https://scontent-sin.xx.fbcdn.net/hp...47&oe=55AAABA7
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
Printable View
https://scontent-sin.xx.fbcdn.net/hp...47&oe=55AAABA7
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
https://scontent-sin.xx.fbcdn.net/hp...3c&oe=5598B8E0
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...869fb7166af61f
திரும்பத் திரும்பத் திரையில் வெவ்வேறு வயதுகளில் தோன்றினாலும், இந்திய ரசிகர்கள் பத்மினியை மட்டும் மனத்துக்குள் பாசப்பதியம் போட்டு வைத்துக்கொண்டார்கள். அவரது பாதச் சதங்கைகளின் ரீங்காரம் இன்னமும் சின்னத்திரைகளில் இந்தியா முழுதும் கேட்கிறது. மற்ற எந்த நடிகைக்கும் கிடைக்காத வரவேற்பு பத்மினிக்கு மாத்திரம் நிலைத்து நின்றது. பத்மினியின் நடிப்பு உயரத்தை அவ்வளவு எளிதில் வேறு யாரும் தொட்டுவிட முடியாது
வண்ணத்திரையில் பத்மினியின் ஒட்டுமொத்த சாதனைகளுக்கும் இந்தியர்கள் நன்றி சொல்ல வேண்டியது இருவருக்கு மட்டுமே. முதலாமவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். இரண்டாமவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். கலைவாணர் வற்புறுத்தி பத்மினியை நாயகியாக்கியவர். கணேசனோ, பத்மினியின் பரவசமூட்டும் நடிப்புக்குப் பாதை வகுத்துத் தந்தவர்.
85 ஆண்டு காலத் தமிழ் சினிமா சரித்திரத்தில், இட்லியும் சாம்பாருமாக இணை சேர்ந்த ஒப்பற்ற ஜோடி அவர்கள். நிஜ வாழ்வில் (1960-களில்) தாலி கட்டி முடித்ததும், கால் கட்டு போட்டதும், தமிழர்களின் கல்யாணங்களில் சிவாஜி - பத்மினிபோல் சேர்ந்து வாழ திருமண வீட்டார் வாழ்த்தியது காலத்தின் கல்வெட்டு.
பத்மினியின் பெயரில் தன் புது சினிமா கம்பெனியை ஆரம்பித்தார் பி.ஆர்.பந்தலு. அதில் முதல் தயாரிப்பு காமெடியாக வளர்ந்தது. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்கிற டைட்டிலில் 100 நாள்கள் ஓடியது. ஆரம்ப நாள்களில், கணேசனைவிட பத்மினிக்கு ஊதியம் மிகவும் கூடுதல். உச்ச நட்சத்திரம் அல்லவா.
தூக்குதூக்கியும் கூண்டுக்கிளியும், 22 ஆகஸ்டு 1954-ல் ஒரே நாளில் வெளியாகின. முதலும் கடைசியுமாக சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த கூண்டுக்கிளியை, வசூலில் தூர வீசி எறிந்த மகத்தான வெற்றிச்சித்திரம் தூக்குதூக்கி. திருவிதாங்கூர் சகோதரிகள் மூவரும் சேர்ந்து நடித்த முதல் படம். சிவாஜி - பத்மினி ஜோடியின் நகைச்சுவை நடிப்பும், இனிய பாடல்களுமாகச் சிகரம் தொட்டது. கூண்டுக்கிளியின் தோல்விக்கான காரணங்களில் முக்கியமானது, பத்மினி அதில் நாயகி இல்லை என்பது.
தங்கப்பதுமையும், தெய்வப்பிறவியும் சிவாஜி - பத்மினி சேர்ந்து நடித்ததில் எவராலும் மறக்க முடியாத கலைப் பொக்கிஷங்கள். நிஜத்தில், பத்மினியின் குரல் ஆண்மையோடு ஒலிக்கும். தொலைபேசியில் அவர் பேசினால், புதிதாகக் கேட்பவர்களுக்குப் பேசுவது பத்மினியா, அவரது அண்ணன் தம்பி யாராவதா என்ற குழப்பம் நிச்சயம் வரும். ஆணின் குரலை வைத்துக்கொண்டா மலையாளத்து பத்மினி, அருந்தமிழில் அத்தனை அற்புதமாகப் பெண்மையின் இயல்புகளை, சிறப்பை வெளிப்படுத்தினார் என்கிற திகைப்பு தோன்றும்.
தன் கணவனுடைய கண்கள் குருடாகிவிட்டன எனத் தெரிந்ததும், தங்கப்பதுமையில் 'உங்கள் கண்கள் எங்கே அத்தான்...’ என வீறிட்டு அலறுவாரே. அப்போது கல் நெஞ்சங்களும் கரையும். ஏதோ நிஜமான புருஷனுக்காகக் கூச்சலிடும் மனைவியின் அடிவயிற்றுக் கதறலாக நினைத்து, நிசப்தத்தின் அரங்குகள் கண்ணீரில் நீச்சல் அடிக்கும். 1959 பொங்கலுக்கு தங்கப்பதுமை ரிலீசானபோது, ஏனோ பிரமாதமாக ஓடாமல் போனது. மறு வெளியீடுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. எடுத்த எடுப்பில் வெற்றி பெறாவிட்டாலும், தங்கப்பதுமையில் சிவாஜி - பத்மினி நடிப்பு, ஏவி.எம். செட்டியாரின் திட்டத்தைக் கிடப்பில் போட்டது.
தங்கமாக பத்மினியும் மாதவனாக சிவாஜியும் தெய்வப்பிறவியில் நடித்ததாகச் சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். நிஜமாக வாழ்ந்தார்கள். சந்தேகச் சுவர்களுக்குள், குழப்பத்தின் கால்களில் சதிராடும் தம்பதிகள். கணவர் சிவாஜியை அடிக்கப் பாயும் தம்பி எஸ்.எஸ்.ஆரை, அக்கா பத்மினி குடையால் பிளக்கும் காட்சியில், மீண்டும் நிஜமாகவே பிய்த்து உதறிவிட்டார்! குடையை அல்ல ராஜேந்திரனை. அந்த ஒரு காட்சிக்காகவே தியேட்டர்களில் மீண்டும் மீண்டும் ரசிகர்கள் குவிந்தனர்.
உணர்ச்சிக் காவியம் என்று சொன்னால், உடனே அடையாளம் காட்டப்பட்ட அன்றைய உன்னதம் தெய்வப்பிறவி. கருப்பு வெள்ளைக் காலத்தில் வந்த மிகச் சிறந்த 10 படங்களில் தெய்வப்பிறவி ஒன்று! மிக முக்கியமானது.
பதிவு: தினமணி நாளிதழ்..கட்டுரை தொகுப்பு..
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
ஏப்ரல் 19: சைக்கிள் தினம் இன்று.
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் நீரும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்
நிலை மாறினால் குணம் மாறுவார் - பொய்
நீதியும் நேர்மையும் தேடுவார் - தினம்
ஜாதியும் பேதமும் கூறுவார் - அது
வேதன் விதியென்றோதுவார்
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்
பறவையைக்கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினைக்கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனைக்கண்டான் பணம்தனைப் படைத்தான்
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்
இன்பமும் காதலும் இயற்கையின் நீதி
ஏற்றதாழ்வுகள் மனிதனின் ஜாதி
பாரில் இயற்கை படைத்ததையெல்லாம்
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்
பாவமன்னிப்பு
டி.எம்.சௌந்தரராஜன்
கண்ணதாசன்
விஸ்வநாதன் ...ராமமூர்த்தி
https://youtu.be/Yhrp0_XgjdQ?t=72
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
கொடுத்தானே கொடுத்தானே பழரசம் ஆண்டவன் கொடுத்தானே
பிரித்தானே பிரித்தானே மனதையும் கவலையும் பிரித்தானே
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
குரங்காய் இருந்த மனிதன் மனதில் குழப்பம் ஏதுமில்லை
குடும்பம் மனைவி அண்ணன் தம்பி கூட்டம் சிறிதுமில்லை
ஆசை பாசம் காதலில் விழுந்தான் அமைதியைக் காணவில்லை
அலைந்தான் தவித்தான் துடித்தான் மடிந்தான் யாருக்கும் லாபமில்லை
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
தன்னந்தனியே பிறந்தவன் நெஞ்சில் சஞ்சலம் இல்லையடா
இன்னொரு உயிரை தன்னுடன் சேர்த்தால் என்றும் தொல்லையடா
இத்தனை சிறிய மனிதனின் தலையில் எத்தனை சுமைகளடா
இருபதில் தொடங்கி எழுபது வரைக்கும் என்றும் மயக்கமடா
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
மனதினில் கவலையை வளர்த்தானே
ம்...ம்ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம்ம்..ம் ம்ம்ம்ம்.
https://scontent-sin.xx.fbcdn.net/hp...ac&oe=55DE3613
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது
பக்கம் வருகின்றது வெட்கம் தடுக்கின்றது
காதல் கனிகின்றது கையில் விழுகின்றது
வண்டு வருகின்றது மலரில் அமர்கின்றது
வண்டு வருகின்றது மலரில் அமர்கின்றது
உண்டு சுவைக்கின்றது உறங்கி விழுகின்றது
உண்டு சுவைக்கின்றது உறங்கி விழுகின்றது
வானம் பொழிகின்றது பூமி நனைகின்றது
வானம் பொழிகின்றது பூமி நனைகின்றது
மேனி குளிர்கின்றது வெள்ளம் வடிகின்றது
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது
இரவு விடிகின்றது இளமை எழுகின்றது
இரவு விடிகின்றது இளமை எழுகின்றது
குளித்து வருகின்றது கூந்தல் முடிக்கின்றது
குளித்து வருகின்றது கூந்தல் முடிக்கின்றது
அருகில் அமர்கின்றது அத்தான் என்கின்றது
அருகில் அமர்கின்றது அத்தான் என்கின்றது
ஆர்வம் பிறக்கின்றது அன்பு அழைக்கின்றது
ஆர்வம் பிறக்கின்றது அன்பு அழைக்கின்றது
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது
திரைப்படம்: இருவர் உள்ளம்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1963
https://youtu.be/BK6zanXsUmQ
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி,
எங்கெங்கோ அலைகின்றார்
ஞானத் தங்கமே;
இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி,
எங்கெங்கோ அலைகின்றார்
ஞானத் தங்கமே;
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே;
இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி,
எங்கெங்கோ அலைகின்றார்
ஞானத் தங்கமே;
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே;
உன்னையே நினைத்திருப்பான்
உண்மையைத் தான் உரைப்பான்,
ஊருக்குப் பகையாவான்
ஞானத் தங்கமே... ஏ...
உன்னையே நினைத்திருப்பான்
உண்மையைத் தான் உரைப்பான்,
ஊருக்குப் பகையாவான்
ஞானத் தங்கமே;
அவன் ஊழ் வினை என்ன சொல்வேன்,
ஞானத் தங்கமே;
ஞானத் தங்கமே;
இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி,
எங்கெங்கோ அலைகின்றார்
ஞானத் தங்கமே;
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே;
நஞ்சினை நெஞ்சில் வைத்து
நாவினில் அன்பு வைத்து;
நஞ்சினை நெஞ்சில் வைத்து
நாவினில் அன்பு வைத்து,
நல்லவன் போல் நடிப்பான்
ஞானத் தங்கமே;
நஞ்சினை நெஞ்சில் வைத்து
நாவினில் அன்பு வைத்து,
நல்லவன் போல் நடிப்பான்
ஞானத் தங்கமே;
அவன் நாடகம் என்ன சொல்வேன்,
ஞானத் தங்கமே;
ஞானத் தங்கமே;
இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி,
எங்கெங்கோ அலைகின்றார்
ஞானத் தங்கமே;
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே;
தொண்டுக்கென்றே அலைவான்
கேலிக்கு ஆளாவான்,
கண்டு கொள்வாய் அவனை
ஞானத் தங்கமே... ஏ.
தொண்டுக்கென்றே அலைவான்
கேலிக்கு ஆளாவான்,
கண்டு கொள்வாய் அவனை
ஞானத் தங்கமே;
அவன் கடவுளில் பாதியடி,
ஞானத் தங்கமே;
ஞானத் தங்கமே;
இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி,
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே;
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே;
பிள்ளையைக் கிள்ளி விட்டு
தொட்டிலை ஆட்டி விட்டு;
பிள்ளையைக் கிள்ளி விட்டு
தொட்டிலை ஆட்டி விட்டு;
தள்ளி நின்றே சிரிப்பான்
ஞானத் தங்கமே:
பிள்ளையைக் கிள்ளி விட்டு
தொட்டிலை ஆட்டி விட்டு;
தள்ளி நின்றே சிரிப்பான்
ஞானத் தங்கமே;
அவன் தான் தரணியைப் படைத்தான்டி,
ஞானத் தங்கமே;
ஞானத் தங்கமே;
இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி,
எங்கெங்கோ அலைகின்றார்
ஞானத் தங்கமே;
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே..
(https://youtu.be/pbte64aTKPA)
திரைப்படம் : திருவருட்செல்வர்,
பாடல் : கண்ணதாசன் அவர்கள்,
இசை : கே.வி.மஹாதேவன் அவர்கள்,
பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்,
இயக்கம் : ஏ.பி.நாகராஜன் அவர்கள்,
வெளியான ஆண்டு : 1967.
https://fbcdn-sphotos-g-a.akamaihd.n...decebe4c5a41f9
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
ஆழியிலே பிறவாத அலைமகளோ? ஆஆ..ஆஅ...ஆ...
ஏழிசையைப் பயிலாத கலைமகளோ?
ஊழி நடம் புரியாத மலைமகளோ?
உலகத்தாய் பெற்றெடுத்த தலைமகளோ? ஆ..ஆ..ஆ..ஆஆஆ...
அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ?
அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ? - நான்
அன்புக் கவிதை சொல்லச் சொல்ல அடி எடுத்துக் கொடுத்ததோ?
அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ? - நான்
அன்புக் கவிதை சொல்லச் சொல்ல அடி எடுத்துக் கொடுத்ததோ?
அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ?
ஆ...ஆ..ஆ...ஆ..
இளனீரை சுமந்திருக்கும் தென்னை மரம் அல்ல
மழை மேகம் குடை பிடிக்கும் குளிர் நிலவும் அல்ல ஆஆ...ஆஅ..
இளனீரை சுமந்திருக்கும் தென்னை மரம் அல்ல
மழை மேகம் குடை பிடிக்கும் குளிர் நிலவும் அல்ல
இங்கும் அங்கும் மீன் பாயும் நீரோடை அல்ல
இங்கும் அங்கும் மீன் பாயும் நீரோடை அல்ல
இதற்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல
ஆ...ஆ..ஆ...ஆ.
அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ? - நான்
அன்புக் கவிதை சொல்லச் சொல்ல அடி எடுத்துக் கொடுத்ததோ?
அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ?
ஆஅ..ஆ..ஆ.ஆஅ..
தத்தி வரும் தளர் நடையில் பிறந்ததுதான் தாளமோ?
தாவி வரும் கையசைவில் விளைந்ததுதான் பாவமோ?
தெய்வ மகள் வாய் மலர்ந்து மொழிந்ததுதான் ராகமோ? ஆஆஆஆ..
இத்தனையும் சேர்ந்ததுதான் இயல் இசை நாடகமோ?
ஆஆஆஆ..
அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ? - நான்
அன்புக் கவிதை சொல்லச் சொல்ல அடி எடுத்துக் கொடுத்ததோ?
அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ?
திரைப்படம்: பேசும் தெய்வம்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா ா
இயற்றியவர்: வாலி
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1967
https://youtu.be/i1bZlls-czE
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
Dear gopal sir
please accept my belated condolence and regrets.
http://i1065.photobucket.com/albums/...pscgiyseta.jpg
விக்கிமாதித்தனின் சிம்மாசனத்தில்
அமர
பின்னாளில்
ஒரு
போஜராஜன்
வந்தான்
ஆனால்
உங்களுக்கான
சிம்மாசனம்
அது
என்றும்
வெற்றிடமே!
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் மக்கள் தலைவர் வசூல் சக்கரவர்த்தி சிவாஜி அவர்கள் நடித்த பாவமன்னிப்பு திரைப்படம் வரும் 24.04.2015 வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகளாக வெளியிடப்படுகிறது. முதன்முதலில் வெளியான மதுரை சென்ட்ரல் திரையரங்கில் சுமார் 50 வருடங்களுக்கு பிறகு வெளியாகும் பாவமன்னிப்பு படத்தை ரசிகர்கள் மட்டுமன்றி பொதுமக்களும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மதுரை சென்டரல் தியேட்டரில் போட்டோ கார்டு வைக்கப்பட்டது. அப்பொழுது சுமார் 20. 25 வயதுள்ள இளைஞர்கள் இந்த படம் என்று வருகிறது என்றும் அவசியம் பார்ப்போம் என்று சொன்னது மட்டுமன்றி தியேட்டரில் செப்டிக் டேங்க் வேலை பார்க்க வந்தவர்கள் பாவமன்னிப்பு திரைப்படம் பற்றி குறிப்பிட்டு அவசியம் வந்து பார்க்க வேண்டும் என்று கூறினார்கள். இத் திரைப்படம் மதுரை சிவாமூவீஸ் சார்பில் தமிழகம் முழுவதும் திரையிடும் உரிமை பெற்று முதலாவதாக மதுரையில்
வெளியிடப்படுகிறது.
பாவமன்னிப்பு திரைப்படத்தின் வால்போஸ்டர்கள் உங்கள் பார்வைக்கு முதன்முதலாக
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...e70f121ea02517
https://scontent-sin.xx.fbcdn.net/hp...16&oe=55DD02A3
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
திரு கோபால் - வார்த்தைகளில் வரும் உஷ்ணத்தையும் , பிரிவில் வரும் சோகத்தையும் சமீபத்தில் அனுபவித்தவர்களில் நானும் ஒருவன் - உங்கள் வலியை என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது - இழந்த இழப்பு என்றுமே ஈடு செய்ய முடியாத ஒன்று .
உங்களுக்கு மன நிம்மதியையும் , சாந்தியையும் தர , நான் நம்பும் இறைவனை ப்ராத்தனை செய்கின்றேன் .
தங்களுடைய வாழ்த்துக்கு நன்றி ராகவேந்தர் சார். நடிகர்திலகம்.காம் ஆண்டுவிழாவிற்கு அனைவரும் வாழ்த்து சொல்லி விட்டார்கள். நான் மட்டும் இன்னும் சொல்லவில்லை. காரணம், இன்னும் சில தினங்களில் நமது நடிகர்திலகம்.காம் 100000 பாா்வைகளை நெருங்க இருக்கிறது. அதற்கும் சேர்த்து தாங்கள் வியக்கும் வண்ணம் ஒரு அற்புதமான வீடியோ பதிவு காத்திருக்கிறது என்பதை நமது திரி நண்பர்களுக்கு தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
பாவமன்னிப்பு திரைப்படம் வரும் 24.04.2015 அன்று மதுரை சென்ட்ரல் திரையரங்கில்
https://scontent-mxp.xx.fbcdn.net/hp...cb&oe=55D3AF32
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
அன்பு இதயங்களே
பாவமன்னிப்பு திரைப்படம் வரும் 24.04.2015 அன்று மதுரை சென்ட்ரல் திரையரங்கில்
https://scontent-mxp.xx.fbcdn.net/hp...b4&oe=55A8F446
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
https://scontent-mxp.xx.fbcdn.net/hp...6b&oe=55A3599B
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
நண்பர் கலைவேந்தன் அவர்களே,
உங்கள் அழைப்பிற்கு நன்றி. நீங்கள் விரும்பிய எண்ணம் நிறைவேற சந்தர்ப்பங்கள் விரைவில் உருவாகட்டும்.
கோபால்,
எவரையும் சிவாஜியை இப்படி அழை அப்படி அழை என்று நிர்பந்திக்காதீர்கள். நண்பர் கேட்டது போல் உங்களால் அதே போல் அவர்களின் அபிமானத்துக்குரியவரை விளிக்க முடியுமா என்று யோசியுங்கள். எப்படி சட்டென்று உங்களால் முடியாதோ அதே போன்று அனைவருக்கும் சில மனத்தடைகள் இருக்கும். ஆகவே அது படிப்படியாக மெல்ல நீங்கட்டும். அதுவரை தொடர்புகள் தொடரட்டும்.
அன்புடன்
3 ஆண்டுகளுக்கு முன்பு சரியாக சொன்னால் 16.03.2012 அன்று பாவ மன்னிப்பு திரை காவியம் 51 வருடங்களை நிறைவு செய்தபோது அருமை நண்பர் சுவாமி அவர்கள் பாவ மன்னிப்பு 51 என்ற பெயரில் அற்புதமான பதிவு ஒன்றை செய்திருந்தார்.[அன்றைய தினம்தான் கர்ணன் டிஜிட்டல் வடிவில் மறு வெளியீடு கண்ட நாள்],
இப்போது காலத்தை வென்ற அந்த காவியம் மீண்டும் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் வெளியாவதை முன்னிட்டு அந்த பதிவிலிருந்து சில சில பாகங்களாய் பிரித்தெடுத்து மீள் பதிவு செய்யலாம் என்ற எண்ணத்திற்கேற்ப முதல் பாகம் இதோ வாசகர்களுக்காக.
பாவமன்னிப்பு 51
1. கதாநாயகனாக நடிகர் திலகம், கதையின் நாயகனாக நடிகவேள், அருமையான குணச்சித்திரங்களில் காதல் மன்னன், நடிகையர் திலகம், நடிகர் திலகத்தின் நாயகியாக தேவிகா மற்றும் வி.நாகையா,டி.எஸ்.பாலையா, எஸ்.வி.சுப்பையா, கலைமணி கொத்தமங்கலம் சுப்பு, எம்.வி.ராஜம்மா மற்றும் பலர் நடித்த புத்தா பிக்சர்ஸ் "பாவமன்னிப்பு", ஒரு பெரும் நட்சத்திரக் கூட்டம் நிறைந்த திரைக்காவியம்.
2. இக்காவியத்தின் கதையினை புத்தா பிக்சர்ஸ் குழுவினர் உருவாக்க அதற்கு வசனத்தை எம்.எஸ்.சோலைமலை எழுதினார். அதற்கு திரைக்கதை அமைத்து இயக்கியவர் ஏ.பீம்சிங். தனது ஸ்டூடியோவை படப்பிடிப்புக்கு அளித்ததோடு, படத்திற்கு ஃபைனான்ஸும் செய்த ஏவிஎம் நிறுவனத்துடன் கூட்டாக இக்காவியத்தை தயாரித்தார்கள் புத்தா பிக்சர்ஸ்.
3. "பாவமன்னிப்பு" கதையின் மூலக்கதாசிரியர் யார் தெரியுமா? நகைச்சுவை நடிகர் சந்திரபாபு தான். ஆச்சரியமாக இருக்கிறதல்லவா! எனினும் அதுதான் உண்மை. 1959-ம் வருடம் ஒரு நாள் பீம்சிங்கிடம் பேசிக் கொண்டிருந்த போது சந்திரபாபு, "அப்துல்லா" என்கின்ற தலைப்பில் தன் மனதில், ஏட்டில் புதைத்து, பதித்து வைத்திருந்த கதையை பீம்சிங்கிடம் கூறினார். ஒருவன் ஹிந்துவாகப் பிறந்து, ஒரு முஸ்லீமால் வளர்க்கப்பட்டு, ஒரு கிறிஸ்துவப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்வது போன்ற கதை அது. ஹீரோ "அப்துல்லா"வாக தான் நடித்து பீம்சிங் அப்படத்தை 'புத்தா பிக்சர்ஸ்' பேனரில் தயாரித்து, இயக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் சந்திரபாபு. பீம்சிங்கும் ஒப்புக் கொண்டார்.
4. "அப்துல்லா" படம் பூஜை போடப்பட்டு, படப்பிடிப்பும் தொடங்கியது. 2000 அடிகள் வரை படம் வளர்ந்திருந்த நிலையில், பீம்சிங் தனது நெருங்கிய நண்பரான ஏவிஎம். சரவணனிடம் எடுத்தவரை திரையிட்டுக் காட்டினார். 2000 அடி படத்தைப் பார்த்து முடித்த சரவணனிடம் பீம்சிங், "எடுத்தவரை எனக்கு திருப்தியில்லை. எவ்வளவு பண்ணியும் சரியா எதுவும் அமையவில்லை. பாபுவுக்கு இந்த ரோல் டூ மச். இந்தப் படத்தை தொடர்ந்து எடுப்பதாக இருந்தால் முதலிலிருந்து ரீஷுட் பண்ணனும். இல்லையேல் படத்தைக் கைவிட வேண்டியது தான்" என்று விரக்தியுடன் கூறினார். அதற்கு சரவணன், "இந்தக் கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நான் அப்பச்சி(ஏவிஎம்)யிடம் இது குறித்து பேசுகிறேன். நாம இந்த Projectஐ கூட்டாக சேர்ந்து செய்வோம்" என்றார். அப்பச்சியும் சம்மதம் தெரிவிக்க முதல் மாற்றமாக "அப்துல்லா", "பாவமன்னிப்பு" எனப் பெயர் மாறியது. இப்படத்தின் தயாரிப்பு நிர்வாகி (Production Executive) பொறுப்பினை ஏற்றார் ஏவிஎம். சரவணன்.
5. புத்தா பிக்சர்ஸ்-ஏவிஎம் கூட்டுத் தயாரிப்பு என்பதால் அடுத்த அதிரடி மாற்றமாக ஹீரோ மாற்றம் நிகழ்ந்தது. சந்திரபாபுவுக்கு இந்த ஹீரோ ரோல் குருவி தலையில் பனங்காய் என்பதால் அவருக்கு பதிலாக நடிகர் திலகம் ஒப்பந்தம் செய்யப்பட்டார். [அப்பேர்ப்பட்ட பாத்திரங்களிலெல்லாம் நமது திலகத்தை தவிர வேறு யார் நடிக்க முடியும்]. பின்னர் ஏனைய கதாபாத்திரங்களுக்கும் நடிக-நடிகையர் தேர்வு செய்யப்பட்டார்கள்.
6. "பாவமன்னிப்பு" திரைப்படத்தினுடைய பூஜை, 20.1.1960 புதனன்று போடப்பட்டு, படப்பிடிப்பும் நல்ல முறையில் தொடங்கியது. படத்திற்கான மொத்த பட்ஜெட் ரூ.11,00,000/- என கணக்கிடப்பட்டு, அந்தத் தொகையை ஏவிஎம் தருவதாகவும், வருகின்ற லாபத்தில் புத்தா பிக்சர்ஸுக்கும், ஏவிஎம்முக்கும் சரிபாதி என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
7. "பாவமன்னிப்பு" திரைக்காவியத்தில், கதாநாயகன் 'ரஹீம்' என்கின்ற இஸ்லாமிய இளைஞனின் கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறோம் என்று முடிவான உடனேயே சிவாஜி அவர்கள், பல முஸ்லீம் பெரியவர்களிடமும், அறிஞர்களிடமும், இளைஞர்களிடமும் இஸ்லாமிய மக்களின் நடை, உடை, பாவனை, பழக்கவழக்கங்கள் ஆகியவை குறித்து கேட்டு விசாரித்து ஒரு முதல் கட்ட Preparationஐ ஆரம்பித்து விட்டார்.
நன்றி பம்மல் R. சுவாமிநாதன்
(தொடரும்)
அன்புடன்
முரளி,
நான் எனது கருத்துக்களில் ஒளிவு மறைவு கொண்டவனல்ல. கலைவேந்தன் சொல்வதால் அல்லது நிர்பந்திப்பதால் எதையும் ,எக்காலத்திலும் ,என் மனதுக்கு ஒவ்வவே ஒன்றாத ஒன்றை செய்யவே மாட்டேன். நீங்களும் ,நானும் எப்போதுமே அந்த ரகமே.
நான் கலைவேந்தனை அவ்வாறு கேட்டதற்கு காரணம், அவர் நமது திரிக்கு வந்து ,நமது நண்பர்களுடன் இணக்கமாக விரும்பினார்.ஒற்றுமையை வலியுறுத்தினார். பரஸ்பர மரியாதையை வேண்டினார். அதனால்தான் நான் அந்த நிபந்தனையை வேண்டினேன். அவருக்கு நடிகர்திலகத்தின் நடிப்பு திறனை ஒப்பு கொள்வதில் எந்த தடையும் இல்லை என்று பலமுறை தெரிவித்துள்ளார்.
ஆனால் நீ இதை செய் ,நான் அதை செய்கிறேன் என்று சொல்வது, அவரின் செயலை கோபால் ஒருவரே தீர்மானிக்க முடியும் என்று தன்னுடைய பலவீனத்தை காட்டியுள்ளார். திரு. ரவி,திரு சிவாஜிசெந்தில்,திரு ராகவேந்திரன் போன்றோர் நல்ல முன்னுதாரணமாக நடந்தது அவருக்கு பொருட்டேயல்ல. அவர்களின் பிரிய தெய்வமான நடிகர்திலகத்தை பேர் சொல்லியே அழைப்பார். ஆனால் அவருடைய ரசிகர்களை பூனை குட்டி போல தடவி கொடுத்து ,தன்னுடைய வலையில் விரிப்பார் என்றால் ,அதனை ஏற்கும் நம் திரி நண்பர்களை பார்த்து ,வாழ்த்து தெரிவிப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும்? அவருடைய மதுர கானம்,அல்லது நமது திரிகளில் ஒப்புக்காவது ,நடிகர்திலகத்தின் படங்களை அல்லது நடிப்பை குறிக்கும் பதிவுகள் உண்டா? ஆனால் நமது ரசிகர்களை குறி வைத்து இந்திரன்,சந்திரன் என்று புகழும் பதிவுகள் உண்டு. இப்போது என்னிடம் நிபந்தனை..... வேடிக்கை.
இவர் எனது கணிப்பின் படி பத்திரிகையாளராக இருக்க வேண்டும்.(பதிவுகளில் ஒரு சாமர்த்தியம் தெரிகிறது).அப்படி இருக்கும் பட்சத்தில் இப்படி ஒருதலையாக வெறி எண்ணம் கொண்டவர்கள் ,அந்த தொழிலுக்கு நேர்மையாக இருக்க முடியுமா என்ற கேள்வி எழவே செய்கிறது.(நான் பத்திரிகையில் நுழையாததற்கு காரணம் என் இறுகிய உறுதியான முன் முடிவு எண்ணங்கள்)
திரு .ரவி,
தங்கள் ஆறுதல் வார்த்தைகளுக்கு நன்றி. நீங்கள் நடிகர்திலகம் திரியில் தொடர்ந்து பங்களியுங்கள். தங்கள் பதிவுகள் நிறைய பேரால் ரசிக்க படுகின்றன. எதிர்ப்புக்கு சுணங்காதீர்கள்.நீங்கள் ஒரு நல்ல நிர்வாகியாயிற்றே ?உங்களுக்கு தெரியாததா?புரியாததா? உங்கள் இதயத்திற்கு இதமான,நெருக்கமான இந்த திரியிலேயே தொடர்ந்து பங்களிக்கவும்.
அன்பு இதயங்களே,
என் சொந்த சோகத்தை பகிர்ந்த போது ,இத்தனை பேர் உடன் நின்றது எனக்கு மிக ஆறுதல். நான் சொந்தம் என்று மட்டும் துயர் அடையவில்லை. இறந்த குடும்பம் ,உண்மையிலேயே உன்னதமான நல்லவர்கள். வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள்.நான் மூன்று நான்கு நாட்களாக நடிகர்திலகம் படங்கள், எனக்கு பிடித்த மலையாள படங்கள் இவற்றிலே உழன்று ஆறுதல் தேடுகிறேன். (சமீபத்தில் எலிபத்தாயம்,எஸ்தப்பன்,முகாமுகம்,.ஜே .சி.டேனியல்) ஜெ.சி.டேனியல் நிஜமாகவே என் துக்கத்தை அதிகரித்து விட்டது. மேதைகளை புறம் தள்ளுவதில் இந்தியர்கள் ஒருங்கிணைந்தே செயலாற்றுகிறோம்.
எஸ்வி,
ஒரு நகைச்சுவைக்கு சொல்வதானால் , அனைத்து கிருஸ்துவர்களும் சாத்தானை நினைத்தே வாழ்பவர்கள். ஏனென்றால் தெய்வம் அளவு சாத்தானும் பைபிளில் பேச படுகிறது.
நான் விரும்பியது சினிமா, பத்திரிகை.
சினிமாவில் நான் நுழையாததற்கு காரணம் அந்த நாட்களில் சூழ்நிலை இன்று போல இல்லை. satellite சேனல்கள் தோன்றாத காலம். டாகுமெண்டரி கிலோ என்ன விலை என்ற காலம். ருத்ரையா போன்றோரின் சுணக்கம் ஒரு காரணம். என் கனவுகளை ,அன்றைய தமிழ் சினிமா தாங்கியிருக்க முடியாது.
பத்திரிகையாளனாக ஆவதற்கு எனக்கு நிறைய வாய்ப்புகள். ஆனால் , நான் இறுதியான ,உறுதியான, எண்ணங்கள் கொண்டவன் .யாருக்கும் எதற்கும் வளையாதவன். (பெற்றோர்கள்,முதலாளிகள் உட்பட).முக்கியமாக நேர்மையாளன்.
நான் ஒரு நடுநிலை பத்திரிகையாளனானால் , என்னால் எல்லா தரப்பு அரசியல் மற்றும் சினிமா வாசகர்களுக்கு ,பிரதிநிதியாக இயங்க முடியாது என்பதால் அதை தவிர்த்தவன். ஒரு பிரத்யேக அரசியல் சார்பு கொண்ட பத்திரிகையில், அல்லது ஒரு குறிப்பிட்ட நடிகர் சார்பான பத்திரிகையில் இயங்குவது போல , நடுநிலை பத்திரிகைகளில் செயல் படுவது ,மக்களுக்கு செய்யும் துரோகம்.அதை செய்ய விரும்பாததால், திறமை இருந்தும் ,ஆர்வம் இருந்தும் தவிர்த்தேன்.
கலை- நீங்கள் ஒரு பத்திரிகையாளராக இருக்கும் பட்சத்தில், ஒரு நடுநிலை பத்திரிகையில் இயங்கும் பட்சத்தில், உங்களை உங்கள் விருப்பங்களை மட்டுமல்ல , என்னை, முரளியை,ரவியை,ராகவேந்தரை,எங்கள் விருப்பங்களை சேர்ந்தே சுமக்கிறீர்கள் என்ற பொறுப்புணர்ச்சியுடன் இயங்கும் படி தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
பாவமன்னிப்பு - சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் , இந்த படத்தின் சாரம் தான் அது !
http://i818.photobucket.com/albums/z...psqdnxqqvl.jpg
https://fbcdn-sphotos-g-a.akamaihd.n...c483093a4c5332
https://scontent-sin.xx.fbcdn.net/hp...d4&oe=559F8865
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
இனிய நண்பர் திரு கோபால் சார்
உங்கள் இந்த பதிவில் உங்கள் எதிர்பார்ப்பில் உங்களுக்குள் ஒரு ஞாயம் இருக்கிறது என்பதுமட்டும் எனக்கு புரிகிறது.
மற்றபடி எனக்கு இப்படி ஒருவர் அழைக்கவேண்டும் என்பதில் பெரிய நம்பிக்கை இல்லை அது மரியாதை குரயாதபட்சத்தில். நானும் என்னுடைய பதிவில் திரு எம் ஜி ராமசந்திரன் அவர்கள் என்று அழைத்தால் அவர்களும் ஒன்றும் தவறாக நினைக்கபோவதில்லை. காரணம் நாம் "திரு" என்றும் ..."அவர்கள்" என்று மரியாதையாக தானே அழைக்கிறோம் என்ற காரணத்தால்.
தவறான தகவல், தவறான பதிவு இவை வரும்போது நாம் வாதாடுவதில் தவறில்லை என்று நினைக்கிறன். இன்று வந்திருக்கும் பதிவுகளில் கூட நமது ரசிகர் தரப்பில் அதை செய்தார்கள்...இப்படி செய்தார்கள்...நாம் பதிலடி கொடுத்தோம் என்ற முறையில் எழுதப்பட்டு உள்ளன...அது உண்மையா பொய்யா என்பது கூட நமக்கு தெரியாத பட்சத்தில்...அதனை நாம் உண்மையாக எடுத்துகொள்ளமுடியாது. காரணம் இரு ரசிகர்களுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் ! இருவரும் யோகியம் கிடையாது...எனும் பட்சத்தில் நடுநிலை யாரும் கடைக்பிடிக்கவும் முடியாது ..! நமது நம்பிக்கை நமக்கு ...அவர்கள் நம்பிக்கை அவர்களுக்கு...RAILWAY TRACK போல பயணிக்கும் அவ்வளவே !
ஒரு பதிவின் போக்கு....அது தொடங்கிய விதம்...அது தொடர்ந்துகொண்டிருக்கும் விதம்...அதில் புதைந்துள்ள பொருள்கள்...இவை கூட, திரை உலகில் இருக்கும்வரை வாங்கிகொண்டிருந்த நமது இதய தெய்வத்தின் ரசிகன் நாம்..இது கூட நாம் புரிந்துகொள்ளவில்லை என்றால்.......ஹ..ஹ...ஹ...!
எழுத்துக்களில் சாமர்த்தியம் - எது சாமர்த்தியம் என்பதை :-D - கூற நினைக்கும் நேரத்தில்... வசூல் ராஜா MBBS திரைபடபாடல் "கலக்கபோவது யாரு"....பாடலில் வரி நினைவிற்கு வருகிறது - "விழுவதுபோல விழுவேன் எந்தன் எதிரியின் சுகம் காண...
ஆகையால் நடப்பவை நல்லவையாக இருக்கட்டும், இருக்கும் என்ற நம்பிக்கையை மட்டும் கைவிடோம் !
RKS ! :smokesmile:
சாந்தி - பொன் விழா நிகழ்ச்சி - 1965- 2015 – Part I
சென்ற ஞாயிறன்று [ஏப்ரல் 12] நடைபெற்ற சாந்தி பொன் விழா கொண்டாட்ட நிகழ்ச்சியைப் பற்றி எழுத வேண்டும் என நினைத்திருக்க கடந்த 3,4 நாட்களாக திரியில் வேறு பல் விஷயங்கள் முக்கியத்துவம் பெற்று விட்டதால் எழுத முடியாமல் போனது. சாந்தி விழாவிற்கு போகும் முன் ஒரு சின்ன பிளாஷ்ஃபாக்
NT FANS என்ற நமது திரைப்பட appreciation association தொடங்கப்பட்டு அதன் மூலமாக மாதாமாதம் ஒரு நடிகர் திலகத்தின் படம் திரையிடப்படும் என அறிவித்தற்கு ஏற்ப கடந்த 40 மாதங்கள் அது வெற்றிகரமாக செயல்பட்டு வருவதை பெரும்பாலானோர் அறிந்திருக்கக் கூடும். அப்படி திரையிடும்போது 50 ஆண்டுகள் நிறைவு செய்த படங்கள், 60 ஆண்டுகள் நிறைவு செய்த படங்கள் போன்றவற்றை நாம் திரையிட்டு அந்த படத்தில் பங்கு பெற்றவர்கள் எவரேனும் இன்றைய நிலையில் விழாவில் கலந்துக் கொள்ளும் நிலையில் இருந்தால் அவர்களை அழைத்து கௌரவித்து அவர்களின் அந்த மலரும் நினைவுகளை கூறக் கேட்டு மகிழ்வது வழக்கம். .
பார்த்தால் பசி தீரும் படத்திலிருந்து ஆரம்பித்து நாளது தேதி வரை பல படங்களை திரையிட்டிருக்கிறோம். இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட அன்று AL S புரொடக்ஷன்ஸ் அதிபர் AL ஸ்ரீனிவாசன் அவர்களின் மருமகள் திருமதி ஜெயந்தி கண்ணப்பன் வந்திருந்தார். அவர்களின் சொந்த தயாரிப்பான செந்தாமரை படத்தின் டிவிடி இதுவரை வெளிவரவில்லை. அந்த படத்தின் பிரிண்ட் அல்லது நெகடிவ் அவர்களிடம் இருக்கிறதா என்று கேட்டபோது அவர்களிடம் இல்லை என்ற பதில் வ்ந்தது. ஆகவே அந்தப் படத்தை திரையிட முடியவில்லை
அதன் பிறகு சென்ற வருடம் 2014 மார்ச் மாதம் பச்சை விளக்கு திரைப்படத்தின் பொன் விழா கொண்டாட்டத்தின்போது அந்த விழாவிற்கு வந்திருந்து விழாவிற்கு பிறகு திரையிடப்பட்ட படத்தையும் பார்த்துவிட்டு சென்றார். அந்த நேரமே அவரிடம் சாந்தி படத்தைப் பற்றி நினைவூட்டினோம். நிச்சயமாக அதை கொண்டாடுவோம் என்று சொல்லி சென்றார்
2015 ஏப்ரல் மாத திரைப்படம் சாந்தி என்று முடிவானதும் சென்ற மார்ச் மாத இறுதியில் திருமதி ஜெயந்தி அவர்களை சந்திக்க சென்றோம். படத்தின் விழா கொண்டாடும்போது என்னென்னவெல்லாம் செய்ய போகிறார் என்பதை எங்களிடம் எடுத்துச் சொன்ன அவர் பழைய நாட்களின் பல சுவையான திரைப்பட உலக தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். நான்கு நாட்கள் கழித்து சந்திக்க சொன்ன அவர் அதற்கு முன் படத்தில் பணியாற்றிய பல கலைஞர்களையும் invite செய்து விடுகிறேன் என்று சொன்னார்.
அதன் பிறகு இரண்டு மூன்று முறை முயற்சித்தும் அவரை சந்திக்க முடியவில்லை. அவரது மகள் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நேரம் என்பதுதான் காரணம் என்பதை தெரிந்துக் கொண்டோம். அழைப்பிதழ் கிடைக்கப் பெற்றவுடன் விழாவன்று ஒரு சில பொருட்களை காட்சியாக வைக்கலாம் என்று சொல்லியிருந்தார். ஆனால் எவை எவை என்று சொல்லவில்லை.
விழாவன்று மாலை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே வந்துவிட்ட திருமதி ஜெயந்தி தான் கொண்டு வந்த சாந்தி திரைப்படம் சம்மந்தப்பட்ட பொருட்களை காட்சிக்கு வைத்தார். படத்தின் வருகிறது விளம்பரம் முதல் அனைத்து விளம்பரங்களையும் பிறகு படப்பிடிப்பின் இடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் எடுத்து வைத்த அவர், சாந்தி திரைப்படம் எடுக்கப்பட்ட Mitchelle (மிச்செல்) காமிராவையும் அங்கே கொண்டு வந்து காட்சிப் பொருளாக வைத்ததுதான் ஹைலைட். விழாவிற்கு வந்திருந்த அனைவர் கவனத்தையும் ஈர்த்த அந்த காமிராவோடு பலரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
ரஷ்யன் கலாச்சார மய்யத்தின் லாபியில் இவை காட்சிக்கு வைக்கப்பட சற்று நேரம் கழித்து உள்ளே அரங்கத்தினுள்ளில் விழா தொடங்கியது. சிறப்பு விருந்தினர்களான திருமதி ஜெயந்தி, ஆனந்த் தியேட்டர் அதிபர் உமாபதியின் புதல்வர் திரு கருணாகரன், லட்சிய நடிகர் எஸ்எஸ்ஆர் அவர்களின் துணைவியார் திருமதி தாமரை செல்வி அவர்கள், நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களின் புதல்வியார் திருமதி விஜயசாமுண்டீஸ்வரி ஆகியோர் மேடையில் அமர வைக்கப்பட்டனர்.
நமது அமைப்பின் சார்பில் படம் திரையிடும்போது அந்த படத்தின் சிறப்பம்சங்களையும் படம் தயாரிப்பில் இருந்தபோதும் வெளியானபோதும் இருந்த அன்றைய சமூக சூழல் போன்றவ்ற்றை பற்றிய ஒரு குறிப்பும் நமது வரவேற்புரையில் இடம் பெறும். அன்றும் அது போன்ற சுவையான தகவல்கள் அங்கே பகிர்ந்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் குறிப்பாக ஒரு சில தகவல்கள் சுவையானவை.
நடிகர் திலகம் அவர்களுடன் நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்கள் இணைந்து நடித்த கடைசி படம் சாந்தி.
மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்து இசையமைத்த கடைசி நடிகர் திலகத்தின் படம் சாந்தி.
லட்சிய நடிகர் எஸ்எஸ்ஆர் அவர்கள் நடிகர் திலகத்தின் படங்களில் ஒரு முக்கிய வேடம் தாங்கி நடித்த கடைசி படம் சாந்தி. [இதன் பிறகு எதிரொலி படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தாலும் அதில் எஸ்எஸ்ஆர் அவர்களுக்கு ஒரு சின்ன ரோல்தான்].
இந்த விஷயங்களையெல்லாம் குறிப்பிட்டு விட்டு சாந்தி திரைப்படத்திற்கு தணிக்கையில் ஏற்பட்ட சிக்கலை எடுத்துக் கூறினேன். படத்தின் கதையம்சம் காரணமாக வயது வந்தவர்களுக்கு மட்டும் என்ற A சர்டிபிகேட் கொடுக்கலாமா என்று தணிக்கை குழுவினர் யோசித்ததையும் அன்றைய நாட்களில் அப்படிப்பட்ட சான்றிதழ் வழங்கப்பட்டால் அது படத்திற்கு அதன் ஓட்டத்திற்கு முதுகெலும்பாக விளங்ககூடிய Family audience மற்றும் பெண்கள் ஆகியோரின் வருகையை பாதித்துவிடும் என்ற காரணத்தினால் revising கமிட்டிக்கு அனுப்பட்டதையும் அங்கே படத்திற்கு U சர்டிபிகேட் வழங்கப்பட்டதையும் அதன் காரணமாக 1965 ஏப்ரல் 10- ந் தேதி வெளியாகும் என்று விளம்பரம் செய்யப்பட்ட சாந்தி 12 நாட்கள் கழித்து ஏப்ரல் 22 அன்று வெளியானதையும் எடுத்துச் சொன்னேன். படம் வெளியான பிறகு அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததையும் படம் 100 நாட்கள் ஓடியதையும் எடுத்துச் சொன்னேன்.
இந்த வரவேற்புரை முடிந்தவுடன் திருமதி ஜெயந்தி கண்ணப்பன் பேச வந்தார்.
(தொடரும்)
அன்புடன்.
Dear Shri. Gopal,
Saddened to note the sudden and untimely demise of your relatives.
Though belated, my heartfelt condolences.
R. Parthasarathy
கோபால்,
உங்கள் குடும்பத்தில் நேர்ந்த பெருந்துயருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
வெகு காலமாக உங்களிடம் சொல்லி வருவது தான் .நடிகர் திலகம் பற்றிய உங்கள் எழுத்துகள் இன்னும் பல தளங்களில் அறியப்பட தகுதியுள்ளவை . அந்தவகையில் , பெரும்பாலும் வெகு சில நடிகர் திலகம் ரசிகர்களும் , மைய உறுப்பினர்களும் வந்து போகும் இந்த திரியில் நீங்கள் எழுதும் ஆய்வுகளை , பதிவுகளை வலைப்பதிவு (blog) மற்றும் முகநூலில் பதிந்து இன்னும் அதிகமானவர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் எழுதி வரும் அறிவுஜீவிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் , உலக சினிமா ரசிகர்கள் என தங்களை கூறிக்கொள்பவர்கள் பொதுவாக நடிகர் திலகம் நம்மூர் கலைஞன் என்பதாலேயே , அவரை புகழ்ந்தால் தங்களை பாமரராக எண்ணி விடுவார்ர்களோ என நினைத்து போலித்தனமாக நடிகர் திலகத்தை குறித்து மதிப்பிட்டு எழுது வருவதை பரவலாக்க பார்க்க முடிகிறது .
அதற்கு காரணம் , உங்களைப் போன்ற தரமான ஆய்வுகளை எழுதுபவர்கள் அந்த தளங்களில் நடிகர் திலகத்தின் பெருமையை பதிவு செய்வதில்லை .
'உலக சினிமா ரசிகன்' என்ற பெயரில் முகநூலில் இயங்கி வரும் ஒருவர் நடிகர் திலகம் ரசிகர் (அவர் இந்த மன்றத்தில் இருக்கிறாரா தெரியவில்லை) பரவலாக நடிகர் திலகத்தின் சிறப்புகளை பதிந்து வருகிறார் .உங்களைப் போல பலரும் அது போல வர வேண்டும் என விரும்புகிறேன்.
ஆவன செய்வீர்கள் என நம்புகிறேன்.
சமீபத்தில் கல்யாண் ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடை திறப்புவிழா குறித்த விளம்பரங்கள் சமூக ஊடகங்களில் பரவலான கவனிப்பை பெற்றன.
இந்த விளம்பரம் வெளிநாடுகளில் வராததால் தொலைக்காட்சியில் பார்க்க முடியவில்லை .ஆனால் இந்த விளம்ம்பரம் குறித்து பல்வேறு நக்கல் நையாண்டிகளை பரவலாக காண முடிந்தது .
பின்னர் யூடியூப் மூலம் அந்த விளம்பரத்தை பார்க்க முடிந்தது .. அபிதாப் , பிரபு , விக்ரம் பிரபு பங்கு பெறும் அந்த விளம்பரத்தில் அமிதாப் வேட்டி கட்டியிருப்பதைப் பார்த்து விக்ரம் பிரபு "நீங்க பார்க்க சிவாஜி தாத்தா மாதிரியே " இருக்கீங்க என குறிப்பிடுகிறார் .
ஒரு முறை பார்க்கும் போது எனக்கு இதில் நக்கல் நையாண்டி செய்ய எதுவுமிருப்பதாக தெரியவில்லை .ஆனால் இந்த விளம்பரங்கள் அளவுக்கதிகமாக காட்டப்பட்டதால் என்னவோ பலர் எரிச்சல் அடைந்ததாக குறிப்பிட்டார்கள் .
அது போக பிரபு அவர்கள் இந்த விளம்பரத்திலும் அந்த நிறுவனம் சார்ர்ந்த காரியங்களிலும் அளவுக்கதிகமான ஈடுபாடு காட்டியதாக , சிவாஜியின் பெயரை சொந்த வணிக நோக்கங்களுக்கு பயன்படுத்துவது குறித்த விமர்சனங்களை பார்க்க முடிந்தது .
இது சிவாஜிக்கு பெருமையா இல்லையா என எனக்கு தெரியவில்லை .ஆனால் பொதுத்தளத்தில் பார்த்ததை இங்கு பகிர்ந்து கொள்ளவே இதை பகிர்கிறேன்.
புரிதலுக்கு நன்றி திரு.முரளி. நீங்கள் கூறியுள்ளபடி, சந்தர்ப்பங்கள் விரைவில் உருவாக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
கடந்த 15ம் தேதி திரு.ஆர்.கே.எஸ்.அவர்களுக்கு அளித்த பதிலில், ‘சவாலே சமாளி படத்தில் ‘நடிகர் திலகம்’ திரு.சிவாஜி கணேசன் அவர்கள் பாடும் நிலவைப் பார்த்து வானம் சொன்னது ... பாடல்....’ என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன்.(107ம் பக்கத்தில் 1062ம் பதிவு)
நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்களை, நடிகர் திலகம் என்ற பட்டத்துடன் அழைப்பதில் எங்களுக்கு ஒன்றும் ஒவ்வாமை இல்லை. திரு.சைலேஷ் பாசு, திரு.எஸ்.வி. போன்றோரும் அப்படியே அழைப்பவர்கள். திரு.செல்வகுமார் அவர்கள் ....மறைதிரு.... என்று குறிப்பிடுவார். இனி வரும் பதிவுகளில் ‘நடிகர் திலகம்’ என்ற பட்டத்தை நிச்சயம் சேர்த்துக் கொள்கிறேன். நன்றி.
திரு.கோபால்,
நீங்கள் வேண்டுகோள் விடுத்தீர்கள். நானும் வேண்டுகோள்தான் விடுத்தேன். அது நிபந்தனை அல்ல. திரு.முரளியும், திரு.ஆர்.கே.எஸ்.சும் கூறியதைப் போல அது அவரவர் விருப்பம். மக்கள் திலகத்தை நீங்கள் மரியாதைக் குறைவாக விமர்சிக்காத வரையில் எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Dear Sir,
Am extremely sorry for our heated exchanges few days back.
It just happened without any intention. Sorry about that !
Even I too received many such comments in my whatsapp with reference to Kalyan Jewellers Ad.
Many mockery images on Kalyan ad especially targetting Prabhu and Vikram Prabu was circulated through Whatsapp messenger without even understanding the concept of the advertisement.
I too responded to those mentioning Had the advertisement had Super Stars, Super Actors, Thalais Thalapathis the messages would be " Thalaivar Rocks ! Thala Rocks ! Puli takes chennai by storm etc., etc., Because, it is Prabhu and Vikram Prabhu with Amitabh, they were unable to digest it - a reflection of Vayitherichals and nothing else..!
Mr.Prabhu is getting paid for this branding and being a professional's son, he is working his best for what he is remunerated. There is nothing wrong in that is what my view is.
Most of our people do not like to work for what they are paid especially in Tamilnadu and they would claim more rights and privileges than working for what they are paid. That has become habit too.
Further more, it was not even a coke or pepsi ad or a liquor ad...which people welcome with red carpet of their favourite stars..!
Anyways, just sharing my views of the same types received in my pages of SN sites.
Regards
RKS