-
நம்ம கதாநாயகன் சுந்தரா நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் (ஐல்வ்யூ இல்லிங்க்காணும்..) வளர்ந்தான். அவனை மதுரைல மங்கையர்க்கரசிப்பள்ளில்ல சேர்த்தாஙக.. காம்ப்ளான் ஹார்லிக்ஸ் எல்லாம் குடிக்காம வெறுமனே காப்பி குடிச்சே வள்ர்ந்துட்டான் ஓய்..
ஓலமிட்டு நில்லென்று ஊர்கூடிச் சொன்னாலும்
காலமது காத்திருக்கு மா
இப்போ சுந்தரா ப்ள்ஸ்டூ ல ஃப்ர்ஸ்ட் இயர் படிக்கறாங்கானும்..
(தொடரும்)
-
ஒரு அந்தக்கால வசனம் உண்டு. பொண்ணு வள்ர்த்தியோ பீர்க்கங்கா வளர்த்தியோ என்பார்கள்.. அதாவது பீர்க்கங்காய் முதலில் சிறிதாய் இருக்கும்..போகப் போக படபடவென வள்ர்ந்து விடும்..இது பையனுக்கும் பொருந்துமல்லவா..(வாடா மச்சான் வயசுக்கு வந்துட்டே என்பார்கள் இந்தக்காலப் பாவலர்கள்!)
நம்ம கதா நாயகன் சுந்தராவும் நன்னா வள்ர்ந்துட்டான் ஓய்..ஒரு ஆறு இரண்டு இஞ்ச் இருக்கும் ஒசரம்.. நம்ம் பையனோட அப்பா வேணு கோபாலன் ஒரு நாள் பையன் ஸ்கூல் போறப்ப பார்த்தார்..ப்ள்ஸ் டூங்கறான்...இன்னும் டிராயர்ல ஸ்கூல் போறான்.. அவனோட அண்ணன் வரதுவைக் கூப்பிட்டார்..”வரதா.. இந்தப் பயல் காலப் பாத்தியோ ஒரே முடி.. இவனுக்கு ந்ல்லதா ஒரு பேண்ட் வாங்கிக் கொடுன்னார்...
வரத ராசன் ராணிமங்கம்மாள் சத்திரத்துக்குப் பக்கத்தில இருந்த ஸ்டேட் பாங்க் காசாளர்... கொஞ்சம் கஞ்சூஸ் மார்வாடி.. நம்ம பையனைக் கூட்டிட்டுப் போய் தானப்ப முதலி தெரு பாண்டியன் சூப்பர் மார்க்கெட்ல அவனோட செய்ண்ட்மேரீஸ் ஸ்கூல் (ப்ள்ஸ்டூக்கு அங்க சேர்ந்தாச்சு) யூனிஃபார்ம் மெரூன் கலர் காட்டன் துணிய எடுத்து அங்கேயே இருந்த அப்துல் டைலர்ட்ட கொடுத்துட்டார்..
தம்பி வளர்ச்சியிலே தன்னைவிடக் கூட்வென
விம்மியே அண்ணனும்தான் வாகாக அப்துலிடம்
திக்கான துணிவகைகள தேர்ந்தெடுத்து சொன்னார்தான்
சிக்கெனத் தைப்பீர் உடை..
-
இப்படியே தொடரும் போட்டா மர்ம்ம்(சஸ்பென்ஸ்) ஏதுமில்லையே ஓய்..
நம்ம சுந்தராவோட வீட்டில இருந்து ப்ள்ளி செல்லும் பேருந்து நிறுத்தம் பார்த்தீங்க்ன்னா ரொம்ப கிட்டக்கத்தான்..ஒண்ணுலருந்து இருபது சொல்றதுக்குள்ள வந்துரும்..(இந்தக்காலத்தில ஒரு தொலைக்காட்சித்தொடரோட விளம்பர இடைவேளைக்குள்ளன்னு வெச்சுக்குங்க்ளேன்)
அங்கருந்து தான் சுந்தரா தூய மரியன்னைப் பள்ளிக்கு 12 (மஹால் கோச்சடை –அந்தக்காலத்தில) பேருந்து ஏறி பள்ளிக்குப் போவான்.. அந்த் நேரத்திலபார்த்தா பேருந்து நிறுத்த்த்தில கூட்டம் நிறைய இருக்கும்.. முண்டியடிச்சுத்தான் ஏறணும்..அல்லது தொங்கணும்..யாரும் வரிசைல்ல நிக்க மாட்டாங்க..
தறிகெட்டுப் பேருந்தில் தானேறும் மக்கள்
வரிசையில் நிற்காத வர்...
(தொடரும்)
-
அப்படி ஒரு நல்ல குருபார்வை உச்சத்தில இருந்த ந்ன்னாளில நம்ம பையன் சுந்தரா பேருந்தில ஏறினான்..அங்க (இயல்புத் தமிழில்) பஸ் ந்டுல்ல ஒரு அப்ஸரஸ்..இப்பத்தான் வானத்திலருந்து விழுந்த மாதிரி..இப்பத்தான் பொறந்து குளிப்பாட்டப்பட்ட் குழந்தை எப்படி சுத்தமா இருக்குமோ அந்தமாதிரி, இப்பத்தான் எதிர்க்கட்சித் தலைவரா ஆன அரசியல்வாதி எப்படி ஆட்சியப் பிடிக்கலாம்னு யோசனை பண்ற போது எப்படி அவருக்கு குழ்ப்பம் வருமோ அப்படிக் குழம்பவைப்ப்வது போல (மனச்சாட்சி: கண்ணா அரசியல்லாம் எதுக்கு), அழகா பாவடை சட்டை தாவணியோட கொஞ்சூண்டு மேக்கப்போட அழகாஆஆஆ நின்னுண்டுருந்தா..
.
மயில்வண்ணத் தாவணியும் மஞசளென மேல்துணியும்
துயில்வரும் ராத்திரியில் தோய்ந்திருக்கும் வண்ணமதைக்
கொண்டிருந்த கூந்தலிலே கூட்டுகிறேன் அழகென்றே
நின்றிருந்த ரோஜாவும் ந்ன்று.
.
வேல்விழிகள் நெஞ்சத்தை வேரோடே தானழிக்க
பால்நிறத்துக் கன்னமதும் பண்கூட்டிப் பாநவில
மேலாடை அணிந்திருந்தாள் மெய்யிலே பொய்கூட்டிக்
கேளாமல் கொன்றாளே காண்
(தொடரும்)
-
அன்பின் சிவமாலா
உங்க்ள் பாராட்டு வெண்பாதான் என்னை இங்ஙனம் (மனச்சாட்சி..என்ன மொழிப்பா இது) எழுத வைத்தது..நன் றி/ இங்கு ம்ணி ஒன்று நாற்பத்தைந்து (அதிகாலை) பக்கத்து இழையில் சதிக்குன்னு சதி செஞ்சிருக்காங்க..ஒண்ணும் ஓட மாட்டேங்குது..முடிச்சுட்டு அப்புறம் வர்றேன்.. காலேல்ல ஏழு முப்பதுக்கு அலுவலகம் போகணும்..ஹாஆஆவ்..
அன்புட்ன்
சி.க.
-
தட்தட்த்தே தந்திட்ட தங்கமான பாவால்
படபடக்கும் என்னுள்ளம் பாந்தமாய்ச் செய்ய
கட்கட வென்றுதான் கற்பனையும் வந்தே
சுடச்சுட்ப் பாய்கின்ற தே..
-
-
ப்ளஸ் டூன்னா எப்படிப் பட்ட ப்ருவம்..அறிவதில் தெரிவதை அறியும் பருவம்..இருந்தாலும் படிப்புக்குத்தான் கொஞ்சம் அதிகம் முன்னுரிமை இருக்கும்..
நம்ம பையன் அந்தப் பொண்ண தினசரி பஸ்ஸில பார்ப்பான்..பாக்கறதோட் சரி.. அதுவும் கொஞ்சம் ஓரவிழிப் பார்வை எல்லாம் வீசும்.. பஸ்மேட் ஆச்சே.. தோழிகள் பேசிக்கறதுலருந்து அந்தப் பொண்ணோட பேர் மலர்னும்
அவ ஆரப்பாளையம் தாண்டி தேம்பாவணி சைட்ல இருக்கான்னு தெரிஞ்சுக்கிட்டான்..பக்கத்தில செய்ண்ட் ஜோசப் தான் அவளோட ஸ்கூல்..அண்ட் பத்தாவது படிக்கிறாள்..
மறுபடியும் ரெக்க கட்டி ரெண்டு வருஷம் பறக்க சுந்தரா ப்ளஸ்டூ எக்ஸாம்லாம் சமர்த்தா முடிச்ச்ப்ப மலர் ப்ள்ஸ் ஒன்ல இருந்தா.. கொஞ்சம் ஹாய், எப்படி இருக்கன்னுல்லாம் பேசிக்குவாங்க..ஒரு நாள் அவளோட வீடைப் பார்க்கணும்னு தொடர்ந்து போய் அவளோட ஸ்டாப்பிலேயே எறங்கினா பொசுக்குன்னு அவ மறஞ்சு போயிட்டா...எந்த சந்துல புகுந்து போய்ட்டான்னு தெரியல. பின் சுத்திசுத்திப் பார்த்தப்ப ஒரு வீட்டில அவளைப் பார்த்தான்..இந்தக்காலத்தில சொல்றா மாதிர் அவனோட கண்ல பல்பு எரிஞ்சுது!
இந்த்த் தெருதானா இல்லை இதுதானா.
பந்தம் கொளநினைக்கும் பாவையின் வீடிதுவா
என்றெல்லாம் சுற்றிய்வள் இல்லத்தைப் பர்ர்த்தவுடன்
கண்ணுக்குள் வந்த கதிர்
(தொடரும்)
-
Good continue...
திரைக்காதல் ஒப்பதோர் தேம்பாயும் தன்மை
உரைத்திட்ட உங்கள்பா ஒண்மை -- அரைத்திட்ட
சந்தனம்போல் வீசும் சலிக்கா எழுத்து நடை
வந்திணைவோர் வாய்போற்று வார்.
-
அழகான அந்த்த் தெருல்ல அவ வீடு இன்னும் அழகா இருந்த்து.. அந்தப்பக்கம் போன சைக்கிள் காரனும் அழகா இருந்தான்.. காய்கறி விக்கிற் கிழவி கண்ணிலும் மின்னல் இருந்த்து.. பைக்கில சுந்தராவ க்ராஸ்பண்ணினவா, கொஞ்சம் ஹார்ன் அடிச்சுண்டே வந்த லாரி, தெருக்கூட்டின மாநகராட்சி ஊழியர்கள் எல்லாமே அழகா இருந்த்து சுந்தராக்கு..
இன்னும் மயக்கமே வந்த்து அவனுக்கு.. ஏன்னாக்க வீட்டு வாசல்ல மலர் மஞ்சள் கலர் தாவ்ணி சிகப்பு ரவிக்கைக்கு மாறி இருந்தா.. தலையில அவளோட சிரிப்பைப் போலவே மல்லிப்பூ..போதாக்குறைக்கு பொன்னியம்மா வந்தாளாம்னு சொலவடை மாதிரி இவனப்பாத்து என்ன இந்தப் பக்க்ம் உள்ள வாங்கன்னா.. சுந்தராக்கு மயக்கமே வந்த்து..
எங்கும் அழகாட்சி ஈடில்லா கண்காட்சி
பங்கயமாய்த் தான்சிரித்தே பார்த்தபடி செல்பவரும்
சேவகரும் ந்ன்றாய்ச் சிறப்பாய் இருந்தவது
தேவதையைக் கொண்ட தெரு