ஒரு சின்ன சஜெஷன்.. முழுப்பாட்டப் போடறத விட அந்த ப்பாட்டுல உங்கள் மனம் கவர்ந்த வரி + உங்களோட நேச்சுரல் ஹ்யூமரோட கூடிய சின்ன அல்லது பெரிய ரைட் அப் பளஸ் காணொளின்னு தாங்களேன்.. டைம் இருந்தா..(கோச்சுக்காதேள்) இப்ப இருக்கறதும் ஓகேதான்..
Printable View
ஒரு சின்ன சஜெஷன்.. முழுப்பாட்டப் போடறத விட அந்த ப்பாட்டுல உங்கள் மனம் கவர்ந்த வரி + உங்களோட நேச்சுரல் ஹ்யூமரோட கூடிய சின்ன அல்லது பெரிய ரைட் அப் பளஸ் காணொளின்னு தாங்களேன்.. டைம் இருந்தா..(கோச்சுக்காதேள்) இப்ப இருக்கறதும் ஓகேதான்..
பெண்களை அந்தக் காலத் திரைப்படஙக்ளிலும் சரி இந்தக்காலத் திரைப்படங்களிலும் சரி வர்ணிப்பதென்றால் யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்ற வண்ணம் ஓரிருபாடல்கள் வைத்திருப்பார்கள்..
இந்தப் பாடலில் ஜூஹி சாவ்லா - ஜூலி என்று தமிழில் பருவ ராகத்தில் அறிமுகமாகிவிட்டு ஹிந்திக்குப் போய் ஜூஹியாய் செட்டில் ஆகிவிட்டார்..
படத்தில் வெகு அழகாய் இருப்பார் அவர்..இந்தப் பாடல் பார்த்து பலவருடம் ஆகியும் இன்னும் நினைவில்..
https://www.youtube.com/watch?v=x361UZY5GgM
நீர் மேகம் ஆனால் என்ன - நல்ல பாட்டு கேட்டிருக்கிறேன். நினைக்க வச்சிட்டீங்க.
பருவ ராகம் படம் ரெண்டு வாட்டி பாத்திருக்கேன். கன்னடத்துல "பிரேம லோகா"-ன்னு வந்து வருஷ கணக்கில ஓடிச்சுன்னு சொல்வாங்க. ராஜேஷ்தான் உறுதி பண்ணனும்.
தேனிசைத்தென்றலின் முத்துக்கள் தொடரும் விரைவில்...
இதோ கண்ணா வருவாயாவின் தெலுங்கு வடிவம்
இசையரசியுடன் பாலு
https://www.youtube.com/watch?v=TwgpeUc29Cw
ராஜேஷ்,
தமிழில் 'மனதில் உறுதி வேண்டும்' படத்திற்கு இளையராஜா அல்லவா இசை. இது தெலுங்கு டப்பிங் செய்த படமா இல்லை ரீமேக் செய்ததா? தேவா எப்படி இசையமைத்தார் - ரீமேக்கிற்க்கா?
நிலாப் பாடல் 21: "நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்"
---------------------------------------------------------------------------------------
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
கனவொன்று கண்டேன் உன் கண்களில்
கரைகின்ற கண் மை
அது சொல்லும் உண்மை
(நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்)
கண்ணீரின் ஈரம் சுடுகின்ற நேரம்
பனித்தோட்டம் யாவும் அனலாக மாறும்
சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்
பூவுக்கு வாய்ப்பூட்டு
என் சோகம் நீ மாற்று
என் வாழ்விலே தீபம் ஏற்று
(நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்)
நான் பார்ப்பதெல்லாம் உன் பார்வைதானே
நான் சொல்வதெல்லாம் உன் வார்த்தைதானே
உடல்கள் வேறு உயிர் ஒன்று தானே
நான் இங்கு நானல்ல
என் துன்பம் யார் சொல்ல
என் தெய்வமே நீ பெண்ணல்ல
(நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்)
------------------------------------------------------------------------------------------------------
நல்ல மெலோடி பாடல்தான். இன்னும் பலவிதங்களில் இளையராஜாவின் இனிய கீதம் என்று கேட்டு ரசிக்கப்படுகிறது. சரி அது என்ன "பூவுக்கு வாய்ப்பூட்டு. என் சோகம் நீ மாற்று". சி.க. இதுக்கு நீங்கதான் விளக்கம் தரணும். (உங்க சஜ்ஜஸன்ஸ் டிரை பண்ணறேன் நெறய டயம் வேணுமாயிருக்கு தமிழில் பதிய)
பாட்டை பாருங்க:
https://www.youtube.com/watch?v=AXo8i3tVPWI
ஜன்னலில் நிலவு பாக்கிறது பெரிய விஷயமில்லைங்க. இந்த பாட்டு ஜோடியா பாடிகிட்டு காஷ்மீர் பனியில் சுத்துரது கைராசிக்காரனால் மட்டும்தான் முடியும்!!!
பாட்டுக் கேட்டுட்டு சொல்றேன் கல் நாயக்.. கேட்டு ரொம்ப நாளாச்சு..// (உங்க சஜ்ஜஸன்ஸ் டிரை பண்ணறேன் நெறய டயம் வேணுமாயிருக்கு தமிழில் பதிய)// நோ ப்ராப்ளம் குரு..
கையில்லாத பொம்மை என்ற நாவல் - குமுதம் ரா.கி ரங்கராஜனுடையது..- மிக உருக்க மான நாவல்.. படத்தை அப்படியே எடுத்திருந்தால் இன்னும் ஹிட்டாயிருக்கும்.. கொஞ்சம்கதையைக் குழப்பி மாற்றி சொதப்பிவிட்டதாக நினைவு.. காஷ்மீர் பனியில சுத்துறது அட்லீஸ்ட் கோட்லாம் போட்டிருக்காங்களே..சிலபடங்கள்ல நடிகைகளுக்கு மட்டும் குறைவாய் ஆடை கொடுத்துகுளிரக் குளிர நடுங்க விட்டிருப்பார்கள் பாவம்..