தங்கள் அன்புக்கும், பாராட்டுக்கும் நன்றி! தங்களின் பளிச் பதிவுகளை மீண்டும் எதிர்நோக்குகிறேன்.
Printable View
டியர் கோபால் சார்,
சிறிது காலமே பழகினாலும் நம் நட்பு ஆழமானது. உங்களை மிகவும் நான் அறிவேன். நண்பர்களுக்குள் சிறு சிறு மோதல்கள் வருவது இயற்கை. எந்த வகையிலாவது நான் தங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் தயவு செய்து அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அளவுக்கதிமாக வருத்தம் தெரிவித்து விட்டீர்கள். அது தேவை இல்லாதது. எந்த வித குற்ற உணர்ச்சிக்கும் நீங்கள் ஆளாக வேண்டாம். உங்கள் நெத்தியடி பதிவுகளுக்கு நான்தான் முதல் ரசிகன். நீங்கள் கேட்டிருந்தபடி நான் பதிவு இட்டாயிற்று. இனி நீங்களும் பதிவுகளை கண்டிப்பாக தொடரவேண்டும் என்பது என் வேண்டுகோள். இல்லை. இல்லை. அன்புக்கட்டளை. செய்வீர்கள் என தீர்க்கமாக நம்புகிறேன். நீங்கள் எதையும் போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டாம். நான் திரியை விட்டு விலகுவதற்கும், தங்களுக்கும் துளியும் சம்பந்தமில்லை. என் சொந்த வேலைகளும் இருக்கின்றன. உங்கள் அற்புதமான பதிவுகளுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
வாசு சார்,
உங்கள் அன்பு கட்டளையை ஏற்கிறேன்.ஆனால் நான் வியாபாரி.பதிலுக்கு எதையாவது பெறாமல் நான் எதையும் கொடுப்பதில்லை.நீங்கள் என் அன்பு கட்டளையை ஏற்று உங்கள் சொந்த வேலைகள் முடிந்ததும் பதிவுக்கு வர வேண்டும்.செய்வீர்களா?
thanks very much for mentioning my name too along with the list of hub stalwarts........ :) Take care and Looking for your earliest return to this hub
Attachment 1266
thirisulam,mutththukkal moondru,
இரு மேதைகள்
அந்த பிரபல மேடை நாடக நடிகரின் நாடகத்தை பார்க்க மாக் சென்னேட்ட் என்பவரும் பாபேல் நோர்மாந்து என்பவரும் வந்தனர்.நாடகத்தில் அவரின் நடிப்பை பார்த்து அசந்து போய்,தங்கள் படமான மேகிங் எ லிவிங் என்ற படத்துக்கு ஒப்பந்தம் செய்தனர்.அதுவரை கீஸ்டோன் கம்பெனி யில் நடித்த போர்ட் ஸ்டேர்லிங் என்பவரை தூக்கி விட்டு ,அந்த புது நடிகரை போட்டனர்.அந்த படத்தில் அவரது வேடம் நகரத்தில் காசில்லாத ஒருவன்,மற்றவர்களை ஏமாற்றி வேடமிட்டு வாழ்கையை நடத்துவான்.ஆனால் பட தயாரிப்பாளர் சென்னேட்ட் ,புது நடிகரின் நடிப்பில் திருப்தியில்லாமல் ,பழைய நடிகரை போட்டு படபிடிப்பை மீண்டும் தொடர விரும்பினர்.ஆனால் நோர்மாந்து பிடிவாதமாய் அதே நடிகரை வைத்து மீண்டும் பழைய ரீல்களை திரும்பி எடுத்தார்.இப்போது சென்னேட்ட் கு திருப்தி.படம் ரிலீஸ் ஆனது.பிய்த்து கொண்டு ஓடி ,ஒரே இரவில் அந்த நடிகர் ஐ பிரபல்யம் ஆக்கியது.
என்ன,எங்கோ கேட்ட கதையை திரும்பவும் ஆங்கில பெயர்களை போட்டு கதை விடுகிறான் என்கிறீர்களா?உண்மை.உண்மை.சத்தியம்.அந்த நடிகரின் பெயர் சாலி சாப்ளின்.
நான் பிறவி மேதைகளை வணங்கும் நமது நடிகர் திலகத்துக்கும் ,சார்லி சாப்ளினுக்கும் உள்ள ஒற்றுமை வியக்க வைக்கிறதல்லவா?படக்கதை,பாத்திரம் எல்லாமே பராசக்தி மாதிரியே.
http://upload.wikimedia.org/wikipedi...kinALiving.jpg
from the pages of wikipediaQuote:
Making a Living is the first film starring Charlie Chaplin. It premiered on February 2, 1914. Chaplin plays Edgar English, a lady-charming swindler who runs afoul of the Keystone Kops.
Chaplin wore a large moustache and a top hat in this film, he also carries a walking cane. Whilst not "the tramp" the character is somewhat reminiscent of the tramp, having hat, cane, moustache and baggy trousers; his famed screen persona of "The Little Tramp" did not appear until his next film, Kid Auto Races at Venice.
It was written and directed by Henry Lehrman.
Cast
Charlie Chaplin - Swindler
Virginia Kirtley - Daughter
Alice Davenport - Mother
Henry Lehrman - Reporter
Minta Durfee - Woman
Chester Conklin - Policeman / Bum
Plot
Edgar English cons a journalist out of some money. He applies for a job at his newspaper. Whilst the journalist is helping a trapped motorist Edgar steals the camera with the picture of the accident and rushes back to the paper with it. He steals the headlines. A short pursuit with the police ensues.
Making a Living video
http://youtu.be/JiaAmx5RT-I
டியர் வாசுதேவன் சார்,Quote:
அன்பு ராகவேந்திரன் சார்,
திரியில் என்னை எல்லா வகையிலும் ஊக்கமளித்து, என்னுடைய பல தொழில் நுட்ப சந்தேகங்களை எந்த நேரமானாலும் பொறுமையாக விளக்கி என்னை வழி நடத்திய நான் மிக மிக நேசிக்கக் கூடிய என்னுடைய ஆசான் ஸ்தானத்தில் இருக்கும் தங்களை என்னால் மறக்கவே முடியாது. எப்போது சென்னை வந்தாலும் சொந்த சகோதரரைப் போலத் தாங்கள் என்னை கவனித்துக் கொண்டது காலம் உள்ள வரை மறக்க முடியாது. எந்த பிரதிபலனும் கருதாது மூச்சும் உயிரும் நடிகர் திலகத்துக்காகவே என்று வாழும் தங்களின் தன்னலமற்ற சேவை எனக்கும், நம் திரியில் உள்ளவர்களுக்கும் சிறந்த வழிகாட்டுதல்களைத் தரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. தன்னந்தனி ஆளாக நடிகர் திலகம் இணையதளத்தை தொடங்கி அதை சிறப்பாக ஆறாவது ஆண்டில் அடியெடுக்க வைக்க நீங்கள் பட்ட சிரமங்களுக்கெல்லாம் நாங்கள் பட்ட சிரமங்கள் மிகக் குறைவு. வெற்றிகரமாக N.T. fans association தொடங்கி திரு Y.G.M மற்றும் முரளி சார் அவர்களின் உறுதுணையுடன் சிறப்பாக நடத்தி வருவது பெருமைக்குரிய விஷயம். தங்களுடன் இணைந்து பணி புரிந்ததில் நடிகர் திலகத்துடன் இணைந்து பணி புரிந்ததாகவே அப்படி ஒரு சந்தோஷத்தை உணர்கிறேன். தங்களுடைய பேராதரவிற்கும், அன்பிற்கும் தலைவணங்கி மிகுந்த மன வருத்தத்துடன் விடைபெறுகிறேன்.
தங்களுடைய அளவற்ற அன்பிற்கும் பாசத்திற்கும் என்றென்றும் நன்றியுடையவனாயிருக்கிறேன். தயவு செய்து தங்கள் பதிவுகளைத் தொடருங்கள். ஒவ்வொரு நிழற்படத்திற்கும் தாங்கள் எடுக்கும் சிரத்தையும் அதே போல் ஒவ்வொரு ஆவணத்திற்கும் பம்மலார் எடுக்கும் சிரத்தையும் நான் நன்கு உணர்ந்திருக்கிறேன். அதே போல் இங்குள்ள அனைவரும் உணர்ந்திருக்கிறார்கள். தங்களைப் போன்றே நானும் ஒரு சமயம் முடிவெடுத்து சற்று விலகியிருந்து மீண்டும் வந்திருக்கிறேன். தற்சமயம் தங்களுடைய மனப் பளுவும் மற்ற சுமைகளும் குறைய வேண்டி சற்று ஒய்வெடுங்கள். ஆனால் பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் தலைதூக்கி வந்து வாசுன்னா வாசுதான் என்று நிரூபியுங்கள். நாம் அனைவரும் ஆற்றும் தொண்டு நடிகர் திலகம் என்ற உயர்ந்த மனிதருக்கு எனவே அது என்றும் தங்களை கை விடாது. வாருங்கள், தாருங்கள், நம்மோடு சேருங்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்
பம்மல் சுவாமிக்கு அர்பணிப்பு.
தெய்வ பிறவி-1960
அதுகாறும் தூய தமிழ் பேசி வந்த (சமயத்தில் பிராமின் மொழி) படங்கள் மக்களை பெற்ற மகாராசி புண்ணியத்தால் வட்டார மொழிக்கு(ஹீரோ மட்டும்தான் வட்டாரம் பேசுவார் ) அறிமுகமாகி பிறகு பேச்சு வழக்குக்கு வந்தது பாக பிரிவினை புண்ணியத்திலும் பிறகு தெய்வ பிறவியிலும் தான்.
புண்ணியத்தை கட்டி கொண்டவர்கள் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.(மல்லியம் ராஜகோபால் தன கதை என்று சொன்னதாக ஞாபகம்.பிறகு அவரே
சவாலே சமாளி எடுத்தார்)கருத்து வேற்றுமையில் (vpkb vs sgs) இருந்த சிவாஜி,எஸ்.எஸ்.ஆர்.மாமன் ,மச்சானாக,பத்மினி ஜோடியாக.இந்த வெற்றி காவியம் ஏ.வீ.எம். தயாரித்து கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில்.ஓரளவு ரியலிசம் என்று சொல்லப்படும் படங்களுக்கு தமிழ் முன்னோடி .நடிப்பில்,கதையமைப்பில் இந்த படமே. நடிகர் திலகத்துக்கு சிறந்த நடிகர் கொடுத்திருக்க வேண்டிய முதல் படம்.(ஜூரிகள் பார்வையில்)(இரண்டாவது மோட்டார் சுந்தரம் பிள்ளை,மூன்றாவது தில்லானா மோகனம்பாள்,நாலாவது முதல் மரியாதை)-உலக தரத்தில் பார்த்து முடிவு செய்தாலும் இந்த படங்களுக்கு அவசியம் அவருக்கு கொடுக்க பட்டிருக்க வேண்டும்.சிவாஜியே சரவணன் இடம் ஹிந்தியில் எடுக்காதே ,எங்களை போல் உயிரை கொடுத்து நடிக்க ஆளில்லை என்று கூறிய படம்.பத்மினி கம்போஸ் செய்த பாடல் காட்சி ஹை லைட்.(அன்பாலே)
சுலபமான குடும்ப கதை போல் தோற்றமளிக்கும கஷ்டமான கதையமைப்பு.மினிமம் காரன்டி காக கதையோடு ஒட்டி திணிக்கப்பட்ட நகைச்சுவையை ஒதுக்கினால் விறு விருப்பாக நகரும் கதை.
நடிகர் திலகம் ஒரு கட்டிட மேஸ்திரி , உரிமையாளராக மாறும் உழைப்பாளி,தம்பியுடன் அனாதையாக வாழும் அவர் தன அன்னையுடன்,தம்பியுடன் வாழும் பத்மினி யை கல்யாணம் செய்து மனைவி வீட்டரையும் தன்னோடு வாழ செய்யும் பெருந்தகை.இவர் தம்பியை மனைவியும்,மனைவி தம்பியை இவர் உம அரவணைத்து வாழ ,அப்பாவால் கைவிடப் பட்ட சிற்றன்னை ,அரை தங்கையை தற்செயலாக பார்த்து அடைக்கலம் கொடுத்து ,உண்மையை யாருக்கும் சொல்லாமல் மறைத்து,அதனால் எழும் பிரச்னை,துரோகம்,சந்தேகம்,முக்கோண காதலில் இருவர் தம்பிகள் என சுபமாய் முடியும் படம்.
நடிகர் திலகத்தின் நடிப்பை வர்ணிக்க என்னிடம் தமிழ் இல்லை.தனது சித் தாளை நோட்டமிடும் அழகென்ன,சம்பளம் கொடுக்கும் பொழுது நாசூக்காக சீண்டும் நயமென்ன,பெண்ண கேட்க போகும் போது உள்ள தயக்கம்,பிறகு அமைதியான மனைவி தம்பியை கண்டிக்கும் போது கொதிக்கும் போது ரசிப்பதாகட்டும்,தாம்பத்யம்,பாசம்,நேசம ,கண்டிப்பு எல்லாவற்றிலும் பத்திரந்த்தின் தன்மைகேற்ற படு படு இயல்பாக இருப்பார்.
ஆனால் நடிப்பு கடவுள் வெளிப்படும் நேரம்,சந்தேக நெருடலின் ஆரம்பம்,சொல்ல முடியாத தவிப்பு,இப்படி இருக்காதே என்று உள்ளம் சொன்னாலும் உதடுகள் பாதை தவறி பேசும் காட்சிகள்.கடவுளே,என்னை அடுத்த ஜென்மத்திலும் இந்த நடிப்பு கடவுளின் ரசிகனாகவே படைத்து விடு.சந்தேகம் கொண்டு உதடுகள் பேசும் ஆனால் பார்வை நேசத்தை வெளிப்படுத்தும்.உடல் தடுமாற்றத்தை காட்டும்.பிறகு உதட்டின் குற்றத்திற்காக கண்களும்,உடலும் வருந்தும். எடுத்து கொண்ட பாத்திரத்துக்காக நடிப்பு கடவுளின் முக பாவம்,நடை,வசன உச்சரிப்பு,எல்லாவற்றிலும் அவ்வளுவு இயல்புத்தன்மை.
எந்த கோணத்தில் நின்று அலசினாலும் உன்னத படம். சிவாஜி,எஸ்.எஸ்.ஆர்.,பத்மினி சம்பந்தப்பட்ட உணர்ச்சிமிகு காட்சி ஒன்று மிகவும் பேச பட்டது.
Bharath,
It is heartening to see people born in late 70s and early 80s coming out with their brand of admiration for NT. The enjoyable part of your write up is you were able to bring out your inner feelings quite well. Keep them coming!
Congrats Guruswamy Sir!
வாசு அவர்களிடம் இரண்டு நாட்களுக்கு முன்பு பேசினேன். தனிப்பட்ட பல அலுவல்கள் காரணமாகவும் அவர் இந்த ஓய்வை விரும்பி எடுத்துக் கொண்டிருக்கிறார் என தெரிய வருகிறது. ஆனால் நிச்சயமாக மீண்டும் வருவேன் என்று உறுதி பட கூறினார். அதற்காக காத்திருப்போம்.
சுவாமி,
சாரதி சொன்னது போல் வணங்காமுடி சாதனையில் யாருக்கும் வணங்காமுடி என்று ஆவணபூர்வமான ஆதாரத்தை அள்ளி தந்ததற்கு மிக்க நன்றி. நடிகர் திலகத்தின் படமே நடிகர் திலகத்தின் படத்திற்கு போட்டியாக வருவது இங்கும் நடைபெற்றது. மதுரை தங்கத்தில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த வணங்காமுடி 78 நாட்களை நிறைவு செய்த போது திரையரங்க நிர்வாகம் ஏற்கனவே செய்து கொண்டிருந்த ஒப்பந்தத்தின்படி நடிகர் திலகத்தின் தங்கமலை ரகசியம் வெளியானது. இல்லையென்றால் மதுரை தங்கத்தில் 100 நாட்கள் ஓடிய நான்காவது நடிகர் திலகத்தின் படமாக வணங்காமுடி மாறியிருக்கும்.
அன்புடன்