Vaagai Sooda Vaa - Lyrics by Vairamuthu. Fantastic Debut by M Ghibran. Listen to these songs
http://www.youtube.com/watch?v=KeL6W...eature=related
Printable View
Vaagai Sooda Vaa - Lyrics by Vairamuthu. Fantastic Debut by M Ghibran. Listen to these songs
http://www.youtube.com/watch?v=KeL6W...eature=related
good wordplay by kavingar.
Yeah... VAAGAI SOODA VAA is indeed impressive album.:thumbsup:
I loved the grand orchestral, children choir composition aana aavana.....:musicsmile: BEAUTIFUL JOB.
senga soola kaara... is wonderful too.
rustic singing of the struggles of village folks, their plead to God is expressive.
vinatha.
கவிஞரால் எழுதப்பட்டு பாடலில் இடம் பெறாத மூன்றாவது சரணம்...
இரவும் பகலும் யோசிக்கிறேன்
எனையே தினமும் பூசிக்கிறேன்
சாலை மனிதரை வாசிக்கிறேன்
தீயின் சிவப்பை நேசிக்கிறேன்
பேதங்களே... வேதங்களா.. கூடாது..
பாலுவின் குரலிலேயே இந்த வரிகளை கேட்டு ரசியுங்கள்.
http://www.youtube.com/watch?v=waAj9...eature=related
Madhan Karky's twitter message;
@madhankarky Madhan Karky
Loved my interview to @vikatan deepavali malar on my fav 10 songs of @vairamuthu. Thanks to senior journalist Rajath for this one.
பாலு இழையில் நடந்த ஏ ஜிந்தகி பற்றிய உரையாடல்களால் உந்தப்பட்டு மூன்றாம் பிறை பாட்டுகள் உள்ள குறுந்தகடு மீண்டும் மீண்டும் ஊர்தியில்...
இயற்கை அழகைப்பாடுவதில் திரைப்பாடலாசிரியர்களின் இமயம் வைரம் தான்!
கதிரவன் பள்ளியெழுச்சியை எப்படி சொல்கிறார் பாருங்கள்:
வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்
வானில் ஒரு தீபாவளி, நாம் பாடலாம் கீதாஞ்சலி :-)
airamuthu pens the lyrics for Viswaroopam
vairamuthu-kamal-haasan-27-10-11
Oct 27, 2011
Poet Vairamuthu has said that he had penned the lyrics for a song in Viswaroopam. The lyricist is one of Kamal Haasan’s favorites and their combination has churned out some of the best songs in Kollywood. With Viswaroopam, they will certainly live up to the expectations of their fans.
Shankar-Ehsaan-Loy is scoring the music for Viswaroopam which stars Kamal Haasan in the lead. The star is also wielding the megaphone for this film.
Tags : Vairamuthu ,Kamal Haasan,Viswaroopam,
குட் குட் குட்.
ஹே கமல்... remember ஸ்ரீ.பாலா சுப்பிரமணியம். ஒருத்தரு எக்கசக்கமா ஹிட்ஸ் கொடுத்தாரே for you . Call the guy to sing for you, too .:)
Now
ஸ்ரீ.யேசுதாஸ் for இளையராஜா for வைரமுத்து வரிகள்.
என்ன தேசமோ என்ன தேசமோ..... உன் கண்ணில் நீர் வழிந்தால்.
http://www.youtube.com/watch?v=Qr24fadHS6E
na koi umang hai na koi tarang hai meri zindagi hai kya ik kati patang hai....:musicsmile: - R.D.பரமன் & லதா
vinatha.
ட்வீட்டிருக்கிறார்.
-வாழ்த்துக்கள்!Quote:
மணிரத்னம் படம் தொடங்கிவிட்டது ஏ.ஆர்.ரகுமான் இசையில் உயிரைத் தாலாட்டும் ஒரு பாடல் எழுதியிருக்கிறேன்.
ஜுலை13 "மூன்றாம் உலகப் போர்" நூல் வெளியீட்டு விழா !!
-வாழ்த்துக்கள்!
Very good.
:)
VM in the news
Quote:
நீர்ப்பறவை திரைப்பட பாடல் சர்ச்சை தொடர்பாக கிறிஸ்தவர்கள் கோபமடைந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் வைரமுத்துவின் திருவான்மியூர் வீட்டின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
"அப்படி என்ன தான் எழுதினார்"னு தேட ஆரம்பித்தபோது கண்ட ஒரு வேடிக்கையான வரி :
http://www.magicalsongs.net/2012/10/...avai-song.html
:lol:Quote:
உனது வேர்வை என் மார்புக்குள்
பிசுக்கு பிசுக்கென்று கிடக்குதே
ஈர வேர்வைகள் தீரவும்
எனது உயிர் பசை காய்வதா
VM's mAnE-thEnE seems to be vErvai.
I guess the "christian" org is making problem for this song:
http://www.magicalsongs.net/2012/10/...ng-lyrics.html
:lol2:Quote:
கிச்சு கிச்சு பண்ணும் கிறிஸ்தவ பெண்ணே
பச்சை முத்தம் தர வரவில்லையா
ஒரு கன்னம் தர மறு கன்னம் காட்டு
திருமறை வரி நினைவில்லையா
இதுக்கெல்லாம் ஒரு போராட்டமா?
:)
ilayaraja's veena, flute & guitar
enchantment they define!
ilayaraja with vairamuthu & bala!
http://www.youtube.com/watch?v=gOzYPReSq1k
பூமியெங்கும் பூந்தோட்டம் நாம் காண வேண்டும்,
புதுத் தென்றலோ
பூக்களில் வசிக்கும்!
ஆகாய மேகங்கள் நீர் ஊற்ற வேண்டும்,
அந்த மழையில்
மலர்களும் குளிக்கும்!
LOVER OF NATURE - POET VAIRAMUTHU!
From KUMUDAM - 27-10-2010!
http://www.freeimagehosting.net/im4lu
http://www.freeimagehosting.net/c1l8o
வடுகப்பட்டியாரின் முகநூல் பக்கத்திலிருந்து..
இன்று கவியரசு கண்ணதாசன் நினைவுதினம்
கவியரசு கண்ணதாசன் மறைந்தபோது எழுதிய கவிதை
ஒரு
தேவகானம்
முடிந்து விட்டது
எங்கள்
தமிழ்ச்சங்கம்
கலைந்து விட்டது
சரஸ்வதியின்
வீணையில்
ஆனந்த நரம்பொன்று
அறுந்து விட்டது
அந்த விமானத்தில்
எங்கள் ராஜ குயிலின்
கூடுமட்டுமே
கொண்டு வரப்படுகிறது
வார்த்தைக்கு ருசிதந்த
வரகவியே
உன்னை
வரவேற்கக் காத்திருந்த
வர்ணமாலைகளை
உன்
சடலத்தின்மேல் சாத்தவா?
எழுத முடியவில்லை
என்னால்
கண்ணீரின்
கனம் தாங்காமல்
வார்த்தைகள்
நொண்டுகின்றன
காற்றுக்கு
நன்றியில்லையா?
கவிதை வரிகளால்
காற்று மண்டலத்தையே
இனிப்பாக்கினாயே
உனது சுவாசத்துக்கு
அந்தச்
சண்டாளக் காற்று ஏன்
சம்மதிக்க மறுத்தது?
அந்நிய மண் என்பதால்
மரணம் – உன் உயிரை
அடையாமல் தெரியாமல்
அள்ளிப் பருகியதா?
எத்தனை இலக்கியம்
எழுதிய விரல்
எத்தனை கவிதைகள்
முழங்கிய குரல்
எத்தனை கருத்தை
நினைத்த மனம்
ஓ
மரணத்தின் கஜானாவே
நீ திருடிய பொக்கிஷத்தைத்
திருப்பிக் கொடுத்து விடு
என் தாய்க் கவிஞனே
உன்னை இனி தரிசிப்பதெப்படி?
சாவின் மாளிகைக்கு
ஜன்னல்களும் கிடையாதே
நீ காதலைப் பாடினாய்
அது
இளமையின் தேசிய கீதமானது
நீ சோகம் பாடினாய்
அது
ஆயிரங் கண்ணீருக்கு
ஆறுதல் ஆனது
நீ தத்துவம் பாடினாய்
வாழ்க்கை தனது
முகமூடியைக் கழற்றி
முகத்தைக் காட்டியது
அரசியல் – உன்னை
பொம்மையாக நினைத்தபோதும்
நீ
உண்மையாகத் தானிருந்தாய்
உன் எழுத்து
ஒரு
கால் நூற்றாண்டுக்
கலாசாரத்தில் கலந்திருக்கிறது
“மரணத்தின் பின் என்னை
விமர்சியுங்கள்” என்று
வேண்டிக் கொண்டவனே
இன்று மரணத்தையன்றி
வேறொன்றையும் எமக்கு
விமர்சிக்க வலிமையில்லை
எவரேனும் இறந்தால்
உன் இரங்கற்பாப் படித்து
இதயம் ஆறுவோம்
இன்று இரங்கற்பாவே
இறந்து விட்டதே
உன்னை சந்தித்துப் பேசும்
சர்க்கரைப் பொழுதுகளில்
உன்
கண்களில் வெளிச்சத்தைக்
காதலித்தேனே
இனி அந்த வெளிச்சம் -
உன்
இமைகளைப் பிரித்தாலும்
இருக்குமா?
முப்பது வருஷத் தென்றலே
நீ நின்றுவிட்டதால் -
மனசில் புழுக்கம்
விழிகளில் வியர்வை
உன்
பூத உடலில் விழும்
பூவிலுள்ள தேனெல்லாம்
கண்ணீராய் மாறிவிடும்
கவிஞனே ..
உன்னைச் சந்திப்பது இனிமேல்
சாத்தியமில்லையா?
உடைந்த இருதயம்
ஒட்டாதா?
சொர்க்கத்தில் சந்திக்கலாம்
என்று
சொல்லுகிறார்களே
இந்த மூட நம்பிக்கை
நிஜமாய் இருந்தால்
எனக்கு நிம்மதி கிடைக்கலாம்
கடல் படத்தின் "நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன்" பாடலை ஷக்திஸ்ரீ கோபாலன் பாடியதை கேட்டு எழுதியிருக்கேன். வைரமுத்துவின் பாடல் வடிவம் எப்படி இருக்கிறது என பொறுத்திருந்துதான் பார்க்கணும். கவிஞரின் கவிதை வரிகள் அங்கங்கே சில திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கிறது சந்தங்களுக்கு ஏற்ப. பாடலின் முதல் வரி "உள் நெஞ்சுக்குள்ள" என்றே இருந்திருக்கலாம். இன்னும் கவி நயம் கூடியிருக்கும்.
நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ
வெல்லப் பார்வ வீசிவிட்டீர் முன்னாடி - இந்த
தாங்காத மனசு தண்ணிபட்ட கண்ணாடி
வண்ண மணியாரம் வலதுகை கெடியாரம்
ஆனை புலியெல்லாம் அடக்கும் அதிகாரம்
நீர்போனபின்னும் நெழல்மட்டும் போகலையே போகலையே
நெஞ்சுக் குழியிலே வந்து விழுந்திருச்சே
அப்ப நிமிந்தவதான் அப்புறமா குனியலையே குனியலையே
கொடக்கம்பி போல மனம் குத்திருக்குதே
நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன்
நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ
பச்சி ஒறங்கிருச்சு பால் தயிராத் தூங்கிருச்சு
இச்சி மரத்து மேல எலகூடத் தூங்கிருச்சு
காசநோய்க்காரிகளும் கண்ணுறங்கும் வேளையில
ஆசநோய் வந்தமக அரநிமிசம் தூங்கலையே
நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன்
எங்கே எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ
ஒருவாய் எறங்கலயே உள்நாக்கு நனையலயே
ஏழெட்டு நாளா எச்சில் உறங்கலயே
ஏழ இளஞ்சிருக்கி எதோ சொல்ல முடியலயே
ரப்பர் வளவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே
நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன்
எங்கே எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ
வெல்லப் பார்வ வீசிவிட்டீர் முன்னாடி - இந்த
தாங்காத மனசு தண்ணிபட்ட கண்ணாடி
வண்ண மணியாரம் வலதுகை கெடியாரம்
ஆனை புலியெல்லாம் அடக்கும் அதிகாரம்
நீர்போனபின்னும் நெழல்மட்டும் போகலையே போகலையே
நெஞ்சுக் குழியிலே வந்து விழுந்திருச்சே
அப்ப நிமிந்தவதான் அப்புறமா குனியலையே குனியலையே
கொடக்கம்பி போல மனம் குத்திருக்குதே
நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன்
நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ
சித்திரை நெலா
பாடல்: விஜய் ஜேசுதாஸ்
சித்திரை நெலா
ஒரே நெலா
பரந்த வானம்
படைச்ச கடவுளு
எல்லாமே ஒத்தையில நிக்குதுடே
நீ கூட ஒத்தையில நிக்கிறடே
எட்டு வை மக்கா
எட்டு வச்சு ஆகாசம்
தொட்டு வை மக்கா
[சித்திரை நெலா...]
மனிதன் நினைத்தால் வழி பிறக்கும்
மனதிலிருந்தே ஒளி பிறக்கும்
புதைக்கின்ற விதையும்
முயற்சி கொண்டால்தான்
பூமியும்கூட தாழ் திறக்கும்
[எட்டு வை மக்கா...]
கண்களிலிருந்தே
காட்சிகள் தோன்றும்
களங்களிலிருந்தே
தேசங்கள் தோன்றும்
துயரத்திலிருந்தே
காவியம் தோன்றும்
தோல்வியிலிருந்தே
ஞானங்கள் தோன்றும்
சூரியன் மறைந்தால்
விளக்கொன்று சிரிக்கும்
தோணிகள் கவிழ்ந்தால்
கிளை ஒன்று கிடைக்கும்
[சித்திரை நெலா...]
மரமொன்று விழுந்தால்
மறுபடி தழைக்கும்
மனம் இன்று விழுந்தால்
யார் சொல்லி நடக்கும்
பூமியைத் திறந்தால்
புதையலும் இருக்கும்
பூக்களைத் திறந்தால்
தேன்துளி இருக்கும்
[மனம் இன்று விழுந்தால்..]
நதிகளைத் திறந்தால்
கழனிகள் செழிக்கும்
நாளையைத் திறந்தால்
நம்பிக்கை சிரிக்கும்
[சித்திரை நெலா...]
தொட்டு வை - really?
சும்மா இருக்குறதுக்கு தொட்டு வைக்கலாம்ல அப்டீன்ற மாதிரி.
வரவர இவர் ரம்பம் தாங்கலை. முன்ன மாதிரி சரியா வந்து உர்காரமாட்டேங்குது.
இவர் மகர் எழுதன பாட்டு நல்லாருக்கு: அன்பின் வாசலே. Simple and fits the song and makes it better than the sum of the parts.
கவிஞரிடத்தில் எனக்கு இன்னமும் பிடித்தது சொற்கட்டுமானம் தான். ஒரு வரியை தொடர்ந்து அடுத்த வரியின் ஆரம்பம் அல்லது இறுதி இப்படித்தான் இருக்கும்னு நாம் நினைத்தால் அங்கு வேறு மாதிரி எழுதியிருப்பார். இந்த முரண்பாடுகள்தான் அவரின் பெரிய பலம்.
மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்
நெறஞ்ச வானம் நீ பாடும் கீதம்
பௌர்ணமி இரவு பனி விழும் காடு
ஒத்தையடி பாதை ஒங்கூட பொடிநட
சின்னச்சின்ன வார்த்தைகள். ஆனால் நம்மில் பரப்பும் கற்பனைத் தளமோ நீளம்.
Rewind to the Sangam era
By Malathi Rangarajan (From The Hindu - December 29, 2012)
Over the years Vairamuthu has ingeniously woven several unusual phrases, similes, metaphors and aphorisms into his lines. In an interview to Malathi Rangarajan, the veteran verse writer talks about what makes his lyric for Kochadaiyaan special
http://www.thehindu.com/arts/cinema/...?homepage=true
‘ஆனந்த விகடன்’ வார இதழில் தொடராக எழுதி பிறகு புத்தகமாக வெளியான ‘மூன்றாம் உலகப்போர்’ புத்தகத்தின் வருமானத்தை காவிரி டெல்டா பகுதியில் தற்கொலை செய்து கொண்ட 11 விவசாயக் குடும்பங்களுக்கு தலா ரூ 1 லட்சம் வீதம் நிதியுதவியாக கொடுக்க இருப்பதாக கவிஞர் வைரமுத்து அறிவித்துள்ளார்.
ஒடுக்கப்பட்ட உழைப்பாளி வர்க்கத்திற்கு எக்காலத்திற்கும் பொருந்துவது போல கவிஞர் எழுதிய திரைப்பாடல். கொந்தளிக்கும் வரிகள்!
மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்
விழியில் வழியும் உதிரம் முழுதும் இனி உன் சரிதம் எழுதும்
அசையும் கொடிகள் உயரும் உயரும் நிலவின் முதுகை உரசும்
சில ஆறுகள் மாறுதடா வரலாறுகள் மீறுதடா
பசியால் பல ஏழைகள் சாவதென்பது தேசியமானதடா
இனி தேன் வரும் என்பதும் பால் வரும் என்பதும் ஜோசியாமானதடா
அடி சாட்டைகளே இனி தீர்வுகள் என்பது சூசகமானதடா
ஒளி வீசுக சூரியனே யுகம் மாறுது வாலிபனே
ஒரு தோல்வியில்லா புது வேள்வியினால் இனி சோதனை தீர்ந்து விடும்
சில ஆயிரம் ஆயிரம் சூரிய தீபங்கள் பூமியில் தோன்றி விடும்
அட சாமரம் வீசிய பாமர ஜாதிகள் சாதனை கண்டு விடும்
ராஜா-யேசுதாஸ் கூட்டணிப் பாடல்களில் கவிஞரின் பலப் பாடல்கள் சிறப்பு பெற்றவை. அதில் குறிப்பாக இந்தப் பாடல் இடம்பெற்ற படத்தின் தளத்திற்கு அப்பாலும் என்றென்றும் மங்காமல் ஒளி வீசக் கூடியது.
Vairamuthu speaks
Lyrics for கிழக்குச் சீமையிலே
Manoothu Mandayile..song .. I had written lyrics like " ஆட்டுப் பால் குடிச்சி அறிவழிஞ்சி போகுமுன்னு " whereas in Film Annamalai, I had written "ஆயுள் வளர்க்குது ஆட்டுப் பால்", and both were contradictory. How come Vairamuthu turn so contradictory was the uproar at that time ?
I replied with humility and patience . A lyric writer, should never run off, from criticisms .
Explanation :- There Gandhi drank goat's milk. ( In Anna malai Film , Intro song for Rajni... வந்தேண்டா பால் காரன் song )
In கிழக்குச் சீமையிலே, the lyrics were written for a small baby. Uncle had taken milk from kaanan pasu ( a particular type of cow ). A small baby cant drink goat milk. I even went and did a research on the fat content of the milk, before writing lyrics.
Goat Milk - Fat content - 4.1% and Gandhi has power to digest the fat content
Kaanan Pasu - Fat Content - 3.1 % and this can be digested by baby.
Hence, when we write lyrics , we should do it with facts, and with proofs to explain everyone.
I thank the people for criticising me, and giving me an opportunity to explain to them..
வேதம் புதிது திரைப்படத்தில் மிக முக்கியமான கதை நகர்வில் இடம்பெறும் பாடல் வரிகள் இவை. எனக்குப் பிடித்த இடம் "காட்டு மரங்களெல்லாம் கைநீட்டி அழைக்குது - மாட்டுச் சலங்கையெல்லாம் மகளொடு அழுகுது.." இடம் பொருளை நினைவில் நிறுத்தி காட்சியை அழகுபட வரிகளிலேயே வடிக்கும் கலை இது. ஒவ்வொரு வார்த்தையையும் மலேஷியா வாசுதேவன் பாடும் விதம் - ஜீவன் கலந்து , எற்ற இறக்கம் பாடல் முழுதும் தென்படும். ஊனையே அசைக்கும் நாதம் அது! தேவந்திரன் இசையில் சிறந்ததொரு ஆக்கம்.
மாட்டுவண்டி சாலையிலே கூட்டுவண்டி போகுதம்மா
கூட்டுவண்டி உள்ளுக்குள்ளே கூண்டுக்கிளி வாடுதம்மா
கூறப்பட்ட இடம்வேறு இவள் போகும் இடம்வேறு
காதலிச்ச வரலாறு கண்ணீரு தகராறு
ஓடிப்போய் சொல்லிவிட உயிர்கிடந்து துடிக்கிறது
ஊமைகண்ட கனவு இது உள்ளுக்குள் வலிக்கிறது
எண்ணத்தைச் சொல்லாமல் ரெண்டுமனம் தவிக்கிது
கன்னத்தில் சிந்தாமல் கண்ணீரும் உறைந்தது
காட்டு மரங்களெல்லாம் கைநீட்டி அழைக்குது
மாட்டுச் சலங்கையெல்லாம் மகளொடு அழுகுது
ஆற்றுமணல் மேடுகளே அதனருகே ஆலயமே
தென்னையிளந் தோப்புகளே தேன்கொடுத்த சோலைகளே
நதிவழி போனமகள் விதிவழி போகின்றாள்
இதயத்தில் துடிப்பில்லை இருந்தாலும் வாழுகின்றாள்
சின்னக் கிளியிரண்டும் செய்துவிட்ட பாவமென்ன
அன்பைக் கொன்றுவிட்டு ஆச்சாரம் வாழ்வதென்ன
http://www.youtube.com/watch?v=LQ__gIe9DnQ
FM பண்பலை ஒன்றில் கவிஞர் அளித்த பேட்டியிலிருந்து :
வெண்ணிலவே வெண்ணிலவே ( மின்சாரக் கனவு )
----------------------------------------------------
Rajeev Menon is a very good admirer of Tamil language. He has also learnt many languages, and has read literature in a lot of other languages. After reading a song of mine, he said, " There are moon songs in all languages. But the lyrics of the song that you have written seems to be there only in Tamil. This is my opinion". I asked him which one.
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை
Everyone will think till this stage. I don't have any companion to play with. I am alone, so, Moon, pls come and play with me. This is not something new, and every lyricist and poet has been thinking on these lines before.
The next lyrics are something new, which I haven't seen in any of the languages ( said by Rajeev Menon)
"இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்"
Calling the moon, and when the dawn breaks, it gets lost, and we feel bad and search over it again and everywhere. Just as how a mother feels bad for a child, when he / she doesn't return back after school on time, similarly, the sky feels worried, when the moon doesn't return back to the sky. So, we calling the moon to play with us, and requesting it to go back to its place of the sky was a new concept, and Rajeev Menon said that it was a new idea, which was never seen anywhere else.
Usually, I don't go to the shooting spot, where my songs are picturised. There has been no time for me to go for the same. I have the yearning, but don't have the time. Among the songs , which I desired to go and see the picturisation, this song is also one of them. When the song was picturised in AVM Studio, I was also present. The lyrics that was picturised, was, " இது இருள் அல்ல அது ஒளி அல்ல இது ரெண்டோடு சேராத பொன் நேரம்".
Selvaragan admires Vairamuthu
http://www.youtube.com/watch?v=lg36aEKD0iE
:clap:
விருது எனக்கு இன்னும் சமூகப் பொறுப்பை கொடுக்கிறது: வைரமுத்து பேட்டி
நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருது பெற்றது குறித்து ‘தி இந்து’ வுக்கு கவிப்பேரரசு வைரமுத்து ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி :
விருது குறித்த மகிழ்ச்சி பற்றி?
ஒரு விருது, விருதைப் பெற்றவனுக்கு கொடுக்கும் மகிழ்ச்சியைவிட அந்த விருது பெற்றவன் சார்ந்திருக்கிற சமூகம் அடைகிற மகிழ்ச்சித்தான் பெரிது. இதில் நான் அடைகிற மகிழ்ச்சி சிறிது. நான் சார்ந்திருக்கிற சமூகம் அடைகிற மகிழ்ச்சி பெரிது. அதனால் அந்த மகிழ்ச்சி அந்த விருதை பெருமை உடையதாகவும், சிறப்பு மிக்கதாகவும் மாற்றியிருக்கிறது. எனவே அந்த விருதின் பெருமை சமூகத்தின் சந்தோஷத்தைப் பொருத்து அதிகமாகிறது.
உங்களோடு சேர்ந்து விருது பெருவதில் சந்தோஷம் என்று கூறியிருக்கிறாரே, கமல்?
எனக்கும் மகிழ்ச்சிதான். பத்மஸ்ரீ விருதைப்பெற்றபோது, நான் மிகவும் நேசித்த இசைஅரசர் டி.எம்.சௌந்தர்ராஜனோடு சேர்ந்து பெற்றேன். அது எனக்கு பெருமை. பழக அருமையான நண்பர், கமல். என் நேசிப்புக்குரிய இரண்டு சாதித்த மனிதர்களோடு பெறுவதும் பெருமை. கமலும், நானும் ஒரே வயதுடையவர்கள். கலைத்துறையில் என்னை விட 20 ஆண்டுகள் மூத்தவர். நான் 80 களில் வந்தேன். அவர் 60 களில் வந்தார். என் சம வயது கொண்ட ஆனால் என்னை விட 20 வயது மூத்த கலைஞனோடு சேர்ந்து விருதைப் பெருவதில் மகிழ்ச்சி.
உங்களது அடுத்த கட்டம்?
என்னைப்பார்த்து ஏற்கனவே ஒரு கேள்வியை கேட்டார்கள். நீங்கள் படைத்த படைப்பில் உங்களுக்கு பிடித்த படைப்பு எது என்று. நாளை எழுதப்போகும் படைப்பு என்றேன். இதுவரை எழுதிய எழுத்துக்களெல்லாம் பயிற்சிகளும், முயற்சிகளும்தான். ஒரு மிகச்சிறந்த படைப்பை நோக்கி பயணப்படுவதற்கு இந்தப்படைப்புகள் எல்லாம் துணை நிற்கின்றன என்றே நினைக்கிறேன். எனவே இந்த விருது எனக்கு இன்னும் சமூக பொறுப்பை கொடுக்கிறது. இன்னும் வாழ்விலும், படைப்பிலும் செம்மை சேர்க்க வேண்டும் என்ற பொறுப்பை கொடுக்கிறது. எனவே என் பழைய படைப்பைவிட மேம்பட்ட படைப்பை கொடுக்க முயல்கிறேன். காலமும், அனுபவமும் அதை செய்து முடிக்கும் என்று நம்புகிறேன்.
இங்கே உயரிய விருதுகளால் இன்னும் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள் யார் யார்?
ஒரே ஒரு ஏக்கம் இருக்கிறது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கிறேன். அவரது பாடலை கேட்டு வளர்ந்தவர்கள், நாங்கள். அவருக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன் எல்லாம் பொருந்தாது. பத்மவிபூஷன் வழங்க வேண்டும் என்று விரும்புகிறேன். எவ்வளவு பெரிய இசை கலைஞர். தமிழ்நாட்டை 25 ஆண்டுகளாக இசையால், தமிழால் தாலாட்டிய பெருமகன். இந்த விருதைப்பெறக்கூடிய மூத்த தகுதியானவர் என்று அவர்தான் ‘பளீச்’ என்று நினைவுக்கு வருகிறார். இன்னும் பலப்பேர் இருக்கலாம். அவர்களில் எம்.எஸ்.விஸ்வநாதன் ‘பளீச்’ சென அகப்படுபவர்.
யார்.. யாரெல்லாம் வாழ்த்துகள் தெரிவித்தார்கள்?
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், கருணாநிதி, நல்லக்கண்ணு, மத்திய அமைச்சர் பா.சிதம்பரம், ஜி.கே.வாசன், சி.பி.எம்.ராமக்கிருஷ்ணன், இயக்குநர் கே.பாலசந்தர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், வை.கோ, இயக்குநர்கள் லிங்குசாமி, கே.வி.ஆனந்த், சீனுராமசாமி நடிகர்கள் சூர்யா, ஜீவா, முக்கிய நீதியரசர்கள், துணைவேந்தர்கள், மருத்துவத்துறை நண்பர்கள் என்று தொடர்ந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.
உங்களது அடுத்தப் படைப்பு?
படைப்புக்கான கருவை நெஞ்சில் வளர்த்துக்கொண்டே இருக்கிறேன். அது ஈழம் சார்ந்த படைப்பாக இருக்கும்.