http://www.youtube.com/watch?v=Ma410RAP4nM
Printable View
இனிய நண்பர் கலைவேந்தன் சார்
மக்கள் திலகத்திற்கு கிடைத்த புகழ் , அவர் அடைந்த அரசியல் மற்றும் திரை உலக வெற்றிகள் , எல்லா மதத்தினர்களின் பாராட்டுக்கள் , எல்லா தரப்பு மக்களின் ஏக போக ஆதரவு ,பத்திரிகைகள்
பாராட்டுக்கள் - இன்றளவும் கட்டுக்கோப்பான ரசிகர்கள் - ரசிக மன்றங்கள் - 1989 முதல் 2014 தேர்தல்கள் வரை மக்கள் திலகம் எம்ஜிஆர் - அவரின் இயக்கம் அதிமுக - இரட்டை இலை வெற்றிக்காக உழைத்த ரசிகர்கள் . நம் பயணம் என்றுமே வெற்றியின் இலக்குதான் .
கடந்த கால நிகழ்வுகளை - உள்நோக்கம் கற்பித்து அதன் மூலமாவது எம்ஜிஆரை பற்றி ஏதாவது
தகவலை நியாயபடுத்தி அதற்கு சாயம் பூசி [ மேல்தட்டு - அதிகம் படித்தவர்கள் - குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவர்கள் - மொழி பேதம் ] என்று தங்கள் முகத்திற்கே கரியை பூசி கொள்வதை
எண்ணி பரிதாபம் படுவதை தவிர என்ன செய்ய முடியும் ?
எம்ஜிஆர் என்ற மாமனிதரின் வெற்றிகளை ஜீரணிக்க முடியாத புயலாய் அந்நிய மண்ணில் இருப்பவரின் உள்ளத்தில் நெருப்பாய் கொதித்தாலும் அந்த ''மனிதரின் '' வேதனையான நேரத்தில்
நீரும் நெருப்பும் - மாட்டுக்கார வேலனும் அவரை மகிழ்ச்சி கடலில் நீந்திட வைப்பது நம் மக்கள் திலகம் அல்லவா ?
விரல்கள் கி போர்ட் டைப்பிங் ]எம்ஜிஆரை தாக்கலாம்
உதடுகள் - உள்ளம்- விரல்கள் - மூவரின் ஆளுமையில் கோபாலரின் மூன்று வேடங்களில் ''உள்ளம் '' வெற்றி பெற்று விடுகிறது . அந்த உள்ளம் தான் எம்ஜிஆரை மறக்க முடியாமல் தவிக்கிறது . மக்கள் திலகம் எம்ஜிஆர் நம் உள்ளங்களை விட எதிர்ப்பாளர்களின் உளங்களில் தான் அதிகம் குடி இருக்கிறார் . இதுவே நமக்கு கிடைத்த வெற்றி .
http://i1170.photobucket.com/albums/...ps51aaa25c.jpg
எம்.ஜி.ஆர் விழா 2014" என்ற தலைப்பில் நேற்று (8.11.2014) பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் நகரில் நடைபெற்றது.... சிறப்பு விருந்தினராக பாரீஸ் மேயர் டிடியர் பைலர்ட், துணை மேயர் ஜாக்குலின் பாவில்லா, பிரபல நடிகர் அசோகனின் மகன் வின்சென்ட் அசோகன்,இதயக்கனி ஆசிரியர் எஸ்.விஜயன் ஆகியோர் கலந்து கொண்டனர்....
விழா ஏற்பாடு: பிரான்ஸ் எம்.ஜி.ஆர் பேரவை தலைவர் முருகு பத்மநாபன் மற்றும் குழுவினர்...
குழந்தையும் தெய்வமும்-
http://i1170.photobucket.com/albums/...pse95d92d9.jpg
மு.கோவிந்தராசன் எழுதிய, 'கவியரசு கண்ணதாசன்' நூலிலிருந்து: தமிழ் சங்க விழாவில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றிருந்த கண்ணதாசன், அக்., 17, 1981 அன்று, இந்திய நேரப்படி இரவு, 10:45 மணிக்கு, (அமெரிக்காவில் பகல், 12:00 மணி) அமெரிக்க மருத்துவமனையில் காலமானார். அப்போது, அவருக்கு வயது 54.
கண்ணதாசனின் உடலை சென்னைக்கு கொண்டுவர, அன்றைய முதல்வரான எம்.ஜி.ஆர்., ஏற்பாடு செய்திருந்தார். தமிழகத்தின் அரசவைக் கவிஞராக கண்ணதாசன் இருந்ததால், அவரது சிகிச்சை செலவு முழுவதையும், தமிழக அரசே ஏற்கும் என்றும் அறிவித்திருந்தார்
எம்.ஜி.ஆர்.,
கண்ணதாசனின் இரண்டாவது மனைவி பார்வதி, மூன்றாவது மனைவி வள்ளியம்மை, மகன் கலைவாணன் ஆகியோர் அமெரிக்கா சென்று கவனித்து வந்தனர். இதனால், கண்ணதாசன் உயிர் பிரியும்போது, அவர்கள் கண்ணதாசன் அருகிலேயே இருந்தனர்.
சென்னை தியாகராய நகரில், கண்ணதாசனின் வீட்டில் அவருடைய உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு குத்துவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. முதல் மனைவி பொன்னம்மாளும், மற்ற உறவினர்களும், படத்தின் அருகில் அமர்ந்து கண்ணீர் விட்டு கதறி அழுதவண்ணம் இருந்தனர். தி.மு.க., தலைவர் கருணாநிதி, கண்ணதாசன் வீட்டிற்குச் சென்று, கண்ணதாசனின் மனைவி, மகன்களுக்கு ஆறுதல் கூறினார்.
விமானம் மூலம் கண்ணதாசன் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, நடிகர் சங்க கட்டடத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது; உடல் மீது அவர் எழுதிய, 'இயேசு காவியம்' புத்தகம் வைக்கப்பட்டு இருந்தது!
courtesy dinamalar varamalar thinnai