http://i46.tinypic.com/14mz3eu.jpg
Printable View
Oru Thai Makkal Re-release image and video forwarded by MGR Devotee Sathya.
http://www.mgrroop.blogspot.in/2013/...ai-makkal.html
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
உலகத்தமிழரின் ஒப்பற்ற மாணிக்கம் மக்கள் திலகம் எம்ஜிஆர் பகுதி 5ஐ தொடங்கி வைக்கும் திரு. ஜெய்சங்கர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை நடிக மன்னனின் பக்தர்கள் சார்பாக தெரிவித்துகொள்கிறேன்..
இன்று காலையில் ஒரு மட்டன் கடையில் தலைவரை தெய்வமாக பூஜிக்கும் ஒரு முஸ்லிம் அன்பர். அந்த கடையில் நான் பிடித்த காட்சி. மனித தெய்வம் எம்ஜிஆர் புகழ் வாழ்க..வாழ்க..
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி கொடுக்கும்போது வள்ளலாகலாம்
http://i50.tinypic.com/2eqdgnc.jpg
மலர் வெளியீடு விழா வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
புதுச்சேரியில் திரு.எம்ஜிஆர் செல்வம் அவர்களுக்கு நேற்று (10.04.2013) அன்று பிறந்த நாள்..வறிய நிலையில் இருந்தாலும் தலைவரின் நினைவு நாளை அனுசரிப்பதிலும் பிறந்த நாளைகொண்டாடுவதிலும் தவறுவதே இல்லை..அவரது நிலையைக் கண்டு நாங்கள் உதவி புரிந்தாலும், அவரிடம் இவ்வளவு செலவு செய்வதை நிறுத்துங்கள் என்று சொன்னாலும்..அவர் கேட்காமல் நமது தெய்வத்திற்கு அவர் சக்தியையும் மீறி செய்துகொண்டுதானிருக்கிறார்..அவரது சிறிய வீட்டில் காணும் இடமெல்லாம் தலைவரின் திருவுருவ படங்களே..அவருக்கு மாதாமாதம் பொன்மனச்செம்மல் அறக்கட்டளையின் மூலம் எங்களால் இயன்ற உதவியை செய்து வருகிறோம்..இந்த ஏழையின் வீட்டில் நம் இறைவன்.
http://i46.tinypic.com/hvb6n8.jpg
மதுரை வீரன் படத்தில் வரும் புரட்சிகரமான வசனம்.
http://i125.photobucket.com/albums/p...pseae17a40.jpg
நரசப்பன்; பேரரசின் பிரதிநிதிகளே! பெருமக்களே! குற்றம் சாட்டப்பட்டு நிற்பவன் குலத்திலே சக்கிலியன்; நம் போன்றாரிடம் பேசுவதென்றால் கூட எட்டி நின்று பேச மட்டுமே அருகதையுடையவன். இவன் காதலித்தான், அது முதல் தவறு.
மன்னன் சொக்கன்: என்ன? காதலித்ததே தவறா?
நரசப்பன்: உம்..ம். மன்னன் மகளைக் காதலித்தான். அது முதல் தவறு. அரண்மனைக் கன்னிமாடத்துக்குள் புகுந்தான். அது இரண்டாவது தவறு. கொற்றவன் பெற்ற குலக்கொடியைக் கூசாமல் தூக்கிச் சென்றான். அது மூன்றாவது தவறு. எதிர்த்து வந்தோரை அடித்தான். ஏனென்று கேட்டோரைக் கொன்றான். கீழ்மகன் இவ்வளவு அநியாயங்களைச் செய்வதா? பொறுக்க முடியுமா, அரசே! ஆகவே இந்தத் தீயவனுக்குத் தக்க தண்டனே விதித்துத் தீர்ப்பளிக்குமாறு மன்னரைக் கேட்டுக் கொள்கிறேன்.
மன்னன் சொக்கன்: இந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் உன் பதில்?
வீரன்: ஒரே பதில்! கண்டேன். கண்டாள். காதலித்தோம்! கட்டுண்டோம்! பொறுத்திருந்தோம்! காலம் வந்தது; தூக்கிச் சென்றேன்.
சொக்கன்: தூக்கிச் சென்றது குற்றம் என்கிறார் நரசப்பன்.
வீரன்: இல்லை!
சொக்கன்: எப்படி?
வீரன்: கேட்டால் கொடுக்கமாட்டாரே! அதனால் தூக்கிச் சென்றேன்.
சொக்கன்: நீதான் கீழ்மகனாயிற்றே. கேட்டால் எப்படிக் கொடுப்பார் என்பது நரசப்பன் வாதம்!
வீரன்: கீழ்மகனா? ‘இட்டார் பெரியோர்! இடாதார் இழிகுலத்தோர்!’ என்ற இரண்டே ஜாதிகள்தான் உண்டு என்பது பள்ளிப்பாடம். இவர் நிழலுக்காவது பள்ளிக்கூடத்தில் ஒதுங்கி இருந்தால்தானே மன்னா! எங்கள் இருவர் உடலிலிருந்தும் ரத்தத்தை எடுத்துச் சோதியுங்கள். அதிலே கீழ்மகன், மேல்மகனென்று பேதம் தெரிகிறதா என்று பாருங்கள்!
நரசப்பன்: ஐயய்யோ வேண்டாம் மன்னா! அந்தப் பரீட்சை! அவன் கீழ்ச்சாதிக்காரன் என்பது பிறப்போடு வந்த வழி…
வீரன்: இல்லை! உன் போன்ற பித்தர்கள் செய்த சதி!
= படம் : மதுரை வீரன் , உரையாடல் : கவியரசு கண்ணதாசன்
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png