ayyo,
irandu varigalayum serthu padithu vittergal
manadhil urudhi vendum dubbing in telugu as sister nandhini..
naan sonnadhu viraivil devavin thodar thodarum..
appuram i shared the telugu song...
Printable View
Beautiful duet by Malaysia Vasudevan sir & Isaiyarasi
https://www.youtube.com/watch?v=xgmURKkz_zE
நிலாப் பாடல் 22: "நிலவு வந்து பாடுமோ"
--------------------------------------------------------------
சோகப் பாடலில் நிலவே வர வேணாமுன்னு ஜெமினி பாடி கேட்டோம். அந்த பாட்டை கேட்ட K.R. விஜயாவை சோகமாக பாடற மாதிரி நடிக்க வைச்சு இசையரசி பாடிய நல்ல பாட்டு இது. கண்ணதாசன் எழுதிய இந்த பாட்டு சோகத்த்திற்கு சோகமும் ஆச்சு. அந்த பாட்டுக்கு ஆடற மாதிரியும் இருக்கணும்னு இயக்குனர் கண்டிப்பா சொல்லிட்டாரு. பாருங்க இசையரசி ரெண்டுத்துக்கும் சேந்து எப்பூடி பாடியிருக்காங்கன்னு. விரக்தியா பாடற போது, ஆடறது நல்லாவே இருக்குங்க. சத்தியமா இதுக்கு மெல்லிசை மன்னர்தானுங்க இசை.
நிலவு வந்து பாடுமோ
சிலை எழுந்து ஆடுமோ
பலர் நிறைந்த சபையினிலே
பண்பு கூட மாறினால்...
பண்பு கூட மாறினால்
நிலவு வந்து பாடுமோ
சிலை எழுந்து ஆடுமோ
பலர் நிறைந்த சபையினிலே
பண்பு கூட மாறினால்...
பண்பு கூட மாறினால்
மாறட்டும்
மனது போல போகட்டும்
ஆடட்டும்
தனை மறந்து ஆடட்டும்
ஆடட்டும்
தனை மறந்து ஆடட்டும்
தலை குனிந்த பெண்களும்
தலை நிமிர்ந்த ஆண்களும்
தலை குனிந்த பெண்களும்
தலை நிமிர்ந்த ஆண்களும்
நிலை குலைந்து போன பின்
நீதி எங்கு வாழுமோ
நீதி எங்கு வாழுமோ
வாழட்டும்
வழி மறந்து வாழட்டும்
பார்க்கட்டும்
அறிவு கொண்டு பார்க்கட்டும்
பார்க்கட்டும்
அறிவு கொண்டு பார்க்கட்டும்
அனுபவிக்கும் அவசரம்
ஆடை மாற்றும் அதிசயம்
முடிவில்லாத போதையில்
முகம் மறந்து போகுமோ
முகம் மறந்து போகுமோ
போகட்டும்
புதிய சுகம் காணட்டும்
காணட்டும்
காலம் வரும் மாறட்டும்
காணட்டும்
காலம் வரும் மாறட்டும்
ஊமை கண்ட கனவையும்
உறவு தந்த நினைவையும்
கருவிலுள்ள மழலையும்
உருவம் காட்ட முடியுமோ
உருவம் காட்ட முடியுமோ
முடியட்டும்
முடியும் போது முடியட்டும்
விடியட்டும்
விடியும் போது விடியட்டும்
விடியட்டும்
விடியும் போது விடியட்டும்
நிலவு வந்து பாடுமோ
சிலை எழுந்து ஆடுமோ
--------------------------------------------------------------------------------------
சரி பாட்டை பார்ப்போமா:
https://www.youtube.com/watch?v=3kJm5268QTk
இப்படி இவங்களே வியந்து போய் ராமன் எத்தனை ராமனடி-ன்னு சொன்னால் யாரு வந்து இதுக்கு பதில் சொல்வாங்க!!!
ராமன் எத்தனை ராமனடி வெகுசின்ன வயதில் நியூசினிமாவில் பார்த்தது..கதை மறந்துவிட்டது.. ந.தி ஸ்டார் ஆகி வரும்போது கேஆர்வி ரிஜெக்ட் செய்வார்..முத்துராமனுடன் ஒரு குழந்தை இருக்கும்..சேரசோழ பாண்டி மன்னர் ஆண்ட தமிழ் நாடு என ஒரு பாட்டு அப்புறம் இது. இப்படி புகையாய்த்தான் நினைவில்..கடைசியில் ந.தி முத்துராமனின் கொலைக்குற்றத்தை த் தான் ஏற்றுகொண்டு விடுவாரில்லையா
மாறட்டும் வாழட்டும் போகட்டும் என வரும்போது ஒரு ஹை பிட்ச் கொடுத்திருப்பாங்க சுசீலாம்மா.கொஞ்சம் உலுக்கும்..
நிலாப் பாடல் 23: "நிலவு தூங்கும் நேரம்"
இதுவும் சோகமானப் பாடல்தான். என்ன சுகமாக இருக்கிறது பாருங்கள். எளிமையான வரிகள்தான். ராஜா என்னை ரொம்பவே ரசிக்க வைத்தார். S.P. பாலசுப்ரமணியம், S.ஜானகி இவர்கள் சேர்ந்தும், S.P. பாலசுப்ரமணியம் தனியாக பாடிய இரண்டு பாடல்கள் உண்டு. நடிகர் மோகனுக்கு எங்கயோ மச்சம் இருந்திருக்குன்னு சொல்வாங்க. பின்னாடி அழிஞ்சுபோச்சோ என்னவோ?
சரி பாடலைப் படிப்போமா?
-------------------------------------------------------------------------------------------
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கும் நேரம் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை
(நிலவு)
நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே
வானம் காற்று பூமி இவை சாட்சியானதே
நானுனைப் பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே வாடுமிந்த சொந்தம்
நான் இனி நீ... நீ இனி நான்
வாழ்வோம் வா கண்ணே
(நிலவு)
கீதை போலக் காதல் மிகப் புனிதமானது
கோதை நெஞ்சில் ஆடும் இந்தச் சிலுவை போன்றது
வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்
வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்
ஏன் மயக்கம் ஏன் தயக்கம்
கண்ணே வா இங்கே
(நிலவு)
---------------------------------------------------------------------------------------------
சரி பாடலைப் பார்ப்போமா?
https://www.youtube.com/watch?v=qjnorxdJ2J8
https://www.youtube.com/watch?v=7rs_qe5o4Tw
குங்குமச்சிமிழ் போல அழகா பாட்டு இருக்கா என்ன? இது வேற. அது வேற.