http://i68.tinypic.com/33ktyrt.jpg
Printable View
இன்று (14-11-15) காலை பொதிகை தொலைக்காட்சியில், நடிகை லதாவின் பேட்டி ஒலிபரப்பாயிற்று. மக்கள் திலகத்துடன் அவர் இணைந்து நடித்த காவியங்களின் படக் காட்சிகள் பற்றி விவரித்து அவரின் பெருமைகளையும், திரைத்துறையில் சகல நுணுக்கங்களையும் தெரிந்தவர் என்றும் புகழாரம் சூட்டினார்.
குறிப்பாக. "சிரித்து வாழ வேண்டும்" காவியத்தில் இடம் பெற்ற, லாரி ஏற்றி குழந்தைகள் கொல்லப்பட்டு சடலமாக கிடக்கும் பொழுது, அவரை நம் பொன்மனச்ம்மல் எம். ஜி. ஆர். அவர்கள் தர தரவென்று இழுத்து வந்து காண்பிக்கும் காட்சி ஒரே டேக்கில் ஒகே ஆனது என்று நடிகை லதா அவர்கள் கூறிய பொழுது அந்த காட்சியை ஒளி பரப்பினர்.
தம் எங்கு சென்றாலும், நம் புரட்சித்தலைவர் அவர்கள் மேல் .மக்களுக்கு ஒரு CRAZE இருப்பதை உணர்வதாகவும், தனக்கு அவரால் பெரும் பெயரும் புகழும் இன்றும் கிடைத்து வருகிறது என்று பெருமிதத்துடன் நடிகை லதா கூறியது, அவர் நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் மேல் , நன்றியுணர்ச்சியுடன், மாறாத அன்புடன் இருப்பது புலனாகிறது.
http://i63.tinypic.com/20ksshz.jpg
நடிகை லதா அவர்கள் நம் பொன்மனசெம்மலை பற்றி நினைவு கூர்ந்து இனிய நினைவுகளை நேயர்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டது உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரியது.
தமிழக முதல்வராய், திராவிட இயக்கத்துக்கு எதிரான காங்கிரஸ் கட்சியை சார்ந்த ஒரு முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் அவர்களின் 90 வது பிறந்த நாளினையொட்டி அவரது இல்லம் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து மலை அணிவித்து மரியாதை செய்த நம் புரட்சித்தலைவர் அவர்களின் மாண்பினையும், பெருந்தன்மையையும் என்னென்று சொல்வது ?
அரிய புகைப்படத்தை பதிவிட்ட திரு. வினோத் அவர்களுக்கு நன்றி !
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில்
மக்கள் திலகத்தின் ''நல்ல நேரம் ''.
இரவு 7.30 மணிக்கு முரசு தொலைக்காட்சியில்
மக்கள் திலகத்தின் ''தாயின் மடியில்''
ஊருக்கு உழைப்பவன் - வெளியாகி 39 ஆண்டுகள் நிறைவு ஆனது
வெளியான தேதி : 12/11/1976.
அருமையான தலைப்பு.
பாடல்கள் அனைத்தும் இனிமையாக இருந்தன
1.இதுதான் முதல் ராத்திரி . 2. இரவுப்பாடகன் ஒருவன் வந்தான்
3.அழகெனும் ஓவியம் எங்கே . 4. பிள்ளைத்தமிழ் பாடுகிறேன் .
1975ல் நெருக்கடி நிலை பிரகடனம் ஆனதால் , மத்திய அரசின் உத்தரவின்படி
வன்முறை காட்சிகள் கூடாது என்கிற வகையில் சண்டை காட்சிகள் வெட்டப்பட்டன .மும்பை ஸ்டன்ட் நடிகர் ஷெட்டியுடன் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மோதும் காட்சிகள் பலத்த எதிர்பார்ப்பில் இருந்தன. காட்சிகள் வெட்டப்பட்டதால் சுவாரஸ்யம் இல்லாமல் போனது.சண்டை காட்சிகள் நகைச்சுவையாக எடுக்கப்பட்டதால்
ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் .
முதல் பாடலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இளமை ததும்ப நடித்து இருந்தார்.
இரண்டாவது பாடலில் குழந்தையை தாலாட்டி தூங்க வைக்கும் பாட்டில் நெகிழ வைத்தார்.
மூன்றாவது பாடலில் நிர்மலாவுடன் இளமை துள்ளலோடு காதல் கனிரசத்தை பொழிந்தார்.
நான்காவது பாடலில் தன குழந்தையின் பிறந்த நாள் பாடலில் உணர்சிகரமாகவும் தன் சோக நடிப்பினை மிக அழுத்தமாகவும் , முக பாவங்களில் மாற்றங்களை காண்பித்து ரசிகர்களை உருக வைத்தார்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். துப்பறியும் அதிகாரியாகவும், தொழில் அதிபராகவும்
இரு வேடங்களில் அற்புதமாக நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருந்தார்.
இரு மனைவிகளிடையே மாட்டிக் கொண்டு தவிப்பது, அதிலிருந்து மீள்வது
வில்லன்களை ஹெலிகாப்டரில் துரத்துவது உள்பட பல சாகச வேலைகள் செய்து நடித்தது நன்றாக இருந்தது.
நகைச்சுவையில் தேங்காய் ஸ்ரீநிவாசன் கலகலப்பு ஏற்படுத்தினார்.
பல கட்டங்களில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு உறுதுணையாக
இருந்து கலக்கலாக நடித்தார்.
இந்த பட வெளியீட்டின் சிறப்பு அம்சம் என்னவென்றால் புரட்சி தலைவர் எம்;ஜி.ஆர். அவர்கள் பைலட், மகாராணி, அபிராமி, கமலா ஆகிய 4 அரங்குகளுக்கும் விஜயம் செய்து , முதல் நாளில் ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்தார்.
நான் முதல் நாளன்று மூலக்கடை ஓடியன்மணி அரங்கில் காலை காட்சி
பார்த்து ரசித்தேன் . பின்பு மகாராணி, அபிராமி அரங்குகளில் பார்த்து மகிழ்ந்தேன் .
அபிராமியில் 49 நாட்களும், மகாரானியில் 63 நாட்களும் ஓடிய சுமாரான வெற்றிப்படம் .
ஆர். லோகநாதன்.