பழைய படம் :ஜெமினி சாவித்திரிQuote:
Originally Posted by Shakthiprabha
ஊருக்குப் பயந்து தான் ஒரு பெண்ணுடன் வாழ்வதா
இல்லையென்றால் --
Printable View
பழைய படம் :ஜெமினி சாவித்திரிQuote:
Originally Posted by Shakthiprabha
ஊருக்குப் பயந்து தான் ஒரு பெண்ணுடன் வாழ்வதா
இல்லையென்றால் --
அருமைQuote:
Originally Posted by Shakthiprabha
ஏன் வேதவல்லி???Quote:
Originally Posted by Shakthiprabha
:clap:Quote:
Originally Posted by Shakthiprabha
:banghead:Quote:
Originally Posted by Shakthiprabha
புரியவில்லை ஆனா! நானும் வலையைச் சலித்து தேடிவிட்டேன், வேதவல்லி என்ற பெயர் கொண்டவளாய் தக்ஷனின் மனைவி எங்குமே சுட்டிக்காட்டப் படவில்லை :?Quote:
Originally Posted by aanaa
தாக்ஷாயணி இரவும் பகலும் சிவனின் சிந்தனையில் பொழுதைக் கழிக்கிறாள்.
வெகு சிரத்தையுடன், பூஜை செய்கிறாள். மலர்கள் சேகரிப்பதும், அபிஷேகம் செய்து
சிவனை வழிபடுவதுமே அவளுக்குச் சந்தோஷத்தைத் தருகிறது.
மெய்வருத்தி இறைப்பணி செய்வதை தந்தை கண்டால்
மனம் வருந்தக் கூடுமோ என்று அஞ்சுகிறாள். தக்ஷன், தன் மகளின்
செய்கையில் பெருமை கொள்கிறான். "ஈசனோ என் சித்ததில் உறைபவர் தாங்களோ
என் எண்ணத்தின் இருப்பவர். ஈசனிடம் நான் கொண்டிருப்பது பக்தி, தாங்களிடம்
நான் வைத்துள்ளது அளவற்ற பாசம்" என்று தாக்ஷாயணியும் தந்தையின் செல்ல மகளாகவே
வளர்கிறாள். சிறுவயது முதல் தக்ஷனிடம் வளர்ந்து வருவதால், அவன் சிவ பூஜை செய்வதைப்
பார்த்து அவனின் சிவபக்தையைக் கண்டு தாக்ஷாயணியும் அவ்வாறே சிவபக்தி கொண்டுவிட்டாள்
என்று உவகைக் கொள்கிறாள் வேதவல்லி.
சோமன்(சந்திரன்) தன் மூன்று மனைவியருடன் தக்ஷனைக் காணவருகிறான். மூன்று மகள்களுள்
க்ருதிகையிடம் அவன் அதிகம் அன்பு பாராட்டுகிறான். இது மற்ற இருமனைவிகளுக்கும் மனவருத்தம்
தருகிறது. ( சோமன் ரோஹிணியிடம் அதிகப் பிரியத்துடன் இருந்தான் என்று தான் கதையுண்டு.
திருவிளையாடற்புராணத்தைப் பற்றி எந்த நூலை மையமாகக் கொண்டு ஆராய்ந்து கதையமைதிருக்கிறார்கள் என்று புரியவில்லை)
சஹோதரிகள் தாக்ஷாயணியைக் காணச் செல்கின்றனர். அவள் பூஜை செய்யும் அழகைக் பார்த்திருக்கின்றனர்.
முதன் முறையாக சகோதரிகளிடம் தன் மனதை திறந்து ஆசையை வெளிப்படுத்துகிறாள் தாக்ஷாயணி.
தான் மூன்று காலமும் சிவபூஜை செய்வது, அந்த சிவனையே மணானாகப் பெறுவதற்காக என்று கூறுகிறாள்.
முப்பொழுதும் அவனையன்றி என் மனம் வேறொன்றை நினைக்க மறுக்கிறது என்று வெட்கத்துடன் தெரிவிக்கிறாள்.
இதனைக் கேட்டுக் கொண்டிருக்கும் அவள் தாய் அதிர்ச்சியடைகிறாள். தக்ஷனிடம், மகள் கூறியதைக் இயம்பி,
தன் பயத்தை வெளியிடுகிறாள். "ஆடும் வயதில் த்யானத்தில் ஈடுபட்டாள். மண்டபம் கட்டிக் கொடுத்தோம்,
பின் அங்கு செய்ய சிவலிங்கம் வேண்டும் என்றாள். செய்து கொடுத்தோம். இன்று அந்த சிவனே வேண்டுமென்கிறாளே" என்று பதபதைக்கிறாள்.
தக்ஷனுக்கு சொல்லொணா மகிழ்ச்சியுண்டாகிறது. அவன் மனைவிடம் இதைப் பற்றி சிறுதும் கவலைக் கொள்ளவேண்டாம், செய்வது என்ன என்று தனக்கு தெரியும் என்று ஆணையிடுகிறான். அவன் மனம் முழுதும் ஆணவத்தின் சாயை படிய எக்காளிக்கிறான். "இனி அந்தச் சிவனும் என்னை வணங்கவேண்டும்" என்று குதூகலிக்கிறான்.
வைகுந்தத்தில், அக்னியும், வாயுவும், வருணனும், நாரதர் சமேதமாகச் சென்று தங்கள் வருத்தத்தைத் தெர்விக்கின்றனர். அவர் ஆணைப்படி ஆடி ஆடி ஆட்டம்கண்டிருக்கிறோம் என்கின்றனர். தங்களது சுதந்திரம் பறிபோய்விட்டதாய் புலம்புகின்றனர்.
திருமால் தன்னால் ஒன்றும் செய்ய இயலாது எனினும், ஒரு உபாயம் கூறுவதாகக் அருளுகிறார்.
(தொடரும்)
ஆழியின் நடுவே பாம்புப் படுக்கை அமைப்பில் பின்னே நாகத்தின் தலையும் அசைவது போல் செய்திருக்கிறார்கள். சிறு விஷயங்களிலும் கவனமெடுத்து, வைகுந்தக் காட்சியில் எல்லாம், ஆழியின் ஒலி அடித்தளத்தில் ஒலித்துக்கொண்டே இருப்பது பாராட்டத் தக்கது.
தாக்ஷாயணியாக சுஜிதா நன்றாக நடித்துள்ளார். வேதவல்லியாக சுமங்கலி நன்றாக நடித்திருக்கிறார்.
இருவரும் இருக்குமிடமே தெரியாமல் செய்துவிடுகிறார் ஓ.ஏ.கே சுந்தர். என்ன ஒரு அலட்சியம்! அட்டகாசம்! மந்தகாசப் புன்னகை! சொற்சுத்தம்! நடை! பாவனை! :clap: இது வரை நடித்த பலரில் (ஸ்ரீதர் பூவிலங்கு மோஹன் உட்பட) இவருக்கே முதல் பரிசு!
ஒவ்வொரு விளையாடலில் வெவ்வேறு நடிகர்கள் எனும் பக்ஷத்தில் ஓ.ஏ.கே சுந்தருக்கு தக்ஷன் வேடம் முடிந்ததும் அவரது பாத்திரப் படைப்பு முடிந்து விடும். நிச்சயமாக இவர் இல்லாத திருவிளையாடல் தொடர், சுருதி இறங்கும்.
// தாக்ஷாயணியாக சுஜிதா நன்றாக நடித்துள்ளார். வேதவல்லியாக சுமங்கலி நன்றாக நடித்திருக்கிறார். இருவரும் இருக்குமிடமே தெரியாமல் செய்துவிடுகிறார் ஓ.ஏ.கே சுந்தர். என்ன ஒரு அலட்சியம்! அட்டகாசம்! மந்தகாசப் புன்னகை! சொற்சுத்தம்! நடை! பாவனை! இது வரை நடித்த பலரில் (ஸ்ரீதர் பூவிலங்கு மோஹன் உட்பட) இவருக்கே முதல் பரிசு!
ஒவ்வொரு விளையாடலில் வெவ்வேறு நடிகர்கள் எனும் பக்ஷத்தில் ஓ.ஏ.கே சுந்தருக்கு தக்ஷன் வேடம் முடிந்ததும் அவரது பாத்திரப் படைப்பு முடிந்து விடும். நிச்சயமாக இவர் இல்லாத திருவிளையாடல் தொடர், சுருதி இறங்கும்.//
yes SP mam,
I also feel the same. O.A.K.Sundhar is one of the very few, speaking very good 'thamizh'. Most of the others speaking 'tamil', which is so horrible to digest in this serial.
:yes: :)
புராணக் கதைகளை ஆதாரமில்லாமல் சிதைப்பது வரவேற்கத்தக்கதல்ல.Quote:
Originally Posted by Shakthiprabha
:huh:
:exactly:Quote:
Originally Posted by Shakthiprabha
ஆனா,
ஆதாரமின்றி இவ்வளவு பெரிய தயாரிப்பில் இத்தனை பேர் பார்க்க தொடரை சித்தரிக்க மாட்டார்கள் என்பது என் கருத்து.
நமக்குத் தான் தெரியவில்லை எதை ஆதாரமாக வைத்து கதை சொல்லியிருக்கிறார்கள் என்று. :?
தக்ஷனின் பிரச்சனைக்கு திருமால் உபயம் வழஙகுகிறார். சோமன் தன் மனைவியர் அத்தனைப் பேரிலும்
க்ருத்திகையிடம் (நம் கதையின் படி. எந்த நூலைப் புரட்டிப் படித்து இந்தக் கதையைச் சொல்லியிருக்கிறார்கள் என்று புரியவேயில்லை ) மட்டுமே அதிகப் ஆசை வைத்திருக்கிறான்.
(ரோஹிணியிடம் ப்ரியத்துடன் இருப்பதாகத் தான் அனைத்து வலைப்பதிவுகள் / சுட்டிகள் தெரிவிக்கின்றன. ரோஹினி எனபவளுக்கு அழகு, அழகுச்சாதனங்கள், ஆபரணங்கள் சம்பந்தபட்ட அனைத்தும் ப்ரியமானதாகக் கருதப்படுகிறது. (அதனால் இந்நட்சத்திரத்தின் ஆளுமையில் பிறந்தவர்களுக்கும் இதே பொன்ற ஆசைகள் இருக்கக்கூடும்) அழகனாம் சந்திரனும், இவளிடம் மட்டுமே அதிக அன்பு செலுத்துபவனாகக் கருதப்படுகிறான். அஃதாவது ரோஹிணி நட்சட்த்திரத்தின் 'காரகன்' சந்திரன். Astrologically, this constellation is ruled by the planet moon )
சோலைவனத்தில் காதலின் பிடியில் சிக்கித் தவித்து, கவிதைகள் பிதற்றியபடி தன் ஆசை மனைவி க்ருத்திகையைத் தேடுகிறான். ஆவலுடன் அங்கு வரும் அச்வினியையும், ரேவதியையும், எரிச்சலுடன் திருப்பி அனுப்பிவிடுகிறான். க்ருத்திகையிடம் பிரியமாக இருப்பதை, சுட்டிக் காட்டி திருமால் "சோமனின் குடும்ப்பத்தில் ஏதோ பிரச்சனையாமே என்று அடி எடுத்துக் கொடுக்கிறார்"
"உங்கள் கண்ணசைவிற்கு ஆயிரம் அர்த்தங்கள்" என்று உடனே புரிந்து கொண்ட நாரதர், தம் வேலையைத் துவங்குகிறார். தனித்திருக்கும் மற்ற சஹோதரிகளிடம், அவர்களின் பரிதாபத்தை, கோபத்தை, ஆதங்கத்தை தூண்டிவிடுகிறார். "எங்கள் சஹோதரி அல்லவா சந்தோஷமாக இருக்கிறாள், இதில் எங்களுக்கும் ஒன்றும் பிரச்சனையில்லை" என்று மழுப்பப்பார்த்தாலும், வாடிய முகங்கள், அவர்களின் சந்தோஷமற்ற நிலையை காட்டிக்கொடுத்து விடுகிறது. இங்கேயே இருந்துகொண்டு வாடுவதை விட உங்கள் தந்தையிடமே சென்றுவிடலாம் என்கிறார் நாரதர்.
இதற்கு வழிவகுக்குமாறு, சோமனிடமும், ஆசையற்ற மனைவிகளை இங்கேயே வைத்திருப்பதில் என்ன பயன், உங்களின் சந்தோஷ வாழ்வைப் பார்த்து அவர்கள் பெருமூச்சுவிடுவார்கள். பொறாமைப் படக்கூடம், அது உங்களை வாழ விடாமல் செய்து விடும் என்றவுடன், அவர்களை தந்தையிடமே அனுப்பிவைக்க உடன் புறப்பட்டு விடுகிறான் சோமன். க்ருத்திகைக்கு மிகுந்த கோபமும் மனவருத்தமும் நாரதரின் பேரில் உண்டாகிறது.
பலத்த தர்க்கத்தில் சோமனும் மற்ற மனைவியரும் ஈடுபடுகின்றனர். ஒரு கொடியில் பூத்த மலர்கள் நாங்கள், ஒன்றை மட்டும் சூடிக்கொண்டு, மற்றதை வீசிவிடுவது தான் நியாயமா என்று பொருமுகிறாள் அஸ்வினி. க்ருத்திகையைப் போல் என் மனதை புரிந்து கொண்டு அன்பு செலுத்தத் தவறியது, இவர்களின் தவறே என்று வாதிட்டு, அவர்களைத் தங்கள் தந்தையிடமே அனுப்புவிடுகிறான் சோமன்.
தனித்து இருவரும் வந்திருப்பதைக் கண்ட தாயிடம், பின்னர் கணவர் வருவதாகக் கூறி சமாளிக்கின்றனர். க்ருத்திகையும் பிறகு வருவாள் என்கின்றனர்.
தக்ஷனுக்கும் இந்த செய்தி எட்டுகிறது
(தொடரும்)
க்ருத்திகையாக வரும் நடிகை பேசும் தமிழ், கொஞ்சிக் கொஞ்சி எரிச்சலூட்டுகிறது. பாடத்தை உருவேற்றி அப்படியே ஒப்பித்துவிடுகிறார். அதில் பாவம்(bhavam), ஏற்ற-இறக்கம் என்று எதுவுமே இல்லை. ரேவதியாக செய்திருப்பவர் நன்று. அதை விட அஸ்வினியாக வரும் நடிகை வெகமாய், அழகுத் தமிழில் பொரிந்து தள்ளுகிறார். பாராட்டுக்கள்.
"சந்தோஷமாக இருக்கிறீர்களா" என்று கேட்கும் வேதவல்லியிடம்
"ம்ம் இருக்கிறாள்" என்ற அஸ்வினியின் ஒற்றை பதில் அனைத்தையும் கூறிவிடுகிறது. ரசிக்க முடிகிறது :clap:
நேற்றே கூறவெண்டுமென்று நினைத்தாலும், தயக்கத்தின் காரணாமாய் கூறாமல் விட்டுவிட்டேன். தயக்கமாய் இருப்பினும் இன்றேனும் இதைக் கூறாமலிருக்க முடியவில்லை. நேற்று, ரேவதி/அஸ்வினி உடைகளும் இன்று ரேவதி அணிந்திருந்த உடையும் உருத்தும்படி இருக்கிறது. அஃதாவது, கைவைக்காத (ஸ்லீவ்லெஸ்) உடைகள் அணிய நடிகைகளுக்கு தயக்கமிருப்பின், ஒன்று உடையை மாற்றிவிடலாம், இல்லாவிட்டால் நடிகையை மாற்றிவிடலாம். இரண்டும் இல்லாவிற்றால், சிறிதளவு கைகளையும் சோளியின் நீளத்தையும் நீட்டிவிடலாம். இது எதுவுமே இன்றி, அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த ராஜ உடைகளை, தோல்நிறத்தில் இல்லாத வெள்ளை நிற (கை வைத்த) ஸ்லிப்களோடு :banghead: அணிந்துக்கொண்டு உடையையும் கேவலப்படுத்தி, தாங்களும் கேலிக்குள்ளாக்கிக்கொள்கிறார்கள். இது பார்ப்பதற்கும் படுமோசமாய் இருக்கிறது.
சோமனும் க்ருத்திகையும் பேசிக்கொள்வதற்கு மிக அழகான ஊஞ்சல், அதில் பூ அலங்காரங்கள் என்று பிரமாதப்படுத்தியிருந்தார்கள். பின்னால் பொடப்பட்டுள்ளது மட்டும் சுவரொட்டி என்று அழகாய்த் தெரிகிறது. ஏதேனும் சோலையில் சென்றே இக்காட்சியை எடுத்திருக்கலாம்.
சோலையின் (!!) முன்னால் அட்டைப் பூக்களை காற்றில் அசையச்செய்வதற்காக, பொம்மலாட்டட்தில் தேர்ச்சியின்றி ஆட்டுவது போல் ஆட்டியிருக்கிறார்கள். அது மென்பொருள் உபயோகித்து செய்யப்பட்ட க்ராஃபிக்ஸ் எனும் பக்ஷத்தில், படு சுமாரான வேலை.
தஷன் அரண்மணையில் பல இடங்களில் அட்டைத் தூண்கள் இளிக்கின்றன. சாகரின் ராமாயணம், மஹாபாரதம் முதலிய தொடர்களில் காட்சியமைப்பிற்காக எத்தனை அதிகம் செலவிட்டிருப்பார்கள் என்று இத்தொடரைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்! நல்முயற்ச்சியுடனும் நோக்கத்துடனும் தயாரிக்கப்பட்டிருக்கும் இத்தொடரில் பணமும் முயற்சியும் சற்று அதிகமாகக் காட்சியமைப்பிற்காகவும் ஒதுக்கினால் இன்னும் பிரமாதப் படுத்தலாம்.
வைகுந்தத்தில் செய்திருக்கும் ஆழியமைப்பு, அதைச் சேர்ந்த க்ராஃபிக்ஸ் நன்று.
சோமனுக்கும் அவன் மனைவியருக்கும் நடக்கும் தகராறில், பொதுவாய், ஆசையின்றி, ஊருக்காக வாழும் கணவன் மனைவியின் நிலை படமாக்கப் பட்டது போல் இருந்தது. ஊர் என்ன சொல்லும்! உற்றாரிடம் எந்த முகத்தைக்கொண்டு விழிப்போம், அடடா குழந்தைகள் அனாதையாகிவிடுவார்களே என்ற நினைப்பில் ஆசையற்ற தாம்பாத்யம் கொண்டுள்ள பலரின் மனவாட்டதை படம் பிடித்து காட்டியுள்ளார்கள்
சக்திப்பிரபா!
உன்னிப்பாக கவனித்து விமர்சனங்களை எழுதி வருகின்றீகள்
:clap: :clap:
தொடருங்கள்
சந்திரனாக கோல்டன் சுரேஷ்்
ரேவதி = பிரியங்கா
அஸ்வினி / கிருத்திகை யார் ???
சென்ற வெள்ளியன்று தொலைக்காட்சி இணைப்பு துண்டிக்கப்பட்டதால் தொடரைக் காணா இயலவில்லை. இவ்வாரத்தின் ஆரம்பத்தின் சந்திரன் சிவனிடம் முறையிடும் காட்சியிலிருந்து ஆரம்பித்திருந்தார்கள். எனில், சந்திரனை தக்ஷன் சாபத்திர்க்கு உள்ளாக்கியிருக்கவேண்டும். சந்திரனின் தேஜஸ் குறைந்து குன்றி அவன் தேய்ந்தே இறந்து போகும் படி சாபமிடுகிறான் தஷன். இதனைத் தொடந்து பயத்தில், இறைவனாம் ஈசனை சந்திரன் நாடுவதாக கதை உண்டு.
இறைவனிடம், சந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தை எடுத்துரைத்து கருணை வேண்டி நிற்கிறான். இறைவனும், 'மாதத்தின் 15 நாட்கள் தேய்ந்து மங்கிப் போனாலும் மீதமுள்ள 15 தினங்கள் உன் ஒளி கூடி, வளர்ந்து பூரணமடைவாய்' என்று சாபத்தை தணிக்கிறார்.
இதனைக் கேள்விப்பட்ட தஷன், தாங்கொணா கோபத்திற்குள்ளாகிறான். 'பெற்று வளர்த்தவன் நான், பெற்றவனுக்கல்லவா தெரியும் வாழாத பெண்களின் துயரம். இவன் சர்வலோக நாயகன் என்ற பட்டதை ஒரு காலத்தில் பெற்றவனாய் இருக்கலாம். அவனிடமிருந்து நான் அதைப் பறித்து பலகாலமாகிவிட்டது. என் வரத்தை தணிக்க இவன் யார்!' என்றெல்லாம் ஆத்திரத்தில் கூச்சலிடுகிறான். இதனைக் கேட்ட தாக்ஷாயணி வேதனை அடைகிறாள். அவன் சிவ நிந்தனை செய்வது தவறு என்று எடுத்துரைக்கிறாள். என் மகளாய் இருந்தும் நீ ஈசனுக்கே பரிந்து பேசுகிறாயே என்று தக்ஷன் கடிந்து கொள்ளும் போது, அப்பேர்பட்ட பக்தியை அவளுக்கு கற்றுக்கொடுத்ததே அவள் தந்தை என்பதை நினைவு படுத்துகிறாள். தக்ஷனுக்கு மீண்டும் தன் வரம் நினைவுக்கு வர சிவனை தனக்கு அடங்கச் செய்யும் நாள் வெகு விரைவில் வரவிருக்கிறது என்று நினைத்து புன்னகைக்கிறான்.
சதா சிவ பூஜையில் ஈடுபட்டிருக்கும் தாஷாயணியை, தன் வயதொத்த பெண்களைப் போல் ஆடிப்பாடி களிக்கக்கூடாதா என்று வினவுகிறாள் அவள் தாய். வயதிற்கும் பக்திக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. என் மனம் ஆடிப்பாடி களிப்பது சிவனை துதிக்கும் போது தான் என்று பதிலளிக்கிறாள். அவள் சிவனிடம் கொண்டிருப்பது பக்தி மட்டுமல்ல, அவள் செய்வது பூஜை மட்டுமல்ல, அவரையே அடையவதற்கான தவம், அவரையே திருமணம் செய்து கொள்ள அவள் விழைவதாய் கூறுவது வேதவல்லிக்கு பெரும் கவலையை அளிக்கிறது.
பருவப்பெண்ணாய் வளர்ந்து விட்ட தாஷாயணியின் சிவபூஜைக்கு செவி சாய்க்கும் நேரம் வந்துவிட்டதால், இனி தாமதம் செய்யலாகாது என்று சிவன் பூலோகத்திற்கு புறப்படுகிறார். தன் சிநேகிதிகளுடனும், தமக்கைகளுடனும் நந்தவனத்தில் உலாவிக்கொண்டிருக்கும் போது, அங்கே திடீரென ஒரு கிழவர் தோன்றுகிறார். (அட சரியாய் யூகித்துவிட்டீர்களே...வேறு யாரும் அல்ல நம் சிவன் தான ) கிழவர் வேடத்தில் பெண்களிடம் வம்பு செய்கிறார் இறைவன். வம்பு வளர்த்து, தாஷாயணி மேல் தனக்கு பிரியம் இருப்பதாகவும், அவளை தூக்கிக்கொண்டு போய் திருமணம் செய்யவும் தயார் என்று சிரிக்கிறார். தாஷாயணி சற்று நேரம், பரிச்சயமான அவரின் பார்வையில் தன்னை மறந்தாலும், கிழவரின் பேரில் பெரும் கோபம் கொண்டு, அவரை விரட்டி விட எத்தனிக்கிறாள். 'நீ விரட்ட வேண்டாம், நானே சென்று விடுகிறேன்' என்று சிவன் மாயமாய் மறைந்து விடவும், எல்லோருக்கும் பீதி அதிகரிக்கிறது.
விரைந்து வந்து தங்கள் அன்னையிடம் முறையிட, அங்கும் அந்த கிழவனின் தோற்றம் தாஷாயணியின் கண்களுக்கு மட்டும் தெரிகிறது. அவள் நோக்கும் இடமெங்கும் கிழவன் சிரிப்பும், அழைப்பும் அவளுக்கு மட்டும் தெரிய, பீதி அதிகரிக்கிறது.
(தொடரும்)
தலையலங்காரங்கள் அழகாய் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். சுஜிதா கொள்ளை அழகுடன் வலம் வருகிறார். மற்ற இரு பெண்களான அச்வினியும், ரேவதியும், தங்களின் தந்தையர் வீட்டில் இன்னும் அழகாய் ஆடை அலங்காரத்துடன் காட்சியளிப்பது, பாராட்டத்தக்கது (அஃதாவது சந்திரன் அவர்களை சரியாய் பராமரிக்க தவறிய போது அவர்கள் ஆடைகள் சற்றே சுமாராக உடுத்தியது) ஆனாலும் அணியும் உள்ளாடைகளின் நிலை மட்டும் அப்படியே இருக்கிறது.
சந்திரன் தேய்வதும், குன்றுவதும் அழகாய் (சரியாய்) காண்பித்திருந்தனர். சுமங்கலியாய் வந்தவர் நன்றாக செய்கிறார் என்றாலும் "நந்தவனத்தில் கிழவன் ஒருவன் இருக்கிறானம்மா" என்று பெண்கள் வந்து முறையிட்டதும்,
"என்னது...நந்தவனத்தில் கிழவனா!" (குமரன் இருந்தால் மட்டும் பரவாயில்லை என்பது போல்) என்று பதபதைக்கும் போது நமக்கு சிரிப்பு வருகிறது. ஒருவேளை அங்கு அமைந்திருந்த வசனம் காரணமாய் இருக்கலாம்.
கதை மெல்லமாய் ஊர்ந்து செல்கிறது. இன்னும் கொஞ்சம் துரிதப்படுத்தலாம். கதை தெரிந்ததாய் இருந்தாலும், புரிந்ததாய் இருந்தாலும், ஒரே வரிக்கதையாய் இருந்தாலும் கூட, திரைக்கதையும், வசனமும் கொண்டு ஈர்ப்பை இருக்கச்செய்துவிடலாம்.
அந்த விஷயதில் இவர்கள் ... இன்னும் முயலவேண்டும்!
சிவன் கிழவன் வேடத்தில், ஸ்ரீதர் நன்றாகச் செய்திருந்தார். இவர் தான் சிவன் என்று இருவினாடிகள் கழித்தே புரியுமளவுக்கு ஒப்பனை நன்றாக இருந்தது. ஆனாலும் என் எட்டு வயதுப் பெண், "அம்மா இது சிவன் தானே கிழவன் வேஷத்தில்" என்ரு ஒரே நொடியில் கண்டு பிடித்து விட்டாள். அவளுக்கு கதை கூட சில நேரம் புரியாத போது ஒப்பனை சட்டென்று கண்டுபிடித்து விட்டாள்.
இக்கால குழந்தைகள் படு சுட்டிகள். இவர்களெல்லாம் பழைய எம்.ஜி.ஆர் படங்களில் வெறும் தாடி, மீசை வைத்து வேறு வேடம் கட்டும் நடிகர்களை, அதையும் கூட கண்டுபிடிக்க முடியாமல் ஏமார்ந்து போகும் வில்லன்களைக் கண்டால் என்ன சொல்வார்கள்!
avlO nallaa irukkaa, indha program.. :roll:
I dont know about that sarna, I watch it only because, it talks on mythology and religion and I AM FOND of mythology and religion.
I aint interested in watching anything else.
ok .... :P
ஆச்சரியமான அழகான விஷயம் நம் புராணக் கதைகள். புனைவுக் கதைகளை அதன் கற்பனை வளம் குன்றாமல் ரசிக்க முயன்றால், மிகப் புதுமையான உலகுக்கு நம்மை இட்டுச் செல்கிறது. பூமியின் சுழற்சிக் காரணமாய் மறைந்தும் மறையாமலும் தோன்றும் நிலவுக்குத் தான் எத்தனைப் புனைக்கதைகள்!
:DQuote:
Originally Posted by Shakthiprabha
:rotfl:
:exactly:Quote:
Originally Posted by Shakthiprabha
வேறு யார் கண்களுக்கும் தெரியாத கிழவன் தாக்ஷாயணியின் கண்களுக்கு மட்டும் எப்படித் தெரிகிறான்? தன் படுக்கையறையிலும் அக்கிழவன் வந்து தொல்லைக் கொடுப்பதாய் முறையிடுகிறாள் தாஷாயணி. தஷனும், வேதவல்லியும் ஏனையரும் செய்வதறியாது நின்றிகின்றனர். இத்தனைக் கட்டுக்காவல்களை மீறி ஒருவன் அதுவும் கிழவன் எப்படி நந்தவனத்திற்குள்ளும படுக்கையறையிலும் நுழைந்திருக்க முடியும்! என்று பலவாறு குழம்புகின்றனர். தஷனின் மாளிகையின் காவலை மீறும் அளவு, எப்படி இத்தனைத் துணிச்சல் ஒருவனுக்கு இருக்க முடியும்? ஒரு வேளை புத்தி பேதலித்தவனாய் இருப்பானோ என்று தஷன் சந்தேகம் கொள்கிறான்.
அடுத்த தினம் சகோதரிகள் மூவரும் ஒரு திட்டம் தீட்டுகின்றனர். நந்தவனத்தில் அவர்கள் தனியே நடமாடும் போது அக்கிழவன் தோன்றினால், வம்பு செய்தால், தாஷாயணி அவனுக்கு ஒப்புதல் அளிப்பது போல் அவனுடன் ஆசையுடன் பேசி அளவளாவ வேண்டும். இதற்குள் மற்றவர்கள் சென்று அரண்மணைக் காவலாளிகளைக் கொண்டு அவனை கையும் களவுமாய் பிடிக்கலாம் என்று யுக்தி செய்கின்றனர். அதன்படி கிழவனாய் சிவன் தோன்றவே தாஷாயணியும் அவருடன் சிரித்து பேசி அவரைத் தக்கவைத்துக் கொள்ளப் பார்க்கிறாள். இதற்குள் மற்ற சஹோதரிகள் சென்று தஷன், ஏனைய காவலாளிகள் வந்து அவனை பிடித்து விடுகின்றனர்.
கிழவனும், மாட்டிக்கொண்டது பொல் பரிதவித்து, அவர்களுடன் அரண்மணைச் செல்கிறான். தஷன் கிழவன் ஒரு மாயாவி என்ற முடிவு கட்டி, கிழவனுக்கு மட்டுமின்றி நாட்டிலுள்ள அனைத்து மந்திரவாதிகளை எல்லாம் கழுவில் ஏற்ற உத்தரவிடுகிறான்.
இனி தன் விளையாட்டை நிறுத்திக் கொள்ள தீர்மானித்து, கிழ உருவைக் கலைதது விட்டு, சிவனாய் தரிசனம் தருகிறார். மிதமிஞ்சிய ஆச்சரியம், மகிழ்ச்சி கொப்பளிக்க தஷனும், தாஷாயணியும் மற்றோரும் அவரை வரவேற்கின்றனர்.
"என் மகளைத் தா என்று கேட்டால் தந்திருக்க மாட்டேனா, உங்களுக்காகவே தானே அவளை நான் வளர்த்து வருகிறேன்" என்று தஷன் பவ்யமாய் கூறுகிறான். திருமண ஏற்பாடுகள் அனைவரும் தயாராகின்றனர். தஷனிடம், மகிழ்ச்சியின் ஊடே ஆணவமும் தலை தூக்கை அதை இறைவன் மட்டும் கண்டு புன்னகைக்கிறார்.
"இவள் செய்தது பக்தி என்று நினைத்தோம் பதி-பக்தி என்று இப்பொதல்லவா தெரிகிறது" என்று சஹோதரிகள் கேலிக்கின்றனர். மணமகள் அலங்காரத்திற்கு தாஷாயணி தயாராகி நிற்க, ரேவதியும், அஸ்வினியும் முகத்தில் வாட்டமுடன் தங்கள் அன்னையிடம் எடுத்துரைக்கின்றனர்.
"திருமணத்திற்கு எல்லோரும் வந்திருக்கும் போது, தங்கள் முதல் மருமகனுக்கும் அழைப்பு விடுக்கவேண்டுமல்லவா. அவர் இல்லாமல் இருந்தால் நன்றாய் இராது, சந்திரன் வந்து விட்டால் எங்களையும் யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள்!" என்கின்றனர்.
( 'முழுதாய் ஒளிர்ந்தாலும் மணாளன்....
அரையாய் தேய்ந்தாலும் ஆகமுடையான...'
என்பது புதுமொழியாம்! )
____
தஷன், கிழவனிடம் "முதியோருக்கே உள்ள பக்குவம், ஞானம், முதிர்ச்சியெல்லாம் துளியும் தென்படவில்லையே!" என்கிறான். பக்குவமும் பக்தியும் ஞானமும் முதிர்ச்சியும் வயதையொத்து வருவதல்ல. தாஷாயணியின் சிறுவயது பக்தியும் இதற்கொரு எடுத்துக்காட்டு.
ஞானமும், ஏனைய பெருங்குணமும், அவரவர் கர்மவினைப்படி, ஆன்மாவின் முதிர்ச்சியின் படி அமைவது. சிறுபிள்ளைத்தனமாய் நடக்கும் எத்தனையோ பெரியோர்களை நாம் காண்கிறோம். நற்குணங்களும், பொறுமையும் கொண்ட சிறியோரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
வயதிற்கும் அறிவிக்கும் (பொதுஅறிவு அல்ல) சம்பந்தமில்லை என்பது கண்கூடு!
கிழவன் சிவனாய் மாறும் போது, தஷனின் முகத்தில் தோன்றிய மாற்றம் அருமையாய் இருந்தது. மிக நன்றாகச் செய்திருந்தார். தாஷாயாணியாக சுஜிதாவும் ஈடுகொடுத்து பாவங்களை மாற்றி, வசங்களை அழகாய் உச்சரித்து, தன் பங்குக்கு உழைப்பை அளித்திருக்கிறார்!
:rotfl:Quote:
Originally Posted by Shakthiprabha
:exactly:Quote:
Originally Posted by Shakthiprabha
:clap:Quote:
Originally Posted by Shakthiprabha
nandri aana!
என் வீட்டில் சிறிது வேலைகள் இருப்பதால், இன்னும் 10/20 நாட்களுக்கு உடனுக்குடன் எழுத முடியுமா தெரியவில்லை.
முயல்கிறேன். எப்படியும் சுருக்கமாகவாவது எழுதிவிடுகிறேன்.
சந்திரனை அழைக்கவேண்டும் என்ற யோசனையை முன்வைக்கும் முன்னே,
தக்ஷனுக்கு கோபம் தலைக்கேறிவிடுகிறது. அது பற்றி மற்றவர்களின் யோசனையைப்
புரக்கணிக்கிறான்.
தாஷாயணியின் திருமணம் வெகு விமர்சையாக நடந்து கொண்டிருக்கிறது.
மணமகள் அழகாய் அலங்கரிக்கப் பட்டு அழைத்து வரப்படுகிறாள். தேவர்களும் மூவர்களும்
புடை சூழ, தஷன், தாஷாயணியை கன்னிகாதானம் செய்து கொடுக்கும் நேரம், அவன்
சித்தமெல்லாம் பூரிக்கிறது. இறைவன் ஈசன் தன் மருமகன் என்ற மகிழ்ச்சியால் அல்ல.
அத்தனைக்கும் அதிபதியாம் உலக நாயகனாம் ஈசன், உயர்ந்தவன் ஈசன், இந்த ஒரு க்ஷணம்
கையை கீழேந்தி, என்னிடம் யாசிக்கிறான். இந்த ஒரு நிமிடம், என் கை உயர்ந்திருக்கிறது.
இந்த ஒரு நிமிடம், நான் கொடுப்பவனாகவும் அவன் கேட்க்பவனாகவும் இருக்கிறான்.
இந்த ஒரு நிமிடம் நான் உயர்ந்தவன் என்ற மமதை தக்ஷனுக்கு ஏற்படுகிறது. எங்கும் நிறைந்திருக்கும்
பரம்பொருள் எண்ணித்திலும் இருப்பவர் அல்லவா, அதனால் அவருக்கும் அவனின் எண்ணம்
தெரிந்து விடுகிறது. உடனே மணமேடையை விட்டு மாயமாய் மறைந்து விடுகிறார்.
தக்ஷன் மிகுந்த கோபம் கொள்கிறான். காபலிகன், சுடலையில் உறைபவன், சாம்பல் தரிப்பவனுமான
இவனுக்கு என் அருமைப் புதல்வியை திருமணம் செய்து கொடுக்க எண்ணியது என் தவறு.
மணமேடையில் காரணமேதும் கூறாமல் அவமதித்து சென்ற இவனை யாருமே இனி வழிபடக்கூடாது.
இவனின் இந்தச் செய்கைக்கு மனம் வருந்தி வெட்கப்படவேண்டும் என்று ஆத்திரம் பொங்க
கர்ஜிக்கிறான்.
தஷனைப் பெற்றவனாம் பிரம்மனும், சிவனின் செய்கை தனக்கு மிகுந்த மனவருத்தத்தையும்
குழப்பத்தையும், தருவதாக வருந்துகிறார். மனக்குறை ஏதேனும் நேர்ந்திருக்கவேண்டும், அதனாலேயே
இறைவன் மறைந்து விட்டான் என்று எண்ணுகிறார்.
தாஷாயணி மிகுந்த மனத்துன்பத்திற்காளாகிறாள். யாராலும் அவளின் துன்பத்தை ஆற்றமுடியவில்லை.
'தன் பூஜையில் சிரத்தையில் ஏதேனும் தவறு நேர்ந்து விட்டதோ' என்று அவள் தனிமையை அழுகிறாள்.
என்ன தவறு, என்ன குற்றம் நேர்ந்தது என்று தெரியாமலே இப்படி புலம்பும்படி ஆகிவிட்டதற்கு
கண்ணீர்வடிக்கிறாள்.
தஷனால் தாஷாயணியின் வருத்தத்தை தாங்க முடியவில்லை. 'எல்லாம் என் குற்றம் தான்,
சிவனின் தரம் தெரியாமல் சிறு வயது முதல் உனக்கு பக்தி செய்ய பழகி கொடுத்தது என் குற்றம்.
அதற்குத் துணை போனது உன் தாயின் குற்றம்' என்று அரற்றுகிறான்.
(தொடரும்)
இக்கதை இதுவரை நான் கேட்டறியாதது. தஷன் யாகம் கதையைத் தான் கேட்டிருக்கிறோமே தவிர,
தாஷாயணியின் திருமணம் பற்றிய தகவல்கள் நமக்குப் புதுமையாக இருக்கின்றன.
நம் திருமணங்களில் மணமகளுக்கு ஆயிரம் அலங்காரங்களும், முத்துக்களும் ரத்தினங்களும் பட்டும்
ஜரிகையும் அலங்கரிக்க, மணமகனுக்கு பட்டு வேட்டியுடன் கச்சிதமாய் முடிந்து விடும். சிவனுக்கு
அதுவும் இல்லை. சடா முடியன். புலித்தோல் போர்த்தியவன். அவனுக்கு திருமணம் என்றால்
எவ்வாறு அலங்காரம் செய்வது? சரியென்று விசேஷமாக வெள்ளைப் புலித்தோலுடன்
காட்சித் தருகிறார் (bengal tiger)! :D
தாஷாயணி வருத்தப்படும் சோகக் காட்சிகளில் பின்னணி இசையாக "புத்தம்புது பூ பூத்ததோ" என்ற
"தளபதி" திரைப்படத்தின் பின்னணி இசையை சேர்த்தது போல் தோன்றுகிறது!!
"பெண்ணாகப் பிறந்தவளுக்கு இப்படித் துன்பங்கள் வரத்தான் செய்யும், பெண்கள் பொருத்துக் கொள்ள
வேண்டும்" என்று வேதவல்லி சொல்வது நாடக வசனம்!
திருமணப்பாடலில் "இந்திரன் சந்திரன் வேதம் முழங்க" என்று வருகிறது. சந்திரனை திருமண மண்டபத்தில்
காணோம்! :?
இறைவனாகவே இருந்தாலும், கோபித்துக் கொண்டு மணமேடையை விட்டு ஓடிவிடுவது எந்த விதத்தில்
நியாயம்!! இப்புனைவுக் கதாநாயகன் சிவன் என் முன் தோன்றினால் சட்டையைப் பிடித்து (சரி புலித்தோலை பிடித்து ) காரசாரமாக கேட்டுவிட வேண்டும்! அந்த பயத்தில் தான் என் போன்ற சாதார்ணர்களுக்கு இறைவன் காட்சியளிக்க மறுக்கிறார்!
வீட்டு வேலைகளுக்கிடையிலும்
இத்தொடரைத்் தொடர்வதற்குநன்றி
புதுப் புது புனைகதைகளைத் தருகின்றார்கள்.Quote:
Originally Posted by Shakthiprabha
:banghead:
திருமணம்
தமிழ் /சைவ முறையில் நடக்கும் என்று எதிர்பார்த்தால் ..ம்ம்ம்
சிவனுக்கு யார் தாரை வார்ப்பது என்று பார்த்தும் எமாற்றம்தான் ..
இறைவன் பால் பற்று வைத்தது என் தவறா என்று பலவாறு ஆற்றாமையால் புலம்பிக் கண்ணீர் வடிக்கிறாள்
தாஷாயணி. தஷனும், வெறும் கல்லாய் இருக்கும் உனக்கு பூஜைகள் எதற்கு. சாம்பல் தரிப்பவனுக்கு
சந்தனத்தின் வாசம் தெரியுமா. என்னை, என் பெண்ணை இப்படி அவமானப்படுத்தி மறைந்த நீ
பட்டமரமாகப் போவாய் என்றெல்லாம் கோபத்தில் உச்சியில் அரற்றுகிறான்.
தாஷாயணி தனியாய் நந்தவனத்தில் அழுது புலம்புவது சிவனின் கோபத்தை சற்றே மட்டுப்படுத்துகிறது. அவள் தனியாய் இருக்கும் போது, அவள் முன் தரிசனம் தந்து, தன்னுடன் வரச் சம்மதமா என்று கை நீட்டுகிறான். அவளும் சூழ்நிலை ஏதும் நினைவின்றி, இறைவனைக் கண்ட மகிழ்ச்சியில் தன் கை கோர்க்க உடன் தாஷாயணியுடன் கைலாயம் சென்றுவிடுகின்றார் சிவன்.
இதை பார்த்து விட்ட தஷனின் மற்ற புதல்விகள் நடந்ததை தஷனுக்கு தெரிவிக்கின்றனர். 'நான் தாரைவார்த்துக் கொடுக்கும் போது கோழை போல் மறைந்து விட்டு, இப்போது என் மகளைக் கடத்திச் சென்று விட்டான் அந்த ஈசன். இவனே என் முதல் சத்ரு' என்று கர்ஜிக்கிறான்.
கைலாயத்தில் ஷக்தியாய் மாறுகிறாள் தாஷாயணி. சிவனிடம் முறைப்படி தன்னை மணந்து கொள்ளாததன் காரணம் கேட்கிறாள். கொடுப்பவன் மனநிலை, எப்படிப்பட்டது என்பதைப் பொருத்துத் தான் தானத்தின் பெருமையும் உள்ளது. தானம் கொடுப்பவன், பிரதிபலன் ஏதுமின்றி சந்தோஷத்துடன், அஹங்காரமின்றி தானம் கொடுக்கவேண்டும். தஷனிடத்தில் அது தொலைந்தபடியால், நான் மறைந்து விட்டேன். அவன் கை உயர்ந்திருந்ததாக எண்ணினான்.
இப்பொழுது அவன் ஏதும் எனக்கு கொடுக்கவுமில்லை. நான் வாங்கவுமில்லை. எனினும் முறைப்படி அவனிடம் சொல்லிவிடுவது சரி என்று உமையவள் கூறுகிறாள். இத்தனை வருடம் பெற்று வளர்த்த தந்தைபாசம் அவளை பற்றிக்கொண்டிருக்கிறது. அதற்கு ஈசனோ, 'ஆதி அந்தமில்லாதவன் நான். எனக்கு பந்தமென்றும் உறவென்றும் ஏதுமில்லை. உன்னை அடையும் தருணத்தில் அடைந்தேன். எனக்கு வேறெந்த பிணைப்பும் கிடையாது' என்று வாதிடுகிறார். அவனுக்கு நான் வரமளித்திருப்பதால் இனி அவனே எனக்குக் கடன் பட்டவனாகிறான் என்கிறார். இறைவிக்கு மனவருத்தம் உண்டாகிறது.
தஷனோ, கோபம், ஆத்திரம், என்ற நிலைகளைக் கடந்து, வெறுப்பும், பிடிப்பின்மையுடனும் அடைந்து கிடக்கிறான். தன் நாட்டையும் வேலைகளையும் கூட சரிவர கவனிக்க மறுக்கிறான். 'என்னை ஒருவன் சிறுமைப்படுத்திவிட்டான், இது என் மாபெரும் தோல்வி என்று வெறுமை மேலிட விரக்தியின் பிடியில் சிக்கித் தவிக்கிறான்.
பிரம்மா, விஷ்ணு உட்பட ஏனையர்கள் அவனை சமாதானப்படுத்த முயற்சிக்கின்றனர். 'நீ சொல்வதிலும் நியாயம் இருப்பினும், சிவனின் செய்கைக்கு அர்த்தம் இருக்கும்' அதை தெரியாமல் அவரை அவதூறு சொல்லவேண்டாம் என்கின்றனர். இத்தனைத் தவறு செய்தவனை நான் விட்டு வைத்திருப்பதே என் பெருந்தன்மையைக் காட்டுகின்றது. அவனை விட நானல்லவோ மேலானவன் என்கிறான் தஷன். பிரம்மாவும் "அவருக்கு சொந்தமான ஒன்றை நீ வளர்த்தாய், இப்போது அதை அவரே எடுத்துக் கொண்டுவிட்டார் என்று நினைத்து மனதைத் தேற்றுக்கொள். நீ சென்று சமாதானம் பேசி, உறவை வளர்ப்பதே உசிதம்' என்று எடுத்துரைக்கின்றனர்.
(தொடரும்)
ஆனா,
இக்கதை புனைக்கதையாய் இருப்பினும், ஏதேனும் ஏடுகளை புரட்டாமல், நூல்களை ஆராயாமல், கதையமைத்திருக்கமாட்டார்கள் என்று எண்ணுகிறேன் :? (நமக்குத் தெரியாமல் இருக்கலாம் :? )
தாஷாயணியைப் பற்றி பல கதைகள் உண்டு. தந்தையையும் விட்டுக்கொடுக்க மனமின்றி, கணவன் பாசத்திற்கும் கட்டுப் பட்டு அவள் பட்ட துன்பமும், தஷனின் யாகத்திற்குச் சென்ற அவள், இறுதியில் கோபமுற்று தன்னையே அக்னிக்கு இறையாக்கிக் கொண்டு இறந்து விடுகிறாள் என்றும் கூறுவர்.
இந்த துயர் தாங்காத சிவனும், மிகுந்த கோபம் கொண்டு, அவளின் சாம்பலின் மேல் ருத்ர தாண்டவம் ஆடி, தஷனை எரித்தாய் கதை உண்டு. (உபயம்: அமர்சித்ரகதா)
இப்படி பார்த்தாலும், தாஷாயணியின் கதை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதை.
(நம் தொடரில் எப்படிக் கொண்டு போகப் போகிறார்கள் என்று தெரியவில்லை)
தமிழ்க் கடவுள் முருகனாய் இருந்தால் தாரைவார்க்கத் தேவையின்றித் திருமணம் செய்துகொண்டிருப்பாரோ :? இக்கதையை பார்க்கும் நமக்கும், இறைவன் என்பதை மறந்து சாமான்யனின் கதை என்று நோக்கினால், தஷனின் பக்கத்து நியாயங்களும் விளங்கும்.
கதையைப் பார்த்துக் கொண்டிருந்த என் பெண், தாஷாயணிக்காக பரிதாபப் பட்டு, " I dont like shiva! he is bad !" என்று முத்திரைக் குத்திவிட்டாள்! :(
Aamaam SP, indha kathaiyai, chinna vayathil en paati solla naan ketirukiren... idhu punaikadhai alla...Quote:
Originally Posted by Shakthiprabha
நன்றி சக்திப்பிரபா
ஆதாரம் இல்லாமல் புராணக் கதைகளில் "கை" வைக்கத் தயங்குவார்கள்தானே.
திரை நாடகங்களின் உயிர்நாடியேQuote:
Originally Posted by Shakthiprabha
அழுகைதானே
:-)
மது,Quote:
Originally Posted by Madhu Sree
புனைக் கதை என்றால் ஆதாரமின்றி என்ற அர்த்தத்தில் நான் அதைச் சொல்லவில்லை. பொதுவாக, வழிவழியாய் வந்த புராணக் கதைகள் பலவற்றிற்கும் ஆதாரம் இருப்பது கடினம். சில நடப்புகளை, வழக்குகளை, நமக்குப் புரியவைக்க முன்னோர்கள் அதை கதை வடிவில் சொல்லிவந்திருக்கின்றனர். (including moon's phases and personification of stars as his wife) . வானவியலை நமக்கு கதை வழியாய் சொல்ல வைக்க ஒரு முயற்சி. இது போல் பல நீதிகளை போதனைகளை கதை வழியாய் சொல்வது தான் புராணக் கதைகள் அதை "புனைக்கதைகள்" (அதாவது உருவாக்கப்பட்ட) என்றும் சொல்வதுண்டு.
இப்படி ஒரு கதை வழக்கில் (அதாவது ஏதோ ஒரு ஏட்டில் / நூலில் / சொல்வழி வழக்கில்) இருந்ததா என்ற ஐயத்தை தெளிவு படுத்தியமைக்கு நன்றி.
அதனால், சொல்வழி வழக்கில் வந்திருந்தாலும், புராணக் கதைகள் பலவற்றை (இதிஹாசக் கதைகளை அல்ல) புனைவுக் கதைகள் என்று கூறுவது சரி என்று எண்ணுகிறேன்.
ஆனா,
:)
வீரபத்திரனாக பாபுஸ்
ஹ்ம்ம்
கதை நமக்கு புதிதல்ல. தாஷாயணியின் இறப்பு. பின் வீரபத்திரன். இனி "பத்ர-காளி"யும் தோன்றுவாள் என்று நினைக்கிறேன்.
இதன் பிறகு தான் உடன்கட்டை ஏறுதலை, "சதி" என்ற வழக்கத்தின் பேரில் கடை பிடித்து வந்தார்களோ?
( சதி (ஷக்தி) என்பவள் தாஷாயணியாய் அவதரித்த உமையவளின் பிறப்பு! )
நேற்றைய சிவ-ஷக்தி உரையாடல் பாதிக்கு மேல், "திருவிளையாடல்" வசனம்.
( "அறிவு தஷனுக்கு ஏராளம்
அதை விட...ஆணவம்...ஏராளம்...ஏராளம்" என்பது உட்பட! )
நடிகர்திலகம் மறுபடி வந்து போனார் (மனக்கண் முன்)
:exactly:Quote:
Originally Posted by Shakthiprabha
I could not watch the serial for past 2 days :(
I supp the dhakshayani story got over. :?
Indrum paarkavillai :(
en pennukku class test :cry:
any story briefings?
good luck
Shakthiprabha
I have seen Sharadha's post ut not now
Is it illusion??
I think a fresh story started, bcos i cud not see any continuation with the updates here.
Saradha,
plz do post if u had posted before :?
I think I shall resume seeing the serial today :redjump:
I am sure I wont undrestand head or tail and def, the old daakshayani story is over.
omg
I would really miss o.a.k. sundar :|
மூன்றாவது தொடர்:
மாமனுக்கு வழக்குரைத்த கதை
கணபதி/குணவதி என அண்ணன் தங்கை
கணபதி ஒரு வணிகன் - பெரிய செல்வந்தன்
தங்கைக்கு ஒரு வேண்டுதல்:
பிச்சை எடுத்து சன்னியாசிக்கு அமுது படைக்க
பணக்கார ஜொலிப்பில் பிச்சை எடுக்கின்றாள் தங்கை.
தொழிலுக்கும் உடைக்கும் சம்பந்தமில்லாத படியால்
யாருமே பிச்சை இடவில்லை போலும்
அடுத்த ஊரில் உள்ள ஒரு சிறு தனவந்தன் அரிசி போடுகின்றான்
அதை உணவாக்கி சன்னியாசிமாருக்கு அமுது படைத்து விரதத்தை நிறைவேற்றி ஆசியும் வேண்டி நிற்கின்றாள் அந்தப் பாவை.
--
வீட்டில் அண்ணனுக்கு இந்த விபரத்தைத் தெரியப் படுத்த
அந்த வணிகனுக்கும் குணவதிக்கும் திருமணம் நடைபெறுகின்றது
( எவ்வளவு விரைவாக
காரணங்களே இல்லாமல் ..)
புகுந்த வீட்டில் அண்ணன் புராணம்
இங்கு கணபதி மனைவியிடம் தங்கை புராணம்
விடியலுக்கு முன்பே தங்கை அண்ணன் வீட்டில்
சொல்லாமல் கொள்ளாமல் இவ்விடம் வந்து விட்டாள்
புத்தி புகட்டி கணவன் வீட்டில் தங்கையை கூட்டி வந்து விட்டு மன்னிப்பும் கேட்கின்றான் பாசமுள்ள அண்ணன்.
------
பெயர் விபரங்கள் முதலாம் பக்கத்தில்
------------
தங்கையின் மாமியாக மெட்டி ஒலி புகழ் சாந்தி வில்லியம்ஸ்
அதே ...
சரஸ்வதியாக வருபவரின் பெயர் என்ன?
யாராவது உதவுங்களேன்
கணபதி - மனோகர்
குணவதி - மல்லிகா
யோகினி - சுசிலா ( அண்ணி)
விக்கி - பூபதி
சாந்தி வில்லியம்ஸ் - பூபதியின் அம்மா
3 பகுதிகளுக்கும் மூன்று இயக்குனர்கள்
1. ஞானப் பழம் (நன்றி - கார்த்திக்)-பாலாஜி யாதவ்
2. தட்சன் - சமுத்திரகனி/அருள்ராய்
3. மாமன்கதை- சுகி ஜெயராம்
பறுவாயில்லையே...
குறிப்பு:
நானும் 2 நாட்கள் ஊருக்குப் போயிருந்தேன்