வருஷம் தோறும் வசந்தம் தேடி வருவோம் இங்கே...
வாடைக் காற்றில் மூடும் பனியில் மகிழ்வோம் இங்கே..
இந்த வரிகள் இரண்டாம் முறை ஒலிக்கும் போது
தலைவரின் முகத்தைப் பாருங்கள்....
எவ்வளவு அர்த்தங்கள் ... வருஷம் தோறும் என அவள் அடுத்த முறையையும் எதிர்பார்த்து பாடுவதாக ஒரு பொருள் கொண்டு வருந்துகிறார், அவள் அடுத்த வருடம் இருக்க மாட்டாளே என்று..
அவளோ அடுத்த வருடமும் வருவோம் என்கிற நம்பிக்கையில் பாடுகிறாள்.
வார்த்தைச் சித்தர் கண்ணதாசன் இரு பொருள் பொதியும் படி எழுத்தில் ஜாலம் காட்டி அந்த சூழலை அப்படியே வார்த்தையில் வடிக்க, மெல்லிசை மன்னரின் இசையில் அந்த வரிகளுக்கு சுசீலா இரு பொருளும் புலப்படும் படி உச்சரித்துப் பாட ...
தேவிகாவின் முகத்தில் நம்பிக்கையும், தலைவரின் முகத்தில் ஏமாற்றத்தை சந்திக்கப் போகிறோமே என்கிற வருத்தம், அவளுடைய உடல் நலத்தைப் பற்றிய சோகம் அனைத்தும் சேர்ந்து தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத பாடல் காட்சியாக அளித்து விட்டார்கள்.
தேவிகா என்ற உடனே நினைவுக்கு வரும் இப்பாடலைப் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியவில்லை, பார்க்காமலும் இருக்க முடியாது
http://youtu.be/ygjqxrk-Hsc