அழகாகச் சிரித்தது அந்த நிலவு
அனலாகக் கொதித்தது இந்த மனது
Printable View
அழகாகச் சிரித்தது அந்த நிலவு
அனலாகக் கொதித்தது இந்த மனது
நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக
ஒரு கவிதை தந்தது கவிதை தந்தது கண்கள் வழியாக
ஒரு பூவெழுதும் கவிதை
சிறு தேன் துளியாய் உருளும்
நதி நீர் எழுதும் கவிதை
அலை ஓவியமாய் விரியும்
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு
நாட்டியம் ஆடுது மெல்ல - நான்
அந்த ஆனந்தம் என் சொல்ல
ஆடுது பார் பல அதிசயம்
ஆட்டத்திலே இது பரவசம்
ஆடுது பாடுது தேடுது கூடுது
பாரடி எது நிஜம்
ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான் கன்னி நான்
ஆடுறேன் வலை போடுறேன்
பாடுறேன் பதில் தேடுறேன்
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்,
கண்டதும் நெஞ்சினில் போராட்டம்
செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே தேடி வரும் என் மனமே சேர்ந்திருந்தால் சம்மதமே
சந்தன மல்லிகையில் தூளி கட்டி போட்டேன்
தாயி நீ கண் வளரு தாலேலல்லேலோ
தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே ஆழியில் கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே