Originally Posted by
Gopal,S.
ராகவேந்தர்,
நடிகர்திலகத்தின் பிற்கால படங்கள் அவர் தரத்திற்கு பெருமை சேர்க்கும் அளவு இல்லை. இதே வாயால் திராவிட மன்மதன் என்று சொல்லி ,அது இங்கு சரளமாக உபயோகிக்க படுவது உங்களுக்கு தெரியவில்லையா?
அத்துடன் சமீப காலமாக உங்கள் கட்டளையை ஏற்று ,நாங்கள் ஒரு வரி கூட critical ஆக எழுதாத போது ஏன் குப்பையை கிளறி விடும் சண்டை சேவல் ஆகிறீர்கள்?
நான் எந்த திரி நண்பர்களுடன் வாக்கு வாதம் வந்தாலும் தோன்றியதை சொல்லி எழுதி எல்லோரையும் பரிச்சயம் கொண்ட கருத்தொப்பாத நண்பர்களாகவே பார்க்கிறேன்.
நாங்கள் எதையும் எதிர்பார்த்தோ, அல்லது அங்கீகாரம் வேண்டியோ அவர் பக்தர்களாக இல்லை. அது ஆத்மா சுத்தியுடன் நாங்கள் செய்யும் சத்திய பூஜை. உளமார கடவுளாக தொழும் வேள்வி. நீங்கள் அதற்கு வரம்பு விதிக்க வேண்டாம். ஒவ்வாதவை, ஓங்கி சொல்ல பட்டால், ச்சீ ,பொய்யுரைப்பதா என்று என் கடவுள் ,கர்ணன் அவதாரத்தில் கேட்டதையே கேட்க வேண்டி வரும்.