deleted
Printable View
deleted
நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியமான தெய்வப் பிறவி, தற்போது மோசர் பேர் நிறுவனத்தால் மூன்று படத் தொகுப்பு டிவிடியில் வெளியிடப் பட்டுள்ளது. அதனுடன் அன்புக் கரங்கள் படமும் வெளியாகியுள்ளது. அன்பே ஆருயிரே, அன்புக்கரங்கள், தெய்வப் பிறவி மூன்றும் ஒரே டிவிடியில் இடம் பெற்றுள்ளன.
டிவிடி வரிசை எண் DTAFS674
ராகவேந்திரன்
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 55
கே: கவிஞர் கண்ணதாசன் இயற்றிய பாடல்களில் தங்களுக்கு பிடித்தமான பாடல் எது? (கே.ஆர்.பாலகுமார், காங்கேயம்)
ப: "நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்" என்ற பாடல். காதல் காட்சியில் இப்படி ஒரு அருமையான வேறு பாடலை நான் ரசித்தது கிடையாது. ஈருடல் ஓருயிர் என்ற தத்துவத்தை அப்பாடலில் அழகாக விவரித்திருக்கிறார் கவிஞர்.
(ஆதாரம் : பேசும் படம், ஆகஸ்ட் 1970)
இன்று 24.6.2010 கவியரசு கண்ணதாசன் அவர்களின் 84வது பிறந்த தினம்.
அன்புடன்,
பம்மலார்.
உள்ளதை சொல்வேன்
சொன்னதை செய்வேன்
வேறொன்றும் தெரியாது
என்று பாடி தமிழ் சினிமாவின் அப்பாவி கதாநாயகனுக்கு Template போட்டுக் கொடுத்த ரங்கன் தன் பொன் விழா வயதை நிறைவு செய்யும் நாள் ஜூன் 25. இனியும் நல்ல படங்கள் வரும். நல்ல கதாபாத்திரங்கள் வரும். இந்த படங்கள் மறந்து போகலாம். ஆனால் ரங்கன் என்றும் வாழ்வான் என்று விமர்சனம் எழுதப்பட்டதை உண்மையாக்கி காலத்தை வென்று நிற்கும் படிக்காத மேதை என்றும் நிற்பார். நீடித்த புகழோடு வாழ்வார்.
படிக்காத மேதை வெளியான நாள் - 25.06.1960.
சுவாமி வந்து படிக்காத மேதையின் சாதனைகளை பட்டியலிடுவார். அதற்கு முன் நான் எங்கள் மதுரையின் பெருமையை பறை சாற்றி விடுகிறேன்.
ஆசியாவின் மிக பெரிய திரையரங்கமான தங்கத்தில் 100 நாட்கள் ஓடிய நடிகர் திலகத்தின் இரண்டாவது படம் படிக்காத மேதை. ஓடிய நாட்கள் 116. தமிழ் சினிமா வரலாற்றிலே தங்கத்தில் மூன்று 100 நாட்கள் படங்கள் கொடுத்த ஒரே நடிகன் நடிகர் திலகம் மட்டுமே [மற்றவர்கள் எல்லோருக்கும் ஒரு படம் மட்டும்தான்].
அந்த மூன்று படங்களிலும் அதிக நாட்கள் ஓடிய படம் படிக்காத மேதை.[பராசக்தி- 112,கர்ணன்-108].
அன்புடன்
சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில், 21.6.2010 திங்கள் மாலை நடைபெற்ற விழாவில், திரையிடப்பட்ட சிங்கத்தமிழனின் திரைப்படக் காட்சிகளின் தொகுப்பை, ஏழு வகைத் தமிழாக வகைப்படுத்தியிருந்தார் இயக்குநர் பரத் என்று பார்த்தோம். அந்த எழு வகைத் தமிழில், மூன்றில் இடம் பெற்றிருந்த திரைப்படங்களையும், அதன் காட்சிகளையும் நேற்று பார்த்தோம். இன்று மேலும் இரு வகைத் தமிழில் இடம்பெற்ற திரைப்படங்களையும், காட்சிகளையும் பார்ப்போம்.
4. பேச்சுத் தமிழ்
அ) பாசமலர்(1961) [வசனம் : ஆரூர்தாஸ்]
திரையிடப்பட்ட காட்சி : முதலாளி ராஜசேகரனும், தொழிலாளி ஆனந்தனும் முதலாளியின் அறையில் வாக்குவாதம் செய்யும் சிகரக் காட்சி.
ஆ) தெய்வமகன்(1969) [வசனம் : ஆரூர்தாஸ்]
திரையிடப்பட்ட காட்சி : சங்கர், கண்ணன், விஜய் மூவரும் இணையும் Blank Cheque காட்சி.
இ) சவாலே சமாளி(1971) [வசனம் : மல்லியம் ராஜகோபால்]
திரையிடப்பட்ட காட்சி : ஏழை-பணக்கார வர்க்கம் குறித்து நடிகர் திலகம் கலைச்செல்வியிடம் ஸோலோவாக உரையாடும் காட்சி.
5. வழக்குத் தமிழ்
அ) மக்களை பெற்ற மகராசி(1957) [வசனம் : அருட்செல்வர் ஏ.பி. நாகராஜன்]
திரையிடப்பட்ட காட்சி: சாரங்கபாணி சகிதம், சிவாஜியும் பானுமதியும் வெட்கத்தோடு கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளும் காட்சி.
ஆ) பட்டிக்காடா பட்டணமா(1972) [வசனம் : பாலமுருகன்]
திரையிடப்பட்ட காட்சி : தமிழ்ப் பண்பாடு பற்றியும், தமிழர் நாகரிகம் குறித்தும் சிங்கத்தமிழன் முழங்கும் கிளைமாக்ஸ் காட்சி.
இ) வியட்நாம் வீடு(1970) [வசனம் : வியட்நாம் வீடு கே.சுந்தரம்]
திரையிடப்பட்ட காட்சி : தன் மகளை தன் மகனே இழிவாகப் பேசும் நிலையில், தந்தையார் பிரஸ்டீஜ் பத்மநாப ஐயர் மகனை அடித்து அவனிடம் ஆக்ரோஷமாக உரையாடும் காட்சி.
இதன் தொடர்ச்சிப் பதிவு நாளை இந்த வேளை பார்த்து ஓடி வரும்...
அன்புடன்,
பம்மலார்.
டியர் முரளி சார்,
"படிக்காத மேதை" பதிவுக்கு மிக்க நன்றி!
இக்காவியத்தின் சாதனைகளை அவசியம் பதிவிடுகிறேன்.
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 56
கே: நடிப்பரசன் சிவாஜியின் பாதிப்பு இல்லாமல் எந்த நடிகராலும் நடிக்க முடியாது என்கிறேன் சரிதானா? (த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்)
ப: நீங்கள் தமிழ்நாட்டிலோ, கேரளாவிலோ, உத்தரபிரதேசத்திலோ, வங்காளத்திலோ, இப்படி எந்த மாநிலத்தில் வசித்தாலும் இந்தியாவில் வாழ்வதாகத் தான் அர்த்தம். பாரதத்தின் விரிவான எல்லைக்கோட்டுக்குள் வாழ்கின்ற அனைத்துக் குடிமக்களும் இந்தியர்கள் என்ற அடையாளத்தைத் தொலைத்து விட முடியாது. அதுபோல் நடிகர் திலகம் தனது திறமையால் மிக விரிவான ஒரு எல்லைக்கோட்டை வரைந்துவிட்டு போயிருக்கிறார். அதை மீறுவது யாருக்கும் கடினம்.
(ஆதாரம் : சினிமா எக்ஸ்பிரஸ், 1-15 செப்டம்பர் 2005)
அன்புடன்,
பம்மலார்.
"எங்கிருந்தோ வந்தான்
இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே
என்ன தவம் செய்து விட்டேன்...
ரங்கன்...எங்கிருந்தோ வந்தான்..."
படிக்காத மேதை ரங்கனை மறக்க முடியுமா! ரங்கனை அரவணைத்த ரங்காராவை மறக்க முடியுமா!!
நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் காவியப் படைப்பாயிற்றே!!!
இன்று 25.6.2010 படிக்காத மேதை ரங்கனுக்கு பொன் விழா ஆண்டு நிறைவு.
51வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அவரை வணங்குகிறோம்!
Happy Birthday Mr.Rangan! Many More Happy Returns!
படிக்காத மேதையின் சாதனைப் பதிவு விரைவில் வருகிறது...
அன்புடன்,
பம்மலார்.
சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில், 21.6.2010 திங்கள் மாலை நடைபெற்ற விழாவில், திரையிடப்பட்ட சிங்கத்தமிழனின் திரைப்படக் காட்சிகளின் தொகுப்பை, ஏழு வகைத் தமிழாக வகைப்படுத்தியிருந்தார் இயக்குநர் பரத் என்று பார்த்தோம். அந்த எழு வகைத் தமிழில், ஐவகைகளில் இடம் பெற்றிருந்த திரைப்படங்களையும், அதன் காட்சிகளையும் இரு நாட்களாகப் பார்த்தோம். இன்று மீதமுள்ளவற்றில் இடம்பெற்ற திரைப்படங்களையும், காட்சிகளையும் பார்ப்போம்.
6. பாமரத் தமிழ்
அ) பலே பாண்டியா(1962) [வசனம் : மா.ரா.]
திரையிடப்பட்ட காட்சி : நடிகவேளும், ரௌடி மருதுவும் உரையாடும் காட்சி.
ஆ) படிக்காத மேதை(1960) [வசனம் : கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்]
திரையிடப்பட்ட காட்சி : ரங்காராவ் ரங்கனை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லும் காட்சி.
7. நாடகத் தமிழ்
அ) அன்னையின் ஆணை(1958) [வசனம் : முரசொலி மாறன்]
திரையிடப்பட்ட காட்சி: சாம்ராட் அசோகன் ஓரங்க நாடகம்.
ஆ) ராமன் எத்தனை ராமனடி(1970) [வசனம் (இந்நாடகத்திற்கு மட்டும்) : கவியரசு கண்ணதாசன்]
திரையிடப்பட்ட காட்சி : சத்ரபதி சிவாஜி ஓரங்க நாடகம்.
இதன் தொடர்ச்சிப் பதிவு நாளை இந்த வேளை பார்த்து ஓடி வரும்...
அன்புடன்,
பம்மலார்.
Russian Cultural Centre program coverage is very good. Welldone by Mr.Pammalar. Thanks
தமிழை ஏழு வகையாகப் பிரித்து படக்காட்சிகள் அமைத்திருப்பது மிகவும் அருமை. ஏழு அல்ல எழுபது வகையாகப் பிரித்தாலும் அதற்கு நடிகர்திலகத்தின் படக்காட்சிகளை விட்டால் வேறு வழியிலை.
:clap:Quote:
Originally Posted by Murali Srinivas
50 golden years have gone and rangan continues to cast his spell among the audience. Over the years the film has sort of achieved a cult status, like many other NT films and even if you watch the film today, it strikes a chord.
What an actor! What a team!! What a film!!!
:notworthy:
திருவரங்கன் அருளைப் பெற்ற அந்த ரங்கனைப் பற்றிய இந்த ரங்கன் சாரின் கருத்துக்களை முற்றிலும் ஆமோதிக்கிறேன். ரங்கன் என்ற பெயர் காலத்தால் அழிக்க முடியாது. படிக்காத மேதை திரைப்படம் தனியார் தொலைக்காட்சிகள் வருவதற்கு முன்னர், அதாவது 1990 ஆண்டுக்கு முந்தைய காலத்தில், சென்னைத் தொலைக் காட்சியில் ஒரு ஞாயிறு ஒளிபரப்பப் பட்டது. அன்று மாலை திரைப்படத்தைப் பார்க்காமல் நண்பர்களுடன் சென்னையில் பல தெருக்களில் வலம் வந்தோம். எந்த வீட்டில் காதைக் கொடுத்தாலும் ரங்கன் குரல் ஒலித்துக் கொண்டிருந்தது. அன்று இரவு பல புதிய இளைய தலைமுறையினர் அப்படத்தைப் பற்றிப் பேசிக் கொண்டதையும் பலர் தம்மை மறந்து கண்ணீர் விட்டதையும் காண நேர்ந்தது. அதன் பிறகு சில நாட்களில் அன்றைய பிரபல நட்சத்திரங்கள் பலர் பத்திரிகைகளில் இப்படத்தைப் பற்றிப் பேசியதும் நினைவுக்கு வருகிறது.
" உள்ளதைச் சொல்வேன், சொன்னதைச் செய்வேன், வேறொன்றும் தெரியாது"
இது நடிகர் திலகத்திற்கு வார்த்தைக்கு வார்த்தை பொருந்தும் வரிகள்.
ராகவேந்திரன்
தன்னுடைய படங்களைப் பற்றிய நடிகர் திலகத்தின் கருத்துக்கள் (தொடர்ச்சி)
'வெள்ளை ரோஜா' பிடித்திருக்கிறதா
"அந்த ரோஜாவை மக்கள் மார்பிலே எப்போதும் அணிந்து கொள்ளலாம்"
(தினத்தந்தி 05.08.2001 ஞாயிறு மலர்)
Quote:
AN INVITATION
------------ --------- --
9TH Nadigar Thilagam SIVAJI GANESAN MEMORIAL YEAR FUNCTION
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- ----
The President and the Members of the Management Council of Sivaji Ganesan Cultural Society, Malaysia (SGCSM) hereby cordially invites you and your family to the above event.
Date: 23 July, 2010
Venue: Tan Sri KR Soma Auditorium, Wisma Tun Sambanthan, KL
Time: 7.30pm
Tentative Program
------------ --------- -----
*7.30 pm - Welcome speech by Organizing Chairman
*A special talk about Sivaji Ganesan by Rajendran - President , Tamil Writers Association, Malaysia
*Music performance ( popular songs from movies of Sivaji Ganesan)
*Q& A about Sivaji Ganesan ( Attractive prizes to be won)
*Thaeru Kuthu by Veersingam and Group ( Sathiavan Savithiri) from film Navarathri
Close
Chief Guest of Honor: Dato' AK NATHAN
Special Guest: Magalir Thilagam Annai Ratnavalli Vijeyaraj
Light Refreshments and snacks shall be served to all patrons.
Admission: FREE
All those who have passion for Nadigar Thilagam Sivaji Ganesan please attend along with your family members and friends and relatives.
Yours Sincerely,
Eashvara Lingam ( for and on behalf of SGCSM )
for info: call 016-6880455
நீண்ட நாட்களாய் இந்தப்பக்கம் வர இயலாச் சூழல். நலமா நண்பர்களே..
பல பக்கங்கள் வளர்ந்துவிட்ட திரியை வாசிக்கத் தொடங்கிவிட்டேன்.
ஏழுவகை தமிழுக்கும் இலக்கணமாய் எடுத்துக்காட்டாய் விளங்கும் நம் எட்டாவது அதிசயம் பற்றிப் பகிர்ந்த அன்பின் பம்மலாருக்கு நன்றி.
கோவை மாநாட்டில் ஒரு ஜெர்மன் அறிஞர் சொன்னது நினைவுக்கு வந்தது - அவர் நம் அண்ணலின் தமிழ்ப் பேச்சைக் கேட்டுக் கேட்டு தமிழ்க்காதல் வளர்த்தவர்.
வருக காவேரி கண்ணன் அவர்களே! மீண்டும் நமது நடிகர் திலகத்தைப் பற்றி உங்கள் அழகு தமிழில் உரையாட வாருங்கள்.
சுவாமி,
படிக்காத மேதையின் சாதனை பதிவிற்காக காத்திருக்கிறோம்.
அன்புடன்
நடிகர்திலகம் அவர்கள் திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலான்டேஸ்வரி திருக்கோவிலுக்கு கானிக்கையாக கொடுத்த சாந்தி என்ற யானை நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் படித்தேன்.அந்த யானை பூரன நலமடைய இறைவனை பிரார்திக்கிறேன்.
இளைய திலகம் பிரபு அவர்கள் கும்பகோனம் சென்றதாகவும் அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்ப்பு அளிக்கப்பட்டதாகவும்,அங்கு ரசிகர்களின் மத்தியில் பேசிய பிரபு அவர்கள் கும்பகோனத்தில் நடிகர்திலகத்தின் சிலையை வைக்க அரசுக்கு கோரிக்கை விடுத்ததாகவும் படித்தேன்.இதை பற்றிய முழு விவரத்தை அளிக்குமாறு நமது ஹப்பர்களை கேட்டுகொள்கிறேன்
வெகு நாட்களுக்குப் பிறகு நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு பாடல் காட்சி பார்க்க நேர்ந்தது. அந்த முகம், அந்த கண்கள், சொல்லவும் முடியாமல், மறைக்கவும் முடியாமல் மனம் தவிப்பதை அந்த நடையின் மூலமாகவும் உடல் மொழியின் மூலமாகவும் எவ்வளவு அழகாக வெளிப்படுத்துகிறார். அந்த பாத்திரதிற்கேற்ற உடல்வாகு!
கண்ணதாசனும் விஸ்வநாதனும் சேர்ந்து கைகொடுப்பது காட்சிக்கு கூடுதல் பலம்.
ஒரு நீதி கூண்டில் நின்றது
ஒரு நீதி சாட்சி சொன்னது
ஒரு நீதி தெய்வமானது
இதில் தர்மம் எங்கே போனது
இதை தவிர போனஸ்-ஆக தேவனே என்னை பாருங்கள், ஆறு மனமே ஆறு, சட்டி சுட்டதடா போன்றவையும். நன்றி இசை அருவி.
அன்புடன்
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 57
கே: நடிப்புக் கல்லூரி ஒன்றினை நிறுவி அதற்கு சிவாஜியை முதல்வராகப் போட்டால் எப்படியிருக்கும்? (வி.தர்மராஜன், செங்கோட்டை)
ப: அவரே ஒரு நடிப்புக் கல்லூரி ஆயிற்றே!
(ஆதாரம் : குங்குமம், 23.12.1979)
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 58
கே: சிவாஜியைப் பற்றி கேட்ட கேள்விக்கு 'அவரே ஒரு நடிப்புக் கல்லூரி ஆயிற்றே' என்று கூறியிருக்கிறீர்கள். சிவாஜி, கருணாநிதிக்கு எதிர் அணியில் இருந்தாலும் இதைக் கூறியிருப்பீர்களா? (த.சுப்பிரமணியம், சென்னை - 18)
ப: எந்த அணியில் இருந்தாலும் அவர் உலகத்தின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவர் என்கிற உண்மையை யாரும் மறுக்க முடியாது.
(ஆதாரம் : குங்குமம், 6.1.1980)
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 59
கே: நான் சிவாஜிக்கு சிகரெட் அனுப்பலாமென்றிருக்கிறேன். அவர் என்ன சிகரெட் பிடிப்பார்? (பி.எஸ்.ராமசாமி, பனங்காட்டூர்)
ப: ஸ்டேட் எக்ஸ்பிரஸ் 555!
(ஆதாரம் : பேசும் படம், நவம்பர் 1958)
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 60
கே: சிவாஜி கணேசன் இளைத்ததன் காரணம் என்ன? (வாழவல்லான் ஜெயா, திருச்சி - 1)
ப: ஆசையை, உணவை கட்டுப்படுத்தியதாக அவரே கூறினார்.
(ஆதாரம் : பேசும் படம், ஏப்ரல் 1970)
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 61
கே: சிவாஜியால் தொடர்ந்து ஐம்பது ஆண்டுகள் எப்படி நிலைத்து நிற்க முடிந்தது? (மு.இருதயராஜ், வார்தா)
ப: திறமை, தொழிற்சிரத்தை; புதிது புதிதாய் அலைவீசும் கலையுலகில் காலத்திற்கு ஏற்ப தன்னை வளைத்துக் கொண்டு புதியவர்களுடனும் இணைந்து பணிபுரிகிறார். வளர்ந்தவர்களிடத்தில் வளையும் குணம் இருப்பது அபூர்வம்.
(ஆதாரம் : கல்கண்டு, 16.10.1986)
அன்புடன்,
பம்மலார்.
வெள்ளித்திரை சக்கரவர்த்தியின் வெள்ளிவிழாக் காவியங்கள் (திரையரங்கு வாரியாக)
[ஊர் - திரையரங்கம் : திரைக்காவியம் - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்]
1. சென்னை - சாந்தி : பாவமன்னிப்பு - 177 நாட்கள், திருவிளையாடல் - 179 நாட்கள், வசந்த மாளிகை - 176 நாட்கள், தங்கப்பதக்கம் - 181 நாட்கள், திரிசூலம் - 175 நாட்கள், முதல் மரியாதை - 177 நாட்கள்
2. சென்னை - சித்ரா : பாசமலர் - 176 நாட்கள்
3. சென்னை - கிரௌன் : திருவிளையாடல் - 179 நாட்கள், தங்கப்பதக்கம் - 176 நாட்கள், திரிசூலம் - 175 நாட்கள்
4. சென்னை - புவனேஸ்வரி : திருவிளையாடல் - 179 நாட்கள், தங்கப்பதக்கம் - 176 நாட்கள், திரிசூலம் - 175 நாட்கள்
5. சென்னை - பால அபிராமி : படிக்காதவன் - 175 நாட்கள்
6. சென்னை - அன்னை அபிராமி : தேவர் மகன் - 175 நாட்கள்
7. சென்னை - ஆல்பர்ட் & பேபி ஆல்பர்ட் : படையப்பா - 210 நாட்கள்
8. சென்னை - அபிராமி & சக்தி அபிராமி : படையப்பா - 210 நாட்கள்
9. சென்னை - உதயம் & சந்திரன் : படையப்பா - 181 நாட்கள்
10. சென்னை - பிருந்தா : படையப்பா - 175 நாட்கள்
11. மதுரை - நியூசினிமா : வீரபாண்டிய கட்டபொம்மன் - 181 நாட்கள், வசந்த மாளிகை - 200 நாட்கள்
12. மதுரை - சிந்தாமணி : பாகப்பிரிவினை - 216 நாட்கள், தியாகம் - 175 நாட்கள், திரிசூலம் - 200 நாட்கள்
13. மதுரை - சென்ட்ரல் : பட்டிக்காடா பட்டணமா - 182 நாட்கள், படிக்காதவன் - 175 நாட்கள்
14. மதுரை - சினிப்ரியா & மினிப்ரியா : தீர்ப்பு - 177 நாட்கள், நீதிபதி - 175 நாட்கள்
15. மதுரை - சுகப்ரியா : சந்திப்பு - 175 நாட்கள்
16. மதுரை - ஸ்ரீமீனாக்ஷி & ஸ்ரீமீனாக்ஷிபாரடைஸ் : தேவர் மகன் - 180 நாட்கள்
17. மதுரை - அமிர்தம் : படையப்பா - 175 நாட்கள்
18. திருச்சி - வெலிங்டன் : பராசக்தி - 245 நாட்கள்
19. திருச்சி - பிரபாத் : தங்கப்பதக்கம் - 181 நாட்கள், திரிசூலம் - 175 நாட்கள்
20. கோவை - கீதாலயா : திரிசூலம் - 175 நாட்கள்
21. கோவை - தர்ச்சனா & அர்ச்சனா : முதல் மரியாதை - 177 நாட்கள்
22. கோவை - ராகம் & அனுபல்லவி : படையப்பா - 210 நாட்கள்
23. சேலம் - ஓரியண்டல் : திரிசூலம் - 175 நாட்கள்
24. வேலூர் - அப்ஸரா : திரிசூலம் - 175 நாட்கள்
25. தஞ்சை - கமலா : முதல் மரியாதை - 177 நாட்கள்
26. பெங்களூர் - ஸ்டேட்ஸ் : ஸ்கூல் மாஸ்டர்(கன்னடம்) - 188 நாட்கள்
27. கல்கத்தா - இம்பீரியல் : தர்த்தி(ஹிந்தி) - 266 நாட்கள்
28. பம்பாய் - மினர்வா : தர்த்தி(ஹிந்தி) - 259 நாட்கள்
29. பம்பாய் - ஆனந்த் : தர்த்தி(ஹிந்தி) - 231 நாட்கள்
30. பம்பாய் - அசோக் : தர்த்தி(ஹிந்தி) - 203 நாட்கள்
31. டெல்லி - நட்ராஜ் : தர்த்தி(ஹிந்தி) - 217 நாட்கள்
32. டெல்லி - அம்பா : தர்த்தி(ஹிந்தி) - 210 நாட்கள்
33. டெல்லி - மோட்டி : தர்த்தி(ஹிந்தி) - 203 நாட்கள்
34. டெல்லி - லிபர்ட்டி : தர்த்தி(ஹிந்தி) - 203 நாட்கள்
35. கொழும்பு - மைலன் : பராசக்தி - 294 நாட்கள்
36. கொழும்பு - கெப்பிடல் : வசந்த மாளிகை - 287 நாட்கள், பைலட் பிரேம்நாத் - 189 நாட்கள்
37. கொழும்பு - பிளாசா : வசந்த மாளிகை - 175 நாட்கள்
38. கொழும்பு - சென்ட்ரல் : உத்தமன் - 203 நாட்கள்
39. கொழும்பு - ராஜேஸ்வரா : பைலட் பிரேம்நாத் - 176 நாட்கள்
40. கொழும்பு - ஜெஸிமா : திரிசூலம் - 200 நாட்கள்
41. யாழ்ப்பாணம் - வெலிங்டன் : வசந்த மாளிகை - 217 நாட்கள்
42. யாழ்ப்பாணம் - ராணி : உத்தமன் - 179 நாட்கள், திரிசூலம் - 189 நாட்கள்
43. யாழ்ப்பாணம் - வின்ஸர் : பைலட் பிரேம்நாத் - 222 நாட்கள்
44. வெள்ளவெத்தை - சவோய் : பைலட் பிரேம்நாத் - 189 நாட்கள்
சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே!
அன்புடன்,
பம்மலார்.
அன்பு முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களே
கரையினில் நெருப்பு பாடல் காட்சியில் கவிதையான முகபாவங்கள் காட்டும் நடிப்பரசர் பற்றிய இனிய பகிர்வு அருமை.
அன்பு பம்மலார் அவர்களே
அறுசுவை 60 வினா-விடைகள் ..
பார்த்துப் பரிமாறும் சேவை வளரட்டும்.
நன்றிகள்.
அன்பு பம்மலார் அவர்களே
சாதனைகளை மறைத்துப் பேசி ஏசிவந்த கூட்டம் இருந்த காலம் இருந்தது அன்று.
உங்களைப் போன்றவர்களின் தொண்டால் அந்தப் பொய்க்கோட்டைகள் பொடியாகின்றன இன்று!
பாராட்டிற்கு நன்றி காவேரி கண்ணன் அவர்களே.
சுவாமி,
வெள்ளி விழா கண்டவை 34 அரங்குகள் என்று நினைத்திருந்தோம். 34 அல்ல மொத்தம் 44 அரங்குகள் நடிகர் திலகத்தின் வெள்ளி விழாவை கொண்டாடியிருக்கின்றன என்ற தித்திக்கும் செய்தியை புள்ளி விவரப் பட்டியலோடு தந்தமைக்கு நன்றி.
அன்புடன்
திரு. காவேரிக் கண்ணன்,
பொங்கி வரும் காவிரி போல், துள்ளி வரும் தங்களின் தங்கத்தமிழ் நடை உள்ளத்தை அள்ளுகிறது. பாராட்டுக்களுக்கு பணிவான நன்றிகள்!
டியர் முரளி சார்,
தங்களின் இதயபூர்வமான பாராட்டுக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 62
கே: நடிகர் திலகம் சிவாஜிக்கு 'பாரத்' பட்டம் கிடைக்கவில்லையே, காரணமென்ன? (ச.பழனிசாமி, மயிலை)
ப: பாரதத்திலேயே சிறந்த நடிகர் என்ற பட்டம் ஏற்கனவே அவருக்குக் கிடைத்துள்ளது.
(ஆதாரம் : சினிமா எக்ஸ்பிரஸ், 15.3.1983)
அன்புடன்,
பம்மலார்.
26.6.2010 மாலை முரசு நாளிதழின் திருச்சி-தஞ்சை பதிப்பில் வெளிவந்துள்ள செய்தி:
http://pammalar.webs.com/apps/photos...otoid=89974635
இதனை எமக்கு மின்னஞ்சல் செய்த நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவையின் தலைவர் திரு.கே.சந்திரசேகரன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
இதயக்கனி சினிமா ஸ்பெஷல் மாத இதழின் ஜூலை மாத பதிப்பு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. அனைவரும் தவறாமல் வாங்கிப் படிக்கவும்.
ராகவேந்திரன்
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 63
கே: நவயுக கலைக்கூடம், நவரச மணிமாடம் நடிகர் திலகம் சிவாஜியின் சிறந்த குணங்களில் நீங்கள் விரும்புவது எது? (சி.வி.சாணக்கியா, ஸ்ரீரங்கம்)
ப: கலைஞர் என்ற முறையில் அவரது குறையைச் சுட்டிக்காட்டுவோரை விரோதிகளாக மதிப்பதில்லை அவர். வளர்ந்து வருபவர்கள் தங்களைக் குறையற்றவர்களாக நினைத்து விடுகிறார்களே!
(ஆதாரம் : பேசும் படம், செப்டம்பர் 1970)
அன்புடன்,
பம்மலார்.
மாணிக்கமாக இருந்தாலும் நவரத்தினங்களின் மகிமையை ஒருங்கே பெற்ற மாணிக்கத்திற்கு நாளை (3.7.2010) 40வது ஜெயந்தி தினம்.
ஆம்! "சவாலே சமாளி"க்கு 39 ஆண்டுகள் நிறைவு.
வெறும் வேட்டி-சட்டை காஸ்ட்யூமிலே கலக்கிய கலைக்குரிசிலுக்கு இப்படம்,
150வது திரைப்படம்; 100 நாள் பெருவெற்றிப்படம்.
நடிகர் திலகம் துணிச்சல் திலகம்!
அன்புடன்,
பம்மலார்.
Last week re-visited “ Enga oor raja “ climax. Another classic example for how an actor can manipulate and do wonders with his voice, switching over to various emotions within split seconds, perfect body language and overall stark P E R F O R M A N C E. Nadigar Thilagam’s “ Ruthrathandavam” begins with “Yarai nambi naan porandhen.” and pervades till the end, which keeps you hooked to the screen. He triumphantly holds the fort in those scenes.
The moment he enters his old, dilapidated palace after decades, he gets so excited and talks to himself in a fit of delirium while loads of emotions just flash across his face every second.. He fondly touches the dirty walls, pillars and furnitures and slips into past memories. When he comes near the staircase, he remembers how he used to play with his little sons and, in the most stunning manner he just bends down imitating an elephant, like how you do while playing with kids, and shouts vehemently, “ aana aana – ambari aana – aana aana…..”. My God!! One ROCKING PERFORMANCE that makes me end up with getting goose bumps after watching it.
பாணையிலே சோறிருந்தா
பூணைகளும் சொந்தமடா
வேதனையை பங்கு வெச்சா
சொந்தமில்லே பந்தமில்லே
:clap:
மோகன்,
எங்க ஊர் ராஜா பற்றி பிரமாதமாக எழுதியிருக்கிறீர்கள். அதிலும் அந்த ரகுபதி பவனம் காட்சி, நீங்கள் சொன்னது போல் அற்புதமாக அமைந்திருக்கும்.
சில நாட்களுக்கு முன்பு நண்பர் சுவாமி அவர்களிடம் இந்தப் படத்தை இப்போது வெளியிட்டால் நன்றாக போகும் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். உங்கள் பதிவை படித்த பின் அந்த நம்பிக்கை வலுப்பெறுகிறது.
சுவாமி,
சவாலே சமாளி திரைப்படத்தைப் பற்றி சரியான கணிப்பு. கிளாஸ் மற்றும் மாஸ் ஆடியன்சிற்கு ஒரு போல் பிடித்த, அவர்கள் மிகவும் ரசித்த நடிகர் திலகத்தின் பல படங்களில் இதுவும் ஒன்று. இது வெளியான நாள் தான் குலமா குணமாவின் 100-வது நாள்.
அன்புடன்
Thanks Murali sir, and yes, EOR will be a treat for the fans if it is released now.
சமீபத்தில் கிடைத்த தகவலின்படி, 16.07.2010 அன்று தலைநகரில் புதிய பறவை திரையிடப் படலாம். அரங்கு விவரம் தெரியவில்லை. மதுரை சென்ட்ரலில் 16.07.2010 அன்று சிவகாமியின் செல்வன் மற்றும் அதே நாளில் மீனாட்சியில் தங்க சுரங்கம் இரு திரைக் காவியங்களும் திரையிடப் படலாம்.
ராகவேந்திரன்
Read 2nd para.
http://www.deccanherald.com/content/...star-back.html
NT மறைந்து பல ஆண்டுகள் ஆகி விட்டன. மேலும் அவர் ஒரு இந்தி படத்தில் தோன்றி (தர்த்தி) 40 ஆண்டுகள் ஆகி விட்டன. இத்தனை காலம் கழிந்தும் திரு. ஷம்மி கபூர் NT நடிப்பை நினைவு கூர்ந்து புகழ்கிறார்.Quote:
Originally Posted by abkhlabhi
இதைப் படிக்கும் போது தமிழகத்தின் "அறிவு"ஜீவி எழுத்தாளர்களில் ஒருவர் ( அதுவும் உலக சினிமாவை கரைத்துக் குடித்ததாக தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளும் ஒருவர்) - "சிவாஜி கணேசனை நடிகர் திலகம் என்றார்கள். அவரைப் போன்ற நடிகர் உலகத்திலேயே இல்லை என்றார்கள். சொன்னதெல்லாம் தமிழர்கள். ஆனால் இந்தி சினிமாவில் அவர் பெயரே தெரியாது. " என்று blogல் பிதற்றியது நினைவுக்கு வருகிறது. இந்த லின்கை அவருக்கு மின்னஞ்சல் செய்கிறேன்.