-
தமிழ் திரைப்பட உலகத்தின் பொற்காலம்-2
இந்தக் குழுவின் ஆலோசனைகளை அப்போது இருந்த தி.மு.க. அரசாங்கம் அதன் பிறகு வந்த குடிஅரசுத் தலைவரின் ஆட்சியில் ஆளுநர் திரு. மோகன்லால் சுகாதியாவும், இவைகளை ஏற்றுச் செயல்ய படுத்தவில்லை. இங்கு முக்அ கியமாகக் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று திரு.எம்.ஜி.ஆர் . அப்போது முதல் அமைச்சராக இல்லாது இருந்தாலும் அப்போதே ஆளுநர் திரு.சுகாதியா அவர்களைச் சந்தித்து ஒருங்கிணைந்தவரி ( Compounding Tax ) விதிக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தியது ஆகும். இருந்த போதும் இந்தக் குழுவின் பரிந்துரைகள் ஆலோசிக்கப்பட்டு ஏற்கவோ செயல்படுத்தப்படவோ இல்லை . ஆனாலும் திரைப்பட உலகம் மீண்டும் மீண்டும் பலமுறை இதனைச் படுத்த வலியுறுத்திக்கொண்டே வந்தது.
தென்னகத் திரைவானில் மங்காது ஒளிவீசும் நட்சத்திரமான திரு.எம்.ஜி . ஆர். முதல்வரானதும் அவரது அ . தி . மு . க . அரசு பதவி ஏற்றதும்- திரைப்பட உலகின் எல்லாவிதமான துன்பங்களை - பிரச்னைகளை நன்கு உணர்ந்திருந்த முதல்வர் தமிழ்ப் பட உலகின் இந்தப் பிரச்சினை களைக் கவனித்து அதன்மீது நட வடிக்கை எடுக்க ஆரம்பித்தார்.
கலைவாணர் அரங்கில் 1977 அக்டோபர் முதல் நாள் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் முதல்வர் திரு.எம்.ஜி.ஆர். குறிப்பிட்டார்:
"அரசும் தன் வரி வருமானத்தை இழக்காமல், திரைப்படத்துறையும் அதிகமான வரித் தொல்லைகளுக்கு ஆளாகாமல் இருக்கும் வண்ணம் ஒருங்கிணைந்த வரி ( Compounding Tax ) முறை விரைவில் செயல்படுத்தப்படும்"' என்பதாகும்.
தமிழ்த் திரைப்படத் துறையினை நல்லதொரு நிலைக்கு உயர்த்திடவும் இழந்துவிட்ட பொலிவினை மீண்டும் பெற்றிடச் செய்திடவும் தன்னால் இயன்ற அளவுக்குப் பாடுபடுவதாக முதல்வர் அவர்கள் உறுதி கூறினார்.
அவரது உறுதியினைச் செய்லாக்கிடும் விதத்தில் 1977 - ஆம் ஆண்டு டிசம்பர் 26 - ஆம் நாள் முதல் " ஒட்டுமொத்த வரி"அல்லது "ஒருங்கிணைந்த வரி"' ' யாக வசூல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஏற்கெனவே ஆலோசனைக் குழுவின் பரிந்துரை பஞ்சாயத்து கிராமங்கள் வரை ஒருங்கிணைந்தவரி முறை அமலாக்கப் படவேண்டும் என்றிருந்த போதும் இந்தப் புதிய ஒருங்கிணைந்த வரி முறை இரண்டா வது நிலை ( Second Grade ) நகராட்சிகள் உள்ள ஊர்கள் வரை சுமார் 1,200 திரை அரங்குகளிலும் அமலாக்கப்பட்டது. இந்தப் புதிய வரி முறைக்கு உட்படாத சுமார் 3001 திரை அரங்குகள் முதல் நிலை நகராட்சிகள் மேலும் மாநகராட்சிகள் உள்ள பெரிய நகரங்களில் உள்ளவையாகும் . மற்ற இடங்களில் செயல்படும் முறையினை நன்கு ஆராய்ந்த பின்னர் இந்த ஊர்களிலும் புதிய வரி முறை செயல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்தது.
புதிய வரிவிதிப்பின் மாற்றத் தினால், நலிந்திருந்த தமிழ்த் திரைப்பட உலகம் புத்துணர்ச்சி பெற்று ஒளிர்ந்து வலிவுற்று வளம் பெற ஆரம்பித்தது.
திரு. டி.ராமனுகம்
பொது செயலாளர்,
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்.
தொடரும்.........SB...
-
இந்த வாரம் தனியார் தொலைக்காட்சியில் மக்கள் திலகத்தின் திரைக் காவியங்கள்:
1 ) 27-10-2020 பகல் 11 மணிக்கு சன் லைபில் - குடியிருந்த கோவில்.
2) 29-10-2020 இரவு 10 மணிக்கு ஜெயா மூவீஸ் - இதயவீணை
3) 30-10-2020 பிற்பகல் 1.30 மணிக்கு வசந்த் டிவியில் - புதிய பூமி
4) 31 - 10- 2020 பிற்பகல் 1.30 மணிக்கு ராஜ் டிவியில் அலிபாபாவும் 40 திருடர்களும்
5) 01-11-2020 காலை 09.30 மணிக்கு வசந்த் டிவியில் நீரும் நெருப்பும் - ஆகிய திரைப்படங்களை கண்டு மகிழவும் - முதல் தகவல் மதுரை ராமகிருஷ்ணன்( இவை தவிர ஒவ்வொரு நாளுக்கும் முன்தினம்தான் மெகா உள்ளிட்ட மேலும் பல டிவிகளில் தலைவர் படங்கள் ஒளிபரப்புவது தெரியவரும். எனவே கூடுதல் தகவல் அன்றன்று பதிவிடப்படும்)...rk...
-
தமிழ் திரைப்பட உலகத்தின் பொற்காலம்-3
பொறுமையாக படிக்கவும் அனைத்தும் முக்கியமானவை!
1978 ஜனவரி முதல் தேதிக்குப் பிறகு ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் இருந்த ஆண்டுக்கு 50 படம் என்பது 150 என்று உயர ஆரம்பித்தது. 700 டூரிங் அரங்குகள் என்றிருந்த நிலை 1,000 - க்கு மேல் என்ற அளவுக்கு இன்று வளர்ந்துள்ளது . இந்தத் துறையிலிருந்து வரும் வருமானம் மீண் டும் இந்தத் தொழிலிலேயே முதலீடு செய்யப்பட்டது.
குறிப்பிட்ட பகுதிக்குக் குறிப்பிட்ட தொகையினைக் கொண்டு பட விநியோக உரிமை பெற்று வந்த விநியோகஸ்தர்கள் கொடுத்து வாங்கிய விலையினைப் போலத் தற்போது இரண்டு மடங்கு கொடுத்துப் படங்களும் அதிகம் வாங்கும் அளவுக்கு அவர்கள் நிலை உயர்ந்துள்ளது.
நடிக நடிகையர்கனிடம் 1978 ஜனவரிக்கு முன் "இனாமாக" தயாரிப்பாளர்கள் கால்ஷீட்டுகள் பெற்றார்கள் என்ற நிலை முற்றிலும் மாறி தற்போது எல்லா நடிக நடிகையரும் ஒரு நாளில் ஒரு படப்பிடிப்புக்குச் சில மணி நேரங்களே ஒதுக்கித்தர இயலும் என்ற அளவுக்கு மிகவும் சுறுசுறுப்பு அடைந்து ஓய்வின்றி உள்ளனர். பட உலகின் எந்தப் பிரிவிலும் கதவடைப்போ, வேலை நிறுத்தமோ ஏற்பட வில்லை. நாள் முழுதும் ஓயாது பல மணி நேரம் எல்லாப் பிரிவினரும் சுறுசுறுப்பாகப் பணியாற்றி வருகின்றனர்.
புதிய பல குறிப்பிடப்பட வேண்டிய நல்ல மாறுதல்கள் அடைவதற்குக் காரணமாக இருந்த " ஒருங்கிணைந்த வரி"' முறையினால் இன்னும் புதிய நன்மைகளும் கூட விளைந் துள்ளன.
(1) வரி ஏய்ப்பு நடை பெறவில்லை.
(2) வரி ஏய்ப் பினைக் கண்டுபிடிக்க அரசு செலவு செய்து வந்த தொகை முழுதும் தற்போது அரசுக்கு மிஞ்சுகிறது.
(3) அரசுக்கு ஏற்கெனவே கிடைத்து வந்த வரித் தொகை எந்த வகையிலும் குறையவில்லை.
(4) அரங்க உரிமையாளர்கள் வாரத் துக்கு 21 காட்சிகள் என்பதற்குப் பதில் 28 காட்சிகள் நடத்த அனு மதிக்கப்பட்டுள்ளனர்.
(5) வணிக வரி நிர்ணயிப்பதையும், செலுத்து திரை வதையும் பற்றி அஞ்சிக் கொண்டிருந்த நிலை இப்போது இல்லை!
தற்போது ஒரு திரை அரங்கின் 21 காட்சிகளுக்கு ஆகும் மொத்த வசூல் தகுதி என்னவோ அதில் இத்தனை சதவீதம் "ஒருங் கிணைந்த வரி"' யாக கட்டாயம் வாராவாரம் செலுத்திட வேண்டும் என்றும் எஞ்சியுள்ள காட்சி களுக்கு வரி செலுத்திட வேண் டிய அவசியம் இல்லை, என்பதனால் அதில் வரும் தொகை திரை அரங்க உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள் - ஏன் திரைப்படத் தயாரிப்பாளர் படப்பிடிப்பு நிலைய உரிமையாளர் என்று எல்லோருக்குமே பயன் படுகிறது.
படங்கள் நல்ல வகுலுடன் ஓடி விநியோகஸ்தர்களுக்கு அதிக வருமானம் வரும்போது அவர்கள் தயாரிப்பாளர்களுக்கு அதிகத் தொகை கொடுக்க முன் வருவதும், தயாரிப்பாளர்கள் நடிக நடிகையர்களுக்கு அதிகத் தொகை கொடுக்க ஒப்புக் கொள்ளுவதும் இயற்கையே. இந்த ஒருங்கிணைந்த வரி முறை என்பது ஆலோசனைக் குழுவினரால் நன்கு தீவிரமாகப் பகுத்து, அலசி ஆராயப்பட்ட ஒன்று ஆகும். எத்தனைச சதவீதம் வரி விதிக்கலாம் என்ன முறையில் விதிக்கலாம் என்பதனைக் கீழ்க்கண்டவாறு அறியலாம்.
ஒரு பகுதியில் எத்தனை அரங்கங்கள் உள்ளன அதன் வசூல் நிலைமை ஒரு ஆண்டுக்கு எவ்வளவு என்பதனை ஆய்ந்து அந்த ஒரு ஆண்டுக்காலத்திற்குச் செலுத்தப்பட்டுள்ள கேளிக்கை வரி என்ன என்பதனைக்கொண்டு வகுத்து முடிவு செய்யப்படவேண்டும் என்பதாகும்.
உதாரணத்துக்கு ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஒரு திரை அரங்கின் ஒரு ஆண்டின் மொத்த வசூல் 10 ஆயிரம் ரூபாய் ஆகவும் அதே ஒரு ஆண்டில் செலுத்தப்பட்டுள்ள கேளிக்கை வரி ஆயிரம் ரூபாயாகவும் இருந்தால் அந்தத் திரை அரங்கம் செலுத்தப்பட வேண்டிய வரி பத்து சதவீதம் என்ற அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது.
இந்த முறையினால் தற்போது திரை உலகம் வளர்ச்சியும் வலிவும் பெற்றுள்ளது. திரை உலகின் அனுபவம் நிறைந்த திரு.எம்.ஜி.ஆர். அவர்களின் திறமைமிக்க வழிகாட்டும் தன்மையினாலும், அவரது திறமைமிக்க தளபதி திரு இராம.வீரப்பன் அவர்களின் ஒத்துழைப்பாலும் தற்சமயம் தமிழ்ப்பட உலகம் செழிப்புற்று வருகிறது. முதல்வர் அவர்களைப் போலவே திரு.வீரப்பன் அவர்களும் இத்துறையின் துன்பங்களை நன்கு அறிந்துள்ள கடுமையானதொரு உழைப்பாளி ஆவார்.
திரையரங்குகள் கட்டுவதற்கான கடுமையான விதிமுறைகளை அவர் வெகுவாகத் தளர்த்தியுள்ளார். இதனால், புதிய திரை அரங்கங்கள் கட்டப்பட்டன. கட்டப்பட்டு வருகின்றன. கடந்த 10 மாத காலத்தில் 300-400 டூரிங் அரங்குகள் புதியதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. எத்தனையோ பல நன்மைகளைத் திரை உலகுக்கு செய்துள்ள அண்ணா தி.மு.க. அரசு இன்னும் பல புதிய நன்மைகளைத் தமிழ்ப்பட உலகம் பெற்றிட வேண்டும் என்று பாடுபடுகிறது என்ற உண்மை - திரை உலகில் உள்ள எல்லோருமே அறிந்த ஒன்று.
தமிழ்ப்பட உலகும் நன்றி உணர்வோடு அரசின் நடவடிக் கைகளை நோக்கி வருவதுடன் எப்போதும் அரசு செய்யும் பல நல்ல காரியங்களுக்கு உறவுக் கரங்கள் நீட்டக் காத்திருக்கிறது..........sb...
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*21/10/20 அன்று அளித்த*தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------------------------
சகாப்தம் நிகழ்ச்சி என்பது தமிழக வரலாற்றில் அந்த மூன்றெழுத்து மந்திரமான எம்.ஜி.ஆர். என்கிற மகோன்னதமான மாமனிதரை கடந்து போக முடியாது என்கிற முக்கியத்துவம் வாய்ந்த அந்த மன்னாதி மன்னன் , மக்கள் மனதில் ஆழமாக வீற்றிருக்கின்ற அந்த ராஜராஜனின் வாழ்க்கை வரலாறை அயராமல் பேசிக் கொண்டு இருக்கிறோம் . 1982ல் சத்துணவு திட்டத்தை முதல்வர் எம்.ஜி.ஆர். துவக்கி வைக்கிறார் .இந்த திட்டத்தை துரிதமாக துவக்கி வைக்க எப்படி உங்களுக்கு யோசனை தோன்றியது என்று நிருபர்கள் கேட்க, பதிலுக்கு நான் சிவகாசி அருகே நடந்த ஒரு விபத்தை பற்றி விசாரிக்க சென்றிருந்தேன் அந்த விபத்தில் சிக்கி* காயமடைந்த மக்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு திரும்பும்போது, ஒரு இடத்தில வயல்வெளியில் பணியில் இருந்த பெண்கள் எனது காரை பார்த்ததும் தங்கள் கைகளில் தவழ்ந்த குழந்தைகளுடன் ஓடிவந்து கொண்டிருந்தனர் .அதை கண்டநான் காரை நிறுத்த சொன்னேன் என்றார் எம்.ஜி.ஆர். அப்போது மாலை 4.30மணி இருக்கும். அவர்களிடம் நீங்கள் எல்லாம் மதிய உணவு சாப்பீட்டீர்களா ,உங்கள் குழந்தைகள் சாப்பிட்டார்களா என்று கேட்டேன் .இல்லை.ஐயா, நாங்கள் காட்டில் வேலை செய்துவிட்டு கூலி வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்றுதான் சமைத்து சாப்பிடுவோம் என்றனர் குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்தீர்களா என்று* கேட்டதற்கு இல்லை.அவர்களும் எங்களுடன் பட்டினிதான் கிடப்பார்கள் .வீட்டிற்கு சென்றுதான் அவர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்றனர் .அன்றுதான் எம்.ஜி.ஆர். முடிவெடுத்தார் . எப்பாடு பட்டாவது அரசு சார்பில் ஒருவேளையாவது குழந்தைகளுக்கு உணவளிக்க ஏற்பாடு செய்வது என்று .அதன்படி திரை உலகை சார்ந்த நடிகர் நடிகைகள் மூலம் கலை நிகழ்ச்சிகள்,*நட்சத்திர இரவு போன்ற நிகழ்ச்சிகள் மூலம் நிதி திரட்டி இந்த திட்டத்தை துவக்கினார் .இதனால் பல கோடி குழந்தைகள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து வந்தனர் என்று திருச்சி அருகில் உள்ள பாப்பாக்குறிச்சி என்கிற இடத்தில நிருபர்களுக்கு எம்.ஜி.ஆர். பேட்டி அளித்தார் .
மதுரையில் ஒரு முறை அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற மாநாட்டை எம்.ஜி.ஆர். நடத்தினார் .* அந்த மாநாட்டின் ஊர்வலத்தை பார்வையிட தமுக்கம் மைதானத்தில் ஒரு மேடை அமைக்க சொல்லி அங்கிருந்து அந்த ஊர்வலத்தை பார்வையிடுகிறார் .* அந்த மேடையில் எம்.ஜி.ஆர். ஏறும்போது , மேடைக்கு பின்புறம் 70 வயதான ஒரு மூதாட்டி ஒரு பானையில் மோர் கொண்டுவந்து*விற்று கொண்டிருக்கிறார் .அதை பார்த்துவிட்டு இருக்கையில் அமர்கிறார் எம்.ஜி.ஆர். சிறிதுநேரம் ஊர்வலத்தினரை பார்த்து கையசைத்து விட்டு பின்புறம் திரும்பி பார்க்கும்போது அந்த வயதான மூதாட்டியை காணவில்லை . மறுபடியும் சிறிது நேரம் ஊர்வலத்தினரை பார்த்து கையசைத்துவிட்டு ,சில நிமிடங்கள் கழித்து மேடையின் பின்புறம் திரும்பி பார்க்கிறார் . இதை கவனித்த அரசு* அதிகாரி ,எம்.ஜி .ஆரிடம் என்ன விஷயம்.அடிக்கடி பின்புறம் திரும்பி பார்த்த வண்ணம் இருக்கிறீர்கள் .ஏதாவது பிரச்னையா, நான் விசாரிக்கட்டுமா எனும்போது ,ஒன்றுமில்லை ,மேடையின் பின்புறம் ஒரு வயதான மூதாட்டி பானையில் மோர் விற்று கொண்டிருந்தார் .அவரை திடீரென்று காணவில்லை*அவரை கொஞ்சம் தேடி பார்க்க சொல்லுங்கள் என்றார் . அந்த அதிகாரி ,கீழே உள்ள காவல்துறை அதிகாரியிடம் சொல்லி*தேடி பார்த்து மேடைக்கு அழைத்து வருகின்றனர் .* மேடைக்கு வந்ததும் எம்.ஜி.ஆர். தன் ஜிப்பாவில் இருந்து கட்டு கட்டாக*.பணத்தை*அள்ளி அந்த மூதாட்டியின் கைகளில் கொடுத்து*ஏதாவது கடை வைத்து பிழைத்த கொள்ளுங்கள் என்று கைகள் நிறைய அள்ளி கொடுத்தாராம் . அப்படி பாவப்பட்ட மனிதர்கள் , விளிம்பு நிலை மனிதர்கள் ,சொந்த உழைப்பினால் முன்னுக்கு வருபவர்கள் போன்றவர்களை தேடி பிடித்து உதவிகள் செய்கிற மனோபாவம் எம்.ஜி.ஆருக்கு*இருந்தது*என்பதற்கு இந்த சம்பவமே ஒரு உதாரணம் இதை பலரும் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார்கள் .**
திரு.கா. லியாகத் அலிகான்*:* சமீபத்தில் நீங்கள் பேசியது*போல ,ராஜா தேசிங்கு படத்தில்*வரும் ஆதி கடவுள் ஒன்றேதான் அதில் பேதம் கிடையாது என்ற பாடலில் தனது*சிந்தனையை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வெளிப்படுத்தி இருக்கிறார் .என்னுடன் சம்பந்தப்பட்ட விஷயம் ஒன்றை குறிப்பிடவேண்டும் என்றால் உடுமலைபேட்டையில் எனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கலந்துகொள்ள இருந்தபோது ,நான் என் மனைவியுடன் திருமண வரவேற்பு மேடைக்கு*செல்ல வேண்டும் என்று எனது பெற்றோர்களிடம் வேண்டுகோள் வைத்தபோது*,நமது மத*கோட்பாடில்*அப்படி ஒரு வழக்கம் கிடையாது என்று மறுப்பு தெரிவித்தார்கள் .பின்னர் ஜமாத்காரர்கள் தெரிவித்த*கருத்துக்களின்படி மணமக்கள் வரவேற்பு மேடையில் அமர்வது*அவ்வளவு சரியாக,நன்றாக இருக்காது என்றனர் .இந்த கருத்துக்கள், எதிர்ப்புகளை எல்லாம் மீறி , நான் மணமகளை அழைத்து கொண்டு*தாஜ்*திரையரங்கிற்கு நேராக வந்துவிட்டேன் .இதை கண்ட*எனது தந்தை மிகவும் வேதனை அடைந்து, நீ மணமகளுடன் வரவேற்பு மேடையில் அமருவதைவிட ,உரிமையாளர் அலுவலகத்தில் மணமகளை*அமரவைத்துவிட்டு எம்.ஜி.ஆர். அவர்களை வரவழைத்து ஆசீர்வாதம் வாங்கிக்கொள்/வேண்டுமானால் நீ தலைவர் எம்.ஜி.ஆரிடம் கேள்.*,அவர் விருப்பப்பட்டால் மேடையில்*மணமகளை*அமரவை*.எனக்கு ஒன்றும் ஆட்செபனை இல்லை.* .*நமது*ஜமாத்காரர்கள் விருப்பத்திற்கு மாறாக நடந்து கொள்வது நமது பாரம்பரியத்திற்கு,குடும்பத்திற்கு நல்லதல்ல, எதற்கும் யோசித்து முடிவு எடு**என்றார் .அதன்படி*சிறிது நேரம் யோசித்து ,மணமகளை*உரிமையாளர் அலுவலகத்தில் அமரவைத்து விட்டு ,நான் வரவேற்பு மேடையில்*சென்று அமர்ந்தேன் . சற்று நேரத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.*திருமண மண்டபத்திற்கு காரில் வந்து இறங்கினார் . என்னை பார்த்தவுடன்*காதில் சாந்தி முகூர்த்தம் முடிந்துவிட்டதா என்று மெதுவான குரலில்*கேட்டார் .இந்த கேள்வியில் இருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம் என்னுடன் எந்த அளவு*நட்பும், பாசமும், அன்பும் புரட்சி தலைவர் எம்.ஜி..ஆர் வைத்திருந்தார் என்பதை .*இல்லை அண்ணா என்று சொன்னதும், என் தோளின்மீது கையை போட்டு அன்பாக*தட்டி கொடுத்து,பின்னர் அவருடைய இருக்கையில் அமர்ந்துவிட்டு ,மணமகள் எங்கு இருக்கிறார் என்று கேட்டார் .நான் விஷயத்தை விவரமாக கூறினேன் .* மணமகள் அருகில்தான் இருக்கிறார். அண்ணன் உத்தரவிட்டால் நான் மேடைக்கு அழைத்து வருகிறேன் என்றேன் .* அவர் வேண்டாம் என்று சொன்னார் .மணமகளை மேடையில்*இருக்கையில் அமர செய்வதை உன் பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை என்கிறாய். ஜமாத்காரர்களுக்கும் அதில் விருப்பமில்லை .எனவே இஸ்லாம் மத கோட்பாடின்படி ,நாம் நடந்து கொள்வது எப்போதும் நல்லது .இல்லையென்றால் உன்னையும், உன் மனைவியையும்*குறை சொல்லி*பின்னர் பேசுவார்கள். அதற்கு இடம் தரவேண்டாம்*.என்று சொல்லி ,என்னையும், என் மனைவியையும் வாழ்த்தி சுமார்*35 நிமிடங்கள்*மேடையில் இருந்தபடி பேசினார் .அப்போதுதான்*புரட்சி தலைவர் ஒரு சட்டத்தை இயற்றுவது பற்றி பேசினார் .அவர் பேசும் சமயம்*ஒருவர் குடித்துவிட்டு, அவரை பார்த்து இருகரம் கூப்பி*வணக்கம் வைத்தபடி இருந்தார் .ஒருமுறை எம்.ஜி.ஆர். வணக்கம் சொன்னார். சில நிமிடங்களில் மீண்டும் வணக்கம் வைத்தார் .அதற்கும் பதில் வணக்கம் சொன்னார் எம்.ஜி.ஆர். சிறிது நேரம் கழித்து மூன்றாவது முறையாக* வணக்கம் தெரிவித்தபோது அவர் குடி த்துள்ளார் என்று எம்.ஜி.ஆர்.கண்டுபிடித்துவிட்டார் .இந்தமுறை வணக்கம் தெரிவிக்காமல் தொடர்ந்து பேசிக்கொண்டே*இருக்கிறார் .அப்போது ஒரு சட்டத்தை பற்றி விளக்கமாக பேசினார் .தமிழக அரசு இது போல தன்னிலை தெரியாமல் மது அருந்துபவர்களுக்குமன்னிக்க செய்யாமல், முதல்முறையாக இருந்தால்* மூன்று மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் . அடுத்த முறை தவறு செய்தால் ஓராண்டு சிறை தண்டனை கிடைக்கும் .* மூன்றாவது முறை தவறு செய்தால் நாடு கடத்தப்படுவார்கள் என்று எனது திருமண மேடையில்தான் இந்த சட்டம் இயற்றப்போவதை பற்றி பேசினார் . பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருமூர்த்தி மலை அருகில் உள்ள ஆய்வு மாளிகையில் ஓய்வெடுக்க சென்றார் .நாங்கள்*சிலர் அவருக்காக உணவை எடுத்துக்கொண்டு சென்றோம்**அங்கு வந்திருந்த சில எம்.எல்.ஏக்கள், முக்கிய விருந்தினர்கள் அந்த உணவை சாப்பிட்டு ஒரு திருப்தி இல்லாத சூழலை உருவாக்கினார்கள். அதாவது உணவு நன்றாகத்தான் இருக்கிறது .சிக்கன் சமைத்தது சரியில்லை என்பதுபோல பேசி கொண்டதை எப்படியோ எம்.ஜி.ஆர். அவர்கள் தெரிந்து கொண்டார்கள். இருப்பினும் எதையும் வெளியே காட்டிக்கொள்ளாமல் தொடர்ந்து சாப்பிட்ட வண்ணம் முதல்வர் இருக்கிறார் .நான் மறுபடியும் அவருக்கு பரிமாற உள்ளே சென்றேன் .அப்போது அங்குதலைமை தாங்கிய**குழந்தைவேலு , திருப்பூர் மணிமாறன், கோவைத்தம்பி, மருதாச்சலம், அண்ணா நம்பி போன்றவர்கள் எல்லாம் இருந்த சூழ்நிலையில் கல்யாண சாப்பாடு மிகவும் ருசியாகவும், அருமையாகவும் இருந்தது என்று என்னிடம் குறிப்பிட்டார் .ஆனால் முதலில் சாப்பிட்ட எம்.எல்.ஏக்கள் , உணவு சுமாராகத்தான் இருந்தது என்று சொன்னார்கள். புரட்சி தலைவரும் அதே போலத்தான் சொல்லுவார் என்று நான் எதிர்பார்த்தேன் .எனக்கு என்ன ஆச்சர்யம் என்றால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அனைவரின் முன்னிலையில் என்னிடம் உணவு ரொம்ப பிரமாதமாக இருந்தது என்று திரும்ப திரும்ப சொன்னார் . அதை கேட்ட எனக்கு மனது நிறைவாக இருந்தது .பிறகு அவர் விடைபெறும்போது ,நீ சென்னைக்கு உன் துணைவியாரை அழைத்து கொண்டு என் இல்லத்தில் வந்து சந்திக்க வேண்டும் என்று அன்பு கட்டளை இட்டார் . அவர் சென்றபிறகுதான் அங்கு வைக்கப்பட்டிருந்த சிக்கன் அனைத்தையும் எம்.ஜி.ஆர். அவர்கள் சாப்பிட்டு உள்ளார்* என்று தெரிந்தது .அதாவது பலர் சிக்கன் சமையல் நன்றாக இல்லை என்று விமர்சித்ததை கண்டு கொள்ளாமல் அவர் முழுவதையும் சாப்பிட்டுள்ளார் .அப்போதுதான் எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது .
நபிகள் நாயகத்திடம் ஒரு வயதான மூதாட்டி திராட்சை பழங்களை கொண்டுவந்து கொடுக்கிறார் . ஒரு திராட்சையை சாப்பிட்ட நபிகள் நாயகம் முழு பழங்களையும் அவரே சாப்பிட்டு முடித்துவிடுகிறார் . பின்னர் அந்த மூதாட்டிநன்றிகூறி விடை பெற்று* சென்றதும், சீடர்கள் அவரிடம் எப்போதும் எங்களுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டுத்தான் தாங்கள் சாப்பிடுவது வழக்கம். இன்று ஏன் இப்படி* வழக்கத்திற்கு மாறாக தாங்கள் செய்தீர்கள் என்று கேட்டதற்கு, அந்த திராட்சை பழம் மிகவும் புளிப்பாக இருந்தது . உங்களால் சாப்பிட்டு இருக்க முடியாது .அப்படியே சாப்பிட முயன்றாலும், உங்கள் முகத்தில்மிகவும் புளிப்பாக உள்ளது என்பதை** காட்டிவிடுவீர்கள் அல்லது வாயை திறந்து அந்த மூதாட்டி முகம் கோணும்படி ஏதாவது சொல்லிவிடுவீர்கள் .அதற்கு இடம் தராமல்தான் அந்த மூதாட்டி மனம் நிறைவு அடையும்படி நானே சாப்பிட்டு முடித்தேன் என்றாராம் .அதே போலத்தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரும்* அருகில் ப.உ.சண்முகம் போன்றவர்கள் இருந்தாலும், எங்கே உணவு சரியில்லை என்று எனக்கு முன்பாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரிடம் மறுபடியும் சொல்லி விமர்சனம் செய்துவிடுவார்களோ என்று எண்ணி , அவரே எல்லா சிக்கன், மட்டன் உணவு வகைகளை சாப்பிட்டு முடித்தபோது ,எனக்கு நபிகள் நாயகம் நடந்து கொண்ட விதம் பற்றித்தான் நினைவுக்கு வந்தது .புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஒரு தொண்டனின் மனம் கோணாதபடியும்,அந்த தொண்டனின் மனம் நிறைவடையும்படியும் அன்று நடந்து கொண்டதை*நபிகள் நாயகத்தோடு* ஒப்பிட்டுதான்* நான் பெருமகிழ்ச்சி அடைந்தேன் .இவ்வாறு திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .
சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில் ஒருமுறை முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது .விழா முடிந்து உணவருந்தியபின் எம்.ஜி.ஆர். புறப்படுகிறார் . பாதுகாப்பிற்காக வந்திருந்த கார் ஓட்டுனர்கள், ஊழியர்கள் அவருடன் புறப்பட தயாராகின்றனர் காரில் அமர்ந்திருந்த அவர்களை*.* எம்.ஜி.ஆர். அனைவரும் சாப்பீட்டீர்களா என்று கேட்கிறார் .அனைவரும் நாங்கள் சாப்பிடவில்லை. பரவாயில்லை புறப்படலாம் என்கின்றனர் . கார் ஓட்டுனர்கள், ஊழியர்களுக்கு அரசு விழா முடிந்து இரவு நேரத்தில் ஓட்டல்களில் உணவு வழங்கும் பழக்கம் இல்லையென்று கேள்விப்பட்டு ,மறுநாளே, அவர்களுக்கு இரவு நேர உணவுப்படியாக ரூ.100/- வழங்கவேண்டும் என்று ஆணையிட்டார் .
2016ல் மோடியின் தலைமையிலான மத்திய அரசு ,ரூ.500/- ரூ.1000/- ஆகிய நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கிறது .இதன் மூலம் கருப்பு பணத்தை அடியோடு ஒழிக்க முடியும் என்று முடிவெடுத்தது .ஆனால் இதை 1974லேயே எம்.ஜி.ஆர். யோசனை தெரிவித்து அறிக்கை விட்டார் .1958ல் நாடோடி மன்னன் படத்தின் மூலம் பொருளாதார ரீதியில் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும் என்று சொல்லி, ஆட்சிக்கு வந்தபின்னர் மக்களின் பொருளாதார வாழ்க்கை மேம்பட பல்வேறு நல திட்டங்கள் செயல்படுத்தினார் .
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்/காட்சிகள் விவரம்*
----------------------------------------------------------------------------------
1.தொட்டால் பூ மலரும்* - படகோட்டி*
2. புத்தன் இயேசு காந்தி பிறந்தது - சந்திரோதயம்*
3.காவல்துறை அதிகாரி வேடத்தில் எம்.ஜி.ஆர்.-என் கடமை**
4. திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி .
5. அன்னமிட்டகை* பாடல்* *- அன்னமிட்டகை*
6.குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் - மகாதேவி*
*
-
இந்திய கலைத்துறையில் ....
+++++++++++++++++++++++
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள் மட்டுமே அதிக அளவில் வருமானவரி கட்டியுள்ளார்.
+++++++++++++++++++++++++(
இதோ....ஆதாரபூர்வமாக
ஆண்டு...தேதி வாரியாக (7 வருடங்கள்)
+++++++++++++++++++++++++++++++++
26 லட்சத்து 42 ஆயிரத்து 180 ரூபாய்கள்..
இன்று இந்த தொகையின் மதிப்பு
எவ்வளவு என்பதை பார்த்தால்...
எண்ணிலடங்காத கோடிகளாகும்...
இது தவிர 3 லட்சம்... தனியாக செலுத்தியுள்ளார்...
+++++++++++++++++++++++++++++++
பிறர்க்காக வாரி வழங்கிய வள்ளல் மட்டும் அல்ல...
அரசுக்கும் இந்தியாவிலேயே அதிக வருமான வரி செலுத்தியவரும்
வள்ளல் புரட்சித்தலைவரே....
++++++++++++++++++++++++++++++++
ஒரு பக்கம் தன் திரைப்படங்கள் மூலம்
அதிக வரிகட்டி சாதனை...
மறு பக்கம் தன் வருமானம் மூலம் அதிக தொகை வரியாக செலுத்தி சாதனை...
+++++++++++++++++++++++++++++++(
எல்லோருடைய முகதூலிலும் பதிவிடுங்கள்....
தலைவரின் அன்பு உள்ளங்களே........ru...
-
1972 ல் தென்னகப்படவுலகின்
மாபெரும் சாதனை கதாநாயகன்
மக்கள் திலகத்தின்
வெற்றி படைப்பான
ராமன் தேடிய சீதை....
13,04,1972 ல் வெளியாகி
வசூலில் வீரவரலாறு படைத்தது.
++++++++++++++++++++++++++++
44 திரையரங்கில் வெளியாகியது...
++++++++++++++++++++++++++++++
நல்லநேரம் காவியம் வெளியாகி சூப்பர் ஹீட்டாக ஒடிக்கொண்டு இருக்கும் போது
ஒரு மாதம் கழித்து... வெளியான காவியம்.
+++++++++++++++++++++++++++++++++
சென்னையில்....
மிட்லண்ட் 64 நாள்
கிருஷ்ணா 64 நாள்
சரவணா 50 நாள்
ஒடிய மொத்த நாட்கள் : 178
ஒடி முடிய வசூல் : 6,79,022.51 ஆகும்.
+++++++++++++++++++++++++++++++++
மதுரை சிந்தாமணி 84 நாள்:
ஒடி முடிய வசூல் :2,48, 631.75
சேலம் 84 நாள் : 2,04,116.40
திருச்சி 84 நாள்
கோவை 78 நாள்
+++++++++++++++++++++++++++++
18 அரங்கில் 50 நாளை கடந்து சாதனை..
வேலூர்.... பாண்டி... ஈரோடு...
திண்டுக்கல்.... நெல்லை.... ஆத்தூர்
நாகர் கோவில்... தஞ்சை... குடந்தை
கரூர்..... ப.கோட்டை.... மாயூரம் (48)
++++++++++++++++++++++++++++++++
இலங்கையில்....
1972 ல் நல்லநேரம் திரைப்படத்திற்கு பின் வெளியாகி .....
ராமன்தேடிய சீதை வெற்றி முழக்கம்..
+++++++++++++++++++++++++++
கொழும்பு கெப்பிட்டல் அரங்கில்
105 நாட்கள் ஒடியது....
ஒடி முடிய வசூல் : 4,62,309.50
வெள்ளவத்தை பிளாசா : 51 நாள்
ஒடி முடிய வசூல் : 1,58,046.50
யாழ்நகர் வெலிங்டன் : 75 நாள்
மற்றும் பல பகுதிகளில் திரையிடபட்ட
திரைப்படம்...
மக்கள் திலகத்தின்
ராமன் தேடிய சீதை ஆகும்....
+++++++++++++++++++++++++++++
ஆண்டுகள் 48 யை கடந்தாலும்...
1972ம் ஆண்டில் வெளியான
வசூல்பேரரசின் ஆறு காவியங்களும்
இன்று வரையில் வெள்ளித்திரையில்
அரங்கேறி வருவதே மிகப்பெரிய சாதனை.... சரித்திரமாகும்.............ur.........
-
ஜெயஸ்ரீ ஷங்கர்.
யோகத்தின் முகவரிகள்:
நாங்கல்லாம் எம்.ஜி.ஆர் கட்சி. நீ யார் கட்சி? எனது பள்ளி நாட்களில் இந்த ஒரு கேள்வி மிகவும் சகஜமாக எனது தோழிகளிடையில் ஒருவருக்கொருவரைப் பார்த்துக் கேட்டுக் கொள்ளும் கேள்வியாகவே இருந்தது. அதை வைத்துத் தான் எங்களுக்குள் நட்பு வட்டமும் அமையும். அது போன்றதொரு காலமது. அப்போது எனக்கு பத்து வயது இருக்கும்.. எனக்குப் பிடித்த தோழிக்காக, நானும் எம்.ஜி.ஆர் கட்சி தான் என்று சொல்லி அவளோடு சேர்ந்து கொண்டேன். எம்.ஜி.ஆர் பாடல்கள் தான் எங்கள் நட்புக்கு வித்தாகி, உரமாகி, மரங்களாகி நந்தவனமாகியது. அதையும் கடந்து, இள நெஞ்சங்களுள் அவரால் ஏற்படுத்தப்பட்ட தாக்கத்தின் ஆதிக்கம் அபாரமானது என்றே சொல்ல வேண்டும்…
இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு யோகம் கைதூக்கி விட்டு கடைசி வரையில் கூட வரும் என்றும் சொல்வார்கள். அந்த விதத்தில் பரிபூரணமா அமைந்த ‘யோக ஜாதகம்’ அவருடையது தான். அப்பேர்பட்ட யோகக்காரருக்கு தனது உயர்ந்த பண்பால், செல்வமும், பெரும்புகழும், அழிவில்லாத மக்கள் செல்வாக்கும் வாழ்வின் எல்லை வரை அமையப் பெற்றால் அவர் மனிதருள் மாணிக்கமாவர் .
இந்நிலையில் தான் ஒரு நாள் நம்ப ஊருக்கு எம்.ஜி.ஆர் வருகிறார் என்ற செய்தி ‘காட்டுத் தீ’ போலப் பரவியது. எந்தவித தொலைத் தொடர்பும் அதிகரித்திராத காலம். மதுரையில் அவருக்கு ரசிகர்கள் கடலளவு என்பதை உணர்த்திய அனுபவம் எனக்கு அதுதான். திரையில் பார்த்திருந்த ஒரு மனிதனை நேரில் பார்க்கும் அந்த சந்தர்ப்பம் மிகவும் பிரமாண்டமானது என்று தான் சொல்ல வேண்டும். அத்தனை பிரமிப்பு மனத்துள். நேரமாக நேரமாக மக்கள் வெள்ளம் அலைமோதத் தொடங்கியது. அந்த ரசிகர் கூட்டத்தின் மத்தியில் நானும் எனது தோழியின் வீட்டு மொட்டைமாடியில் நின்றபடி அவரைக் காணும் ஆவலுடன் நின்றிருந்தேன். அவர் நடித்த திரைப்படப் பாடல்கள் ஒலிபெருக்கியில் தொடர்ந்து ஒலித்த வண்ணம் இருந்தது.
“நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க
நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே”
அத்தோடு கூடவே இன்னொரு பாடலாக …
“வாங்கய்யா வாத்தியாரையா
வரவேற்க வந்தோமைய்யா “
இந்தப் பாடலும் திரும்பத் திரும்ப ஒலித்த வண்ணம் இருந்தது. மதுரையின் தெருக்கள் முழுதும் அவருக்காக அலங்கரிக்கப் பட்டு அத்தனை இதயங்களுக்குள்ளும் அவரைப் பார்த்துவிட வேண்டும் என்ற ‘ஒரே எண்ணம் ‘ நிறைந்ததாக இருந்ததைக் உணரவும் முடிந்தது. அத்தனை அன்புக்கும் சொந்தக்காரர் ‘அமாவாசை வானில் எழுந்த முழு நிலவாக’ வசீகரமான தோற்றப் பொலிவோடு வெண்பஞ்சுத் தொப்பியும், கறுப்புக் கண்ணாடியும், வெள்ளை அங்கியும் கழுத்தைச் சுற்றிய ஷாலோடு , கூப்பிய கரங்களில் ஒரு வாகனத்தில் நின்று அனைவரையும் பார்த்து கையசைத்த வண்ணம் எங்களைக் கடந்து சென்றார். வானுலக தேவனே வந்து எழுந்தருளியது போன்ற ஒரு நிம்மதி அவரைக் கண்டுவிட்ட முகங்களில் தெரிந்தது. கூட்டத்தில் பெருத்த ஆரவாரம். அந்த ஆனந்த அலை ஓயாது நீண்ட நேரம் ஒலித்தவண்ணம் இருந்தது. இன்றும் கூட நான் முதன் முதலாகக் கண்ட அந்த மாபெரும் பிரம்மாண்டமான மக்கள் திரள் கண்ணுள் நிறைந்து வழிகிறது. அன்றிலிருந்து எனது மனத்துள் அவரை ஒரு அதிசயப் பிறவியாகவே எண்ண ஆரம்பித்தது.
பள்ளியில் மாறுவேடப் போட்டியில் அநேகமாக அத்தனை தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்கு ‘எம்.ஜி.ஆர்” வேடமிட்டு ‘என் ரத்தத்தின் ரத்தமே ‘ என்ற அவர் மேடையில் பேச ஆரம்பிக்கும் போது, பொது மக்களிடையே தனக்கு இருக்கும் பந்தத்தை உறுதி செய்யுமுகமாக உபயோகப் படுத்தும் அந்த சக்திப் பிரயோக வாக்கியத்தையே வசனமாகச் சொல்ல வைத்து அப்படியே மெய் சிலிர்த்துப் போவார்கள். அத்தனை ஈடுபாடும், அன்பும், பக்தியும் கொண்ட தாய்குலங்கள் அவரை ஒரு அவதார புருஷராகவே எண்ணியிருந்தனர் . அவர் மக்கள் இதயத்தின் தாரக மந்திரம்.
வெள்ளித் திரை நடிகர் என்பதையும் மீறிய ஒரு பிணைப்பும், ஆளுமையும் அவர் மீது பொது மக்களிடையில் இருப்பதை காணும் போதெல்லாம் ‘இது எப்படி சாத்தியம்’ என்ற கேள்விக்கே இடமில்லாமல் அத்தனை பேர்களின் உள்ளத்தையும் ஈர்த்த வினோத காந்தமாக அவரது எளிமையும், காருண்யமும் இருந்தது தான் அந்த உயர்ந்த ஆன்மாவின் உன்னத சாட்சி. அவரைச் சந்திக்கும் எவரையும் அவரது ரசிகனாகவே மாற்றிவிடும் இரகசியம் தெரிந்தவர். அவர் பிறந்ததும், வாழ்ந்ததும், வெள்ளித் திரையில் சாதனைகள் புரிந்ததும், அரசியலில் தனக்கென ஒரு நிரந்திர இடத்தை பற்றி பொது மக்களின் நலனுக்காக சேவைகள் பல புரிந்ததும் அறியாதவர் யாருமே தமிழ் நாட்டில் இருக்க முடியாது. எம்.ஜி.ஆர் என்ற இந்தப் பெயரில் தான் எத்தனை ஆணித்தரமான நம்பிக்கை மக்களிடத்தில் இருந்திருக்க வேண்டும்.
செல்வம்:
இந்நிலையில் அவர் நடித்து வெளிவந்த படங்களும், கருத்துமிக்கப் பாடல்களும், பட்டிதொட்டி எங்கும் அவர் புகழ் பரப்பும் ஏணியாகி, அவரைத் தமிழக மக்களின் மத்தியில் ஓர் அரிய மேதையாக,மங்காத புகழ் தாங்கி நிற்கும் ‘மக்கள் திலகமாக’ மாற்றக் காரணமாயிருந்தது.. அவரை ‘ரத்தத்தின் ரத்தமாக’ அவர் நடித்த நடிப்பு வளர்த்ததா, அவரது சமூக சிந்தனை வளர்த்ததா, மக்கள் மீது அவர் வைத்திருந்த அன்பு வளர்த்ததா என்றெல்லாம் ஆராய இயலாத குறுகிய காலக்கட்டம், அவர் பெயரை எம்.ஜி.ஆர் என்று சொல்லும் போதே ஒரு மிகப்பெரிய கடலுக்கு முன்னால் கம்பீரமாக எழுந்து நிற்கும் கலங்கரை விளக்கம் போன்றதொரு பாதுகாப்பு அவரிடத்தில் நமக்கு ஏற்பட்டதில் எந்த வியப்பும் இல்லை எனலாம். அத்தனை இறைவனும் அவர் பக்கம் நின்று ஒன்றாக ஆசீர்வதித்திருக்க வேண்டும். ஒரு சாமானிய மனிதனால் அசாதாரண உயரத்தில் ஒவ்வொரு இதயத்திலும் கோலோட்சி செய்தவர் நமது எம்.ஜி.ஆர் அவர்கள் மட்டும் தான் என்றாலும் அது மிகையில்லை.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறி பரந்த மனப்பான்மையை நெஞ்சில் விதைத்தவர் திருமூலர். அந்த உயர்ந்த கருத்தை பட்டி தொட்டி எங்கும் பரப்பி மனித நேயத்தை வளர்த்தவர் நம் புரட்சித்தலைவர். அவருக்காகவே கவிஞர்கள் இதயத்தில் சுரக்கும் அமிர்த சஞ்சீவியாக கவிதை வரிகள் பொங்கி எழும். அதை எம்.ஜி.ஆர். பாடும்போது, ரசிகர்களின் நெஞ்சம் பெருமையில் பூரித்துப் போகும். சாமான்ய மக்களையும் அவரது திரையிசைப் பாடல்களால் வாழ்வியல் முறைகளை எளிமையாகக் கற்றுக் கொள்ள வைக்கும். எத்தனையோ பேர்களின் உந்து சக்தி அவரது பாடல்களாகவே இருந்திருக்கிறது. தன்னம்பிக்கையின் அஸ்திவாரத்தை அதன் மூலமாகவே மக்களிடம் எழுப்பி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
எந்த உயரமும் ஒரே நாளில் ஏற்பட்டு விட முடியாது என்பது நியதி. இருப்பினும், அவரது அரசியல் உயரம் ஆரம்பித்த போதே பிரம்மாண்டமாக வளர்ந்து உயர்ந்த நிலையில் தான் உருவானது என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு. இருந்தாலும், ஒரு சராசரி மனிதன் தனது சொந்த வாழ்வில் படும் அத்தனை அவஸ்தைகளையும் சந்தித்தவர் தான் எதிரிகளின் சூழ்ச்சி வலையில் சிக்கித் தவித்தவர் தான். இதிலிருந்தெல்லாம் அவர் வெளிவர அவருக்குள் வெகுண்டு வெளிவந்த தைரியமும், தீர்க்கமான அறிவும், பகட்டே அறியாத தூய அன்பும் நல்ல மனமும் மட்டும் தான் துணையாக இருந்தது. அங்கிருந்து நாடே போற்ற அந்த மனிதர் மாமனிதர் ஆனார். வயது வித்தியாசமில்லாமல் சகலமானவர்களும் போற்றும் உயர்ந்த பொக்கிஷமாக கருதப்பட்டார். அவரைச் சுற்றி தமிழ்நாட்டு மக்கள் அனைவருமே பாதுகாப்பு வளையமாக வலம் வந்தார்கள். ஒரு நாட்டின் அத்தனை இதயங்களுக்கும் ஒரே ‘ஏகாந்தம்’ அவராகவே திகழ்ந்தார், அவரது புகழ் உயர்ந்தாலும், அவர் வந்த பாதையை மறக்காமல் , ஏழை எளிய மக்களுக்கு அவரது உதவும் கரங்களை நீட்டிக் கொண்டே இருந்தார். அவருக்கு வாழ்க்கை தந்த திரை உலகத்தையும், அவரால் மக்களுக்கு வாழ்க்கை தர முடிந்த அரசியல் உலகத்தையும் தனது இரண்டு கண்களாகவே போற்றியவர் தனது அரசியல் சின்னத்திற்கு ‘இரட்டை இலையை ‘ அடையாளமாக்கி அதையே என்றென்றும் அரசியல் செல்வத்தின் முத்திரையாகப் பதித்தவர்..
பெரும்புகழ்:
பள்ளிக் கூட கல்வி என்பது அவரது வாழ்வில் எட்டாத கனியாகி இருந்தாலும், தமிழகக் குழந்தைகள் கல்வி கற்க வேண்டிய அவசியத்தை ஒவ்வொரு குடும்பத்திற்கும் உணர்த்தி அவர்களது வளர்ச்சிக்கு உதவும் வண்ணம் பள்ளிகளில் ‘மதிய உணவு திட்டத்தை ‘ ஏற்படுத்தி அதன் மூலம் வருங்கால சந்ததியினரின் அறிவுக்கும் உணவு ஊட்டி அழகு பார்த்தார்.. இது ஒரு சமுதாயப் புரட்சியாகவே மக்களிடையில் பெருமையாகப் பேசப்பட்டது. நல்லதொரு தலைவன் நம் நாட்டைக் காக்கிறான் என்னும் நம்பிக்கையில் மக்கள் கவலைகளற்று இருந்த நேரம். மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் வார்த்தைகளும் எளிமையானவை. வாழ்க்கையும் எளிமையானவை தான். காலம் அவருக்கான செயல்களை மிகவும் சிறப்பாகவே செய்தது. அதே போல்,
தமிழக மக்கள் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையின் அளவை வேறு எதனாலும் அளவிட்டுக் குறித்து விட முடியாததாகும். அவரையே தன்னுயிராக பாவித்து வாழ்ந்தவர்கள், அவருக்கு ஒன்றென்றால் தனது உயிரையும் துச்சமாக எண்ணி உயிர் கொடுத்து உயிர் காக்கக் கடமை பட்டவர்களாகவே பெரும்பாலான அவரது ரசிகர்கள் இருந்தார்கள் என்பது கண்கூடு. அப்படித்தான் ஒருமுறை ‘எம்.ஜி.ஆர் அவர்களின் திடீர் மரணச் செய்தி ‘ கொண்ட பொய்யான தகவல் காற்றுவாக்கில் பரவத் தொடங்கியதும், மக்களின் வேதனை கரை மீறியது. அந்த மாலை வேளையில் ஊரே ஸ்தம்பித்து ஆக்ரோஷித்தது. அந்தச் செய்தியை ஜீரணிக்க இயலாத பல ரசிகர்கள் தங்களையே எமனுக்குத் தாரை வார்த்துக் கொண்டார்கள். தமிழ் நாட்டின் அந்தக் கொந்தளிப்பை அடக்க, அந்தச் செய்தி பொய்யான வதந்தி என்ற செய்தியால் மட்டுமே முடிந்தது. அவர் சம்பாதித்து சேர்த்து வைத்திருந்த ரசிகர்களின் நெஞ்சங்களின் வலிமையை அனைவரும் உணர்ந்து கொள்ள அந்த ஒரு நிகழ்வு போதுமாயிருந்தது.
மனிதன் என்று பிறந்தானோ மரணமும் அவனோடு சேர்ந்தே பிறந்து விடும் என்னும் உண்மையைப் பொய்யாக்கி எம்.ஜி.ஆர் அவர்களை சிரஞ்சீவியாக வாழவைக்க வழி தேடியது அவரது ரசிக மனங்கள். அதன் வெளிப்பாடும் தெரியப் படுத்தும் விதமாக அந்த நாளும் வந்தது.
அழிவில்லாத மக்கள் செல்வாக்கு:
அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நேரம் தான் அது. ஒரு நாட்டையே உலுக்கி எடுத்த நாட்கள் அவை. கூட்டுப் பிரார்த்தனை இல்லை. நாட்டுப் பிரார்த்தை அது. எங்கள் எம்.ஜி.ஆர். மீண்டும் நலம் பெற வேண்டும் என்ற ஒரே பிரார்த்தனை. தொடர்ந்த பிரார்த்தனையாக அவர் நடித்த படப்பாடலே எங்கும் ஒலித்து பிரபஞ்ச சக்தியை கெஞ்சிக் கொண்டிருந்தது.
இறைவா உன் மாளிகையில்
எத்தனையோ மணி விளக்கு
தலைவா உன் காலடியில்
என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு…!
இதன் அடுத்த வரி நம் அனைத்து இதயத்துள்ளும் ஒலித்துக் கொண்டே இருக்கும் பிரார்த்தனை வரிகள் தான்..நம்பிக்கையோடு பல்லாயிரக் கணக்கான இதயங்களின், ஒரே ஒரு மனிதனின் இதயத்துடிப்பின் தொடர்ச்சிக்காக இசையால் கையேந்திக் கதறிய நாட்கள் அவை. இந்த நாட்டுப் பிரார்த்தனை எந்தக் காலக்கட்டத்திலும் நடந்திராத ஒரு உலகளாவிய அதிசயம் தான். அதன் முன்பும், அதன் பின்பும் யாருக்காகவும் நடந்திருப்பதாக சரித்திர வரலாறு கூட இல்லை எனலாம்.. ஒரு உயிரின் மீது லட்சோப லட்ச மக்களின் ஆளுமையும் அன்பும் கரை புரள அதைத் தாங்கிய புரட்சித் தலைவர் எனும் அந்தப் பொன்மனச் செம்மலை மட்டுமே சேரும். பிரபஞ்சம் விடை சொன்னது. அவரை மீட்டுக் கொடுத்தது. மக்களின் மனத்துள் பால் வார்த்தது. இந்த நாடே அவர் ஒருவருக்காகவே உருவானதோ என்று எண்ணும் அளவுக்கு அவரது செல்வாக்கும் புகழும் ஓங்கி உலகளந்தது .
ஒரு தனி மனிதனின் புகழ் என்பது காலப்போக்கில் மாறும் இயல்புடையது. அனால் அதையும் முறியடித்தது அவர் வாழ்ந்த வரலாறு காணாத ஒரு தனி மனித சகாப்தம். இல்லையில்லை, அந்தக் கீர்த்தியை சத்திய உலகின் பிரதிநிதி என்றே சொல்லவேண்டும். எம்.ஜி.ஆர் அவர்களை எத்தனையோ புகழாரங்கள் சரணடைந்திருக்கலாம். அத்தனைக்கும் தலை வணங்கிய அவரது தலை செருக்கில் நிமிராது தாழ்ந்திருந்தமையால் தான் தரணியில் அவருக்கென்ற தனியிடம் நிரந்தரமானது. கோடியில் ஒரு நட்சத்திரமாக தமிழகத்தில் ஒளிவிட்டு மங்காத சரித்திரதை உருவாக்கி என்றென்றும் ‘சிரஞ்சீவி’ யாகவே இன்றும் மனத்தில் நிறைந்து நிற்பவர் நம் மக்கள் திலகம் மட்டும் தான். எந்தக் காலத்திலும் தமிழ் மக்களின் இதயங்கள் தான் அவர் வாழும் உறைவிடம்.
ஜெயஸ்ரீ ஷங்கர்
எழுத்தாளர்............
-
புரட்சி நடிகரை 'டோபா தலையன்' என்றும் மேலும் அச்சிலேற்ற முடியாத கொடும் வார்த்தைகளால் அபிஷேகம் செய்யும் ஐயனின் கைபுள்ளைங்களுக்கு நாம் கொடுக்கும் வசூல் உண்மை என்ற கசப்பு மருந்து அவர்கள் தாயிடம் குடித்த பாலை கக்கியதோடு நில்லாமல் புரட்சி தலைவர் மீது ஆலகால விஷத்தையும் கக்க ஆரம்பித்து விட்டனர். தோல்வியை மறைக்க இப்படி தரம் இறங்கி அழ ஆரம்பித்து விட்டார்கள். நாமும் மாற்று அணி நாயகனை பீப்பா வயிறன், பாப்பா லோலன், குடிகாரன், தொப்பையன், சாப்பாட்டு ராமன் என்றெல்லாம் விளிக்காமல் அவரை "மிகை நடிகன்" என்றே கண்ணியத்துடன் பதிவிடுவது நமது உயர்ந்த பண்பையே அது காண்பிக்கிறது.
புரட்சி நடிகர் செயற்கை சிகையலங்காரத்தில் தனி கவனம் செலுத்துவார். ஒவ்வொரு கேரக்டருக்கும் தகுந்த மாதிரி சிகை அமைப்பை மாற்றிக் கொள்வார். ஆனால் உண்மை எது? போலி எது? என்று கண்டுபிடிக்க முடியாமல் மிகவும் கச்சிதமாக அவருக்கு பொருந்தி போகும். அதை வைத்து மாற்று அணியின் கைபிள்ளைங்க நம் தலைவரை தரக்குறைவாக விமர்சனம் செய்கிறார்கள். சிவாஜிக்கு டோபா மிகவும் அசிங்கமாக இருப்பதால் பொறாமையால் கைபிள்ளைக கண்டபடி கதற ஆரம்பித்திருப்பார்கள் போல!
அவர்களின் ஐயன் செயற்கை சிகை அணியாதவர் என்ற எண்ணமா?
அவர் செயற்கை சிகை மட்டுமல்லாமல் நடிகைகளுடன் நெருங்கி நடிப்பதற்கு அவருடைய தொப்பை பகையாக இருப்பதால்
10 முழம் தார்ப்பாவை இடுப்பில் இறுக்கி, ஒரு அடிக்கும் அதிகமான தொப்பையை பாதியாக குறைத்து
நெருங்கி நடிக்கும் போது மூச்சு திணறி தவித்ததை நாம் பார்த்தோம்.
பேசாமல், அண்டா தொப்பையோடு வீட்டிலே இருப்பதை விட்டு விட்டு நடிக்கிறேன் பேர்வழி என்று நம்மையும், நடிகையையும் தொல்லை செய்வதுடன் மூச்சை இறுக்கி பிடித்து நடித்ததில் நுரையீரல் சுருங்கி விரியாமல் போக மூச்சுத் திணறலுடன் மருத்துவரிடம் போனது கைபிள்ளைகளுக்கு ஞாபகம் இல்லையா?. வயதான கேரக்டரில் நடிக்கும் போது தொப்பையுடனே நடிப்பார்.
கொஞ்சம் இளநாயகிகள் கூட நடிக்கும்போதுதான் பெரும் தார்ப்பா தேவைப்பட்டது. கழுத்துக்கு மேலே தலை இருக்கிறவனெல்லாம் தலைவனாக முடியாது என்ற "அடிமைப்பெண்" வசனத்தை எண்ணி கழுத்தை தேடினால் கழுத்தையே காணோமே. பீப்பா வயிறு கழுத்தே இல்லாமல் தலையில் ஜாயின்ட் ஆகிடிச்சி. இந்த கொடுந்தோற்றத்துடன் திரிந்த "கல்தூண்" ஐயனை வைத்து கொண்டு தங்கத்தலைவரை தரம் தாழ்த்தி பழிக்கலாமா? ஐயனின். கைபிள்ளைகளே.
தலையிலோ பொருந்தா சிகை ! தோற்றமோ பெருந்தோகை !
வயிற்றிலோ பெரிய பீப்பா! அதை மறைக்க ஒரு தார்ப்பா!. ஜோடிக்கு இரண்டு ஸ்ரீூ பாப்பா! அதிலே ஒன்னு உன் ஐயனின் கீப்பா! ரொம்ப சீப்பா இருக்கே அய்யப்பா. அட போப்பா! இதெல்லாம் ரொம்ப தப்பப்பா. எங்களுக்கும் இதுபோல் கவிதைகள் வடிக்க தெரியும். ஆனாலும் மனம் ஒவ்வாத(விரும்பாத) காரணத்தால் நாங்கள் தரக்குறைவாக எழுதுவது கிடையாது.
நன்றியுடன் மீண்டும் சந்திப்போம்..........ksr.........
-
வணக்கம் ...
சிவாஜியின் திரை உலக சரித்திர சாதனையை யாரும் முறியடிக்கமுடியாது..
இந்த உண்மை தெரியாமல் சிவாஜியின் மாபெரும்
World record ஐ இன்று வரை எந்த ஒரு நடிகராலும் முறியடிக்க முடியாது..
இந்த உண்மைகளை இனி எந்த காலத்திலும் யாராலும் மறைத்து எழுத முடியாது....
எனக்கு தெரிந்து இந்த உலகம் அழியும் வரை அழிக்க முடியாத சாதனையை படைத்த சிவாஜியை
எப்படி மறக்க முடியும்..
அது என்ன அப்படி பட்ட உலக சாதனை..
என்று அனைவரும்
யோசிப்பது தெரிகிறது..
எங்கள் வடசென்னை பழைய வண்ணாரப்பேட்டையில்...
பாண்டியன் திரையரங்கில்..
வசந்தத்தில் ஓர் நாள்
என்ற படம்
காலை காட்சி
மதிய காட்சி
மாலை காட்சி
என மூன்று
காட்சிகளிலுமே
மொத்தம்
நாற்பத்தி மூன்று
டிக்கெட்டுகள் மற்றுமே
விற்று தீர்ந்து
இரவு காட்சி ஓட்டினால்
கரண்ட் செலவுக்கு கூட காசு வராது என
அத்தோடு தியேட்டரை விட்டு படத்தை தூக்கி படப்பெட்டியை தரித்திரம்
தொலைந்தது என கை ரிக்சாவில் ஏற்றி அனுப்பபட்டது..
அந்த உலக சாதனை இது வரை முறியடிக்கப்படவில்லை.......... Sivakumar...
-
புரட்சித்தலைவர் பக்தர்கள் - 1970's
சென்னையில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அங்கே ஈகா திரையரங்கு அருகில் "இந்திய ரிசர்வ் வங்கி குடியிருப்பு" உள்ளது. அந்த காலத்தில் மாதம் ஒரு முறை திரைப்படம் உண்டு. அந்த குடியிருப்பி பகுதியில் இந்திய ரிசர்வ் வங்கி பள்ளிக்கூடம் உள்ளது அந்த பள்ளிக்கூடத்தின் மேடையில் தான் திரை அமைக்கப்படும். பொதுவாக நடிகர்கள் சிவாஜி கணேசன், ஜெமினிகணேசன், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், சில நேரங்களில் ஹிந்தி படங்கள், ஆங்கில படங்கள் என்பது வழக்கம். நல்ல கூட்டம், அந்த குடியிருப்பு பக்கத்தில் இருக்கும் பொதுமக்களும் வருவது வழக்கம்.
புரட்சித்தலைவர் நடித்த "பணம் படைத்தவன்" 'ஒரே ஒரு முறை' தான் அங்கு காண்பிக்கப்பட்டது. அன்று நாங்கள் பார்த்தது "மக்கள் சுனாமி" கூட்டம். ப்ரொஜெக்டர் இருக்கும் இடத்திற் விட்டு எங்கு பார்த்தாலும் மக்கள். சென்னையில் வாழும் அனைவரும் அங்குதான் இருந்தார்களோ என்று நாங்கள் நினைத்தறோம், அப்படிப்பட்ட கூட்டம். குடியிருப்பின் இன்னொரு பகுதியிலும் [ அங்கு ஒரு விநாயகர் கோயில் உண்டு] மக்கள் கூட்டம் - படம் பார்க்க முடியாது, வசனம், பாடல்கள் மட்டுமே கேட்கமுடியும்]
"இனி புரட்சித்தலைவர் படத்தை போடுவதில்லை என்று முடிவு செய்துவிட்டார்கள்". பிறகு தொலைக்காட்சி வந்தது .......... வருடம் ஒரு முறை படம் காட்டுவது என்று ஆனது.
இதுதான் மக்கள் சக்தி - இப்படியும் ஒரு மனிதர் "எண்ணிலடங்காத பக்தர்கள்" என்று பல நாட்களுக்கு அந்த குடியிருப்பில் தினமும் பேச்சு.
நேரம் கிடைக்கும் பொது அந்த இடத்தை சென்று பாருங்கள், அப்போதுதான் நான் சொல்லுவதை உங்களால் உணர முடியும்........சைலேஷ்பாசு...
-
1971 ம் ஆண்டு வெளியான
மக்கள் திலகத்தின்....
"ரிக்க்ஷாக்காரன்" காவியம் வெளிவந்து சரித்திரம் படைத்தது..
சென்னை தேவிபாரடைஸ் அரங்கில்
தொடர்ந்து 163 காட்சிகள் அரங்கு நிறைந்து 142 நாட்கள் ஒடி....
9 லட்சத்தை வசூலில் கடந்த முதல் காவியமாக திகழ்ந்தது.
பல முறை திரைக்கு வந்து
வெற்றிகள் புரிந்துள்ளது.
45 ஆண்டுகள் கடந்து மீண்டும் அதே
தேவிபாரடைஸில்....
திரையிட்ட ஒரேக்காவியம்...
மக்கள் திலகத்தின்
ரிக்க்ஷாக்காரன் ஆகும்.
முதல் மூன்று நாட்களில்....
வெள்ளி,சனி,ஞாயிறு
(3 காட்சிக்கு மட்டும்)
வசூலான தொகை :
2 லட்சத்து 35 ஆயிரத்தை கடந்தது.
ஒரு டிக்கட் விலை :152 ரூபாய் ஆகும்.
ஞாயிறு மாலைகாட்சி (1200 பேர் மேல்)
அரங்கு நிறைந்து சாதனை...
7 நாட்கள்(தேவிபாரடைஸ் 3 நாள் தேவிபாலா 4 நாள்) ஒடி 3 லட்சத்தை வெற்றி கொண்டது.
+++++++++++++++++++++++++
இது போன்ற சாதனையை 300 படம் நடித்த எந்த பொய் நிறைந்த திலகமும்
தேவி காம்பளக்ஸில் படைத்ததில்லை....bsr.........
-
மக்கள் திலகத்திடம் ஒரு முறை சிலர் சென்று ஆதங்கப் பட்டார்களாம் .... தலைவரே உங்களை பற்றி கருணாநிதி ... ஊமையன் நாட்டை ஆளலாமா என்று மக்களிடம் மேடை தோறும் கேட்டு வருகிறார் என்று .... அதற்கு மக்கள் திலகம் சொன்னது என்ன தெரியுமா ? ரசிகர் மன்றக் கூட்டத்தை கூட்டுங்கள் என்றார் ... கூடிய மாபெரும் கூட்டத்தில் மக்கள் திலகம் பேசியது சில வார்த்தைகள் தான் .... அதாவது என் ரத்தத்தின் ரத்தங்களே நீங்கள் எல்லோரும் கத்தி வைத்துக் கொள்ளுங்கள் என்றார் .... மேடையில் இருந்த எல்லோருக்கும் அதிர்ச்சி ... என்ன தலைவர் இப்படி பேசுகிறாரே என்று .... அடுத்த நாள் எல்லா ஊடகங்களிலும் இது தான் தலைப்புச் செய்தி ... கிளம்பினார் கருணாநிதி .... ஒரு முதல்வர் இப்படி பொறுப்பற்ற முறையில் தொண்டர்களை கத்தி வைத்துக் கொள்ளச் சொல்லி பேசலாமா என்று மேடைகள் தோறும் கேள்வி எழுப்பினார் .... 2 வாரங்களுக்கு பிறகு மக்கள் திலகத்திடம் ஆதங்கப் பட்டவர்களை மீண்டும் அழைத்தார்
என்னை ஊமையன்னு ஊரெல்லாம் சொன்ன அதே கருணாநிதியை இன்னைக்கு அதே ஊரெல்லாம் சென்று முதல்வர் இப்படி பேசலாமா என்றும் கேட்க வைச்சிட்டேன் பாருங்க .... நான் பேசுவதை அவரே மக்களிடம் ஒப்புக் கொள்கிறார் .... என்றார் ....
இது தான் கருணாநிதி ....
அது தான் மக்கள் திலகம் .........
-
எம்.ஜி.ஆர்., ஒரு புது கார் வாங்க ஆசைப்பட்டார். அதுபற்றி அவரே எழுதுகிறார்:
"பொங்கல் பரிசாக ஒரு புது கார் வாங்க வேண்டும் என்று, என்னிடம் என் மனைவி சில நாட்களாக சொல்லிக் கொண்டிருக்கிறாள். இப்போது, நான் வைத்துக் கொண்டிருக்கும் கார் பழையது; அதை வாங்கி, பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது என்பது, அவளது கண்டுபிடிப்பு!
பொதுவாக சினிமா கலைஞர்கள் நினைத்தால், புதுக் கார் வாங்கி விடுகின்றனர். ஆனால், என்னைப் பொறுத்த வரையில், அது ஏனோ, இதுவரை கைகூடவில்லை.
மனைவியின் முணுமுணுப்பிலும் நியாயம் இருக்கிறது. சென்ற ஆண்டு, பொங்கல் அன்று, புது கார் வாங்கி விட வேண்டும் என்ற அவளது கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தேன். அதற்கேற்ப, இருவரிடம் காரின் விலை விவரங்களை கேட்டு வந்தேன். அது கண்டு என் மனைவியின் முகத்தில் மலர்ச்சி!
ஆனால், சென்ற ஆண்டு வரையில், புது கார் வாங்கும் பேச்சு, பேச்சாகவே போய் விட்டது. நான் என்ன செய்வது?
சில காரின் விலையை கேட்கும் போது, அசந்து போகிறேன். காரின் விலை கேட்டு, மலைக்கும் போதெல்லாம், என்னை சுற்றியிருக்கும் படவுலகப் பிரமுகர்களும், கார் தரகர்களும், 'நீங்களா இப்படி கேட்கிறீர்கள்...
புது கார் வாங்க
எம்.ஜி.ஆர்., தயங்குவதா...?' என்று கேட்கின்றனர். நான் என்ன விலை கொடுத்தும், புது மாடல் கார் வாங்க முடியும் என்று அவர்கள் நினைக்கின்றனர்.
இப்படிக் கேட்டு கேட்டு, அடுத்த பொங்கலும் வந்து விட்டது. ஆனால், நான் இன்னும் புது கார் வாங்காததற்கு இன்னொரு காரணமும் உண்டு. அது, பழைய காரிடம் பழகிய பாசம் தான். அந்த பாச உணர்ச்சி, என்னை புது கார் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை, மாற்றிக் கொண்டே வருகிறது.
என்னிடம், இப்போதுள்ள பெரிய கார் மிகவும் விசுவாசமுள்ளது; தென்னகம் முழுவதும், என்னைச் சுமந்து சென்றிருக்கிறது; பல வெற்றிப் படங்களில் நடிக்க, அது, ஸ்டுடியோக்களுக்கு என்னை விரைவாக ஏற்றிச் சென்றிருக்கிறது. பல ஆயிரக்கணக்கான ரசிகப் பெருமக்களால் சூழ்ந்து கொள்ளப்பட்டு, தனக்கும் பெரிய செல்வாக்கை பெருக்கிக் கொண்டிருக்கிறது.
தொலைவில் வரும் போதே, அதை, பலர் அடையாளம் கண்டு, என் பெயரைக் கூறி, ஆரவாரம் செய்து வருகின்றனர். அந்த பெருமையை, கடந்த பத்து ஆண்டுகளாக அது அனுபவித்து வருகிறதே, அதை நான் தகர்க்கலாமோ? என் மனம் ஏனோ இடம் கொடுக்கவில்லை.
பழசாகி விட்டதாலேயே, சில நல்ல மனிதர்களை உதறி விட முடிகிறதா? என் காரும் அப்படித் தான் என்று, எனக்கு தோன்றுகிறது.
என் சமாதானங்களையும், நான் கண்டுபிடித்திருக்கும் காரணங்களையும், என் மனைவி ஏற்றுக் கொள்வாளா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், என் பழைய கார், இன்னும், என்னிடம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
—'சுதேசமித்திரன்' பொங்கல் மலரில் எம்.ஜி.ஆர்., எழுதிய கட்டுரையிலிருந்து.
நடிகர் #நிழல்கள் ரவி படித்து ரசித்து நமக்கு அனுப்பியது.
Ithayakkani S Vijayan with Plato Rajagopalan.....
-
1969 ல்....சேலத்தில் ஒரே ஆண்டில் கலைத்தங்கத்தின் இரண்டு காவியங்கள்
ஒடி.... வசூலிலும்.... அதிக நாட்களையும் கடந்து சாதனையாகும்.
******************************
மக்கள் திலகத்தின்
அடிமைப்பெண்
சாந்தி 133 நாட்கள்
வசூல் : 3,00,474.12
புரட்சிப்பேரரசின்
நம் நாடு
பேலஸ் 109 நாள்
வசூல் : 2,43,342.20
++++++++++++++++++++++
நகரில் அதிக வசூல் பெற்ற திரைப்படங்கள் மக்கள் திலகத்தின் அடிமைப்பெண், நம்நாடு...
இரண்டு மட்டுமே.
++++++++++++++++++++++++++
சேலம்,நாமக்கல் மாவட்டம்...
முழுவதும் திரையிட்ட
இந்த இரண்டு காவியங்களே
மகத்தான வெற்றி... மாபெரும் வசூல்
போட்டிக்கு வந்த.....
வெளிநாட்டில் எடுக்கபட்ட செம்மண் திரைப்படம் சேலம் உட்பட.....
அனைத்து சென்ட்ரிலும்
படுதோல்வியை தழுவியது....
(ஆதாரத்துடன் பதிவு....).........ukr...
-
மக்கள் திலகத்தின்
"வேட்டைக்காரன்"
1964 ல் பொங்கல் திருநாளில்...
வெளியாகி....
பல வெற்றிகளை படைத்து
வசூலில் பெரும் புரட்சியை கண்டு...
இன்று வரை வெள்ளித்திரையில்
56 ஆண்டுகளை கடந்து வருகிறது...
+++++++++++++++++++++++++++
நடிகப்பேரரசின் வேட்டைக்காரன்
திரைப்படம் வெளியான
அதே நாளில் வெளியான...
ஒரு வண்ணத்தை....
ஒரு புராணத்தை....
ஒரு பெரும் பட்டாளத்தை...
ஒரு பெரும் இயக்கத்தை...
ஒரு பெரும் முதலீட்டை....
ஒரு பெரும் தயாரிப்பை.....
திரையிட்ட அனைத்து ஊர்களிலும்....
கும்பகர்ணனை கூடாரத்துடனும்....
பங்கு கொண்ட
நடிக...நடிகரின்
கூடாரத்தை .....
வெளியான முதல் நாள்
முதல் காட்சியிலேயே
நிரந்தர தூக்கத்தை கொடுத்த....
++++++++++++++++++++
சுறுசுறுப்பின் டானிக்....
M. G.r.ன்.....வேட்டைக்காரன்
+++++++++++++++++++++++++
எளிமையான படபிடிப்பில்......
குறைந்த நாளில்....
குறைந்த செலவில்....
கறுப்பு வெள்ளையில்....
வெளிமாநில படப்பிடிப்பின்றி....
எடுக்கப்பட்டு...
சாதனை நாட்களான
100 நாட்களை வெற்றிக்கொண்டது
வசூல் பேரரசின்
வேட்டைக்காரன
+++++++++++++++++++++
சென்னை.....
சித்ரா....மேகலா...பிராட்வே...
சேலம் நியூசினிமா
100 வது வெற்றி நாளை கொண்டாடியது.
மற்றும் 18 திரையில் 50 நாளை கடந்தது..
**********-********************
ஆனால்... கும்பகர்ணன்
சென்னை சாந்தியிலும்
மதுரை தங்கம்
2 லட்சம் கூட வசூல் இன்றி படுதோல்வி..
மொத்தமே 13 திரையில் தான 50 நாள் ஒட்டபட்டது.
+++++++++++++++++++++++++
(கும்பகர்ணன் சென்னை
100 நாள் சாந்தி அரங்கு
தமிழ் விளம்பரம் தரவும்...
மேலே நமது சாதனை காவியமான...
வேட்டைக்காரன் திரைப்பட விளம்பரம்
கொடுக்கபட்டுள்ளது...)......ukr...
-
திருநெல்வேலி (நெல்லை )பெருநகரில் என்றுமே
சாதனை சக்கரவர்த்தி ...
மக்கள் திலகமே ஆவார்....
***************************************
கலை, வசூல் சக்கரவர்த்தியே....
ஆண்டு தோறும் பல வெற்றிகளை படைத்து இமாலய சாதனபுரிந்துள்ளார்....
+++++++++++++++++++++++++++++++++
நகரில்....தொடர்ந்து 7 ஆண்டுகளில்
9 திரைக்காவியங்கள் 100 நாட்களையும்
20 வாரங்களையும்.... 25 வாரங்களையும்
வசூலில் வெற்றி கொண்டு இதுவரை எந்த நடிகர்களும் ஏறேடுத்து பார்க்க முடியாத மிகப்பெரிய சாதனைகளாகும்.
++++++++++++++++++++++++++++
1969 ல் அடிமைப்பெண்
சென்ட்ரல் 120 நாள்
1970 ல் மாட்டுக்காரவேலன்
லட்சுமி 140 நாள்
1971 ல் ரிக்க்ஷாக்காரன்
லட்சுமி 101 நாள்
1972 ல் நல்லநேரம்
சென்ட்ரல் /அசோக் 105 நாள்
1973 உலகம் சுற்றும் வாலிபன்
சென்ட்ரல் 119 நாள்
1974 ல் உரிமைக்குரல்
லட்சுமி 180 நாள்
1974 ல் நேற்று இன்று நாளை
பார்வதி 119 நாள்
1975 ல் இதயக்கனி
சென்ட்ரல் 101 நாள்
1975 ல் பல்லாண்டு வாழ்க
பூர்ணகலா 101 நாள்
++++++++++++++++++++++++
வசூலில் இக்காவியங்கள் மூலம்
சரித்திரம் படைத்து சிகரத்தில்
புகழ் கொடியை.... வெற்றிக்கொடியை
பறக்கவிட்டார் பொன்மனச்செம்மல் அவர்கள்.
(ஆதாரத்துடன் தகவல்கள்....)....ukr.........
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*23/10/20 அன்று அளித்த*தகவல்கள்*
---------------------------------------------------------------------------------------------------------------சகாப்தம் நிகழ்ச்சியை பொறுத்தவரை தமிழக வரலாற்றில் எம்.ஜி.ஆர். என்கிற அந்த மூன்றெழுத்தை கடந்து போக முடியாது என்கிற முக்கியத்துவம் வாய்ந்த அந்த மன்னாதி மன்னன், மக்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ள மகோன்னத மாமன்னரின் வரலாறு குறித்து பேசி மகிழ்ந்து கொண்டிருக்கிறோம் 1971ல் தேர்தல் முடிந்த பிறகு கருணாநிதியிடம் எம்.ஜி.ஆர். சுகாதார துறை என்று கேட்பதற்கு பதிலாக மெடிக்கல் மினிஸ்டர் பதவி கேட்டதாகவும், ஹெல்த் மினிஸ்டர் என்று கூட கேட்க தெரியாமல் மெடிக்கல் மினிஸ்டர் என்ற பதவி கேட்டதாக தி.மு.க.வினர் கிண்டலும் கேலியும் செய்தார்கள் .ஆனால் அவர் காலத்தை சொல்லி, பெயரை சொல்லி எத்தனையோஆயிரக்கணக்கான** பேராசிரியர்கள், கல்வித்துறையில் வல்லுநர்கள் உருவாகி* இருக்கிறார்கள் . எம்.ஜி.ஆர். காலத்தில்தான் எத்தனையோ பல்கலை கழக வேந்தர்கள் உருவானார்கள் .வேலூரில் ஜி.விஸ்வநாதன் தலைமையில் வி.ஐ.டி.பல்கலை கழகம். கும்மிடிப்பூண்டியில் முனிரத்தினம் தலைமையில் ஆர்.எம்.கே.பொறியியல் கல்லூரி,மற்றும் பல்கலை கழகம் , சோழிங்கநல்லூரில் ஜேப்பியார் தலைமையில் சத்யபாமா பல்கலை கழகம், பல்லாவரம் அருகில் ஐசரி கணேஷ் தலைமையில் வேல்ஸ் பல்கலை கழகம், மதுரவாயல்* அருகில் ஏ.சி.சண்முகம்* தலைமையில் எம்.ஜி.ஆர். பல்கலை கழகம் என்று தனது ரசிகர்கள், பக்தர்கள், தொண்டர்களாக இருந்தவர்களை பல்கலை கழக வேந்தர்களாக உருவாக்கியவர் எம்.ஜி.ஆர். கல்வித்துறையில் மறுமலர்ச்சியும் நூற்றுக்கணக்கான பொறியியல் கல்லூரிகளும், மருத்துவ கல்லூரிகளும் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில்தான் உருவாகியவை என்பதை தி.மு.க.வினர் மறந்திருக்க மாட்டார்கள் .எம்.ஜி.ஆர். தனது ஆட்சி காலத்தில் அமைச்சர்களை ஜப்பான் , போன்ற கல்வித்துறை, தொழில்துறையில் அசுர வளர்ச்சி பெற்ற நாடுகளுக்கு அனுப்பி ,விவரங்களை சேகரிக்க செய்து , தமிழ்நாடு கல்வித்துறையில் பிரதான இடத்தை பெறும் வகையில் ஒரு ஆக்க சக்தியாக திகழ்ந்தார் என்பது வரலாறு .
வெளியூரில் ஒரு விருந்தினர் மாளிகையில் எம்.ஜி.ஆர்.அவர்கள் 3 நாட்கள் தங்கியிருந்து அரசு விழாக்களில் கலந்து கொள்கிறார் .அந்த விருந்தினர் மாளிகையை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு* யாரும் எளிதில் உள்ளே நுழைய* முடியாதபடி காவலர்கள் பாதுகாப்பிற்கு நிற்கிறார்கள் . சில அதிகாரிகளும்* அவர்களுடன் இருக்கிறார்கள். நிகழ்ச்சிகள் முடிந்து ஒருநாள் காலையில் எம்.ஜி.ஆர். காரில் புறப்படும் சமயம் தடுப்பு கட்டைகளை தாண்டி ஒரு தொண்டர் எம்.ஜி.ஆரை பார்க்க முற்படும்போது ஒரு அதிகாரி அவரை தடுத்து அடிக்கிறார் .அந்த தொண்டர் ,தலைவரே,என்னை அதிகாரி அடிக்கிறார் என்று குரல் எழுப்ப ,எம்.ஜி.ஆர். அதை கேட்டு காரை நிறுத்த சொல்கிறார் .அதற்குள் அந்த அதிகாரி கூட்டத்திற்குள் நுழைந்து* மறைந்து கொள்கிறார் .அந்த தொண்டரை அழைத்து கொண்டு மீண்டும் விருந்தினர் மாளிகைக்கு* *அவருடன்*சென்று மதிய உணவு அருந்துகிறார் . அவரை பற்றி நலம் விசாரித்து, விவரங்கள் சேகரித்த பின் அவர் தோளில் தட்டி கொடுத்து ,காவல்துறை அதிகாரியை பார்த்து ,என்னை பார்க்க வந்த தொண்டனை இப்படி அடித்து துன்புறுத்திய அதிகாரி யார் என்று கேட்கிறார் . அடித்த அதிகாரி கண்ணுக்கெட்டாத தூரம் சென்றுவிட்டார் . ஆனாலும் எம்.ஜி.ஆர்.பிரச்னையை* விடுவதாக**இல்லை . என்னுடைய தொண்டனை அடித்த அதிகாரியை என் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துங்கள் .அவரை பார்க்காமல் இங்கிருந்து நான் நகருவதாக இல்லை என்றார். மற்ற அதிகாரிகள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டும், கையை பிசைந்து கொண்டும் நிற்கிறார்கள்**எம்.ஜி.ஆர்.புறப்பட்டதும் பாதுகாப்பிற்கு செல்லும் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் நிறைந்த கார்கள் முன்னும் பின்னும் செல்வதற்கு தயாராக உள்ளன. ஆனால் எம்.ஜி.ஆர்.நகராமல் அங்கேயே நிற்கிறார் .ஏறத்தாழ 10 நிமிடங்கள் மேல் ஆகிவிட்டது .ஒரு* காவல்துறை**அதிகாரி ஓடிப்போய்* ஒரு நாற்காலி கொண்டுவந்து கொடுத்து எம்.ஜி.ஆரை அமரச்சொல்கிறார் .எம்.ஜி.ஆர். இதில் ஒன்னும் குறைச்சல் இல்லை. என் தொண்டனை தாக்கிய அதிகாரியை பார்க்காமல் இங்கிருந்து புறப்படுவதாக இல்லை என்று கூறி அமர்கிறார் .அந்த காவல்துறை அதிகாரி யார் என்று கண்டுபிடித்து அவருக்கு தகுந்த தண்டனை*வழங்கப்பட்ட செய்தி அறியாமல் நான் புறப்பட மாட்டேன் என்று பிடிவாதம் செய்கிறார் .சிறிது நேரம் கழித்து, மாவட்ட ஆட்சியர் வந்து எம்.ஜி.ஆரை சந்தித்து ,அந்த காவல்துறை அதிகாரி பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் . அவர் தன்* கைப்பட மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துள்ளார் .என்கிற விவரங்களை கேட்டு அறிந்த பின் ,அந்த தொண்டனை அழைத்து ,இனிமேல் இந்த மாதிரி தவறு செய்து காவலர்களிடம் அடிபடாதே, பார்த்து நடந்து கொள் என்று அறிவுரை சொல்லி ,**பத்திரமாக செல் என்று வழியனுப்பி வைத்தார் . இப்படி ஒரு தொண்டன் காவல்துறை அதிகாரியால் அடிபட்டதற்கு , அதிகாரிகள் மீது கோபப்பட்டு ,தகுந்த நடவடிக்கை எடுக்க செய்து , தொண்டனுக்கும் அறிவுரைகள் சொல்லி அனுப்பிய*முதல்வர் இந்தியாவில் இருக்கிறாரா என்று கேட்டால்,* ஆமாம் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்.தான் இந்த வரலாற்று செய்திக்கு உதாரணமாக திகழ்ந்தவர் .
சென்னை தி.நகர் ஆற்காடு தெருவில் உள்ள எம்.ஜி.ஆர். அலுவலகம் அருகில்தான் நடிகர் சிவகுமார் குடியிருந்தார் .அவர் வீட்டு மொட்டைமாடியில் இருந்து பார்த்தால் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். பதவியில் இருந்தபோதும்*நாள்தோறும் சுமார் 50க்கு மேற்பட்ட நரிக்குறவர்கள் குடும்பசகிதமாக வாயிலில் காத்திருப்பார்கள் என்பது கண்கூடாக தெரியும் .*.அவர்களும், அவர்கள் கைகளில் சுமந்துள்ள குழந்தைகளும் அழுக்கான , கிழிந்த உடைகளுடன், பல நாட்கள் குளிக்காத நிலையில் , பெண்கள் குட்டை பாவாடை அணிந்தும், ரவிக்கையுடனும், பல்வேறு பாசி மணிகள் அணிந்தவாறும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் தலைமுடிகள் கலைந்த நிலையில், குழந்தைகள் பெரும்பாலும் சட்டையில்லாமல், மூக்கு ஒழுகலுடன் இருப்பார்கள் அலுவலகத்தில் இருந்து எம்.ஜி.ஆர். வெளியே வரும்போது அவர்கள் அவரை சூழ்ந்து கொள்வார்கள் .அவர்களின் குழந்தைகளை அப்படியே வாஞ்சையுடன் கைகளில் ஏந்தி,மார்போடு அணைத்து கொள்வதோடு மட்டுமல்லாமல், தலையை கோவிவிட்டு* நெற்றியில் முத்தமிட்டு ,கொஞ்சுவாராம் . எந்த ஒரு தனி மனிதனும் அவர்கள்மீது ,அவர்கள் அணிந்துள்ள ஆடைகள், மற்றும் தோற்றங்களை பொருட்படுத்தாது மனிதநேயமிக்க அன்பை ,பாசத்தை, கருணையை காட்டி அவர்களை மகிழ்வித்ததாக எந்த தலைவரும் இப்படி நடந்து கொண்டதாக நான் கேள்விப்பட்டதும் இல்லை* கண்டதும் இல்லை* ஆனால் எம்.ஜி.ஆர். அவர்கள் மனிதநேய மிக்க மாணிக்கமாக திகழ்கிறார் . இது என்றோ ஒரு நாள் நடக்கும் நிகழ்ச்சி அல்ல. அனுதினமும் தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சி என்பதை என் கண்ணார கண்டு* வியப்பும், ஆச்சர்யமும் அடைந்தேன் .உண்மையிலேயே மனிதர்கள்மீது அன்பை பொழிகின்ற தலைவராக இவரைத்தான் காண முடியும் அன்பு இருந்தால்தான் இப்படியெல்லாம் நடந்துகொள்ள முடியும் .. அவர் அருவருப்பை பார்க்க மாட்டார் .தன் ஜிப்பாவில் இருந்து அந்த குழந்தைகளுக்கு நோட்டு கட்டுகளை அள்ளி அள்ளி கொடுத்ததை நானே பல தடவைகள் பார்த்துள்ளேன் .இப்படியும் இந்த பூவுலகில்இப்படி* ஒரு மனிதரா என்று நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார் .*அது மட்டுமல்ல, அவர் பட வாய்ப்புகள் தேடி வந்தபோது யானை கவுனியில் இருந்து நடந்தே பல ஸ்டுடியோக்களுக்கு சென்றுள்ளார் . அப்போது நாடக நடிகர்கள் சிலர் எதிர்படும்போது , சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆகிவிட்டது, ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கேட்டால் , தன், கையில் உள்ள பத்து ரூபாயில் இருந்து மூன்று ரூபாயை அவருக்கு தந்துவிடுவாராம் .இவருக்கே,நாளைய வருமானம் உறுதி இல்லை என்ற நிலையிலும் தர்மம் செய்ய தவறவில்லை என்றும் நடிகர் சிவகுமார் செய்தி அளித்துள்ளார் .**
திரு.கா.லியாகத் அலிகான் பேட்டி :* ஒரு இஸ்லாமிய சகோதரர் என்.கே.எஸ்.என்ற பள்ளி ஒன்றை நடத்துகிறார் .அந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு வரைதான் படிக்க முடியும் . பிறகு எவ்வளவோ முயன்றும் கூட, அந்த இஸ்லாமியர்கள் வேறு கட்சியை சார்ந்தவர்கள் என்று ஒரு பிம்பத்தை சிலர்*உருவாக்கி* அவர்களுக்கு உரிய உரிமம் கிடைத்து விடாமல் செய்கிறார்கள். இந்த தகவல்கள் எனக்கு தெரிவிக்கப்படுகிறது . இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர நீங்கள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களிடம் எங்களுக்காக சிபாரிசு செய்து உரிமம் பெற்றுத்தர முயல வேண்டும் என்றார்கள் .* அப்போதெல்லாம் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களை அவ்வளவு எளிதில் சந்தித்துவிட முடியாது .ஏனென்றால் அவ்வளவு பிசியாக இருந்தார் . இருப்பினும் காலையில் எப்போதும்*9 மணிக்குள் அவர் வீட்டுக்கு சென்றுவிட்டால் எப்பேர்ப்பட்ட சாமான்ய மனிதனும்* .பாமரர்களும் கூட சந்தித்து பேசலாம் . அவர் வீட்டில் குறைந்த பட்சம் 300 பேராவது பிரச்னைகளுக்காக சந்தித்து பேச காத்திருப்பார்கள் .இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த 300* பேர்களையும் பார்த்து விஷயங்களை கேட்டறிந்து அதற்கு தீர்வு கண்டபின் தான் கோட்டைக்கு புறப்படுவார் என்பது யாருமே நம்பமுடியாத செய்தி .* ஒரு நபரை பார்த்த மாத்திரத்தில் அவனுடைய பிரச்னைகளை எளிதில் புரிந்து கொள்ளும் அசாத்தியமான , நுட்பமான அறிவு அவருக்கு வரப்பிரசாதமாக இருந்தது . அந்த 300 பேர்கள் மனதிலும் புகுந்து வெளியே வந்துவிடுவார் . என்ன உன் பிரச்னை என்பார்* வந்த நபர் விஷயத்தை சொன்ன உடனேயே ,அவன் சொல்லுகின்ற விஷயத்தில் உண்மை இருக்கிறதா என்று தன் எக்ஸ்ரே கண்கள் மூலம் கண்டுபிடித்து, அருகில் உள்ள உதவியாளரை திரும்பி பார்த்தால் அவர்*மூலம் அவன் தகுதிக்கேற்றார் போல,தேவைக்கு தகுந்தாற் போல* பணம் அள்ளி கொடுப்பார் .* எம்.ஜி.ஆர். என்கிற மாமனிதர் ஒரு ஸ்கேனிங் பெர்சனாலிட்டி ..அவரிடம் பொய்யான செய்திகளை சொல்லி எதையும் வாங்க முடியாது . அதே சமயம் உண்மைகளை சொல்லி* எதுவும் இல்லாமல் வெறும் கையுடன் திரும்பிய சரித்திரம் கிடையாது தங்களிடம் ஒன்றுமில்லை என்று சொல்லி வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் வாரி வழங்கிய மனித கடவுள் எம்.ஜி.ஆர்.*.
ஒரு முறை காயல்பட்டினத்தில் உயர்நிலை பள்ளி, மேனிலைப்பள்ளி நடத்தும் இஸ்லாமியர்கள் அவர்கள் பிரச்னைக்காக என்னை அணுகியபோது ,அவர்களை அழைத்து கொண்டு சென்னைக்கு வந்தபோது சற்று நேரமாகிவிட்டதால் ,அவர் இல்லத்திற்கு செல்லாமல் நேராக கோட்டைக்கு அழைத்து சென்றேன் .முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களை சந்திக்க செல்லும்போதெல்லாம் எனக்கு எப்போதும் சிறப்பு அனுமதி கிடைக்கும் எனக்கும் அந்த வகையில் சில உரிமைகள் அளித்து வந்தார்கள் . என்னை பார்த்ததும் என்ன பிரச்னை என்று கேட்டார். என்னுடன் வந்தவர்களை அறிமுகப்படுத்தி பிரச்னைகளை எடுத்துரைத்தேன் வந்தவர்களிடம் சில கேள்விகள் கேட்டு அவர்களுடைய பிரச்னையில் உண்மை இருக்கிறது என்பதை புரிந்து கொண்டார் ..உடனே இன்டர் காமில் கல்வி அமைச்சர் அரங்கநாயகத்தை வர சொன்னார் .அவர் வந்ததும் இவர்களின் கோரிக்கைகள் மனு மீது உரிய நடவடிக்கையை விரைந்து*எடுக்க வேண்டும் .அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு,சில நிபந்தனைகளின்படி ,வேண்டிய வசதிகளுடன்* கல்வி நிலையங்களை நிறுவவும், நடத்தவும் உத்தரவிட வேண்டும் என்றார் .அதன்படி சில நாட்களில் உரிய அனுமதி கிடைத்தது .இப்படி காயல்பட்டினத்தில் ஒரு இஸ்லாமியர் நடத்தும் பள்ளிக்கு எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்து உரிய அனுமதி கொடுத்தார் . அதே காயல்பட்டினத்தில் ஒரு பிரச்னைக்காக முதல்வர் எம்.ஜி.ஆர். மீது கல்லெறிந்த சம்பவமும் நிகழ்ந்தது .அதாவது திருச்செந்தூரில் இடை தேர்தல் நடைபெற்ற நேரத்தில், ஒரு பொது கூட்டத்தின்போது சில இளைஞர்கள் ஏதோ ஆவேசத்தில் கல்லெறிந்தார்கள் . சிறிது நேரத்தில் எம்.ஜி.ஆர். அவர்களே, நான் நலமாக இருக்கிறேன். கழக தோழர்கள் அமைதி காக்க வேண்டும். எந்த ஒரு அசம்பாவிதத்திலும் ஈடுபடக்கூடாது என்று தானே ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு வெளியிட்டார் .அண்ணா தி மு.க. தொண்டர்கள் ,தி.மு.க. தொண்டர்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்துவிட கூடாது என்பதில் கவனமும், எச்சரிக்கையும்*செய்து அவர்களுக்கு அன்பு கட்டளை இட்டார் .இந்த சம்பவத்தை நான் குறிப்பிட்டு சொல்லவேண்டிய காரணம் என்னவென்றால் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு இஸ்லாமியர் நடத்தும் பள்ளிக்கு சில நிபந்தனைகளுடன், சட்ட விதிகளுக்கு உட்பட்டு, வேண்டிய வசதிகளுடன்* உரிய அனுமதியை கொடுத்தார் என்பது வரலாறு .அதே சமயத்தில் தி.மு.க.வினர் எம்.ஜி.ஆருக்கு திடீரென இஸ்லாமியர் மீது அன்பு வர காரணம் என்ன. ஒரு காலத்தில் அவர்களை வெறுத்தவர் தானே இவர் என்று உண்மைக்கு மாறாக சில கருத்துக்களை சொல்லி பரப்பினர் ,கதை கட்டினர் .வேண்டுமென்றே சில பொய்யான செய்திகளை சொன்னதும் உண்டு .எந்த ,எப்படிப்பட்ட கருதுக்களாக இருந்தாலும் , அந்த கருத்துக்களை எதிர்நோக்கி,அஞ்சாமல்எதிர்வரும் விளைவுகளை பற்றி கவலைப்படாமல் தைரியமாக* தன்னுடைய பதிலை,கருத்துக்களை சொல்வதில் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் யாருக்கும் சளைத்தவர் அல்ல .இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .
எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர். குறித்து பல்வேறு விஷயங்களை அள்ளி அள்ளி குவித்து வருகிறார்கள் .பல்வேறு நண்பர்கள் இன்றைக்கும் அவரது படங்களின் பாடல்களின் வரிகளை கேட்டு ரசித்து, மகிழ்ந்து அவற்றால்தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று மிக பெரிய உயரத்தில் இருந்து* விளிம்பு நிலை மனிதர்கள் வரையில் ஆயிரமாயிரம் கைகள் , ஆயிரமாயிரம் கண்கள், ஆயிரமாயிரம் நெஞ்சங்கள் துடித்து கொண்டிருக்கின்றன .அந்த துடிப்புக்கு காரணம் அவர் திரைப்படம் என்பதை ஒரு கருவியாக பயன்படுத்தியதோடு ,ஒரு அறிவு ஆயுதமாகவும், மக்களுக்கு கற்று தந்த ஒரு பாடமாகவும், பல்கலை கழகமாகவும் பயன்படுத்தினார் .அதை தன்னுடைய வாழ்க்கைக்கான ஏணியாக பயன்படுத்தினார் .அந்த வாழ்க்கை ஏணியை பயன்படுத்தியதாக ,தன்னை நம்பி வந்த ரசிகர்களை தான் ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்பதற்காக ,தன் வாழ்நாளில் அவர்களுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தார் .அதாவது அரசியலுக்கு வருபவர்கள் எல்லாம் நல்லவர்களாக இருப்பதில்லை அரசியலுக்கு வந்தவர்கள் எல்லாம் நல்லவர்களாக நீடிப்பதில்லை என்பதை ரூசோ சொன்னார் என்பதை எம்.ஜி.சக்கரபாணி அவர்கள் தம்பி எம்.ஜி.ஆருக்கு அடிக்கடி நினைவுபடுத்தினார் .அரசியலில் பல நுட்பங்களை எம்.ஜி.ஆர். தெரிந்து கொண்டதனால் தானே முன்னோடியாக இருந்து பல விஷயங்களை நடத்திக்காட்டினார் .தன்னுடைய கட்சி தொண்டர்கள், முக்கியஸ்தர்கள் கட்சிக்கு விசுவாசியாக இருக்க வேண்டியே அண்ணா தி.மு.க. கட்சி கொடியை பச்சை குத்துவது அவசியம் என்று எடுத்துரைத்தார் .இது காட்டுமிராண்டித்தனம், முட்டாள்தனம் என்று கருத்து சொன்னவர்களை வாயடைக்க செய்து தானே முன்னுதாரணமாக திகழ்ந்து பச்சை குத்தி கொண்டார் .பல்வேறு விஷயங்களிலும் முன்மாதிரியாக நடந்து கொண்டார் .பல முன்மாதிரிகளை உருவாக்கினார் ..தமிழ் தமிழ் என்று பேசியவர்கள் கூட*தமிழை விடுத்து தங்களின் குடும்பங்கள் இன பெருக்கத்தை உருவாக்குவதில் பெரிதும் விருப்பம் காட்டிய நேரத்தில் ,எங்கும் தமிழ், எதிலும் தமிழ், பெரியாரின் தமிழ் எழுத்து சீர்திருத்தம், தமிழ் பல்கலை கழகம் சுமார் ஆயிரம் ஏக்கரில் ,அமைய உருவாக்க திட்டம் என்று சிந்தித்து செயல்பட்டார் .தமிழனாக வாழ்ந்தார் தமிழனாக மலர்ந்தார் .தமிழ் மண்ணில் மறைந்தாலும் மறையாது நிலைத்து நிற்கிறார் .என்றால் அதற்கு காரணம் தமிழ் மொழியின் மீது அவருக்கு இருந்த பற்றுதான் .யாராவது ,எங்கேயாவது தமிழ் மொழியை பற்றியோ, தமிழனை பற்றியோ, ஏதாவது அரைகுறையாக சொன்னால் கூட கொதித்து எழுந்து கோபப்பட்டதோடு தன் கடும் கண்டனத்தை பதிவு செய்த தமிழராக திகழ்ந்தார் .தமிழுக்கு பெருமை சேர்த்தார்* ஒருமுறை* முதல்வர் பதவி பற்றி கேள்வி எழுப்பியபோது ,இன்று கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் அவர்தான் முதல்வர் நாற்காலியை அலங்கரித்திருப்பார் . அவரது அமைச்சரவையில் நான் பங்கு கொண்டிருப்பேன் என்று பேட்டி அளித்தவர் எம்.ஜி.ஆர்.* திரையுலகில் அள்ளி கொடுப்பதில் எம்.ஜி.ஆருக்கு முன்னோடியாகவும், குருவாகவும் இருந்தவர்தான் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் .
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
--------------------------------------------------------------------------------
1.என்னம்மா சௌக்கியமா - கொடுத்து வைத்தவள்*
2.புதியதோர் உலகம் செய்வோம் - பல்லாண்டு வாழ்க*
3.நேருக்கு நேராய் வரட்டும் - மீனவ நண்பன்*
4.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*
5.மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் - தெய்வத்தாய்*
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.
சகாப்தம் நிகழ்ச்சி என்பது தமிழக வரலாற்றில் அந்த மூன்றெழுத்து மந்திரமான எம்.ஜி.ஆர். என்கிற மகோன்னதமான மாமனிதரை கடந்து போக முடியாது என்கிற முக்கியத்துவம் வாய்ந்த அந்த மன்னாதி மன்னன் , மக்கள் மனதில் ஆழமாக வீற்றிருக்கின்ற அந்த ராஜராஜனின் வாழ்க்கை வரலாறை அயராமல் பேசிக் கொண்டு இருக்கிறோம் . 1982ல் சத்துணவு திட்டத்தை முதல்வர் எம்.ஜி.ஆர். துவக்கி வைக்கிறார் .இந்த திட்டத்தை துரிதமாக துவக்கி வைக்க எப்படி உங்களுக்கு யோசனை தோன்றியது என்று நிருபர்கள் கேட்க, பதிலுக்கு நான் சிவகாசி அருகே நடந்த ஒரு விபத்தை பற்றி விசாரிக்க சென்றிருந்தேன் அந்த விபத்தில் சிக்கி காயமடைந்த மக்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு திரும்பும்போது, ஒரு இடத்தில வயல்வெளியில் பணியில் இருந்த பெண்கள் எனது காரை பார்த்ததும் தங்கள் கைகளில் தவழ்ந்த குழந்தைகளுடன் ஓடிவந்து கொண்டிருந்தனர் .அதை கண்டநான் காரை நிறுத்த சொன்னேன் என்றார் எம்.ஜி.ஆர். அப்போது மாலை 4.30மணி இருக்கும். அவர்களிடம் நீங்கள் எல்லாம் மதிய உணவு சாப்பீட்டீர்களா ,உங்கள் குழந்தைகள் சாப்பிட்டார்களா என்று கேட்டேன் .இல்லை.ஐயா, நாங்கள் காட்டில் வேலை செய்துவிட்டு கூலி வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்றுதான் சமைத்து சாப்பிடுவோம் என்றனர் குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்தீர்களா என்று கேட்டதற்கு இல்லை.அவர்களும் எங்களுடன் பட்டினிதான் கிடப்பார்கள் .வீட்டிற்கு சென்றுதான் அவர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்றனர் .அன்றுதான் எம்.ஜி.ஆர். முடிவெடுத்தார் . எப்பாடு பட்டாவது அரசு சார்பில் ஒருவேளையாவது குழந்தைகளுக்கு உணவளிக்க ஏற்பாடு செய்வது என்று .அதன்படி திரை உலகை சார்ந்த நடிகர் நடிகைகள் மூலம் கலை நிகழ்ச்சிகள், நட்சத்திர இரவு போன்ற நிகழ்ச்சிகள் மூலம் நிதி திரட்டி இந்த திட்டத்தை துவக்கினார் .இதனால் பல கோடி குழந்தைகள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து வந்தனர் என்று திருச்சி அருகில் உள்ள பாப்பாக்குறிச்சி என்கிற இடத்தில நிருபர்களுக்கு எம்.ஜி.ஆர். பேட்டி அளித்தார் .
மதுரையில் ஒரு முறை அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற மாநாட்டை எம்.ஜி.ஆர். நடத்தினார் . அந்த மாநாட்டின் ஊர்வலத்தை பார்வையிட தமுக்கம் மைதானத்தில் ஒரு மேடை அமைக்க சொல்லி அங்கிருந்து அந்த ஊர்வலத்தை பார்வையிடுகிறார் . அந்த மேடையில் எம்.ஜி.ஆர். ஏறும்போது , மேடைக்கு பின்புறம் 70 வயதான ஒரு மூதாட்டி ஒரு பானையில் மோர் கொண்டுவந்து விற்று கொண்டிருக்கிறார் .அதை பார்த்துவிட்டு இருக்கையில் அமர்கிறார் எம்.ஜி.ஆர். சிறிதுநேரம் ஊர்வலத்தினரை பார்த்து கையசைத்து விட்டு பின்புறம் திரும்பி பார்க்கும்போது அந்த வயதான மூதாட்டியை காணவில்லை . மறுபடியும் சிறிது நேரம் ஊர்வலத்தினரை பார்த்து கையசைத்துவிட்டு ,சில நிமிடங்கள் கழித்து மேடையின் பின்புறம் திரும்பி பார்க்கிறார் . இதை கவனித்த அரசு அதிகாரி ,எம்.ஜி .ஆரிடம் என்ன விஷயம்.அடிக்கடி பின்புறம் திரும்பி பார்த்த வண்ணம் இருக்கிறீர்கள் .ஏதாவது பிரச்னையா, நான் விசாரிக்கட்டுமா எனும்போது ,ஒன்றுமில்லை ,மேடையின் பின்புறம் ஒரு வயதான மூதாட்டி பானையில் மோர் விற்று கொண்டிருந்தார் .அவரை திடீரென்று காணவில்லை அவரை கொஞ்சம் தேடி பார்க்க சொல்லுங்கள் என்றார் . அந்த அதிகாரி ,கீழே உள்ள காவல்துறை அதிகாரியிடம் சொல்லி தேடி பார்த்து மேடைக்கு அழைத்து வருகின்றனர் . மேடைக்கு வந்ததும் எம்.ஜி.ஆர். தன் ஜிப்பாவில் இருந்து கட்டு கட்டாக .பணத்தை அள்ளி அந்த மூதாட்டியின் கைகளில் கொடுத்து ஏதாவது கடை வைத்து பிழைத்த கொள்ளுங்கள் என்று கைகள் நிறைய அள்ளி கொடுத்தாராம் . அப்படி பாவப்பட்ட மனிதர்கள் , விளிம்பு நிலை மனிதர்கள் ,சொந்த உழைப்பினால் முன்னுக்கு வருபவர்கள் போன்றவர்களை தேடி பிடித்து உதவிகள் செய்கிற மனோபாவம் எம்.ஜி.ஆருக்கு இருந்தது என்பதற்கு இந்த சம்பவமே ஒரு உதாரணம் இதை பலரும் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார்கள் .
திரு.கா. லியாகத் அலிகான் : சமீபத்தில் நீங்கள் பேசியது போல ,ராஜா தேசிங்கு படத்தில் வரும் ஆதி கடவுள் ஒன்றேதான் அதில் பேதம் கிடையாது என்ற பாடலில் தனது சிந்தனையை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வெளிப்படுத்தி இருக்கிறார் .என்னுடன் சம்பந்தப்பட்ட விஷயம் ஒன்றை குறிப்பிடவேண்டும் என்றால் உடுமலைபேட்டையில் எனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கலந்துகொள்ள இருந்தபோது ,நான் என் மனைவியுடன் திருமண வரவேற்பு மேடைக்கு செல்ல வேண்டும் என்று எனது பெற்றோர்களிடம் வேண்டுகோள் வைத்தபோது ,நமது மத கோட்பாடில் அப்படி ஒரு வழக்கம் கிடையாது என்று மறுப்பு தெரிவித்தார்கள் .பின்னர் ஜமாத்காரர்கள் தெரிவித்த கருத்துக்களின்படி மணமக்கள் வரவேற்பு மேடையில் அமர்வது அவ்வளவு சரியாக,நன்றாக இருக்காது என்றனர் .இந்த கருத்துக்கள், எதிர்ப்புகளை எல்லாம் மீறி , நான் மணமகளை அழைத்து கொண்டு தாஜ் திரையரங்கிற்கு நேராக வந்துவிட்டேன் .இதை கண்ட எனது தந்தை மிகவும் வேதனை அடைந்து, நீ மணமகளுடன் வரவேற்பு மேடையில் அமருவதைவிட ,உரிமையாளர் அலுவலகத்தில் மணமகளை அமரவைத்துவிட்டு எம்.ஜி.ஆர். அவர்களை வரவழைத்து ஆசீர்வாதம் வாங்கிக்கொள்/வேண்டுமானால் நீ தலைவர் எம்.ஜி.ஆரிடம் கேள். ,அவர் விருப்பப்பட்டால் மேடையில் மணமகளை அமரவை .எனக்கு ஒன்றும் ஆட்செபனை இல்லை. . நமது ஜமாத்காரர்கள் விருப்பத்திற்கு மாறாக நடந்து கொள்வது நமது பாரம்பரியத்திற்கு,குடும்பத்திற்கு நல்லதல்ல, எதற்கும் யோசித்து முடிவு எடு என்றார் .அதன்படி சிறிது நேரம் யோசித்து ,மணமகளை உரிமையாளர் அலுவலகத்தில் அமரவைத்து விட்டு ,நான் வரவேற்பு மேடையில் சென்று அமர்ந்தேன் . சற்று நேரத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திருமண மண்டபத்திற்கு காரில் வந்து இறங்கினார் . என்னை பார்த்தவுடன் காதில் சாந்தி முகூர்த்தம் முடிந்துவிட்டதா என்று மெதுவான குரலில் கேட்டார் .இந்த கேள்வியில் இருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம் என்னுடன் எந்த அளவு நட்பும், பாசமும், அன்பும் புரட்சி தலைவர் எம்.ஜி..ஆர் வைத்திருந்தார் என்பதை . இல்லை அண்ணா என்று சொன்னதும், என் தோளின்மீது கையை போட்டு அன்பாக தட்டி கொடுத்து,பின்னர் அவருடைய இருக்கையில் அமர்ந்துவிட்டு ,மணமகள் எங்கு இருக்கிறார் என்று கேட்டார் .நான் விஷயத்தை விவரமாக கூறினேன் . மணமகள் அருகில்தான் இருக்கிறார். அண்ணன் உத்தரவிட்டால் நான் மேடைக்கு அழைத்து வருகிறேன் என்றேன் . அவர் வேண்டாம் என்று சொன்னார் .மணமகளை மேடையில் இருக்கையில் அமர செய்வதை உன் பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை என்கிறாய். ஜமாத்காரர்களுக்கும் அதில் விருப்பமில்லை .எனவே இஸ்லாம் மத கோட்பாடின்படி ,நாம் நடந்து கொள்வது எப்போதும் நல்லது .இல்லையென்றால் உன்னையும், உன் மனைவியையும் குறை சொல்லி பின்னர் பேசுவார்கள். அதற்கு இடம் தரவேண்டாம் .என்று சொல்லி ,என்னையும், என் மனைவியையும் வாழ்த்தி சுமார் 35 நிமிடங்கள் மேடையில் இருந்தபடி பேசினார் .அப்போதுதான் புரட்சி தலைவர் ஒரு சட்டத்தை இயற்றுவது பற்றி பேசினார் .அவர் பேசும் சமயம் ஒருவர் குடித்துவிட்டு, அவரை பார்த்து இருகரம் கூப்பி வணக்கம் வைத்தபடி இருந்தார் .ஒருமுறை எம்.ஜி.ஆர். வணக்கம் சொன்னார். சில நிமிடங்களில் மீண்டும் வணக்கம் வைத்தார் .அதற்கும் பதில் வணக்கம் சொன்னார் எம்.ஜி.ஆர். சிறிது நேரம் கழித்து மூன்றாவது முறையாக வணக்கம் தெரிவித்தபோது அவர் குடி த்துள்ளார் என்று எம்.ஜி.ஆர்.கண்டுபிடித்துவிட்டார் .இந்தமுறை வணக்கம் தெரிவிக்காமல் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார் .அப்போது ஒரு சட்டத்தை பற்றி விளக்கமாக பேசினார் .தமிழக அரசு இது போல தன்னிலை தெரியாமல் மது அருந்துபவர்களுக்குமன்னிக்க செய்யாமல், முதல்முறையாக இருந்தால் மூன்று மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் . அடுத்த முறை தவறு செய்தால் ஓராண்டு சிறை தண்டனை கிடைக்கும் . மூன்றாவது முறை தவறு செய்தால் நாடு கடத்தப்படுவார்கள் என்று எனது திருமண மேடையில்தான் இந்த சட்டம் இயற்றப்போவதை பற்றி பேசினார் . பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருமூர்த்தி மலை அருகில் உள்ள ஆய்வு மாளிகையில் ஓய்வெடுக்க சென்றார் .நாங்கள் சிலர் அவருக்காக உணவை எடுத்துக்கொண்டு சென்றோம் அங்கு வந்திருந்த சில எம்.எல்.ஏக்கள், முக்கிய விருந்தினர்கள் அந்த உணவை சாப்பிட்டு ஒரு திருப்தி இல்லாத சூழலை உருவாக்கினார்கள். அதாவது உணவு நன்றாகத்தான் இருக்கிறது .சிக்கன் சமைத்தது சரியில்லை என்பதுபோல பேசி கொண்டதை எப்படியோ எம்.ஜி.ஆர். அவர்கள் தெரிந்து கொண்டார்கள். இருப்பினும் எதையும் வெளியே காட்டிக்கொள்ளாமல் தொடர்ந்து சாப்பிட்ட வண்ணம் முதல்வர் இருக்கிறார் .நான் மறுபடியும் அவருக்கு பரிமாற உள்ளே சென்றேன் .அப்போது அங்குதலைமை தாங்கிய குழந்தைவேலு , திருப்பூர் மணிமாறன், கோவைத்தம்பி, மருதாச்சலம், அண்ணா நம்பி போன்றவர்கள் எல்லாம் இருந்த சூழ்நிலையில் கல்யாண சாப்பாடு மிகவும் ருசியாகவும், அருமையாகவும் இருந்தது என்று என்னிடம் குறிப்பிட்டார் .ஆனால் முதலில் சாப்பிட்ட எம்.எல்.ஏக்கள் , உணவு சுமாராகத்தான் இருந்தது என்று சொன்னார்கள். புரட்சி தலைவரும் அதே போலத்தான் சொல்லுவார் என்று நான் எதிர்பார்த்தேன் .எனக்கு என்ன ஆச்சர்யம் என்றால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அனைவரின் முன்னிலையில் என்னிடம் உணவு ரொம்ப பிரமாதமாக இருந்தது என்று திரும்ப திரும்ப சொன்னார் . அதை கேட்ட எனக்கு மனது நிறைவாக இருந்தது .பிறகு அவர் விடைபெறும்போது ,நீ சென்னைக்கு உன் துணைவியாரை அழைத்து கொண்டு என் இல்லத்தில் வந்து சந்திக்க வேண்டும் என்று அன்பு கட்டளை இட்டார் . அவர் சென்றபிறகுதான் அங்கு வைக்கப்பட்டிருந்த சிக்கன் அனைத்தையும் எம்.ஜி.ஆர். அவர்கள் சாப்பிட்டு உள்ளார் என்று தெரிந்தது .அதாவது பலர் சிக்கன் சமையல் நன்றாக இல்லை என்று விமர்சித்ததை கண்டு கொள்ளாமல் அவர் முழுவதையும் சாப்பிட்டுள்ளார் .அப்போதுதான் எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது .
நபிகள் நாயகத்திடம் ஒரு வயதான மூதாட்டி திராட்சை பழங்களை கொண்டுவந்து கொடுக்கிறார் . ஒரு திராட்சையை சாப்பிட்ட நபிகள் நாயகம் முழு பழங்களையும் அவரே சாப்பிட்டு முடித்துவிடுகிறார் . பின்னர் அந்த மூதாட்டிநன்றிகூறி விடை பெற்று சென்றதும், சீடர்கள் அவரிடம் எப்போதும் எங்களுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டுத்தான் தாங்கள் சாப்பிடுவது வழக்கம். இன்று ஏன் இப்படி வழக்கத்திற்கு மாறாக தாங்கள் செய்தீர்கள் என்று கேட்டதற்கு, அந்த திராட்சை பழம் மிகவும் புளிப்பாக இருந்தது . உங்களால் சாப்பிட்டு இருக்க முடியாது .அப்படியே சாப்பிட முயன்றாலும், உங்கள் முகத்தில்மிகவும் புளிப்பாக உள்ளது என்பதை காட்டிவிடுவீர்கள் அல்லது வாயை திறந்து அந்த மூதாட்டி முகம் கோணும்படி ஏதாவது சொல்லிவிடுவீர்கள் .அதற்கு இடம் தராமல்தான் அந்த மூதாட்டி மனம் நிறைவு அடையும்படி நானே சாப்பிட்டு முடித்தேன் என்றாராம் .அதே போலத்தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரும் அருகில் ப.உ.சண்முகம் போன்றவர்கள் இருந்தாலும், எங்கே உணவு சரியில்லை என்று எனக்கு முன்பாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரிடம் மறுபடியும் சொல்லி விமர்சனம் செய்துவிடுவார்களோ என்று எண்ணி , அவரே எல்லா சிக்கன், மட்டன் உணவு வகைகளை சாப்பிட்டு முடித்தபோது ,எனக்கு நபிகள் நாயகம் நடந்து கொண்ட விதம் பற்றித்தான் நினைவுக்கு வந்தது .புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஒரு தொண்டனின் மனம் கோணாதபடியும்,அந்த தொண்டனின் மனம் நிறைவடையும்படியும் அன்று நடந்து கொண்டதை நபிகள் நாயகத்தோடு ஒப்பிட்டுதான் நான் பெருமகிழ்ச்சி அடைந்தேன் .இவ்வாறு திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .
சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில் ஒருமுறை முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது .விழா முடிந்து உணவருந்தியபின் எம்.ஜி.ஆர். புறப்படுகிறார் . பாதுகாப்பிற்காக வந்திருந்த கார் ஓட்டுனர்கள், ஊழியர்கள் அவருடன் புறப்பட தயாராகின்றனர் காரில் அமர்ந்திருந்த அவர்களை . எம்.ஜி.ஆர். அனைவரும் சாப்பீட்டீர்களா என்று கேட்கிறார் .அனைவரும் நாங்கள் சாப்பிடவில்லை. பரவாயில்லை புறப்படலாம் என்கின்றனர் . கார் ஓட்டுனர்கள், ஊழியர்களுக்கு அரசு விழா முடிந்து இரவு நேரத்தில் ஓட்டல்களில் உணவு வழங்கும் பழக்கம் இல்லையென்று கேள்விப்பட்டு ,மறுநாளே, அவர்களுக்கு இரவு நேர உணவுப்படியாக ரூ.100/- வழங்கவேண்டும் என்று ஆணையிட்டார் .
2016ல் மோடியின் தலைமையிலான மத்திய அரசு ,ரூ.500/- ரூ.1000/- ஆகிய நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கிறது .இதன் மூலம் கருப்பு பணத்தை அடியோடு ஒழிக்க முடியும் என்று முடிவெடுத்தது .ஆனால் இதை 1974லேயே எம்.ஜி.ஆர். யோசனை தெரிவித்து அறிக்கை விட்டார் .1958ல் நாடோடி மன்னன் படத்தின் மூலம் பொருளாதார ரீதியில் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும் என்று சொல்லி, ஆட்சிக்கு வந்தபின்னர் மக்களின் பொருளாதார வாழ்க்கை மேம்பட பல்வேறு நல திட்டங்கள் செயல்படுத்தினார்....da...
-
1931 முதல் 2000 வரை எந்த தனி கதாநாயகனும் தமிழ்த்திரையில்...
வெள்ளித்திரையில் ....பல படங்கள் (150,200,300) நடித்தும் சாதிக்காத வெற்றிகளை...
115 காவியங்களில்......
தனிப்பெரும் கதாநாயகனாக
பவனி வந்து சரித்திரத்தை ஏற்படுத்திய ஒரே ஒப்பற்ற கதாநாயகன்...
தமிழ்ப்படவுலகின் சாதனை திலகம்
மக்கள் திலகம் எம்.ஜி ஆர் அவர்களின்
வெற்றிக்காவியங்களின் சாதனை தொகுப்பு....
++++++++++++++++++++++++++++++++
முதல் வெளியீட்டில்
10 திரையரங்குகளுக்கு மேல்
100 நாட்களை கடந்த......
அதிக திரைக்காவியங்களை
தமிழ்படவுலகில் வெற்றியுடன்
தந்த பொன்மனச்செம்மலின்....
சாதனை பட்டியல்..
++++++++++++++++++++++++++
1) சாதனை ! அதிக அரங்குகள் : 38
**************************************
மக்கள் திலகம் கதாநாயகனாக
பவனி வந்த 17 வது காவியம்...
1956 ல்... வெளியான
+++++++ மதுரைவீரன் ++++++
தமிழகம் 35 அரங்கு 100 நாட்கள்
பெங்களுர் ஒரு அரங்கிலும்...
இலங்கையில் இரண்டு திரையிலும்...
100 நாட்களை வெற்றிக் கொண்டு
மொத்தம் 38 அரங்கில் 100 நாட்கள்.
அதிக நாட்கள் : 180
2) சாதனை! அதிக அரங்குகள் : 19
++++++++++++++++++++++++++*****
கதாநாயகனாக.... 23 வது காவியம்
++++++நாடோடி மன்னன்+++++++++
தமிழகம் 14 அரங்கு 100 நாள்
இலங்கை 5 அரங்கு 100 நாள்
அதிக நாள் : 161
++++++++++++++++++++++++
குறிப்பு....
ஒரு நடிகர் 10 தியேட்டரில்100 நாளை காண்பதற்கே... 75 படம் நடித்த பின் தான்.... நடந்தது... அதுவும்
ஜெமினிகணேசனை சேர்த்துக் கொண்டு
ஒடிய பாவம் தேடி மன்னிப்புபாகும்...
++++++++++++++++++++++++++++++
3) சாதனை ! அதிக அரங்குகள் 18
++++++++++++++++++++++++++++
கதாநாயகனாக... 53 வது காவியம்
++++++++எங்க வீட்டுப்பிள்ளை++++
தமிழகம் 17 திரையரங்கு
இலங்கை 1 அரங்கு....
அதிக நாள் : 236
குறிப்பு :
ஒரு நடிகர் 100 படங்களை கடந்த பின் தான் ....அதுவும் பக்தி படம் தெருவிளையாடல் மூலம் பல முன்னனிகளை சேர்த்துக்கொண்டு
இரண்டாவதாக 10 அரங்கில் 100 நாளை கொடுத்தார்...
4) சாதனை! அதிக அரங்குகள் : 10
+++++++++++++++++++++++++++++
கதாநாயகனாக 76 வது காவியம்
++++++++குடியிருந்த கோயில்+++++
தமிழகம் 10 அரங்கு 100 நாள்
அதிக நாள் : 133
5) சாதனை! அதிக அரங்குகள் : 16
+++++++++++++++++++++++++++++
கதாநாயகனாக.... 84 வது காவியம்
++++++++அடிமைப்பெண்+++++++++
தமிழகம் 15 அரங்கு 100 நாள்
இலங்கை 1 அரங்கு 100 நாள்
அதிக நாள் : 176
6) சாதனை! அதிக அரங்குகள் : 14
+++++++++++++++++++++++++++++
கதாநாயகனாக... 86 வது காவியம்
++++++++மாட்டுக்கார வேலன்+++++++
தமிழகம் 12 அரங்கு 100 நாள்
இலங்கை 2 அரங்கு 100 நாள்
அதிக நாள் : 177
7) சாதனை! அதிக அரங்குகள் : 12
++++++++++++++++++++++++++++++
கதாநாயகனாக .... 92 வது காவியம்
++++++ரிக்க்ஷாக்காரன்++++++
தமிழகம் 12 திரையில் 100 நாள்
அதிக நாள் : 161
குறிப்பு : 150 படம் தாண்டிய பின் தான்
வறண்ட மாளிகை 10 தியேட்டரை மூன்றாவதாக ஒட்டபட்டு நடந்தது.
8) சாதனையில்.. அதிக அரங்குகள் : 25
+++++++++++++++++++++++++++++++++
கதாநாயகனாக 100 வது காவியம்...
++++++உலகம் சுற்றும் வாலிபன்++++
தமிழகம் 20 அரங்கில்.....
பெங்களுர் 3 அரங்கில்......
இலங்கை 2 அரங்கில்......
100 நாளை கடந்தது...
அதிக நாள் : 217
9) சாதனையில்..அதிக அரங்குகள் : 12
+++++++++++++++++++++++++++++++++
கதாநாயகனாக 103 வது காவியம்...
+++++++++உரிமைக்குரல்+++++++++
தமிழகம் 12 திரையில் 100 நாள்
அதிக நாள் : 200
குறிப்பு..... 160வது படத்தை கடந்த
பின் நான்காவதாக தகரபதக்கம்
10 திரையை கடந்தது...
10) சாதனையில் ...அதிக அரங்குகள் 12
++++++++++++++++++++++++++++++++++
கதாநாயகனாக.... 107 வது காவியம்...
++++++++++இதயக்கனி+++++++
தமிழகம் ..10 திரையில்....
இலங்கை 2 திரையில்.....
அதிக நாள் : 146
+++++++++++++++++++++++++
மக்கள் திலகம் பவனி வந்த
115 திரைக்காவியங்களில்....
10 திரைப்படங்கள் தமிழகத்தில் மட்டும்....
100 நாள் அரங்குகள் மொத்தம்.. 157
பெங்களுர்... இலங்கை மொத்த
அரங்கு 100 நாள் : 19
+++++++++++++++++++++++++
10 திரைப்படம் மட்டும் : 176 ஆகும்....
++++++++++++++++++++++++++++
குறிப்பு... 200வது படம் சூலம் வரை
5 படம் மட்டுமே
10 தியோட்டரில் 100 நாள் காண்பிக்கபட்டது...
+++++++++++++++++++++++++
இந்த லட்சணத்தில்....
பொய்யான தகவல்கள் கணேசனின் புள்ளைங்களுக்கு..............ukr...
-
நாம்ப யார் வம்புக்கும் போகமாட்டோம். புரட்சித் தலைவர் புகழ் மட்டும் பாடுவோம். ஆனால், புரட்சித் தலைவரை யாராச்சும் திட்டினால் தாங்க முடியாது. ஏண்டா, ராஜ ராஜன் முட்டாள் நாய் என்று என்னை திட்டுங்கடா. கவலை இல்லை. எதுக்குடா எங்க தலைவரை திட்டுறீங்க? அந்தப் பதிவுங்களை பார்த்தாலே மனம் குமுறுகிறது. குட்டம் முட்டாள் குமார் என்று ஒரு நாய் உள்ளது. சொட்ட மண்டய தலப்பாகட்டி மூடிருக்கான். எம்ஜிஆர் மாதிரி மோடி அடுத்தவன் மனைவிய கூட்டி வருவாரா என்று சொல்றான். அறிவு கெட்ட நாயே. ஜானகி யை புரட்சித் தலைவர் சட்டப்படி திருமணம் செய்தார். கருணாநிதி ராஜாத்திய கூட்டிவந்தா மாதிரி கூட்டி வரலை. ஏண்டா முட்டாள் குமார்.. நடிகர் கணேசனோட மகன் ராம்குமார் ஸ்ரீபிரியாவோட அக்காவை கீப்பா வெச்சிருக்கான். சட்டப்படி மனைவி அந்தஸ்து கொடுக்கலை. அவனுக்குப் பிறந்த கள்ளக்குழந்தை ஒருத்தன். சிவாஜிதேவ். அவன் திருமனத்தை ரகசியமாக நடத்தி ராம்குமார் முதல் மனைவி உள்பட அவர்கள் கும்பத்தில் எல்லாரும் புறக்கணித்தனர். இப்படிப்பட்ட குடும்பம். இந்த ராமக்குமார்தான் சிவாசி ரசிகர் மன்றத் தலைவன். அதயும் ஏத்துக்கிட்டீங்க. வெளங்கும்டா. முட்டாள் கூமார்.. நீயெல்லாம் புரட்சித் தலைவர் பத்தி பேசக்கூடாது. இன்னொருத்தன் சொல்றான் எம்ஜிஆர் நல்லவர்னா ஏன் குடும்பம் குட்டி அமையலை.. மோடிக்கும் இது பொருந்தும் என்கிறான். ஏண்டா.. காமராஜ்க்கு ஏன் குடும்பம் குட்டி அமையலை. அவர் கெட்டவரா.. குடிகார நாய்ங்களா. உங்களோடு 50 வருசமா சண்டை போடறோம். அந்த் உரிமையில் சொல்றோம். எம்ஜிஆரை திட்டி இன்னும் அழிஞ்சு போகாதீங்கடா. போதையில் இருந்து தெளிஞ்சு திருந்துங்கடா.... Rajarajan...
-
பிஜேபி தலைவர் முருகன் எம்ஜிஆர் மாதிரி மோடியும் நல்ல பேர் சேர்த்துள்ளார் என்று சொல்லிருக்கார். எம்ஜிஆருடன் யாரயும் ஒப்பிட முடியாது. இருந்தாலும் எல்லாரும் எம்ஜிஆரை சொந்தம் கொண்டாடுவது நமக்கு சந்தோசமாக உள்ளது. அவர் எல்லாருக்கும் பொதுவானவர். நடிகர் வி.சி.கணேசனை யாரும் சொந்தம் கொண்டாடுவது கிடையாது. அதுதான் கணேசன் ரசிகர்களுக்கு பொறாமை. இதில் அவர்களுக்குள்ளே பிளவு. நல்லா கவனிச்சு பாருங்க. முஸ்லிம், கிறிஸ்டின், திமுக ஆதரவு கணேசன் ரசிகர்கள் எல்லாம் பிஜேபியை எதிர்ப்பார்கள். அய்யர்கள், மேல்ஜாதிக் கார இன்னும் திமுகவை பிடிக்காத பழய காமராஜ் அபிமானிகளாக இருக்கும் கணேசனின் ரசிகர்கள் எல்லாம் பிஜேபியை ஆதரிப்பார்கள். இதுதான் நிஜம். வேற ஒரு கொள்கயும் மண்ணும் இல்லை. திமுக அய்யரை திட்டுவான். அதனால் கணேசன் ரசிகர் அய்யரெல்லாம் பிஜேபியை ஆதரிப்பார்கள். பிஜேபி முஸ்லிமை திட்டுவான். அதனால் கணேசன் ரசிகர் முஸ்லிம் எல்லாம் திமுக. இதுதான் அவர்கள் கொள்கை. இதில் அவர்கள் பிரிஞ்சு கிடக்கிறார்காள். ஆனால் எந்த ஜாதி, மதம், இனம் எல்லாம் நம்பளை பிளவுபடுத்தாமல் நம்ப எல்லாரையும் புரட்சித் தலைவர் ஒன்றாக வைத்திருக்கிறார். இதுதான் அவரின் பெருமை. மனித நேய ஒப்பற்ற தலைவன் மதங்கள், ஜாதிகள், இனங்கள் தாண்டிய ஒற்றுமையை வளர்க்கும் மகாத்மா கடவுள் புரட்சித் தலைவர் வாழ்க..... Rajarajan...
-
நடிகர் கணேசன் ரசிகர்கள் பொய் தாங்கவே முடியலை. மரியாதையா பேசினால் நாம்பளும் மரியாதையா பேசுவோம். செல்வராஜ் பெர்னாண்டஸ் என்று ஒருத்தர். மரியாதயாத்தான் எழுதிருக்கார். ஆனால் அவர் சொல்லும் செய்தி பொய். பல்லாண்டு வாழ்க படத்தில் வி.கே. ராமசாமி புரட்சித்தலைவர், பொன்மனச் செம்மல் என்று எம்ஜிஆரை புகழ்ந்து பேசமாட்டேன் என்று சொன்னாராம். அப்புறம் நடிகர் கணேசன் தான் அவரை சமாதானம் பண்ணி பேச வெச்சாராம். ஏங்க இப்பிடி பொய்யெல்லாம் பரப்புறீங்க. புரட்சித் தலைவர் மறைந்த பிறகு வி.கே.ராமசாமி பேசின வீடியோ இது. மரியாதையா புரட்சித் தலைவர் என்று பேசறார்.வி.கே ராமசாமியின் கடன் அடைக்க படம் நடிச்சு கொடுப்பதாகவும் நம் கருணை வள்ளல் சொல்லி இருக்கிறார். அது கூட பெரிசு கிடயாது.நேற்று இன்று நாளை படத்தின்போது அதிமுகவில் சேர விரும்பியதாகவும் புரட்சித் தலைவர் நீங்க எல்லாருக்கும் பொதுவானவர் என்று சொல்லி கட்சியில் சேர்க்கவில்லை என்றும் வி.கே.ராம்சாமியே சொல்றார். ் அப்படி உள்ளவர் புரட்சித் தலைவர் பேர் சொல்ல மாட்டேன் என்றாராம். ஏன்யா இப்படி பொய் சொல்றீங்க? இதெல்லாம் உங்களுக்கு யார் சொல்றது? இல்ல நீங்களே யோசிப்பீங்களா. செல்வராஜ் பெர்னாண்டஸ் இப்ப்டி எல்லாம் பொய் பரப்பாதீர்கள். வி.கே.ராமசாமி பேட்டி பாருங்கள். https://m.youtube.com/watch?v=hLpbQU2o15E...RR...
-
புரட்சித் தலைவரை அவர்கள் பேத்தி போன்ற நடிகைகளுடன் நடிச்சார் என்று சொல்வதால் நாம்பளும் சொல்றோம். நடிகர் வி. சி. கனேசணுக்கு ஜோடியா நடிச்ச ஸ்ரீப்ரியா, ஸ்ரீதேவி எல்லாம் சம வயசா? அவங்களும் கணேசனுக்கு பேத்தி மாதிரிதானே? தனக்கு பொண்ணா நடிச்ச சீதேவியோடு சோலாப்பூர் ராணி சொறிஞ்சுக்கிட்டு வா நீ ந்னு கணேசன் ஜோடியாக பாடுவதை ரசிச்ச நீங்களாடா எம்ஜிஆர குறை சொல்வது? அதுவும் அம்பிகா, ராதா எல்லாம் கணேசனுக்கு அவர் மகள் சாந்தியின் பேத்தி மாதிரி. முதல் மரியாதையில் ராதாவோடு முறை தப்பின கள்ளக் காதல். வாழ்க்கை யில் அம்பிகாவோட ஜோடிப் பாட்டு வேற. தொப்பயை மறைக்க கோட்டுக்கு பட்டன் போடாம திறந்துவிட்டிருப்பார். அது தொப்பைய விட பெரிசா, நீளமா கோட் முன்னாடி நீட்டிக்கிட்டு இருக்கும். நடிகைகள் 3 அடி தள்ளியே இருப்பார்கள். கிட்ட நெருங்கினால் கோட் தடுக்கும். இந்த கேவலத்த எல்லாம் ரசிச்ச கணேசன் ரசிகர்கள் புரட்சித் தலைவரை சொல்ல என்ன வாய் இருக்கு.?...rr...
-
தாழம்பூ: 1965 அக் 23 தீபாவளி அன்று வெளியான சுமாரான வெற்றிப் படம். நல்ல சஸ்பென்ஸ் நிறைந்த படத்தின் கதையில் உறவுகளில் குளறுபடி படத்தின் மிகப் பெரிய வெற்றியை தடுத்து நிறுத்தி விட்டது. இதே போல் உறவுகளில்
தடுமாற்றம் "தாலி பாக்கியம்" என்ற
படத்திலும். மக்கள் இதுமாதிரியான கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க தயங்கிய காலம். அதுவும் எம்ஜிஆர் இப்படிபட்ட கேரக்டரில் நடிப்பதை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்.
சிறப்பான கதையமைப்பு கொட்டாரக்காராவுடையது. வசனம் ஆரூர்தாஸ். பாசமலர் காம்பினேஷன். இசை k v மகாதேவன். பாடல்கள் அத்தனையும் மனதுக்கு இதமளிக்கும் தூவானம் போல மனதை குதூகலிக்க வைக்கிறது. 'தாழம்பூவின் நறுமணத்தில்', 'தூவானம் இது தூவானம்' 'ஏரிக்கரை ஓரத்தில் எட்டு வேலி நிலமிருக்கு' போன்ற ஜோடிப்பாடல்கள் அருமை. 'வட்ட வட்ட பாத்தி கட்டி' முதல் கதாநாயகி அறிமுகப். பாடலாக வருகிறது. 'எங்கே போய் விடும் காலம்' பாடல் தலைவரின் நம்பிக்கையூட்டும் தத்துவப் பாடல்.
நாகேஷின் காமெடி ரசிக்கும்படி இருக்கும். அசோகன் வரும் இடங்களில் சற்று தொய்வு ஏற்படுகிறது. யார் உண்மையான வில்லன் என்பது படத்தின் இறுதிக்கட்டத்தில் தான் தெரியவரும். நம்பியாரும் எம்ஜிஆரும் சண்டை போடும் போது முடிவில் நம்பியார் இறந்து கிடக்க எம்ஜிஆர் கையில் கட்டுடன் உள்ளே இருக்கும் காட்சியில் m r ராதா எப்படி எம்ஜிஆரை கட்டிப் போட்டார் என்பது புரியவில்லை..
நல்ல தரமான ஒளிப்பதிவு பாடல்கள் என அத்தனை இருந்தும் படம் பெரிய அளவில் வெற்றி பெறாதநற்கு காரணம் அந்த ட்விஸ்ட் தான் என்று நினைக்கிறேன். ஆனால் இப்போது பார்த்தாலும் படத்தில் ஒரு காட்சி கூட போரடிக்கவில்லை. அந்த காலத்தில் 5000 ரூ நோட்டு செல்லாது என்று அறிவிப்புக்கு சற்று முன் வெளிவந்த படமாக இருக்கலாம்.. 'தாழம்பூ'வை அடுத்து 'ஆசைமுகம்' வெளியானது
'தாழம்பூ'வின் நீண்ட கால ஓட்டத்துக்கு தடையானது.
சென்னையில் பாரகன், நடராஜ், மகாராஜா, கிருஷ்ணவேணி முதலான தியேட்டர்களில் வெளியாகி 56 நாட்கள் ஓடி சுமாரான வெற்றியை பதிவு செய்தது. மற்ற பிரதான ஊர்களில் 70 நாட்கள் வரை ஓடியது குறிப்பிடத்தக்கது. படம் வெளிவந்த காலத்தில் "தாழம்பூ" புத்தகத்தில் பக்கத்துக்கு பக்கம் 5000 ரூபாய் நோட்டை மறைத்து வைத்திருக்கும் யுக்தியை பலரும் வீட்டுக்கு வீடு பேசி பரவசமடைந்தார்கள் என்பது சிறப்பு தகவல்..........ksr.........
-
சங்கத்தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் 1981 இல் உலக தமிழ் மாநாடு கண்டார் தலைவர்.
திருக்குறள் முனுசாமி அவர்கள் தலைமையில் திருக்குறள் பற்றிய அன்றைக்கு நிகழ்வு முடிந்து பாண்டியன் ஹோட்டல் அறைக்கு திரும்பும் போது நல்ல மழை...
அறைக்கு வந்த முதல்வர் உடனே மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரை உடனே தன்னை சந்திக்க சொல்கிறார்.
அவரும் பதற்றம் கொண்டு ஓடி வர அவருக்கு சில உத்தரவுகளை பிறப்பிக்கிறார் பொன்மனம்....அதன் படி ....அன்று இரவு காவல் பணியில் இருந்த அனைத்து காவலர்களும் மதுரை பாண்டியன் ஹோட்டல் வரவழைக்க பட.
வந்த அனைவருக்கும் ரகசிய போலிஸ் படத்தில் வருவது போல அற்புதம் ஆன முழு மழை கோட்டுக்கள் வழங்கி...அத்துடன் ஆளுக்கு ஒரு உயர்தர குடை ஒன்றையும் கொடுத்து...
மாவட்ட காவல் அதிகாரி இடம்...என் ஒருவருக்கு இவ்வளவு பேரையும் அந்த கொட்டும் மழையில் நிற்க வைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
மனம் தவித்தது...அதனால் என்னால் முடிந்த அன்பு பரிசு உங்கள் அனைவருக்கும்...
யாரும் எங்கும் போய் விட கூடாது...இன்று இரவு உங்கள் அனைவருடனும் நானும் சிறப்பு விருந்து சாப்பிட ஏற்பாடு செய்து உள்ளேன்..அனைவரும் கண்டிப்பாக சாப்பிட்டு விட்டுத்தான் போகணும் என்கிறார் தலைவர்...
அனைவரும் வியக்க அதன் படி நடக்க நிம்மதி பெரு மூச்சு விடுகிறார் அந்த உயர் அதிகாரி..
சென்னை தலைமை செயலகத்தில் இன்றும் உயர் பாதுகாப்பு பொறுப்பில் இருக்கும் அன்று அப்போது சாதாரண கான்ஸ்டபிள் பொறுப்பில் இருந்தவர் இன்றும் தலைவர் நினைவில் அந்த குடையை பத்திரம் ஆக வைத்து இருப்பதாக பகிர்ந்து கொள்கிறார் நினைவுகளை.
வாழ்க தலைவர் புகழ்.
உங்களின் குரலாக உங்களில் ஒருவன்.
நன்றி...தொடரும்.........
-
எம் ஜி ஆருக்கு வந்த சோதனையும் ,சாதனையும்!
1980 – ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்! வெற்றியெனும் படிகளில் ஏறியே பயணப்பட்டு, பழக்கமாகிப் போன எம்.ஜி.ஆர். இத்தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தார்.
இந்திரா காங்கிரஸ் – தி.மு.க. என்ற கூட்டணித் திமிங்கலம், எம்.ஜி.ஆர். என்ற கடலில் இருந்த வெற்றி எனும் சுறாமீன்களையெல்லாம் விழுங்கிவிட்டது.
எம்.ஜி.ஆர். இயக்கம் சிவகாசி, கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய இரு பாராளும்ன்ற இடங்களை மட்டுமே பெற்றது.
‘இரு விரல்களைக் காட்டியவர்க்கு இரண்டு இடங்களே கிடைத்தன’ என்று வலுவான எதிர்முகாமினர், இரட்டை இலைச்சின்னத்தையும் இடித்துரைத்துப் பேசலாயினர்.
இத்தோடு விட்டார்களா? கூட்டணி பலத்தை நம்பி எம்.ஜி.ஆர். அரசு மீதும் இல்லாத பொல்லாத ஊழல் குற்றச் சாட்டுகளைக் கூறி, அரசையும் கலைத்து விட்டார்கள்.
மாபெரும் வீரர் எம்.ஜி.ஆருக்கு இது பெரும் மானப்பிரச்சனையாய் மாறிவிட்டது.
அரசைக் கலைத்தவுடன், இனி, எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கை அவ்வளவுதான் என்ற அதிரடிப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டன.
எம்.ஜி.ஆர். ஆமைச்சரவையில் இடம்பெற்றிருந்த நாஞ்சில் கி. மனோகரன், மொடக்குறிச்சி சுப்புலட்சுமி போன்ற பலரும் மாற்று முகாம்களை நோக்கிப் புறப்பட்டனர்.
1980 – ஆம் ஆண்டு மே மாதம் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ‘தி.மு.க – காங்கிரஸ்’ கூட்டணி இரு கட்சிகளும் சரி பாதி இடங்களில் போட்டியிட்டன. கூட்டணி வென்றால் கலைஞர் கருணாநிதியே தமிழக முதல்வர் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழகப் பத்திரிக்கை உலகமோ, ‘சாய்ந்தால் சாய்கின்ற பக்கம்’, என்ற போக்கில் ‘தி.மு.க – இந்திரா காங்கிரஸ் கூட்டணி 210 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்புகள் என்ற பெயரில், விட்டலாச்சார்யா படங்களில் வரும் மாயமந்திர ஜாலங்களைப் போன்றவற்றைச் செய்திகளாக்கி மக்கள் மத்தியில் திணித்தன.
ஆர்ப்பரிக்கும் ஆரவாரக் கூட்டணிக்கு நடுவில், மத்திய மந்திரிசபையின் படையெடுப்பிற்கு மத்தியில், கலைஞரின் உடன்பிறப்புகளின் உற்சாகப் போர்ப்பரணிக்கு இடையில், எம்.ஜி.ஆர் என்ற தனி மனிதர், தாய் சத்தியா கருவினிலே வளர்த்து ஈந்த தைரியத்தைத் தாரக மந்திரமாய்க் கொண்டு, தனது அனைத்திந்திய அண்ணா தி.மு.கழக மறவர்களின் மாபெரும் துணையோடு, என்றும் தளராத பாசத்தை அள்ளித்தரும் தாய்மார்களின் தணியாத பக்கபலத்தோடு தமிழக மக்களைத் துணிச்சலோடு தேர்தல் களத்தில் சந்தித்தார்.
நான் உங்களுக்கு என்ன துரோகம் செய்தேன்? எனது தலைமையிலான அரசு கலைக்கப்பட்டது நியாயமா? மக்களே! நீங்களே எனக்கு நீதி வழங்குங்கள்!’ என்றே, எம்.ஜி.ஆர். சென்ற இடங்களில் எல்லாம் பேசினார்.
மறுமுனையில், பத்திரிக்கை கணிப்புகள், பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதங்களை எடுத்துக் கூறியே, ஏகோபித்த நம்பிக்கையுடன் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.
தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்னரே மறுமுனையில் வெற்றிவிழாச் சுவரொட்டிகள், நன்றி அறிவிப்புச் சுவரொட்டிகள் தயாராயின என்றும்; வள்ளுவர் கோட்டத்தில் கலைஞர் பதவியேற்பு விழாவிற்காக ஆயத்தங்கள் செய்யப்பட்டு விட்டன என்றும் பேச்சுகள் எழுந்தன.
ஆனால் தேர்தல் முடிவுகளோ?… தலைகீழாய் மாறிப்போயின.
மானப்பிரச்சனையாய், தன்மானத்தோடு தேர்தலைச் சந்தித்த மாவீரன் எம்.ஜி.ஆர். இயக்கமே மாபெரும் வெற்றியைப் பெற்றது.
எம்.ஜி.ஆர். மதுரை மேற்குத் தொகுதியில் இருந்து, இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1977 – ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 126 இடங்களைக் கைப்பற்றிய புரட்சித்தைவரின் அ.இ.அ.தி.மு. கழகம் 1980 – ஆம் ஆண்டுத் தேர்தலில் 139 இடங்களைக் கைப்பற்றியது.
எம்.ஜி.ஆர். என்ற மாபெரும் மனிதநேயச் செல்வருக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கைக் கண்டு, எதிர் அணியினர் அதிர்ந்தனர். பத்திரிக்கை உலகமோ பிரமித்தது. அன்னை இந்திராவோ அவசரப்பட்டுச் செய்த தன் செயலுக்காகப் பின்னர் வருந்தினார்....da...
-
சிக்காகோவில் இருந்து தமிழ்நாட்டுக்கு.. கண்ணதாசன் உடலை கொண்டு வந்த எம்.ஜி.ஆர் - ஜெயந்தி கண்ணப்பன்!
கவிஞர் கண்ணதாசன் 1981ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி இயற்கை எய்தினார்.
KANNADASAN இறந்ததும் MGR எடுத்த முடிவு
அவரது பூத உடலை எப்படியாவது தமிழ்நாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என எம்.ஜி.ஆர் செய்த அரும்பாடுகளை அப்படியே நினைவு கூர்ந்துள்ளார் ரீவைண்டு ராஜா நிகழ்ச்சியில் ஜெயந்தி கண்ணப்பன்.
சமீபத்தில் கவிஞர் கண்ணதாசனின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில், இந்த பேட்டி வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
Jayanthi Kannappan remembered how MGR helping Kannadasan body to came Tamil Nadu
ஏற்கனவே ஏகப்பட்ட பேட்டிகளை நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு கொடுத்துள்ள ஜெயந்தி கண்ணப்பன், இப்போ ரீவைண்ட் ராஜா நிகழ்ச்சியில், கவிஞர் கண்ணதாசன் எப்படி கோமாவிற்கு போனார். அவருக்கு அமெரிக்காவில் என்ன மாதிரியான சிகிச்சைகள் கொடுக்கப்பட்டது. எந்த இடத்தில் தவறு நடந்து, அவர் உயிரிழக்க நேர்ந்தது என எல்லா விஷயங்களையும் தெள்ளத் தெளிவாக அழகிய தமிழில் எடுத்து உரைக்கும் இந்த வீடியோவை மறக்காமல் பார்த்து விடுங்கள்.
அய்யோ.. இன்னும் எத்தனை பேரோ.. இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்த இலங்கை நடிகை.. கடுப்பான ரசிகர்கள்!
புகைப்பழக்கத்தின் காரணமாக கவிஞர் கண்ணதாசனின் உணவுக் குழாய் சுருங்கி போனது அறியாமல் அமெரிக்க மருத்துவர்கள் வழக்கமாக செய்யும் சிகிச்சையை மேற்கொண்டதன் காரணத்தால் தான் 54 வயதிலேயே அப்படியொரு அரும்பெரும் கவிஞரை நாம் இழக்க நேரிட்டது எனும் அரிய தகவல்களையும் ஜெயந்தி கண்ணப்பன் இந்த பேட்டியில் கூறியுள்ளார்.
ஜவஹர்லால் நேரு, தனது உடல் எரியூட்டப்பட்ட பின்னர், அதன் சாம்பல், நாட்டில் உள்ள அத்தனை வயல் வெளிகளிலும் தெளிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டதை போலவே, கவிஞர் கண்ணதாசனின் உடலும் தமிழகத்திற்குத் தான் என எண்ணிய எம்.ஜி.ஆர் அரசு செலவில் அத்தனை ஏற்பாடுகளையும் செய்து, கண்ணதாசனின் உடலை அப்பவே எம்ஃபார்மிங் எல்லாம் பண்ணி அழகாக தமிழக மக்களுக்கு அஞ்சலி செலுத்த கொண்டு வந்தார் என்பதையும் விளக்கி உள்ளார்...
Jayanthi Kannappan Interview Mgr Kannadasan
Jayanthi Kannappan remembered how MGR helped for to get Kannadasan dead body to Tamil Nadu on that period in a recent Rewind Raja interview..........
-
எதிரியும் போற்றுவான் உங்கள் கொடை கண்டு கிள்ளி கொடுப்பவர் அல்ல
அள்ளி கொடுப்பவர் நீங்கள்
உலகிலே மோழிக்கு ஒரு பல்கலைகழகம் கண்ட மேதை
தமிழ் அன்னைக்கு கோவில் கட்டினார்
தமிழ் எழுத்து சீர்திருத்தம் செய்தார் எம் ஜி ஆர்
தமிழில் அரசாணை இடவைத்தார்
தமிழ் புலவரை அரசவை புலவர் ஆக்கினார்
ஏழை தமிழ் அறிஞர்களுக்கு உதவி தொகை வழங்கினார்
எவரும் நடத்தாத பிரம்மாண்ட தமிழ் மாநாட்டை நடத்தி காட்டினார் எம் ஜி ஆர்
எம் ஜி ஆருக்கு முன்னும் பின்னும் பலர் தமிழகம் ஆண்டனர் மொழிக்கு இவ்வளவு பெருமை எவரும் சேர்க்க வில்லை
தமிழ் மூன்று எழுத்து இருக்கும் வரை எம் ஜி ஆர் என்ற தமிழ் ஆன ஆங்கில எழுத்து இருக்கும்
வாழ்க எம் ஜி ஆர் புகழ்.........
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின் டிவியில் சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி* 26/10/20 அன்று அளித்த தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------------------------
தலை வணங்குவதில் கூட , தலையை குனிந்து நெற்றிக்கு நேராக இரு கரம் கூப்பி வணங்குகிற பண்பாடு தமிழகத்தில் உருவானது என்றால் அந்த பண்பாட்டிற்கு சொந்தக்காரர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் . அவர்கள் ..அவர் மறைந்தும் மறையாமல் இன்றைக்கும் மக்கள் தலைவராக, மக்கள் மனதில் வீற்றிருக்கும் காரணம் தமிழ் பண்பாடு, தமிழ் கலாச்சாரம்* என்பதை இன்றைக்கும் அவரது திரைப்படங்களில் இருந்துதான்* காப்பாற்ற படவேண்டும் , அந்த திரைப்படங்களில் இருந்துதான் கற்று கொள்ள வேண்டும் என்று ஒரு பல்கலை கழகமாக வழிநடத்தியவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .* மக்கள் திலகம் என்கிற அந்த மகோன்னதமான மாமனிதரின் ஆற்றல், திறமை, ஆகியவற்றை இன்றைய இளைய தலைமுறை எப்படி எடுத்துக்கொள்ள போகிறது அதாவது மாத வாடகை ரூ.15/-க்கு சென்னை யானை கவுனி பகுதியில் 1940களில் தன்,தாயார், அண்ணன், அண்ணி ஆகியோருடன் வசித்து வந்த ஒரு சாமான்ய மனிதர் 40 ஆண்டுகள் கழித்து தமிழகத்தை 11 ஆண்டுகாலம்* முதல்வராக தொடர்ந்து**ஆட்சி புரிவதற்கு உரிய திறமை எங்கிருந்து வந்தது .அந்த ஆளுமையை எப்படி கற்றுக்கொண்டார் . மக்களின் மனங்களை எப்படி வென்றார் .எப்படி இந்த ராஜ்யத்தை தனதாக்கி கொண்டார் . இதற்கெல்லாம் அவர் படித்த படிப்பு* பாடம், அனுபவம் ,என்ன என்கிற ஒரு தத்துவத்தை நாம் தெரிந்து கொள்வதற்கு ஒரு சாமான்ய மனிதர் எளிய மனிதர்களின் மனங்களை வென்று தலைவனாக முடியும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .அவர் இங்கிலாந்து, ஐரோப்பா அல்லது வேற்று மொழி நாட்டை சேர்ந்தவராக இருந்திருந்தால் ,உலக வரலாற்றிலே அவர் ஒரு பாடமாக திகழ்ந்திருப்பார் .அவர் இலங்கையில் பிறந்து தமிழகத்தில் வளர்ந்ததாலோ என்னவோ அவரை உலகம் சரியாக கண்டுகொள்ளவில்லை என்றே சொல்லலாம் .* நிச்சயமாக வருங்காலத்தில் தமிழர்களின் இளைய தலைமுறை கட்டாயம் படித்து பாடமாக தெரிந்து கொள்ள வேண்டியதாக எம்.ஜி.ஆரின் வரலாறு இருக்கும் என்பது திண்ணம் .**
1959ல் சீர்காழியில் இன்ப கனவு எனும் நாடகம் நடைபெறுகிறது .அதில் 75கிலோ எடை கொண்ட எம்.ஜி.ஆர். அவர்கள் சுமார் 200 கிலோ* எடையுள்ள நடிகர் குண்டுமணியை தூக்கி கீழே போடும் காட்சியில் தவறி எம்.ஜி.ஆரின் கால் மீது விழுந்து ,கால் முறிவு ஏற்படுகிறது . உடனே மேடையில் திரை விழுகிறது .நாடக கொட்டகையே மிகவும் பரப்பான சூழ்நிலையில் உள்ளது .* மைக் மூலம் எம்.ஜி.ஆருக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது .ஆனாலும் தற்சமயம் நாடகம் தொடர முடியாத சூழ்நிலை என்று சொல்லப்படுகிறது .எம்.ஜி.ஆர். திரையை விலக செய்யுங்கள் நான் மக்களை சந்தித்து அவர்களுடைய ஆவலை பூர்த்தி செய்ய அவர்களிடம் பேச வேண்டும் என்கிறார் .ஆனால் நடிகர் குண்டுமணி இந்த சம்பவத்தை குறித்து மிகவும் கலங்கி போய் நிற்கிறார் .* எம்.ஜி.ஆர். பக்கத்தில் கலங்கி நிற்கும் நடிகர் குண்டுமணி, மற்றும் உதவியாளர் கே.பி.ராமகிருஷ்ணன் ஆகியோரின் தோள்களை பிடித்தபடி, தன் கால்வலியை தாங்கியவாறு ,.மக்களிடம் சிறிது நேரம் பேசுகிறார் . எனக்கு ஒன்றும் ஆபத்தில்லை .யாரும்*வீணாக பதற்றமோ, கவலையோ படவேண்டாம். சிறிய காயம்தான் ஏற்பட்டுள்ளது .சில நாட்களில் மீண்டும் வந்து இந்த நாடகத்தை* இதே ஊரில் ,இதே மேடையில் நடத்தி காட்டுவேன் . அனைவரும் தயவுசெய்து அமைதியாக தற்சமயம் கலைந்து செல்லுங்கள் என்றார் .அதுதான் எம்.ஜி.ஆர். அவரது கால் முறிந்துவிட்டது .ஒரு அடிகூட எடுத்து நடக்க முடியாத சூழ்நிலை மருத்துவரின் அறிவுரையை மீறி, மக்கள் இடையே கலவரம் ஏற்பட்டு விடக்கூடாது, கலங்கி விட கூடாது என்று எண்ணி ,தன மன வலிமையால் ,மனோதிடத்துடன், நம்பிக்கையுடன் மக்களிடம் மீண்டும் வந்து நாடகத்தை நடத்தி காட்டுவேன் என்று உறுதி அளித்தார் . தன்னால் பழையபடி நடக்க முடியுமா, வழக்கமான அலுவல்களை அன்றாடம் சந்திக்க முடியுமா என்று மருத்துவர்களே உறுதியாக சொல்ல முடியாத நிலையில் ,மனோதிடம், தன்னம்பிக்கை, உண்மை, உழைப்பு, உயர்வு என்ற கொள்கையின்படி யாரும் எந்த சூழ்நிலையையும் மீறி உயர்ந்த இடத்தை எட்டி பிடிக்க முடியும் என்பதற்கு தன்னம்பிக்கை நிறைந்த ஒரு சாதனையாளர் எம்.ஜி.ஆர்.*
ethics of religion , நினைவே தெய்வம், அந்த தெய்வத்தை பூஜிக்கும் பக்தர்கள் இன்றைக்கும் ஏராளமானோர் தமிழகத்தில் இருக்கிறார்கள் .* குறிப்பாக திருவல்லிகேணி,சென்னையில் இருந்து சிங்காரவேலு ,70 வயது நபர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் . 1958ல் நாடோடி மன்னன் வெளியானபோது சிறப்பு மலர் ஒன்று வெளியிடப்பட்டது . அந்த மலரில் பேரறிஞர் அண்ணா அவர்கள் நாட்டை திருத்த வந்த நாடோடி மன்னன் என்று வாழ்த்து செய்தி வெளியிட்டார் .அந்த மலரில் மு.கருணாநிதி, எஸ்.எஸ்.ஆர்., சி.சுப்பிரமணியம்* போன்றவர்களும் வாழ்த்து செய்தி வெளியிட்டனர் . அண்ணா அவர்கள் வெளியிட்ட செய்தியில் தங்கத்தை நீங்கள் எப்படி உருக்கி என்ன செய்தாலும் அதன் நிலை அப்படியே தான் இருக்கும் உரு மாறாது .அப்படிதான் தம்பி எம்.ஜி.ஆர். அவர்கள் எந்த துறையில், எந்த விஷயத்தில் ஈடுபட்டாலும் அதில் வெற்றி பெறுவார் என்று சொல்லியுள்ளார் . அது போலவே வாழ்க்கையில் பல்வேறு விஷயங்களில் சாதித்தும் காட்டியவர் எம்.ஜி.ஆர்.* திருச்சி மிளகுபாறையில் இருந்து திரு.அப்துல் மஜீத் என்பவர் தன்னுடைய சிறு வயதில் இருந்தே எங்க வீட்டு பிள்ளை திரைப்படத்தை 68 தடவைகள் பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார் .*பள்ளிக்கு போகாமல் அடிக்கடி படம் பார்க்க வருவதை கண்ட அரங்கின் காவலாளி இவரை பிடித்து அடித்து பள்ளிக்கு போ என்று சொல்கிறார் . உடனே இவர் அழுதவாறு, அரங்கின் மேலாளரிடம்* என்னை படம் பார்க்க விடாமல் தடுத்தது மட்டுமில்லாமல் என்னை அடித்துவிட்டார் என்று புகார் அளிக்கிறார் .உடனே மேலாளர் நடவடிக்கை எடுத்து காவலாளியை பணிநீக்கம் செய்கிறார் .மறுநாள் படம் பார்க்க வந்த மஜீத் ,அந்த காவலாளி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதை அறிந்து ,மேலாளரிடம், தயவு செய்து காவலாளியை மீண்டும் பணியில்* சேர்த்து கொள்ளுங்கள். நான் வேண்டுமானால் படம் பார்ப்பதை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் .என்று கெஞ்சினாராம் அந்த சிறுவயதில் .* அதுதான் எம்.ஜி.ஆர். என்கிற மாமனிதர் உருவாக்கிய மிகப்பெரிய தத்துவம் .* அதன்பின் அந்த காவலாளியை வேலையில் சேர்த்து கொண்டதை உறுதி செய்துகொண்டு நிம்மதி அடைந்தார் மஜீத் .**
திரு.கா. லியாகத் அலிகான் : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எடுத்து கொண்டால் அதே போல ஒரு பிரச்னை வருகிறது 1992லே .* பாபர் மசூதி வழக்கு ஒன்று வருகிறது .அதில் தேசிய ஒருமைப்பாட்டு குழு ஒன்று அமைக்கப்படுகிறது .அந்த குழுவில் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் தலைமையில் ,எல்.கே.அத்வானி அவர்கள் , மற்றும் சில மாநில முதல்வர்கள் கலந்து கொள்கிறார்கள் .* ஜெயலலிதா கலந்து கொள்கிறார் . மாநிலங்களின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு தரப்படுகிறது .ஆனால் கருணாநிதி அதில் கலந்துகொள்ளவில்லை .* அந்த கூட்டத்தில் ஜெயலலிதா அவர்கள் ஒரு கருத்தை சொல்கிறார்கள் .* அந்த கருத்தை இஸ்லாமியர்களுக்கு 90 சதவீதமும்*இந்துக்களுக்கு 90 சதவீதமும் ஆதரவாக இருப்பது போல அவர் பேசினார் .ஆனால் தனக்கு தோன்றிய நல்ல பல கருத்துக்களை சொல்வதில் அண்ணா தி.மு.க.வை பொறுத்தவரையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும்,*ஜெயலலிதா அவர்களுக்கும் எந்த தயக்கமும் இருந்ததில்லை .அந்த கூட்டத்தில் தலைவர்கள் முன்னிலையில் ஜெயலலிதா அவர்கள் பேசும்போது ,ராம ஜென்ம பூமியா, பாபரி மசூதியா என்ற கேள்விக்கு இடமில்லை .* ராமர் கோவிலும் இருக்கட்டும் . மசூதியும் இருக்கட்டும்.* எங்கள் கட்சியை பொறுத்தவரையில் ,சிறுபான்மை கட்சியினருக்கு எந்த அளவிற்கு வேண்டுமானாலும் ஆதரவாக செயல்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் .* அதே நேரத்தில் பெரும்பான்மை கட்சியினரின்உணர்வுகள் , உரிமைகள் பாதிக்கப்படாமல் காப்பற்றுவதற்கு அரசு கடமையாற்ற வேண்டும் என்று ஜெயலலிதா அவர்கள் சொன்ன* வாசகத்தை மத்திய அரசு நிறைவேற்றி இருந்தால் ராமர் கோவிலும், மசூதியும் நிலைத்து நின்றிருக்கும் .* நீதிமன்ற தீர்ப்பின்படி அங்கு ராமர்கோவில் கட்டப்பட்டாலும், பாபர் மசூதி குறித்து இஸ்லாமிய அமைப்பு வழக்கு ஒன்று தொடுத்திருப்பதாக தொலைக்காட்சியில் நான் பார்த்தேன் . அடுத்த தேர்தலை பற்றி சிந்திக்காமல், அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கும் தலைவர்களாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா அவர்களும் செயல்பட்டார்கள் என்பதை இன்றைய கால கட்டத்தில் அனைவரும் ஏற்று கொள்கிறார்கள் .30 ஆண்டுகள் கழித்து நாடும் இதை கண்டு கொண்டிருக்கிறது .* அதை இந்த நேரத்தில் சொல்லுகின்ற வாய்ப்பை எனக்கு உருவாக்கி தந்த வின் டிவி உரிமையாளர் திரு.தேவநாதன், நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு.துரை பாரதி அவர்களுக்கும் இந்த சமயத்தில் குறிப்பிட்டு நன்றி செலுத்த* விரும்புகிறேன்*
அதே போல பதர்* சயீத் என்கிற அம்மையார் வக்ப் வாரிய தலைவராக இருந்து*பதவியில் இல்லாமல் இருந்தபோது தர்கா குறித்து ஒரு பிரச்னையை சந்தித்தபோது ஜெயலலிதா அவர்களிடம் இதுபற்றி பேசுகிறார் .* இந்த பிரச்னையில் எப்படி ஈடுபடுவது ,என்ன முடிவெடுப்பது என்று யோசனை கேட்ட நேரத்தில் ,அவர் அனுப்பிய கடிதத்தில் ,இந்த விஷயத்தில் திரு.லியாகத் அலிகான் அவர்களும் ,திரு.செங்கோட்டையன் அவர்களும் கலந்து ஆலோசித்து*எனக்கு அறிக்கை தரவேண்டும் என்று குறிப்பிட்டு எழுதி இருந்தார் .* நாங்கள் இருவரும் கலந்து ஆலோசித்து ஜெயலலிதா அவர்களுக்கு பதில் அறிக்கை சமர்ப்பித்த நினைவுகளும் பசுமையாக நெஞ்சில் இருக்கிறது .* நான் எதற்கு சொல்கிறேன் என்றால், இஸ்லாமியர் சட்ட திட்டங்களை* எடுத்து கொண்டால் ,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வழி தோன்றலாகிய ஜெயலலிதா அவர்கள் இப்தார் நிகழ்ச்சியில் முதன் முதலாக என்னை முன்வைத்து தான் கலந்து கொண்டார் .* அந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை ஜெயலலிதாஅவர்களின் ஆலோசனையின் பேரில் நான் எல்லோருக்கும் கொடுத்து ,முதன் முதலாக கூட்டம்* முன்னாள் அமைச்சர் முத்துசாமி அவர்களின் ஓட்டலில் (தற்போதைய* *குமரன் மருத்துவமனை) கட்டிடத்தில் நடைபெற்றது . பின்னர்* உட்லண்ட்ஸ் ஓட்டலில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது .பின்னர் பல்வேறு இடங்களில் நடைபெற்றது .அப்போது திரு.மூப்பனார், திரு.வை.கோ.போன்ற தலைவர்கள் கூட கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள் .* அந்த நிகழ்ச்சிகளில் இஸ்லாமிய தலைவர்கள்,*சமூகத்தினருக்கு ,நானும், ஜெயலலிதா அவர்களும் இணைந்து ரோஜா இதழ்களை கொடுத்து* வாயிலில் இருந்து**வரவேற்ற நிகழ்வுகளும் உண்டு .*இஸ்லாமியர்களுக்கு அண்ணா தி.மு.க.,தலைவர் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து மிக பெரிய மரியாதை, மதிப்பை கொடுத்து கொண்டிருக்கிறது .* தலைவர் எம்.ஜி.ஆர். காலத்தில் முன்னாள் அமைச்சர் திரு.ராஜா முகமது அவர்களுக்கு பொதுப்பணி துறை ஒதுக்கப்பட்டது . பொதுவாக இஸ்லாமியர்களுக்கு முக்கிய இலாகாக்கள் தருவதில்லை என்று ஒரு நிலை இருந்தது . ஆனால் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அந்த* நிலையை மாற்றினார் . திரு.ஒய்.எஸ்.எம்.யூசுப் அவர்களுக்கும் பொதுப்பணித்துறையை வழங்கினார்* *ஆகவே இஸ்லாமியர்களுக்கு முக்கிய துறைகளை ஒதுக்கி மதிப்பும் மரியாதையும் காட்டியவர்கள்தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா அவர்களும் என்பதை இந்த நேரத்தில் ஒரு இஸ்லாமியர் என்ற வகையில் மகிழ்ச்சியுடன்*தெரிவித்து கொள்கிறேன் .***இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .
திரு.அப்துல் மஜீத் அவர்கள் ஆயிரத்தில் ஒருவன் படத்தை 48 முறையும்*உலகம் சுற்றும் வாலிபன் படத்தை 78 தடவையும் பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார் .பார்க்க பார்க்க படங்களை ரசிக்க தோன்றுகிறது . எத்தனை முறை பார்த்தாலும்,சலிப்பு ஏற்படவில்லை. திகட்டவில்லை .என்பதை எம்.ஜி.ஆர். அவர்கள் சரித்திர பூர்வமாக நிரூபித்தார் என்பதற்கு அப்துல் மஜீத், சிங்காரவேலு போன்றவர்கள் மட்டுமின்றி இன்னும் ஏராளமானோர் பட்டியலில் இருக்கிறார்கள் .கள்ளக்குறிச்சியில் பல ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் ,ரசிகர்களாக இருந்து இது போன்று ஆர்வமாக செயல்படுகிறார்கள் .நிகழ்ச்சியை* பாராட்டி கடிதம் எழுதி வருகிறார்கள் .* சென்னையில் ஒய்வு பெற்ற வங்கி ஊழியராகிய திரு.லோகநாதன் ராமச்சந்திரன் நமது நிகழ்ச்சியின் தொடர்களை தொடர்ந்து* மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்கிற இணையதளத்திலும் பல்வேறு எம்.ஜி.ஆர்.மன்ற அமைப்புகள் சார்ந்த வாட்ஸ் அப் குரூப்புகளுக்கும் செய்திகளாக பதிவு செய்து வருகிறார் .அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ,லட்சக்கணக்கான எம்.ஜி.ஆர்.ரசிகர்கள் ,பக்தர்களுக்கு இந்த செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி . மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்கிற பெயருக்கு ஒரு தன்னம்பிக்கை, விடாமுயற்சி, ஏழை எளியோரின் நம்பிக்கை நட்சத்திரம் , ஒளிவிளக்கு, கலங்கரை விளக்கம் என்று சொல்லிக்கொண்டே போகலாம் .*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
------------------------------------------------------------------------------
1.உழைக்கும் கைகளே,உருவாக்கும் கைகளே - தனிப்பிறவி*
2.ஓடி ஓடி உழைக்கணும் - நல்ல நேரம்*
3.இது நாட்டை காக்கும் கை - இன்று போல் என்றும் வாழ்க*
4.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*
5.கண் போன போக்கிலே கால் போகலாமா - பணம் படைத்தவன்*
-
இலங்கை தலைநகரான கொழும்பில்
மக்கள் திலகத்தின் புரட்சிபடைப்பு
நீரும் நெருப்பும் திரைக்காவியம்
ஒரே ஏரியாவில் மட்டும் 136 நாட்கள் ஒடி
மகத்தான வெற்றியை கடந்து வசூலில்
வரலாற்றை படைத்துள்ளது.
மற்றும் யாழ்நகரில் 11 வாரங்களும்....
திரிகோணமலையில் 53 நாட்களும்...
மற்றும் ஏனைய பகுதிகளிலும் ஒடி
5 மாத காலத்தில் 13 லட்சத்தை வசூலாக கொடுத்தது....
இலங்கையில் முதல் வெளியீட்டில்
மொத்தம் ஒடிய நாட்கள் : 431 நாட்கள்........கொள்கைத்தங்கம் எம்.ஜி.ஆர்..
பாரத் விருது பெற்றபின் சென்னையில் நடைபெற்ற நடிகர் சங்கம் பாராட்டு விழாவில்...
நடிகர் சிவாஜிகணேசன்
கொடை வள்ளல் ....
கொற்றவர்க்கு...
குடைபிடித்து....
தன் பாராட்டை தெரிவிக்கின்றார்....
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் பல வழிகளிலும் பலன் பெற்றவர்
நடிகர் சிவாஜிகணேசன்...
அவர் குடும்பத்திற்கும்....
சிவாஜிகணேசன் நடிகர் சங்கத்தில் இருந்தபோது....
தலைவர் செய்த உதவிகள் ஏராளம்...
ஆனால் தலைவரின்
மக்கள் செல்வாக்கு என்ன என்பதை
அறிந்தவர் சிவாஜிகணேசன்
1982 க்கு பின் சிவாஜிகணேசன் குடும்ப பிரச்சனை... மேலும் பல நல்லகாரியங்களை செய்தவர்
புரட்சித்தலைவர்...
ஆனால் அவரின் ரசிகர்கள் என்று
சிலது மட்டும்
தலைவரை தகுதியில்லாது
பதிவிடுகிறது....
தரம் தாழ்த்துவதினால் அந்த
கேவலமான வார்த்தைகள்
உங்கள் நடிகர் சிவாஜிகணேசனுக்கு தான் போய் சேரும்...
உங்கள் அன்னை இல்லத்தில் போய் அவரின் பிள்ளைகளிடம் கேட்டுபாருங்கள்...
பொய் சொல்லி சிவாஜிகணேசன் என்ற நடிகருக்கு புகழ் சேர்காதீர்கள்...
எம்.ஜி.ஆர் என்ற மாமனிதரின் புகழ்
எட்டாத தூரத்தில் இன்று வரை எவராலும் மறைக்க முடியாத சாகாவரம் பெற்ற புகழாக ஒளிவிசுகிறது...
யார் யாரெல்லமே வந்தார்கள்...
போனார்கள்... உலகில்
ஆனால் எம்.ஜி.ஆர் அவர்களின் புகழ் மட்டும் பறந்து... விரிந்து... நிறைந்து
உலக தமிழர்களிடம் வாழ்கிறது.
பேசப்படுகிறது...
இனி எதுவும் உங்காளால் நடக்கபோவதில்லை...
ஏன்..என்றால்...
நடிகர் சிவாஜிகணேசன் என்பவர்
உலகில் இல்லை!
எம்.ஜி.ஆர். சினிமா நடிகர் இல்லை
எம்.ஜி.ஆர். அரசியல்வாதி இல்லை
இந்த இரண்டிலும் பவனி வந்த...
எம்.ஜி.ஆர். ஒரு புனிதமான
மனிதநேயர் ஆவார்....
அதை யாராலும் தடுக்கமுடியாது.......bsr...
.
-
விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் மீது வைத்திருக்கும் அன்பை வைகோ அவர்களிடம் சொன்ன காரணங்களை
இங்கு பார்ப்போம்
புரட்சி தலைவர் எம்ஜிஆர் மீது ஏதோ ஒரே நாளில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு திடீரென பற்று வந்துவிடவில்லை. ‘‘அரசியல் களத்தில் எதிரெதிர் அணியில் இருந்தாலும் எம்.ஜி.ஆரின் செயல்பாடுகளையும் மனிதாபிமான நடவடிக்கைகளையும் அறிந்து படிப்படியாக அவர் மீதான மதிப்பு உயர்ந்தது. அவரது மனிதாபிமான நடவடிக்கைகள் காரணமாக இங்குள்ள தமிழர்கள் மட்டுமல்ல; ஈழத் தமிழர்களும் அவரை தெய்வமாக வணங்குகிறார்கள்’’ என்று கூறும் வைகோ, தனது அனுபவங்களைத் கூறுகிறார்!
பெரும்பாலோருக்குத் தெரியாத, அறிந்து கொள்ள முடியாத வாய்ப்பு வைகோவுக்கு கிடைத்துள்ளது. 2004-ம் ஆண்டு எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட இல்லத்துக்கு வைகோ சென்றார். அப்போது, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய பொருட்களை பார்வையிட்டார். அவர் பயன்படுத்திய ஒரு நாட்குறிப்பில் இசை சம்பந்தப்பட்ட இலக்கணங்களையும், குறிப்புகளையும் அவர் எழுதி வைத்திருப்பதையும் அவரது இசை ஞானத்தையும் அறிந்து வைகோ அசந்துவிட்டார். இங்கே ஒரு வருத்தமான விஷயம் என்னவென்றால், கடந்த வர்தா புயலில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அந்த நாட்குறிப்பு மட்டுமின்றி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய பல பொருட்களும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.
ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக 1987-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ம் தேதி, இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ‘‘இந்த ஒப்பந்தத்தில் விடுதலைப் புலிகளுக்கு விருப்பம் இல்லை. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கும் இந்த ஒப்பந்தத்தில் உடன்பாடு இல்லை. சென்னை கடற்கரையில் ராஜீவ் காந்தியுடன் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில்கூட எம்.ஜி.ஆர். பட்டும் படாமலும்தான் பேசினார்’’ என்று வைகோ கூறுகிறார்.
பின்னர், அமெரிக்காவில் மருத்துவப் பரிசோதனைக்காக எம்.ஜி.ஆர். சென்றார். அவர் அங்கிருக்கும் சமயத்தில், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அமைதிப்படை விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தியது. ‘‘அந்தச் சமயத்தில் பிரதமர் ராஜீவ் காந்தியும் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் சென்றார். டென்னிஸ் விளை யாட்டில் இந்தியாவுக்கு புகழ் தேடித்தந்த விஜய் அமிர்தராஜ், அமெரிக்க அரசு வட்டாரத்தில் செல்வாக்கு மிக்கவர்.
இந்திய அமைதிப்படையின் தாக்குதலை நிறுத்தச் சொல்லி விஜய் அமிர்தராஜ் மூலம் ராஜீவ் காந்திக்கு எம்.ஜி.ஆர். கடிதம் அனுப்பியிருக்கிறார். உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்காக வந்திருக்கும் நிலையிலும் எம்.ஜி.ஆரின் இந்தச் செயல், அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதையையும் மதிப்பையும் ஏற்படுத்தியது’’ என்கிறார் வைகோ.
அமெரிக்காவில் எம்.ஜி.ஆர். இருந்தபோது நடந்த இன்னொரு நிகழ்ச்சியையும் வைகோ நினைவுகூர்கிறார். அந்த நேரத்தில் சென்னையில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கிட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இதை அறிந்து அவரது வீட்டுக்குச் சென்ற வைகோவை போலீஸார் கைது செய்து இரவு 1 மணிக்கு விடுவித்தனர். மீண்டும் நேராக கிட்டு வீட்டுக்கு சென்ற வைகோவை போலீஸார் மறுபடியும் கைது செய்து காலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் ரிமாண்ட் செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.
மாலையில் அவரை போலீஸார் திடீரென விடுவித்தனர். காரணம் கேட்ட வைகோவுக்கு இன்ப அதிர்ச்சி! ‘‘நீங்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., உங்களை விடுவிக்கச் சொல்லி அமெரிக்காவில் இருந்து உத்தரவிட்டுள்ளார். கிட்டுவை பார்வையாளர்கள் சந்திப்பதை போலீஸார் தடுக்க வேண்டாம் என்றும் முதல்வர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்’’ என்று போலீஸ் அதிகாரிகள் கூறியபோது வைகோ வின் மதிப்பில் எம்.ஜி.ஆர். மேலும் உயர்ந்தார்.
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். பற்றி கிட்டு கூறியதைக் கேட்டு வைகோ கண்கலங்கிய சம்பவமும் உண்டு. அப்போது, வைகோ திமுகவில் இருந்தார். சென்னை அடையாறில் உள்ள கிட்டுவை அவர் ஒருநாள் சந்தித்தார். ‘‘முதல்வர் எம்.ஜி.ஆரிடம் விடுதலைப் புலிகள் நெருக்கமாக உள்ளனர். திமுக தலைமையோடும் நீங்கள் நெருக்கமாக இருக்கலாமே?’’ என்று கிட்டுவிடம் உரிமையோடு கேட்டார்.
அப்போது கிட்டு சொன்ன பதில் வைகோவை கலங்கடித்துவிட்டது. கிட்டு அமைதியாக தன் வயிற்றைத் தடவிக் காட்டி, ‘‘இங்கே இருக்கிற பொடியன்களுக்கு (புலிகள் இயக்க இளைஞர்கள்) வயிறு இருக்கிறதே, சாப்பிடணுமே அண்ணே? இரண்டு நாட்கள் முன்பு முதல்வர் எம்.ஜி.ஆரைப் பார்க்க அவரது வீட்டுக்குச் சென்று எங்கள் கஷ்டத்தைச் சொன்னேன். உடனே அவர் பெரிய தொகை கொடுத்தார்.
முகத்தைப் பார்த்து பசி அறியும் தாயைப் போல எம்.ஜி.ஆர். எங் களுக்கு உதவுகிறார். அதனால்தான் அவரோடு நெருக்கமாக இருக்கிறோம். அதுபோல் உங்கள் தலைவரை கொடுக்க சொல்லுங்கள் பார்ப்போம் என்றாரே மேற்கொண்டு பேச முடியவில்லை வைகோ வால்,
மற்றபடி, திமுக மீது எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை’’ என்று கிட்டு சொன்னதைக் கேட்டு கண்கலங்கிய வைகோ, உணர்ச்சிப் பெருக்குடன் கிட்டுவைப் பார்த்து கைகுவித்து, ‘‘தவறாகக் கேட்டுவிட்டேன்’’ என்றார். அப்போது வைகோ வின் மனதில் இமயமலையாய் உயர்ந்தார் நம் பாரத ரத்னா எம்.ஜி.ஆர்.!
மாறிவிட்ட அரசியல் சூழலில் 1989-ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு, இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சந்திக்க வன்னிக் காட்டுக்குச் செல்ல வைகோ முடிவு செய்தார். ‘‘பட்டுக்கோட்டை வழியாகக் கோடியக்கரை சென்று, விடுதலைப் புலிகள் உதவியுடன் படகில் புறப்பட்டு கடற்படை கப்பல்களிடம் இருந்து தப்புவதற்காக 180 கிலோ மீட்டர் சுற்றி, நாயாறு பகுதி கடற்கரையில் இறங்கினோம். அங்கிருந்து அடர்ந்த காடுகள் வழியாக இரண்டு நாட்கள் நடந்து சென்று வன்னிக் காட்டில் பிரபாகரனை சந்தித்தேன். அப்போதுதான் எம்.ஜி.ஆர். பற்றி அவர் என்னிடம் கூறினார்’’ என்று மனதில் அழியாத நினைவுகளை வெளியிடுகிறார் வைகோ!
விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்றுவித்த ஆரம்ப காலத்தில், தலைவர் எம்.ஜி.ஆர். மீது பிரபாகரனுக்கு பெரிய பற்று கிடையாது. திரைப்படங்களில் அவரது சண்டைக் காட்சிகளை பார்த்து ரசித்திருக்கிறார் என்றும். ‘‘தமிழகம் வந்த சில காலத்துக்குப் பிறகுதான் எம்.ஜி.ஆர். என்ற பிரம்மாண்டத்தை நேரில் கண்டு நான் உணர்ந்தேன்’’ என்று வைகோவிடம் கூறிய பிரபாகரன், அதற்கான காரணங்களையும் அடுக்கியிருக்கிறார்!
முதல்வர் எம்.ஜி.ஆருடன் ஆலோசிக்கிறார் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன்.
‘‘ஆரம்ப காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு மத்திய அரசும் உதவி செய்திருக்கிறது. அப்போது புலிகள் இயக்கம் தடை செய்யப்பட வில்லை’’ என்று கூறும் வைகோ, சில விநாடிகள் கண்களை மூடி பிரபாகரன் தன்னிடம் கூறியதை நினைவுகூர்கிறார்.
எம்.ஜி.ஆரை ஒருமுறை அவரது வீட்டில் பிரபாகரனும் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கமும் சந்திக்கச் சென்றனர். இருவருக்கும் விருந்தளித்து உபசரித்துவிட்டு, ‘‘நான் உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டிருக்கிறார். புலிகள் இயக்கத்துக்கு அப்போது ஆயுதங்கள் வாங்க நிதி தேவைப்பட்டது. ‘என்ன பெரிதாக கொடுத்துவிடப் போகிறார்’ என்று நினைத்த பிரபாகரன், ஒரு குறிப்பிட்ட தொகையை எம்.ஜி.ஆரிடம் கோரியுள்ளார். ‘‘நாங்கள் எதிர் பார்க்காத ஒரு பெரும் தொகையை எம்.ஜி.ஆர். தங்களுக்குக் கொடுத்ததாக வன்னிக் காட்டில் பிரபாகரன் என்னிடம் தெரிவித்தார். தன்னை எப்போது வேண்டுமானாலும் பிரபாகரன் சந்திக்க வசதியாக ஒரு தொலைபேசி எண்ணை யும் ஒரு அடையாள அட்டையையும் அவரிடம் எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார்’’ என்கிறார் வைகோ!
பின்னர், பிரபாகரன் கூறிய கருத்து வைகோவை தூக்கிவாரிப் போடவைத்திருக்கிறது. ‘‘இந்திரா காந்தி மறைவுக்குப் பிறகு ராஜீவ் காந்தி பிரதமரானதும் அதுவரை எங்களுக்கு வழங்கிவந்த உதவிகள் தொடர்பாக பேசவேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் அழைத்ததால் டெல்லி சென்று சந்தித்தோம். ஆனால், ‘இனி எந்த உதவியும் செய்ய முடியாது’ என்று அரசு கைவிரித்துவிட்டது’’ என்று வைகோவிடம் பிரபாகரன் கூறியிருக்கிறார்.
தொடர்ந்து அவர் கூறியதைக் கேட்ட வைகோவின் மனதில் எம்.ஜி.ஆர். விஸ்வரூபம் எடுத்து நின்றார். ‘‘அந்த நேரத்தில் டெல்லி வந்திருந்த முதல்வர் எம்.ஜி.ஆரை பிரபாகரன் சந்தித்தார். மத்திய அரசு நான்கு கோடி ரூபாய் தருவதாகச் சொல்லி பின்னர், மறுத்ததை பிரபாகரன் மூலம் அறிந்த எம்.ஜி.ஆர்., ‘அந்த தொகையை நான் தருகிறேன்’ என்று கூறி, தமிழக அரசு மூலம் வெளிப்படையாகவே நான்கு கோடி ரூபாயை வழங்கியதாக பிரபாகரன் என்னிடம் கூறினார்’’ என்று உணர்ச்சிபூர்வமாக கூறுகிறார் வைகோ!
‘‘ஈழத் தமிழர்களுக்காக அவர் செய்த உதவி களைப் பார்க்கும்போது, எம்.ஜி.ஆர். இருந்திருந் தால் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும். சுமார் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் அநியாயமாக கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்’’ என்று சொல்லி ஏக்கப் பெருமூச்சு விடுகிறார் வைகோ. அந்தப் பெருமூச்சின் உஷ்ணம் இதயத்தைச் சுடுவது காணொளியில் கலங்கிய அவரது கண்களில் தெரிகிறது...
ஒருவர் ஒருதுறையில் வெற்றிபெறுவதே கடினம். ஆனால், திரைப்படம், அரசியல் என இரு துறைகளிலும் ஈடு, இணையற்ற வெற்றியைப் பெற்று, அவற்றில் முதலிடம் பிடித்தவர் இதயதெய்வம் எம்.ஜி.ஆர்.!
வெற்றி பெறுவதைவிட அதைத் தக்கவைத்துக் கொள்வது இன்னும் கடினம். கடைசிவரை முதலிடத்திலேயே இருந்ததுதான் எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்தின் அதிசயம்!
இப்போதும் அரசியல் கட்சிகள்
பொன்மனச்செம்மலின் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்கின்றன.
மறுவெளியீட்டு படங்களைப் பட்டியலிட்டால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் படங்கள்தான் அதிக அளவில் மறுவெளியீடு செய்யப்பட்டு மக்களால் விரும்பிப் பார்க்கப்படுகிறது. 2014-ம் ஆண்டு ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் மறுவெளியீட்டில் சென்னையில் வெள்ளி விழா கொண்டாடியது ஒரு உலக சாதனை!
திரைப்பட வெற்றி ஒரு சாதனைக் குறியீடு தான். அதைத் தாண்டிய விண்ணைத் தொடும் எம்.ஜி.ஆரின் புகழுக்கு அவரிடம் நிறைந்திருந்த மனிதாபிமானமும் மக்கள் சேவையும்தான் காரணம்! அப்படிப்பட்ட என் இதயதெய்வம் புரட்சி தலைவர் எம்ஜிஆருக்கு என்னுடைய இந்தக் கட்டுரை அவரது பல்வேறு சிறப்புகளின் ஒரு துளிதான். கட்டுரைகள் முடியலாம், எல்லையற்ற பிரபஞ்சம் போல விரிந்து பரந்திருக்கும் என் தலைவர் பொன்மனச்செம்மல் புகழுக்கு முடிவேது?
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இன்னும் மறையவில்லை; தனது அழியாப் புகழால் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அப்படி வாழ்வாங்கு வாழ்பவருக்கு வாழ்த்துப்பா பாடுவதுதானே முறை! அதற்கும் அவரது படப் பாடல்தான் கைகொடுக்கிறது. ‘ஊருக்கு உழைப்பவன்’ படத்தில் ‘பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்…’ என்ற அருமையான பாடல். குழந்தையை வாழ்த்திப் பாடும் அந்தப் பாடலில் வரும் வரிகள், குழந்தை உள்ளம் கொண்ட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு கச்சிதமாய் பொருந்துகிறது…
‘நீலக்கடல் அலைபோல நீடூழி நீ வாழ்க!
நெஞ்சமெனும் கங்கையிலே நீராடி நீ வாழ்க!
காஞ்சி மன்னன் புகழ்போல காவியமாய் நீ வாழ்க!
கடவுளுக்கும் கடவுளென கண்மணியே நீ
வாழ்க!’.............da.........
-
புரட்சித்தலைவர் படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது ஏன்? கணேசமூர்த்தி.
கணேசமூர்த்தி "காங்கிரஸ் கட்சி வேண்டாம் என்று வெளிவந்த நேரம்[1987-89கால கட்டத்தில்], ஒரு பத்திரிகையில் சொன்னது:
அண்ணன் எம்.ஜி.ஆர் படங்களை அவரது ரசிகர்கள் பலமுறை பார்த்தார்கள் அவரது படங்கள் மாபெரும் வெற்றிகளை பெற்றது. நான் நடித்த படங்களை காங்கிரஸ்காரன் ஒரு முறை கூட பார்க்கவில்லை!
இதே போன்ற ஒரு கருத்தை பல வருடங்களுக்கு பிறகு மும்பையிலிருந்து வரும் பத்திரிகையிலும் மீண்டும் சொன்னார்.
இதை இல்லை என்று "பிள்ளைகள்" சொல்லுங்கள் பார்ப்போம்?
அவர்கள் ரசிகன் "நாஞ்சில்/நசுங்கின" "சொம்பை" போல தவறான தகவல் சொல்லவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
அவரது படங்கள் பார்த்தேன் அடடா தினமும் ஹவுஸ்புல்.
இருக்கின்ற "ஸ்டார்கள்" பல பேர் ஆனால் புரட்சித்தலைவர் தான் பவர்புல்............sb...
-
புத்தகம்- முன்னுரை, வாழ்த்துரை, பதிப்புரை
"நாடகம், நடிகர் திலகம் ,நான்" என்று ஒரு புத்தகம் சுமார் இருப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரவேண்டியது, அச்சடிக்கப்பட்டது பின்பு சில பிரபலங்களுக்கு சில பிரதிகள் கொடுக்கப்பட்டது. ஆனால் சொன்ன தேதி முதல் இன்று வரை புத்தகம் வெளிவரவில்லை!
காரணம் அந்த பிரபலங்களில் ஒருவர் நடிகர் திலகத்தின் குடும்ப நபர்களிடம் புத்தகத்தில் சில அத்தியாயங்கள் .............................! நடிகர் திலகம் குடும்பம் அந்த புத்தகம், அச்சகம் அவர்களுக்கு சேரவேண்டியதை கொடுத்தவுடன், இப்படிப்பட்ட "உண்மை விவரம் இல்லாத" புத்தகத்தை புதைத்துவிட்டனர். நான் சொல்லுவது "சத்தியம்"
இந்த உணர்வு புரட்சித் தலைவர் ரசிகர்களுக்கு இல்லையே, ஏன்???!!!
"பொய்யான விவரங்களுக்கு" முன்னுரை, வாழ்த்துரை எழுதியவர் புகழுக்கு அந்த ஆசிரியர் "முடிவுரை" எழுதிவிடுவார் என்பதை கருத்தில் கொண்டு செயல்படவேண்டும்.
நான் எந்த புத்தகத்தை பற்றி பேசுகிறேன் என்று அனைவர்க்கும் தெரியும், விளக்கம் கொடுக்க தேவையில்லை........!...sb...
-
1963 ல்
தர்மம் தலைக்காக்கும்
திரைப்படத்தில்...
திகில் ...சஸ்பென்ஸ்..
முகமுடி.... இக்கதையில்....
அசோகன் தான் கொலை கொள்ளையில் தொடர்புடையவர் என்று முடிவில் தெரியும்..
1964 ல் என்கடமை திரைப்படத்தில்...
கொலை... கண்டுபிடிப்பு
பெண்னின்
மரணம்...
பாலாஜி தான் என்பது இறுதி கட்டத்தில் தெரியும்...
1965 ல் தாழம்பூ
திரைப்படத்தில்...
கொலைகள் பல நடக்கும்
அதை செய்தவர் எம்.ஆர்.ராதா என்பது
கடைசியில் தெரியும்.
இதை எல்லாம் தலைவர் ஒருவருக்காவே பொருந்தும் துப்பறியும் திரைப்படங்கள் ஆகும்.
எல்லா திரைப்படங்களையும்
அன்று முகம் சுழித்தவர்கள் கூட இன்று பார்த்து மகிழும் காவியமாக பார்க்க வைத்த....
ஒரே கதாநாயகன் மக்கள் திலகம் மட்டுமே....ukr...
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின் டிவியில்*சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*27/10/20 அன்று அளித்த*தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------------------------
கோட்டையில் உள்ள ஒரு அரசு அதிகாரிக்கு முதல்வர் எம்.ஜி.ஆரிடம் இருந்து போன் வந்ததாக சொல்கிறார்கள் .என்னவோ ,ஏதோ என்று அந்த அதிகாரி பதறி அடித்துக்கொண்டு ராமாவரம் தோட்டத்திற்கு செல்கிறார் .* அங்கு சென்றவுடன் அவரை சாப்பிட அழைக்கிறார் எம்.ஜி.ஆர். கடந்த முறை நீங்கள் என்னுடன் சாப்பிடும்போது அந்த கூட்டு ,பொரியல் நன்றாக இருந்தது என்று சொன்னீர்கள் அல்லவா,அவற்றை இன்று* சமைக்கிறார்கள் .அதை நீங்கள் விரும்பி சாப்பிடுவீர்கள் என்றுதான் அழைத்தேன் என்றார் எம்.ஜி.ஆர். மற்றவர்கள் என்ன விரும்புகிறார்களோ அதை உண்ணவைத்து , அந்த உண்கிற* அழகை பார்த்து ரசிக்கிற ஆன்மா எம்.ஜி.ஆரிடம் இருந்தது என்பதுதான் சிறப்பு .
பெண்களுக்கு இழிவு ஏற்பட்டுவிட கூடாது, அந்த துன்பம் நேராதிருக்க அவர்களின் உயிர் பாதுகாப்பிற்காக, தானே முன்னின்று , நாடக கம்பெனி காலத்தில் இருந்து தானே பாதுகாப்பு உதவிகள் செய்து, பெண்கள் தனியாக செல்ல அனுமதிக்காமல்* கோவிலுக்கோ அல்லது நகை கடைகளுக்கோ போனால், அவர்களின் பாதுகாப்பிற்கு தனது ஆட்களை வழக்கமாக அனுப்பி வைப்பதில் அக்கறையும், தனி கவனமும் செலுத்தியவர் எம்.ஜி.ஆர்.*
பழம்பெரும் நடிகை லட்சுமியை படப்பிடிப்பில் சந்தித்தபோது,குடும்ப வாழ்க்கையில் கணவரின் உறவு முறிந்தபோது* நீ தனியாக வாழ்க்கையை நடத்த கூடாது .அதனால் திரைப்பட நடிகை என்கிற வகையில் பலர்*பலவிதமாக பேசுவார்கள். அதற்கு இடம் தரக்கூடாது .* நீ மறுமணம் செய்து கொள்வதுதான் நல்லது. அதுதான் உனக்கு பாதுகாப்பு என்று அறிவுரை கூறினாராம் . திரையுலகை தன்னுடைய குடும்பமாக எண்ணியவர் . அதனால்தான் சினிமா குடும்பத்தை சார்ந்த பல்லாயிரக்கணக்கானவர்கள்*அவரை தங்களின் குடும்பங்களின் தலைவராக நினைத்து ,அவரது படத்தை வைத்து இன்றும் பூஜித்து கொண்டிருக்கிறார்கள் .காரணம் அவர் திரையுலகத்தை வெறும் தொழிலாக மட்டுமே பார்க்கவில்லை என்பதுதான்**
திரு.கா.லியாகத் அலிகான் பேட்டி :* உன்னை தேடி ஒருவன் வந்துவிட்டால், தேடி வந்தவன்* உன்னை நம்பித்தான்**வருகிறான்* அது உன்னால் முடிந்ததா, முடியாததா என்பதல்ல பிரச்னை .* அவனை ஆறுதல் படுத்தி, ஆசுவாசப்படுத்தி , உன்னால் என்ன முடியுமோ அதை கொடுத்து அனுப்புவதுதான் உன்னுடைய கடமை. இதுதான் மத்துவாச்சாரியார் வாக்கு .* பொன் வேண்டும் என்று ஒருவன் கேட்டு வந்தால் பொன் இல்லை என்றாலும், பூவாவது வைக்க வேண்டும்* என்று சொல்கிறார்கள்*அல்லவா அது போல நீ எம்.ஜி.ஆர். அவர்களிடம் போய் ஒரு விஷயத்தை, பிரச்னையை* சொல்லிவிட்டால் அது முடியுமா , முடியாதா என்று அப்போதே சொல்லாமல்* முடியும்**என்கிற வார்த்தையை, தத்துவத்தை கண நேரத்தில் சொன்னவர்தான் எம்.ஜி.ஆர்.அவர்கள் . அவர் ஒரு திட்டத்திலே, அந்த திட்டம் சார்ந்து ஒரு இடத்தை ஆர்ஜிதப்படுத்தி பறித்துவிட்டார் .* அந்த இடம் சென்னையில் கலங்கரை விளக்கம் பகுதியை சுற்றி ஒரு இடத்தில இருக்கிறது .அந்த இடத்தில குடியிருக்கும் ஏழை பெண்மணி வெறும் 2 சென்ட் நிலம் வைத்திருக்கிறார் .* அந்த நிலத்தை அரசு ஆர்ஜிதப்படுத்தி அரசு பறித்துவிட்டது .அப்போது அந்த வயதான* பெண்மணி,தம்பி முதல்வர் எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு வணக்கம்.ஐயா , .எனக்கு இருந்தது வெறும் 2 சென்ட் நிலம்தான் .அதை ஏதோ ஒரு திட்டத்திற்காக உங்களுடைய ஆட்கள் ஆர்ஜிதப்படுத்தி விட்டார்கள் . எனக்கு வேறு நிலம் கிடையாது .சொந்தபந்தங்கள் இந்த பகுதியை சுற்றித்தான் உள்ளனர் நான் வேறு யாரிடம் நியாயத்தை கேட்பேன்.எங்கு செல்வேன் .தாங்கள்தான் எனக்கு உதவி செய்து, நல்ல வழிகாட்ட வேண்டும் என்று கண்ணீருடன் எழுதுவதாக கடிதத்தில் தெரிவிக்கிறார் .* அவர் கடிதத்தில் எழுதிய வார்த்தைகள் எம்.ஜி.ஆர். இதயத்தில் ஊடுருவி விட்டது .முதல்வர் எம்.ஜி.ஆர். காலதாமதம் செய்யாமல் ,இந்த திட்டத்தினால் அந்த பெண்மணிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிட கூடாது என்று கருதி* அந்த திட்டத்தை அரசின் எந்த துறை செயல்படுத்துவதாக இருந்தாலும் ,,அதை தவிர்த்து, வேறு இடத்தில செயல்படுத்த உத்தரவிட்டு, அந்த பெண்மணிக்கு பதில் கடிதத்தில் உங்கள் நிலம் அரசால் திருப்பி தரப்படுகிறது .உங்களின் வேண்டுகோளின்படி விதிவிலக்கு அளிக்கப்படுகிறது , உங்கள் சொந்த நிலத்திற்கு அரசினால் எந்த இடர்பாடும் வராது என்று உத்தரவாதம் அளித்து எழுதுகிறார் .* இப்படி ஒரு சாதாரண ,வயதான பெண்மணிக்கு எம்.ஜி.ஆர். பதில் கடிதம் எழுதி அவரை மனநிறைவு அடைய செய்த செயலை என்னவென்று சொல்வது வர்ணிப்பது . இது போன்ற ஒரு தலைவரை* நாம்**பெற்றிருப்பது தமிழகம் செய்த புண்ணியம்தான் . இப்பேர்ப்பட்ட ஒரு தலைவரோடு நான் பழகியதை என் பாக்கியமாக கருதுகிறேன்* *நான் இப்படியெல்லாம் பேசுவதற்காக, நான் அவருக்கு சமம் என்றோ, சமமானவன் என்றோ* கருதிவிடக்கூடாது .**.நான் ஒரு சாதாரண பணியாள் போலத்தான் பழகி இருக்கிறேன் . எனக்கு சமமானவர்கள்* பலபேர் உள்ளனர்* * என்னுடன் பழகிய நண்பர்கள்* தாட்கோ கண்ணன், சைதை துரைசாமிஏ.சி.சண்முகம், ஜெகத்ரட்சகன் ஆகியோரை குறிப்பிடலாம் .* நண்பர் வெள்ளைச்சாமி என்பவர் எனக்கும் ,மற்ற நண்பர்களுக்கும் குருவாக இருந்தவர்* திருநாவுக்கரசு மாணவர் அணி செயலாளராக* இருந்தவர் .**
நாங்கள் எல்லாம் இருந்தாலும், ஏ.சி.சண்முகம், ஜெகத்ரட்சகன் போன்றவர்களிடம் தலைவர் சிரிக்க சிரிக்க பேசுவார் .அவர்களைவிட சற்று கீழான நிலையில் ஒரு தொண்டனாக* இருந்தேன்* இருப்பினும் எனக்கு உரிய* மரியாதை கொடுத்து, மாநில மாணவர் அணிதுணை செயலாளராகவும், செயலாளராக காளிமுத்து அண்ணனை நியமித்தார் தலைவர் .* ஜெ.சி.டி.பிரபாகரனை இளைஞர் அணி துணை செயலாளராகவும், திருநாவுக்கரசை இளைஞர் அணி செயலாளராகவும் நியமித்தார் .* சில காலத்திற்கு பிறகு காளிமுத்து, திருநாவுக்கரசு ஆகியோருக்கு வேறுபதவிகள் கொடுத்து என்னை* மாநில மாணவர் அணி செயலாளராகவும், ஜெ.சி.டி.பிரபாகரனை இளைஞர் அணி செயலாளராகவும் நியமித்தார் இப்படி இளைஞர்களை வளர்த்துவிடுவதும் சரி, அவர்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு வாய்ப்புகள் , பதவிகள், பொறுப்புகள் அளிப்பதிலும் சரி ,அவரைப்போல் இன்னொருவர் பிறக்கவேண்டும்*.* அதாவது நாம் தவமிருந்து பெற்ற ஒரு தலைவர் ,அற்புத தலைவர்* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். என்றுதான் நான் அடித்து சொல்வேன். அது மட்டுமல்ல அவருக்கு நிகரான, இணையான தலைவராக யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது* காரணம் அவரது செயல்பாடுகள்தான்*ஜெயலலிதா அவர்களும் எனக்கு உரிய மதிப்பு, மரியாதை அளித்து, மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பதவியை நான் கேட்காமலேயே*கொடுத்து அழகு பார்த்தவர் .* புரட்சி தலைவரோடு இப்படி அன்பாக, நெருக்கமாக பழகும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துவிடாது .* நான் இப்படியெல்லாம் பேசுவதால், பேட்டி அளிப்பதால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரோடு சமமாக பழகி இருப்பதாக ,சரளமாக உட்கார்ந்து கொண்டு பேசி இருப்பதாக*, தவறாக யாரும் எண்ணிவிட கூடாது என்று தெரிவித்து கொள்கிறேன் ..*நாங்கள் எல்லாம் அடிமட்ட தொண்டர்கள். அவர் என்ன நினைக்கிறாரோ, என்ன சொல்கிறாரோ ,அதை செயல்படுத்தவும்,* நிறைவேற்றவும்தான் நாங்கள் தொண்டர்களாக செயல்பட்டோம் .* என் சம காலத்து நண்பர்கள் கூட இந்த என் பேச்சை கண்டு, பேட்டியை கண்டு, நான் வெட்டி பந்தா செய்வதாக கூட நினைக்க கூடும் .அப்படி நினைக்க கூடாது என்றுதான் நான் வெளிப்படையாக சொல்கிறேன் .அவரோடு பழகியவர்களில் சிலருடைய பெயர்களைத்தான் என்னால் குறிப்பிட முடிந்தது .* சிலருடைய பெயர்களை என்னால் குறிப்பிட முடியாமல் போய்விட்டது . தலைவரோடு நெருங்கி பழகியவர்கள், தொடர்பில் இருந்தவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள் . அவர்களை எல்லாம் பட்டியல் இடுவது மிகவும் கடினம் .ஆனால் வாய்ப்பு கிடைக்கும்போது சிலருடைய பெயர்களை குறிப்பிட நான் தயங்க மாட்டேன் என்று இந்த நல்ல நேரத்தில் சொல்லி கொள்கிறேன் .* ஜாதி, மதம், மொழிகளுக்கு அப்பாற்பட்ட ,ஒரு உன்னதமான தலைவர் புரட்சி தலைவர் .எம்.ஜி.ஆர். அவர்கள் 11 ஆண்டுகாலம் பொற்கால ஆட்சி புரிந்து*மக்களுக்கு பல நல திட்டங்கள் செயல்படுத்தி, தமிழகத்தை வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும், முன்னேற செய்து ,அண்டை மாநிலங்களோடு நல்லுறவை*கொண்டாடியவர் .* மத்திய அரசுகள் மாறினாலும் அனைவரிடத்தும் நட்புணர்வு கொண்டு, மாநிலம் எல்லா துறையிலும் முன்னேற பாடுபட்டவர் .* அவர் தமிழக மக்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்காக மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்தியாவிற்கே ஒரு முன்னோடியாக வாழ்ந்து ஒரு மிக பெரிய தத்துவ கதாநாயகனாக* விளங்கியவர் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள்* என்பதை இந்த நல்ல நேரத்தில் பெருமகிழ்ச்சியுடனும், உவகையுடனும் நான் தெரிவித்து கொள்கிறேன் . இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .**
கவிஞர் வாலி எழுதிய அரச கட்டளை படத்தின் ஒரு பாடலில் ஜெயலலிதா வாயசைத்தார் .என்னை பாட வைத்தவன் ஒருவன் . என் பாட்டுக்கு அவன்தான் தலைவன் .ஒரு குற்றமில்லாத மனிதன் . அவன் கோயில் இல்லாத இறைவன் .அதே வாலி எழுதிய பாடல் ,ஜெயலலிதா சொந்தமாக பாடிய பாடல் அடிமைப்பெண் படத்தில் இடம் பெற்றது .அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அறிவு. ஆசான் என்றால் கல்வி. அவரே உலகில் தெய்வம் . தீர்க்கதரிசனமாக எம்.ஜி.ஆர். செயல்பட்டார் என்பதற்கு பல்வேறு உதாரணங்களில் இதுவும் ஒன்று
சண்டை காட்சிகளில் பொதுவாக எம்.ஜி.ஆர். வம்பு சண்டைக்கு போகமாட்டார். அதே நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக, பெண்கள், வயதானவர்களை* சீண்டுவதாக ,குழந்தைகளுக்கு தொந்தரவு தருவதாக யாரையாவது கண்டால் ,அந்த தீங்கு இழைப்பவர்களை கண்டால், அந்த தீங்குகளை தடுப்பதற்கு அவர் தாக்குதலில் ஈடுபடுவார் .* அதுவும் முதலில் தற்காப்புக்காகத்தான் சண்டை இடுவாரே தவிர,இவராக சென்று தாக்கமாட்டார் .* சண்டை காட்சிகளில் பல்வேறு நெறிமுறைகளை கையாண்டார் . ஒருபோதும் முதுகில் குத்தும் பழக்கம் கிடையாது .அப்படி ஒரு காட்சியை அமைக்க ஒத்து கொள்ள மாட்டார் .ஆனாலும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இறுதி காட்சியில் மனோகரை நம்பியார் முதுகில் கத்தியை எறிவார் .அதை கண்ட எம்.ஜி.ஆர். நம்பியாரை*நீயும் ஒரு ஆண்மகனா, உனக்கு வெட்கமாக இல்லை. முதுகில் குத்துகிறாயே என்று தன் மருத்துவத்தை பயன்படுத்தி மனோகரை காப்பாற்றி விடுவார் .*ஆகவே சண்டை காட்சிகள் அமைப்பதிலும் ஒரு நியாயத்தை கண்டவர் எம்.ஜி.ஆர்.***
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-----------------------------------------------------------------------------------
1.சிரித்தாலும் போதுமே,செவ்வானம் தோன்றுமே -நீதிக்கு பின் பாசம்*
2.ஊருக்கும் தெரியாது, யாருக்கும் புரியாது - மாடப்புறா*
3.சிரித்து, சிரித்து என்னை சிறையிலிட்டாய் -தாய் சொல்லை தட்டாதே*
4.பொம்பளை சிரிச்சா போச்சு - சங்கே முழங்கு*
5.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*
6.உன்னை பார்த்து உலகம் சிரிக்கிறது - அடிமைப்பெண்*
7.எம்.ஜி.ஆர்.-மனோகர் உரையாடல் - ஆயிரத்தில் ஒருவன்*.**
*,*
-
"எம்.ஜி.ஆர் இல்லாமல் ஜெயலலிதா இல்லை"
இன்று ஜெயலலிதாவை அ.தி.மு.க.வினர் வணங்கும் அதே வேளையில் அவர்களால் எம்.ஜி.ஆர். பற்றி சிந்திக்காமல் இருக்கவே முடியாது. காரணம்? அந்த புரட்சித் தலைவர் இல்லையென்றால், இந்த புரட்சித் தலைவி ஏது? அந்த ‘வாத்தியார்’ இல்லையென்றால் இந்த ‘அம்மா’ ஏது? என்பதுதான் அவர்கள் சொல்லும் நியாயமான காரணங்கள்.
ஜெ.,வுக்கும் எம்.ஜி.ஆர்-க்கும் இடையிலிருந்த ஆழமான பந்தத்தை உலகமறியும். இவர்களுக்கும் இடையிலான சுவாரஸ்ய சம்பவங்கள் ஆயிரமாயிரம். அவை புதிது புதிதாக அவ்வப்போது வெளிவரும். இருவரும் சந்தோஷித்து வாழ்வை நகர்த்திய காலத்தில் அவர்களின் நெருக்கத்தில் இருந்து அவர்களை கவனித்த நபர்கள் இதை நினைவுபடுத்திக் கொண்டேதான் இருக்கிறார்கள்.
அந்தவகையில் ஜெ.,வின் பிறந்த நாளான இன்று அவர்கள் இருவரின் நட்பு வட்டாரத்தில் இருந்தவர்களின் முக்கியமானவரான இலக்கியவாதி இந்துமதி கூறுகையில்....”அம்முவுக்கும், எனக்கும் இடையில் இருந்த நட்பை கண்டு ரொம்பவே சந்தோஷப்பட்டார் எம்.ஜி.ஆர். நான் அம்முவுக்கு மிக பாதுகாப்பாக இருப்பதாக அவர் உணர்ந்தார். எல்லோரும் சொல்வது போல் அம்முவுக்கு, எம்.ஜி.ஆர். வெறும் சினிமா மற்றும் ரியல் லைஃப் ஹீரோ மட்டுமல்ல, சில நேரங்களில் அவரது தந்தை ஸ்தானத்திலும், தாய் ஸ்தானத்திலும் கூட இருந்தவர்.
சிம்பிளாக ஒன்று சொல்கிறேன்...ஜெயலலிதாவின் அம்மா சந்தியா இறந்துவிட்டார். போயஸின் பிரம்மாண்ட இல்லத்தில் தனி மரமாக உடைந்து நின்றார் ஜெ., அப்போது ஒரு தந்தை போல் நின்று பல வகைகளில் அவருக்கு வழிகாட்டியவர் எம்.ஜி.ஆர். அதிலும், ‘அம்மு, சாவிக்கொத்தை எடுத்து இடுப்புல சொருகு. மாடி, அறை எல்லாத்தையும் பூட்டு.’ என்று அவர் இட்ட கட்டளைகள் ஜெயலலிதாவின் பாதுகாப்பான வாழ்க்கைக்கு பெரிய வழிகாட்டியாக அமைந்தன. ஜெயலலிதாவும் அந்தளவுக்கு உலகம் அறியா பிள்ளையாகத்தான் இருந்தார்.
ஜெயலலிதா ஒரு பத்திரிக்கை அதிபராகவும், நான் அதில் ஆசிரியராகவும் இருக்க வேண்டுமென்பது எம்.ஜி.ஆரின் எண்ணம். இதற்காக ராயப்பேட்டையில் அன்றைய அஜந்தா ஹோட்டல் அருகே பெரிய கட்டிடம் ஒன்றை அலுவலமாக தேர்வு செய்தேன். ஜெ.,வும் அதை வந்து பார்த்து சந்தோஷப்பட்டார், எம்.ஜி.ஆர்-க்கும் அது பிடித்திருந்தது. ஆனால் அந்த திட்டம் கைகூடவில்லை.
‘காவிரி தந்த கலைச்செல்வி’ நாடகம்தான் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கான அடித்தளம். இந்த நாடக அரங்கேற்றத்தின் பின், அ.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக ஊர், ஊராக செல்ல வேண்டிய பணி ஜெயலலிதாவின் தோள்களில் விழுந்தது. அதை திறம்படச் செய்தார் ஜெயலலிதா. அம்முவுக்குள் அசாத்திய கலைஞானமும், நிர்வாகத் திறமையும், எதிலும் வெற்றி பெறுவதில் பிடிவாத குணமும் இருந்தது. ஆனால் அவற்றைக் கண்டுபிடித்து வெளியே கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். இதனாலும்தான் எம்.ஜி.ஆர். மீது அம்முவுக்கு அளவு கடந்த, விவரிப்பை தாண்டிய அன்பும், மரியாதை, சிறு அச்சம், பெரும் பாசம் எல்லாமே இருந்தது.” என்கிறார். அம்மு அம்மா பற்றிய வரலாற்றின் சிறு பாராவை எழுதினாலும் அதில் எம்.ஜி.ஆரை நினைவுகூறாமல் விடவே முடியாது என்பதே நிதர்சனம்..........mgn...
-
The Tamil Nadu Dr. M.G.R. Medical University is a government medical university centered in Chennai, Tamil Nadu, India. It is named after the former Chief Minister of Tamil Nadu, Dr. M.G.Ramachandran and is the second-largest health sciences university in India.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.
மருத்துவ பல்கலைக்கழகம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு, சென்னையை மையமாகக் கொண்ட ஒரு அரசு மருத்துவ பல்கலைக்கழகமாகும்.
இதற்கு தமிழகத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் பெயரிடப்பட்டது, இது இந்தியாவின் இரண்டாவது பெரிய சுகாதார அறிவியல் பல்கலைக்கழகமாகும்..........
-
#மறக்க_முடியாத_மக்கள்_திலகம்
#தலைவன்_இருக்கிறான்.
ஒரு இயக்கத்தின் தலைவராக, தமிழக முதல்வராக மட்டுமல்ல ஒரு தனி மனிதராகவும் மக்கள் திலகத்தின் துணிச்சல் மகத்தானது...!!! நாடக நாட்களில் நாடக மேடை சரிந்து கால் உடைந்த போதும், பின்னாளில் 1967ல் துப்பாக்கியால் சுடப்பட்டபோதும் அவர் காட்டிய துணிச்சல்-தன்னநம்பிக்கை அசாத்தியமானது.
அதே போல...
1984 ம் ஆண்டு இரண்டு சிறுநீரகங்களும் பழுது- தலையில் ஒரு டென்னிஸ் பந்து அளவிற்கு கட்டி-பக்கவாதம் - ஆஸ்த்துமா என இத்தனை பிரச்சனைகளோடும் நினைவிழந்த நிலையில் அமெரிக்காவின் ப்ரூக்ளின் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இங்கே அந்தசமயம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றபோது, மக்கள் திலகத்தின் உடல் நிலையே பரப்புரையில் பிரதான இடம் பெற்றது."ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டார்- வாருவார் ஆனால் செயல் பட முடியாது" என்று வதந்திகள் பெருமளவில் பரவின. திடீரென்று ஒரு நாள் வந்த "வேறு மாதிரியான" ஒரு செய்தியும் தமிழக மக்களை நிலை குலைய வைத்தது.
பிப்ரவரி 1985, அத்தனை வதந்திகளையும் தகர்த்து எரிந்து விட்டு, சிகிச்சை முடிந்து வெற்றிகரமாய் திரும்புகிறார் மக்கள் திலகம். அவர் அமெரிக்காவில் இருந்து திரும்பு முதல்நாளே பெண்களும்-குழந்தைகளுமாய் கூட்டம் குலுங்கியது. ((நான்காவது படம்))
அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார், அவரால் சரியாக நடக்க முடியாது என்பதால் விமானத்திலிருந்தே அவர் காருக்கு பேட்டரி அமைக்கப்பட்ட தனி வண்டி அமைக்கப்பட்டிருந்தது. மக்களை சந்திப்பாரா? சந்தித்தால் அவர் உடல் நிலை தாங்குமா? என்றெல்லாம் கேள்விகள்.
வந்து இறங்கினார் மக்கள் திலகம்...தனக்குஏற்பாடு செய்த பேட்டரி காரை லேசாக சிரித்த படியே பார்த்து விட்டு, மேடையின் மேல் தவ்வி ஏறுகிறார். மேடைக்கு செல்ல போடப்பட்டிருந்த மூங்கில் பாலம் போன்ற அமைப்பில் யார் துணையின்றியும் தானே நடக்கிறார், தொண்டர்களை -பொது மக்களை பார்த்து கண்ணசைகிறார். கண்கலங்குகிறார். அதோடு விடவில்லை மேடையில் இப்படியும் அப்படியும் சிம்ம நடை நடக்கிறார். கூட்டத்தில் இடி முழங்குகிறது. "என்னை பற்றி என்ன சொன்னீர்கள்? இதோ நானே வந்துவிட்டேன்" என்று தன் நடையால்- கையசைப்பால்- சொல்கிறார் மக்கள் திலகம். முழுவதாக இரண்டு மணி நேரம் தொண்டர்களை-பொதுமக்களை சந்தித்து விட்டு பின் எவ்வித தாமதமும்-தள்ளிப்போடுதலும் இன்றி தமிழக முதல்வராக பதவி ஏற்று, அன்றிலிருந்தே பதவி ஏற்கிறார் மக்கள் திலகம்.
கவலைக்கிடமான நிலையிலிருந்து மீண்டு வந்தாலும், தன் உடல் நிலையை காரணம் காட்டி தொண்டர்களை-பொதுமக்களை ஏமாற்றவில்லை மக்கள் திலகம்.சந்திக்க தவறவில்லை. முதல்வர் பொறுப்பையும் தட்டிக்கழிக்கவில்லை...!!! அதுதான் அவர் தன்னம்பிக்கை..துணிச்சல்.!!
_____________________________
1984 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது மக்கள் திலகம் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்ததால் அவரால் தேர்தல் பரப்புரைக்கு வரமுடியவில்லை. செல்வி.ஜெயலலிதா அவர்களே பரப்புரைக்கு தலைமை தாங்கினார். அஇஅதிமுகவை அந்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெற வைத்தார். "மக்கள் திலகம் உங்களிடம் துள்ளிக்குதித்தோடி வருவார்" என்று ஊருக்கு ஊர் பேசினார்.
மக்கள் திலகத்தின் உடல் நிலை குறித்து தொடர்ந்து வதந்தி பரவியதால், அமெரிக்க-ப்ரூக்கிள் மருத்துவமனையிலிருந்து எடுக்கப்பட்ட மக்கள் திலகத்தின் பிரத்தியோக காணொளிகள் மக்களுக்கு அனைத்து நகரங்களிலும் காட்டப்பட்டன ((முதல் இரண்டு படங்கள்)) அதை தொகுத்து வழங்கிய, பேச்சாளர் வலம்புரி ஜானின் தொகுப்ரை பெரும் வரவேற்பை பெற்றது..
"மக்கள் திலகத்தின் கைகளில் உணர்வே இல்லையென்றார்கள்...இதோ அந்தக்கைகளால் அவர் உணவே சாப்பிடுகிறார்" என்ற இந்த வரிகளை பின்னாளில் மக்கள் திலகமே ரசித்தார்....sbb...
-
புரட்சி நடிகரின் "முகராசி"யை போல் அவரது கைராசியும் நன்றாக பலன் கொடுக்கும். அவரது கைராசியை நம்பி தொடங்கப்பட்ட படம்தான் சிவாஜி நடிப்பில் பீம்சிங்சின் இயக்கத்தில் உருவான "பதிபக்தி".
படம் நல்ல முறையில் முடிவடைந்து தயாரிப்பாளருக்கு ஒரளவு வெற்றியையும் தேடித்தந்தது.
ஆனால் மாற்று நடிகரோ கை ராசிக்கு பெயர் போனவர். அவர் பேதமின்றி யாருக்கு எந்த படத்தை தொடங்கி வைத்தாலும் கைராசி பின்னி எடுக்கும். மக்கள் திலகத்தை வைத்து "மணிமேகலை" என்றொரு படம் அவரால் தொடங்கி வைக்கப்பட்ட படம். அதன் நிலை என்னவாயிற்று என்று நமக்கே தெரியாத அளவுக்கு அவரது கைராசியின் வேகம் அந்த படத்தை தாக்கி கருவிலே உருத்தெரியாமல் அழித்து விட்டது.
ஆனால் அவர் யாருக்கும் எந்த பாகுபாடும் பார்க்காதவர். அவரே தொடங்கிய கட்சிக்கு முதல் நாள் கொடியேற்றும் போது கொடிக்கம்பமே முறிந்து விழுந்தது கூட அவரது கைராசியின் அம்சமே. ஒரு தேர்தலோடு அந்தக் கட்சியும் அத்தோடு கைவிடப் பட்டது. பாரதிதாசன் தனது சொந்த தயாரிப்பில் எடுத்த "பாண்டியன் பரிசு" என்ற படம் கதாநாயகனாக சிவாஜியும் கதாநாயகியாக சரோஜாதேவியும் நடிக்க கர்மவீரர் காமராஜர் தொடங்கி வைத்தது என்னவாயிற்று.?
கர்மவீரர் மீது எந்தக் குறையும் சொல்ல முடியாது. அவர் தொடங்கி வைத்த எத்தனையோ திட்டங்கள் வெற்றி பெற்றது. 1971 தேர்தலிலே காங்கிரஸிக்கு கணேசன் பிரசாரத்தில் காமராஜருக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை. கணேசனின் பிரசாரத்தால் காங்கிரஸ் வலுவிழந்ததோடு ஆட்சிக் கனவையும் அத்தோடு இழந்து நின்றது. அவருடைய பிரசாரம் இல்லையென்றால் காங்கிரஸ் கொஞ்சமாவது உயிர் பிழைத்திருக்கும்.
ஆனால் காமராஜரோடு இணைந்த கணேசனின் ராசியின் பரிசாக பாரதிதாசனுக்கு விடிந்து அவரது திரையுலக முகவரியை மாற்றி அமைத்து விட்டது. இப்படி கணேசனின் கைராசியை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
"வேட்டைக்காரன்" "கர்ணனை" மட்டும் வேட்டையாடவில்லை1971 தேர்தலில் எதிர்க்கட்சியை சுத்தமாக வேட்டையாடி காங்கிரஸை தமிழ்நாட்டிலிருந்து அடியோடு விரட்டி விட்டான் என்பது நாடறிந்த விஷயம்.
தகவல் உதவி: திரு சைலேஷ் பாசு.........ksr.........
-
தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.திரைக்காவியங்கள்*ஒளிபரப்பான*பட்டிய ல் ( 26/10/20 முதல்* 31/10/20 வரை )
--------------------------------------------------------------------------------------------------------------------------------
26/10/20* - மெகா டிவி -மதியம் 12 மணி - சக்கரவர்த்தி திருமகள்*
* * * * * * * * மெகா 24- பிற்பகல் 2.30 மணி - பணத்தோட்டம்*
* * * * * * * *சன் லைப் - மாலை 4 மணி -* கண்ணன் என் காதலன்*
* * * * * * * புதுயுகம் டிவி -இரவு 7 மணி - ராமன் தேடிய சீதை*
* * * * * * *எம்.எம்.டிவி* - இரவு 10.30 மணி - படகோட்டி*
27/10/20-சன் லைப்* - காலை 11 மணி - தேடி வந்த மாப்பிள்ளை*
* * * * * * *முரசு டிவி -மதியம் 12 மணி /இரவு 7 மணி -விவசாயி*
28/10/20 - சன்* லைப் - காலை 11 மணி - நீதிக்கு தலைவணங்கு*
29/10/20-**சன் லைப் -**காலை 11 மணி- எங்க வீட்டு பிள்ளை*
* * * * * * * * மெகா டிவி -மதியம் 12 மணி - தொழிலாளி*
* * * * * * * ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி - இதய வீணை*
30/10/20-மெகா டிவி -அதிகாலை 1 மணி - வேட்டைக்காரன்*
* * * * * * * முரசு டிவி -மதியம் 12 மணி/இரவு 7 மணி - தாயை காத்த தனயன்*
* * * * * * *வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - புதிய பூமி*
* * * * * * சன் லைப் - மாலை 4 மணி - உரிமைக்குரல்*
* * * * * *புதுயுகம்* -இரவு 7 மணி - வேட்டைக்காரன்*
31/10/20 -மெகா டிவி -அதிகாலை 1 மணி - படகோட்டி*
* * * * * * *சன்* லைப் - காலை 11 மணி -நான் ஏன் பிறந்தேன்*
* * * * * * மீனாட்சி டிவி -பிற்பகல் 1 மணி - நல்ல நேரம்*
* * * * * * ராஜ் டிவி -பிற்பகல் 1.30 மணி -அலிபாபாவும் 40திருடர்களும்*
* * * * * *மீனாட்சி டிவி -இரவு 8.30 மணி - வேட்டைக்காரன்*
* * * * * * *