4
யாக்ஷானும் சந்திஷும், சபையில் வேண்டுமானால் தளபதி ராஜாவை போல இருந்தாலும், வெளியில் நல்ல நண்பர்கள்...!!!!!!!!!!
'யாக்ஷான், வா அப்படியே எங்கேயாவது உலாவிவிட்டு வருவோம்' என்றான் ராஜ சந்திஷ்...!!!!!!
'ராஜா, செல்லலாம், மனித கண்களுக்கு நாம் தெரியப்போவதில்லை, ஆனால், அவர் அனுப்பி இருக்கின்றனரே sattellites என்று பெயரில் நமக்கு எமன்... அதுக்களின் கண்களிலிருந்து தப்பிப்பதே கடினம்...!!!!!!!!!' என்று எச்சரிக்கையாய் சொன்னான் யாக்ஷான்..!!!!!!!
'நாமெல்லாம் இதற்கு பயப்படக்கூடாது யாக்ஷான்..!!!!! உன்னிடம் நான் ஒன்று சொல்லவேண்டும்...!!!!!!! அதான் உன்னை அழைத்தேன்...!!!!!!'
'வருவது வரட்டும்...!!!!!!' என்று மனதினுள் நினைத்து, 'சரி, வாருங்கள் ராஜா' என்று யாக்ஷான் சந்திஷுடன் அந்த மாயமாளிகையை விட்டு வெளியேறினான்...!!!!!
மாயமாளிகை சுற்றி அருவி அதுதான் அந்த satellites-யிடம் இருந்து மாயமாளிகையை மறைத்து வைத்திருந்தது...!!!!!!!!
மெல்ல வெளியே வர, அறிவியிலிருந்து சாரல் சந்திஷின் வெண்மையான முகத்தில் பட்டு மோட்சம் அடைந்தது...!!!!!!
சாரலை துடைத்துக்கொண்டே வெளியே வர எத்தனித்தபோது மேலே பார்த்தான் சந்திஷ், அந்த satellite பறந்து சென்றது.
'ராஜா இப்படி வாருங்கள்', என்று கொஞ்சம் மறைந்தாற்போல் அழைத்து சென்றான் யாக்ஷான்'
'இந்த எமனை என் காலால் எட்டி உதைக்கலாம் போல் இருக்கிறது ராஜா... அந்த மனித ஜந்துக்களை... ' என்று ஆத்திரமும் கோபமுமாய் கூறினான் யாக்ஷான்...
'ஹஹஹஹா.. பொறுமை பொறுமை... அவர்களை கோபிக்காதே... ஒவ்வொரு நாளும் எவ்வளவு வேண்டுதல்கள் தெரியுமா, நம்மை நம்பி அங்கே எவ்வளவோ லட்ச கோடி ஜந்துக்கள் இருக்கின்றன... வா போகலாம்' என்று சமாதானம் கூறி அழைத்துச் சென்றான் சந்திஷ்...
வெளியே வர, முத்தும் வைரங்களும் செதுக்கிய அழகிய ரதம் நின்றுக்கொண்டிருந்தது... ரதத்தில் ஒரு வெள்ளை குதிரை பூட்டப்பட்டிருந்தது...!!!!!!!! குதிரையின் பெயர் 'திங்கள்'
நீண்ட வால்... ஒய்யாரமாய் இங்கும் அங்கும் தன் தலையை சிலுப்பிக்கொண்டே நின்றிருந்தது..!
'என்ன, திங்கலாறே, எமக்காக காத்திருந்தீரோ' என்று செல்லமாய் அதன் கழுத்தை வருடிவிடான் சந்திஷ்...!!!!!!!!
'ஆமாம்' என்பது போல சந்திஷிடம் தன் தலையை சாய்த்து செல்லம் கொஞ்சியது திங்கள்...!!!!!!!
'ராஜா, அமருங்கள்' என்று கூறி ராஜா ரதத்தில் அமர, தளபதி யாக்ஷான், தேரோட்டியாய் மாறினான்...!!!!!!!
கொஞ்சம் தூரம் சென்ற பிறகு... 'ராஜா ஏதோ சொல்லவேண்டும் என்றீரே' என்று ஆரம்பித்தான் யாக்ஷான்...!!!!!!!!
'ஆங்... யாக்ஷான், என்னை யாரோ, ம்ம்ம் ம்ம்ம்... எனை யாரோ பார்ப்பது போல, என்னிடம் பேசுவது போல ஒரு உணர்வு' என்றான் சந்திஷ்...
'ஹாஹஹா, ராஜா, தங்களுக்கு நகைச்சுவை உணர்வு இருப்பது எனக்கு இப்பொழுது தான் தெரியும்..' என்று நகைத்தான் யாக்ஷான்...
'என்ன...' என்று சற்று தர்மசங்கடத்துடன் கேட்டான் சந்திஷ்...
'மன்னிக்கவேண்டும், பிறகு என்ன ராஜா, இப்பொழுது தானே கூறினீர்கள், லட்சக் கோடி வேண்டுதல்கள் என்று... அதனால் தானே அந்த ஜந்துக்களை ஒன்றும் செய்யாமல் விட்டிருக்கிறோம்' என்று எரிச்சல் பற்றிக்கொள்ள கூறினான் யாக்ஷான்...
'ஹோ அதை கூறினாயா, இல்லை யாக்ஷான் இது சற்று வித்தியாசமாய் இருக்கிறது, குறுகுறுவென எனக்குள் ஒரு... ஒரு...' என்ன தடுமாறினான் சந்திஷ்...
'ஒன்று இல்லை ராஜா, மனதை குழப்பிக் கொள்ளவேண்டாம், தங்களுக்கு ஒய்வு தேவை...' என்றான் யாக்ஷான்...
'ம்ம்ம்ம்... சரி வா நாம் மாளிகைக்கே செல்வோம்'... மறுபடி மாய மாளிகைக்கு திரும்பினர் சந்திரனும், யாக்ஷானும்..!!!!!!!!!
sattelite அர்ஜுன், இந்தியா-விலிருந்து அனுப்பப்பட்டது, அதன் reminder, வீக்லி ரிப்போர்ட் அனுப்ப வேண்டும் என எச்சரிக்க, 'Send Report' என்று பட்டனை அழுத்தி, இந்தியா-விற்கு அனைத்தையும் அனுப்பியது sattelite அர்ஜுன்...!!!!!!!!!!!