாவட்டத்தின் மக்கள் மட்டும் பார்த்தால் போதுமா? அப்போது நாங்கள் மீண்டும் காண வேண்டாமா என்ற கேள்வியை மதுரை மாநகர் மக்கள் எழுப்ப, சரி அதற்கென்ன உங்களுக்கு இல்லாமலா என்று விநியோகஸ்தரும் வரும் வெள்ளி முதல் ஒன்றல்ல இரண்டு தியேட்டர்களில் வசந்த மாளிகை திரைக் காவியத்தை திரையிடுகிறார்கள்.
ஆம் வெள்ளி ஜூலை 19 முதல் மதுரை அலங்கார் மற்றும் சோலைமலை திரையரங்குகளில் வசந்த மாளிகை வெளியாகிறது.
அன்புடன்
தமிழகத்தின் எந்தப் பகுதியை எடுத்துக் கொண்டாலும் நடிகர் திலகத்தின் படங்களை வெளியிட ஆரம்பித்து விட்டால் அதன் பிறகு மக்கள் மதி மறந்து தொடர்ந்து நடிகர் திலகத்தின் படங்களை எதிர்பார்பார்கள். தூத்துக்குடி நகரில் உத்தமனும் எங்கள் தங்க ராஜாவும் ஏற்படுத்திய தாக்கம் தொடர்கிறது. தூத்துக்குடி நகர் kspc திரையரங்கில் வரும் 19-ந் தேதி வெள்ளி முதல் ஸ்டைல் சக்ரவர்த்தியின் "ராஜா" திரையிடப்படுகிறது.
வசந்த மாளிகை மற்றும் ராஜா திரையரங்க செய்திகளை வழங்கிய ராமஜெயம் அவர்களுக்கு நன்றி.
அன்புடன்
Vaali - Great loss to TFI
RIP
http://www.youtube.com/watch?v=VL8Rs03nMFc
http://www.bharatstudent.com/ng7uvid...-award_029.jpg
நடிகர் திலகத்தின் திரைப்படங்களில் அன்புக் கரங்கள் மூலம் எழுதத் தொடங்கிய கவிஞர் வாலியின் மறைவு அதிர்ச்சியளிக்கிறதாய் உள்ளது. ஒரு சில நாட்களுக்கு முன் தான் மற்றோர் மிகப் பெரிய கவிஞரை தமிழ்த்திரையுலகம் இழந்தது. விண்ணோடும் முகிலோடும் பாடல் உள்பட பல அருமையான பாடல்களுக்கு சொந்தமான கவிஞர் ஆத்மநாதன் மறைவின் செய்தி காயும் முன் இந்த செய்தி நெஞ்சை வாட்டுகிறது.
கவிஞர் வாலியின் மறைவுக்கு நமது ஆழ்ந்த இரங்கல் உரித்தாகட்டும். அவரது ஆன்மா சாந்தியடையவும் இத்துயரைத் தாங்கும் மன வலிவை அவர் குடும்பத்தார் பெறவும் இறைவனை பிரார்த்திப்போம்.
நடிகர் திலகத்திற்கு வாலி எழுதிய முதல் படமான அன்புக் கரங்களில் மிகச் சிறந்த தத்துவப் பாடல்
http://www.youtube.com/watch?v=4fL5GLsmtSk
காவியக்கவிஞர் வாலி அவர்களின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. நடிகர்திலகத்தின் 83 படங்களுக்கும் மக்கள்திலகத்தின் 58 படங்களுக்கும் மற்றும் ஏராளமான படங்களுக்கும் அருமையான பாடல்களை எழுதிய சிறந்த கவிஞரை தமிழ்த்திரையுலகம் இழந்து விட்டது.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவர்பால் அன்பு கொண்டவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்...
காவியக்கவிஞர் வரகவி வாலி அவர்களின் மறைவுக்கு நமது கண்ணீர் அஞ்சலி
http://i1110.photobucket.com/albums/...aar/Vaali1.jpg
நடிகர் திலகம் பற்றி பிரபலங்கள் : 15
வாழ்வியல் திலகம் பற்றி வரகவி
வரலாற்று ஆவணம் : குமுதம் ஜங்ஷன் : 27.5.2003
http://i1110.photobucket.com/albums/...GEDC5736-2.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC5736-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC5744-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC5740-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC5741-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC5742-2.jpg
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
வாழ்க்கையில் ஒரு சில மனிதர்களை சந்திக்க வேண்டும். அவர்களிடம் பேச வேண்டும், பற்பல விஷயங்களைப் பற்றி கேட்டு தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்போம். அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவின் தாக்கம் அதிகமாக உள்ள எந்த ஒரு மனிதனுக்கும் இந்த உந்துதல் இருக்கும். சந்திக்க விரும்பும் நபர்கள் வேண்டுமானால் வித்தியாசப்படலாம். ஆனால் சந்திப்பதிலும் உரையாடுவதிலும் ஆர்வம் இருக்கும். அப்படி சந்தித்து உரையாட நினைத்த மனிதர்களில் முக்கியமானவர் வாலி.
அவரின் பல்வேறு வகையான பாடல்களைப் பற்றி, 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையிசை உலகில் அவர் தனக்கென்று உருவாக்கி வைத்திருந்த தனித்துவமான இடத்தைப் பற்றியெல்லாம் கேட்க வேண்டும் என நினைத்திருந்த நாட்கள் பல உண்டு.
எதுகை மோனை என்ற தமிழ் இலக்கணத்தை மாணாக்கர்களுக்கு கற்று தருவதற்கு இவர் பாடல்களை எடுத்து சொன்னாலே போதும், வெகு எளிதாக் புரிந்து விடும். அந்தளவிற்கு அதில் தேர்ச்சி பெற்றவர். சில நேரங்களில் எதுகை மோனைக்காக சில ஆங்கில் வார்த்தைகளை கலந்தாலும் அவையும் ரசிக்கக் கூடிய வகையாகவே அமைந்திருப்பதுதான் அவர் சிறப்பு. சென்ற நூற்றாண்டின் முதல் முப்பதுக்குள் பிறந்திருந்தாலும் இந்த நூற்றாண்டின் இந்நாள் வரையான நிகழ்வுகளையும் அறிந்து வைத்திருந்ததுதான் அவரின் சிறப்பு.
நடிகர் திலகம் பேசும் தெய்வம் படத்தின் படப்பிடிப்பின் போது வாலியிடம் பேசும் போது சொன்னாராம்
இளநீரை சுமந்து நிற்கும் தென்னை மரம் அல்ல
மழை மேகம் குடை பிடிக்கும் சிறு நிலவும் அல்ல
இங்கும் அங்கும் மீன் பாயும் நீரோடை அல்ல
இந்த வரிகள் அனைத்துமே பிரமாதம். ஆனால் அதற்கு பின் எழுதியிருக்கிறாயே
இதற்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தையேது சொல்ல
அதுதான் டாப் என்றாராம். அதுதான் நம் கருத்தும்.
வாலியின் ஒரு கவிதை தொகுதியில் ஒரு சின்ன கவிதை ஒன்று வரும்
காலம் பாதி எரித்து
காமம் பாதி எரித்த பின்
மரித்த உடலை
மயான தீ என்ன செய்யும்
உண்மைதான். மயான தீ வாலியின் Mortal Remains-ஐ வேண்டுமென்றால் destroy செய்யலாம். ஆனால் அவரின் Immortal வரிகளை யாராலும் destroy பண்ண முடியாது.
உலகெங்கும் வாழும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் அனைவரின் சார்பாகவும் வரகவி வாலியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
அன்புடன்
காவியக் கவிஞர் வாலிக்கு நமது இதய அஞ்சலி
நடிகர்திலகம் சிவாஜி 12 ஆம் ஆண்டு நினைவு தின பேச்சுப்போட்டி, திருநெல்வேலி மாநகர் மாவட்ட நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் 14-01-2013 அன்று திருநெல்வேலியில் நடைபெற்றது.
பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த, 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும், நூற்று இருபது மாணவ - மாணவியர் இந்தப் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டனர்.
தேசியமும் சிவாஜியும், பெருந்தலைவர் காமராஜருடன் சிவாஜி, திரையுலகின் முடிசூடா மன்னன் சிவாஜி, வெள்ளித் திரையில் நடிகர்திலகத்தின் வசனங்கள், நடிகர்திலகத்தின் திரையுலக சாதனைகள், நடிகர்திலகம் சிவாஜியின் சமூகத் தொண்டுகள் ஆகிய தலைப்புகளில் மாணவ - மாணவியர் பேச்சில் வெளுத்து வாங்கினர்.
மாணவ - மாணவியருடன் வந்திருந்த ஆசிரியப் பெருமக்களும், பெற்றோரும் மிகவும் ஆவலாக தங்கள் பிள்ளைகள் பேசுவதைக் கேட்டு ரசித்தனர்.
பேச்சுப் போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசுகளும், பங்கேற்ற அனைத்து மாணாக்கர்களுக்கும் ஆறுதல் பரிசுடன் சான்றிதழும், வரும் ஜூலை 21 ஆம் நாள், மாலை 4 மணிக்கு, திருநெல்வேலி, வானவில் திருமண மண்டபத்தில் நடைபெறும் நடிகர்திலகதின் 12-ஆம் ஆண்டு நினைவு நாள் விழாவில், நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் திரு.S.S.ராமசுப்பு அவர்களால் வழங்கப்படுகிறது.
பேச்சுப் போட்டியைத் துவக்கிவைப்பதற்காகச் சென்ற நான், மாணவ - மாணவியரின் பேச்சுக்களைக் கேட்டு, உண்மையிலேயே வியந்துபோனேன்.
நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை துவக்கப்பட்டு இந்த 8 ஆண்டுகளில் நடிகர்திலகம் புகழ் பாடும் பல விழாக்களை நடத்தியிருக்கிறோம். அவற்றில் முத்தாய்ப்பாக, எனக்கு மன நிறைவினை அளித்ததாக இந்த பேச்சுப்போட்டி அமைந்தது என்றால் அது மிகையாகாது.
ஏனெனில், மற்ற விழாக்களில் எல்லாம், நாமெல்லாம் கூடுவோம், நடிகர்திலகம் புகழ் பாடுவோம். யாராவது சிறப்பு விருந்தினரும் சிறப்புரை நிகழ்த்துவார். ரசிகர்கள் கூடிக் கேட்டுவிட்டு, மகிழ்ந்து கலைவோம்.
ஆனால், அடுத்த சந்ததியினர் நடிகர்திலகத்தைப்பற்றி, அறிந்துகொள்ள, தெரிந்துகொள்ள நாம் ஏதேனும் முயற்சி செய்யவேண்டும் என்ற சிந்தனை என் மனதில் இருந்துகொண்டே இருந்தது.
அதன் முதல் முயற்சியாக திருநெல்வேலியில் நடைபெற்ற இந்த பேச்சுப்போட்டி சிறப்பாக, வெற்றிகரமாக அமைந்ததில் திருநெல்வேலியில் உழைத்த நெல்லை மாவட்ட நிர்வாகிகள், நண்பர்களை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.
http://i1234.photobucket.com/albums/...pse979e0c6.jpg
http://i1234.photobucket.com/albums/...ps2d858fad.jpg
http://i1234.photobucket.com/albums/...psf4c18ac1.jpg
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு நாளையொட்டி பல்வேறு ரசிகர்கள், ரசிகர் மன்ற அமைப்புகள் சார்பில் வெளியிடப் பட்டுள்ள போஸ்டர்கள் - பேனர்களின் நிழற்படங்கள்.
இவற்றை நமக்கு அனுப்பி வைத்த சம்பந்தப் பட்ட அமைப்பினருக்கு நமது உளமார்ந்த நன்றி.
கோவை பாப்பநாயக்கன் பாளையம் ஒன்றிய தலைமை மன்றத்தினரின் போஸ்டர்
http://i1146.photobucket.com/albums/...ps3713c211.jpg
http://i1146.photobucket.com/albums/...psfa62b7b4.jpg
நண்பர் ஜெயகுமார் அவர்களின் சிம்மக் குரலோன் சிவாஜி நற்பணி மன்றத்தினரின் போஸ்டர்
http://i1146.photobucket.com/albums/...psf9e2d302.jpg
திருச்சி புறநகர் மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் வெளியிடப் படும் போஸ்டர்
http://i1146.photobucket.com/albums/...ps46e6bee4.jpg
http://i1146.photobucket.com/albums/...psef256ba3.jpg
சந்திரசேகர் சார்,
நடிகர் திலகத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு நீங்கள் நடத்திய பள்ளி மாணவர்களுக்கிடையிலான பேச்சுப் போட்டி மிகவும் பாராட்ட தக்கது. இந்த செயல் நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் அடுத்தடுத்த தலைமுறையினரிடம் நடிகர் திலகத்தை கொண்டு சேர்க்கும் சீரிய முயற்சி. உங்களின் இந்த நல்ல முயற்சிக்கு நெல்லை அனைத்து பள்ளி மாணவர்களின் overwhelming response மிகுந்த மனநிறைவை தருகிறது. அது மட்டுமல்ல கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பரிசும் சான்றிதழும் அளிப்பது என்பது ஒரு நல்ல அணுகுமுறை. இது மாணவர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி அடுத்த முறை அவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்க வழி வகுக்கும்.
இது போன்ற புதுமையான நல்ல முயற்சிகளை இனியும் தொடர்ந்து மேற்கொள்ள வாழ்த்துகள்.
அன்புடன்
தமிழகமெங்கும் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் வெளியீடு பற்றிய செய்திகள் தொடர்கின்றன.
நெல்லை - பம்பாய் திரையரங்கில் இன்று முதல் வசந்த மாளிகை திரையிடப்பட்டிருகிறது. அது போன்றே தூத்துக்குடி ஸ்ரீ முருகன் திரையரங்கிலும் வசந்த மாளிகை ரிலீஸ்.
தூத்துக்குடி சத்யா திரையரங்கில் [கடந்த இரண்டு வாரங்களில் உத்தமன் மற்றும் எங்கள் தங்க ராஜா ஓடிய அரங்கு] நாளை முதல் திரிசூலம் வெளியாகிறது.
சென்னை - பிராட்வே திரையரங்கில் நண்பகல் காட்சியாக [Noon Show] ஊட்டி வரை உறவு திரையிடப்பட்டிருக்கிறது.
மதுரையில் வசந்த மாளிகை திரையிடப்படும் அரங்குகளில் ஒரு சின்ன மாற்றம். புதிய தமிழ் திரைப்படமான மரியான் மதுரை சோலைமலை திரையரங்கில் வெளியிட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் படம் இந்த வாரம் வெளியாவது சந்தேகம் என்ற தகவல் வந்ததால் வசந்த மாளிகை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் கடைசி நேரத்தில் மரியான் வெளியாகி விட்டதால் வசந்த மாளிகை மதுரையில் அலங்கார் திரையரங்கில் மட்டும் வெளியாகியிருக்கிறது.
அனைத்து தகவல்களுக்கும் நன்றி திரு ராமஜெயம் அவர்களே!
அன்புடன்
இன்னா செய்தாரை ஒருத்தர் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற வள்ளுவன் வாக்கின்படி !
அங்கு மட்டும் அல்ல...நம் சிங்கார சென்னையிலும் விரைவில் .....
பலர் வாயடைத்துபோய் நம்மை திரும்ப திரும்ப வம்பிழுக்க முடியாதபடி...ஆனால்.... பெயரளவில் பார்வையாளர்கள்...just for ரெகார்ட்ஸ்....என்று அந்த காலத்திலிருந்தே அவிழ்த்துவிடும் பொய்யை...புளுகு மூட்டையை திரும்ப திரும்ப வெளியில் போஸ்டர் வாயிலாகவும்...மையம் வாயிலாகவும் உண்மையாக்க முயற்ச்சிக்கும் முயற்சியில் புலம்பவைக்க....
ஆனால் நாமோ
நாம் சொல்வதையும் செய்வோம் !
சொல்லாததையும் செய்வோம் !
சொல்லிகொண்டேயும் செய்வோம் !
செய்துகொண்டேயும் சொல்வோம் !
என்பதை உணர்த்தும் வகையில் விரைவில் பலரின் மதோன்னத விஜயம் ஆரம்பம் !
Dear Murali Sir,
Thanks for your valuable appreciation
நடிகர் திலகத்தின் நினைவு நாளையொட்டி சிவாஜி மன்ற இலக்கிய அணி, துஷ்யந்த் மற்றும் விக்ரம் பிரபு மன்றங்கள் சார்பில் வெளியிடப் படும் போஸ்டர்களின் நிழற்படங்கள்..
http://i1146.photobucket.com/albums/...psca2c1d01.jpg
http://i1146.photobucket.com/albums/...ps76c38e1e.jpg
http://i1146.photobucket.com/albums/...psb7da7752.jpg
It was rather nice to see all our friends at NTF paar magale paar screening Y.G.M, Mohan Ram,A.R.S,Murali,Pammalar,Sarathy,Subbu,Ragavendar ,Ganpat to name a few. I will write in detail later. I met Vasu also during my pilgrimage tour.
Chandra- Your attempt of taking Sivaji to Growing minds is indeed commendable. Hats off to you .
All members- I caught up with your contributions today only after a long break.
Vali- A great loss to all of us. let his soul rest in peace with our Acting God in heaven.
அன்புள்ள சந்திரசேகர் சார்,
நடிகர்திலகம் சமூகநல பேரவை சார்பில் நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற மாணவ மாணவியரின் பேச்சுப்போட்டி பற்றிய தொகுப்பு அருமை. நடிகர்திலகத்தின் பெருமைகளைப்பற்றி பெரியவர்களே பேசிக்கொண்டிருக்காமல் இளம் தலைமுறையினரிடம் நடிகர்திலகத்தின் மாண்புகளை கொண்டுசேர்க்கும் முகமாக பல்வேறு தலைப்புகளில் அவர்களைப் பேச வைத்ததன் மூலம் நடிகர்திலகத்தின் பல்வேறு பரிமாணங்களை இளம்தலைமுறையினர் மத்தியில் வெளிக்கொணர்ந்த சாதனை உண்மையில் பாராட்டுக்களுக்கு அப்பாற்பட்டது.
இந்தப் பேச்சுப்போட்டிக்காக மாணவர்கள் எத்தனை நூல்களை ஆராய்ந்திருப்பார்கள், அதன்மூலம் நடிகர்திலகத்தின் அருமை பெருமைகளை எந்த அளவு அறிந்திருப்பார்கள் என எண்ணும்போது உண்மையில் இது ஒரு மகத்தான நிகழ்வு என்பதில் ஐயமில்லை. முரளி சார் அவர்கள் குறிப்பிட்டதுபோல, போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்குவது என்ற முடிவு நடிகர்த்திலகத்தைப் பற்றி அறிந்துகொள்ள மாணவர்களை மேலும் ஊக்கபடுத்தும் நல்ல முயற்சியாகும்.
சத்தமில்லாமல் சாதனைகளைப் படைக்கும் நடிகர்திலகம் சமூகநலப் பேரவைக்கும் அதனை சீரிய முறையில் வழிநடத்தும் தலைவரான தங்களுக்கும் அனைத்து நடிகர்திலகத்தின் ரசிகர்கள் சார்பில் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்...
அன்புள்ள முரளி சார்,
ஒவ்வொரு வாரமும் நடிகர்திலகத்தின் திரைக்காவியங்கள் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் / ஊர்களில் வெற்றிநடை போட்டுவரும் செய்திகளை அருமையாகத் தொகுத்து வழங்கும் தங்களுக்கும், தங்களுக்கு அத்தகவல்களை எட்டிவைக்கும் அன்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
"சிலர்" படங்கள் மட்டுமே தமிழகத்தில் மீண்டும் மீண்டும் திரையிடப்படுவதாக உருவாக்கப்பட்டு வரும் மாயைக்கு நல்ல பதிலடி...
இன்னா செய்தாரை ஒருத்தர் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற வள்ளுவன் வாக்கின்படி !
ஜூலை 21 - கலைமகள் தன் தவப்புதல்வன் திரை உலகில் சித்தராக விளங்கும் கணேச மூர்த்தியை பிறந்த பயன் முடிவடைந்த காரணத்தால் அவதாரம் எடுத்த கடமை, பயன் முடிந்தது, ஆகையால் திரும்பி வா மகனே என்று அழைத்த அந்த நாள்,
இன்றோடு 12 வருடம் நிறைவடைகிறது...இருள் சூழ்ந்த அமாவாசை ஒரு நாள் தான்....ஆனால் திரை உலகிற்க்கோ இன்றோடு 12 வருடம் .....!
நாடக, மற்றும் திரை உலகம் பயன்பெறும் வகையில் நடிப்பு என்றால் என்ன...தமிழை எப்படி உச்சரிக்கவேண்டும்... நவரசத்தையும் எப்படி முகத்தில் வரவழைக்கவேண்டும் ...நடிப்பு மட்டும் அல்லாது பிற கலை நுணுக்கங்களையும் எப்படி கற்றுக்கொள்ளவேண்டும் ..கலைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவமும் மரியாதையும் கொடுக்கவேண்டும் என்று சகலர்க்கும் ஒரு வழிகாட்டியாய் வாழ்ந்த ஒரு மகான்...இனியும் தொன்றமாட்டாரா என்று உண்மையான தமிழன் மட்டுமல்லாது நாடக மற்றும் திரையை ரசிக்கும் ஒவொருவரும் எண்ணும் நாள் !
அனைவரது அன்பு வேண்டுகோள் தாளாமல் பாசத்தால் இதோ இருக்கிறேன் நான் உலகெங்கும் உங்களுக்காக என்று சென்ற வருடம் மார்ச் 17 முதல் கர்ணனாய் பிள்ளைகளுக்கு காட்சிதந்து சுமார் 152 நாட்கள் அவர்களுடன் திரைவடிவில் கூடவே இருந்தநாள்.
அந்த 152 நாட்கள் திரை உலகமே உலகெங்கும் திருவிழகோலம் கண்டது ! தன்னை நேசித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மீண்டும் ஒருமுறை காட்சிதந்த வைபோகம் தான் கர்ண விஜயம்...!
இந்த வருடமும் தனது அன்பு பிள்ளைகளும் உண்மையாக தன்னை நேசித்த மக்களுக்காகவும் வரும் மாதம் அதாவது ஆகஸ்ட் மாதம் சந்திக்கிறேன் என்று கூறி மீண்டும் கலைமகளிடதிலே ஐக்கியமானார் நம் சித்தர்..! தற்போது வருவதற்கான ஆயுத்தம் மேல் உலகில் நடந்துகொண்டுதான் இருக்கிறது....வெகு விரைவில் நம் சித்தர் நம்மை எல்லாம் மகிழ்சிகடலில் ஆழ்த்த வருகிறார் என்று நினைக்கும்போது புளகாங்கிதம் அடைகிறது மனது !
இன்று நினைவுநாள் என்கிறார்கள்...மறந்தால் தானே நினைப்பதற்கு...! ஓய்வில்லாத உழைப்பல்லவா நம் சித்தருடயது...
1952 முன் நாடகத்திலும்...1952 முதல் 1997 வரை திரை உலகை வாழ வைத்த தெய்வம் அல்லவா...
ஓய்வு தேவை மீண்டும் வேறு வடிவெடுத்து உழைப்பதற்கு என்று 2001 ஜூலை 21ஆம் தேதி ஓய்வெடுக்க சென்றுவிட்டார்.
அப்படிதான் உண்மை தமிழன் மட்டும்மல்லாது மற்ற உண்மையான மக்களும் என்றும் நினைத்துகொண்டிருக்கின்றனர்.
நல்லவர் நினைவுநாள் என்பதால் தான் வருணனே இன்று வாழ்த்துகிறான் ! இந்த பேறு ஒன்றே போதும் !
https://www.youtube.com/watch?v=-L6M6UkaNlg
இந்நாட்டை ஆள்கின்ற திருடர்கள் ஒழியாமல் தேசிய நெஞ்சங்கள் ஓயாது என்ற பகத்சிங் வாக்கினைபோல
எல்லோர்க்கும் வாழ்வென்னும் கர்மவீரர் பின்னாலே இந்நாட்டின் இளைஞர்கள் எழவேண்டும் என்று
இன மற்றும் ஜாதி வெறி வளர்த்தவர்கள் மத்தியில் தேசியம் வளர்த்த திரையுலக தந்தையே !
ஒவ்வொரு காலகட்டத்திலும் சித்தர் வாழ்வில் நிஜத்தில் நடந்ததை பிரதிபலிக்கும் நிழல் காட்சிகள்...!
https://www.youtube.com/watch?v=GkxRC8ikSc4
https://www.youtube.com/watch?v=8132k86_LZE
காலத்தை வென்ற கலைஞனே !
ஞாலத்தில் உனை மிஞ்சும்
நடிகன் நானறியேன்.
தமிழரின் பெருமையே!
வாழ்க நீ தந்த கலை!
இதயதெய்வம் நடிகர் திலகத்துக்கு
பன்னிரெண்டாம் ஆண்டு புகழாஞ்சலி
[21.7.2001 - 21.7.2013]
நடிகர் திலகம் பற்றி பிரபலங்கள் : 16
நடிகர் திலகம் பற்றி மக்கள் திலகம்
வரலாற்று ஆவணம் : நடிகன் குரல் (நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உலக வெற்றி உலா மலர்) [பதிப்பாசிரியர் : திரு. எம்.ஜி.ஆர்] : ஆகஸ்ட் 1962
http://i1110.photobucket.com/albums/...27c9d101d6.jpg
http://i1110.photobucket.com/albums/...07e273085a.jpg
http://i1110.photobucket.com/albums/...d81b3781e9.jpg
http://i1110.photobucket.com/albums/...8c3d4a0a9d.jpg
பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
என்றும் நீ எங்கள் நடிகர் திலகம் என்றால்
கோடி ஜென்மங்கள் ரசிகராய் பிறப்போம்
நன்றி நாங்கள் சொல்ல வார்த்தையேது
நாளும் உன் காட்சியின்றி வாழ்க்கையேது?
செந்தமிழ் நாட்டு கலையுலகின் திலகமே
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
உலகத்திலே ஒருவன் என உயர்ந்து நிற்கும் திலகமே
நேற்றாகி இன்றாகி எனறைக்கும் நிலையான
ஊற்றாகி நின்றானவன்
என்ற வரிகளுக்கெல்லாம் முகவரி கொடுத்தவனே!
இந்த நாளில் உன்னை நேற்றும் இன்றும் என்றென்றும் இதே போல் நினைத்து வாழும் ஒரு எளிய ரசிகனாக
அன்புடன்
http://cinefanz.com/wp-content/uploa...i-Ganesan1.jpg
எங்கிருந்தோ வந்தாரு எங்க ஊரு ராஜா....
இல்லை இல்லை ...
இங்கிருந்து தான் வந்தாரு
இங்கே தான் வாழ்ந்தாரு
இங்கே தான் மறைந்தாரு...
வாழ்நாள் முழுதும் தமிழனாகவே வாழ்ந்து தமிழனுக்கு அடையாளம் காட்டி தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற சொற்றொடருக்கு உயிர் தந்து காலமெல்லாம் தமிழனுக்கு பெருமை தேடித் தந்த சிங்கத் தமிழன் ... உடலால் மட்டுமே மறைந்த நாள்...
எங்களுக்கு நினைவு நாள் என்று தனியாக தேவையில்லை... உங்களை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் நினைத்துக் கொண்டே தான் இருக்கிறோம்...
எங்கள் இறுதி மூச்சு வரை இது தொடரும்...
டியர் சுவாமி சார்
நடிகன் குரல் மிகவும் அபூர்வமான ஆவணம். நம்மிலேயே பலருக்கு இப்படி ஒரு பத்திரிகை வந்தது தெரிந்திருக்காது. நடிகர் சங்கத்தின் தலைவராக எம்.ஜி.ஆர். இருந்த போது பருவ இதழாக மலர்ந்தது. அவரே ஆசிரியராகவும் இருந்தார். 1962ல் நடிகர் திலகம் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்று திரும்பிய பின் அதனை யொட்டி நடிகன் குரல் சிறப்பு மலர் வெளியிட்டது. அதில் காணும் பக்கத்தை இங்கே நீங்கள் தந்ததன் மூலம் ஆவணத் திலகம் என்பதையும் அந்நாளைய தமிழ்த் திரையுலகின் பெரும்பான்மையான தகவல்களுக்கு தங்களிடம் ஆவணங்கள் இருக்கின்றன என்பதையும் அழுத்தம் திருத்தமாக நிரூபித்துள்ளீர்கள்.
தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.
நடிகர் திலகம் நினைவு நாளையொட்டி நண்பர் எம்.எல். கான் அவர்கள் வெளியிட்டுள்ள போஸ்டர்கள்
http://i1146.photobucket.com/albums/...ps046c4783.jpg
http://i1146.photobucket.com/albums/...psbb912bd6.jpg
இன்று நான் நினைக்கவே விரும்பாத ஒரு நாள்.
இது உன் நினைவு நாளாம் .
என் தெய்வமே ,எனக்கு அனுதினமும் உன் நினைவு நாள்தானே.
நான் உன்னை விட அதிகம் நேசித்தது இவ்வுலகில் இல்பொருளாகும் .
உலகில் உன்னை மிஞ்ச யாருமில்லை என்ற ஒற்றை வரியில் முடித்து நெஞ்சு நிமிர்த்தாமல்,
எத்தனை வரிகளை எழுதி எழுதி இந்த திரியில் சுமை ஏற்றுகிறோம்.
நீ உன் நடிப்பால் என்னை அழ வைத்த நாட்களை எண்ணி முடிக்கும் வலு என் மூளைக்கில்லை
ஆனால் நீ உறங்கி கண் மூடி என்னை கதற வைத்த ஒரே நாள்
உன்னால் எனக்கு கெடுதல் விளைந்து ஊண் உறக்கத்தை தொலைய வைத்த நாள்
ஆனாலும் இதை நான் நினைவு நாளாக எண்ண வேண்டுமாம்.
நான் சொல்வேன் இந்த நாளொன்றை தவிர அனைத்துமே எனக்கு உந்தன் நினைவுநாளே...
பாச தெய்வத்திற்கு பன்னிரெண்டாம் ஆண்டு நினைவாஞ்சலி
http://i1087.photobucket.com/albums/..._003871572.jpg
கண்ணுக்குத் தெரிந்த கடவுள் என்று சூரியனை வழிபட்ட எங்கள் கர்ணனே!
எங்கள் கண்ணுக்குத் தெரிந்த ஒரே கடவுள் நீதானே!
ஆண்டவன் படைப்பின் அரிய அற்புதமே!
எங்கள் உடலின் அனைத்து அணுக்களிலும் ஆட்சி செய்யும் ஆண்டவனே!
வாழ்க்கை என்னவென்று உணர்த்தி எங்களுக்கு
வாழக் கற்றுக் கொடுத்தவனே!
அன்பு ஒன்றையே அடித்தளமாகக் கொண்டு
பாசத்தைப் போதித்த எங்கள் புத்தனே!
மகிழ்ச்சியை தவிர வேறொன்றும் தந்தறியாதவனே!
மானுடப் பிறவியின் மகத்தான படைப்பே!
மன்னர்க்கெல்லாம் மன்னனே! எங்கள்
மனமெல்லாம் நிறைந்த மாசற்ற மாணிக்கமே!
உழைப்பு ஒன்றையே உயர்வெனக் கொண்டு
உன்னத வாழ்க்கை வாழ்க்கை வாழ்ந்தவனே!
உள்ளத்தில், எண்ணத்தில், செயலில், சிந்தையில்
சிம்மாசனமிட்டு அமர்ந்து ஆட்சி செய்யும் எங்கள் சிங்கமே!
இடி, மழை, புயலை நடிப்பில் காட்டியவனே!
இன்னல்களை இல்லாமல் தீர்த்தவனே!
கள்ளமற்ற வெள்ளை சிரிப்பில்
மழலைகளையும் தோற்றோடச் செய்தவனே!
நடிப்பின் ஆணிவேராய் வேரூன்றி
ஆல விருட்சமாய் வளர்ந்தவனே!
அந்நியரும் அகம் மகிழ்ந்த
அற்புதங்கள் செய்து காட்டியவனே!
எங்கள் ரத்த நாளங்களில் ஓட்டமாய் இருப்பவனே!
எண்ண ஓட்டங்களில் என்றும் வாழ்பவனே!
எண்ணற்ற அதிசயங்களுக்கு சொந்தம் கொண்டாடுபவனே!
பேச்சிலும் மூச்சிலும் இரண்டறக் கலந்தவனே!
அன்புச் சங்கிலியால் எங்களைப் பிணைத்து
அறிவு தீபம் ஏற்றி வைத்து
எங்களை அணைத்துக் கொண்டவனே!
அன்னையின் அன்பைக் கொ(கா)ட்டிய ஆண்மகனே!
'அண்ணன்' என்ற சொல்லுக்கு அலங்காரம் தந்தவனே!
'ஆண்டவன்' என்று என்றோ ஆனவனே!
ஆட்சி பீடம் ஏறாமலேயே அரசாட்சி புரிந்தவனே!
ஆண்மையின் அழகு மிளிர்ந்தவனே!
சிவனைத் தொழுதால் சிரமகள் விலகும்
எங்கள் சிவாஜியைத் தொழுதால் சிந்தை குளிரும்
சிரிப்பையும் அழுகையும் சமமாகக் காட்டியவனே!
சிம்மக் குரலில் சிந்தை கவர்ந்தவனே!
இன்று உனக்கு நினைவு நாளாம்! நினைவே நீதானே!
உயிரே நீதானே! உறவே நீதானே! எங்கள்
உயிர் பிரிந்தாலும் அது உன்னுடன்தானே கலக்கும்!
மறுபடி உன் பெயர் சொல்லி ஜனிக்கும்.
உயிரற்ற உடலாய் நாங்கள்
நாங்களும் இறந்து பன்னிரண்டு வருடங்கள் ஆகி விட்டதே
அப்புறம் எப்படிப் பிரிவு வந்தது?
எங்களை மறந்தாலும் உன்னை மறக்க முடியாது.
எங்கும் நீக்கமுற நிறைந்திருக்கும் பரம்பொருளே!
எங்களினுள்ளே ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஆண்டனியே!
எட்டுத் திசையும் நின் புகழ் பாடுவதைத் தவிர
வேறென்ன வேலை எங்களுக்கு?
உன் பாத மலர் தொட்டு ஜென்ம சாபல்யம் அடைகிறோம்.
உன் பெயர் உச்சரித்து பாவங்களைக் கழுவுகிறோம்
உன் அற்புத அசைவுகளைக் கண்டு அசைவற்று நிற்கிறோம்
உன்னை மனதில் கொண்டு பிற தெய்வங்களை மறக்கிறோம்.
கண்ணீர் மலர்களால் உன் பாதங்களை அர்ச்சிக்கும்
உன் அருள் பெற்ற பக்தன்
வாசுதேவன்.