அட... எனக்கும் பிஸ்வஜித்தைப் பார்த்தால் கொழுகொழு நம்பியார் போலத்தான் தோன்றும்
Printable View
மது அண்ணா!
பிழைத்தேன்.:) எனக்கு எப்போ விஸ்வாவைப் பார்த்தாலும் அந்தக்கால மீசை இல்லாத 'வழுவழு நம்பியார்தான் ஞாபகத்துக்கே வரும். மக்களைப் பெற்ற மகராசி, நான் பெற்ற செல்வம், பாகப்பிரிவினை படங்களில் அப்படியே பிஸ்வஜித் போலவே இருப்பார்.
https://i.ytimg.com/vi/HRyKGoZ_gvY/hqdefault.jpghttp://padamhosting.me/out.php/i1326...9h09m37s33.pnghttp://bharatdiscovery.org/w/images/...Chatterjee.jpg
nambiyarai vida innum azhaguppa .. biswajit
ராஜேஷ்...
பத்மப்ரியா கூட ஹேமமாலினி போல ஜாடையில் இருப்பார்.. இதில் அழகு பத்தியெல்லாம் ஒண்ணும் கிடையாது.. Just இவரைப் பார்க்கிறபோது அவர் நினைவு வரும். அம்புட்டுதேன்.
வாசு ஜி... ஒரு பாட்டு டவுட் கேட்டிருந்தேன்..ஹி ஹி.. நானே கண்டுபிடிச்சுட்டேன். சிரித்த முகம் படம்.. ஈஸ்வரியும் டி.எம்.எஸ்ஸும் கலக்கும் பாட்டு..
மச்சி வந்து மச்சானுக்கு வச்சா பாரு விருந்து...
நல்லாவே கண்டுக்கினேன் மதுண்ணா! எனக்கும் நல்லாத் தெரியும். உங்க மிடில் வரியைப் படிச்சதுமே தானாகவே பாட ஆரம்பிச்சுட்டேன். பல்லவி வரும் போது மக்கர் பண்ணுச்சு. ஏன்னா பல்லவி டியூன் வேற. நிறைய தடவை கேட்டிருக்கேன். செம குத்து அந்த வரிகளில்.! ஆனா இப்போ உங்க பதிவைப் பார்த்ததும் கிளியர் ஆயிடுத்து
மச்சி மச்சி என் மச்சிகளா
இந்த மாமன் மேல் ஆச வச்சீகளா
இந்தாங்க. இப்போ பாட்டையும் கேட்டுடலாம்.
http://www.inbaminge.com/t/s/Siritha%20Mugam/
மது அண்ணா!
'சிரித்த முகம்' என்றாலே 'சடார்'னு
'வா காதல் செய்து பார்ப்போம்' ஏ.எல்.ராகவன், ராட்சஸி பாட்டுதான் நினைவுக்கு வந்தது.
'ராஜாத்தி கூந்தலுக்கு ரோஜாப்பூ வங்கி வந்து' பாடல் நினைவில் இருந்தாலும் பாலையா 20 வயது இளைஞன் மாதிரி 'வா காதல் செய்து பார்ப்போம்' என்று பாடி ஜோடியுடன் ட்விஸ்ட் ஆடுவது மட்டும் நினைவில் இருக்கிறது. பாண்டி அஜந்தா தியேட்டரில் ஓடிச் சென்று படம் பார்த்தது நன்றாக நினைவில் இருக்கிறது.
ஈஸ்வரி 'அஹ்ஹோ' என்று நடுவில் அமர்க்களம் பண்ணி 'பாலையா' என்று கொஞ்சுவதும் காட்சியாக ஞாபகம் இருக்கிறது. ஆனால் பாடல் வரிகள் மனப்பாடம்.
சூப்பர் பாட்டு மதுஜி! மியூஸிக் அமர்க்களம்.
வா காதல் செய்து பார்ப்போம்
நம் கன்னம் ரெண்டும் சேர்ப்போம்
நாம் ஓடியாடும் அழகை
இந்த உலகம் பார்க்க வைப்போம்
வா காதல் செய்து பார்ப்போம்
நம் கன்னம் ரெண்டும் சேர்ப்போம்
நாம் ஓடியாடும் அழகை
இந்த உலகம் பார்க்க வைப்போம்
அய்யய்யே அம்மம்மா
அறுபதான வயசு
ஹா..ஆனாலும் என்னம்மா
ஆசைதானே பெரிசு
அய்யய்யே அம்மம்மா
அறுபதான வயசு
ஆனாலும் என்னம்மா
ஆசைதானே பெரிசு
(வா காதல்)
தா! தா! ஜோராகத் தா! நீ தருகின்ற சுகமென்ன!
வா! வா நேராக வா! என் வயசுக்கு இது என்ன!
தா! தா! ஜோராகத் தா! நீ தருகின்ற சுகமென்ன!
வா வா நேராக வா! என் வயசுக்கு இது என்ன!
சேரன் சோழன் என்று மன்னர் யாவும் நீரய்யா!
('ஹ... யாரங்கே? என்று பாலையா மன்னர் தோரணை காட்டுவார்)
சேரும் ஆசை கொண்டேன்
நானும் உந்தன் பால் அய்யா:)(பாலையா)
மனதில் வந்தது ஷோக்கு
நாம் ஆடிடுவோம் இனி ஷேக்கு
(வா காதல்)
தேன் தேன் நானே வந்தேன் உன் 'திருவிளையாடலு'க்கு
(ஒரு நாள் போதுமா' வுக்கு பொருத்தமாக வரி)
நீதான் தோதானவள் இந்த 'திருவருட்செல்வ'னுக்கு... ஹோ
தேன் தேன் நானே வந்தேன் உன் 'திருவிளையாடலு'க்கு
நீதான் தோதானவள் இந்த திருவருட்செல்வனுக்கு
ஆயர் பெண்கள் கொஞ்சும் காதல் கண்ணன் நீரய்யா!
ஆசை வள்ளி நெஞ்சில் ஆடும் கந்தன் பாலையா (சூப்பரு)
ஆஹா இனி என்ன நெக்ஸ்ட்டு?
நாம் ஆடிடிவோம் இனி ட்விஸ்ட்டு!
வா காதல் செய்து பார்ப்போம்
அஹ்ஹோ!
நம் கன்னம் ரெண்டும் சேர்ப்போம்
அஹ்ஹோ!
நாம் ஓடியாடும் அழகை
இந்த உலகம் பார்க்க வைப்போம்
'ஐயோ' என்று ஆட முடியாமல் பாலையா இறுதியில் அலறுவார்.
எனக்கு ராகவன், ஈஸ்வரி கலாய்ப்ப்புகளில் இதுவும் ரொம்பப் பிடிச்ச பாட்டு மதுண்ணா!