உங்க கமெண்ட பார்த்து உளுந்து உளுந்து சிரிக்கிறேன்.
Printable View
நிலாப் பாடல் 15: "மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்..."
--------------------------------------------------------------------------------------
தங்க நிலவுக்கு அப்புறம் மஞ்சள் நிலா. சிவக்குமாரும், சுமித்ராவும் பாடறதா இளையராசா போட்டிருக்காரே பாட்டு. அப்பப்பா என்னாமா கீது பாட்டு. ரயிலிசை மெய் மறக்க செய்யுதுங்க. ஜெயச்சந்திரனும், இசையரசியும் பாடிஇருக்காங்க பாருங்க சூப்பரா. கவியரசர் எழுதினததான் ஒரு இடத்தில் போட்டிருந்துச்சு. தப்பா இருந்தால் திருத்துங்க.
பாட்டு வரிகள் இதோ:
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்(2)
இது முதல் இரவு இது முதல் கனவு
இந்த திருநாள் தொடரும் தொடரும்
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
ஆடுவது பூந்தோட்டம் தீண்டுவது பூங்காற்று
ஆசை கிளிகள் காதல் குயில்கள் பாடும் மொழிகள் கோடி
ஆடி புனலில் காவிரி ஓடிடும் வேகம்
அடிகின்ற பொதுமொழிகள் ஒன்றாக வடிகின்ற புது கவிகள்
ஓ .. ஒ .. ஒ ஒ ஒ ……
……..மஞ்சள் நிலாவுக்கு ………..
வீணையென நீ மீட்டு மேனிதனில் ஓர் பாட்டு
மேடை அமைத்து மேளம் இசைத்தால் ஆடும் நடனம் கோடி
காலம் முழுதும் காவியம் ஆனந்தம் நாதம்
இனி எந்த தடையும் இல்லை என்னாளும் உறவன்றி பிரிவும் இல்லை
ஓ … ஓ .. ஓ ஓ ஓ
………..மஞ்சள் நிலாவுக்கு……………
பாட்டை பாருங்க.
https://www.youtube.com/watch?v=kxIUtl-zMic
முதல் இரவு படத்தில் இந்த பாடல்.
கவிதையும் கானமும்..
உடலில் எப்படி இவ்வளவு நிறங்கள் கொண்டது இந்தப் பட்டுப் பூச்சி.. வித விதமான டிசைன்கள்..இப்படி வெகுஅழகானபட்டுப் பூச்சியின் வாழ்க்கையே எட்டு நாள் தான் (இப்படி ஒரு பாட்டு கூட வரும்) - உண்மையா என்ன..
வெளிர் நீல வானம்.. நடுவில் சில பல வெண்பஞ்சு மேகக் கூட்டங்கள்.. குறுக்கே வெட்டினாற் போல ஒரு வானவில் சிரிக்க சில பல பட்டாம் பூச்சிகள் பறந்து கொண்டிருக்கின்றன..இப்படி ஒரு படம் முக நூலில் பார்க்க நேர்ந்தது.. அதற்கு எழுதிப் பார்த்த பாடல் இது..
வானவில்லே வானவில்லே எங்கே வந்தீங்க
..கானமிட்டு பறக்குமெம்மை பார்க்க வந்தீரா
ஆனபடி உங்களோட நிறங்க ளெல்லாமும்
..எங்களிடம் இருக்குதான்னு பாக்க வந்தோமே
போனபடி இருக்கின்ற மேகம் அண்ணாச்சி
..பொசுக்கென்றே நின்னுப்பிட்டீர் விஷயம் என்னண்ணா
மோனமுடன் கலையுமெங்கள் வாழ்க்கை போலத்தான்
..மேதினியில் உமைக்கண்டே நின்றோம் பூச்சியே..
சரி தானே..
*
https://www.youtube.com/watch?v=KJnEnPPcuwM
நிலாப் பாடல் 16: "கல்யாணத் தேன் நிலா..."
-------------------------------------------------
மஞ்சள் நிலாவுக்கு அப்புறம் என்ன நிலா இருக்குன்னு தேடினேங்க. கல்யாணத் தேன் நிலா இருக்குன்னு இப்படி பாடிக்கிட்டு இருக்காங்க. இதுவும் ராஜாங்க இசை தாங்க. மம்முட்டிக்கும் அமலாவுக்கும் முறையா கே. ஜே. ஜேசுதாஸ், சித்ரா பாடியிருக்காங்க. புலமைப் பித்தன் பாட்டை இயற்றி இருக்காருங்க.
பாட்டை படியுங்க:
----------------------------------------------------------------------------------------
கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
நீ தானே வான் நிலா என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா?
ஆகாயம் மண்ணிலா?..
கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
தென்பாண்டிக் கூடலா தேவாரப் பாடலா?
தீராத ஊடலா தேன் சிந்தும் கூடலா?
என் அன்புக் காதலா எந்நாளும் கூடலா?
பேரின்பம் நீரிலா நீ தீண்டும் கையிலா?
பாற்போமே ஆவலா? வா வா நிலா
கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
நீ தானே வான் நிலா என்னோடு வா நிலா
உன் தேகம் தேக்கிலா தேன் உன்தன் வாக்கிலா?
உன் பார்வை தூண்டிலா நான் கைதிக் கூண்டிலா?
சங்கீதம் பாட்டிலா நீ பேசும் பேச்சிலா?
என் ஜீவன் என்னிலா உன் பார்வை தன்னிலா?
தேனூறும் வேர்ப்பலா உன் சொல்லிலா?..
கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
நீ தானே வான் நிலா என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா?
ஆகாயம் மண்ணிலா?..
கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
---------------------------------------------------------------------------------------------
பாட்டை கேளுங்க.
https://www.youtube.com/watch?v=ymYz5DeCFls
மௌனம் சம்மதம்-னு எல்லா விஷயத்துக்கும் எடுத்துக்கலாமுங்களா?
//மௌனம் சம்மதம்-னு எல்லா விஷயத்துக்கும் எடுத்துக்கலாமுங்களா?// எடுத்துக்கலாம் தான்..அப்புறம் அடி வாங்கினா எங்கிட்ட வரப்படாது :)
வரிஞ்சு கட்டிக்கிட்டு நிலாக்காக உழைக்கிறீங்க..இந்தாங்க ஒரு பாட் வச்சுக்கோங்க..
கண்ணிலா கண்ட பின்பு
..காட்சிகள் மாற லாச்சே
பெண்ணிலா சிரிக்க நெஞ்சம்
..பித்தமும் கொள்ள லாச்சே
வெண்ணிலா ஒளியுங் கூட
..வேகமாய் மங்க லாச்சே
எண்ணிலா ஏக்கம் வந்து
...இதயமும் தவிக்க லாச்சே..
..
PS in vijay tv super singer today
http://www.dailymotion.com/video/k5S...da9wrg?start=9
Special with no Hindi song for Rajesh.
From Thiruttu Raman (55/56)
Bale Saadhu enga Bapuji....
http://www.youtube.com/watch?v=keqKtPKfQ4E
From Donga Ramudu,, Telugu version of Thiruttu Raman
Bale tata mana Bapuji.....
http://www.youtube.com/watch?v=YTwgs309jxg
These are considered to be two of Susila's earliest songs to launch her career ! :)
நிலாப் பாடல் 17: "வானிலே தேனிலா ஆடுதே..."
இங்க கமலஹாசனும், அம்பிகாவும் வானிலே தேனிலா ஆடுதுன்னு சொல்லிப்போட்டு ரெண்டு பெரும் எம்மாம் ஆட்டம் போடுறாங்க பாருங்க. ராஜாங்க இசையிலே பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S. ஜானகி, வரிகள்: வைரமுத்து.
பாட்டு வந்த காலத்திலே எப்பிடி வெற்றி கோடி நாடியிருக்கும்-னு நெனச்சு பார்க்கறேன். தெருவெல்லாம் இந்த பாட்டுதான். அதனாலதான் எனக்கு இப்ப ஞாபகத்துல டக்குன்னு வந்திருச்சு.
பாட்டு வரிகள் இதோ:
வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா?
மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா?
ஆசை மீறும் நேரமே ஆடை நான் தானே
(வானிலே..)
வானம் பாடும் பாடல் நானும் கேட்கிறேன்
வாசப்பூவை கையில் அள்ளி பார்க்கிறேன்
மாலை காற்றில் காதல் ஊஞ்சல் போடவா?
காமன் தேசம் போகும் தேரில் ஆடவா?
ஆசை பூந்தோட்டமே பேசும் பூவே
வானம் தாலாட்டுதே வா
நாளும் மார் மீதிலே ஆடும் பூவை
தோளில் யார் சூடுவார் தேவனே
மைவிழி பைங்கிளி மன்னவன் பூங்கொடி மார்பிலே
மைவிழி பைங்கிளி மன்னவன் பூங்கொடி மார்பிலே
தேவனே சூடுவான்
(வானிலே..)
பூவை போல தேகம் மாறும் தேவதை
பார்வை போதும் மேடை மேலே ஆடுதே
பாதி கண்கள் மூடும் காதல் தேவியே
மோக ராகம் பாடும் தேவன் மேன்மையே
மன்னன் தோல் மீதிலே மஞ்சம் கண்டேன்
மாலை பூங்காற்றிலே நான்
ஆடும் பொன் மேகமே ஓடும் வானம்
காதலின் ஆலயம் ஆனதே
கண்களே தீபமே ஏந்துதே கை விரல் ஆயிரம்
கண்களே தீபமே ஏந்துதே கை விரல் ஆயிரம்
ஓவியம் தீட்டுதே
(வானிலே..)
பாட்டை பாருங்களேன்:
https://www.youtube.com/watch?v=YEnK8zbS8xQ
காக்கிச்சட்டை போட்டவங்க இப்பிடி ஆடலாமான்னு கேட்டா காக்கிச்சட்டை போட்டவங்க இப்பிடி ஆடாக்கூடாதான்னு கேட்கறாங்க.