-
கலை வேந்தன் .. வாங்க.. வழக்கம் போல அரசியல் +பஞ்ச் ஆக ஒரு நகைச்சுவை.. நைஸ் இன்னும் எழுதுங்கள்..
//துள்ளி விளையாடுகிறீர்கள். பாராட்டுக்கள். // விராட் கோஹ்லி மாதிரியா ... நன்றி கப் எங்கேங்க :)
இனி உங்கள் சொட்டு சொட்டுனு சொட்டுது பாரு இங்கே பாடல் காணொளி..
https://www.youtube.com/watch?v=7unLk8rkpuk
இன்னும் எழுதுங்கள்..
-
கலைவேந்தன்,
ஆடவந்த தெய்வம் படத்து பாடல் அருமை. பாட்டை கேட்டிருக்கிறேன். பார்த்ததில்லை. உங்கள் மற்றும் சி.க. புண்ணியத்தில் இன்று நிறைவேறியது.
கவியரசரின் இரண்டு வரி ராமாயணம் அற்புதம். அடிக்கடி வாருங்கள். உங்களிடம் கற்க வேண்டியது நிறைய உள்ளது.
-
யாருமே இல்லை..என்ன ஆகும் முதலில் சிலபல சிந்தனை கள் தோன்றும்
பாட்டு எழுதிப் பார்க்கலாமென மனம் நினைக்கும்
எதைப்பற்றி எழுதலாம் என்று நெஞ்சம்
..ஏதேதோ கற்பனையை நெய்து பார்க்கும்
கதையாக விருத்தத்தில் வடிக்க லாமா
..காவியத்தை அப்படியே எழுதலாமா
வதைபட்டே வரலாற்றில் வீழ்ந்த வீரர்
..வாழ்ந்தகால்ம் பற்றியிங்கு எழுதிடலாமா
உதைகிடைக்கும் என்றாலும் தைரிய மாக
..ஊர்க்கதையை அரசியலைப் பாடலாமா
இப்படியெல்லாம் நெனச்சுப் பார்க்கும் மனதுக்கு எதுவுமே அகப்படாம ப் போயிடுது..
ஸோ என்ன ஆகும் இயற்கையாக போரடிக்கும்..ஹை..இயற்கை வந்துடுச்சே..இத வச்சு ஓட்டிடலாமே (கண்ணா பெரிய ஆள் டா நீ)
இயற்கையைப் பற்றி எக்கச் சக்க பாடல்கள் போட்டுக் கொண்டே போகலாம்..இப்போ டைம் இலலை..எனில்
முதல் பாடலில் இயற்கையும் இருக்கிறது.. அதுவே கொஞ்சம் பிரிதல் உணர்ச்சி கொண்ட பாடலாகவும் டூ இன் ஒன் ஆக இருக்கிறது..
மலரும் வான் நிலவும் சிந்தும்
அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழிசையும்
கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே
கனவில் தோன்றி சிரித்து நான்
காணும் இடமெங்கும் இருக்கின்றாய்
கனியில் ரசமாய் இனித்து இனித்து என்
கையில் கிடைக்காமல் மறைகின்றாய்
மகா கவி காளிதாஸ் ந.தி கண்ண தாசன்.. வெகு அழகிய பாடல்..
https://www.youtube.com/watch?v=FHk-SqY8gbk
-
அப்புறம் இந்தப் பொண்ணு என்ன பண்றது..காலங்கார்த்தால வெள்ளென எழுந்திடுச்சு.. சமத்தா குளிச்சுடுத்து..
அப்புறம் தப்பக்குன்னு வெட்ட வெளில்ல தாவிக் குதிச்சுப் பாடிக்கிட்டிருக்கு..ஆர்மபத்திலருந்து கேட்டா ஒண்ணும் புரியாத மாதிரி
பாவம் தாயில்லாப் பொண்ணு போல அம்மாவ நினச்சுப் பாடுதுன்னு நினைக்கத் தோணும்..ஆனால் அப்படி இல்லை..
பாடறது இயற்கை அன்னையைப் பற்றி..
https://www.youtube.com/watch?v=22TU__YgGic
படம் இருளும் ஒளியும் பி.சுசீலா அண்ட் வாணிஸ்ரீ..
கொஞ்சம் அப்புறம் வாரேன்..
-
நிலவுப் பாடல் 13: வெள்ளி நிலவே, வெள்ளி நிலவே
-----------------------------------------------------------------------------
இளையராஜா இசையில் SPB மற்றும் உமா ரமணன் பாடிய நல்ல ஹிட் பாடல். கேட்கவும் சுகமான பாடல். பாட்டை இயக்குனர் R.V. உதயகுமார் அவர்களே எழுதி இருக்கிறார். கவலையிலிருக்கும் கன்னியை துயரம் தீர்க்க களிப்பில் ஆழ்த்த கார்த்திக் தோழர்களுடன் தோள் சேர்த்து ஆடும் பாடல்தான் இது.*
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண் சோகம் ஏனடி மானே ஏனடி
முல்லை மலரே முல்லை மலரே உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி
மின்னும் சிலையே அன்னை போல் வரவா நானும் சோருட்ட
உண்ணாதிருந்தால் இங்கே யார் வருவார் உன்னை சீராட்ட
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண் சோகம் ஏனடி மானே ஏனடி
விண்ணில் ஓடி தன்னால் வாடும் நிலவே நாளும் உருகாதே
உன்னை பாடி மண்ணில் கோடி கவிதை வாழும் மறவாதே
நிலா சோறு நிலா சோறு தரவா நீயும் பசியாற
குயில் பட்டு குயில் பாட்டு தருவோம் நாங்கள் குஷியாக
வானவில்லும் தானிறங்கி பாய் போடும் நீயும் தூங்க
ஆடும் மயில் தொகை எல்லாம் தாலாட்டியே காத்து வீச
தேவ கன்னியே தெய்வதென்ன நீ தன்னாலே
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண் சோகம் ஏனடி மானே ஏனடி
முல்லை மலரே முல்லை மலரே உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி
சொந்தம் யாரு பந்தம் யாரு நிலவே பாரு எனை பாரு
நெஞ்சில் பாரம் கண்ணில் ஈரம் துடைப்பார் யாரு பதில் கூறு
உள்ளம் தோறும் கள்ளம் நூறு அதை நீ பார்த்து எடை போடு
உன்னை காக்க தொல்லை தீர்க்க வருவோம் நாங்கள் துணிவோடு
வானத்தோடு கோவம் கொண்டு நீ போவதேன் பால் நிலாவே
வானம் காக்க நாங்கள் உண்டு நீ நம்பியே பார் நிலாவே
தேவ கன்னியே,,, தெய்வதென்ன நீ தன்னாலே
வெள்ளி நிலவு வெள்ளி நிலவு உன்னோடு சேர்ந்திட தானே பாடுது
உள்ளம் திறந்து உள்ளம் திறந்து தன் சோகம் தீர்ந்திட தானே தேடுது
மின்னும் நிலவே உன்னாலே வருதே பாடி சோறூட்ட
தள்ளி நடந்தால் வேறாரு வருவார் என்னை காப்பாற்ற
வெள்ளி நிலவு வெள்ளி நிலவு உன்னோடு சேர்ந்திட தானே பாடுது
தன் நன் நானா தன் நன் நானா தன் நன் நானா தன் நன் நானா தன் நன் நானா
https://www.youtube.com/watch?v=FOAAPtCK3Do
பாட்டை கேட்டால் நந்தவனத்து தேருல போனது போல இருக்குது இல்ல?
-
சி.க.,
குட் மார்னிங். காலையில பயங்கர மூடா? இயற்கைப் பாட்ட ரெண்டு போட்டு கலக்கிட்டேளே!!!
-
நிலவுப் பாடல் 14: "தங்க நிலவில் கெண்டை இரண்டு துள்ளி..."
----------------------------------------------------------------------------------------------
வெள்ளி நிலவுக்கு அப்புறம் தங்க நிலவுதானே!!! ஜெமினி கணேசன் அவர்கள் பாடுவதான இந்த அருமையான பாடலைத்தான் கேளுங்களேன். A.M. ராஜாவும், ஜிக்கி அவர்களும் பாடிய இனிமையான பாடல். இதையும் பட்டுக்கோட்டையார்தான் எழுதியுள்ளார்.
பாடல் வரிகள்:
காதலன் :
தங்க நிலவில் கெண்டை இரண்டு
துள்ளித் திரிவிதுண்டோ...!?
தங்க நிலவில் கெண்டை இரண்டு
துள்ளித் திரிவிதுண்டோ...!?
துள்ளித் திரிவிதுண்டோ
தேன் பொங்கி ததும்பும் கோவைப் பழங்கள்
புன்னகை செய்வதுண்டோ ...!?
புன்னகை செய்வதுண்டோ ...!?
காதலி :
கன்னி அழகு எண்ணம் கலந்தால்
கற்பனை வீடாகும்
கற்பனை வீடாகும்
கனி புன்னகை செய்யும் வண்ண நிலவில்
கெண்டை விளையாடும்
கெண்டை விளையாடும்
ஆஅ ஆஅ ....ஆஅ. ஆஅ ஆஅ
ஆஅ ஆஅ ....ஆஅ. ஆஅ ஆஅ
காதலன் :
காவிய ஜீவன் சிற்ப வடிவில்
கலந்து காணும் அழகே
கலந்து காணும் அழகே
காதலி :
என் சிந்தை இனிக்க செவிகள் குளிர
செந்தமிழ் பாடும் அன்பே
செந்தமிழ் பாடும் அன்பே.....
இருவரும் :
தங்க நிலவில் இன்பக் கதைகள்
சொல்லித் தெரிவதுண்டோ
சொல்லித் தெரிவதுண்டோ
காதலன் :
வானவெளியில் ஞான ரதங்கள்
வாவென்று அழைக்குது பாராய்
வாவென்று அழைக்குது பாராய்
காதலி :
கலை ஞானஉலகில் பூமியில் இங்கே
கண்டிடலாம் நீ வாராய்
கண்டிடலாம் நீ வாராய்
இருவரும் :
தங்க நிலவில் இன்பக் கதைகள்
சொல்லித் தெரிவதுண்டோ
சொல்லித் தெரிவதுண்டோ
https://www.youtube.com/watch?v=WdDl3HCWKKg
அருமையான இந்த பாடலை திருமணத்தில் தேடுங்கள் என்று யாராவது சொன்னால் மலைத்துப் போகாதீர்கள்.
-
Good morning kalnayak
ச்சும்மா.. திடீர்னு தோணித்து அவ்ளோ தான்..
இதுல பார்த்தீங்கன்னா சர்ரூ காட்டோட இயற்கைப் பத்திப் பாடறாங்க..
https://www.youtube.com/watch?v=4xMiBTBNDU4
-
வெள்ளி நிலவு தங்க நிலவு. ரெண்டு பாட்டையும் பின்ன தான் கேக்கணும்..ம்ம்
-
பாரில் இருப்பதென்ன பார்ப்பதெலாம் வண்ணமயத்
தேரில் பவனிவரும் தெள்ளமுதம் - வாரியே
வள்ளலெனத் தான்வழங்கி வாகாய்ச் சிரித்தபடி
அள்ளும் இயற்கையே ஆம்
*
பாவம் இந்தப் பொண்ணு அகெய்ன் காட்டு வாசி போல இருக்கு.. காட்டுக்குள்ளே திருவிழான்னு பாடுது
https://www.youtube.com/watch?v=ihlXrxd7nGk