தங்கத்தை தங்கம் என்று சொல்லவே வேண்டாம். அது எப்போதும் தங்கம் தான். அது போல் கோபால் சார் பதிவு எப்போதும் இந்த திரியின் கௌரவம் தான். ஓகேவா திரு. ரவி கிரண் சூர்யா.
Printable View
தங்கத்தை தங்கம் என்று சொல்லவே வேண்டாம். அது எப்போதும் தங்கம் தான். அது போல் கோபால் சார் பதிவு எப்போதும் இந்த திரியின் கௌரவம் தான். ஓகேவா திரு. ரவி கிரண் சூர்யா.
Thank you ravikiransurya sir.hope i can share the news of our nt in and around madurai side.
அஹி ம்சைக்கு காந்திஜி அரசியலுக்கு நேதாஜி
வீரத்திற்கு நேதாஜி . நடிப்புக்கு சிவாஜி...
அஹி ம்சைக்கு காந்திஜி அரசியலுக்கு நேருஜி
வீரத்திற்கு நேதாஜி . நடிப்புக்கு சிவாஜி...senthilvel45@gmail.com
ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி 2013 முதல் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள் சாதாரண திரையரங்குகளிலும் மறு வெளியீடு செய்யப்பட்டு வெற்றி வாகை சூடி வசூல் சாதனை செய்து வருவது யாராலும் மறுக்க முடியாத ஒரு விஷயம். அதற்க்கு வித்திட்ட முதல் திரைப்படம் நீதி. கிட்டத்தட்ட 2 மணிநேர டிராபிக் ஓட்டேரி மகாலச்மியில் ஸ்தம்பித்தது அனைவரும் அறிந்த ஒன்று.
27 செப்டம்பர் 2013இல் அதே போல மறு வெளியீடு கண்ட நடிகர் திலகத்தின் நான் வாழ வைப்பேன் திரைக்காவியம், அதன் பின்னர் நியூ ப்ரோட்வே, பாண்டிச்சேரி நியூ டோன் திரை அரங்கம் ஆகியவற்றில் திரையிடப்பட்டு வசூல் சாதனை புரிந்தது அனைவரும் அறிந்ததே. நான் வாழ வைப்பேன் திரைப்படத்தில் என்ன உள்ளது, இந்த படம் போகுமா என்று வினா எழுப்பிய விநியோகஸ்தர்கள் சிலர் இன்று இதன் வசூலை கேட்டு வாயடைத்து போனார்கள் என்பது தான் உண்மை.
சென்னை மட்டும் அல்ல, கோவை, திருச்சி, மதுரை, நாகர்கோயில், தூத்துக்குடி, திருநெல்வேலியிலும் பல நடிகர் திலகத்தின் திரை காவியங்கள் திரையிடப்பட்டு திரையிட்ட இடம் எல்லாம் திருவிழா காட்சி போல கொண்டாட்டங்கள் என்பதை பல செய்தி வாயிலாக நான் அறிகிறோம்.
இதன் தொடர்ச்சியாக 2014ல்
வரும் வாரம் FEBRUARY 14th - நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் திரையிடப்பட்ட உள்ளன :
1) கோவை ராயல் - ஜனவரி 31 முதல் பெப்ரவரி 6 வரை நடிகர் திலகத்தின் 175வது காவியம் அவர் தான் மனிதர் திரையிடப்பட்டு நல்லதொரு வசூலை வாரிகொடுத்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க 1972இல் வெளிவந்து பெருவெற்றி பெற்ற சுஜாதா பில்ம்ஸ் நடிகர் திலகத்தின் "நீதி" பிப்ரவரி 14 முதல் திரையிடப்படஉள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
Kanchipuram balasubramaniya - FEBRUARY 17th to 21st
காஞ்சிபுரம் பாலசுப்ரமணிய திரை அரங்கில் தினசரி 4 காட்சிகளாக பிப்ரவரி 17 முதல் 21 வரை நடிக பேரரசரின் நான் வாழவைப்பேன் திரையிடப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்.
Chennai west mambalam Srinivasa - February 14th onwards
வரும் பிப்ரவரி 14 முதல் சென்னை ஸ்ரீனிவாச திரையரங்கில் ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு இணங்க நடிகர் திலகத்தின் "நான் வாழ வைப்பேன் " திரைப்படம் பகல் காட்சியாக வெளிவர உள்ளது. கடந்த ஓரிரு வருடங்களாக பழைய படங்களை தவிர்த்து வந்த ஸ்ரீனிவாசா திரை அரங்கம், நான் வாழ வைப்பேன் திரைப்படம் திரையிட ஒத்துகொண்டது வரவேற்க வேண்டிய விஷயம். காரணம் அவர்கள் புதிய திரைப்படங்களை மட்டுமே நிர்வாகமே திரையிட தொடங்கி 2 வருடங்கள் ஆகிவிட்டன !
அதுமட்டுமா !
1) விரைவில் நடிகர் திலகத்தின் மற்றும் ஒரு வெள்ளிவிழா திரைப்படம் சந்திப்பு வெளிவர உள்ளது !
2) இதனை தொடர்ந்து பிரம்மாண்டத்தின் உச்சமாய் நடிகர் திலகத்தின் ஸ்டைல் நடிப்பில் வெளிவந்த action thrill காட்சிகள் கொண்ட jamesbond மாடல் திரைப்படம் தங்க சுரங்கம் உங்கள் அபிமான திரை அரங்குகளில் வெளிவர உள்ளது.
3) இதே போல, இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் மற்றும் ஒரு jamesbond மாடல் காவியம் நடிகர் திலகத்தின் hero 72 என்று பெயர்சூட்டப்பட்ட பின்பு தமிழில் பெயர் சூட்டி வெளிவந்த " வைர நெஞ்சம் " MADURAI & CHENNAI
4) மற்றும், பாசமலர் திரைப்படத்திற்கு பிறகு அண்ணன் தங்கை கதையில் கொடிகட்டி பறந்து எட்டு திக்கும் பட்டொளி வீசி ஓடிய நடிகர் திலகம் அவர்கள் சர்வ சாதாரணமாக ஊதித்தள்ளிய நடிப்பை கொண்ட படம் மற்றும் குடந்தையில் 100 நாட்கள் ஓடிய முதல் திரைப்படமாம் "அண்ணன் ஒரு கோவில் " வெளிவர உள்ளது.
5) பழைய திரைப்படங்கள் என்பதில்லை 1985இல் வெளிவந்து பல வசூல் சாதனைகளை முறியடித்து புதிய சாதனை படைத்த ஒரு investigative த்ரில்லெர் " வெள்ளை ரோஜா " திரையிடபடுகிறது.
இப்படி இந்த வருடம் முழுதும் நம்மை நம்முடைய திரை உலகின் பிரம்மா நடிகர் திலகம் அவர்கள் அனைவரையும் மகிழ்சிகடலில் ஆழ்த்த உள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறேன் !
Thank u MURALI .MY DEAR HUB MEMBERS, PLEASE TRY TO READ SIVAJI KURAL NEWS WEEK IN OUR THALAIVAN SIVAJI.COM
http://i871.photobucket.com/albums/a...psb965236d.jpg
http://i871.photobucket.com/albums/a...ps8072bc43.jpg
http://i871.photobucket.com/albums/a...psb910d9ad.jpg
http://i871.photobucket.com/albums/a...ps3b9673c6.jpg
http://i871.photobucket.com/albums/a...ps9918524c.jpg
http://i871.photobucket.com/albums/a...ps01f45a12.jpg
Regards
Best wishes Madurai Chandrasekar
Thank you TFMLover for the rare cutting from Pesum Padam
you are more than welcome , Thiru RAGHAVENDRA sir :)
these from 1968 filmfare ..
http://i871.photobucket.com/albums/a...ps43be6c78.jpg
http://i871.photobucket.com/albums/a...psee11341d.jpg
Regards
திரு. சந்திரசேகர் (மதுரை) சார்,
வருக. முரளி சாருடன் இணைந்து நடிகர்திலகத்தின் மதுரை சாதனைகளை தருக.
மனோகரனை பற்றி வாசு சாரின் மகோன்னத பதிவு
மனோகரன் என்ற மகோன்னதமான பாத்திரத்திற்கு தன் மிரள வைக்கும் நடிப்பால் புத்துயிர் ஊட்டி அப்பாத்திரத்தை தமிழக மக்களின் நெஞ்சில் ஆழப்புதைத்த நடிகர் திலகத்தின் திறமையை எப்படி எழுத!? எப்படி மெச்ச!? எப்படிப் புகழ!?
அழகு என்றால் அப்படி ஒரு அழகு! இளமை என்றால் அப்படி ஒரு இளமை! 1952-இல் 'பராசக்தி'யில் அறிமுகமாகி தனது பத்தாவது படமான 'மனோகரா'வில் (1954) உடலும், முகமும் வனப்பேறி மன்மதனிடம் சவால் விடும் அழகைப் பெற்றிருந்தார் இந்த அற்புத மனிதர். கூடவே திரையலகில் மிகுந்த அனுபவத்தையும் கண்டிருந்தார் இந்த அதிசய மனிதர்.
"வஞ்சகம் வாழ்ந்தது கிடையாது....கொடுமை நிலைத்ததில்லை... இதோ பார்... உன் பொருட்டு விழா நடைபெறுகிறது விழாவிற்கு நீ வந்துதான் தீர வேண்டும்"
என்று மந்திரி சத்யசீலர் மனோகரனிடம் கூறும் காட்சியில் நடிகர் திலகம் அறிமுகம். வீரமாக நடந்து வரும் கால்கள் மட்டுமே காண்பிக்கப்படும். அரங்கில் அமர்ந்து படம் பார்க்கும் அத்துணை பேரின் கைதட்டல் ஓசை நடிகர் திலகத்தை மனோகரனாய்ப் பார்க்கையில் விண்ணைப் பிளந்து முறிக்கும். கூனனும் நிமிர்ந்து உட்கார்ந்து மனோகரனைப் பார்த்து வியந்து உறைந்து போவான். அப்படி ஒரு கம்பீரம். மனோகரன் என்ற வார்ப்படத்தில் இருந்து வார்த்து எடுக்கப்பட்டது போல அப்படி ஒரு வேடப் பொருத்தம்.
நாடகத்திற்கு மந்திரி அழைக்கும் போது அவரிடம் அங்கே வசந்தசேனை வருவாள் என்ற கோபத்தைக் காட்டி சீறுவாரே ஒரு சீறு. எதிர்பாராமல் தாய் பத்மாவதி அங்கே வந்து 'மனோகரன் கட்டாயம் நாடகத்திற்கு வருவான்' என்று திட்டவட்டமாகக் சொல்ல, செய்வதறியாது ஒருகணம் திகைத்து நின்று தாய் சென்றவுடன் மந்திரி சத்யசீலரை முறைப்பாரே ஒருமுறை! எந்த கல்லூரியில் இப்படியான நடிப்பைப் பயின்றார் நடிகர் திலகம்?
நாடகத்தை மகாராணி பத்மாவதியார் பார்த்து அது தன் கதையைப் பிரதிபலிப்பதாக உணர்ந்து கண் கலங்கி, தன்னையறியாமல் தன் தனயன் தோள்களில் கைவைக்க, தாயின் கை ஸ்பரிசம் பட்டவுடன் நாடகம் பார்த்துக் கொண்டிருக்கும் நடிகர் திலகம் தாய் கலங்குவதை திடீரெனக் கவனித்து தாய் பக்கம் திரும்பி "என்னம்மா?" என்று விவரம் புரியாதவராய் கள்ளம் கபடமில்லாமல் வாஞ்சையுடன் கேட்பாரே! எந்தப் பள்ளிக் கூடத்தில் இப்படிப்பட்ட வியத்தகு நடிப்பைப் பயின்றார் நடிகர் திலகம்?
வசந்தசேனையின் அக்கிரமங்களைப் பொறுக்க மாட்டாமல் தாயிடம் கோபமாக "உத்தரவு கொடுங்கள்! உருத்தெரியாமல் ஆக்குகிறேன் அந்த ஊர் கெடுப்பவளை" என்று கர்ஜிப்பாரே! எந்த சிங்கத்திடம் இப்படிப்பட்ட உறுமலை உறுமக் கற்றுக் கொண்டார் நடிகர் திலகம்?
"பாண்டியன் முத்துவிசயன் மீது போர் தொடுத்து வா" என்று அன்னை ஆணை பிறப்பித்தவுடன், "விடை கொடுங்கள்! வெற்றி மழை பொழிய வைக்கிறேன். வீணன் முத்துவிசயனின் விலா எலும்பை நொறுக்குகிறேன்" என்று முழங்குவாரே! எந்த இடியிடம் இப்படி முழக்கமிடக் கற்றுக் கொண்டார் நடிகர் திலகம்?
போரில் பாண்டியனை வென்று கூடாரத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கையில் பாண்டியன் பெற்ற பைங்கிளி விஜயாள் பழிதீர்க்க போர்வீரன் போல ஆண்வேடம் தரித்து மனோகரனைக் கொல்ல வந்து கையும் களவுமாகப் பிடிபட்டு மாட்டிக் கொள்ள, விஜாயாளிடம் "பாதி ராத்திரியிலே பதுங்கிப் பாயும் பட்டாளப் பயிற்சிக்கு முத்துவிசயன் ஆட்சியிலே முதலிடம் போலும். ஓடிப்போ! உயிரைக் காப்பாற்றிக் கொள்" என்று நடிகர் திலகம் நையாண்டி செய்வாரே! எந்த பல்கலைக் கழகத்தில் இந்த நையாண்டி நடிப்பை படித்து முடித்தார் நடிகர் திலகம்?
கொல்ல வந்தது மங்கை என்று அறிந்ததும் அவள் அழகில் மெய்மறந்து "வளையல் ஏந்தும் கைகளிலே வாள்" என்று ஆச்சர்யம் கலந்த புன்னகை பூத்தபடி நடிக வேந்தன் கூற "நீர் வீரரானால் என்னை ஜெயித்தபிறகு பேசும்" என்று விஜயாள் வீரத்துடன் பேச, நடிகர் திலகம் கண்களில் காதல் கொப்பளிக்க கொஞ்சு மொழியாளிடம்,"வேல்விழி மாதரிடம் வீரர்கள் ஜெயித்தார்கள் என்பதற்கு சரித்திரமே கிடையாது இளவரசி" என்று போதையுடன் கூறுவாரே! எந்த இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று நடிப்பைப் பயின்றார் நடிகர் திலகம்?
பௌத்யாயணன் கையும் களவுமாக பிடிபட்டு மனோகரனைக் கொல்ல தன்னை அனுப்பியது வசந்தசேனைதான் என்று ஒப்புக் கொண்டு வாக்குமூலம் கொடுத்து விட, கோபக்கனல் தலைக்கேற, நடிக மன்னவன் வாளை எடுத்துக் கொண்டு சேனாவைக் கொல்ல புறப்பட, தாய் சாந்தப்படுத்தி 'வாளை உறையில் போடு' என்று அன்புக் கட்டளையிட, விழிகள் வெளியே பிதுங்க கோப இமயத்தைத் தொட்டு விட்டு பின் வாளை உறையில் போடும் வேகம். எந்த புயலிடம் இப்படிப்பட்ட வேகத்தைக் கற்றுக் கொண்டார் இந்த நடிப்புப் புயல்
பாண்டியனைக் கொன்று இரத்தின சிம்மாசனத்தைக் கைப்பற்றிக் கொண்டு வந்தும் தாய் அமர வேண்டிய அதே இரத்தின சிம்மாசனத்தில், அதுவும் கொலு மண்டபத்தில் அனைவர் முன்னிலையிலும் சேனா என்ற பேய் அமர்ந்து, அதுவும் தனக்கு வெற்றிமாலை சூட்ட வரும் போது அவமானத்தால் கொந்தளித்து, வாளை உருவி, அவளைக் கொல்லப் போக, சத்யசீலர் தாயின் கட்டளையை மனோகரனிடம் ஞாபகப்படுத்த, ஒரு வினாடியில் மந்திரி சத்யசீலர் பக்கம் திரும்பி புயல் போல் சீறி, மறு பக்கம் தடுக்கும் நண்பன் ராஜப்பிரியன் பக்கம் திரும்பி கோபம் கண்ணை மறைக்க அவனை வேகமாய் ஒரு அறை அறைந்து, அடுத்த கணம் தானே உயிர் நண்பனை அறைந்து விட்டோமே திகைத்து நின்று, ஒரு வருத்த தொனியை முகத்தில் ஒரு நொடியில் பாதி நேரத்தில் பிரதிபலித்துவிட்டு, பின் மீண்டும் கோபத்துடன் புலிப்பாய்ச்சலில் புவி அதிர நடப்பாரே! எந்த குரு இப்படியெல்லாம் நடிக்க வேண்டும், நடக்க வேண்டும் என்று நடிகர் திலகத்திற்கு சொல்லிக் கொடுத்தது?
பின் ஆத்திரத்துடன் தாயாரிடம் சென்று 'வஞ்சகி சேனா அமர்வதற்கா பல உயிர்களை பலி கொடுத்து இரத்தின சிம்மாசனத்தை மீட்டு வந்தேன்'? என்று நெஞ்சு குமுறப் பொங்குவதும் நடிகர் திலகம் யாரிடம் கற்ற பாடம்?
காதலர்கள் கூடிக் கொஞ்சும் வசந்த விழாவில் கூட அரண்மனையில் நடந்த சம்பவங்களை மறக்க முடியாமல் பொருமுவதும், அங்கே மன்னனுடன் வரும் வசந்தசேனா வேசி மகன் என்று தன்னை இழித்துரைத்ததும் புயல் வேகம் கொண்ட புலியாக சீறி கட்டாரியை எடுக்க, தந்தையான மன்னன் தடுக்க, "நீர் உன் மனைவியின் மானத்தை காப்பாற்றா விட்டாலும், நான் என் தாயாரின் மானத்தை காப்பாற்றியே தீருவேன்" என்று தன்மானச் சிங்கமாய் சிலிர்ப்பதும் இந்த நடிப்பின் பல்கலைக் கழகத்திற்கு அல்வா சாப்பிடுவது போல் அல்லவா?
மறுபடியும் தாயிடம் ஓடோடி வந்து தாயின் கட்டளையை மாற்றும்படி கெஞ்சுவதும், "வீரன் கோழையாவதா.... துடிக்கும் தோள்கள் துவண்டு போவதா?" என்று தாயின் கட்டளையை நினைத்து நினைத்து பொங்குவது எந்தப் பாடத் திட்டத்தில் நடிகர் திலகம் படித்தது?
தமிழ்த் திரையுலகம், தென்னிந்தியத் திரைப்பட உலகம், இந்தியத் திரைப்பட உலகம், ஏன் உலகத் திரைப்பட உலகமே உலகுள்ளவரை மறக்க முடியாத அளவிற்கு நம் மனோகரன் நடிகர் திலகம் நடிப்பில் சாதனை படைத்த இரு காட்சிகள்.
முதலாவது.
அரசவை தர்பாரில் கொலு மண்டபத்தில் நீதி விசாரணையின் போது.
மகாராணி பத்மாவதி சிறை செல்ல வேண்டும். மனோகரன் வசந்த சேனாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இது மதி கெட்ட மன்னன் கட்டளை.
மாதா அமைதியுடன் 'காரணம் கேட்டு வா' என்று மைந்தனைப் பணிக்கிறாள். இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு நான்கு வீரர்கள் நான்கு புறமும் சங்கிலிகளைப் பிடித்திருக்க மனோகரனான நடிகர் திலகம் அடலேறு போல கொலு மண்டபத்தில் நுழைகிறார். கொஞ்சம் இந்தக் காட்சியை நினைத்துப் பாருங்கள். பார்த்தவர்கள் ஒருமுறை திரும்ப நினைவு படுத்திக் கொள்ளுங்கள். பார்க்காத இளம் தலைமுறையினர் இந்தக் காட்சி எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். தமிழ்த்திருநாடு பெற்ற தவப்பயனின் காரணமாக நமக்குக் கிடைத்த அரும்பெரும் பொக்கிஷம் நடிகர் திலகம் பிணைக்கப்பட்ட சங்கிலிகளுடன் அரசவையில் கொலு மண்டபத்தில் ஆண் சிங்கமாய் வீர நடை போட்டு வருவதை உலகம் மறக்க இயலுமா? அந்த இடத்தில் வேறு ஒருவரை கற்பனை செய்துதான் பார்க்க முடியுமா? ஆஹா! என்ன ஒரு வீரம்! என்ன ஒரு கம்பீரம்!
மன்னன்: உன்னை ஏன் அழைத்திருக்கிறேன் தெரியுமா?
நடிகர் திலகம்: திருத்திக் கொள்ளுங்கள். அழைத்து வரச் சொல்லவில்லை. இழுத்து வரச் செய்திருக்கிறீர்கள்
இப்படி நடிகர் திலகம் முழங்கும் போது திரை அரங்குகளின் கூரைகள் ஏன் பிய்த்துக் கொண்டு போகாது? ஏன் நம் சப்த நாடியும் ஒடுங்காது? ஏன் உலகம் வியந்து போற்றாது இந்த யுகக் கலைஞனை?
'நீ நீதியின் முன் நிற்கும் குற்றவாளி' என்று மன்னன் பழி சுமத்தியவுடன்,
"அரசே! தந்தையின் முன் தனயனாக அல்ல! பிரஜைகளில் ஒருவனாகவே கேட்கிறேன். கொலை செய்தேனா?... கொள்ளை அடித்தேனா? நாட்டைக் கவிழ்க்கும் குள்ளநரி வேலைதான் செய்தேனா? குற்றமென்ன செய்தேன் கொற்றவனே! குற்றம் என்ன செய்தேன்?" என்று சண்டமாருதமாய் சபையோர்களின் பக்கம் திரும்பி நான்கு புறமும் முழங்குவாரே எம் நடிப்பின் மன்னவர்!
'குற்றத்தை மகாராஜா கூறத்தான் வேண்டும்' என்று சபையோர் சப்தமிட்டவுடன் 'இது உங்களுக்கு சம்பந்தமில்லாதது' என்று கொற்றவன் அல்ல அல்ல கொடுங்கோலன் கூறியவுடன் "சம்பந்தமில்லாதது சபைக்கு வருவானேன்?" என்று நெஞ்சு நிமிர்த்தி இந்த கட்டிளங்காளை கணேசன் கர்ஜித்ததில் வீர உணர்வு பெறாதவரும் உண்டோ!
"கோமளவல்லி..கோமேதகச் சிலை... கூவும் குயில்... குதிக்கும் மான் என்றெல்லாம் உம்மால் புகழப்படும் இந்தக் கோணல் புத்திக்காரியின் கொள்ளிக் கண்களை, கொடிய நாக்கை என் கூர்வாளுக்கு இரையாகத் தந்துவிட்டு அதை எதிர்த்தால் உம்மையும், உமக்குப் பக்க துணையாக வந்தால் அந்த பட்டாளத்தையும் பிணமாக்கி விட்டு, சூனியக்காரிக்கு ஆலவட்டம் சுற்றியவர்களை சுடுகாட்டிற்கு அனுப்பிவிட்டேன் என்று சுழலும் வாளுடன், சூழும் புகழுடன் என் அன்னையிடம் ஓடி மன்னிப்பு கேட்க வேண்டும்... நிறைவேற்றட்டுமா அந்த உத்தரவை? தயார்தானா? தயார்தானா?"
என்று நடிகர் திலகம் 'இடி'யென முழங்கும் போது நம் நாடி நரம்புகளெல்லாம் முறுக்கேறி, ரத்த நாளங்கள் சூடேறி, நாமும் மனோகரனுடன் சேர்ந்து வசந்தசேனாவை வஞ்சம் தீர்க்க முடியாதா என்று நினைக்காமல் இருக்க முடியுமா? கோழை கூட வீரனாகி கொடுமையை எதிர்க்கச் செய்யும் வீர நடிப்பை வாரி வழங்கிய இந்த நடிப்பு வள்ளலை என்ன சொல்லித்தான் புகழ்வது?
பின் அன்னை பத்மாவதி கொலுமண்டபத்துக்கு வந்து 'மன்னனின் மரண தண்டனையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்' என்று மனோகரனிடம் நெஞ்சை இரும்பாக்கிக் கூற, நடிகர் திலகம் பெரும் அதிர்ச்சியுற்று "நானா சாக வேண்டும்" என்று விம்ம ஆரம்பிப்பாரே! அது மட்டுமல்லாமல் தாயின் கட்டளைப்படி வாளை கீழே போட்டு விட்டு "மன்னிப்பும் கேட்கட்டுமா" என்று சிறு குழந்தை போல முகவாட்டம் காட்டி அழுவாரே! இந்த நடிக மேதையை எப்படிப் பாராட்டி மகிழ்வது?
பின் அட்சயனாக மாறி அமைதியான நடிப்பைக் காண்பிக்கும் மாற்றம். தன் கண்ணெதிரிலேயே தன்னை அழிக்க வசந்தசேனை திட்டம் தீட்டும்போது எதுவுமே தெரியாதது போல நிற்கும் பாந்தம், தன்னைக் கொண்டே மன்னனை அந்த சதிகாரி கைது செய்ய வைக்க இருதயம் பிளக்கும் சோகத்தை வெளிக்காட்டாமல் வெளிக்காட்டும் அற்புத முகபாவங்கள் என்று அசத்தும் இந்த நடிப்பின் அட்சயபாத்திரத்தை எப்படி வர்ணிப்பது?
இரண்டாவது
இறுதியான இறுதிக் கட்ட காட்சி.
அரண்மனையில், ஆலமரம் போன்ற தூணில் சங்கிலிகளால் நடிகர் திலகம் கட்டப்பட்டிருப்பார். வசந்தசேனையும், உக்கிரசேனனும் சாட்டையால் அடித்து துன்புறுத்துவார்கள். உக்கிரசேனன் கடைசியாக உன் குழந்தையை முத்தமிட்டுக் கொள்' என்று குழந்தையை மனோகரனான நடிகர் திலகத்திடம் நீட்டுவான். நடிகர் திலகம் குழந்தையை முத்தமிடுவதற்கு முன்னாலேயே குழந்தையை 'வெடு'க்கென்று இழுத்துக் கொள்வான். இப்படியே மனோகரனை குழந்தையை முத்தமிட விட முடியாமல் சித்ரவதை செய்வான் உக்கிரசேனன். அப்போது குழந்தையை இறுதியாக ஒருதடவையாவது முத்தமிட்டுவிட வேண்டும் என்ற ஆசை, துடிப்பு, ஆர்வம் அதே சமயம் இயலாமை, கட்டி வைக்கப்பட்டிருக்கிறோமே என்ற அவமானக் குறுகல் என்று அத்தனை உணர்ச்சிகளும் நடிகர் திலகத்திடம் நர்த்தனம் புரியும்.
இறுதியில் துரோகிகளின் கொட்டம் தாங்க மாட்டாமல் கண்ணாம்பா மகன் மனோகரனுக்கு இட்ட கட்டளையை நீக்கி 'பொறுத்தது போது பொங்கி எழு' என்று ஆணை பிறப்பித்தவுடன் காட்டாற்று வெள்ளமென நடிகர் திலகம் தூணில் கட்டப்பட்டிருக்கும் சங்கிலிகளை அறுக்கக் காட்டும் வீரம், வேகம் வார்த்தைகளால் சொல்ல முடியாதது. தாய் அங்கு மைந்தனுக்கு தன் வீர முழக்கங்கள் மூலம் எழுச்சியையும், வீரத்தையும் அதிகப்படுத்திக் கொண்டிருக்க, தாயின் ஒவ்வொரு வசனத்திற்கும் கைகளையும், கால்களையும் உதறி உதைத்து கட்டவிழ்க்கப் போராடும் போராட்டம், ஒவ்வொரு முறையும் தன் முழு உடல் பலத்தையும் காட்டி சங்கிலிகளை அறுக்க முயல்வது (இதில் மறக்காமல் ஒன்று செய்வார். ஒவ்வொரு முறையும் சங்கிலிகளை அறுக்க மிகுந்த பிரயாசைப்பட்டு துடிதுடித்து சிறிது நேரம் நின்று உடல் அசதியைக் காண்பிப்பார். மிகச் சிறிய வினாடி ஓய்வு இடைவெளி விட்டு மீண்டும் சங்கிலிகளை அறுக்க போராடுவார். அச்சு அசல் அப்படியே போராட்டத்தையும், அதனால் ஏற்படும் உடல் உபாதைகளையும் கூட அற்புதமாகக் காட்டுவார். அந்த இடைவெளி ஓய்வும் அருமையாக இருக்கும்) பின் தூண்களைத் தூள் தூளாக்கி உடைத்து சிங்கமென எதிரிகளை துவம்சம் செய்வது இன்னும் அற்புதம்.
இப்படியாக நடிகர் திலகத்தின் மனோகரன் சாம்ராஜ்யம் படம் நெடுக பரவிக் கிடக்கிறது. படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ஒவ்வொருவனும் மனோகரனாய்த்தான் அரங்கை விட்டு வெளியே வருவான். மனோகரன் பேசிய வசனங்கள் அனைத்தையும் ஒவ்வொருவனும் மனனம் செய்து பேசியபடியே வருவான். அந்த அளவிற்கு நடிகர் திலகம் மனோகரனாய் தன் அசகாயசூர, தீர,வீர நடிப்பால், தன்னுடைய தெளிவான வீர உச்சரிப்பு வசனங்களால் பார்ப்பவர் அனைவர் நெஞ்சிலும் நங்கூரம் போட்டு பதிந்திருப்பார்.
எப்படி வீரபாண்டியக் கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் என்றவுடன் நடிகர் திலகம் நம் கண் முன்னும், நெஞ்சிலும்,நினைவிலும் நம்மைக் கேட்காமலேயே வந்து நிற்கிறாரோ அதே போல மனோகரா என்றாலும் நம் மனக் கண்ணில் சட்டென்று தெரிபவர் அதே நடிகர் திலகம் தானே!
இது யாருக்குக் கிடைத்த வெற்றி? நடிப்புக்குக் கிடைத்த வெற்றி, நடிகனுக்குக் கிடைத்த வெற்றி, கலைக்குக் கிடைத்த வெற்றி, கலைமகளுக்குக் கிடைத்த வெற்றி. தமிழ்நாட்டுக்குக் கிடைத்த வெற்றி, இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றி, உலகிற்கே கிடைத்த வெற்றி!
எனவே இந்த வெற்றித் திருமகன் மனோகரனுக்கு இல்லை.... இல்லை... நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள். அவர் பிறந்த காலத்தில் நாமும் பிறந்திருக்கிறோம் என்று பெருமை கொள்ளுங்கள். அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்று கர்வம் கொள்ளுங்கள்.
வாழ்க எங்கள் மனோகரனின் புகழ்!
நான் சுவாசிக்கும் சிவாஜி (19) - ஒய்.ஜி. மகேந்திரன்
சிவாஜிக்கு மிகவும் பிடித்த டைரக்டர் ஏ.சி.திருலோக்சந்தர். இவர், சிவாஜி மீது அபரிமிதமான அன்பு வைத்திருந்தார். பல ஆண்டுகளுக்கு முன், 'பொம்மை' சினிமா இதழில், தான் இயக்கிய நடிகர்களை, ஒவ்வொரு விதமான பூவுடன் ஒப்பிட்டு, ஒரு தொடர் கட்டுரை எழுதியிருந்தார். அதில், எம்.ஜி.ஆரை குறிஞ்சி மலருக்கு ஒப்பிட்டிருந்தார். நான்கு வாரம் மற்ற எல்லா நடிகர்களைப் பற்றியும் எழுதிய திருலோக்சந்தர், சிவாஜியைப் பற்றி மட்டும் எதுவும் குறிப்பிடவில்லை.
கடைசி வாரத்தில் தான் அதற்கு விடை கிடைத்தது. சிவாஜியோடு ஒப்பிட மலர்களே இல்லை என்றும், எனவே, அவரை, 'தெய்வ மலர்' என்று குறிப்பிடுவதாக கூறியிருந்தார். ஒரு இயக்குனரிடமிருந்து, சிவாஜிக்கு கிடைத்த உச்ச கட்ட பாராட்டு இது. சிவாஜி நடித்த படங்களில் மிகவும் முக்கியமான படம் தெய்வ மகன். இப்படம் ஆஸ்கர் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டு, சிறந்த வெளிநாட்டு படத்திற்கான விருதுக்காக பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப் பட்டது. தெய்வ மகன் படத்தில், திருலோக்சந்தர் சிவாஜியை நடிக்க வைத்த மாதிரி, வேறு எந்த டைரக்டரும் செய்ததில்லை. அப்பா, இரு மகன்கள் என சிவாஜி, மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இம்மூவரும் ஒன்றாக வரும் காட்சி, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இல்லாத அக்காலத்திலே, மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் படமாக்கப்பட்டிருந்தது. தேரி சூரத் மேரே ஆங்கேன் என்ற இந்தி படத்தின் தமிழ் ரீ-மேக் இது. ஆரூர்தாசின் வசனங்கள் பல இடங்களில், 'பளிச்!'
எழுத்தாளர்கள் நல்ல வசனம் எழுதலாம். ஆனால், அவை ஆடியன்சை முழுமையாக சென்று அடைவது, அந்த வசனத்தை பேசி, நடிக்கும் நடிகரிடம் தான் இருக்கிறது. ஆரூர் தாஸ், கருணாநிதி வசனங்கள், உயிர் பெற்றதற்கு, முக்கிய காரணம், சிவாஜியின் உச்சரிப்பு தான். இதை கருணாநிதியே பல முறை சொல்லியிருக்கிறார்.
நீங்களே யோசித்துப் பாருங்கள்... பராசக்தி பட வசனங்களை சிவாஜியைத் தவிர வேறு யாரால் சிறப்பாக பேசி நடித்திருக்க முடியும்?
நடிப்பிலிருந்து ஓய்வு பெற்று, அமெரிக்காவில் வசித்து வந்தார் நடிகை பத்மினி. எங்கள் யு.ஏ.ஏ., நாடக குழுவுடன், நான் அமெரிக்கா சென்றிருந்த போது, அவரை, நியூயார்க் நகரில் சந்தித்தேன். அப்போது அவர் பகிர்ந்து கொண்ட நிகழ்வு இது...
ஒரு சமயம், அங்குள்ள ஒரு வீடியோ கேசட் கடைக்கு சென்றிருந்த பத்மினி, எந்த கேசட்டு வாங்குவது என்று, ரொம்ப நேரமாக தேடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த கடைக்கு வந்திருந்த ஒரு தமிழர், பத்மினியை யாரென்று தெரியாமலேயே, 'ரொம்ப நேரமாக எதையோ தேடிக்கிட்டு இருக்கீங்களே...' என்றவர், 'தமிழ் கலாசாரத்தை பத்தி தெரிஞ்சுக்க சிவாஜி - பத்மினி இணைந்து நடித்த தில்லானா மோகனாம்பாள் படத்தின் வீடியோவை வாங்கிட்டுப் போங்கள்...' என்று, ஆலோசனை கூறியுள்ளார்.
'நீங்கள் குறிப்பிடும் அந்த படத்தில், சிவாஜியுடன் இணைந்து நடித்த பத்மினியே நான் தான்...' என்று பதில் கூறி, அந்த தமிழரை ஆச்சரியப்படுத்தியுள்ளார் பத்மினி. இது, சிவாஜிக்கு கிடைத்த மற்றொரு மணிமகுடம்.
எனக்கும், இது மாதிரி ஒரு அனுபவம், அமெரிக்காவில் நடந்தது. அங்கு, எங்கள் யு.ஏ.ஏ., குழுவின் நாடகங்களை பார்க்க வரும் நண்பர்களில் பலர், 'சிவாஜியுடன் முக்கிய பாத்திரத்தில் நீங்கள் நடித்த, பரீட்சைக்கு நேரமாச்சு படம் மாதிரி வேறு படம் கிடைக்காது; நினைவில் எப்போதும் நிற்கும் படம்...' என்று என்னிடம் கூறினர்.
அந்த அளவுக்கு, பரீட்சைக்கு நேரமாச்சு படம் வெற்றி பெற்றதற்கு முழு காரணம் சிவாஜி தான். அப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும், நரசிம்மாச்சாரி கேரக்டராகவே வாழ்ந்து காட்டியிருப்பார். அதற்காக, அவர் எவ்வளவு மெனக்கெட்டார் என்பதை நான் நன்கு அறிவேன்.
உதாரணமாக, வைணவ அந்தணர்களின் நடை, உடை, பாவனை எப்படி இருக்கும் என்பதை நேரிடையாக அறிந்து கொள்ள, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு சென்று, அங்கு வரும், வைணவ அந்தணர்களை உற்றுப் பார்த்து, அதன்படி, ஒவ்வொரு அசைவுகளையும் படத்தில் செய்து காட்டியிருப்பார்.
படத்தின் முதல் காட்சியில், சூரிய நமஸ்காரம் செய்த பின், பஞ்சகச்ச வேட்டியை பிடித்தபடி நடந்து வரும் காட்சி, தன் மகனை அடித்து விட்டு, பின் அவனுக்காக பரிந்து பேசும் போது, குடுமியை அள்ளி முடியும் காட்சி, ஐயங்கார் பேசும் ஸ்டைலில் பேசுவது என்று அத்தனையையும் வெகு இயல்பாக செய்திருப்பார்.
'பாங்க் அக்கவுன்டை மட்டும் உயர்த்தினால் போதாது. நடிப்பு அக்கவுன்ட்டையும் உயர்த்த வேண்டும்...' என்பார் சிவாஜி.
தான் மட்டும் நடித்தால் போதாது; கூட நடிப்பவர்களும் அந்தந்த கேரக்டராகவே மாற வேண்டும் என்று விரும்புவார். மேலும், தன்னுடன் நடிப்பவர்களும், தங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்படுத்தி தருவார். அதன்படி, பரீட்சைக்கு நேரமாச்சு படத்தில், யு.ஏ.ஏ., நாடக குழுவை சேர்ந்த சுப்புணி, ரவுடியாக வருவார். அந்த கேரக்டரை இயல்பாக நடிக்க விட்டு, இறுதியில் தன் நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களின் பாராட்டை தானும் பெற்று, மற்றவர்களுக்கும் பெற்றுத் தந்தார்.
அதேபோல், படத்தின் பின் பகுதியில் நான் ரவுடியாக நடித்திருப்பேன். அசல் ரவுடி எப்படி நடக்க வேண்டும்; பேச வேண்டும் என்று நடித்துக் காட்டினார். அவர் செய்து காட்டியதில் பத்து சதவீதம் தான், நான் படத்தில் செய்தேன். தியேட்டரில் மேற்கூறிய இந்த காட்சியையும் ரசிகர்கள் கைதட்டி ரசித்தனர்.
அதே படத்தில், மகனை இழந்த சோகத்தில் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து புலம்பும் காட்சியில், தத்ரூபமாக நடித்திருப்பார் சிவாஜி. இக்காட்சியை பார்த்த நடிகர் கமலஹாசன், 'இந்த காட்சியில் நான் சிவாஜியை பார்க்கவில்லை. திண்ணையில் அமர்ந்து, தன் சொந்த மகனை இழந்து புலம்பும் ஒரு ஐயங்காரை தான் பார்த்தேன்...' என்று பாராட்டி கூறினார். இப்படி ஒவ்வொரு படத்திலும் தான் ஏற்கும் கேரக்ட்ராகவே வாழ்ந்து காட்டியவர் சிவாஜி.
சிவாஜி, அமெரிக்கா சென்று திரும்பிய போது, அவருக்கு மிகப்பெரிய விழா எடுத்து, பாராட்டினார் எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு சென்னையில் சிலை எடுத்து, தன் அன்பை தெரிவித்தார் கருணாநிதி. பிரான்ஸ் நாடு செவாலியே என்ற மிகப்பெரிய விருதை சிவாஜிக்கு அளித்து, கவுரவித்தபோது, சென்னையில் அவருக்கு மிகப்பெரிய பாராட்டு விழா எடுத்ததோடு, அவர் வசிக்கும் தி.நகர் போக் ரோடிற்கு, செவாலியர் சிவாஜி கணேசன் ரோடு என்று பெயர் வைத்து, அவரை கவரவித்ததுடன், தமிழக அரசின் சார்பில், சிறந்த நடிகருக்கான விருதை, 'சிவாஜி விருது' என்று தரவும் ஏற்பாடு செய்தார் ஜெயலலிதா. மூன்று முதல்வர்களுமே சிவாஜி மீது மிகுந்த மரியாதையும், பாசமும் கொண்டவர்கள்.
— தொடரும்.
Dear TFMlover,thanks for NT"s clippings.
Dear HARISH sir,thanks for VASU"s article on MANOHARA.It was manoharam.
Thank you TFMLover for the rare pics continue your good work sir
Warm welcome to VCS Sir to our thread.
Harish sir,
Nice job by posting Vasu sir's article, kudos
Dear Ravi kiran sir,
I will be watching Neethi this week if it releases , thank you for giving info about re releases of NT movies
தலைவரின் அற்புத படங்களை பதிவு செய்த tfmlover அவர்களுக்கு நன்றி
மனோகரா அற்புத பதிவுகளை வாசு அவர்க்ளின் பொக்கிஷத்திலிருந்து வழங்கிய ஹரிஷ் அவர்களுக்கு நன்றி
புதிய வரவாய் வருகை புர்ந்திருக்கும் மதுரை திரு.சந்திரசேகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
My sincere thanks to mr. Ragulram sir,mr.chandrasekar sir,mr.ragavendra sir,mr.subramani ramajeyam sir,
and mr.spchowthryram sir for giving me a warm welcome to our hub.
Bombay photos areVery nice .thalaivar in natural style is superb.
Dear tfmlover sir,
Thanks for awesome photos of NT. Simply Superb.
Warm Welcome to MR VCS Sir.
Mr Harish
Pls continue your work by reproducing the work of Mr Vasu Sir posting for the benefit
of crores of our NT's Fans.
சண்டைகாட்சி - தமிழ் திரைப்படங்களில் நாம் பெரும்பாலும் ஒரு சில நடிகர்களின் படங்களை தவிர மீதி நடிகர்கள் படங்களை பார்த்தால் சண்டை காட்சி படமாக்கபட்டிருக்கும் விதம் நிச்சயமாக ஒரு தலைபட்சமாகவே அமைக்கபட்டிருக்கும்.
அதாவது, வில்லன் எவ்வளவு உடல் வலிமை உள்ளவனாக இருந்தாலும் பாவம் கதாநாயகனிடம் இருந்து அடிவாங்கி கொண்டே இருப்பார். இவரை போய் வில்லனாக ஏன் போட்டார்கள் திரும்பி ஒரு அடிகூட அடிக்காமல் சும்மா ஆய்...ஊய்...என்று சத்தம் மட்டும் போட்டு அடிவாங்கிக்கொண்டு வருகிறாரே என்று நினைக்க தோன்றும்.
அந்த உண்மையிலயே பலசாலியான வில்லன் மனம் எவ்வளவு நொந்துபோகும் என்பதை பற்றி யாருமே கவலை பட மாட்டார்கள். டைரக்டர், சண்டைபயிர்சியாலர் மற்றும் கதாநாயகன் இவர்களுக்கு ஒரு பயங்கர உடல் பலமுள்ள வில்லனை கதாநாயகன் புரட்டி புரட்டி எடுத்தார் என்று மக்கள் அந்த காட்சியை பார்த்து பேசவேண்டும் இதுவே இவர்கள் விருப்பம்.
இதற்க்கு முதன் முதலில் மாற்றம் கொண்டுவந்தது நம்முடைய நடிகர் திலகம்.
நடிகர் திலகத்திற்கு பிறகு இந்த பாணி மக்கள் கலைஞர் திரு ஜெய்ஷங்கர் மற்றும் கலைநிலா ரவிச்சந்திரன் அவர்களின் திரைப்படத்தில் காணலாம் ! இவர்கள் திரைப்படங்களிலும் வில்லன்களை பலம் வாய்ந்தவர்களாக நாம் பார்க்கலாம். அதனால் தான் இவர்களின் திரைப்படங்களில் மட்டும் சண்டைகாட்சிகள் அனைத்தும் மிக மிக விறுவிறுப்பாக இருக்கும் !
உதாரணமாக திருடன் திரைப்படத்தில் வரும் சண்டைகாட்சி...இதில் வில்லனின் அடியாட்களை கூட படம் பார்பவர்கள் பலசாலிகளாக கருதுவார்கள் அந்தளவிற்கு அவர்களுக்கும் சண்டைகாட்சியில் முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள்.
மிக இயற்கையான மிகைபடுத்தபடாத ஒரு சண்டைகாட்சி !
http://www.youtube.com/watch?v=IL464qpBbRA
வில்லன் என்பவன் ஒரு பலசாலி, குள்ளநரித்தனம் கொண்டு புத்திசாலி என்பதுதான் அதன் பொருள். ஆகவே..ஒரு சண்டைகாட்சி விறுவிறுப்பாக இருக்கவேண்டும் என்றால்...சண்டை காட்சி சமமாக இருக்கவேண்டும்.
அதாவது நாயகன் 10 அடி அடித்தால் வில்லன் ஒரு 7 அடியாவது அடிக்கவேண்டும். அப்போதுதான் காட்சியின் இயற்கை தன்மை பாதிக்காது !
அதை விடுத்து வில்லன் ஒரு FORMALITY காக 2 அடி மட்டுமே நாயகனை அடித்து மீதி 50 அடி வாங்கிகொள்வான் என்றால் அவன் ஒரு வில்லனா ? டம்மி பீசா ?
நேர்மை திரைப்படத்தில் நடிக்கும்போது கிட்டத்தட்ட ஒரு 63 வயதிருக்கும் நடிகர் திலகத்திற்கு என்று நினைகிறேன்...சண்டைகாட்சியில் அவருடைய ஈடுபாடு மற்றும் லாவகம் பாருங்கள் ! சண்டைகாட்சிக்கு பெயர் போன நடிகர்கள் சண்டை காட்சியும் இதையும் பார்த்தால் யார் உண்மையாக வில்லனை அவன் பலத்தை ACKNOWLEDGE செய்யும் விதத்தில் நடித்திருக்கிறார்கள் என்பது விளங்கும் !
http://www.youtube.com/watch?v=AiqtZ...mwh4-gNJWeCCdg
Ragulram sir,
You are most welcome and my pleasure too !
Would be equally delighted if you could take some snapshots on the celebrations at Theater and post it here....
Thanks and Regards
Will definitely do tht Ravi Sir but It won't be of good quality
14/02/2014 முதல் கோவை ராயலில்
நடிகர்திலகம்
சிவாஜி
பெருமகனார்
நடித்த
####$$$$$ நீதி ####$$$$$
Thankyou Mr Vasudevan sir.Mr.Ramesh sir interview in our thalaivan sivaji.com-sivaji kural-2.is superb.kindly do read in this e-paper.How our fans were treated by our thalaivar is written in this e-paper.
காதலிக்க நேரமில்லை' படம் பார்த்துவிட்டு சிவாஜி உடனே போன் செய்து பாராட்டினார். 'உன் பேரைச் சொன்னாலே 'அழுமூஞ்சி டைரக்டர்' என்று சொன்னவர்கள் முகத்தில் கரி பூசுகிறமாதிரி படத்தை அருமையா எடுத்திருக்கே. எனக்கும் கூட அது மாதிரி ஒரு பேர் இருக்கு. அதை உடைக்கிற மாதிரி என்னையும் வச்சு ஒரு காமெடி படம் பண்ணேன். சண்முகம் கிட்டே சொல்லி டேட்ஸ் தரச்சொல்றேன்' என்றார்.
அண்ணே, 'காலமெல்லாம் காத்திருப்பேன்' என்ற ஒரு காமெடி ஸ்க்ரிப்ட் யோசனை பண்ணி வச்சிருக்கேன். சீக்கிரமே நாம ரெண்டு பேரும் சேர்ந்து செய்வோம்' என்றேன். ஆனால் இடையில் வெண்ணிற ஆடையில் நான் பிஸியாக இருந்ததால், உடனடியாக அவரோடு படம் பண்ண முடியவில்லை. இடையிடையே செட்டில் சந்திக்கும் போதெல்லாம் அதைப்பற்றிக் கேட்பார். 'அண்ணே அந்த ஸ்க்ரிப்டை உங்களுக்காக ஒதுக்கி வச்சிட்டேன். பண்ணினால் அதை உங்கள வச்சுதான் பண்ணுவேன். இப்போ நாம ரெண்டுபேருமே பிஸி. கொஞ்சம் பொறுங்கள் பண்ணிடுவோம்' என்றேன்.
சொன்ன மாதிரியே அந்தக்கதையை அவரை வச்சு பண்ணினேன். கோவை செழியன்தான் தயாரிப்பாளர். 'காலமெல்லாம் காத்திருப்பேன்' என்ற அந்தக்கதைதான் 'ஊட்டி வரை உறவு' என்ற பெயரோடு படமாக வெளியாகி சக்கைபோடு போட்டது.
- பொம்மை இதழில் இயக்குனர் ஸ்ரீதர் .
Dear Yukesh Sir,
Thanks for sharing this wonderful piece of article.
I do not know if it is true statement from Sridhar because Nadigar Thilagam had time and again acted in comedy based films like Sabaash Meena, Manamagan Thevai, Kalyaanam Panniyum Brahmachaari, Arivaali, BalePandiya etc.,
So, logically, there is no need for Nadigar Thilagam to defame himself and ask Sridhar to pen something for him !
பிப்ரவரி 14....காதலர்கள் தினம்.- திரைப்படங்களில் காதல் ஒரு முக்கிய அம்சமாக அன்றும் இன்றும் கருதபடுகிறது.
திரைப்படங்களில் காதல் காட்சிகள் வரும்போது அது எந்த காலம் ஆனாலும் நமக்குள்ளும் ஒரு மின்மினிபூச்சிகள் சிறகடிக்கும்.
தமிழ் திரைஉலகம் பொறுத்தவரையில் காதல் காட்சிகளில் நடிக்கும்போது முகம் இறுகிய நடிகர்கள் கூட பொலிவுடன் நடித்திருப்பதை நாம் பார்த்திரிகிறோம்..அன்றும் இன்றும்...இது தொடர்ந்து நடைபெறும் ஒரு விஷயம்..!
தமிழ் திரை உலகை பொருத்தவரை ஒவ்வொரு காலகட்டத்திலும் பல சிறந்த நடிகர்கள் தங்களால் முடிந்தவரை காதலர் பாத்திரத்தை சிறப்பாக நடித்திருப்பார்கள் !
அப்படி மக்கள் மனதில் நல்ல ஒரு காதலனாக இவர்கள் இடம் பிடித்ததால் தான் காதல் இலவரசர்களாகவும் காதல் மன்னர்களாகவும் அழைக்கப்பட்டார்கள் !
அப்படி வலம் வந்த இளவரசர்கள், மன்னர்கள் மத்தியில் ஒரு நடிகர், குடும்ப கதைகளை மையமாக கொண்ட கதைகளில் தன்னுடைய நவரச நடிப்பை தந்த ஒரு நடிகர்...காதாலா...? செரி ஒரு கை பாப்போம் என்று ஒரு திரைப்படத்தில் நடித்தார்
எத்துனை இளவரசர்கள், மன்னர்கள் தோன்றினார்கள் அடேயப்பா...ஆனால் இவர் நடித்த இந்த ஒரு படம்...காதலை மையமாக கொண்ட ஒரு படம் ..அதுதான் காதல் மன்மதனின் வசந்த மாளிகை ...
அந்த நடிகர் நமது நடிகர் திலகம்.
இன்றுவரை வசந்தமாளிகைக்கு இணை ஒன்றும் இல்லை !
ஒரே ஒரு படம் ! அத்துணை காதல் படங்களையும்...சாய்த்த படம் !
நடிகர் திலகம் ஜமீன்தார் ஆனந்தாக ..காதல் வயப்படும் மன்மதனாக வாழ்ந்திருப்பார்...யாரால் மறுக்க மறைக்க முடியும் இந்த உண்மையை..
காதலுக்காக அவர் பேசியபோது தமிழகம் மட்டுமல்ல..உலக காதலர்கள் பேசினார்கள்...காதலுக்காக அவர் கண்ணீர் சிந்தியபோது உலக காதலர்கள் கண்ணீர் சிந்தினார்கள்...காதலுக்காக அவர் தியாகம் செய்தபோது உலக காதலர்கள் தியாகம் செய்தார்கள்..காதலியுடன் அவர் கைகோர்த்தபோது அனைவரும் ஆனந்தாக மாறி கை கோர்த்தனர் அவர்தம் காதலியுடன் !
இது இறந்துபோன ராணிகாக கட்டப்பட்ட தாஜ்மஹால் அல்ல ..உயிரோடிருக்கும் காதலிக்காக கட்டப்பட்ட வசந்த்தமாளிகை ..
இது சமாதி அல்ல ! சந்நிதி !
நடிகர் திலகம் இதை கூறும்போது திரை அரங்குகள் அதிர்ந்தன கைதட்டல்களால் !
ஆயிரம் இளவரசர்கள், மன்னர்கள் சக்ரவர்த்திகள் வருவார்கள் போவார்கள் ...ஆனால் காதல் என்றால் அது வசந்த்தமாளிகை ...! ஏன் என்றால் அது சமாதி அல்ல ! காதலர்களின் சந்நிதி !
வாழ்க நடிகர் திலகம் !
ஆயிரம் பாடல்கள் பதிவிடலாம் !
இந்த ஒரு பாடலுக்கு ஈடாகுமா ?
http://www.youtube.com/watch?v=Wufr44qn1xk
நமது ஹப்பில் நடிகர் திலகத்தின் திரியில் புதிய வரவாக நுழைந்திருக்கும் கல்லூரி காலம் முதலே எனது அருமை நண்பர் சந்திரசேகர் அவர்களை வருக வருக என வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன். நடிகர் திலகத்தின் initials என்று சொல்லக்கூடிய VC யை தன பெயரிலே வைத்திருக்கும் சிவாஜியின் அதிதீவிர ரசிகர் இவர். நடிகர் திலகத்திற்கும் இவருக்கும் உள்ள அந்த பிணைப்பு இனிஷியலில் மட்டுமல்ல அதையும் தாண்டியது என்பதற்கு இவர் பிறந்த நாளை குறிப்பிட்டாலே போதும். அந்த நாள் ஜூலை 21. ஆனால் அந்த நாள் வாழ்நாள் முழுவதும் நம்மை வருத்தத்தில் ஆழ்த்திய நாள் என்பதால் 2001 முதல் தன பிறந்த நாளை கொண்டாடுவதையே நிறுத்தி விட்டார். அவரின் வருகையும் பங்களிப்பும் நமக்கு மேலும் பல சுவையான செய்திகளை தரும் என்பதில் ஐயமில்லை.
இந்த நேரத்தில் அவரை வரவேற்று பதிவிட்ட ராகவேந்தர் சாருக்கு நன்றி கூறுவதுடன் அவர் தொடர்ந்து பங்களிப்பை தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். அது போன்றே அருமை நண்பர் வாசு அவர்களும் என் கோரிக்கையை ஏற்று மீண்டும் நமது திரியில் தன அற்புத பணியை தொடர வேண்டும் என வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
தூத்துக்குடி நகருக்கு வெளியே அமைந்துள்ள முல்லை நகர் சத்யா அரங்கம் இப்போது நடிகர் திலகத்தின் படங்களை நிரந்தரமாக திரையிடும் ஒரு அரங்காக மாறிக் கொண்டிருக்கிறது. சென்ற ஞாயிறு முதல் நடிகர் திலகத்தின் பேசும் தெய்வம் திரையிடப்பட்டு வெற்றி நடை போட்டு வருகிறது. சண்டைக்காட்சிகளோ மசாலா அயிட்டங்கள் போன்ற எதுவுமே இல்லாத இந்த கருப்பு வெள்ளை குடும்பச் சித்திரம் மக்களை பெரிய அளவில் அரங்கத்திற்கு வரவழைத்திருக்கிறது. பெரிய விளம்பரங்கள் எதுவுமின்றி திடீரென்று ஞாயிற்றுக்கிழமை முதல் திரையிடப்பட்ட போதிலும் அன்றைய தினம் மாலைக்காட்சிக்கே 367 டிக்கெட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன. மெட்ரோ நகரங்களில் கூட ஒரு சில படங்களுக்கு ஞாயிறு மாலைக் காட்சிக்கு இத்தனை டிக்கெட்டுகள் விற்பதில்லை என்ற சூழலில் தூத்துக்குடி நகருக்கு வெளியே அமைந்திருக்க கூடிய ஒரு திரையரங்கத்திற்கு இத்தனையும் நபர்கள் வருகிறார்கள் என்று சொன்னால் அதுதான் நடிகர் திலகத்தின் சக்தி.இப்படி ஒரு மகத்தான ஆதரவு தர ரசிகர்களும் பொது மக்களும் இருக்கும் போது அரங்க உரிமையாளர் தொடர்ந்து நடிகர் திலகத்தின் படங்களை வெளியிட ஆர்வம் காட்டுவது இயல்புதானே! தகவல் உதவி திரு ராமஜெயம்.நன்றி சார்!
அன்புடன்
My father was bedridden for few weeks and now started walking slowly. To help him walk, doctor suggested him to use a walking stick. He was struggling to use walking stick, so I asked the doctor if we can ask some physiotherapist to train him. he said "adellaam onnum vendaam. Uyarndha ullam padam pottu kaaminga. Easya kaththukkalaam"... the doc is a funny guy and he definitely joked but I end up watching it and now I feel like i want to have my own walking stick. Dr Sivaji, physiotherapist.
Uyarndha Manithan it should be ! - Few Walking Stick songs for you
Andha Naal Gyaabagam....from Uyarndha Manithan
http://www.youtube.com/watch?v=VtrnHY21zZw
Ponaal Pogattum Poda.....from Paalum Pazhamum
http://www.youtube.com/watch?v=4qnOJivS4GI
ninaivaalae silai seidhu .....from Andhamaan Kaadhali
http://www.youtube.com/watch?v=xvFu-gm0UuY