மதுரை நகரின் திரையரங்குகள் பற்றிய திரையரங்கு உரிமையாளர்களின் நினைவலைகளின் மூலம் அவர்களும் எந்த அளவிற்கு அவற்றுடன் ஒன்றிப் போயிருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. வினோத் சார் இது போன்ற மேலும் பல நினைவலைகளை மீட்டும் தகவல்களைப் பகிரந்து கொள்ளுங்கள்.
Printable View
மதுரை நகரின் திரையரங்குகள் பற்றிய திரையரங்கு உரிமையாளர்களின் நினைவலைகளின் மூலம் அவர்களும் எந்த அளவிற்கு அவற்றுடன் ஒன்றிப் போயிருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. வினோத் சார் இது போன்ற மேலும் பல நினைவலைகளை மீட்டும் தகவல்களைப் பகிரந்து கொள்ளுங்கள்.
பொதுவாக நகரங்களில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு டூரிங் டாக்கீஸ் எனப்படும் கீற்றுக் கொட்டகை திரையரங்குகளைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. Touring Talkies or Nomadic Cinema என வெளிநாடுகளில் அறியப்படும் தற்காலிக திரையரங்குகள், குறைந்த காலங்களுக்கு அல்லது அவ்வப்போது புதுப்பிக்க வேண்டிய விதிகளுடன் இயங்கும் வகையில் அனுமதி வழங்கபடும். இவற்றில் அலுவலகம் மற்றும் திரையீட்டுக் கருவிகளுக்கு என குறைந்த அளவிலான அறைகள் மட்டுமே கட்டப்படும். மற்ற படி பார்வையாளர்களுக்கு மணல் தரை மற்றும் இருக்கைகள் என இரு வகையில் அனுமதியளிக்கப்படும். மூங்கில் மற்றும் பனை அல்லது தென்னை கீற்றுக்களால் வேயப்பட்ட கூரைகள், அவற்றிற்கு சாரங்கள், மற்றும் வெண்திரைக்கான பகுதி இவையெல்லாம் தற்காலிகமான அடிப்படையில் அமைக்கப்படும்.
இவையல்லாமல் செமி-பெர்மனென்ட் எனப்படும் வகையிலான திரையரங்குகளும் உண்டு.
காலப்போக்கில் சினிமா அனுபவங்கள் திரையரங்குகளின் தன்மை இவையெல்லாம் நவீன மயமாகி விட்டன.
என்றாலும் அந்நாளைய ரசிகர்கள் அனுபவித்த அந்த இனிமையான உணர்வுகள் இந்நாளில் கிடைப்பதில்லை என்பது உண்மையே.
ராகவ் ஜி,
அருமையாக சொன்னீர்கள்
இன்று சத்தம் போட்டு சிரித்து கூட படம் பார்க்க முடியாது. அன்று அரட்டை அடித்து கொண்டும், சிரித்து மகிழ்ந்தும் கீத்து கொட்டகையில் பார்க்கும் அனுபவமே அழகு
நான் நிறைய கீற்று கொட்டகைகளில் படம் பார்த்ததில்லை இருந்தாலும் சில டூரிங் டாக்கீஸில் படம் பார்க்கும் அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி
courtesy - thinnai - net
கூடாரம் என்று விட்டல் ராவ் குறிப்பிடுவது ஆரம்ப கால டூரிங் டாக்கீஸ் என்று ஊருக்கு ஊர் பயணப்படும் தாற்காலிக சினிமா கொட்டகைகளைப் பற்றியதாகும். அந்தக் கூடாரங்களில் சர்க்கஸ் கம்பெனிகளும் வந்தன. அக்காலச் சூழலை விட்டல் ராவ் திரும்பக் கொணர்கிறார்,. ஒரே ப்ரொஜெக்டர் தான் இருக்குமாதலால் ஒவ்வொரு ரீலையும் மாற்றும் சில நிமிட இடைவெளியில் சோடா கலர், பாட்டு புத்தகங்கள் விற்பவர்களின் கூச்சல் எழும். திரையில் படம் சரியாக விழுகிறதா என்று பார்க்க ப்ரொஜெக்டர் அறையின் துவாரத்திலிருந்த் ஆபரேட்டர் பார்த்தால் உடனே “டே ஒழுங்கா ஓட்டுடா” என்றும் கூச்சல் எழுமாம். இது என் அனுபவத்தில் இல்லாத புது விஷயம். பின்னால் நாற்காலியில் அபூர்வமாக வந்து அமரும் உயர் வகுப்பு பெண்களை இடைவேளைகளில் தரையில் இருக்கும் சிலர் திரும்பிப் பார்த்துக்கொண்டே இருப்பார்களாம். இன்னும் சிலர் வெற்றிலை மென்று தரை மணலில் துப்பி மூடிவிடுவார்கள். என்று இப்படிப் பட்ட காட்சிகள்..
பசுபு லேடி கண்ணாம்பா என்னும் அக்கால நக்ஷத்திர நடிகை பற்றி எழுதும்போது கண்ணாம்பா தமிழறியாத காரணத்தால் கண்ணகியோ, ஹரிச்சந்திராவோ எதானாலும் அந்த நீண்ட வசனங்களையும் கூட தெலுங்கில் எழுதி மனப்பாடம் செய்து தான் தமிழில் பேசுவாராம். பேசுவாரா, இல்லை கனல் தெறிக்குமா, கதறுவாரா, ஒன்றாம் மாதம் , இரண்டாம் மாதம் என்று லோகிதாசனைப் பெற்ற வேதனையைப் பட்டியலிட்டு? அப்படியும் கூட நமக்கு அது தெரியாது தமிழாக ஒலித்தது பெரிய விஷயம் தான். இப்போது விட்டல் ராவ் சொல்லித் தான் இந்த விஷயம் எனக்கும் இன்னும் சிலருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். அக்காலத்தில் தான் டப்பிங் வசதிகள் கிடையாதே. அப்படியும் அவர் அக்கால நக்ஷத்திர நடிகையாக உயர முடிந்திருக்கிறது. எம்.ஆர். ராதா முதலில் ஜகந்நாதய்யர் நடத்தி வந்த நாடகக் கம்பெனியில் தான் சேர்ந்தாராம். இக்கம்பெனியின் 1924- வருட நாடகம் “கதரின் வெற்றி” மிகப்புகழ் பெற்றது என்றும் அந்த நாடகத்தை, ராஜாஜி, மகாத்மா காந்தி, கஸ்தூர்பாய், தேவதாஸ் காந்தி, போன்றோரின் பாராட்டைப் பெற்றதாகவும் எழுதுகிறார் விட்டல் ராவ். காந்தியும் ராஜாஜியும் நாடகம் பார்த்தார்கள், பாராட்டினார்கள் என்பது புதிய கேள்விப்பட்டிராத செய்தி. எம்.ஆர். ராதாவின் கோபத்துக்கும் முரட்டு சுபாவத்துக்கும் ஆளானவர்கள் எம்.ஜி.ஆருக்கும் முன்னர் சிலர் இருந்தனராம். கிட்டு என்ற சக நடிகர் முகத்தில் திராவகத்தை ஊற்றி விட்டார் என்றும், தனக்கு பதிலாக கே.பி.காமாட்சி என்பவரை சினிமாவில் ஒப்பந்தம் செய்ததற்கு என்.எஸ்.கேயை கொல்லப்போகிறேன் என்று கிளம்பியவரை என்.எஸ்.கே போய் சமாதானம் செய்யவேண்டி வந்தது என்றும் பல இம்மாதிரி சம்பவங்கள் விட்டல் ராவிடமிருந்து தெரிகின்றன. சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் ஆரம்பித்தது 1934-ல். இது புரிகிறது. ஆனால் நமக்குத் தெரியாத, ஆச்சரியப்படவைக்கும் தகவல், முதல் மலையாளப் படமே சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் தயாரிக்கப்பட்டது 1935-ல் என்ற தகவல் விட்டல் ராவிடமிருந்து வருகிறது. மாடர்ன் தியேட்டர்ஸை டி.ஆர் சுந்தரம் நிறுவியதன் காரணமாக, சேலமே சினிமா நக்ஷத்திரங்களும், நாடக நடிகர்களும் நிறைந்த, அவர்கள் போவதும் வருவதுமான காட்சிகளும், விருந்தினர் மாளிகைகளும், ஹோட்டல்களும், இப்படியான ஒரு சலசலப்பும் பரபரப்பும் நிறைந்த நகரமாக உரு மாறியிருந்த காலம். டி.ஆர். சுந்தரம், மிகுந்த கட்டுப்பாடு நிறைந்த, எந்த பெரிய நடிகரையும் அதிகாரம் செய்து வேலை வாங்குபவர் என்ற புகழோடு, வெளிநாட்டிலிருந்து ஒரு பெண்ணை திருமணம் செய்து, வெள்ளைத்தோலும் நீலக்கண்களும் கொண்ட புத்திரர்களும் கொண்டவர் என்றால், சேலத்தில் எல்லோரும் அது பற்றித் தானே பேசுவார்கள்! அதிலும் டி.ஆர். சுந்தரத்துக்கு சினிமா, நாடகம் என்று வாழ்க்கையின் திசை திரும்பியதற்கு அவரது மனைவிதான் காரணம் என்றால். ஒரு காலகட்டத்தின் தமிழ் நாடக சினிமா வளர்ச்சியில் க்ளாடிஸ் என்னும் அந்த பெண்ணிற்கும் பங்கு உண்டு என்றால்….. ஆனால் 1963-ல் சுந்தரத்தின் மரணத்தோடு அந்தக் கதை முடிந்தது. க்ளாடிஸ் அதற்கு முன்னே பிரிந்து சென்று விட்டாள்.
விட்டல் ராவ் சொல்லும் சில துணுக்குக் காட்சிகள்: அக்கால படங்களிலிருந்து. இது மாடர்ன் தியேட்டருக்கு மாத்திரமான சிறப்பு அல்ல. ஏதோ ஒரு ஹைதர் காலத்துக் கதை. என் டி ராமராவும் பாலாஜியும் கத்திச் சண்டை போடுவார்கள். க்ளோஸ் அப் காட்சி வரும். ராமராவ் ராஜா உடையில் வாளும் மோதிரங்களும். அத்தோடு சமீபத்தில் வாங்கிய ரிஸ்ட் வாட்சும் ஒளி வீசும். இன்னொரு காட்சியில் வீரர்கள் தப்பிச் செல்ல வசதியாக சுவற்றில் இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்விச்சை அணைக்க இருள் சூழும்.
courtesy -net
முதலில் நினைவுக்கு வருவது சிறு வயதில் சினிமா பார்த்த அனுபவங்கள். இன்றைக்கு மல்ட்டி ப்ளெக்ஸ்களிலும், நவீன தியேட்டர்களிலும் ஏ.சி.யில் படம் பார்*க்க முடிகிறது. காலண்டரில் பார்க்கும் மகாவிஷ்ணு போல, மகாபலிபுரம் ஸ்தலசயனப் பெருமாள் போல படுத்த வாக்கில் படம் பார்த்திருக்கிறீர்களா? ; நான் பார்த்திருக்கிறேன்.
அந்நாளில் டூரிங் டாக்கீஸ் என்கிற ஒன்று இருந்தது. வெட்டவெளியில் கூரை போட்டு, கம்புகள் நட்டு எல்லை அமைத்திருப்பார்கள். சைடில் தடுப்பு எதுவும் கிடையாது. எனவே மாலை ஷோவும், இரவு ஷோவும் மட்டுமே நடைபெறும்.
இரண்டே வகுப்புகள்தான். முதல் வகுப்புக்கு மடக்கு சேர் போடுவார்கள். மற்றவர்கள் மண் தரையில் அமர்ந்து படம் பார்க்க வேண்டும். சிலர் மண்ணைக் குவித்து மேடாக்கி, ராவண சபையில் வாலில் அமர்ந்த அனுமன் போல உயரமாக அமர்வார்கள். சிலர் கிராமத்துப் பாட்டிகள் மாதிரி காலை நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். நான்காம் வகுப்பு படிக்கும் வயதில் நான் முன்பே சொன்னதுபோல மகாவிஷ்ணு போஸில் படுத்தபடி மக்கள் திலகத்தின் ‘நாடோடி மன்னனை’ பார்த்தேன். ஒரே ஒரு புரொஜக்டரில்தான் படம் ஓட்ட வேண்டும் என்கிற காரணத்தால் இரண்டு முறை ரீல் மாற்றுவார்கள். ஆகவே இடைவேளைக்கு முன் பத்து நிமிடங்கள், இடைவேளைக்குப் பின் பத்து நிமிடங்கள் ஆக, மூன்று இடைவேளைகள் எல்லாப் படத்துக்கும் உண்டு. இஷ்டம்போல் ஸ்நாக்ஸ் சாப்பிட்டபடி இயற்கைக் காற்றில் படம் பார்*த்த அந்த சுகம், இப்போது ஏ.சி. *தியேட்டர்களில் எனக்குக் கிடைப்பதில்லை.
சினிமா அனுபவங்களைச் சொல்லும்போது தியேட்டரில் நான் பல்பு வாங்கிய சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. (மத்தவங்க பல்பு வாங்கினதைப் படிக்கிறதுன்னாலே தனி குஷிதானே... படியுங்க).
நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம். அப்போது நாங்கள் காரைக்குடியில் இருந்தோம். சிறு வயதிலேயே அப்பாவை இழந்து அண்ணனின் ஆதரவில் படித்தவன் நான். அவருக்கு அடிக்கடி பணி மாறுதல் ஆகிற வேலை என்பதால் ஏறத்தாழ இரண்டாண்டுகளுக்கு ஒரு ஊருக்கு குடும்பத்துடன் இடம் பெயர வேண்டிய சூழல் இருந்தது. அதனால் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். சில நண்பர்கள் காலப்போக்கில் தொடர்பு விட்டும் போனார்கள்.
என்ன சொல்ல வந்தேன்? சினிமாவுக்குப் போனது! என் அண்ணன், நான், அம்மா, சித்தி நால்வருமாக காரைக்குடி அருணாசலா தியேட்டரில் (இப்போது வேறு ஏதோ பெயர் என்று சொன்னார்கள்) வசந்தமாளிகை படம் பார்க்கப் போயிருருந்தோம். சிவாஜி சாரின் நடிப்பை நான் மிகவும் ரசித்த படங்களுள் அதுவும் ஒன்று.
courtesy - net
அந்த காலத்தில் டூரிங் டாக்கீஸ் படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன் . கழுத்தில் தங்க செயின் ,மோதிரம், உடை - ஜீன்ஸ் பேன்ட் ,டி ஷர்ட் தரை டிக்கெட்டில் மணலில் உட்கார்ந்து தான் பார்ப்பேன் . டூரிங் டாக்கீஸ் என்றாலே மணலில் திரை முன்னால் பக்கத்தில் அமர்ந்து பார்ப்பது தான் சுகம் . அப்படி ஒரு முன்னூறு தடவை கல்லூரி நாட்களில் , அதன் பின் கூட பல பழைய படங்கள் தத்தனேரி மாருதி , விளாங்குடி ரத்னா டூரிங் டாக்கீஸ் ரெகுலர் தரை டிக்கெட் கஸ்டமர் நான் .
அப்படி விளாங்குடி ரத்னா தியேட்டர் ' அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ' படம் பார்க்க போயிருந்தேன் . இந்த படம் ஏற்கனவே பலமுறை பார்த்த படம் தான்.பழைய படங்களில் வருகிற துணை நடிகர்கள் சாதாரணமாக மக்களுக்கு தெரியாத நடிகர்களை கூடயார் எவர் என நன்கு நான் தெரிந்து வைத்திருப்பேன் . உதாரணமாக பூபதி நந்தாராம் அந்த அலிபாபா படத்தில் ஒரு துணை வில்லன் . இவர் பின்னால் 'லாரி டிரைவர்' என்ற ஆனந்தன் நடித்த படத்தில் கூட துணை வில்லன் . அப்போது நான் விளாங்குடி தியேட்டர் போயிருந்த போது 'இவர் உயிருடன் இல்லை . இவர் மகன் சுரேந்தர் என்பவர் 'சுதாகர் ' போன்ற நடிகர்களுக்கு டப்பிங் பேசிக்கொண்டிருந்தார்' என்பது வரை எனக்கு தெரியும் .
தரையில் அமர்ந்து படம் பார்த்துகொண்டிருந்த போது அப்போது அறுபது வயது மதிக்க தக்க பெரியவர் ஒருவர் என்னிடம் அந்த படத்தின் காட்சிகள் பற்றி விளக்க ஆரம்பித்தார் . சாதாரணமா ' சும்மா பேசாம படத்தை பாரு பெருசு . நாங்க பார்த்த படம் தான் . எங்களுக்கே கதை சொல்றியா போய்யா ' என்று தான் மற்றவர்கள் சொல்லியிருப்பார்கள் . ஆனால் நான் அந்த பெரியவரை கனப்படுத்த விரும்பி விட்டேன் . தங்கவேலு வரும்போது பாமரன் போல ' இவன் நம்பியாரா ' என்பேன் . அவர் குஷியாகி விட்டார் . 'இல்லே . இவன் சிரிப்பு நடிகர் தங்கவேலு ' என்று எனக்கு அறிவுறுத்தினார் . வீரப்பாவை வரும்போது ' இந்த ஆள் யார் ' என்பேன் . அவர் புளகாங்கிதமாக ' இவனை தெரியாதா . வில்லன் வீரப்பா . நீ வஞ்சிகோட்டை வாலிபன் பார்த்ததில்லையா ? நாடோடி மன்னன் பார்த்ததில்லையா ?' மடையனை பார்ப்பது போல என்னை கேட்டார் .வீரப்பாவுக்கும் எம்ஜியாருக்கும் ஒவ்வொரு முறை சண்டை வரும்போதும் செயற்கையாய் பதட்டத்துடன் ' எம்ஜியார் செத்துடுவாரா ?அயோக்கியன் எம்ஜியாரை கத்தியால குத்திடுவானா ' என அவரிடம் என் சந்தேகத்தை கேட்டுக்கொண்டே தான் இருந்தேன் . அவர் ' எம்ஜியார் எப்பவுமே சாக மாட்டார் . கடைசியா வில்லனை கொன்று விடுவார் . கவலைபடாதே . பேசாம படத்தை பார் ' என்று சொல்லிவிட்டு தொடர்ந்து ஒவ்வொரு காட்சியிலும் கதையை முன்னதாக சொல்லிகொண்டிருந்தார் . பானுமதியை 'யார் ஜெயலலிதாவா இது ?' -நான் அவரை வினவினேன் . அவர் ரொம்ப குஷியாகி எனக்கு பல பாலபாடங்கள் சொல்ல ஆரம்பித்தார் . சக்ரபாணி எம்ஜியாரின் கூட பிறந்த அண்ணன் என அவர் சொன்ன போது நான் 'அப்படியா கூட பிறந்த அண்ணனே படத்திலும் அண்ணனா வர்றானே !' என அதிசயப்பட்டு ஆச்சரியப்பட்டு கதை சொன்ன பெரியவருக்கு ஜென்ம சாபல்யம் கொடுத்து விட்டேன் . என் கூட வந்த நண்பர்களுக்கு சிரிப்பு அடக்க முடியவில்லை . நான் ' காரியத்தை கெடுத்து விடாதீர்கள் . அவருக்கு இந்த சந்தோசம் தருவது என் கடமை ' என்று எச்சரிக்க வேண்டியிருந்தது .
கடைசி சண்டை போது ' எம்ஜியார் செத்துடுவாரா ' என்று மீண்டும் பதற ஆரம்பித்தேன் . ' சாக மாட்டார் . இப்ப வேடிக்கையை பாரு . வீரப்பா ஆள் காலி ' பெரியவர் தேறுதல் சொன்னார் .
படம் முடிந்தவுடன் விளக்கை போட்டவுடன் பெருமையாக என்னை பார்த்தார் . அவர் தான் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தை தயாரித்து இயக்கியவர் போல பெருமிதமாக சொன்னார் " நான் இல்லையின்னா உனக்கு இன்னைக்கு இந்த படம் தலையும் புரிந்திருக்காது . வால் கூட தெரிஞ்சிருக்காது ."
வெளியே வரும்போது சொன்னார் " பழைய படம் நிறைய பார்த்தேன்னா புது படங்களே பார்க்க மாட்ட "
அதற்கு மறு நாள் சென்னை சென்றேன் . அமெரிக்கன் சென்டெரில் Steven Spielburg இயக்கிய The Sugarland Express என்ற நகைச்சுவை படம் இரண்டாம் நாள் பார்க்க கிடைத்தது . அந்த படத்தையும் என்னால் இன்று வரை மறக்க முடியாது . ஏனென்றால் எனக்கு மிகவும் பிடித்த சினிமா பின்னணி பாடகர் பி பி ஸ்ரீநிவாஸ் தற்செயலாக எனக்கு அடுத்த சீட்டில் அமர்ந்து The Sugarland Expressபடத்தை பார்த்தார் என்பதால்.
அவர் பாடிய "காதல் நிலவே !கண்மணி ராதா! நிம்மதியாக தூங்கு" பாடல் என் Favorite song! கல்லூரி காலங்களில் ,அதன் பின் கூட பல திருமண மேடைகளில் ஆர்கெஸ்ட்ராவில் ஒரு இருநூறு தடவையாவது பாடியிருக்கிறேன்.அமெரிக்கன் கல்லூரிமரத்தடி ,வைகையாற்று மணல் , பூங்காக்கள்இவற்றில் 'நண்பர்களுக்காக இந்த பாடலை ஒரு ஆயிரம் தடவை பாடியுள்ளேன் . இந்த "காதல் நிலவே " பாடல் எங்காவது கேட்கும்போது என் ஞாபகம் வருகிறது என நண்பர்களும் உறவினர்களும் இன்று கூட சொல்கிறார்கள் .
பி பி ஸ்ரீநிவாஸ்பாடிய "காதல் நிலவே !கண்மணி ராதா! நிம்மதியாக தூங்கு" பாடல் என் Favourite song என்பதை நான் அவரிடமே அன்று அமெரிக்கன் சென்டரில் படம் ஆரம்பிக்கும் முன் சொன்ன போதுபுன்னகையுடன் ரொம்ப சந்தோசமாக " Thank You!Thank You!"என்றார். படம் பார்க்கும்போது அவர் என்னிடம் அதிகம் பேசவில்லை.The Sugarland Express படத்தை பார்ப்பதில் இருவருமே ஒன்றி போய்விட்டோம் என்பது தான் உண்மை .
.......
டூரிங் டாக்கீஸ்: "கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை' என்ற பக்திப் பாடல் எங்காவது ஒலிக்கக் கேட்டால் இன்றளவும் நம் நினைவுக்கு வருவது டூரிங் டாக்கீஸ்தான்.
சிறு நகரங்களுக்குச் சென்று படம் பார்க்க நேரமில்லாத, அதிகக் கட்டணத்தில் படம் பார்க்க மனமில்லாத மக்களுக்கு டூரிங் டாக்கீஸ்தான் சிறந்த பொழுதுபோக்குக் கூடமாகும். தரை, பெஞ்சு, சேர் என மூவகைகள் மட்டுமே திரையரங்கில் அமைக்கப்பட்டிருக்கும். டூரிங் டாக்கீஸில் சேர் டிக்கெட் வாங்கி படம் பார்ப்பது அந்த காலகட்டத்தில் கெüரவமாகக் கருதப்பட்டது.
மணற்பாங்கான தரையில் உட்கார்ந்து படம் பார்க்கும் சுகமே அலாதியானது. அப்போதெல்லாம் அறியாமை காரணமாக திரைக்கு அருகே அமர்ந்து படம் பார்ப்பதை சிலர் விரும்புவர். அதற்காக முன்னதாகவே டிக்கெட் வாங்கிச் சென்று திரைக்கு அருகில் மணலைத் திரட்டி மேடாக்கி அமர்ந்து படம் பார்ப்பதுண்டு.
நடந்தும், சைக்கிளிலும் வந்து படம் பார்த்துச் செல்லும் மக்களுக்கு மத்தியில் குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் படம் பார்க்க வருவது அப்போது அந்தஸ்து மிக்கதாக எண்ணப்பட்டது. பட இடைவேளையின் போது மட்டுமின்றி எப்போதும் பார்வையாளர்கள் மத்தியில் உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யப்படும். எத்தனை உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டாலும் எல்லோரும் விரும்பி வாங்குவது "கல்கோனா' எனப்படும் உருண்டை மிட்டாய்தான்.
டூரிங் டாக்கீஸ்களில் மட்டுமே கிடைக்கும் இந்த மிட்டாயை படம் தொடங்கும் போது வாங்கி வாயில் போட்டால் முடியும் வரையில் அதன் சுவை இருந்து கொண்டே இருக்கும். டூரிங் டாக்கீஸ் என்று இல்லாமற் போனதோ அன்றே இந்த கல்கோனாவும் காணாமற்போய்விட்டது. ஆனால் இன்று வரையில் டூரிங் டாக்கீஸ் என்றால் கல்கோனாவும் கல்கோனா என்றால் டூரிங் டாக்கீசும் நம் நினைவில் நிழலாடிக் கொண்டிருக்கிறது.
courtesy - net
திருமணத்திற்கு பின்னால் அம்மா விருத்தாசலத்திற்கு வந்துவிட்டாள். படம் பார்க்கும் பழக்கம் மட்டும் அவள் கூட வந்த சீதனமாய் தங்கிப்போனது. அது தழைத்து எங்களையும் பதம் பார்க்க ஆரம்பித்தது.அண்ணனும் நானும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்.அவரின் தத்துவ பாடல் வரிகளும் விஷேசமான அங்க அசைவுகள், அவர் எதிராளியை மடக்கிப்பிடிக்கும் லாவகம் எல்லாம் எங்களைக் கட்டியிழுத்தன. எம்.ஜி.ஆர் படங்களை மட்டுமே இரண்டாம் ஆட்டமாக ஸ்ரீராஜராஜேஸ்வரி டாக்கீசில் தொடர்ந்து வெளியிட ஆரம்பித்தார்கள்.அத்தனை இரண்டாம் ஆட்டத்திற்கும் ஆஜராகிவிடுவோம். இருட்டிலும் கூட்டம் பகல் காட்சியை போல திமிரும்.ஜன நெரிசல் நெக்கித்தள்ளும். விருத்தாசத்திலுள்ள பழைய டாக்கீஸ்களில் இன்றைக்கும் உயிரோடுள்ள ஒரே டாக்கீஸ் அதுதான்.
ஊரில் சந்தோஷ் குமார் பேலஸ்தான் பெரிய தியேட்டர்.அதன் உரிமையாளரின் வீடு ராஜேஸ்வரி டாக்கீஸுக்குப் பின்னால் இருக்கிறது. ஜங்ஷன் ரோட்டில் தியேட்டர் வைத்திருக்கும் உரிமையாளரின் வீடு மணிமுத்தாற்றின் மறுகறையில் இருந்தது.வீடென்றால் மாளிகை.முகவாசல் ஒரு தெருவில்லும் புறவாசல் இன்னொரு தெருவுக்குமாய் நீண்டு நிற்கும். அவரின் பேலஸிலும் இந்தப் பந்தா பவிசுகள் தென்பட்டன. வடதமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய தியேட்டர் என்ற பெயர் இதற்குண்டு. எனக்கு தெரிந்து எங்களூரில் தியேட்டருக்கு முன்பாக பெரிய நீருற்று வைத்த ஒரே தியேட்டர் சந்தோஷ்குமார்தான். அதற்கு பின் பெரியார் நகரில் சுரேஷ் தியேட்டர் புதியதாக முளைத்தது.அன்றைக்கு இதன் பெயர் பெரியார் நகரில்லை.பின்னால் வழக்கத்திற்கு வந்த புதிய அடையாளம் இது.சுரேஷின் உரிமையாளர் வாண்டையார் வகையேறாவை சேர்ந்தவர்.நவீன அடையாளங்களோடு கட்டப்பட்ட தியேட்டராக சுரேஷ் அன்றைக்கு விளங்கியது.இந்தத் தியேட்டருக்கு முன்னால் அழகிய இரு பெண்கள் குடத்திலிருந்து நீருற்றுவதைபோலவும் லஷ்மி தாமரை இலையில் மேல் உட்கார்ந்திருப்பதைபோலவும் இருபுறங்களிலும் யானைகள் தன் துதிக்கையினால் நீர்த் தெளிப்பதைப் போலவும் அழகான முகப்பை வடிவமைத்திருந்தார்கள்.அன்றைய நாளில் கட்டப்பட்ட அழகியவடிவமைப்பு. அதேப் போல் திரையில் படம் போடுவதற்கு முன்னதாக வண்ணவிளக்குகள் தொங்கிகொண்டே மேலேறும் திரைச்சீலையை இந்த தியேட்டரில்தான் முதன்முதலாக அறிமுகம் செய்தார்கள்.அதைக் காணவே தனிக்கூட்டம் தியேட்டருக்குள் புகுந்தது.
சந்தோஷ்குமாரில் ஒரு ரூபாய் ஐம்பது காசுவில் நான் படம் பார்த்திருக்கிறேன்.அதிகப்படியாக டிக்கெட் 2.50 காசுகள் இருந்தது.பால்கனிக்காக இந்தக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதே அளவுக்கான டிக்கெட்தான் சுரேஷிலும். சுரேஷ் தியேட்டர் ஊரைவிட்டு ஒதுக்குப்புறமாக இருந்ததினால் அன்றைக்கு அவ்வளவாக கூட்டம் போகவில்லை. தியேட்டருக்கு முன்னால் சிறைக்கூடம் இருந்தது.சில காவலர் குடியிருப்புகள் இருந்தன.மற்றபடி ஈ ஆடாது. இன்று காவல்நிலையம் இருக்கும் இடத்தில்தான் காவலர் குடியிருப்பு இருந்தது.குடியிருப்பையொட்டி பெரிய ஆலமரம் பற்றி படர்ந்து நின்றது.அதன் கீழ் ஒரு சின்ன பிள்ளையார் கோவில் இருக்கும். மற்றபடி ஒப்புக்கும் ஆள் நடமாட்டம் இருக்காது. பகலிலேயே இந்த நிலமை என்றால் ராத்திரியில் சொல்லணுமா? இப்பகுதியே மயான அமைதியில் மூழ்கும். எனக்குத் தெரிந்து சுரேஷ் தியேட்டரில் இரவுக்காட்சிகளாக பேய்ப்படங்களை திரையிடுவார்கள்.கும்மியிருட்டில் பேய்ப்படம் பார்த்து திரும்புவது அத்தனை எளிதல்ல; 13நம்பர் வீடு,மைடியர் லிசா, அதிசய மனிதன் பார்ட் ஒன்று, பார்ட் இரண்டு,வா அருகில் வா, உருவம் இவை எல்லாம் இங்கேதான் திரையிடப்பட்டன. அதிசயமனிதனை தனியாக உட்கார்ந்து பார்க்கும் தைரியசாலிக்கு பரிசெல்லாம்கூட அறிவித்த ஞாபகம். இந்தப் படங்களில் ஒன்றைக்கூட விடாமல் நாங்கள் பார்த்திருக்கிறோம்.அவ்வளவும் மையிருட்டில். வீடு திரும்பும்போது பயத்தைத் தணிக்க சினிமா பாட்டை பாடிக்கொண்டே வீட்டை வந்து அடைவோம்.
courtesy - net
http://i62.tinypic.com/2v0k8b6.jpg
சிறு வயதில் தியேட்டருக்குப் போவதென்றாலே திருவிழாவுக்குப் போவது போல் இருக்கும். ஏதோ போருக்குப் போவது போல பெண்களின் கூட்டம் படையெடுக்கும். போர்க் கருவிகள் மாதிரி கையில் வாட்டர் கேன்களும் நொறுக்குத் தீனிகளும் அடங்கிய பைகளுடன் விரைவது இன்றும் ஞாபகத்தில் இருக்கிறது.
அப்பா எங்களைத் தியேட்டருக்கு அனுமதிப்பது அபூர்வம். சில நேரங்களில் அந்த அபூர்வம் நிகழ்ந்து விடும். தெருவோடு ஒரு பெரிய கூட்டமாய் போவோம். சாலையில் போகும் போது அம்மாவின் ஓட்ட நடைக்கு ஈடு கொடுத்து நடந்து போவேன். தியேட்டருக்குள் நுழைந்ததும் அம்மா என்னைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொள்வாள். ‘இடுப்பில் உள்ள குழந்தைகளுக்கு டிக்கெட் கேட்க மாட்டார்கள்’ என்பது எனக்குப் பின்னாளில்தான் தெரிந்தது.
http://i61.tinypic.com/2updcw2.jpg
அப்பெரிய அரங்கத்தில் மிகப் பெரிய ஜனத்திரளை பார்ப்பது அந்த வயதில் எனக்கு ஆச்சர்யம் கலந்த பயம். அங்கு தரை டிக்கெட், பெஞ்சு டிக்கெட், சோபா டிக்கெட் என்று வரிசைப்படுத்தப் பட்டிருக்கும். நாங்கள் எப்போதும் தரை டிக்கெட்தான். சரியான இடம் பார்த்து அம்மா உக்கார வைப்பாள். திரைக்கு அருகில் சென்று கதாநாயகன் வரும் நேரத்தில் கிழித்து வைத்திருந்த பேப்பரைத் தூவ அண்ணன் போய் விடுவான். கொண்டு வந்த தின்பண்டங்களை பங்கிடுவதில் எனக்கும் அக்காவுக்கும் சண்டைகள் அரங்கேறும்.
அம்மா பக்கத்து வீட்டு அத்தைகளை எல்லாம் அருகில் கூட்டி வைத்துக் கொள்வாள். தட்டு முறுக்கு விற்கும் சிறுவர்களின் சத்தமும், கூட்டத்தின் ஆர்ப்பரிப்பும், ஒலிபெருக்கியில் வரும் பாடலின் சத்தமும், வியர்வையின் நாற்றமும், மல்லிகைப்பூ வாசமும் அந்தத் தியேட்டரில் நிரம்பி வழியும்.
எந்தப் படம் ஆரம்பித்தாலும் பத்து நிமிடத்திற்கு மேல் நான் தூங்காமல் இருந்ததில்லை. “தூங்காமல் படம் பாரு…படம் பாரு…” என்று அம்மா எழுப்புவாள். ஆனால், சினிமாவுக்குப் போய் வந்தது பற்றி பள்ளிக்கூடத்தில் ஒரு வாரத்திற்கு கதை பேசுவேன்.
பக்கத்துவீட்டு அந்தோணியம்மா அத்தை வாரத்தில் சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் மாலை நேரக் காட்சிக்குப் போய் விடுவாள். ஜெயரத்தினம் அத்தை சிவாஜியின் பரம ரசிகை. சிவாஜி நடித்த படமென்றால் தினமும்கூட சினிமாவுக்குப் போவாள். ஆனால், எம்.ஜி.ஆர்., சிவாஜி காலமெல்லாம் போய், ரஜினி, கமல் என்று வந்த பின் சினிமாவுக்குப் போவதையே நிறுத்திக் கொண்டாள்.
TIRUNELVELI- REMOTE VILLAGE TENT VIEW
http://i62.tinypic.com/4g0ksi.jpg
கீற்று கொட்டகை - இந்தியா எங்கும் ஒருகாலத்தில் கிராமங்களில் மக்களுக்கு நல்ல ஒரு பொழுதுபோக்கை கொடுத்த வசந்த மண்டபம்.
எனது சொந்த ஊரான திருத்தால என்கிற கிராமம். கேரளாவில் பட்டாம்பி என்ற ஊருக்கு அருகில் உள்ள குக்கிராமம். அங்கு பாபு என்ற கீற்றுகொட்டகை மிகப்ரபலம். இப்போது அங்கு ஒரு பள்ளிக்கூடம் கட்டப்பட்டுள்ளது. ( கேரளாவில் ஏன் அதிக சதவிகித படித்தவர்கள் என்று இப்போது புரிந்துருக்குமே ?)
பள்ளி விடுமுறை நாட்களில் த்ருத்தாலா செல்வது வழக்கம். அந்த கிராமத்தின் கடவுள் " தாலத்தில் அப்பன் " - பரமசிவனின் லிங்கம் சுயம்புவாக ஒரு தட்டில் தோன்றியதால் அந்த பெயர் ! தாலம் என்றால் தட்டு என்பது பொருள்.
9 ஆவது அல்லது 11வது படிக்கும்போது பள்ளி இறுதி தேர்வு முடிந்தவுடன் வழக்கம் போல கிராமம் சென்றேன். தினமும் என்னுடைய கேரளா நண்பர்களுடன், அரட்டை, பாட்டு, கிரிக்கெட், கால்பந்து என்று பொழுதை கழிப்பதே ஒரு அலாதி இன்பம்.
தாத்தா மற்றும் பாட்டி மட்டுமே எங்கள் வீட்டில் அங்கு உள்ளார்கள். 9 பேத்திகளுக்கு பின் நான் பிறந்ததால் அந்த வீட்டில் "நானே ராஜா" !
இருந்தாலும் அவர்கள் வயதான காரணத்தினால் அவர்களை நான் எந்த தொந்தரவுக்கும் ஆளாக்குவதில்லை. என்ன தருகிறார்களோ அதை உண்டு, பொழுதை இப்படி கழிப்பது வழக்கம்.
போலியான நகர வாழ்க்கைக்கு நடுவே அப்படி ஒரு இடம் நமக்கு தேவை என்று இப்போது நினைப்பதுண்டு.
அங்கு உள்ள மிக பிரபல கீற்று கொட்டகை " பாபு ". இரண்டு காட்சிகள் மட்டும் ..நம்முடைய கோவை டிலைட் போல. மத்யம் மற்றும் மாலை காட்சி மட்டும். 95% மலையாள பழைய திரைப்படங்கள் மட்டும் திரையிடும் கொட்டகை. எங்கள் கிராமம் பக்கத்தில் கும்பிடி, கடவு என்ற இரு குக்ராமங்கள் உண்டு. அவர்களுக்கும் "பாபு" ஒரு திரை அரங்கே பொழுதுபோக்கு.
பெரும்பாலும் இங்கு பிரேம் நசிர், மது, சத்யன், ஜெயன், வின்சென்ட், இவர்களுடைய விறுவிறுப்பு நிறைந்த படங்கள் மற்றும் சரித்திர கதைகளம் கொண்ட வடக்கன் பாட்டு எனப்படும் தச்சோளி சஹோதரர்கள் மையமாமான படங்கள் இங்கு பெரும் பாலும் வசூலை குவித்துவிடும்.
இப்படி ஒரு தருணத்தில் ஒரு புதன் கிழமை என்னுடைய நண்பரில் ஒருவன் ஒரு நோட்டீஸ் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தான்...சிரித்துக்கொண்டே ....டா..குமாரா (என்னுடைய ஊர்இல் அனைவரும் அழைக்கும் பெயர் குமார் என்பதாகும் ).நிங்களுடே ராஜ்யதிண்டே சிவாஜி கணேசன் சிநேமையா ஈஆழ்ச்சா என்று !! அதாவது உங்கள் ஊரின் சிவாஜி கணேசன் சினிமா இந்த வாரம் என்பது பொருள்.
நோடிசை வாங்கி பார்த்தேன். நடுநாயகமாக நம்முடைய நடிகர் திலகம் சுருள் வாளுடன் ஆக்ரோஷ போஸில் இடதுபுறம் பிரேம் நசிர் வலதுபுறம் ஜெயன் இவர்கள் புகைப்படம்.
கொட்டை எழுத்துக்களில் "தென் இந்திய சினிமாயுடே சிம்ஹம் சிவாஜி கணேசன் ஒப்பம் நம்முடெ ப்ரியன்கரன் நசிரும், ஜெயனும் அவதரிபிகுன்ன - தச்சோளி அம்பு !
அதை பார்த்தவுடன் வெள்ளி மதியமா அல்லது ஞாயிறா எப்போது என்ற குழப்பம் ..இருப்பினும் வெள்ளியே வென்றது !
வெள்ளிகிழமை எப்போழுதுவரும் என்ற ஏக்கத்தில் வெள்ளியும் வந்தது...மதிய உணவு முடித்து...ஒரு 12 அல்லது 15 பேர் கொண்ட குழுவாக
கிட்டத்தட்ட 1 கிலோமீட்டர் நடந்து ...பாபு கீற்றுகொட்டகை நோக்கி படையெடுப்பு. நண்பர்கள் அவரது அக்காள் தமக்கை என எப்படியும் ஒரு 15 பேர் இருப்போம் என்று நினைக்கிறன்.
ருபாய் 1-25 பைசா டிக்கெட் வாங்கி உள்ளே சென்று பலகையில் உட்கார்ந்து பார்த்து பரவசம் அடைந்த படம் தச்சோளி அம்பு. இரண்டு தியேட்டர் மக்கள் அந்த ஒரு கீற்று கொட்டகையில். கிட்டத்தட்ட அனைத்து காட்சிகளுக்குமே விசில் ..கைதட்டல் என்று...இடைவேளையில் கப்பலண்டி (வேர் கடலை) வாங்கி அனைவரும் தோல் உரித்து உண்பது இன்னொரு டைம் பாஸ்.
படம் முடிந்து வரும்போது நடிகர் திலகம் அவர்களை துப்பாகியால் சுடும் வில்லனை அனைவரும் "துஷ்டன் " என்று திட்டி தீர்த்தது இப்போதும் காதில் ரீங்காரம் !
கேரளாவை பொருத்தவரை அன்றும் சரி இன்றும் சரி...நடிகர் திலகம் அவர்களுக்கு , அவரது படங்களுக்கு இருந்த வரவேற்ப்பு போல வேறு எவருக்குமே இல்லை என்று கூட சொல்லலாம் ! மருத நாடு வீரன் படம் கூட தமிழகத்தில் 100 நாட்கள் ஓடவில்லை ஆனால் திருவனந்தபுரத்தில் 119 நாட்கள் ஓடியுள்ளது. அந்த அளவுக்கு நடிகர் திலகத்திற்கு தமிழகத்தை விட அவர் மீது பற்று கொண்ட வெறியர்கள் அதிகம் !
சென்னையில் பாரகோன், பிளாச, சித்ரா, ஸ்டார், காமதேனு, கபாலி ஆகிய திரை அரங்கில் கிட்டத்தட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடைய 305 இல் கிட்டத்தட்ட 210 உக்கும் மேற்பட்ட படங்கள் , திரு m g ராமசந்திரன் அவர்களுடைய 136 இல் 60 உக்கும் மேற்பட்ட படங்கள், திரு ஜெய்ஷங்கர் அவர்களுடைய 180 இல் 50 உக்கும் மேற்பட்ட படங்கள் பார்த்திருக்கிறேன். இதை தவிர விட்டலாச்சார்யா, ஜெமினிகணேசன் , அனால் இவைகள் எவையும் கீற்றுகொட்டகைகள் அல்ல ! இந்த அரங்கில் படம் பார்ப்பது அது ஒரு தனி மகிழ்ச்சி !
மிழில் முதல் சினிமா ஸ்கோப் - ராஜ ராஜ சோழன் - நூறு நாட்கள்
மலையாளம் முதல் சினிமா ஸ்கோப் - தச்சோளி அம்பு - 163 நாட்கள்
தெலுகு முதல் சினிமா ஸ்கோப் - சாணக்ய சந்திர குப்தா - 175 நாட்கள்
மூன்றிலுமே நடிகர் திலகத்தின் ஆளுமை. திரை உலகின் முழு முதற் கடவுளாக வணங்கப்படும் நடிகர் திலகத்திற்கு கிடைத்த மரியாதை !
for jaisankar fans
http://i1170.photobucket.com/albums/...ps02c032dc.jpg
அடேயப்பா...
மலரும் நினைவுகள் அளிக்கும் உத்வேகத்தின் சிறப்பு தான் என்னே... வினோத் சார் தங்களுடைய அருமையான பகிர்வுகள் இத்திரியின் முழுமைக்கு சான்றாக விளங்குகின்றன. தங்களுக்கு என் உளமார்ந்த நன்றியும் பாராட்டும்.
தொடருங்கள்..
டியர் ஆர்கேயெஸ்
தங்களுடைய கேரள மண்ணின் வாசம், அங்கு நடிகர் திலகத்தின் ஆளுமை போன்ற பல விஷயங்கள் இத்திரியின் மூலம் நாமெல்லாம் தெரிந்து கொள்ள உதவியாய் இருக்கிறது. தங்களுடைய அனுபவங்கள் நிச்சயம் நம்மைப் போன்ற தமிழக மக்களுக்கு புதியதாகத் தான் இருக்கும்.
பாராட்டுக்கள்.
தொடருங்கள்..
யுகேஷ் பாபு சார்
இத்திரியின் பல்வேறு பரிமாணங்களில் நட்சத்திரங்களின் அந்நாளைய நிழற்படங்களும் அடங்கும். அவ்வகையில் ஜெய்சங்கர் அவர்களுடைய அபூர்வமான நிழற்படங்கள் இத்திரிக்கு பெருமை சேர்க்கின்றன.
தங்களை ஆவலுடன் வரவேற்பதோடு மேலும் தொடர்ந்து தங்கள் பங்களிப்பை நல்குமாரு கேட்டுக்கொள்கிறேன்.
கண்டிப்பாக சார் என்னால் முடிந்த அளவுக்கு இத் திரியில் பங்களிக்கிறேன்
ஹாய் ஆல்..
ஹாய் ராகவேந்தர் சார்.. உங்களை வாழ்த்தவெல்லாம் எனக்கு வயதில்லை ..எனில் மை ஸின்ஸியர் நமஸ்காரங்கள் டு யூ.:).
முதன் முதலில் இங்கு வாழ்த்தலாம் என வந்தால் டெண்ட் கொட்டாய் பற்றி எரிந்துகொண்டிருந்தது..சரி அணைந்த பிறகாவது வரலாம் என்றால் முட்டை போண்டாவெல்லாம் போடவேயில்லை (ஆமாம் மாயமோதிரம் ராஜஸ்ரீ போஸ்டர் போட்ட டெண்ட் கொட்டாய் படம் கிடைக்கவில்லையா எஸ்.வி.சார்:) )
நடுவில் ராஜேஷ் மதுரை நியூசினிமாவின் ஸ்டில் ( நான் தினசரி அதைக் க்ராஸ் செய்து தான் தெ.ஆ.மூ.வீதியில் இருந்த எங்கள் கடை மற்றும் என் ஆடிட்டரின் ஆஃபீஸிற்குச் செல்ல வேண்டும்) ம்ம்..
எனில் சொன்னாற்போல நான் ஒரு காம்ப்ளான் பாயாக இருந்து வளர வளர மதுரை சிட்டி மேனாக (22 வயது வரை) இருந்தவன்.. எனில் கீற்றுக் கொட்டகை என அழைக்கப்படும் டெண்ட் கொட்டாய் எனத்தமிழில் அழைக்கப்படும் தியேட்டர்களுக்குச் செல்ல வாய்ப்பில்லை..இல்லை இல்லை வாய்ப்பில்லாமல் தான் இருந்தது..
ஆனால் ஆண்டவனுக்கும் விதிக்கும் யாரோ கிச்சு கிச்சு மூட்டினார்களோ தெரியவில்லை. ஒரு காலகட்டத்தில் ஹி ஹி எனமெளனமாகச் சிரிக்க எனக்கும் ஒரு சந்தர்ப்பம் வந்தது..
அப்போது கல்லூரி முடித்து மேற்படிப்பிற்குச் சேர்ந்திருந்த சமயம்..எனது சகோதரியின் கணவர் வடக்குமாங்குடியில் பேங்க் மேனேஜர்.. வீடு அய்யம்பேட்டையில் வைத்திருந்தார்.. எனில் ஒரு பரீட்சைக்கான விடுமுறையில் அங்கு செல்ல வாய்ப்பு ஏற்பட்டது..
இந்தத் தஞ்சாவூர் டு கும்பகோணம் பாதையில் இடையில் வருவது அய்யம் பேட்டை.. இளம்பருவம்..கல்லூரி முடித்த இளங்காளை என்பதால் பச்சைப் பசேல் வயல்கள் பார்ப்பதற்கே கொஞ்சம்பரவசம்..ஆவல் எல்லாம் இருந்து அய்யம்பேட்டைக்கு ஒரு சுபயோக சுபதினத்தில் வந்து சேர்ந்தால்..மனதுக்குள்பலவிதபட்டாம் பூச்சிகள் வந்து சிறகுகளை பட் பட் படாரென அடித்தன..
காரணம் அவள்..(பெயர் வேண்டாமே) என் சகோதரியின் வீட்டுக்குப் பக்கத்து வீட்டு ஆரணங்கு..படித்துக் கொண்டிருந்தது டீச்சர்ஸ் ட்ரெய்னிங்க் கோர்ஸ்.. அப்பாவிற்கு பிஸினஸ்..ஒரு அண்ணா ஒரு தம்பி..அவ்ர்களுக்கு என்ன பிஸினஸ் என்றால்…தறி..யெஸ்..செளராஷ்டிரா தான்..(டி.எம்.எஸ் உங்களுக்கு ரிலேஷனா.. போங்க உங்களுக்கு ஆனாலும் அதீதமான கற்பனை – என அந்தக்காலத்திலேயே எனக்கு சர்டிஃபிகேட் கிடைத்ததாக்கும்)
இருந்தாலும் பாவாடை சட்டை தாவணி போட்டவண்ணம் ஒரு பைங்கிளி வீட்டிற்குள்ளேயே வந்து பேசுவது இளம்பருவ அந்தக்கால ஆடவர்களுக்கு ஒரு இயல்புக்கு மாறான விஷயம் தான்.. அவள் வருவது என் சகோதரிக்கு ஹெல்ப் வேண்டுமா என்பதற்குத் தானேயொழிய வேறெதற்குமில்லை என இங்கு தெளிவு படுத் படுத்துகிறேன்..கற்றுக் கொண்ட செள் மொழியில் நினைவிலிருப்பது ஒகமாவ் (வேகமா வா) மட்டுமே..(ம்ஹீம்..கற்பனையைக் கன்னாபின்னா என ஓட விடாதீர்கள்!)
அவளுக்கு ஒரு அண்ணன் என்றிருந்தேனே..அவன் பெயர் பிரபாகரன் என நினைக்கிறேன்.. ஹோட்டலில் ஃபுல் மீல்ஸ் ஆர்டர் செய்தால் ஒரு புளிப்பு ரைத்தா தந்தால் என்ன செய்வீர்கள்..அதைப் பொறுத்துக் கொண்டு மற்ற விஷயங்கள் நன்றாக இருக்கிறதா எனப் பார்ப்பீர்கள் அல்லவா..அதே போல அவளுக்காக இந்த்ப் புளிப்பு மிட்டாயிடம் பேசவேண்டியதாகி விட்டது..காலப்போக்கில் அவன் கொஞ்சம் ஹெல்ப் செய்ததால் (டேய் ப்ரபாகரா அந்தப் பெட்டிக் கடை வரைக்கும் போய்ட்டு வரலாமா.. ஓ..வரேங்க..) கொஞ்சம் நட்பும் ஆனான்..
அந்தப் ப்ரபாகரன் ஒரு நாள் வந்தான் என்னிடம்.. கண்ணா..
என்னா..
சினிமா போகலாமா
தஞ்சாவூரா..அக்கா வையுமே.. வந்திருக்கறது படிக்கறதுக்குப் ப்ரபாகரா.. ஹாய்..”
“ஹாய்” என்றது எதற்கோ என் சகோதரியைப் பார்க்க வந்திருந்த அவளிடம்..!
அவள் ப்ரபாகரனை முறைத்து,என்னிடம் “ நீங்க இவனோடல்லாம் சேராதீங்க” என்று விட்டு உள்ளே செல்ல ப்ரபாகரன் ஒன்றுமே நடவாதது போல் “ வர்றீங்க்ளா.. தஞ்சாவூர்லாம் இல்லை.. பசுபதி கோவில் விஜயா” என்றான்
என்னப்பா படம்
படகோட்டிங்க..
ஏற்கெனவே சாந்தி தியேட்டர்ல மதுரைல பார்த்துருக்கேனே..ஆனா கொஞ்சம் 4 வருஷம் இருக்கும்..
பின்ன என்ன.. உங்க அத்திம்பேர்கிட்ட வேணும்னா நான் பேசறேன்.. நைட் ஷோ..இங்கருந்து அண்ணாசிலை ஸ்டாப்ல இருந்து மொஃபஸல் பஸ் பிடிச்சுபசுபதி கோவில் ஸ்டாப்ல இறங்கிக்கலாம் (3 கி.மி என நினைவு) திரும்பறச்சே ஏதாவது பஸ் மாட்டும் வந்துடலாம் என்னாங்கறீங்க..
சரி எனச் சொல்ல அவன் உடனே எங்கள் வீட்டின் உள் சென்று உரிமையாய் போனெடுத்து என் அத்திம்பேரின் பாங்க்கிற்குப் போன்செய்து அவரிடம் பேசி ஓகே..ஆனா எதுக்கும் அவனோட அக்காட்ட கேட்டுக்கோ என வந்த பேச்சால் என் சகோதரியிடமும் பேசி ( நைட் ஷோவா போகறீங்க.. இவளே ஒங்க அண்ணன் பார்த்து கண்ணாவக் கூட்டி வருவானா..பாவம் அதுக்கு சூது வாது தெரியாது… போங்க மேனேஜர் வீட்டம்மா ..என் அண்ணா எட்டூருக்குப் போய்ட்டு வந்துருக்கான் ஒண்ணும் ஆகாது.. நானும்கூட ப் போகலம்னு ஆசை என அவளின் குரல் வர டொய்ங்க்க் என்று எம்ஜிஆர் தனது ரதத்தைக் கொணர்ந்து எனக்குத் தர நானும் அவளும் அதில் ஏறி ராஜாவின் பார்வை எனப் பாட ஆரம்பிக்கையில் இது என்ன அவளின் குரல் தொடர்கிறதே! ஆனா நைட்ஷோன்னா ப்ராப்ளம்க்கா காலைல வேலை இருக்கு நிரம்ப எனக் கவிதை முடித்தது..
ப்ரபாகரன் சற்று நிம்மதியாய் (ஏனெனில் அவன் அப்பாவிடம் அவள் பெர்மிஷன் கேட்டு அவனுக்குக் கொடுத்துவிடுவாள்) பெருமூச்சு விட்டு ஒரு ஒன்பது மணிக்குக் கிளம்பலாம் என்று சொல்லிக் கிளம்பிச் சென்றான்..
ஒன்பது என்று சொன்னவன் வந்தது ஒன்பதேகாலோஒன்பதரையோ..பின் விசுக்விசுக்கென்று அய்யம்பேட்டை அண்ணா சிலை ஸ்டாப்பிற்குச் சென்று அந்த இருளில் (ஸ்ட்ரீட் லைட் எரியவில்லை) இருகண்களுடன் வரும் மொபஸல் பஸ்ஸிற்காகக் காத்திருந்து ஏறி இரண்டு ஸ்டாப்புகளோ என்னவோ சரிவர நினைவில்லை கடந்து இறங்கி பசுபதிகோவிலில் கொஞ்சம் நடந்தால் பளீரென மின்னலடிக்கும் இளம்பெண் சிரிப்பாய் மின்னிக்கொண்டிருந்தாள் விஜயா.பலப்பல ட்யூப்லைட் வெளிச்ச் உபயத்தில்.. .கொண்டிருந்தது விஜயா டூரிங்க் தியேட்டர்..
முன்னே எம்ஜிஆர் மீனவத்தொப்பியுடன் வாங்க என மெளனமாய் வரவேற்க கோப விழி விழித்த சர்ரோஜா தேவி போஸ்டர். உள்ளே சென்றால்.. கண்ணா தரை டிக்கட்டே வாங்கட்டா..ஏம்ப்பா எனக்குப் பழக்கமில்லையே..சரி என மனசில்லாமல் சேர் டிக்கட் வாங்கிக் கொடுத்து விட்டு அவன் தரைடிக்கட் பக்கம் போகப் பார்க்க டேய் நானும் வர்றேன் என அவனுடனேயே சேர்ந்து தரை டிக்கட்டிற்கு ச் சென்று விட்டேன்..
என்னதானிருந்தாலும் கல்லூரி இளைஞன் ஆன காரணத்தினால் பேண்ட் தான் போட்டிருந்தேன்..கொஞ்சம் டைட்..தரையில் கஷ்டப்பட்டு உட்கார்ந்தால் ர்ர்ர் எனச் சத்தம்..என்னகண்ணா வயிறு சரியில்லயா.. அடப் போடா ப்ரபாகரா. ஒண்ணும் இல்லை எனச் சமாளித்து உட்கார்ந்து (பெரிதாய்க் கிழிந்திருக்குமோ.. இருக்கிற நல்லபேண்ட்டில் ஒன்றாயிற்றே இது) ஆ எனப் படம் பார்க்க ஆரம்பித்தேன்..
நன்றாகவே இருந்தது அந்த அனுபவம்.ப்ரபாகரன் உச்சியிலோ சைடிலோ இருந்த ஃபேன் பக்கமாகவே அமர்ந்திருந்தான்.. படம் வந்து இரண்டாவது வாரமோ என்னவோ தியேட்டரில் அதிகக் கூட்டமில்லை. கொஞ்சம் சேர்பக்கம் திரும்பிப்பாருங்க..பார்த்தால் சேர் டிக்கட்டில் குறைந்த நபர்களே அமர்ந்திருந்தன.ர்.. தரை டிக்கட்டில் சுமாரான கூட்டம்..
படம் ஆரம்பித்து தரை மேல் பிறக்கவிட்டான், என்னை எடுத்து தன்னைக்கொடுத்து போனவன்போனாண்டி எனபாடல்க்ள் வந்து போக இரண்டு மூன்று இண்டர்வல் என நினைவு.. படம் ஒரு வழியாய் முடிந்தது அரெளண்ட் இரண்டு இருக்கும்..
இப்ப என்னடா பண்ணப்ரபாகரா..
பஸ் கிடைச்சா போகலாங்க..
அப்படின்னா..
இல்லைன்னா நடராஜா தான்..
சாலையில் நின்று வந்தபஸ்ஸை நிறுத்தி ஏற முயற்சிக்கலாம் என்று பார்த்தால் எதுவும் நிற்கவில்லை..மோஸ்ட்லி திருவள்ளுவர் தான்..அவர்கள் நிறுத்தவும் மாட்டார்க்ள்..எனில் ப்ரபாகரன் சொன்னதுபோல நட ராஜா தான்..
நான் ப்ரபாகரன் பின் தியேட்டரில் சந்தித்த மற்றுமிரு இளைஞர்கள் (ப்ரபாவுக்குத் தெரிந்தவர்கள்) என நடக்க ஆரம்பித்தோம்..
சாலை இருபுறங்களிலும் கொஞ்சம் விளக்குகள் இருந்தாலும் மோஸ்ட்லி இருள்..தவிர மரங்களும் இருக்க கொஞ்சம் ச்ச்சிலீர் காற்றும் அடிக்க நட நட நடராஜா.. நேர் மேலே நிலா.. அய்யோ பாவம் கண்ணா இன்னும் இளச்சுடுவானேன்னு நினைத்ததோஎன்னவோ அதுவும் கூட வந்தது..(அப்போது நான் நன்கு ஒல்லியாய் இருப்பேனாக்கும்)
ஒருவழியாய் கிட்டத்தட்ட மூன்றரை வாக்கில் வீட்டிற்கு வந்து அக்கா கீழே ஒளித்துவைத்திருந்த வீட்டுச் சாவியை எடுத்துத் திறந்து ஹாலிலேயே டபக்… பட்டெனத் தூக்கம்..
மறு நாள்காலை அக்கா நன்றாகவே ப்ரபாகரனைக் கூப்பிட்டுத்திட்டினாள்.. நீ பாட்டுக்குப் பையனை ( நான் தான்!) ராவேளைல இப்படி நடத்திக்கூட்டுக்கிட்டு வரலாமா..ஏதாவது காத்து கருப்புல்லாம் அடிச்சா என்ன ஆறது.. ஏண்டி இவ்ளே நீயாவது முன்னாலேயே சொல்லியிருக்கக் கூடாது என அவளிடமும் கேட்க அந்தப் பெண்ணின் கண்ணோரம் நீர்.. எனக்குத் தெரியாதுக்கா இது இப்படிச் செய்யும்னு என அண்ணனைக் கோப முறை முறைத்து விட்டு என்னருகில் வந்து மெல்ல மென்மையாய் என்னைக் கரம் தொட்டு “ஸாரிங்க” என்றாள்… எனக்கு நிஜம்மாகவே பேய் (மோகினி) அறைந்தாற்போல சிலிர்த்தது..!
(பி.கு. அடுத்த இருவருடங்களில் என் அத்திம்பேருக்கு மறுபடிமாற்றல் வந்து சென்னை சென்றுவிட நான் ப்ரபாகரனையும் அவளையும் மீண்டும் சந்திக்கவேயில்லை.)
நன்றி திரு ராகவேந்திரன் சார்
http://i59.tinypic.com/2zje04j.jpg
http://i57.tinypic.com/aykrhg.jpg
http://i58.tinypic.com/30icn6f.jpg
வேலூர் அண்ணா கலை அரங்கம்
தற்போது இந்த அரங்கமும் சபாவாக மாறிவிட்டது
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்
உங்களின் அன்பான பாராட்டுகளுக்கு நன்றி . நீங்கள் துவக்கிய இந்த கீற்று கொட்டகை - திரி கடந்த கால நினைவுகளை அசை போட வைக்கிறது . இன்றைய தலை முறையினர் தெரிந்த கொள்ள வேண்டிய பல அபூர்வ தகவல்கள் இணயத்தில் கிடைப்பதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்
டூரிங் டாக்கீஸில் பார்த்திட்ட அந்த இனிமையான நாட்கள் -படங்கள் - அனுபவங்கள் நமக்கு கிடைத்த அருமையான வாய்ப்பு .
மறந்தே போய் விட்ட ஒரு சரித்திர சான்றை நீங்கள் நினைவு படுத்தி ,அதை திரியில் புதிய உத்வேகத்துடன் அழைத்து செல்ல காரணமான உங்களுக்கு மீண்டும் என் அன்பான நன்றி .
எம்.ஜி.ஆர்.கூட திருமலை டாக்கீஸுக்கு வந்தாரே... சிவாஜி தன்னோட பட ரிலீஸ் அன்னிக்கு இங்க வந்தாரே...’ என தங்கள் வாழ்வின் ஏதோ ஒரு சம்பவத்தை இந்த தியேட்டருடன் தொடர்புப்படுத்தி பேசுகிறார்கள் 70 வயதைக் கடந்த செங்கல்பட்டு ரசிகர்கள். 'திருமலை டூரிங் டாக்கீஸ்’- சுதந்திரத்துக்கு முந்தைய செங்கல்பட்டு மாவட்டத்தின் முதல் டாக்கீஸ். 'காஞ்சி முருகன் - சென்னை கெயிட்டி - செங்கல்பட்டு திருமலை’ என்பது அந்நாளில் பிரபலமான வாசகம்.
http://i59.tinypic.com/2ldkjl2.jpg
இந்த தியேட்டரை துவக்கிய திருமலை நாயுடு, திரை உலகம் மற்றும் அரசியல் பிரபலங்களோடு நெருங்கிய நட்பில் இருந்தவர். செங்கல்பட்டு நகராட்சியின் துணைத் தலைவர் உள்ளிட்ட ஏகப்பட்ட பொறுப்புகளை வகித்தவர். 1940-ல் அவரால் துவங்கப்பட்ட திருமலை டாக்கீஸ், அவரது மறைவுக்குப் பின் மூன்றாம் தலைமுறை வரை தொடர்ந்தது. துரதிருஷ்டவசமாக பொன்விழாவைக் கொண்டாட சில மாதங்களே இருந்த நிலையில் 1989-ம் ஆண்டு இறுதியில் தன் சேவையை நிறுத்திக்கொண்டது இந்தத் திரை அரங்கம். இங்கு இறுதியாகத் திரையிடப்பட்ட படம் 'வாழ்வே மாயம்’!
''அது ஒரு பொற்காலம். 1940-களில் சென்னையின் பிரபலமான தியேட்டர்களில் மூணே முக்காலணா டிக்கெட். அதே வசதியைக்கொண்ட திருமலையில் ரெண்டணாதான். பி.யு.சின்னப்பா வோட 'மங்கையர்க்கரசி’, கே.பி.சுந்தரம்பாளோட 'ஒளவையார்’, எம்.ஜி.ஆரின் 'மந்திரிகுமாரி’னு அந்தக் கால சூப்பர் ஹிட் திரைப்படங்களை முட்டி மோதி பார்த்தது இன்னமும் நினைவில் இருக்கு. டாக்கீஸின் இன்னொரு விசேஷம் சவுண்ட் சிஸ்டம்.
ஜாவர் சீதாராமன் போலீஸா நடிச்ச 'அந்த நாள்’ படத்தை, இந்த சவுண்ட் சிஸ்டத்துக்காகவே 10 தடவைக்கு மேல் பார்த்தேன். தன் மகன்களில் ஒருத்தரான கிட்டப்பாவை இதுக்காகவே சவுண்ட் இன்ஜினீயரிங் படிக்கவெச்சார் திருமலை நாயுடு. அப்பவே புரொஜக்டரை இத்தாலியில் இருந்து வரவழைச்சார்!'' என பழைய நினைவுகளில் மூழ்கிய காவலர் கணேசன், ''ஏதோ இன்னிக்குத்தான் நடிகர்களுக்குப் பாலாபிஷேகம் பண்றாங்கனு நினைப்பீங்க. பாகவதரோட 'திருநீலகண்டர்’ படத்துக்கு அந்த நாள்லயே அப்படி நடந்திருக்கு. 'நீலகருணாகரணே...’னு பாகவதர் பாடிட்டு வர்ற காட்சிகளில் எல்லாம் விசில் சத்தம் காதைப் பிளக்கும். இப்பவும் தியேட்டரைக் கடந்து போகும்போது அன்னிக்குப் பார்த்த படப் பாட்டு எல்லாம் மனசுல காட்சியா ஓடும்'' என்று சோகமாகிறார்.
இயக்குநர்கள் ஸ்ரீதர் மற்றும் கோபு இருவரும் கிட்டப்பாவின் வகுப்புத் தோழர்களாம். கிராமத்தில் இருந்து பள்ளிக்குப் போக்குவரத்து வசதி இல்லாத நிலையில் கிட்டப்பா வீட்டில் தங்கித்தான் ஸ்ரீதர் படித்து இருக்கிறார். பின்னாளில் ஸ்ரீதர் கதை, வசனம் எழுதிய முதல் படத்தை தந்தையிடம் வற்புறுத்தி இங்கு திரையிட்டாராம் கிட்டப்பா.
தியேட்டர் வாசலில் பழக் கடை நடத்தி வந்த சந்திரசேகர், ''ஓஹோனு இருந்த இந்த தியேட்டரை வெளியாட்கள் லீஸுக்கு எடுத்து நடத்தினாங்க. அவங்களும் கட்டுப்படி ஆகலைனு விட்டுட்டாங்க. 'மாட்டுக்கார வேலன்’ படம் வந்தப்ப இங்கு இருந்து ரயில்வே ஸ்டேஷன் வரை வரிசை நின்னுச்சு. 'திருமால் பெருமை’ படத்தை ஒவ்வொரு நாளும் பூஜை போட்டுத்தான் காலைக் காட்சியை துவங்கிவைப்பார் திருமலை நாயுடு'' என்கிறார்.
தியேட்டரின் தற்போதைய நிலை குறித்து சினிமா விநியோகஸ்தரும் நாயுடுவின் பேரன்களில் ஒருவருமான நந்தகுமார், சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்... ''திரையுலகில் என்.எஸ்.கே. முதல் எம்.ஜி.ஆர். வரை பலரும் எங்கள் தாத்தாவுடன் நட்பில் இருந்தார்கள். நாகேஷ் எப்பப் படம் பார்க்க வந்தாலும் 'சவுண்ட் சிஸ்டம் சென்னையை மிஞ்சுதுய்யா. என்ன வித்தை பண்றீங்க?’னு கேட்பாராம். மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரமும் சென்னையில் இருக்கும்போது எப்போதாவது படம் பார்க்க வருவார்.
எம்.ஜி.ஆர் மற்றும் ஸ்ரீதரோட எல்லாப் படங்களையும் நாங்க ரிலீஸ் செய்தோம். ஸ்ரீதர் எங்க சித்தப்பாவின் நண்பர். அவர் கல்யாணம்கூட எங்க தாத்தா தலைமையில்தான் நடந்தது. பாகவதர், என்.எஸ்.கே, பி.யு.சின்னப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜி, முத்துராமன், கே.ஆர்.விஜயானு ஏகப்பட்ட பேர் இங்க வந்து இருக்காங்க. 1979-ல் தாத்தா இறந்த பிறகு தியேட்டரை அப்பா கோவிந்தராஜன், சித்தப்பாக்கள் புருஷோத்தமன், கிட்டப்பா எடுத்து நடத்தினாங்க.
தியேட்டரை மூடினப்ப குறைந்தபட்ச கட்டணம் 65 பைசாதான். பெஞ்ச் டிக்கெட் 1.75 பைசாதான். இப்ப தியேட்டரின் பழம்பெருமையும் கட்டடமும்தான் மிஞ்சி இருக்கு. இருந்தாலும் தியேட்டரை மீண்டும் திறக்க முயற்சி எடுத்துட்டு இருக்கோம். திருமலை டாக்கீஸ் மறுபடியும் செங்கல்பட்டின் தவிர்க்கமுடியாத அடையாளமாக மாறும்னு நம்புறேன்!'' என்கிறார் நந்தகுமார்.
- எஸ்.கிருபாகரன், படங்கள்: வீ.ஆனந்தஜோதி
எனது மிக அழகான கிராமமான வடபுதுப்பட்டி தேனி மாவட்டம் மேற்குமலைகளின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. இன்று அதன் மொத்த அடையாளமும் நகரிய நசுக்களால் அழிந்து போனாலும் எனது மூளையில் அதன் பழைய வரைபடங்கள் எனக்கு பொங்குமின்ப நினைவலைகளை உருவாக்குபவை. அந்த ஊரில் எனக்கு திரைப்படம் பார்க்க கிடைத்த அரங்கம் மூன்று. சரஸ்வதி, வீரக்குமார், ஆர்த்தி. முதல் சரஸ்வதியின் முதலாளி யாரென ஞாபகம் இல்லை. மற்ற இரண்டுக்கும் முத்து நாயக்கன் முதலாளி. சரஸ்வதியை இழுத்து மூடிய பின் வீரகுமார் வந்தது. வீரக்குமார் பெயர்மாற்றம் செய்யப்பட்டு ஆர்த்தி ஆனது. ஆக ஏக காலத்தில் எங்கள் ஊரில் ஒரே டூரிங் டாக்கீஸ் தான். இவை அனைத்தும் தொண்ணூறுகளில் முடிவுக்கு வந்தன. இப்போது வடபுதுபடியில் திரையரங்கு இல்லை. பக்கத்து டவுன் தேனியிலோ வடக்கில் பெரியகுளத்திலோ பொய் படம் பார்க்க வேண்டும். போதும் தம்பட்டம். இனி படங்களின் பெயர் தொகுப்புகள்.
புரட்சிதலைவனின் இரண்டு படங்களை சொல்லி தொடங்கலாம். மலைக்கள்ளன் மற்றும் ஆயிரத்தில் ஒருவன். பொய்முடி இல்லாத அழகு தல புரட்சித்தல. சிவாஜியின் ராஜா மற்றும் கௌரவம். ஜெமினியின் வாழ்க்கைபடகு, வல்லவனுக்கு வல்லவன் - ஜெமினி வில்லனாக வருவார்! உத்தரவின்றி உள்ளே வாவும் சட்டம் என் கையில் எனும் படமும் நினைவில் இருக்கிறது. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வசிந்தாமனியும் ஜெகன்மொகினியும் மறக்க ஏலாதவை. மிகவும் ரசித்துப்பார்த்த எம் ஜி ஆர் படம் ஒன்று எவ்வளவு யோசித்தாலும் பெயர் வரவில்லை. அதில் வரும் வில்லன் ஒரு பின் நவ்வீனத்துவ திருடனாய் நடிப்பார். இதில் இறுதியாக வீரக்குமாரின் முதல் நாள் படமான வருவான் வடிவேலன்!
இரண்டாவது கட்டமாக சில படங்கள்: கண்களை பொத்திக்கொண்டே முழுப்படத்தையும் பார்த்தேன்.. இல்லை கேட்டேன் - நூறாவது நாள்! அதில் வரும் உருகுதே இதயமே என்கிற பாடலை நீண்ட நாட்களாய் கேட்கப்பயந்து கொண்டிருந்தேன். மூன்று முடிச்சு - க்யூட் ஸ்ரீதேவி, தாமரைநெஞ்சம்-சரோஜாதேவி, டிக் டிக் டிக், இன்று போய் நாளை வா, இணைந்த கைகள், சிவப்புமல்லி, ஒருதலை ராகம், அவள் அப்படித்தான், முள்ளும் மலரும்.
மூன்றாவது பாகம்: முதல் மரியாதை, காதலுக்கு மரியாதை, தேவர்மகன், பாட்ஷா, வாலி, கேளடி கண்மணி, புலன் விசாரணை, காதல், எங்க சின்ன ராசா
கடைசியாக நான் பாடும் பாடல்.
ஒரு வழியா எழுதிட்டேன். இவை எல்லாம் இப்போ பிடித்த படங்களா என்று கேட்டால் இல்லை என்றுதான் கூறமுடியும். ஆனால் இப்படங்களைப் பார்த்த நாட்களில் இவை எனக்கு மிகுந்த மன சிலாக்கியத்தை உண்டு பண்ணியவை.
எல்லாவற்றையும் தாண்டி எனக்கு ஒரு சிறப்பு படம் உண்டு அது எந்த பட்டியலிலும் இணைக்க முடியாதது - ரத்தக் கண்ணீர்.
courtesy - net
வினோத் சார்
செங்கல்பட்டு தேனி மாவட்டம் என டூரிங் டாக்கீஸ்களைப் பற்றிய ஒரு மினி டூரே அழைத்துச் சென்று நினைவுகளையும் அந்த நாட்களுக்கு கொண்டு சென்று விட்டீர்கள். சூப்பர் சார்
சி.க. சார்
பசுபதிகோயில் நான் போயிருக்கிறேன். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு பிரத்யேகமான கோயில் உண்டு. அந்த வகையில் ஒரு முறை அந்தக் கோயிலுக்கு சென்றிருக்கிறேன். இன்றும் அந்த கும்பகோணம் தஞ்சாவூர் பாதை ரம்மியமாகத் தான் காட்சியளிக்கிறது. அந்த சாலை சற்றே குறுகலாகத் தான் இருக்கிறது. நெடுஞ்சாலையிலிருந்து சுமார் 1 கி.மீ. உள்ளே சென்றால் கோயில். தாங்கள் சொல்லும் அந்த டூரிங் டாக்கீஸ் அந்த குறுகிய தெரு வழியாகத் தான் போக வேண்டும் என நினைக்கிறேன். காரணம் நான் பார்த்த வரையில் நெடுஞ்சாலையிலிருந்து செல்லும் அந்த தெருவில் கோயிலுக்கு சற்று முன்னர் வலது புறத்தில் மிகப் பெரிய பரப்பிலான இடத்தில் ஒரு கட்டிடம் பழைய தோற்றத்தில் இருந்தது. ஒரு வேளை ஏதேனும் கம்பெனி இயங்கிக் கொண்டிருக்கலாம். தாங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால் அந்தக் கட்டிடம் தான் தாங்கள் சொன்ன டூரிங் டாக்கீஸாக இருக்கலாம்.
அந்த பிரபாகரனை அதற்குப் பிறகு பார்த்தீர்களா...
ராமமூர்த்தி சார்
வேலூர் அண்ணா கலையரங்கம் நிழற்படங்கள் அருமை...
அது முனிசிபாலிட்டியினுடையதா அல்லது தனியாருடையதா..
தற்போது கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றனவா...
ஏனெனில் பல பிரபல கலை நிகழ்ச்சிகள் அங்கு நடைபெறுவதைப் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் படித்ததாக நினைவு
சென்னை அம்பத்தூர் லூகாஸ் டிவிஎஸ் பின்புறம் கிட்டத்தட்ட இரண்டு கிமீ. அல்லது அதற்கும் மேலான தூரம் நடந்து சென்றால் மன்னூர்பேட்டை பகுதி வரும். அங்கே ராணி என்றொரு கீற்றுக் கொட்டகை இருந்தது. இதைப் பற்றி நான் முன்பே நடிகர் திலகம் திரியில் குறிப்பிட்டுள்ளேன். நாங்கள் திருவல்லிக்கேணியிலிருந்து செல்வோம். அபூர்வமான நாங்கள் பார்க்காத நடிகர் திலகத்தின் படங்களைப் பார்க்கும் வாய்ப்பினை அந்தக் கீற்றுக் கொட்டகை ஏற்படுத்தித் தந்தது. காவேரி இல்லற ஜோதி அவள் யார் போன்ற அபூர்வமான படங்களை அந்த டெண்ட் கொட்டகையில் தான் நாங்கள் பார்ப்போம். எங்கள் நண்பர்கள் குழுவில் - அனைவருமே சிவாஜி ரசிகர்கள் - ஒருவர் அந்தக் கொட்ட்கையில் ஓடும் நடிகர் திலகம் படத்தைப் பற்றிய தகவலைச் சொல்லி விடுவார். எந்த பழைய படமென்றாலும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தான், அதிக பட்சம் ஒரு வாரம் ... என்ற வகையில் சுழற்சி முறையில் தான் திரையிடுவார்கள் - எனவே உடனே நாங்கள் மறுநாளே எப்பாடு பட்டாவது அப்படத்தைப் பார்க்க சென்று விடுவோம். தகவல் சொன்ன நண்பருக்கு அந்த ஏரியா அத்துப்படி என்பதால் அவர் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு அவசர அவசரமாக கிளம்புவோம் -- வீட்டில் திட்டு வாங்காமலா கட்டாயம் உண்டு - அப்போதெல்லாம் நேரடி பஸ்வசதி இல்லை இரண்டு அல்லது மூன்று பஸ் மாறி செல்வோம். படம் இரவு 1 மணிக்கு முடியும் அங்கிருந்து நடந்தே பேருந்து நிறுத்தத்திற்கு வருவோம்.. டீக்கடை கூட இருக்காது... வெளியூர் பஸ் மட்டுமே வரும். அதில் ஏறி சென்ட்ரல் வந்து அங்கிருந்து நடந்தே திருவல்லிக்கேணி வருவோம்...
இரவு இரண்டு மூன்று மணிக்கெல்லாம் சென்றால் வீட்டில் கதவு திறக்கும் பிரச்சினை என்பதால் நண்பன் வீட்டில் பொழுதைக் கழித்து விட்டு காலை 5 மணிக்கு எழுந்து வீட்டுக்குச் சென்று அரைகுறைத் தூக்கம் முடித்து அன்றாட கடமைகளுக்கு ஆயத்தமாவோம்.
மறுநாளைய விவாதம் முழுவதும் முதல் நாள் பார்த்த படத்தைப் பற்றியும் அதில் நடிகர் திலகத்தின் நடிப்புப் பற்றியுமே இருக்கும்..
இப்படிப்பட்ட சுவையான மறக்க முடியாத அனுபவங்களை இன்றைய தலைமுறை பெரிதும் மிஸ் பண்ணுகிறது...
ராகவேந்திரன் சார்,
டூரிங் டாக்கிஸ் அதாவது கீற்றுக் கொட்டகை என்ற இந்தத் திரியில் சிவாஜி புகழ் பாடும் இந்தக் கட்டுரையைப் பதிந்ததற்கு நீங்கள் என்னை தயை கூர்ந்து மன்னிக்க வேண்டும். ஏனென்றால் சிவாஜி புகழ் பாடி விடும் திரியாக இந்த திரி போய் விடக் கூடாதே என்ற கவலையில் சிலர் சாப்பிடாமல் கூட கொட்டகைக்கு வெளியே நின்று கொண்டே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு சிவாஜி பற்றிய பதிவுகள் வந்தால் சலிப்பு வேறு தட்டி விடும். சிவாஜி பற்றி முற்றும் உணர்ந்த ஞானிகளுக்கு முன் நாம் எம்மாத்திரம்?
அதனால்தான் பயமாய் இருக்கிறது. இந்த வீணாய்ப் போன சிவாஜி பதிவுக்கும், கீற்றுக் கொட்டகைக்கும் என்ன சம்பந்தம் என்ற அறிவார்ந்த கேள்விகள் வேறு வரும். பாவம். நீங்கள் திரியை ஆரம்பித்தவர் என்று அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டி வேறு வரும். இந்தப் பாவமெல்லாம் எனக்குத் தேவையா?
இருந்தாலும் எனக்கு உள்ள ஒரு சிறு அறிவை வைத்து ஒருமுறைக்கு நூறுமுறை யோசித்துதான் இந்த பதிவை பயந்து பயந்து இங்கே இடுகை செய்கிறேன். இந்த கட்டுரையின் ஆசிரியர் திரு. மானா பாஸ்கரன் சிவாஜி என்ற நடிகரின் 'பாபு' படத்தை தன் தந்தையுடன் மணவாளம்பேட்டை என்ற கிராமத்தில் உள்ள 'லஷ்மி டாக்கீஸ்' என்ற கொட்டகையில் பார்த்த அனுபவத்தை எழுதியிருக்கிறார்.
அதனால்தான் இந்த பதிவு கீற்றுக் கொட்டகை திரியில் இட தகுதி மற்றும் பொருத்தம் வாய்ந்தது என்ற எனக்குத் தெரிந்த சிற்றறிவில் இதைப் பதிவிட்டுள்ளேன். (அந்த லஷ்மி டாக்கீஸ் கீற்றுக் கொட்டகையாக இருக்க, அப்புறம் தியேட்டர் பில்டிங் ஆக இல்லாமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன். அது வேறு கீற்றுக் கொட்டகை திரியில் சிமெண்ட் கட்டிட திரையரங்கைப் பற்றி எப்படிப் போடலாம் என்று கேள்வி வருமோ என்று வேறு இன்னொரு பயம். 'அஞ்சி அஞ்சிச் சாவார்' கதைதான் என் கதை)
திரிக்கு சம்பந்தமில்லாமல் இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் இந்தப் பதிவை நீக்கி விடுங்கள். ஏனென்றால் நான் சீனியர் ஹப்பர் என்றாலும் திரி தொடங்கியவர் எவரும் பதிவுகளை நீக்கிவிடலாம் என்ற 'மகா உண்மை' தெரிந்தவன். ரெண்டாவது எனக்கு என் பதிவுகளை இவ்வளவு அனுபவம் வாய்ந்த ஹப்பராக இருந்தும் டெலிட் வேறு செய்யத் தெரியாது. என்ன பண்ணித் தொலைய! எனக்கு இருக்கும் மூளை அவ்வளவுதான். நான் ஒண்ணுமே தெரியாத பச்சைப் பாப்பா வேறா? எனவே பிடிக்கவில்லை என்றாலோ, ரூல்ஸ் மீறி இருந்தாலோ, சம்பந்தம் இல்லை என்றாலோ நீங்கள் இந்தப் பதிவை எடுத்து விடலாம்.
இன்றைய 'தி இந்து' தமிழ் நாளிதழில் வந்துள்ள திரு.மானா பாஸ்கரன் அவர்கள் எழுதியுள்ள நடிகர் திலகத்தின் புகழ்பாடும் அருமையான கட்டுரை.
'நான் சிவாஜி கட்சி'
http://i1087.photobucket.com/albums/...513565ba77.jpg
http://i1087.photobucket.com/albums/...MG_0001-10.jpg
Mr Raghavendra Sir,
As far as I am concerned the Anna Kalaiyarangam in Vellore is under the control of Vellore Corporation. But I do not
know whether it is correct or not and they used to screen films when I was in Chittoor.
கீற்று கொட்டகை.
என்னை போல பாக்கியம் செய்தவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பது எனக்கு தெரியாது. உலகத்தில் எவ்வளவு உன்னதங்கள்,இன்பங்கள்,வித வித அனுபவங்கள் உண்டோ அத்தனையும் அடைந்திருக்கிறேன்.
1950 களில் பட்டதாரி அன்னை(உயர்நிலை பள்ளி ஆசிரியை), பொறியியலாளரான தந்தை. ஆனாலும் எங்கள் மேல் எதையும் திணிக்காத முற்போக்கான ,பிள்ளைகளுக்கு நண்பர்களாக மட்டுமே இருந்த (60 களில் இது லட்சத்தில் ஒருவருக்கு கூட வாய்க்காது)உன்னத பெற்றோர்கள். ஜவகர் பள்ளி ஆங்கில கல்வி தவிர்த்து, நான் நண்பர்களுடன் என்.எல்.சி பள்ளியில்தான் படிப்பேன் என்றதும் மறுக்காமல் என்னை அனுமதித்த பெற்றோர். பத்தே வயதில் என் தேர்வுக்கு மதிப்பளித்தவர்கள்.நெய்வேலியில்,என்.எல்.சி பள்ளிகளில் கிட்டத்தட்ட 8 வயதில் மூத்த சக மாணவர்கள். அதிகாரிகள்,
மேற்பார்வையாளர்கள்,தொழிலாளர்கள்,நிரந்தரமற்ற பணியாளர்கள்,கூலிகள் அத்தனை மாணவர்களும் அருகருகே ,ஒரு நகர சூழலில்.பெற்றோர்களோ ,சாதி,மத,அந்தஸ்து வித்யாசம்
பாராத முற்போக்காளர்கள்.
இவர்கள் எல்லோருடனும் நட்பு பேணும் பாக்கியம். திடீர் குப்பம்,
தெற்கு மேலூர் என்று ராயப்பன்,மீனாட்சி சுந்தரம்,ராஜு,ராமசந்திரன் என்று குடிசை வீட்டு நண்பர்கள்.இவர்களுடன் தை பூசம்,பங்குனி உத்திரம்,இலவச சினிமாக்கள்,கண்காட்சிகள்,பொருட்காட்சிகள்,தொடர ்ந்த சைக்கிள் சுற்றுக்கள்,ரெகார்ட் டான்ஸ் ,கீற்று கொட்டகை என்று சுற்றியிருக்கிறேன்.
சொரத்தூர் ஜோதி,முத்தாண்டி குப்பம் (பெயர் மறந்து விட்டேன்),ஆடுதுறை ஆர்சியே,திருபுவனம் சாந்தி,திருவிடை மருதூர் ஸ்ரீதரன்,குத்தாலம் (பெயர்?)என்பவை கிட்டத்தட்ட பழைய படங்கள் அனைத்தும் நான் பார்க்க உதவியவை. சேர்,பேக் bench போக வசதியிருந்தும் (தரை- 25 காசு, பெஞ்ச் 35 காசு,back bench 60 காசு, மடக்கு சேர் 90 காசு) , தரையில் மற்ற நண்பர்களுடன் அமர்ந்து படங்களை ருசிப்பேன். (நாலு இண்டர்வல் .நடு நடுவில் ரீல் மாற்றம்,ரீல் அறுந்து போதல்).சமயத்தில் ரீல் வந்து சேராது. மாற்று படம் போட படும்.கார்பன் நெருக்கி வைக்காமல் அவ்வப்போது இருட்டு . ஆனாலும் என்னை நான் வெளியிட்டு ,சுதந்திரமாக படத்தை அனுபவிக்கலாம். கத்தலாம்.கை தட்டலாம்.விசிலடிக்கலாம்.குதிக்கலாம். நண்பர்களுடன் பேசலாம்.என்ன ஒரு அனுபவம்?ஆனாலும் வெற்றிலை எச்சில்கள் ,சில சமயம் சிறு நீர் நாற்றம் படுத்தியதால் ,பெற்றோர் எனக்கு கொடுத்த 1.50 ஐ, நண்பர்களுக்கு பேக் பெஞ்ச் டிக்கெட் வாங்கி (25 காசு அவர்கள் மீதி என் பங்கு) upgrade செய்து விடுவேன். (அவர்களையும் சிவாஜி ரசிகர்களாக upgrade செய்து விடுவேன்)
நான் சைட் அடித்த பெண் நண்பிகள் ,டைப் ரைட்டிங் வகுப்புகள் சேர்ந்த போது ,கூட சேரும் சபலம் வந்தாலும் சேராமல் விட்டது ,கம்ப்யூட்டர் காலத்தில் வேகமாக டைப் பண்ணும் வித்தையை வளர்த்து உதவியிருக்கும்.
கண்ணா மணி,ஸ்ரீதர்,சாமா என்ற திருவிடைமருதூர் ,திருபுவனம் கீற்று நண்பர்கள் எங்கிருக்கிறார்களோ?நெய்வேலி நண்பர்கள் தேடுவது சுலபம். சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் ஆட்டோ ஓட்டுனர்.மெயின் பஜார் கடை வியாபாரி. corporation worker .கோயில் அர்ச்சகர் .U .S .A ,australia என்று எங்காவது பீராய்ந்து தேற்றி விடலாம். ஒருவர் கிடைத்தால் அவர் மூலம் இன்னும் 5 பேர். திருவிடை மருதூர் நண்பர்களைத்தான் காணவே முடிவதில்லை.
நன்றி. என் பெற்றோர்களே. வீட்டுக்கு வரும் துப்பரவு தொழிலாளிக்கு அதே டம்ளர் தண்ணீர். மூத்தவராக இருந்தால் யாராக இருந்தாலும் அவர் என்று சொல்லும் மரியாதை .என்று என்னை செதுக்கியதற்கு.(ஆனாலும் எனக்கு efficiency குறைந்த ஏனோ தானோ நபர்களை அவர்கள் எந்த தொழில் எந்த நிலை கொண்டவரானாலும் பிடிக்காது.)
நன்றி நெய்வேலி. நன்றி என் நண்பர்கள்.
இன்னும் கூட எனக்கு அனைத்து தரப்பிலும் என்னை நன்கு புரிந்த உயிர் நண்பர்கள் உண்டு. படிப்பு,பணம்,அந்தஸ்து,உலக அனுபவம் இவை என் தலைக்கேறாமல் என்னை தரையில் வைத்திருப்பவை ,என் கீற்று கொட்டகை அனுபவங்களே.
கோ,
கலக்குகிறீர்கள். என்ஜாய் செய்து படித்தேன். நெய்வேலி ஒரு சுவர்க்க பூமிதான். நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருக்கலாம். அதனால்தான் கொஞ்சம் சிரமமில்லாமல் பதிவுகளும் இட முடிகிறது.
நீங்கள் குறிப்பிட நினைக்கும் டூரிங் செடுத்தான்குப்பம் அன்னை என்று நினைக்கிறேன். முத்தாண்டி குப்பத்துக்கு செடுத்தான்குப்பம் தாண்டித்தான் போக வேண்டும்.
நெய்வேலி என்று டைப் செய்து உங்கள் உயிர் நண்பர் பெயரை குறிப்பிடாமல் இருந்தால் என்ன அர்த்தம்.? 'என்னை' என்று அர்த்தம்.
ராகவேந்தர் சார்.. பல வருடங்கள் ..கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் இருக்கும்.. எனில் படம் போனது மட்டும் நினைவில்.. ப்ளஸ் அந்த இரவு நடை.. நெஜம்மாகவே த்ரில்ல்.. அந்தக் கட்டடமெல்லாம் நினைவில் கொஞ்சம் புகையாகத் தான் இருக்கிறது..
இல்லை..அப்புறம் அந்தப் ப்ரபாகரையும் அந்த அவளையும் பார்க்கவில்லை..:)
படம்பார்க்காமல் கீற்று க் கொட்டகை மட்டும் பார்த்தது மதுரை திருவாதவூரில்..இதுபற்றி மதுரகானங்க்ளில் எழுதியிருக்கிறேன்..
கீற்றுக் கொட்டகை மற்ற நண்பர்களின் உங்கள், கோபால், ரவிகிரண் சூர்யா,எஸ்வி சார் போன்ற அனுபவங்கள் வெகு சுவாரஸ்யமாக இருக்கின்றன..படங்களும் நன்று.. நன்றி..
[QUOTE=chinnakkannan;1171571]ஹாய் ஆல்..
ஹாய் ராகவேந்தர் சார்.. உங்களை வாழ்த்தவெல்லாம் எனக்கு வயதில்லை ..எனில் மை ஸின்ஸியர் நமஸ்காரங்கள் டு யூ.:).
முதன் முதலில் இங்கு வாழ்த்தலாம் என வந்தால் டெண்ட் கொட்டாய் பற்றி எரிந்துகொண்டிருந்தது..சரி அணைந்த பிறகாவது வரலாம் என்றால் முட்டை போண்டாவெல்லாம் போடவேயில்லை (ஆமாம் மாயமோதிரம் ராஜஸ்ரீ போஸ்டர் போட்ட டெண்ட் கொட்டாய் படம் கிடைக்கவில்லையா எஸ்.வி.சார்:) )
http://i58.tinypic.com/2web2tx.jpg
சென்னை மாகாணத்தின் பல இடங்களில் டூரிங் தியேட்டர்களில் மவுனப்படங்கள் திரையிடப்பட்டு வந்தன. சென்னை மவுண்ட்ரோட்டில் போட்டோ ஸ்டுடியோ வைத்து இருந்த ரகுபதி வெங்கையா என்பவர், தானும் சினிமாவில் காலடி வைக்க விரும்பினார். முதல் கட்டமாக பியல் பிஷ்ஷர்ஸ் ராஜாஸ் கேஸ்கட் என்ற 500அடி நீளம் கொண்ட இரண்டு மவுன படங்களை அமெரிக்காவில் இருந்து வரவழைத்தார். கூடவே க்ரோனோ மெகாபோன் என்ற திரையிடும் ப்ரொஜக்டர் கருவியையும் வரவழைத்தார். சென்னை ரிப்பன் கட்டிடம் அருகில் இருக்கும் விக்டோரியா பப்ளிக் ஹால் என்ற அரங்கில் அந்த படங்களை திரையிட்டார். கூட்டம் அலைமோதியது. நல்ல வருமானம் கிடைத்தது. அதில் கிடைத்த வருமானத்தை கொண்டு ஒரு டூரிங் சினிமாவை தொடங்கினார். டூரிங் என்றால் ஊர் ஊராக சென்று சினிமாவை திரையிடுவது. இவரும் குண்டூர் தொடங்கி கட்டாக் வரை பல நகரங்களில் அந்த படங்களை திரையிட்டு லாபம் பார்த்தார்.
கிடைத்த லாபத்தை வைத்து சென்னையில் மவுனப்படத்தை திரையிடும் ஒரு நிரந்தர சினிமா தியேட்டரை கட்டினார். தென் இந்தியாவில் இந்தியர் ஒருவர் கட்டிய முதல் தியேட்டர் இது தான். 1913ல் கட்டப்பட்ட அந்த தியேட்டருக்கு கெயிட்டி என்று பெயரிட்டார். 2005வரை அந்த தியேட்டர் இயங்கிவந்தது.
இவரே 1914ல்தங்கச்சாலை சந்திப்பில் கிரவுன் என்ற தியேட்டர், 1915ல்புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் க்ளோப் என்ற தியேட்டரையும் கட்டினார். பின்னர் க்ளோப் தியேட்டர் ராக்சி என்று பெயர் மாற்றப்பட்டது. மூன்று தியேட்டர்களுமே மவுன படங்களை திரையிட்டு வந்தன.
அமெரிக்காவில் பிரபலமான யுனிவர்சல் நிறுவனம் தயாரித்த க்ளட்சிங் ஹேன்ட் கிரேட் ரிவார்டு, கீஸ் ஸ்டோன்காப்ஸ் போன்ற மவுன படங்களை வரவழைத்து தனது மூன்று தியேட்டர்களிலும் திரையிட்டார். ஹாலிவூட் சினிமாக்களை தெனிந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் வெங்கையாதான். இதன் மூலம் தெனிந்திய சினிமாவில் பெரும் தாக்கம் ஏற்பட்டது.
இந்த காலக்கட்டத்தில்தான் இந்தியாவில் ஹரிச்சந்திரா, கீசகவதம் போன்ற மவுனப்படங்கள் வெளிவந்தன. வெங்கையா இந்த இரண்டு படங்களையும் தனது மூன்று தியேட்டர்களிலும் மாறி மாறி திரையிட்டார். இவற்றின் வெற்றி இவரை படத்தயாரிப்பில் ஈடுபடும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. தனது மகன் ரகுபதி பிரகாசாவை லண்டனுக்கு திரைப்படதுறையில் பயிற்சிபெற அனுப்பினார்.
இந்தியர் ஒருவர் தெனிந்தியாவில் கட்டிய இந்த மூன்று தியேட்டர்களிலுமே 1932ல் பேசும் படங்களை திரையிடும் நவீன கருவிகளை பொருத்தினார். இதன்பின்னர் இங்கு பல பேசும் படங்கள் திரையிடப்பட்டன.
Thanks - ravindran - net
டூரிங் டாக்கீஸில் இருந்து மல்டிப்ளக்ஸ் தியேட்டர் வரை பார்த்திருக்கிறேன். நான் பார்த்து அதிசயித்த முதல் தியேட்டர் - தூத்துக்குடியில்
http://i61.tinypic.com/vnmn90.jpg சார்லஸ் தியேட்டர்.
இந்த தியேட்டர் 1970 இல் கட்டப்பட்டது. நான் நினைவு தெரிந்து பார்த்த காலத்தில், இந்த தியேட்டர் தனது வயோதிக காலத்தில் இருந்தது. அது கட்டப்பட்ட காலத்தில் எவ்வளவு பிரபலமாக இருந்திருக்கும் என்று என்னால் ஓரளவுக்கு யூகிக்க முடிந்திருக்கிறது. ஏனெனில், அது ஒரு அரண்மனை போல் வடிவமைத்து கட்டப்பட்டிருந்தது.
தென் தமிழகத்தின் முதல் தியேட்டரா என்று தெரியவில்லை. அப்படியே இல்லாவிட்டாலும், விரல்விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையிலேயே திரையரங்குகள் அப்பகுதியில் இருந்திருக்கும். திரையரங்கை பார்ப்பதே அதிசயம் என்ற காலத்தில், இது போல் கட்டப்பட்ட திரையரங்கு எத்தகைய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும்?
இந்த தியேட்டரின் முன்பகுதியில் ஒரு தோட்டம். முன்பகுதியில் இருந்து சாய்வான நிலையில் மேல்நோக்கி பால்கனி உயரத்திற்கு செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலிருந்து இதில் நீர் பாய்ந்துக்கொண்டிருக்கும். மைசூர் பிருந்தாவன் நினைவுக்கு வருகிறதா? அது பார்த்திருக்காவிட்டால், ‘குரு சிஷ்யன் - வா வா வஞ்சி இளமானே’ நினைவுபடுத்துக்கொள்ளுங்கள். அதனுடைய சிறிய மாடல். பால்கனியில் இருந்து தியேட்டரின் வெளியே வர, இதன் இடையே படிகள் அமைத்திருப்பார்கள்.
நான் சென்ற காலத்தில் ‘இருக்கிற தண்ணி பிரச்சினையில் இது வேறயா?’ என்று வழிந்தோடும் தண்ணீரை நிறுத்திவிட்டார்கள். மற்ற விஷயங்களைப் பார்ப்போம்.
இந்த தியேட்டரில் இருப்பது போல் பால்கனியை எங்கும் பார்த்ததில்லை. பொதுவாக, பால்கனி திரையின் நேர் எதிர் பக்கம் இருக்கும். இங்கும் அந்த பால்கனி உண்டு. அது தவிர, இரு பக்கமும் இரு சிறு பால்கனிகள் உண்டு.
எல்லாம் பெஞ்ச், சேர் என்றாலும் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்று சாதாரணமாக பெயர் வைத்துவிடவில்லை. DUKES, MARQUESS, KINGS CIRCLE. இவைதான் இங்கு இருக்கும் வகுப்புகளின் பெயர்கள். அதுபோல், எந்த ஒரு விஷயத்தையும் சாதாரண கட்டிட வடிவமைப்பில் கட்டவில்லை. வட்டமாக சுற்றி சுற்றி செல்லும் படிக்கட்டுகள், வேலைப்பாடுகளுடன் தூண்கள். ஏன், குப்பைத்தொட்டி கூட ராஜா காலத்து மாடலில் தான் இருக்கும்.
இது நான் கேள்விப்பட்டது. இந்த தியேட்டரை கட்டிய சமயம், அதன் உரிமையாளரிடம் படம் வாங்கி திரையிட பணம் இல்லை. தன்னிடம் இருந்த பணம் முழுவதையும் கொண்டு, திரையரங்கைக் கட்டியிருந்தார். அப்பொழுது எம்.ஜி.ஆர் தான் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை பணம் வாங்கிக் கொள்ளாமல் கொடுத்தார். எம்.ஜி.ஆருக்கும் அப்படத்தை வெளியிடுவதில் சிரமம் இருந்தது. படம் வெளியாகி பெரும் வெற்றி. அந்த திரைப்படத்திற்கு வந்த கூட்டத்தின் வரிசை நெடுந்தொலைவுக்கு நின்றது. படத்தில் வசூலான பணத்தை கொண்டு, அந்த கடனை உரிமையாளர் திருப்பி கட்டினார்.
இப்படி பெருமையுடன் ஆரம்பிக்கப்பட்ட திரையரங்கு, பிற்காலத்தில் வெறுமையானது. முன்னால், கொட்டிக்கொண்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. செடிகள் வளர்ந்திருந்த பகுதியில் ஜல்லியில் கான்கிரீட் போடப்பட்டது. பெரிய திரையரங்கு என்பதால், பராமரிப்பு சிரமம். இது தியேட்டர் அல்ல, குடோன் என்று விமர்சிக்கப்பட்டது. பொதுவாகவே, தூத்துக்குடி திரையரங்குகளில், இருக்கும் சீட் எண்ணிக்கைக்கு ஏற்ப டிக்கெட் கொடுக்க மாட்டார்கள். இண்டர்வெல் வரை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். இந்த தியேட்டரும் புதுப்படங்களின் ஆரம்ப நாட்களில் பாதி தூத்துக்குடியை அடைத்துக்கொண்டு இருக்கும்.
கடைசி வரை அந்த பெஞ்சை மாற்றவில்லை. சிலர் வசதியாக படுத்துக்கொண்டு படம் பார்த்தார்கள். திரைப்படங்களில் இசை வேறொரு கட்டத்தை அடைந்த போது, இத்திரையரங்கின் ஒலி அமைப்பு அதற்கு ஈடுக்கொடுக்கவில்லை. வௌவால்கள் குடியிருக்க தொடங்கின.
ஒரு கட்டத்தில் திரையிடுவது நிறுத்தப்பட்டது. வேறொருவர் வாங்கினார். பிறகும், மூடப்பட்டே கிடந்தது. நான் கடைசியாக ‘சேது’ படம் பார்த்ததாக நினைவு. சிறிது காலம் கழித்து, இன்னொரு நிறுவனம் இந்த இடத்தை வாங்கியது. கால மாற்றத்திற்கேற்ப, திரையரங்கு இடிக்கப்பட்டு, வணிக வளாகம் கட்டப்பட்டது.
COURTESY - KUMARAN KUDIL -NET
சி.க சார்,
கொன்னுட்டீங்க போங்க. ஒரு படம் பார்த்த விஷயத்தை இவ்வளவு சுவாரஸ்யமா அதுவும் மத்தவங்க பொறாமைப்படும் அளவுக்கு எழுதிட்டீங்களே! கொஞ்சம் காதல், கொஞ்சம் காமடி, கொஞ்சம் நட்பு, கொஞ்சம் பாசம், கொஞ்சம் பயம், கொஞ்சம் வெட்கம் என்று அதில் அதிலிருந்து 100 கிராம் கலந்து பதிவை பளிச்சென்று ஆக்கிவிட்டீரே.
நே மேலே நிலா
சூப்பர் சார். அது எப்படிங்க? நீங்க இளைச்சுடுவீங்கன்னு அதுவும் கூடவே வந்ததா?
//அவளுக்காக இந்த்ப் புளிப்பு மிட்டாயிடம் பேசவேண்டியதாகி விட்டது//
எனக்குக் கூட இந்த மாதிரி அனுபவம் உண்டு சார். லஞ்சமாக பீர் எல்லாம் வாங்கிக் கொடுக்க வேண்டியதாயிற்று. ஆனால் அவன் தங்கைக்காக அல்ல. எதிர் வீட்டுப் பெண் இங்கு லுக் விட்டதை அவன் பார்த்துத் தொலைத்ததினால்.
//அவள் வருவது என் சகோதரிக்கு ஹெல்ப் வேண்டுமா என்பதற்குத் தானேயொழிய வேறெதற்குமில்லை என இங்கு தெளிவு படுத் படுத்துகிறேன்//
நாங்க ஒண்ணுமே சொல்லலீங்களே ராசா.
சுவைமிகு பதிவு. பதில் பதிவு லேட்டானதற்கு மன்னியுங்கள். கொஞ்சம் வேலைப்பளு.
சி.க.சார்,
'மாய மோதிர'த்தில் பாரதிதானே! ராஜஸ்ரீயும் இருக்கிறாரா? நான்தான் மறந்து விட்டேனோ!
அன்பின் வாசு சார்..
மிக்க நன்றி..அழகாய் ரசித்து எழுதியமைக்கும் பாராட்டுக்கும்.
அய்யம்பேட்டையில் இருந்த காலத்தில் இங்கிட்டு கும்பகோணம் அங்கிட்டு தஞ்சாவூர் என பஸ் பிடித்து பஸ் பிடித்து தியேட்டர் போய் படம் பார்த்ததுண்டு.. தஞ்சையில் பார்த்தது உயிரே உனக்காக..குடந்தையில் பார்த்தது மறந்து விட்டது.. ஆனால் சுற்றிலும் இருந்த சில கோவில்களை ஒரு சுற்று சுற்றித் தான் வந்தேன்..
மாய மோதிரம் பாரதியா.. தெரியலையே..மதுரை தேவி தியேட்டரில் பார்த்த நினைவு.. ராஜஸ்ரீயை.. எஸ்வி சார் ( நன்றி) வேறு ஒரு புகைப்படம் இட்டிருக்கிறாரே…
சார்லஸ் தியேட்டர் கெயிட்டி க்ரவுன் க்ளோப் தியேட்டர்கள் பற்றிய தகவல்களுக்கு நன்றி எஸ்வி சார்.. ஒரு பதிவில் முரளி சார் எழுதியிருந்தார் மதுரை ஸ்ரீதேவி தியேட்டர் இடிக்கப் பட்டு அபார்ட்மெண்ட்டாக மாறி விட்டது என்று.. படித்த அன்று இரவு தூக்கமே வரவில்லை (எனக்குத் தெரியாது..தவிர மதுரையில் இருந்த உறவுகளும் ஊர் மாறிவிட்டனர்) எவ்வளவு படங்கள் சின்ன வயது முதல் கல்லூரிப் பருவம் வரை தொடர்ந்து..கடைசியாய் அங்கே பார்த்த படம் காதல் மன்னன் 93 ம் வருடமோ 96ம் வருடமோ லீவில் வந்த போது.. அதுவே எனது கடைசி மதுரை விசிட்டாகி விட்டது.. சின்ன வயதில் 1.45 பைசா கொடுத்து பால்கனியில் பார்த்த சுகம் ரூ 12.50 என காதல் மன்னன் பார்த்த போது ரொம்ப மிஸ்ஸானது..
சென்னைக்கே புது நிறம் சேர்க்கும், சாஃப்ட் வேர் துறையின் அசுர வளர்ச்சி பழைய மகாபலிபுரம் சாலையில் பளீரென பிரதிபலிக்கும். இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனங்களில் பளபளா மினுமினு அலுவலகங்கள் அங்கு விண் முட்டி நிற்கும். அந்த வான் உயர்ந்த கட்டடங்களுக்கு மத்தியில் நாவலூரில் ஒளிந்திருக்கிறது என்.ஆர்.கே. டூரிங் டாக்கீஸ்.
நான்கு புறமும் தார்பாய் விரித்த திரை மறைப்பு, அழுக்கு ஏறிய பெஞ்சுகள் எனப் பழமை மாறாமல் இயங்கும் அந்த டாக்கீஸில், ஆச்சர்யமாக டி.டி.எஸ். வசதி இருக்கிறது. மாலைக் காட்சி ஆரம் பிப்பதற்கு அறிகுறியாக முதல் மணி அடித்த சமயம் அந்த டூரிங் டாக்கீஸுக்கு விசிட் அடித்தோம்.
''25 வருஷங்களா இயங்கும் இந்த தியேட்டரை 17 வருஷத்துக்கு முன்னாடி வாங்கினேன். அதுக்கு முன்னாடி பக்கத்து ஊர் தியேட்டர்ல ரெண்டு ரூபாய் சம்பளத்துக்கு ஆபரேட்டரா இருந்தேன். வழக்கமா தினமும் சாயங்காலம் ரெண்டு ஷோ போடுவோம். சனி, ஞாயிறுகளில் மட்டும் பகல்ல எக்ஸ்ட்ரா ஒரு ஷோ. ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர்., ரஜினி, விஜயகாந்த் படங்கள் அதிகமா ஓடுச்சு. பிறகு விஜய், அஜீத் படங்கள். பெஞ்ச் டிக்கெட் 10 ரூபாய். பாக்ஸ் டிக்கெட் 15 ரூபாய். அதுக்கு முன்னாடி மண் தரை தான். தரையில் யாரும் உட்கார்ந்து படம் பார்க்கக் கூடாதுனு அரசாங்கம் சட்டம் போட்டதால், வேற வழி இல்லாம மண் தரையில் பெஞ்ச் போட் டோம்.
சாஃப்ட்வேர் கம்பெனி ஆட்கள், கட்டட வேலை செய்யும் வட இந்தியர்களுக்காக நாலஞ்சு வருஷமா ஹிந்தி படங்களும் நிறையப் போடுறோம். தொழிலாளிகள் வாங்குற சம்பளத்துக்கு இங்கே இருக்குற சினிமா மால்களில் 200, 300 கொடுத்து படம் பார்க்க முடியாது. அதான் இங்க வந்து திருப் தியா படம் பாத்துட்டு போறாங்க!'' எனும் தியேட் டர் உரிமையாளர் கன்னியப்பன், டூரிங் டாக்கீஸின் ட்ரெண்ட் குறித்து தொடர்கிறார்.
''இங்கே 'அம்மன்’ படம் 15 நாள் ஓடுச்சு. 'சூரிய வம்சம்’ மூணு வாரம் ஓடுச்சு. எங்க தியேட்டர்ல ரொம்ப நாள்(!) ஓடின படங்கள் இவைதான். இது போக, விஜய் நடிச்ச 'வசீகரா’ படம் நல்லா போகும். இதுவரை 10 தடவைக்கும் மேல அந்தப் படம் போட்டு இருக்கோம். இப்பப் போட்டாலும் தொடர்ந்து ஒரு வாரம் ஓடும். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வாரக் கடைசிகளில் ஒரு ஷோவுக்கு ஆயிரம் பேர் வருவாங்க. டி.டி.எஸ். போட்டா இன் னும் கூட்டம் வரும்னு நினைச்சு, அஞ்சு லட்சம் வரை செலவு பண்ணி ஆறு மாசத்துக்கு முன்னாடி தான் டி.டி.எஸ். போட்டேன். எனக்குத் தெரிஞ்சு தமிழ்நாட்டுல டி.டி.எஸ். இருக்குற ஒரே டூரிங் டாக் கீஸ் நம்மதுதான்னு நினைக்கிறேன். இருந்தாலும் ஒரு ஷோவுக்கு இப்ப 100 பேர் வர்றதே பெரிய விஷயமா இருக்கு.
http://i60.tinypic.com/jfw38z.jpg
செங்கல்பட்டு வட்டாரத்தில் மட்டும் 157 தியேட்டர் இருந்தது. இப்ப அது 56 தியேட்டர்களா குறைஞ்சிருக்கு. கேபிள் டி.வி, திருட்டு வி.சி.டி, இலவசமா கொடுத்த டி.வி-ன்னு எங்க பாதிப்புக்கு ஏகப்பட்ட காரணங்கள். முன்னே இங்க 15 பேர் வேலை செஞ்சுட்டு இருந்தாங்க. தியேட்டருக்கு வர்ற வங்களைவிட இங்கே வேலை செய் றவங்க கூட்டம் அதிகமாக இருந்த மாதிரி இருந்தது. அதான், இப்ப நாலு பேரை மட்டும் வேலைக்கு வெச்சிருக்கேன்!'' சோகப் புன்ன கையுடன் முடிக்கிறார் கன்னியப்பன்!
- பா.ஜெயவேல், படங்கள்: ஜெ.தான்யராஜு