சிவமாலா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் தீபாவளி நல் வாழ்த்துக்கள்
Printable View
சிவமாலா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் தீபாவளி நல் வாழ்த்துக்கள்
கடுமையான காய்ச்சல். இப்போதுதான் கொஞ்சம் மீட்சி அடைந்துள்ளேன்.
மிக அழகிய கவிதைகளை வரைந்துள்ளீர்கள்.
வியக்கும் வண்ணம் உள்ளன.
உங்களுக்கும் குடும்பத்தில் அனைவருக்கும்.என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் - காலம் தாழ்ந்த நிலை என்றாலும் ஏற்றுக்கொள்ளுங்கள்.
எலிக்கும் விருந்து கொடுத்தீர்களா?
அச்ச்ச்சோ..காய்ச்சலா..இப்போ தேவலையாய்டுத்தோன்னோ..
இப்படித்தான் கேட்டேளா எனக்குத்தெரிஞ்ச பொண்ணு ஒண்ணு என்ன ஆச்சுதெரியுமோ..அது நன்னா பாடுமாக்கும்..ஒரு நாள் ஆசப்பட்டு ஐஸ்க்ரீம் சாப்பிட்டுட்டா.மறு நாள்...ஜூரமான ஜூரம்.. பாடறதுக்கு வேற போயிட்டா..பாட் ஆரம்பிச்சா சரியாவே இல்ல ஐஸ்க்ரீமால அவளோட..
குரலும் கரைந்துதான் காணாமல் போக
சுரத்தால் வராத சுரம்
எலியா..எங்கபோச்சோ என்ன ஆச்சோ..
தள்ளியே நிற்கவைத்து துள்ளித் தவிக்கவைத்து
எள்ளியே சென்ற எலி
காய்ச்சல் கரையவைத்த என்மூளை நீச்சல்
இணையத்(து) இனியடிக்கு மோ!
அடித்தனரோ கொன்றனரோ ஐயோ அடுப்படியில்
தோன்றிடுமோ மீண்டும் எலி?
அப்படில்லாம் ஆகாது..என்ன நெறைய மாத்திரை மருந்து சாப்பிட்டிருப்பீங்க..அதால ஏற்பட்ட களைப்பாக இருக்கும்..
பாய்ச்சலாய்ப் பாட்டெழுத வொண்ணாமல் வந்துவிட்ட
காய்ச்சலால் கொண்ட களைப்பு
எலிக்கு:
வாகனமே பிள்ளையார்க்கு! கண்ணன்இல் வாசல்முன்
வாகனமாய்ப் போற்ற உனை.
வா கனமாய் = வா, வெகுவாக;
உங்களுக்கு:
என்ன பலகாரம் தின்னக் கொணர்ந்தீரோ
சின்னக்கண் செம்மலே நீர்.
வடை தாங்க..உங்களுக்கு ஒண்ணு..எலிக்கு ஒண்ணு..!
(சும்மா நகைச்சுவைக்காகச் சொன்னேன்)
ஆடி அசைந்தே அருகில் வருமெலியால்
வாடி வதங்கும் வடை (ரொம்ப முன்னால எழுதினது)
எலிக்கு வடைவைத்தால் ஏற்றமே தீபா
வளிக்கதுவும் வாழ்த்தும் உமை.
மொருகல் வடையிற் பிறிதுண்டோ தீபத்
தொளியின் உயர்வாக்கும் ஊண்.
இனைய வடைசுட்டு இனிதுசெய் இல்லாட்கு
இணையத்தார் செய்வர் புகழ்.
எலிசெய்த புண்ணியம் யார்செய்தார் வீட்டுள்
ஒலிசெய்துட் கொண்ட வடைக்கு.
வீட்டிற்கு வெளியே மாமழை... வீட்டிற்கு உள்ளேஉங்கள் பாமழை..
இன்று மதியம் பன்னிரண்டரைக்கு அடிக்க ஆரம்பித்தமழை மூன்றரை வரைக்கும் ஹோ ஹோவெனப் பெய்தது...ம்ம ஒவ்வொரு ரவுண்டபெள்ட்டிலும் வெள்ளமாய்த் தண்ணீர்...ஏகப்பட்ட வாகன நெரிசல்...வழக்கமாய் எட்டு நிமிடத்தில் செல்லும் இடத்திற்கு ஒன்றரை மணி நேரம் பிடித்தது..இருந்தாலும்..
பளிச்சென சாலையைப் பார்க்கவே நெஞ்சம்
களிப்பென ஆனதே காண்..
மழை பெய்து முடித்துவிட்டு சும்மா போய்விட்டது..சாலைகளைக் கழுவியது மட்டும் போதுமா..துடைத்திருக்கவும் வேண்டாமா..
கழுவித் துடைக்காமல் விட்டதால் கார்கள்
வழுக்கியே வீழ்ந்ததே பார்..
இன்னும் சாரலடித்துக்க் கொண்டிருக்கிறதுவெளியில்..ப்ளஸ்குளிர்ந்தகாற்று .. கிட்டத்தட்ட ஒரு வருடம் நான்கு மாதம் கழித்துப் பெய்கிறது மழை..என்ன நிறைய விபத்துகள்..
மஸ்கட்டில் அல் சைடிஸ் தெருவில் அமைந்துள்ளதா உங்கள் வீடு?
அங்கேதானே விபத்துகள்?