'இந்த ராஜ்ஜயோகம் காலம்தோறும் வாழும்'. அதா?
Printable View
ஜி என்ன ஒற்றுமை இருவருக்கும்
From Sorgavasal(1954)
Raajaa magaL raaNi pudhu rojaa malar meni.......... by K.R.Ramasami
http://www.youtube.com/watch?v=PF_Fmf4empU
படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (2000)
வரிகள்: வைரமுத்து
இசை: எ. ஆர். ரஹ்மான்
பாடகர்கள்: சித்ரா & ஸ்ரீநிவாஸ்
http://www.youtube.com/watch?v=at3srgvO8t4
பிரை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
பிரை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
விழியில் கரைந்துவிட்டதோ
அம்மம்மா விடியல் அழித்து விட்டதோ
கவிதை தேடித் ருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்
தொலைந்த முகத்தை மனம் தேடுதே
வெயில் தாரொழுகும் நகர வீதிகளில்
மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்
துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை
உருகி உருகி மனம் தேடுதே
அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்
அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு
நூறு முறை பிறந்திருப்பேன்
பிரை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
பிரை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட
ஒரே தொடுதல் மனம் ஏங்குதே
முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது
நித்தம் வேண்டும் என்றும் ஏங்குதே
வேர்வை பூத்த உந்தன் சட்டை வாசம் இன்று
ஒட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு
குத்தும் இன்பக் கணம் கேட்குதே
பாறையில் செய்ததும் என் மனம் என்று
தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய்
நீ நெஞ்சில் முளைத்து விட்டாய்
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை...
குட்மார்னிங்க் ஆல்.. ராகதேவன் அது பிறை வந்தவுடன் நிலா வந்ததென.. கொஞ்சம் மாற்றிவிடுங்கள்..:)
ஆஹா.. ஒரே ராணி பாடல்கள்..அழகு.. இனிமேல் தான் கேக்கணும்..ஈவ்னிங்க்..
செந்தில்வேல் சுருக்கமா எழுதியிருந்தது தெரிலை ஆர் புரிலை..
ராகவேந்தர்,ராஜேஷ்,வாஸ்ஸூ நன்றி..
ராஜேஷ்.. ஒரு பாட் போட்டீங்களே ஊடால.. ஒருவரில..எகிப்து ராணி உனக்கு எதுக்கு தலைகாணி.. ஹி ஹி.. நரசிம்மா.. (தானே)மனம் விட்டு சிரிக்கலாம்..பாவம் திருப்பதிசாமி..டைரக்டர் இரண்டு தெலுகு அப்புறம் இது எடுத்து ரிலீஸாகுமுன்னே கார்விபத்தில் காலமாகிவிட்டார். வெகு சின்ன வயது..
இந்த் எங்கே எனது கவிதை..பாடலும் சரி படமாக்கப் பட்ட விதமும் சரி.. சமீபத்தில் (?!) வந்த பாடல்களில் உருக வைத்த பாடலுள் ஒன்று.. தாங்க்ஸ் ஆர்டி..
ராஜ் ராஜ் சார்..உங்களை எதிர்பார்த்தேன். இன்ஃபேக்ட் ஆல் பழைய பாட்ஸ் உங்களை நினச்சே உங்க கிட்ட நினைவலைகள் கேக்கணும்னு டைப்பண்ணினேன்..குமாரி கமலா பாட்ஸூக்கும் மற்ற பாட்ஸூக்கும் நன்றி..
சிகா...அன்று நீலவேணியை ஞாபகப்படுத்தி விட்டேனோன்னோ .. இதோ அதே வரிசையில் சில
https://www.youtube.com/watch?v=IxWX0w4m6_g
https://www.youtube.com/watch?v=4iF3h13NWYU
https://www.youtube.com/watch?v=g5sQFTGQDsA
https://www.youtube.com/watch?v=zuBA6moO1MY
//கிழ ரஜினி 'நெற்றிக்கண்'ணில் யாரை பாக்கி வைத்தார்? என்னா கும்மாளம்?// தாங்க்ஸ் வாஸ்ஸூ.. இந்த தீராத விளையாட்டுப் பிள்ளை பாட்டில் வயலின் தான் நினைவுக்கு வருகிறது..
தேவதாஸ் பாட்டு சொன்னாற் போலவே வெகு சோகமாக இருந்தது.. அப்படியும் பாஸ் மார்க்குக்கு மேல தானா.. ஸாரி.. ராணி ஆராய்ச்சில ரொம்ப நேரம் உட்கார முடியலை.. நேற்று ஈவ்னிங்க் விஸிட்டர்ஸ் வந்துட்டாங்க..
ராணி யார் குழந்தையா.. தெரியாது..ஆனா ராணின்னு அறிமுகமாகி பின் வேறு பெயரில் ஓ போடு பாட்டில் பிரபலமானார் அந்த நடிகை..
மகராணி நிறைய இருக்கு.. ராணி தான் கம்மி..’வாசு’ தேடலில் இளமைக்காலங்கள் யோகமுள்ள ராணி கிடைத்தது பாட் கேட்டதில்லை அல்லது நினைவில்லை என்பதால் போடவில்லை..
Whatever...!!! Chinna... I write Tamil listening to the song/conversation, and writing it (in my own limited Thamizh vocabulary) the way the words sound! :) Needless to say, my initial posting (of the song) had some errors! :) Haha... So what!? :)
http://www.youtube.com/watch?v=2qrk-NQw3Ls
இதோ ஒரு ராணி இறுமாப்புடன் கூறுகிறார்...
இவர் ஆடாத ஆட்டமில்லையாம், பாக்காத உலகமில்லையாம்,,கேக்காத சேதியில்லையாம்...
சி.க. சார் இந்தப் பாட்டு உங்களுக்காக... பக்கெட்டாக தண்ணி இறைத்து துள்ளி விளையாடுங்கள்...
மெல்லிசை மன்னரின் தூள் துள்ளல் பாடல்...//ஹ்ச்சோ இந்தப் பாட் எனக்கு நினைவில்லை ராகவேந்தர் சார்..தாங்க்ஸ்..கேட் சொல்றேன்..
//Whatever...!!! Chinna... I write Tamil listening to the song/conversation, and writing it (in my own limited Thamizh vocabulary) the way the words sound! Needless to say, my initial posting (of the song) had some errors! Haha... So what!? // ஹிஹி..சும்மா சொன்னேன் ராகதேவன் :) போடச்சொன்னா போட்டுக்கறேன் :) பாட்கும் தாங்க்ஸ்
அந்தக்காலக் காதலுக்கும் இந்தக்காலக் காதலுக்கும் என்ன வித்தியாசம்..
காதலன் மீது காதலைக் கொண்ட காரிகை (பின்ன காதலனோட மாமாவையா லவ் பண்ணுவா) அவன் வராமல் எவ்வ்ளோ தவிக்கறா..
நெஞ்சமெலாம் நிறைந்தவனை நினைத்ததனால் நித்திரையும்
…நேர்வழியாய் வாராமல் நிலைகுலைந்து நின்றிடவும்
பஞ்சுமனம் அஞ்சுவிழி கொஞ்சுமொழி வஞ்சியவள்
…பாடுகிறாள் கானமதைப் பாய்ந்துவந்த வேட்கையினால்
மிஞ்சிடுமோ இன்பமுந்தான் மீண்டுவந்து நங்கையெனை
…மீட்டுவனோ காதலனும் வீணையைப்போல் எனப்பலவாய்
விஞ்சுகின்ற எண்ணவலை வான்மீதில் சென்றங்கே
…விண்மீன்கள், வெள்ளி நிலாக் கூட்டத்தையை அழைக்கிறதே..
ம்ம் இந்த அம்மா அந்தக்காலத்துல என்ன சொல்லுதாக…
*
பங்குனி மாதத்தில் ஓர் இரவு
பால்போல்காய்ந்தது வெண்ணிலவு
தங்கத்தில் மிதந்தது மண்ணழகு
அங்கே தனியே தவித்தது பெண்ணழகு..
காதல் தலைவன்வரவில்லையாம்
கன்னத்தில் ஒன்று தரவில்லையாம்
தூது விட்டாலும் பதிலில்லையாம்
அவள் துடித்தாளாம் எண்ணித் தவித்தாளாம்..
மல்லிகை மலரை நெருப்பென்றாள்
மணியோசை தனை இடி என்றாள்
மெல்லிய பனியை மழையென்றாள்
தன் மேனியையே வெறும் கூடென்றாள்
காலடி ஓசை கேட்டுவிட்டாள்
அந்தக் கட்டழகன் முகம்பார்த்துவிட்டாள்
நாலடி நடந்தாள் முன்னாலே அங்கு நடந்தது என்னவோ பின்னாலே..
*
https://youtu.be/YjMXGGozrzg
கே. ஆர் .விஜயா இன் தாழம்பூ
**
அதே இது இந்தக் காலமில்லை ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்னால..
இந்தக் கன்னிக்கு காதலன் பிரியவெல்லாம் இல்லை..கூடவே இருக்கான் ஆனா தாலாட்டுப் பாடுதா.. பின்ன கள்ளி..கல்யாணங்கட்டி சீக்கிரமாவே ஆரீரோ பாடணுமாம் அவளோட குழந்தைக்கு.. ஸோ காதலுக்கே ஆராரோ சொன்னா..அவனும் பாடறான்..
*
காதல் ஆராரோ காதல் ஆராரோ
கண்ணால் கொன்றாயே கண்ணே நீ யாரோ?
மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே
உன்னில் நானே வெளியில் தேடாதே
தரையில் மீன்கள் கண்கள் ஆனதே
தூக்கம் தூக்கம் தூர்ந்தே போனதே
மனசு மனசு இன்று வளையோசை ஆனதே
கொலுசு மணிகள் எனை கொலை செய்தே போனதே
இணைவதனால் இதழ் இணைப்பதனால் இந்த முத்தம் தீராதே
நனைவதனால் மழை நனைப்பதனால் நதி குற்றம் கூறாதே
காம்பில்லாமல் பூக்குமே காதல் பூக்கள் நாம்
எரியும் விழியில் எனை கற்பூரம் ஆக்கினாய்
திரியை திருடும் ஒரு தீபம் போல் மாற்றினாய்
தொடங்கிடவும் அலை அடங்கிடவும் ஒரு ஜென்மம் போதாதே
பிரிவதனால் விதி முடிவதனால் இந்த காதல் சாகாதே
நீயில்லாத வாழ்க்கையே தேவையில்லையே
*
https://youtu.be/DpNJYJhGXCE
நரசிம்மா விஜயகாந்த் இஷா கோபிகர்..பாடியவர்கள்..மஹாலஷ்மி ஐயர், சாய்சிவன்..(கொஞ்சம் எஸ்பிபி சாயல் தெரியுதுல்ல)
காதல் கொண்ட உள்ளங்களில் காதலனை விட காதலிக்குக் கேள்விகள் எழுந்தவண்ணம் இருக்கும்..எந்தக் காலத்திலும்
ஹேய் யூ.. இப்படியே வாஸ்ஸப் ஐஎமோன்னு எத்தனை நாளா பேசிக்கிட்டே இருக்கறது
இப்ப என்ன செய்யணுங்கற
அந்த ஃப்ளாட் பாத்தியா க்ரோம்பேட்ல.. பிடிச்சுருக்கா
ஓயெஸ் அதான் லோன் போட்டுட்டேன் அட்வான்ஸ் கொடுத்துட்டேன்னு சொன்னேனே அடுத்த ஜூலைல ரெடியாய்டும்
அந்த எஃப் டில்லாம் நம்ம கல்யாணத்துக்கப்புறம் நம்ம ரெண்டு பேர் பேர்லயும் மாத்துவ தானே..இ..ஆர் எஸ் அக்கெளண்ட்ல..
ஏற்கெனவே விசாரிச்சு வச்சுட்டேன் நோப்ராப்ளம் டியர்..
உங்க அப்பா அம்மா உங்க அண்ணனோட குர்கான் போய்டுவாங்க தானே நம்ம கல்யாணத்துக்கப்புறம்..
பின்ன..அவங்களுக்கு இந்த சென்னை க்ளைமேட் ஒத்துக்கலைம்மா..
ஓஒஹ்.. ஸோ ஸ்வீட்.. ஐ லவ்யூ டியர்.. அப்ப ஜாலியா ஜூலைலயே கல்யாணம் வச்சுக்கலாம்..என்ன சொல்றீங்க..
சரி ஈ ஈ.. மாயாஜால்ல வேலை மெனக்கெட்டு இங்க்லீஷ் படத்துக்கு மேட்னி ஷோ வந்துருக்கறது இப்படி கேள்வி கேட்டுக்கிட்டே இருக்கறதுக்கா ஹனி.. இருக்கறது லாஸ்ட் ரோ..கொஞ்சம் கிட்ட வாயேன்
ஸ்ஸு.. அதெல்லாம் ஜூலைக்கு அப்புறம் தான்..புதுப்படம் புதுப்படமாப் பார்க்கறது தான் அழகு..திருட்டு டிவிடில பார்த்தா சார்ம் போய்டும்.. என்ன சொல்றீங்க
என்ன சொல்வான் அவன்..திருதிருன்னு முழிக்கத் தானே செய்வான்..:)
இதான் இந்தககாலத்து லவ்..
*
ஆனா அந்தக் காலத்தில ஜெமினியும் சர்ரூவும் கேள்வி கேட்டுக்கிட்டே டூயட்பாடியிருக்காங்க..அழகா..
ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே
ஒரே பதில் ஒரே பதில் எந்தன் நெஞ்சிலே
மழலை போல தமிழில் பேசி மயங்க வைத்தாயே
நான்
மயங்கும் போது குறும்பு பேசி சிரிக்க வைத்தாயே
சிரிக்கும் போது சிரிப்பதெல்லாம் ஆசையல்லவா
கையில் அணைக்கும் போது அணைப்பது தான் காதல் அல்லவா
கண்ணைப் பறித்துக் கொள்ளவா
ஏன் எடுத்துச்செல்லவா
ஒரே கேள்வி..
குழிவிழுந்த கன்னத்தை என் இதழில் மூடவா
உனைக்
குழந்தையாக்கி மடியில் வைத்து பாட்டுப் பாடவா (எவ்ளோ நைஸா கேக்கறார் பாருங்க)
மார்பினிலும் தோளினிலும் துள்ளி ஆடவா
அந்த மயக்கத்திலே சிறிது நேரம் கண்ணை மூடவா (அது சரி..பார்த்து புள்ள..)
கையில் அள்ளி அணைக்கவா
கதை சொல்லி முடிக்கவா
நான் சேர்த்து அணைக்கவா
முகம் பார்த்து சிரிக்கவா (லூஸாம்மா நீ)
*
https://youtu.be/ls1bgVa0PmE
*
மாமா இசை என்பதனால் வாஸ்ஸூ
சர்ரூ என்பதால் ராஜேஷ்
பி.பி.எஸ் என்பதால் ராகவேந்தர்
ஜெமினி என்பதால் சி.செ
பழைய்ய பாட் என்பதால் மதுண்ணா
ஹையா ஒரே பாட்ல அஞ்சு மாங்காய் அடிச்சாச் :)
Congrats for crossing your 8K mark sika!
ஹச்சோ சி.செ.. தாங்க்ஸ்..நான் கவனிக்கலையே..
உங்களுக்காக..
தெய்வம்மலரோடு வைத்த மணம் நறுமணம்
அன்பு மனதோடு வைத்த மணம் திருமணம்
உந்தன்முகத்தோடு வந்த மணம்பால்மணம்
வண்ண முன்னழகில் வந்த மணம் தேன் மணம்..
மலரிருக்கும்கைகளிலே மணம் இருக்கும்
அந்த மணத்தினிலே குலமகளின் குங்குமம் இருக்கும்
குணமிருக்கும் இடத்தினிலே குலம் இருக்கும்
அந்த குலத்தினிலே திருமகளின் துணையிருக்கும்
கொத்து மஞ்சள் முகத்தினிலே பொட்டு வைத்து
அந்தக் கோலத்திலே என்னுயிரைத் தொட்டுவைத்து
பட்டுப் போன்ற கூந்தல் தன்னைக் கட்டிவைத்து
அதில் பருவத்தையும் உருவத்தையும் சுட்டி வைத்து....
நன்றி சொல்ல வேண்டுமந்த இறைவனுக்கு
இந்த நான்கு கண்கள் சேரவைத்த தலைவனுக்கு
நன்றி சொல்ல வேண்டுமிந்த தலைவனுக்கு
என்னை நாயகியாய்க் கொள்ள வந்த இறைவனுக்கு (எப்போதும் இப்படித் தாம்ப்பா ஆரம்பிக்கும் :) )
*
எங்க வீட்டுப் பெண் ஏவிஎம் ராஜன்..பொண் புஷ்ப லதாவா..இல்லை தானே..
https://youtu.be/4Gz7wNu0dJo?list=PL...-FoSxnnKjwlSJd
ஏனோ என்னாளும் இல்லா ஆனந்தம்..
(மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் பிபிஎஸ் பிஎஸ் எஸ் ஜே- இது வரை ஏன் இந்தப் பாட் நான் பாக்கவே இல்லை :))
ஜெமினி ஜெயந்தி அஞ்ச்சலி..
https://youtu.be/9MmqE_lmBx8?list=PL...-FoSxnnKjwlSJd
அந்தக் காலம்னு எழுதினீங்களோ பொழைச்சீங்களோ... தப்பிச்சிட்டீங்க..Quote:
காதலன் மீது காதலைக் கொண்ட காரிகை (பின்ன காதலனோட மாமாவையா லவ் பண்ணுவா) அவன் வராமல் எவ்வ்ளோ தவிக்கறா..
மையம் திரியில் எட்டாயிரம் பதிவுகளைக் கடந்தமைக்கு
சின்னக்கண்ணன் சாருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
அன்புடன் கோபு.
Mr CK
Congrats for reaching another milestone. Do post in NT's Thread also.
திரைப்படம்: சந்திரோதயம் (1966)
குரல்: டி.எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா
வரிகள்: வாலி
இசை: எம்.எஸ். விச்வநாதன்
நடிப்பு: I wonder who! :)
https://www.youtube.com/watch?v=9X2eO2yWTtk
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
பொன்னோவியம் என்று பேரானதோ
என் வாசல் வழியாக வலம் வந்ததோ
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ
கிளி வந்து கொத்தாத கனியல்லவோ
குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ
கிளி வந்து கொத்தாத கனியல்லவோ
நிழல் மேகம் தழுவாத நிலவல்லவோ
நெஞ்சோடு நீ சேர்த்த பொருளல்லவோ
எந்நாளும் பிரியாத உறவல்லவோ
இளம் சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ
பொன் மாளிகை உந்தன் மனமானதோ
என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ
இளம் சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ
முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ
முழு நெஞ்சைத் தொடுகின்ற நெருப்பல்லவோ
முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ
முழு நெஞ்சைத் தொடுகின்ற நெருப்பல்லவோ
சங்கீதம் பொழிகின்ற மொழியல்லவோ
சந்தோஷம் வருகின்ற வழியல்லவோ
என் கோயில் குடி கொண்ட சிலையல்லவோ
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
அலையோடு பிறவாத கடல் இல்லையே
நிழலோடு நடக்காத உடல் இல்லையே
துடிக்காத இமையோடு விழியில்லையே
துணையோடு சேராத இனமில்லையே
என் மேனி உனதன்றி எனதில்லையே
எழிலோடு எழில் சேர்த்து இமை மூடவோ
எனக்கென்ற சுகம் வாங்க துணை தேடவோ
மலர்மேனி தனைக் கண்டு மகிழ்ந்தாடவோ
மணக்கின்ற தமிழ் மண்ணில் விளையாடவோ
கண் ஜாடை கவி சொல்ல இசை பாடவோ
இளம் சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ...
Vaali's original version of the last charanam was as follows:
இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ
இருக்கின்ற சுகம் வாங்கத் தடை போடவோ
மடி மீது தலை வைத்து இளைப்பாறவோ
முகத்தோடு முகம் வைத்து முத்தாரவோ
கண் ஜாடை கவி சொல்ல இசை பாடவோ...
The sensor board did not like those lines; so Vaali rewrote the charanam as:
எழிலோடு எழில் சேர்த்து இமை மூடவோ
எனக்கென்று சுகம் வாஙகத் துணை தேடவோ
மலர்மேனி தனைக் கண்டு மகிழ்ந்தாடவோ
மணக்கின்ற தமிழ் மண்ணில் விளையாடவோ
கண் ஜாடை கவி சொல்ல இசை பாடவோ...
சின்னக்கண்ணன் சார்,
எங்க வீட்டுப் பெண் திரைப்படத்தில் ஏ.வி.எம்.ராஜனுடன்
நடித்திருப்பவர் பணமா பாசமா திரைப்படத்தில் நடித்த விஜய நிர்மலா.
கோபு.
இந்த மய்யத்தில் தனக்கென்று ஒரு எழுத்துப் பாணியைக் கைக்கொண்டு மிக அருமையாக, அற்புதமாக "எட்டாயிரம்" பதிவுகளைத் தந்து தொடர்ந்து முன்னேறிக்கொண்டு இருக்கும் இனிய நண்பர் "சின்னக்கண்ணன்" அவர்களுக்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
குறுகிய காலத்தில் எட்டாயிரம் பதிவுகளை எட்டுவது என்பது ஒரு அரிய சாதனைதான் என்பதில் ஐயமில்லை.
நீங்கள் மதுரகானங்களோடு மட்டும் ஐக்கியமாகிவிடாமல், நடிகர்திலகம் திரியிலும் அதிக பங்களிப்பு செய்ய வேண்டுமென விரும்புகிறோம்.
வாழ்த்துக்களுடன் ஆதி.
4 ஆயிரம் 8 ஆயிரம் மாமா பிஸ்கோத்து
ச்சும்ம்ம்மா
8 ஆயிரம் பதிவுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சி.க
அன்பான ராகவேந்திரர், எஸ்.வாசுதேவன், கோபு, ராஜேஷ், ஆதிராம்.. அனைவரது வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..
என்ன நன்றிப் பாட்டு போடறதுன்னு தெரியலை.. சரி..சிருஷ்டி டாங்க்கே பாட் போடலாம்னு போட்டுட்டேன்..:)
என்னாளும் ஆனந்தம்....ம்ம்ம்ம்
https://youtu.be/mRWj5knSvC0
சிக்கா...
எட்டாத உயரம் அல்ல எட்டாயிரம் இன்னும்
எத்தனையோ எட்ட வேண்டும் நீர் சீக்கிரம்
ஆமா.. அதென்ன பழைய பாட் என்பதால் மதுண்ணா... எனக்கு புத்ப் பாட் புடிக்தா என்ன ?
இந்தப் பாட்டும் புடிக்கும் தெரிஞ்சுக்குங்
https://www.youtube.com/watch?v=1pnQsFBh1XU
வாசுஜி...
இந்த ராணியை மறந்துட்டீங்களா ?
https://www.youtube.com/watch?v=IfXqcYLG0eg
சின்னக்கண்ணன் சார்
8000 பதிவுகள் கண்டமைக்கு
வாழ்த்துக்கள்.
பதிவுகளை விட
உற்சாகமான வார்த்தைளும்
துள்ளல் வரிகளும்
மீண்டும் படிக்கத் தூண்டுவதும்
உங்கள் எழுத்துக்களின் சிறப்பு.
நன்றி.
இந்த ராணியெல்லாம் வந்தாச்சா...
திருவல்லிக்கேணி ராணி தெரியாதா எங்க பாணி - உதயா
வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் - அடுத்த வாரிசு
நெனச்சதெல்லாம் நடக்கபோற நேரத்திலே வாடி என் காதல் ராணி நான் தானே தேனீ - உறவாடும் நெஞ்சம்
இந்த பாட்டு பாடிய சாய்சிவன் இப்போது உயிருடன் இல்லை என்பது சோகம்...
இவர் மகள் ஹரிப்பிரியா AIRTEL சூப்பர் சிங்கரில் புகழ் பெற்றவர் என்பது தெரியும் தானே ....
https://www.youtube.com/watch?v=E4fjh5aq3JQ
சுந்தர பாண்டியன் சார்..
எகிப்து ராணி ராஜேஷ் நினைவூட்டியதால் அதைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.. தேனா.. டபக்கென்று அந்தப் படத்தில் மனதைக் கொய்தபாடல் இந்தப் பாட்டைத் தேடியதில் சிக்கியது... காதல் ஆராரோ.. வெகு அழகான மெலடி..(வரிகள் யுக பாரதி) ஐ திங்க் படம் பார்த்ததற்கு அப்புறம் நேற்றுத் தான் மறுபடி பார்க்கிறேன்..கேட்கிறேன்.. வெகுவாகக் கவர்ந்தது குரலும் கூட....
ஆனால்..
இந்தத் தகவல் எனக்குப் புதிது..சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 பார்த்தேன் தான்..பட் கொஞ்சம் போரடிக்க விட்டுவிட்டு ஃபைனல் மட்டும் பார்த்த நினைவு.. இப்போது அதுகூடப் பார்ப்பதில்லை (சிங்கர் 5).
ஹரிப்ரியாவின் தந்தை சாய்சிவன் என்பது ஆச்சர்யம் ப்ளஸ் அவர் மறைவு சோகம்..அடுத்த சிங்கர் 4 லில் டெடிகேட் செய்து ஹரிப்ரியா பாடி ப்பேசியது ரொம்ப உருக்கமாக இருந்தது..
அவர் வேறு ஏதாவது பாடல்கள் பாடியிருக்கிறாரா தெரியவில்லை..தேடினால் கிடைக்கவில்லை..
மிக்க நன்றிங்க..
அன்பான மதுண்ணா, செந்தில்வேல் தங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி..உங்களுக்காக என் டில்லி டூரில் ஒரு பகுதி..!
*
இரண்டு வருடங்களுக்கு முன்னால் என நினைவு..
குர்கானில் என் ஒன்று விட்ட மகள் வீட்டிற்குச் சென்றால் அவள் கணவர், “சித்தப்பா டில்லிக்கு மெட்ரோல போய் சாந்த்னி செளக்ல இறங்கி ரெட் ஃபோர்ட் பாத்துட்டு வரலாம்..கொஞ்சம் நடக்கணும்..ஆனா திரும்பறச்சே சூப்பர் சமோசா, ஜிலேபி, லஸ்ஸி வாங்கித் தருவேன் சரியா” எனச் சொல்ல ”என்னய்யா.. நடக்கணுமா என ஒரு சின்ன முறை முறைத்து பின் சிரித்து “சரி” எனில் சலோ டெல்லி – ஒரு சுபயோக சுபதினமான ஞாயிற்றுக்கிழமை காலை..
சாந்த்னி செளக் ரயில்வேஸ்டேஷனை மக்களுடன் கடந்து தபக் தபக் என்று இருபுறமும் உள்ள கடைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே பட்டப் படக்கிற வெய்யிலில் கொஞ்சூண்டு ஒற்றைக் கோடாய் நெற்றியில் வியர்வை வழிய செங்கோட்டை சென்று பார்த்துவிட்டு வந்தோம்..(ஒருகைட் பச்சக் கென காடுகளில் தென்படும் அட்டை போல (ஆமாம் டெல்லி வெயிலுக்கு அட்டைலாம் உதிர்ந்து போய்டும்) ஒட்டிக்கொண்டு எங்களுக்குஎல்லா இடங்களைப் பற்றியும் ஆங்கில விளக்கம் வேறுஅளித்தான்..
கொஞ்சம் நிறுத்து நிறுத்து..ஏதோ சொன்னியேப்பா..
எதுங்க..
மும்தாஸ் மகல்..
அதோ அந்தக் கார்னர்ங்க..
எனில் முதன் முதல் மும்தாஜ் மஹல்…! அங்கே மும்தாஜ் உபயோகப்படுத்திய உடை பொருட்கள் எல்லாம் பார்த்தோம்..
பட் டோட்டல் ரெட் ஃபோர்ட்டே ஒரு பரந்து விரிந்த பரப்பு.. முழுக்கப் பார்த்து மறுபடி நடந்து வெளியேறக் குட்டியாய் வயிற்றுக்குள்ளிருந்து யாரோ தட்ட.
”இவரே”
“என்ன சித்தப்பா”
“த்ரீலெட்டர் வேர்ட் விச் வில் மேக் மி ஸ்மைல் “ சொல்ல
“அல்வா இங்க நல்லா இருக்காது”என்றார் அந்த ப் படுபாவி..பின் சிரித்து இதோ இன்னும் அரைக்கிலோ மீட்டர்..
நடந்து சாப்பிட்ட சூடான சமோசாவும், ஜிலேபியும் கூடவே ச்சாயும் மறக்கவே முடியாது..
அது சரி அதுக்கென்ன இப்பங்கறீங்களா.. ஹி ஹி..
அதோஅதோ ஒரு செங்கோட்டை…
இதோ இதோஒரு தேன்கோட்டை..
https://youtu.be/KsAl7ezgb_U
http://tamil.nativeplanet.com/delhi/...ions/red-fort/
வரிகள் புலமைப் பித்தன் (தகவல் உபயம் மிஸ்டர் கார்த்திக்கா எஸ்.வி சாரா இன் முதல் பாகம்)
கோபு சார்.. விஜய நிர்மலான்னு சொன்னதுக்கு தாங்க்ஸ்.. ஆனாக்க எனக்கு எப்பவும் வி. நி, புதுவெள்ளம் மன்ச்சு மறந்து மறந்து போய்டுது..ஏன்னே தெரியலை :)
ஆதிராம் .. திடீர்னு ஒரு கேள்வி கேட்டதைப் படிச்சதா நினைவு..வீட்டுக்கு வந்து ஆன்ஸர் பண்ணலாம்னு தேடினா அந்தப் பதிவையே காணோம்..என்னன்னு சொன்னீங்கன்னா நான் கொஞ்சம் தேடுவேன்...