-
http://i68.tinypic.com/152garl.jpg
புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வேகமாக நலம் அடைந்து வருகிறார்கள், பேசுகிறார்கள் என்று பத்திரிகைகளில் செய்திகள் வெளிவருகின்றன. சந்தோசமாக உள்ளது. புரட்சித் தலைவி தனது ஆட்சியில் எவ்வளவோ நலத் திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.
69 சதவீத இடஒதுக்கீடு
ஏழைகளுக்கு இலவச அரிசி
ஏழைப்பெண்களுக்கு தாலிக்கு ஒரு பவுன் தங்கம், கிரைண்டர், மிக்சி, பேன், இலவச பஸ் பாஸ்
சந்தனக் கட்டை வீரப்பனை சுட்டுக் கொன்றது, காவிரிப் பிரச்சினையில் தமிழகத்துக்கு சட்ட ரீதியாக வெற்றி பெற்று கொடுத்தது. கொஞ்சமாவது காவிரியில் கர்நாடகா தண்ணீர் விடுவதற்கு புரட்சித் தலைவி அம்மா நடத்திய சட்டப் போராட்டமே காரணம். புரட்சித் தலைவரால் தீய சக்தி என்று அடையாளம் காட்டப்பட்ட திமுகவை தோற்கடித்து ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்தார்.
திரைப்படத் துறைக்கும் எவ்வளவோ நன்மைகள் செய்திருக்கிறார். தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு, நலிந்த கலைஞர்களுக்கு நிதி உதவி கொடுத்திருக்கிறார். சமீபத்தில் இசையமைப்பாளர் கோவர்த்தனம் என்பவருக்கு நிதி உதவி அளித்தார்.
சில நடிகர்களுக்கு அவர்கள் வெறும் நடிகர்கள் தானே என்று பார்க்காமல் அவர்களுக்குக் கொஞ்சம் கூட தகுதி இல்லாவிட்டாலும் கூட, அவர்களது தகுதிக்கும் மீறி மரியாதையும் சிறப்பும் செய்திருக்கிறார். விழா எல்லாம் எடுத்து தெருவுக்கு எல்லாம் பெயர் வைத்தார். சம்பந்தப்பட நடிகர் செத்துப் போனபோது அரசு மரியாதை வேறு. லட்சம் லட்சமாக பணம் வாங்கிக் கொண்டு நடித்ததை தவிர சமூகத்துக்கு அவர்களால் எந்த நன்மையும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு மரியாதை செய்தது புரட்சித் தலைவர் வழி வந்த புரட்சித் தலைவியின் பெருந்தன்மை. போன வருடம் மணிமண்டபம் அறிவிப்பும் செய்தார். சம்பந்தப்பட்ட நடிகர் பெயரில் திரைப்பட விருது அறிவித்தார். ஆனால், நன்றி கெட்டவர்கள் சில நடிகர்களின் ரசிகர்கள் வயித்தெரிச்சலால் புரட்சித் தலைவரை குறைகூறுவதோடு, நன்றியை மறந்து புரட்சித் தலைவியையும் குறை சொல்கிறார்கள். அந்தக் கூட்டத்தின் புத்தி அப்படி. எவ்வளவு செய்தாலும் திருப்தி இல்லாத பொறாமை பிடிச்ச வாழ்ந்து கெட்ட விளங்காத தரித்திர கூட்டம்.
புரட்சித் தலைவியின் வாழ்க்கையே போராட்டம் நிறைந்தது. எவ்வளவோ ஏச்சுக்களை தாங்கித்தான் வெற்றி பெற்றிருக்கிறார்.
உடல் நல பாதிப்பு சோதனையில் இருந்தும் மீண்டு வருவார். வந்து சமூகத்துக்கு தொண்டாற்றி நல்லாட்சி தருவார்.
புரட்சித் தலைவர் ஆசியோடு புரட்சித் தலைவி விரைவில் பூர்ண நலம் பெற்று மீண்டு வர பிரார்த்தனை செய்வோம்.
http://i68.tinypic.com/2me6o7.jpg
-
-
உழைக்கும் கரங்கள்’ படத்தில் எம்.ஜி.ஆர். நடித்துக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆருக்கு தினமும் வகைவகையான அசைவ சாப்பாடு ஏற்பாடுசெய்யப்பட்டது.படத்தில் பணியாற்றியதொழிலாளர்களுக்கு சுமாரான சாப்பாடு தான். அவர்களுக்கு சாப்பாட்டில் முட்டை மட்டுமே வழங்கப்பட்டது. பொறுத்துப்பார்த்த பார்த்த தொழிலாளர்கள் ஒருநாள் படப்பிடிப்புஇடைவேளையில் ஓய்வாக அமர்ந்திருந்த எம்.ஜி.ஆரிடமே தயங்கித்தயங்கி தங்கள் குறையை தெரிவித்தனர்.விஷயத்தை அறிந்து கொண்ட எம்.ஜி.ஆரின்சிவந்த முகம், கோபத்தில் மேலும் குங்குமநிறமானது. ‘‘நீங்கள் போய் வேலையை பாருங்கள்.நான் பார்த்துக் கொள்கிறேன்’’ என்று கூறி தொழிலார்களை அனுப்பி விட்டார்.
மறுநாள் மதிய உணவு இடைவேளையின் போது தொழிலாளர்கள் வரிசையில் எம்.ஜி.ஆர். சாப்பிடஅமர்ந்து விட்டார். சாப்பாடு பரிமாறுபவர்கள்கதிகலங்கிப் போய் விட்டார்கள். ‘‘அண்ணே,உங்களுக்கு சாப்பாடு உள்ளே இருக்கு..’’ என்றுமென்று முழுங்கி தெரிவித்தனர்.
‘‘பரவாயில்லை, இருக்கட்டும். எங்கே உட் கார்ந்துசாப்பிட்டால் என்ன? எல்லாம் ஒன்றுதானே?பசிக்கிறது. சீக்கிரம் சாப்பாடு கொண்டு வாங்க’’என்று எம்.ஜி.ஆர். பதிலளித்தார்.
வேறு வழியில்லாமல் அவருக்கும் அங்கேயேசாப்பாடு பரிமாறப்பட்டது. முட்டையைத் தவிரவேறு அசைவ வகைகள் எதுவும் வரவில்லை. ‘‘ஏன்அசைவ உணவுகள் வரவில்லை. எடுத்து வந்துபரிமாறுங்க" என்றார் எம்.ஜி.ஆர்.
‘‘உங்கள் அறைக்கு போய் எடுத்துப் போய் எடுத்து வருகிறோம்". பரிமாறியவர்களின பவ்யமான பதில்.
‘‘ஏன்? தொழிலார்களுக்கு உள்ளது என்னஆச்சு?’’... எம்.ஜி.ஆரின் கேள்வியில் கூர்மைஏறியது.
‘‘இவங்களுக்கு வெறும் முட்டை மட்டும் தான் போட சொல்லியிருக்காங்க’’... இந்த பதிலுக் காககாத்திருந்த எம்.ஜி.ஆர். கோபத்தின் உச்சிக்கேசென்றார்.
‘‘தயாரிப்பு நிர்வாகி எங்கே? ஏன் இப்படிசாப்பாட்டிலே பாகுபாடு செய்யறீங்க? தொழிலாளர்கள ்தான்அதிகம் உழைக்கிறார்கள ்அவங்கதான் நல்லாசாப்பிடணும்அவங்களுக்கு வெறும்முட்டை; எனக்கு மட்டும் காடை, கவுதாரியாஅவங்களுக்கும் தினமும்அசைவ சாப்பாடு கொடுங்க. கம்பெனியால முடியலைன்னாஅதுக்கான செலவை என் கணக்கிலே வச்சுக்குங்க.சம்பளத்திலே கழிச்சுக்கிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். பொரிந்து தள்ளிவிட்டார்...
மறுநாள் முதல் தொழிலாளர்கள் அனைவருக் கும்எம்.ஜி.ஆர். சாப்பிடும் அதே வகை வகையானஅசைவ சாப்பாடுகள் தான்.
-
-
தீபாவளியை முன்னிட்டு
கோவையில்
ராயல் - ஆயிரத்தில் ஒருவன்
டிலைட் - இதய வீணை
-
-
-
-
-