http://i58.tinypic.com/14x2kvd.jpg
Printable View
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " வெள்ளிவிழா -சிறப்பு ஆலோசனை கூட்டம் , சென்னை தேனாம்பேட்டை மாநகராட்சி சமூக நல கூடத்தில் நேற்று
காலை 10 மணியளவில் நடைபெற்றது.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, பெங்களுரு , புதுவை, திருப்பூர், தூத்துக்குடி , நெல்லை ஆகிய நகரங்களில் இருந்து
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் பெரும் அளவில் கலந்து
கொண்டனர்.
முன்னதாக அனைவருக்கும் காலை சிற்றுண்டி , தேனீர்
வழங்கப்பட்டது.
பெரும்பாலான பக்தர்கள் கூட்டத்தில் பங்கு கொண்டு பேசினர்.
கூட்டம் முடிந்ததும் மதிய உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
உணவு ஏற்பாடுகளை பேராசிரியர் திரு. செல்வகுமார் செய்திருந்தார்.
சிறப்பு கூட்ட நிகழ்ச்சிகள் , உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது .
விழாவில் பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டன.
வெள்ளிவிழா சிறப்பாகவும், வெற்றிபெற அனைவரின் ஒத்துழைப்பு அவசியம் என்று திரு. பி.எஸ். ராஜு பேசினார்.
http://i60.tinypic.com/sdn5hu.jpg