http://i62.tinypic.com/1679ph5.jpg
Printable View
https://scontent-sin1-1.xx.fbcdn.net...0d&oe=561500F7
From the FB page of Chitra Lakshmanan
https://scontent-sin1-1.xx.fbcdn.net...38&oe=5657C15F
Wedding photo of Bharathiraja
from the FB page of Chithra Lakshmanan
'குழந்தை உள்ளம்' (1969)
ஜெமினி சொல்ல சொல்லக் கேட்காமல் சாவித்திரி சொந்தப் படம் எடுக்க வேண்டும் என்று பிடிவாதம் செய்ய, அந்த பிடிவாதத்தின் விளைவாக 'குழந்தை உள்ளம்' வந்து விழுந்தது. ஜெமினியின் வாக்கு மெய் ஆனது. சாவித்திரியின் நம்பிக்கை சரிந்து விழுந்தது.
தமிழ், தெலுங்கு இரண்டிலும் கோலோச்சிய, அதுவும் 'நடிகையர் திலகம்' என்று பட்டம் வாங்கிய நடிகை நன்றாக யோசித்து முடிவெடுத்திருக்கலாம். விதி, ஆசை இரண்டும் யாரை விட்டது?
சரி! ஸ்ரீசாவித்திரி புரொடக்ஷன்ஸ் தயாரித்த, அதிகம் பேருக்குத் தெரியாத, 'குழந்தை உள்ளம்' படத்தின் கதையை அனைவரும் தெரிந்து கொள்ளும் வண்ணம் சுருக்கமாக இங்கு அளிக்கிறேன். பிற்பாடு தொடருக்கு வருகிறேன்.
https://antrukandamugam.files.wordpr...69-1.jpg?w=593https://antrukandamugam.files.wordpr...pg?w=528&h=394https://antrukandamugam.files.wordpr...1969.jpg?w=593
காட்டுக்குள்ளே திரிந்து ஓவியங்கள் தீட்டிக் கொண்டிருக்கும் ஜெமினி அங்கு வேறு என்ன செய்வார்? நிச்சயம் அங்கு ஒரு பெண்ணைப் பார்ப்பார் இல்லையா? காட்டுவாசிப் பெண்ணான வாணிஸ்ரீயை சொன்னபடி பார்த்து லவ்ஸ் விடுகிறார். அவ்விடமும் சம்மதமே. ஆனால் வாணிஸ்ரீயின் முறைமாமன் முரட்டு வில்லன் மனோகர் 'வாணிஸ்ரீயை கட்டிக் கொண்டே தீருவேன்' என்று உறுதியாய் இருக்கிறார். வாணிஸ்ரீ இதற்கு ஒத்துக் கொள்வாரோ? இல்லை. அப்புறம் ஜெமனி வாணிஸ்ரீயை யாருக்கும் தெரியாமல் காட்டிலேயே கல்யாணம் செய்து அங்குள்ள ஒரு வீட்டில் குடித்தனமும் செய்கிறார்.
ஊரிலிருந்து வேலைக்காரப் பெரியவர் ரங்காராவ் ஜெமினியைத் தேடிக் காட்டுக்கு வருகிறார். 'ஜெமினியின் அம்மா சாந்தகுமாரிக்கு உடல்நிலை மோசமாகி விட்டது... உடனே புறப்பட வேண்டும்... அம்மா ஜெமினிக்கு உடனே திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்'... என்று ரங்காராவ் கூற, ஜெமினி தனக்கு வாணிஸ்ரீயுடன் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது ரங்காராவிடம் சொல்கிறார். ரங்காராவ் வாணிஸ்ரீயை 'இப்போது அழைத்து வர வேண்டாம்' என்று சொல்லி ஜெமினியைத் தனியே ஊருக்கு அழைத்துப் போகிறார்.
ஜெமினி அம்மாவிடம் தனக்கு வாணியுடன் நடந்த திருமணத்தைப் பற்றி சொல்ல, முதலில் அதை ஏற்க மறுக்கும் சாந்தகுமாரி பின் மனம் மாறி, ஜெமினியிடம் காட்டுக்குச் சென்று வாணிஸ்ரீயை அழைத்து வரச் சொல்கிறார். ஜெமினியும் சந்தோஷமாக வாணிஸ்ரீயை அழைத்து வர காட்டிற்குப் போக, அங்கு அவருக்கு பேரதிர்ச்சி. காட்டில் வெள்ளம் வந்து காட்டையே அழித்துவிட்டதாகவும், அதில் வாணிஸ்ரீ இறந்து விட்டதாகவும் அங்கிருப்பவர் சொல்ல மனம் உடைந்து ஊர் திரும்புகிறார் ஜெமினி.
பின் அம்மாவின் வற்புறுத்தலால் சௌகார் ஜானகியை திருமணம் செய்து கொள்கிறார். முதல் இரவில் தன்னுடைய துயர காதல் கதையை சௌகாரிடம் மறைக்காமல் சொல்லியும் விடுகிறார். எல்லா கதையும் தெரிந்த சௌகார் ஜெமினியிடம் வாணிஸ்ரீயை மறந்து விடுமாறு கேட்டுக் கொள்கிறார். வாணிஸ்ரீயை மறக்க முடியாமல் தவிக்கிறார் ஜெமினி.
இதற்கிடையில் வாணிஸ்ரீ காட்டில் உயிருடன் தப்பித்து ஜெமினியின் குழந்தைக்குத் (ரோஜாரமணிக்கு பையன் ரோல்) தாயாகிறார். தாய்மாமன் வில்லன் மனோகர் இப்போது மனம் திருந்தி அண்ணனாய் இருந்து வாணிஸ்ரீயை கவனித்துக் கொள்கிறார்.
இங்கோ காதல் மன்னனின் இன்னொரு முயற்சியால் சௌகாருக்கு பெண் குழந்தை பிறக்கிறது. காட்டில் வாணிஸ்ரீயும், நாட்டில் சௌகாரும் ஒரே சமயத்தில் குழந்தைகளை தாலாட்டி 'உத்தமபுத்திரன்' பட ரேஞ்சுக்கு ஒரு பாடலில் வளர்க்கிறார்கள். '(பூ மரத்து நிழலமுண்டு')
ஜெமினி தன்னைத் தேடி வராதது கண்டு கவலை கொள்கிறார் வாணிஸ்ரீ. தன் பையன் ரோஜாரமணி, மாமன் மனோகர் சகிதம் பட்டணம் புறப்பட்டு ஜெமினையைத் தேடுகிறார். ஒருவழியாக ஜெமினியின் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்துப் போனால் அங்கு சௌகார் தான் ஜெமினியின் மனைவி என்று காட்டிக் கொள்ளாமல் வாணிஸ்ரீயைத் தெரிந்து கொண்டு, சென்டிமென்ட் டயலாக் சொல்லி, 'ஜெமினிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது...அவர் மனைவி சந்தோஷமாக இருப்பதை தடை செய்ய வேண்டாம்' என்று சொல்லி வாணிஸ்ரீயை திருப்பி அனுப்பி விடுகிறார். வாணிஸ்ரீயும் சௌகாருக்காகத் தன் வாழ்வைத் தியாகம் செய்து, இறுதியில் ஜெமினியின் நினைவால் தன் உயிரையும் தியாகம் செய்து விடுகிறார். மனோகர் இப்போது பையனை வளர்க்கிறார். ரோஜாரமணியை படிக்க வைத்துப் பெரிய ஆளாக்க வேண்டும் என்று துடிக்கிறார்.
https://antrukandamugam.files.wordpr...1969.jpg?w=593https://antrukandamugam.files.wordpr...pg?w=511&h=384https://antrukandamugam.files.wordpr...69-2.jpg?w=593
ஜெமினியின் இரு குழந்தைகளும் ஒன்றையொன்று தற்செயலாகச் சந்தித்து இணைபிரியா நண்பர்கள் ஆகின்றனர். அண்ணன் தங்கையாகவே பழகுகின்றன. எல்லா விஷயமும் தெரிந்த ரங்காராவ் நைஸாக வாணிஸ்ரீயின் பையன் ரோஜாரமணியை ஜெமினி வீட்டிற்கு அடிக்கடி கூட்டி வருகிறார். இரு குழந்தைகளின் நட்பும் இறுகுகிறது. சௌகாரின் கோப குணத்தால் தனக்குத் தெரிந்த எதையும் சொல்ல முடியாமல், தெரிந்தால் ஜெமினியின் நிம்மதி கெடும் என்று வாய் பேசாமல் ஊமையாய் இருக்கிறார் ரங்காராவ்.
காட்டுவாசிப் பையன் ரோஜாரமணி என்பதால் 'அவனுடன் பழகக் கூடாது' என்று சௌகார் தன் மகள் ஷகீலாவைத் தடுக்கிறார். ரொம்ப காலமாக அந்த வீட்டை சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு நல்ல பாம்பு யாரையும் ஒன்றும் செய்வதில்லை. ஆனால் அந்த பாம்பை பிடித்துக் கொல்ல சௌகார் ஒரு பாம்புப் பிடாரனை அழைத்துவர ரங்காராவிடம் சொல்ல, ரங்காராவ் பாம்பு பிடிக்கும் பிடாரன் மனோகரைக் கூட்டி வருகிறார். மனோகர் பாம்பைப் பிடிக்கும் போது அது கொத்தி உயிரை விடுகிறார். உயிர் விடும்போது வாணிஸ்ரீயின் பையன் அதாவது தன் மருமகனை ஜெமினி கையில் ஒப்படைத்து விட்டு இறந்து போகிறார் ஜெமினிதான் அக்குழந்தையின் தகப்பன் என்று தெரியாமலேயே.
இப்போது ஜெமினி ரோஜாரமணி தன் பிள்ளை என்று தெரியாமலேயே வீட்டில் பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் மனோகருக்குக் கொடுத்த வாக்கின்படி வளர்க்கிறார். ரோஜாரமணி சௌகார் மற்றும் அவர் குடும்பத்தினரால் கொடுமைப்படுத்தப்பட, ரங்காராவ் ரோஜாரமணியைத் தன் தோட்டத்து வீட்டில் கொண்டு போய் வளர்க்கிறார். ஜெமினி மனோகர் ஆசைப்படி அவனை கான்வென்ட்டில் சேர்த்து படிக்க வைக்க ஏற்பாடு செய்கிறார்.
ரோஜாரமணியால் ஜெமினிக்கும், சௌகாருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடுகளும், சண்டையும், சச்சரவும் ஏற்படுகிறது.
இதை உணர்ந்த ரோஜாரமணி தன்னால்தானே இவ்வளவு பிரச்னையும் என்று வீட்டைவிட்டுக் கிளம்ப, அதைக் கண்ட தங்கை ஷகீலா பின் தொடர்ந்து ஓடிவர, அந்த நேரத்தில் அங்கிருக்கும் பாம்பு ஷகீலாவைக் கொத்திவிட, காட்டுவாசி சிறுவன் ரோஜாரமணி தங்கையின் உடலில் கலந்த விஷத்தை உறிஞ்சி அவளைக் காப்ற்ற, விஷத்தை உறிஞ்சியதால் தான் உயிருக்குத் தவிக்க, முடிவில் தயாரிப்பாளர் சாவித்திரி டாக்டராக வந்து ரோஜாரமணியைக் காப்பாற்றி படத்தைக் காப்பாற்ற முடியாமல் போக, ரங்காராவும் ஜெமினியிடம் எல்லா விவரங்களையும் கூறி ரோஜாரமணி அவருடைய மகன் என்ற உண்மையை சொல்லி விட, இறுதியில் சௌகார் தவறு உணர்ந்து தன் மகளைக் காப்பற்றிய ரோஜாரமணியைத் தன் இன்னொரு குழந்தையாக ஜெமினி மனம் மகிழும்படி ஏற்றுக் கொள்ள, முடிவு ஒரு வழியாக சுபம்..
அப்பாடா! ஒரு வழியாக எப்படியோ கதை எழுதி முடித்துவிட்டேன். தலை சுற்றுகிறது. என்ன கதையோ! என்ன படமோ!
அப்புறம் ஏன் எழுதினாய் என்று நீங்கள் குமுறுவது புரிகிறது. எல்லாவற்றையும்தான் தெரிந்து கொள்ள வேண்டும். 'குழந்தை உள்ளம்' பற்றி பல பேர் பலவிதமாக நினைத்திருப்பார்கள். அதுவும் சாவித்திரியின் சொந்தப்படம் வேறு. இப்போது தெளிவாகி விடுமல்லவா.
https://antrukandamugam.files.wordpr...1969.jpg?w=593https://antrukandamugam.files.wordpr...1969.jpg?w=593
ஜெமினி, வாணிஸ்ரீ, சௌகார் தவிர வி.கே.ஆர், தேங்காய், ரங்காராவ், சுருளிராஜன் மனோகர், வீரப்பன், ரமாப்ரபா, சாந்தகுகுமாரி, , சி.கே சரஸ்வதி, சுந்தரிபாய், கௌரவ நடிகையாக 'நடிகையர் திலகம்' என்று நட்சத்திரக் கும்பல். அத்தனையும் வேஸ்ட்.
படத்தின் மெயின் கதையைவிட நகைச்சுவைக் காட்சிகள் என்ற பெயரில் அனைவரும் செம பிளேடு போடுகின்றனர். ஜெமினிக்கும், சௌகாருக்கும் பழகிப் புளித்துப் போன ரோல். நமக்கும் இதுமாதிரிப் பார்த்து சலித்துப் போன படங்கள் ஏராளம்.
எத்தனை படத்தில்தான் ஜெமினி இரண்டு மனைவிகளுக்குக் கணவனாக வருவாரோ! எங்காவது காடு மலை என்று சுற்றி அங்கு ஒன்றை செட் அப் செய்து குழந்தையைக் கொடுத்துவிட்டு வந்து விட வேண்டியது. அப்புறம் இன்னொரு திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டியது. அப்புறம் முதல் சம்சாரம் திரும்ப குழந்தையுடன் உயிரோடு வரும். அப்புறம் இரண்டு சம்சாரங்களுக்கிடையில் சிக்கி நிம்மதி இல்லாமல் தவிக்க வேண்டியது. சம்சாரங்களையும் தவிக்க விடவேண்டியது. மனிதருக்கு இதே வேலைதானா நிஜ வாழ்க்கையைப் போன்றே?
https://antrukandamugam.files.wordpr...1969.jpg?w=593
வாணிஸ்ரீ காட்டுவாசிப் பெண். வயிறு இவருக்கு அடங்காது. சௌகார் எரிச்சல். இதிலும் முதல் இரவுக் காட்சில் அழுவார். இவர் தரும் சித்ரவதை சொல்லி மாளாது. ரங்காராவின் கடைசி காலம். அவரால் முடியாது. சிரமப்படுவார். இவருக்கு பொருத்தமே இல்லாமல் டி.எம்.எஸ்.பாட்டு வேறு.
காட்டுவாசிகள் என்று ஆந்திர வாடை அதிகம். வாணிஸ்ரீ காட்டுவாசிப் பெண். அழகாகவே இருக்கிறார். மனோகர் மேல் உடம்பு காட்டி, டார்ஜான் போல காட்டுவாசி டான்ஸ் ஒன்று போடுவது கொஞ்சம் புதுமை. ஜெமினியுடன் 'திருவாரூர்' தாஸ் புண்ணியத்தில் ஒரு ஃபைட்டும் உண்டு. கொடும் வில்லன் திடுமென்று அநியாயத்துக்கு நல்லவராக ஆகி விடுவார்.
நகைச்சுவை நடிகர்கள் படத்தை சர்வ நாசம் செய்வார்கள். தேங்காய் ஹிப்பி ரேஞ்சுக்கு செம அறுவை. வி.கே.ஆர் முதற்கொண்டு வீரப்பன் வரை அநியாயத்துக்கு நம் பொறுமை சோதிப்பார்கள்.
ஒரே ஒரு நல்ல விஷயம். சில நல்ல பாடல்கள்.
'பூமரத்து நிழலுமுண்டு...பொன்னி நதி பாட்டுமுண்டு'
'அங்கும் இங்கும் ஒன்றே ரத்தம்'
முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு (பாலாவின் அமர்க்களமான ஆரம்பகாலப் பாடல்)
என்று அருமையான பாடல்கள்.
'ஓ...தர்மத்தின் தலைவனே' (சுமார்தான்)
இசை தெலுங்கின் கோதண்டபாணி. நம் தொடர் நாயகர் பாலாவை நமக்கு முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர். (இவருடைய இனிஷியலும் எஸ்.பி.தான்) அருமையான மூன்று முத்தான பாடல்களைத் தந்திருப்பார். ஒளிப்பதிவு சேகர் சிங் அபாரம். தயாரிப்பு திரைக்கதை, டைரெக்ஷன் சாவித்திரி.
http://i61.tinypic.com/2hoflgn.jpg
சாவித்திரி ஹீரோயின் ரோல் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் டாக்டராக சிறிது நேரம் வருவார். ஆனால் சற்று உடல் இளைத்து மிக அழகாக அருமையாக இருப்பார். இயக்கத்தில் கவனம் செலுத்தியதால் நடிக்க அவாய்ட் செய்து விட்ட மாதிரி தெரிகிறது. தவிரவும் இந்த மாதிரி ரோல்களை சாவித்திரி நிறைய செய்தும் விட்டார். தன் கணவருடன் இணைந்தே. 'பார்த்தால் பசி தீரும்' ஒன்று போதாதா?
புகழ் பெற்ற நடிகைகளாய் இருந்தாலும் நடிகைகள் படமெடுக்கக் கூடாது....இயக்கமும் செய்யக் கூடாது (சில விதிவிலக்காக இருக்கலாம்) என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்தப்படம். 'நினைத்தது ஒன்று... நடந்தது ஒன்று' தான் நினைவுக்கு வருகிறது. வெற்றி பெற்ற கதைகளை திரும்பத் திரும்ப எடுத்தால் அது தோல்வியில்தான் முடியும் என்று சாவித்திரிக்கு ஏன் தெரியாமல் போனது? வேறு புதுக் கதை ஒன்றைக் கையில் எடுத்திருக்கலாம்.
கொஞ்சம் அபூர்வமான இந்தப் படத்தைப் பற்றித் தங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.
நன்றி!
'முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு'
'குழந்தை உள்ளம்' கதைப் பதிவு படித்து முடித்து விட்டீர்கள் தானே!
http://i.ytimg.com/vi/ULjpODgUpyY/hqdefault.jpg
பாலாவின் அற்புதமான ஒரு பாடல் இந்தப் படத்தில் ஒலிக்கும் சுசீலாவுடன் இணைந்து. அபூர்வமானதும் கூட. பாலாவை அறிமுகப்படுத்திய எஸ்.பி.கோதண்டபாணி அவர்களின் இசையிலேயே பாலா தமிழில் அட்டகாசம் புரிந்த பாடல்.
http://upload.mediatly.com/card_pict...8ce1430e66.jpg
எனவே தங்கப் பாடகரை நமக்கெல்லாம் அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் கோதண்டபாணி அவர்களுக்கு நம் வாழ்நாள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வோம். மதுர கானமும் அவருக்கு தன் மகத்தான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
காட்டில் ஜெமினிக்கும், காட்டுவாசிப் பெண் வாணிஸ்ரீக்கும் டூயட். பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களுக்குப் பிறகு ஜெமினிக்கு பாலா மிக அம்சமாகவே பின்னணி பாடகராகப் பொருந்தினார். கவனியுங்கள். இயற்கை என்னும் இளையகன்னி, கற்பனையோ கை வந்ததோ, சிட் சிட் சிட் எங்கே போவோம், முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு, மங்கையரின் மகராணி, ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு என்று பாலா ஆரம்பத்தில் ஜெமினிக்கு அதிகமாகவே பாடி அத்தனையும் ஹிட் ஆயிற்று.
பாடல் படமாக்கலில் ஒன்றும் விசேஷம் இல்லை. ஆனால் ஜெமினி கச்சிதமாக, அழகாக, இளமையாகத் தெரிகிறார். நைட் கவுனுடன் பாடலைப் பாடுகிறார். தலையில் ஒற்றை பெரிய ரோஜாவுடன், நெற்றியில் ஸ்ரீதரின் 'சித்ராலயா' லோகோ போல பொட்டிட்டு (நங்கூரப் பொட்டு போலவும் தெரிகிறது) காதில் பெரிய ஜிமிக்கி அணிந்து, முகவாய்க் கட்டையில் ஃ போன்ற மூன்று கரும் புள்ளிகளுடன், கால்களில் தண்டையுடன், கைகளில் நிறைய கருப்பு வளையல்களுடன், நாகரீகக் காட்டுப் பெண் சேலையணிந்து வாணிஸ்ரீயும் அழகாத்தான் இருக்கிறார். அந்தக்கால முகத்தோடு முகம் வைத்தல், முகவாய்க் கட்டைகளை இணைத்தல், கன்னத்தோடு கன்னம் உரசல், இருவரும் இணைந்து சைட் குளோஸ் -அப் போஸ் தருதல் என்று அத்தனையும் இந்தப் பாடலிலும் உண்டு.
ஆனால் வாணிஸ்ரீயிடம் 'முன்னிடை மெலிந்து நூலாக' என்று ஜெமினி பாடும் போது சிரிப்பு நமக்கு பொங்கித்தான் வருகிறது.
பாலா தமிழுக்கு வந்த புதிதில் பாடியதால் கொஞ்சம் தமிழ் உச்சரிக்க சிரமப்படுவது போல் தெரியும். 'பூ வண்டு' என்பதை 'பூ வந்து' என்று உச்சரிப்பது போலத் தோன்றும்.
சரணங்களுக்கிடையில் சுசீலா அம்மா தரும் 'லா லா ல லா' ஹம்மிங்குகள் குளிர்த் தென்றலின் சுகம். மூன்றாவது சரணம் மட்டும் சுசீலா அம்மா அருமையாகப் பாடுவார் அந்த சரண வரிகள் 'தேன் தரும் நிலவு' போலவே. செட்-அப் முழு நிலவு 'பளிச்'சென்று காய, இரவுப் பின்னணியில் இந்த வரிகள் அருமையாகப் படமாக்கப் பட்டிருக்கும்.
நான் அப்போது இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் ஏ.எல்.ராகவன் தான் இப்பாடலைப் பாடுகிறாரோ என்று மனதிற்குள் நினைத்துக் கொள்வேன். நீங்கள் நன்றாக உன்னிப்பாக கவனித்தீர்களானால் ஏ.எல்.ராகவன் குரல் போலவே பாலாவின் குரல் இருக்கும். 1969-ன் படம் என்பதால் பாலாவின் குரல் மிக இளசாக இருக்கும்.
மிக அமைதியான பாடல். ரசிக்கத் தகுந்த ஆரம்ப கால பாலாவின் அபூர்வ ஜெம். பாடல் வரிகளை அளித்தது கவிஞர் கண்ணதாசன். இசை இன்ப மயம். பாடலில் தெலுங்கின் சாயல் வராமல் பார்த்துக் கொண்டது கோதண்டபாணியின் சாமர்த்தியம். இரண்டு எஸ்.பி.க்களான குருவும் சிஷ்யனும் பங்களித்து கலக்கிய பாடல்.
http://i.ytimg.com/vi/xTA8KQ6Q6BI/hqdefault.jpg
முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு
குடி கொண்டதே இன்பத் தேன் உண்டு
முதல் நாள் மயக்கம் வரக் கண்டு
மோனத்தில் ஆழ்ந்தது சுவை கொண்டு
முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு
குடி கொண்டதே இன்பத் தேன் உண்டு
தலைமகன் செய்தது சோதனையோ
தலைவிக்கு இன்பத்தின் வேதனையோ
கலைகளில் ஓவியம் ரசிக்கின்றதோ
கனவினிலே கண்டு சிரிக்கின்றதோ
முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு
குடி கொண்டதே இன்பத் தேன் உண்டு
முத்தமிட்ட இதழே பாலாக
முன்னிடை மெலிந்து நூலாக
கட்டி வைத்த கூந்தல் அலையாக
கட்டி வைத்த கூந்தல் அலையாக
கன்னங்கள் இரண்டும் விலையாக
முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு
குடி கொண்டதே இன்பத் தேன் உண்டு
தேன் தரும் நிலவே நீ சாட்சி
தென்றல் காற்றே நீ சாட்சி
வானும் நிலவும் உள்ளவரை
வளரட்டும் காதல் அரசாட்சி
வளரட்டும் காதல் அரசாட்சி
முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு
குடி கொண்டதே இன்பத் தேன் உண்டு
முதல் நாள் மயக்கம் வரக் கண்டு
மோனத்தில் ஆழ்ந்தது சுவை கொண்டு
முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு
குடி கொண்டதே இன்பத் தேன் உண்டு
https://youtu.be/xTA8KQ6Q6BI
வாசு சார்
நெஞ்சம் மறக்காத நினைவுகளில் அள்ளித் திளைக்கும் வண்ணம் ஆனந்தமான அந்நாள் பாடலைப் பற்றி எழுதியுள்ளீர்கள். படத்தையும் பற்றித் தான்.
பொறுமை... தங்களிடம் ஏராளம்... படத்தை முழுதும் பார்த்து கதையும் (?????????) சொல்லி, தயார் படுத்திய விதம் .. ஆஹா... தங்களுக்கே உரித்தான தனித்துவம்.
1969 ஜனவரி பொங்கல் நாளன்று வெளியாகியிருக்க வேண்டியது. கடைசி நேர தாமதம் காரணமாக தள்ளிப் போயிற்று. இல்லையென்றால் பாலா பாடி வெளிவந்த முதல் படத்திற்கு போட்டி வந்திருக்கும். அப்புறம் தணிக்கை தேதியை வைத்து தீர்மானம் செய்ய வேண்டியிருந்திருக்கும். நல்ல வேளை, பால் குடத்திற்கு (ஆடி மாதமாச்சே.. இது பால் குடம் சீசனல்லவோ...) பெருமை கிடைத்து விட்டது.
கோதண்டபாணி ஸ்டூடியோ சென்னை... இவர் பெயரில் பாலா நன்றிக்கடனுடன் அமைத்த ஸ்டூடியோ.. சமீப காலம் வரை கொடிகட்டிப் பறந்தது. இப்போது..
அதையெல்லாம் விடுங்கள்.. இனிமையான பாடலைப் பற்றி அழகாக எழுதி பாடலோடு தங்கள் எழுத்தும் சேர்ந்து நம்மையெல்லாம் கொள்ளை கொள்ளச் செய்து விட்டீர்கள்.
தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
'சபதம்'
http://cf-images.emusic.com/music/im...94/600x600.jpg
'சபதம்' (1971)
தேவநாயகி பிலிம்ஸ் 'சபதம்' ஓர் அருமையான ஒரு படம். ரவிச்சந்திரன், கே.ஆர்.விஜயா, நாகேஷ், டி கே.பகவதி, வி.கே.ராமசாமி, சஹஸ்ரநாமம், அஞ்சலிதேவி, பண்டரிபாய் நடித்த இத்திரைப்படம் கதாநாயகிக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்த ஒரு படம். நடனத்தை சலீம் அமைத்திருப்பார். நமது பி.என்.சுந்தரம் ஒளிப்பதிவு இயக்குனராக பணியாற்றி இருப்பார். இயக்கம் நமது பிரிய பி.மாதவன்.[/COLOR][/B][/SIZE]
கதை
http://i.ytimg.com/vi/yPRAkU6T8zk/0.jpg
மிக நல்லவரான பெரிய மனிதர் செல்வநாயகத்திற்கு (டி கே.பகவதி) அவரைப் போலவே உருவ ஒற்றுமையும், குரல் ஒற்றுமையும் கொண்ட துரைசிங்கம் (டி கே.பகவதி) என்ற தறுதலை தம்பி. அண்ணனிடமிருந்து சொத்தை பாகம் பிரித்துக் கொண்டு குடி, காமம் என்று சொத்தை அழிக்கிறான் அவன். தம்பியின் போக்கு கண்டு, மனம் நொந்து, மறுபடியும் அவனைத் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார் செல்வநாயகம். தன் மனைவி கண் தெரியாத ராஜேஸ்வரி (அஞ்சலிதேவி), மகன் முத்து மேல் அதிக பாசம் அவருக்கு. தம்பி துரைசிங்கத்திற்கு லஷ்மி (பண்டரிபாய்) என்ற பண்பான மனைவி.
வியாபார விஷயமாக அண்ணனும் தம்பியும் வெளியூர் புறப்பட, அந்த சந்தர்ப்பத்தைத் தனக்கு சாதமாக்கிக் கொள்கிறான் தம்பி. உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி, அண்ணனைக் கொன்றுவிட்டு, அண்ணன் வேடத்தில் வந்து நல்லவன் போல ஊரில் கபடமாடுகிறான் துரைசிங்கம். ஊரும் அவனை செல்வநாயகம் என்று பரிபூரணமாக நம்பி ஏமாறுகிறது. குழந்தையுடன் இருக்கும் தன் அண்ணியை பைத்தியம் என்று பட்டம் கட்டி அவள் வீட்டை விட்டு ஓடும்படி செய்கிறான் செல்வநாயகம்.
தன் கணக்கப்பிள்ளை வள்ளிமுத்துவின் (சஹஸ்ரநாமம்) மகள் சிவகாமி (கே.ஆர்.விஜயா) என்ற பெண்ணின் மீது காமப் பித்து பிடித்து அலைந்து, அவளை ஆசைநாயகியாய் வைத்துக் கொள்ள வள்ளிமுத்துவிடமே அனுமதி கேட்கிறான். இல்லையென்றால் கொன்று விடுவதாக பயமுறுத்துகிறான். அவன் சுயரூபம் தெரிந்து கொண்ட வள்ளிமுத்து செய்வதறியாமல் திகைத்து தூக்கில் தொங்குகிறான். (உண்மையில் துரைசிங்கத்தால் தூக்கில் தொங்கவிடப் படுகிறான்) வெளியூரில் படிக்கும் சிவகாமி தன் தந்தை இறந்த சேதி கேட்டு துடிதுடித்துப் போகிறாள். தன் தந்தையின் கடிதம் மூலம் செல்வநாயகம் ஒரு காமுகன் என்று புரிந்து கொள்கிறாள். தந்தை சாவுக்குக் காரணமானவனை பழி வாங்கத் துடிக்கிறாள். ஆனால் செல்வநாயகம் போர்வையில் இருக்கும் துரைசிங்கம் ஊர்மக்களை அப்படியே தன்னை நல்லவன் என்று நம்பும்படி செய்திருக்கிறான். இதனால் சிவகாமி துரைசிங்கம் கெட்டவன் என்று ஆதாரத்துடன் ஊர் மக்களிடம் நிரூபித்தாலும் தன் சாமர்த்தியப் பேச்சாலும், பசுத்தோல் போர்த்திய புலி நடிப்பாலும் சிவகாமியின் ஆதாரங்கள் ஒவ்வொன்றையும் உடைத்தெறிகிறான் துரைசிங்கம். அவனை அயோக்கியன் என்று ஊர் மக்கள் முன்னிலையில் விரைவில் நிரூபிப்பதாக துரைசிங்கத்திடம் 'சபதம்' போடுகிறாள் சிவகாமி.
வீட்டை விட்டு ஓடிப்போன ஓடிப்போன ராஜேஸ்வரியின் மகன் முத்து (ரவிச்சந்திரன்) வளர்ந்து பெரியவனாகி எல்லா உண்மையையும் தன் தாயின் மூலம் அறிகிறான். முத்து சிவகாமியைக் காதலித்து துரைசிங்கம் மூலம் சிவகாமி பட்ட துயரங்களை அறிந்து கொள்கிறான். பாதிக்கப்பட்ட சிவகாமி, முத்து இருவரும் கூட்டணி அமைத்து, திட்டம் போட்டு துரைசிங்கம் வீட்டில் தம்பதிகளாக நுழைகிறார்கள். இவர்களுடன் துரைசிங்கத்தின் மகன் நாகேஷும் தன் தந்தையின் கபட நாடகத்தைத் தெரிந்து கொள்ள, மூவரும் துரைசிங்கத்துடன் ஆடு புலி ஆட்டம் விளையாட ஆரம்பிக்கிறார்கள். அவனுக்கெதிரான ஆதாரங்களைத் திரட்டி அவனை நிலைகுனிய வைத்து ஊருக்கு 'அவன் துரைசிங்கம்தான்...செல்வநாயகம் இல்லை' என்று புரிய வைக்கிறார்கள். இறுதியில் இறந்து போன செல்வநாயகமே உயிருடன் திரும்ப நேரில் வர, அதிர்ச்சியடைந்து தான் வாயாலேயே தன் அண்ணன் செல்வநாயகத்தைக் கொன்றதாக தன்னையுமறியாமல் ஊர் மக்கள் முன்னிலையில் கூறி காவலர் வசம் மாட்டிக் கொள்கிறான் துரை சிங்கம். ('புதிய பறவை' கோபால் போல) ஆனால் வந்தது உண்மையான அண்ணனா?..
இறுதியில் தன் 'சபத'த்தில் மாபெரும் வெற்றி காணுகிறாள் சிவகாமி.
'புன்னகை அரசி'க்கு இந்த மாதிரி சிவகாமி.ரோல் அல்வா சாப்பிடவது போல. கலக்கிவிடுவார். டி .கே.பகவதி நல்ல அண்ணனாகவும், கெட்ட தம்பியாகவும் அருமையான நடிப்பைத் தந்திருப்பார். படம் நெடுக கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் அமைதியாகச் சிரித்தபடியே வில்லத்தனம் புரிவது ஏ.ஒன். இந்தப் படம் சென்னையில் பாரகன், கிரௌன், புவனேஸ்வரி ஆகிய தியேட்டர்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது.
'தொடுவதென்ன தென்றலோ மலர்களோ'
என்றுமே சிரஞ்சீவித்துவம் நிறைந்து மனமெல்லாம் சுகந்த தென்றலை இனிமையாக வீசச் செய்யும் பாடல். மிகச் சிறந்த தமிழ்ப் பாடல்களின் வரிசையில் முன்னால் நிற்க போட்டி போடும் பாடல். நீங்கள் எவ்வளவு சோகத்தில் இருந்தாலும் இந்த பாட்டை ஒருமுறை கேளுங்கள். பிளாட் ஆகி விடுவீர்கள். குரலினிமையா... குழலினிமையா என்று போட்டி வைத்தால் பாலாவின் குரல்தான் இனிமை என்று ஒட்டுமொத்தமுமே கூக்குரல் எழுப்பும் அளவிற்கு அவரது வசந்த சுகந்த குரலால் பாராட்டு பெற்ற பாடல். 'சபத'மிட்டு சொல்கிறேன்.
http://www.stephenprayog.com/image/gkvenkatesh.jpg
இந்தப் படத்தின் மிகப் பெரிய பலமான தூண் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ். என்ன ஒரு திறமை! இவர் நம் திரையுலகிற்குக் கிடைத்த ஒரு குறிஞ்சி மலர். இசையமைப்பதோடு மட்டுமல்லாமல் வித்தியாசமான குரல் வளம் கொண்ட பாடகரும் கூட. இப்படத்தில் இடம் பெற்ற எஸ்.பி.பாலா தங்கக் குரலில் பாடிய சூப்பர் டூப்பர் ஹிட் பாடலான,
'தொடுவதென்ன தென்றலோ மலர்களோ'
பாடல் ஒன்று போதும் ஜி.கே.வெங்கடேஷ் அவரின் திறமையை காலம் முழுதும் பறைசாற்ற. நமக்கு இறப்பு என்று ஒன்று வரும்போது இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே கண் மூடினால் கண்டிப்பாக சொர்க்கம் கிடைக்கும்.
Nadigar Thilagam Film Appreciation Association..
Next Programme...
http://i1146.photobucket.com/albums/...pskjzhznee.jpg
தமிழ் சினிமா - அபூர்வ தகவல்கள்
உ.யிரோவியம் - ராணிமுத்துவில் வெளிவந்த ஒரு நாவல்..
உயிரோவியம் - இந்த வார்த்தையில் துவங்கும் ஒரு பாடல் ஊருக்கு உழைப்பவன் படத்திற்காக பதிவு செய்யப்பட்டது.
இந்த உயிரோவியம் ... இன்னும் என்ன செய்தியுள்ளது..
தெய்வமகன் படத்திற்கு முதலில் வைத்த பெயர் .
உயிரோவியம்
தமிழ் சினிமா - அபூர்வ தகவல்கள்
விட்டில் பூச்சி -
சுமதி என் சுந்தரி படத்திர்கு ஒரிஜினலாக வைத்த பெயர்...
தமிழ் சினிமா - அபூர்வ தகவல்கள்
தங்கத்திலே வைரம் -
சிவகுமார், கமலஹாசன் நடித்து வெளிவந்த திரைப்படம் என்பது தெரிந்திருக்கலாம். தெரியாத விஷயம்.
நடிகர் திலகம் இரு வேடங்களில் நடித்த மனிதனும் தெய்வமாகலாம் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டில் இது தான்.
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...bb&oe=56C7FF18
இணையத்தில் முதன் முறையாக காதல் பறவை படத்தின் ஸ்டில்
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...18&oe=56CDE881
இணையத்தில் முதன்முறையாக சிங்கப்பூர் சீமான் படத்தின் ஸ்டில்
இணையத்தில் முதன்முறையாக பால்குடம் படத்தின் ஸ்டில்...
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...77&oe=56CEC38F
வாசு சார், மது சார், பால் குடம் படத்தின் வீடியோவைப் பார்க்காத குறையை இதைப் பார்த்து ஓரளவு திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்
தமிழ் சினிமா - அபூர்வ தகவல்கள்
மெல்லிசை மன்னர் இசையில் அமுதா படத்தில் ஒலித்த அன்பே அமுதா பாடலை மறக்க முடியுமா. பாடகர் திலகத்தின் குரலில் உயிரை உருக வைக்கும் அருமையான பாடல்.
அமுதா படத்திற்கு முதலில் வைத்த பெயர்...
குங்குமப் பொட்டு
AVM 70 years - a documentary
https://www.youtube.com/watch?v=N4vXPRgfG_w
courtesy: youtube and AVM
https://scontent-cdg2-1.xx.fbcdn.net...4a&oe=56C482BA
சில ஆயிரம் அடிகள் படம் பிடிக்கப்பட்டு ஏதோ காரணங்களால் நின்று போன நடிகர் திலகத்தின் படங்களில் ஒன்று நடமாடும் தெய்வம்.
நிழற்படம் நன்றி பேசும்படம்
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...31a02125beb9cf
https://scontent-cdg2-1.xx.fbcdn.net...47&oe=569555B4
ஸ்வாதி ப்ரொடக்ஷன்ஸ் என்ற ஒரு படத்தயாரிப்பு நிறுவனம் 60களின துவக்கத்தில் நடிகர் திலகத்தை வைத்து ஒரு படம் துவக்கியது. இரு முறை பெயர் மாற்றம் செய்யப்பட்ட அந்தப் படம் கடைசியில் வளராமல் நின்று போனது. ஒரு முறை பச்சை விளக்கு என்ற பெயரிலும் மற்றோர் முறை தங்க சுரங்கம் என்ற பெயரிலும் தயாரானது. பின்னாளில் இந்த இரு பெயர்களுமே நடிகர் திலகத்தின் வேறு படங்களுக்கு சூட்டப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது வரலாறு. அந்த படத்தின் இரு ஸ்டில்கள் நம் பார்வைக்கு.
ரங்க ராட்டினம் திரைப்பட நிழற்படங்கள்
https://scontent-frt3-1.xx.fbcdn.net...af&oe=56CA88D2
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...95999703eaabb7
நண்பர் ஒருவரின் முகநூல் பக்கத்திலிருந்து..
https://scontent-sin1-1.xx.fbcdn.net...a3&oe=56BAF7DD
பழைய தமிழ்ப்படங்களின் டிவிடிக்கள் வெளியீடு ... விவரங்கள்..
மோசர் பேர், மாடர்ன், ராஜ் வீடியோ விஷன், உள்ளிட்ட இந்திய நிறுவனங்கள், பிரமிட், கொலம்பியா, அய்ங்கரன் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் பழைய தமிழ்ப்படங்களை டிவிடிக்களில் வெளியிட்டு வருகின்றன. அவற்றில் நம் பார்வைக்கு வந்த சிலவற்றை இங்கு பகிர்ந்து கொண்டால், இது வரை பார்க்காத படங்களை நண்பர்கள் பார்ப்பதற்கான வாய்ப்பு உருவாகட்டுமே..
இதில் சிவாஜி எம்ஜிஆர் படங்களின் டிவிடிக்களைப் பற்றிய தகவல்கள் இடம் பெறாது. மற்ற அபூர்வமான பழைய படங்களைப் பற்றி மட்டுமே பகிர்ந்து கொள்ள உத்தேசம்.
நண்பர்கள் தங்கள் வசம் இருக்கும் இது போன்ற அபூர்வமான பழைய படங்களின் டிவிடிக்களின் விவரங்களைப் பகிர்ந்து கொள்ளலாமே..
முன்பே இது போன்ற ஒரு தொடர் துவங்கப்பட்டிருந்தத. ஆனால் அது எங்கே எனத் தெரியவில்லை. எனவே மீண்டும் புதிதாக.
தொடக்கமாக ரவி, பாரதி நடித்த வாலிப விருந்து/ காரோட்டிக்கண்ணன் ...
http://i1146.photobucket.com/albums/...OTTIKANNAN.jpg