ChinnakkaNNan: Here is another song in Abheri for you! :)
veLLai thaamarai poovil iruppaaL.......... by Bharathiyar
http://www.youtube.com/watch?v=9GjBEzkzMY4
I remember singing this in school ! :)
Printable View
ChinnakkaNNan: Here is another song in Abheri for you! :)
veLLai thaamarai poovil iruppaaL.......... by Bharathiyar
http://www.youtube.com/watch?v=9GjBEzkzMY4
I remember singing this in school ! :)
நன்றி ராஜ் ராஜ் சார் ..இதோ உங்களுக்காக :)
ஒரே பாட்டு …ஒரே பத்மினி.. இரண்டு திரைப்படம்..
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்து புறமெங்கும்
தோரணம் நாட்ட கனாக் கண்டேன் தோழீ ! நான்
தூக்குத் தூக்கி
https://www.youtube.com/watch?featur...&v=ymaEFeoBY3U
செந்தாமரை..
https://www.youtube.com/watch?featur...&v=t-BlQubHy_4
நிலாப் பாடல் 28: "ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்"
------------------------------------------------------------------------------
இந்தாங்க புரட்சித் தலைவரின் அட்டகாசமான காதல் பாட்டு. மெல்லிசை மன்னரின் இசையில் T.M.S. அவர்களின் குரலில் இன்னாமா இருக்குது. ரெண்டு இடத்துல பாத்துட்டேன். எழுதியவர் கண்ணதாசன்னுதான் போட்டிருக்குது.
இந்தாங்க பாட்டை படிங்க:
ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை (2)
அவளில்லாமல் நானில்லை
நானில்லாமல் அவளில்லை(2)
ல ல லல்ல லா ல ல லல்ல ல ல ல லல்ல ல ல ல ல
கொடி மின்னல் போல் ஒரு பார்வை
மானோ மீனோ என்றிருந்தேன்
குயிலோசை போல் ஒரு வார்த்தை
குழலோ யாழோ என்றிருந்தேன்
நெஞ்சொடு நெஞ்சை சேர்த்தாள்
தீயொடு பஞ்சை சேர்த்தாள்(2)
இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ
………..ஒரு பெண்ணைப் ………….
கலை அன்னம் போலவள் தோற்றம்
இடையோ இடையில் கிடையாது
சிலை வண்ணம் போலவள் தேகம்
இதழில் மதுவோ குறையாது
என்னோடு தன்னை சேர்த்தாள்…
தன்னோடு என்னை சேர்த்தாள் (2)
இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ
----------------------------------------------------------------------------------------------
சி.க. நீங்க இந்த மாதிரி எழுதின ஒரு கவிதை இருந்தா போடுங்களேன். வீட்டுல யாரும் போட்டுடமாட்டாங்கன்னு தைரியமா போடுங்க.
இந்தாங்க பாட்டை மக்கள் திலகத்தோட நடனத்தோட பாத்துகிட்டே கேளுங்க.
https://www.youtube.com/watch?v=ufwwcCxpz8E
தெய்வத் தாயின் மகனின் காதல் எப்பூடி?
சி.க.
ஒரே பத்மினி, இரண்டு திரைப்படம், ஒரே திருப்பாவை இரண்டு நடனங்கள். நன்று. நன்று. இரண்டும் இரண்டு விதமாக இருந்தது. ஜூகல்பந்திக்கெ ஜூகல்பந்தியாக இருக்கிறது. சூப்பர்.
நன்றி கல் நாயக்..
ஒரு பெண்ணைப் பார்த்து நில்வைப் பார்த்தேன் எனக்குப் பிடித்த பாடல்..தாங்க்ஸ்..
எனக்கு என்னவோ இப்படி ஒரு வரி கேட்டதா நினைவு..இடையோ இல்லை இருந்தால் முல்லைக் கொடி போல் மெல்ல வளையும்
சின்னக் குடைபோல் மெல்ல விரியும்
விழியும் பார்த்தால் ஆசை மலரும்..
ம்ம் இந்த மாதிரிப் பாட்டா முன்பு எழுதியிருக்கேனான்னு தெரியலையே..பார்த்தால் பார்ப்பேன் சிரித்தால் சிரிப்பேன் இரவும் பகலும்னு ஒரு பாட் சமபந்தமிலலமல் நினைவுக்கு வருது..பழசு எழுதியிருந்தா போடறேன் புதுசா எழுதவும் ட்ரை பண்றேன்.. வெ.க்ளாஸ்க்கு ரெடியா.
கன்னங்கரிய கூந்தலிலே ஒரு மல்லிகை மாலை சூடவா
உன் கன்னம் இரண்டை பிறர்காணாமல் கைகளினாலே மூடவா ( நோ டோண்ட் அக்செப்ட் அப்படித் தான் ஆரம்பிப்பாங்க!)
பாசமும் நேசமும் ஏ.எம் ராஜா பி.சுசீலா ஜெமினி சர்ரூ..
https://www.youtube.com/watch?featur...&v=SwJ5XYTrZK4
ஹை..அப்படி எல்லாம் ரிட்டயர் ஆக விடமாட்டோமே ராஜ் ராஜ் சார்! :)
*
திடுதிப்பென்று மாறும் நிலை கொண்ட இளம்பருவப்பெண்ணின் மனம் போலவே இருக்கிறது மஸ்கட் வானம்..
போனவாரத்திற்கு முந்திய வாரம் வரை கொஞ்சம் நல்லாவே வெய்யில் ப்ளஸ் உஷ்ணம் என்று இருந்தது திடுதிப்பென்று போன வாரம் காற்றில் குளிரைக் கொணர்ந்தது.. அதன் தொடர்பாக நேற்று முன்னறிவிப்பில்லாமல் மேகங்கள் பொதுகூட்டம் போட்டு கெஜ்ரிவாலின் வெற்றி அப்புறம் பட்ஜெட் எனப் பேசி டபக்கென மழை வேறு பொழிந்தது (சற்றே ஒரு அரை மணி நேரம்..) பின் குளிர் காற்று வேறு..
இன்று காலை கரு கரு மேகங்கள் கரு நாவற்பழக் கண்கள் கொண்ட இளம்பெண்ணைப் போல வானில் சூழ்ந்திருக்க தென்றலாய் இல்லாமல் சற்று சீற்றமாய்க் காற்று கலைக்க கொஞ்சம் கொஞ்சமாய்க்கரைந்தாலும் ஆங்காங்கே அதிகாலை வாசலில் தண்ணீர் தெளிக்கும்போது சிதறும் நீர்ச்சிதறலாய் அங்கங்கே மேகக்கள் வானில்.. கூடவே அடிஷனல் போனஸாய் இனிய உறைக்காதவெயில்..
என்ன எழுதுவதுஎன்று என் மோவாய்க்கட்டையில் இருந்த விரல் மேலும் மேலும் சிந்திக்க சிந்திக்க மனதுக்குள்ளிருந்து வேதாந்தம் பொங்கி எழுந்தது..
மனித வாழ்க்கையில் துயரங்கள் மனதைச் சூழ்வதும் பின் காலம் நேரம் சூழல் போன்ற காற்றுக்களால் கலைவதும் சகஜம் தானே…என நினைக்கையிலேயே. என் சித்தப்பாவின் கனவில் வரும் அந்தக்கால ஹீரோயின்கள் என் நினைவுக்கு வந்தனர்..
அந்தக்கால ஹீரோயின்களின் பாடே ரொம்பக் கஷ்டம் தான்.அதுவும் அந்தக்காலத் திரைப்படக் கதாசிரியர்களுக்கு என்ன ஒரு ஆர்வமோ பாசமோ நானறியேன். எஸ்பெஷலி ஹீரோயின்களுக்கு பெண் பார்க்க வரும் போது ஒரு சோஒ ஓ கப் பாடல் போட்டு விடுவார்கள்.. ஹீரோயினைப் பெண்பார்ப்பவர்கள் அதை முழுக்க ரசித்தும் செல்வர்..ம்ம்.
இதோ.இந்தக் கவலை இல்லாத மனிதனில் கவலையுடன் எம்.என்.ராஜம் பார்ப்பவர் சந்திரபாபு ( நான்படம் பார்த்ததில்லை)
சிரிக்கச் சொன்னார் சிரித்தேன் பார்க்கச் சொன்னார் பார்த்தேன்
எனக்கெனவோ உணர்ச்சியில்லை தோழி
காதல் இன்னமுதே வாழிய நீடூழி..
https://www.youtube.com/watch?featur...&v=Frq2z2uGV4Q
*
*
வீட்டில் திருடர்கள் சூழ்ந்துவிட கதானாயகியின் பெ.பா.படலம்.இருப்பினும் என்னாகிறது. என்ன தான் பாடுவதோ நான் எப்படித்தான் ஆடுவதோஎன்று ஹீரோயின் கண்கலங்கிப் பாட ஹீரோ – இன்ஸ்பெக்டர் கன்ஃபூஸ்டு எக்ஸ்ப்ரஷனே போதுமென்று டைரக்டர் சொல்லிவிட்டதாலோ என்னவோ – முத்துராமன் குழம்பி இருக்க – இங்கு கூட்டம் போட்டு சிலர் பார்க்கும் பார்வை அம்மம்மா..என்று பாடுகையிலேயே நிறுத்தியிருக்க வேண்டாமோ..ம்ம்ஹூம்.
நாணலில் கேஆர்.விஜயா முத்து ராமன்
என்ன தான் பாடுவது நான் எப்படித்தான் ஆடுவது
https://www.youtube.com/watch?v=wokI...yer_detailpage
**
ப்ஹா ப்ஹா..ப்ஹா..
மரக்கலரில் ஜீன்ஸ்
வெள்ளையாய் மேலுடை
அதே நிறத்தில் காலணிகள்
பஃபென்று கூந்தல் அலைபாய
ஓடிவந்து நின்றவளைப் பார்க்கையில்
சிரிப்பு வர.,..
‘ஏய்.. உனக்காக
காலங்காத்தாலே பாக்க ஓடி வந்தா
என்ன சிரிப்பு’
‘கிட்டத் தட்ட குதிரை மாதிரி இருக்கே..
பிடரில அழகாய் முடி அலை மோதுது..
நெற்றிநுனியில் சின்னதாய்
ஒற்றை வரியாய் இறங்கும் வியர்வை..
என்னை இலக்கு வைத்து ஓடி வரும்
உன் எண்ணம்..’
‘யோவ் குதிரை முட்டினால்
எப்படி இருக்கும் தெரியுமா..’
சற்றே பின்சென்று
முட்டுதற்போல் வந்தவளை
இடைபற்றி அணைத்து...
‘அடியே நீ என் காதல்குதிரை’ என்றால்
முறைத்துப் பின் சிரித்தாள்.
மேலும்
‘குதிரைகளை அடக்குவது சுலபம்..
உன்னை..மிகக் கஷ்டம் ஆ ஆ..’
குதிரை கிள்ளினால் இப்படித் தான் இருக்கும்..
திரும்பி அவள் ஓட ஆரம்பிக்க
நானும் ஆண்குதிரையாய் மாறித் தொடர்ந்தேன்.
**
வைஜூ+ ஜெமினி+ ஜொள்+ குதிரை + பாட்டு.
பாட்டுப்பாடவா பார்த்துப் பேசவா
https://www.youtube.com/watch?featur...&v=9Gl2EqJlp6E