Murali sir,
http://tvrk.blogspot.com/2008/09/blog-post_125.html
This blogger says ,NT is the first one to compensate the loss for his movie ..since 'Karnan' made BR Bandulu loose money ,NT did 'Muradan Muthu' for free ..Is it true? :)
Printable View
Murali sir,
http://tvrk.blogspot.com/2008/09/blog-post_125.html
This blogger says ,NT is the first one to compensate the loss for his movie ..since 'Karnan' made BR Bandulu loose money ,NT did 'Muradan Muthu' for free ..Is it true? :)
Murali sir,Quote:
Originally Posted by Murali Srinivas
இவர் நடிகர் திலகம் மட்டுமல்ல, சாதனைச் சிகரமும் கூட என்பதை உங்களின் கட்டுரை ஆழமாகவும் தெளிவாகவும் கூறி வருகிறது.
தொடரட்டும் சாத்னைகள்.
வாழ்த்துக்கள்.
Joe,Quote:
Originally Posted by joe
Yes, it is true. In fact I have already written about this gesture in this thread itself. But one correction is, it is not for the loss of Karnan. The returns from Karnan were slow in coming back as B.R.Panthulu had released it directly instead of the traditional distributor set up. So to compensate the high interest rate which was eating into the profits, NT agreed to do Muradan Muthu free of cost. But Panthulu who bacame greedy and wanted to exploit the glamour of MM being announced as the 100th movie (instead of Navarathiri), forgot the goodwill gesture of NT and crossed camps.
NT also acted free for Kaaval Deivam to help SV Subbiah.
Regards
நன்றி :)Quote:
Originally Posted by joe
எம் ஜி ஆருக்கு அதற்கு முன்னால் பாடியுள்ளாரா?
இல்லை .Quote:
Originally Posted by thamiz
நன்றி ஜோ! :)Quote:
Originally Posted by joe
Idhai naan modhalla sonnadhukku dhaan adikkadha koraya mandhirichchu vitteenga.Quote:
Originally Posted by joe
ஜோ,Quote:
Originally Posted by joe
ஒரு சின்ன சந்தேகம். எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே பாடல் டி.எம்.எஸ் பாடி மலைக்கள்ளன் படத்தில் இடம் பெற்றது. என் நினைவு சரியாக இருக்குமானால் மலைக்கள்ளன் படமும் 1954- ம் ஆண்டு தான் வெளிவந்தது (அதாவது தூக்கு தூக்கி வெளி வந்த அதே ஆண்டு). தூக்கு தூக்கி ஆகஸ்ட் மாதம் 26 -ம் தேதி வெளியானது. மலைக்கள்ளன் ரிலீஸ் தேதி தெரியவில்லை.
அன்புடன்
சிவாஜியின் சாதனை சிகரங்கள்
தொடர்ச்சி
வருடம் - 1959
கட்டபொம்மனின் வெற்றி சரித்திரம் தொடர்கிறது
1. முதன் முதலாக கேரளத்தில் 100 நாட்கள் ஓடிய தமிழ் படம் - கட்டபொம்மன்.
ஊர் - திருவனந்தபுரம்
2. மீண்டும் மீண்டும் திரையிடப்பட்ட இந்த படம் ஒரு இடைவெளிக்கு பின் 07.09.1984 அன்று தமிழகமெங்கும் வெளியானது. அப்போது நிகழ்த்திய சில சாதனைகள்
சென்னை மாநகரில் ஒன்றன் பின் ஒன்றாக பல திரையரங்குகளில் இந்த படம் ஓடிய நாட்கள் - 175. அதாவது வெள்ளி விழா.
3. புதிய படங்களே ஓட முடியாமல் தவித்த போது நடிகர் திலகத்தின் 25 வருட பழைய படம் (1959 -1984) வெள்ளி விழா கொண்டாடியது இன்று வரை முறியடிக்க முடியாத சாதனை.
4. மதுரையிலும் 07.09.1984 அன்று அலங்கார் திரையரங்கில் வெளியான இந்த படம் ஓடிய நாட்கள் - 45. இதுவும் ஒரு சாதனை.
[ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி தீபாவளிக்கு (22.10.1984) புதிய படம் திரையிடப்பட்டதால் நிறுத்தப்பட்டது].
5. நடிகர் திலகத்தின் மறைவிற்கு பிறகு 01.03.2002 அன்று வெளியான கட்டபொம்மன் மதுரை - சிந்தாமணியில் 2 வாரங்கள் ஓடியது.
6. ஷிப்டிங்கில் மதுரை மட்டும் சுற்று வட்டாரங்களில் ஓடிய நாட்கள் - 143
1959 - ம் வருடத்தின் இரண்டாவது சாதனை படம்
பாகப்பிரிவினை
7. மதுரையில் 200 நாட்களுக்கு மேல் ஓடிய படம்
1959 - வருடத்திலேயே இரண்டாவது வெள்ளி விழா படம் - பாகப்பிரிவினை
8. மதுரையின் திரைப்பட சரித்திரத்திலேயே முதன் முதலாக ஒரே வருடத்தில் ஒரே நடிகரின் இரண்டு படங்கள் வெள்ளி விழா கொண்டாடியது நடிகர் திலகத்தின் படங்கள் தான்.
கட்டபொம்மன் - நியூ சினிமா - 181 நாட்கள்.
பாகப்பிரிவினை - சிந்தாமணி - 216 நாட்கள்.
9.Tier II cities என்று சொல்லப்படுகிற தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்களில் ஒன்றான மதுரையில் ஒரே வருடத்தில் இரண்டு வெள்ளி விழா படங்கள் கொடுத்த சாதனையை ஒரு முறை அல்ல இரண்டு முறை அல்ல மூன்று முறை செய்த ஒரே நடிகன் அன்றும் இன்றும் என்றும் நடிகர் திலகம் மட்டுமே.
(இதை பற்றிய கூடுதல் விவரங்கள் அந்தந்த வருடங்கள் வரும் போது தருகிறேன்).
10. முதன் முதலாக மதுரையில் 3 லட்சத்திற்கு மேல் வசூல் செய்த முதல் தமிழ் படம் - பாகப்பிரிவினை.
மதுரை - சிந்தாமணியில்
216 நாட்கள் மொத்த வசூல் - Rs 3,36,180.54
வரி நீக்கிய நிகர வசூல் - Rs 2,52,301.00
விநியோகஸ்தர் பங்கு - Rs 1,31,233.58
11. மதுரையில் கருப்பு வெள்ளை படங்களில் அதிக நாட்கள் ஓடிய படம் - பாகப்பிரிவினை.
12. மதுரை- சிந்தாமணியில் 200 நாட்கள் ஓடிய இரண்டு படங்களின் கதாநாயகனுமே நடிகர் திலகம் தான். படங்கள்
பாகப்பிரிவினை
திரிசூலம்
மாநகரங்களையும், நகரங்களையும் தாண்டி இடை நிலை ஊர்களிலும் சாதனை செய்தவர் நடிகர் திலகம்.
13. முதன் முதலாக திண்டுக்கல் நகரில் 100 நாட்கள் ஓடிய படம் - பாகப்பிரிவினை
திரையரங்கம் - NVGB
நாட்கள் - 100
14. 1959 -ம் வருடத்தில் இரண்டு படங்களின் வெற்றி விழாவும் மதுரையில் நடக்க அதில் கலந்து கொண்டதன் மூலம் மீண்டும் ஒரு "முதன் முதல்" சாதனை புரிந்தார் நடிகர் திலகம்.
(சாதனைகள் தொடரும்)
அன்புடன்
:redjump: :boo:Quote:
Originally Posted by Murali Srinivas
டியர் முரளி,
'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தின் சாதனைப்பட்டியலின் நீளம் மலைக்க வைக்கிறது. அது மிகப்பெரிய வெற்றிப்படம் என்பது மட்டும்தான் எல்லோருக்கும் தெரியும். அது போக பெரும்பாலோருக்கு அப்படத்தின் மூலமாக நடிகர்திலகத்துக்கு 'ஆசிய ஆப்பிரிக்க சிறந்த நடிகர்' விருது கிடைத்தது என்பதும் தெரிந்திருக்கும். ஆனால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சாதனைகள் இன்றைய தலைமுறைக்கு (ஏன் அன்றைய தலைமுறைக்கே) தெரிந்திராத உண்மைகள். நடிகர்திலகம் என்னும் மாபெரும் கலைஞனின் எப்படிப்பட்ட சாதனைகள் எல்லாம் மறைக்கப்பட்டிருக்கின்றன...??.
சரியான நேரத்தில், சரியான ஒரு தொடரைத் துவங்கியுள்ளீர்கள். நடிகர்திலகத்தின் ரசிகர்/ரசிகைகள் மனதில் நீங்க இடம் பிடித்துவிட்டீர்கள். வீரபாண்டிய கட்டபொம்மன் சென்னை சித்ரா திரையரங்கிலும் வெள்ளி விழாவைத்தாண்டி ஓடியிருக்கிறது.
சென்னை சித்ராவில் கட்டபொம்மன் படம் ஓடிக்கொண்டிருக்கும்போது, இதே போன்று சுதந்திரப்போராட்ட வரலாறு கொண்ட, மருது பாண்டியர்களின் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட 'சிவகங்கைச்சீமை' படம் சென்னை பாரகனில் திரையிடப்பட்டிருந்ததாம். (ONLY WALKABLE DISTANCE BETWEEN THE TWO THEATRES). அப்போது, கண்ணதாசன் சார்ந்திருந்த ஒரு அரசியல் கட்சியினர் (1961-ல் கண்ணதாசன் அக்கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார்), கட்டபொம்மனுக்கு காங்கிரஸ் படம் என்ற சாயம் பூசி, மக்கள் மத்தியில் எடுபடாமல் செய்யவேண்டுமென்பதற்காகவும் தங்கள் கட்சியைச்சேர்ந்த நடிகர் கதாநாயனாக நடித்த சிவகங்கைச்சீமை வெற்றி பெற வேண்டுமென்பதற்காகவும், ஒவ்வொரு காட்சி முடிந்தபின்னும் சித்ரா திரையரங்கிலிருந்து பாரகன் திரையரங்கு வரை சைக்கிள்களில் "கட்டபொம்மன் படம் அவுட்" என்று கத்திக்கொண்டே போவார்களாம். சித்ரா அரங்கிலும் டிக்கட் வாங்கும் கியூவில் நின்றுகொண்டு, வேண்டுமென்றே கட்டபொம்மன் படத்தை கேலிசெய்து பேசுவார்களாம். அப்போது பேச்சாளர்கள் (ஏச்சாளர்களும் கூட) நிறைந்த கட்சி அது. அவர்களுக்கு பதில் சொல்ல காங்கிரஸில் ஆள் இல்லாதது வசதியாகப்போய்விட்டது.
ஆனால் கடைசியில் எந்தப்படம் வெற்றி மகுடத்தைச்சூடியது, எந்தப்படம் தோல்வியைத்தழுவியது என்பது சரித்திரம் காட்டும் உண்மை. (ஆனால், அதற்காக சுதந்திரப்போராட்ட வரலாறு கொண்ட 'சிவகங்கைச்சீமை' படம் தோல்வியடைந்ததில் நமக்கு மகிழ்ச்சியோ உடன்பாடோ இல்லை. ஒரு திரைப்படம் தயாரிக்க எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பதை அறிந்த எவரும் எந்த ஒரு படமும் தோல்வியடைவதைக் கொண்டாட மாட்டார்கள்).
வெற்றிவேல் வீரவேல் :clap:Quote:
Originally Posted by Murali Srinivas
Quote:
Originally Posted by saradhaa_sn
திரையரங்கத்திற்குள்ளேயே எதிர் மறையான பிரச்சாரங்கள் செய்தும், அவற்றையெல்லாம் முறியடித்து மாபெரும் வெற்றியடைந்தது, கட்டபொம்மன் நிகழ்த்திய மற்றுமொரு சாதனையாகும்.
Celeberating 75 years of tamil cinema series...
today 10.30 pm, in Sun TV - " அன்பைத் தேடி "
friday 3rd Oct, 10.30 pm - " அந்த நாள் ".
பார்த்து மகிழுங்கள்.
saaradha,
You had mentioned that you wanted to see Chitra Paurnami. This is a truly useless movie, and Sivaji comes in a horrible wig! You can safely skip it...
Cheers
RV
More reviews at my blog on Sun TV's late night movies - http://awardakodukkaranga.wordpress.com/
Chiranjeevi at http://awardakodukkaranga.wordpress....;-chiranjeevi/
Irumbutthirai at http://awardakodukkaranga.wordpress....umbuth-thirai/
Kappalottiya thamizhan at http://awardakodukkaranga.wordpress....iya-thamizhan/
Rajapart rangadurai's review in ANanda vikatan at http://awardakodukkaranga.wordpress....rt-rangadurai/
This is a terrific discussion, but hard to read the older pages. Is there a consolidated article of all the points in this forum somewhere?
Pls go to the page 1 ,you can find direct links for important reviews ,artciles and old partsQuote:
Originally Posted by Bhoori
சாரதா,
நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. ஆனால் நடிகர் திலகத்தின் சாதனைகளை மறைக்க முடியாது என்பது மட்டுமல்ல பலவற்றை முறியடிக்கவும் முடியாது.
ஜோ & மோகன்,
நன்றி.
நடிகர் திலகத்தின் காலத்தால் அழியாத காவியப்படமான வசந்த மாளிகை வெளியான 36-வது ஆண்டு நாளான இன்று நடிகர் திலகத்தின் சாதனைகளை பற்றி மேலும் பேசுவோம்.
அன்புடன்
சிவாஜியின் சாதனை சிகரங்கள்
தொடர்ச்சி
வருடம் - 1959
1. இதே ஆண்டில் கட்டபொம்மன் மற்றும் பாகப்பிரிவினை படங்களின் நடுவில் வெளி வந்தும் 100 நாட்கள் ஓடிய வெற்றிப்படம் மரகதம்.
2. மீண்டும் ஒரே நாள் வித்யாசத்தில் இரண்டு நடிகர் திலகம் படங்கள் வெளியாயின. அவற்றில் ஒன்று வெற்றிப்படமாக அமைந்தது.
அவள் யார் - 30.10.1959
பாகப்பிரிவினை - 31.01.1959
வருடம் - 1960
1. பாகப்பிரிவினையை தொடர்ந்து 1960 பொங்கலன்று வெளியான இரும்பு திரையும் வெள்ளி விழா கொண்டாடியது.
கோவை - கர்னாடிக்.
2. தொடர்ந்து மூன்று வெள்ளி விழா படங்களை கொடுத்ததன் மூலம் மீண்டும் ஒரு முதன் முதல் சாதனை புரிந்தார் நடிகர் திலகம்.
3. இந்த வருடம் இரும்பு திரை தவிர மூன்று 100 நாட்கள் படங்களை கொடுத்தார் நடிகர் திலகம்.
தெய்வப்பிறவி
படிக்காத மேதை
விடி வெள்ளி.
4. ஒரே வருடத்தில் ஒரு வெள்ளி விழா மற்றும் மூன்று 100 நாட்கள் படங்களை முதன் முதலாக கொடுத்தவர் நடிகர் திலகம் தான்.
5. படிக்காத மேதை ஆசியாவின் மிக பெரிய திரையரங்கமான மதுரை - தங்கத்தில் 100 நாட்கள் ஓடிய நடிகர் திலகத்தின் இரண்டாவது படமாக அமைந்தது.
6. படிக்காத மேதை ஓடிய 116 நாட்களில் பெற்ற வசூல் எல்லோரையும் திகைக்க வைத்தது.
116 நாட்களில் மொத்த வசூல் - Rs 2,21,314- 1 அ - 3 ந பை
வரி நீக்கிய நிகர வசூல் - Rs 1,65,293 - 4 அ - 11 ந பை
விநியோகஸ்தர் பங்கு - Rs 89,103 - 15 அ - 5 ந பை
7. நடிகர் திலகம் திரையில் நடிகர் திலகமாகவே தோன்றிய படம் - பாவை விளக்கு.
8. படத்தில் நடித்தவர்கள் எல்லோரும் நடிகர்களாகவே முதல் காட்சியில் தோன்றி பின் நடிகர் திலகம் அகிலனின் பாவை விளக்கு நாவலை படிக்க அனைவரும் கதாபாத்திரங்களாக மாறியது முதன் முதலாக வந்தது பாவை விளக்கு படத்தில் தான்.
9. முதன் முதலாக தாஜ் மகாலில் படமாக்கப்பட்ட தமிழ் படம் - பாவை விளக்கு.
10. முதன் முதலாக ஸ்ரீதர் இயக்கிய நடிகர் திலகத்தின் படம் - விடி வெள்ளி.
11. மீண்டும் ஒரே நாளில் (தீபாவளி) இரண்டு நடிகர் திலகத்தின் படங்கள் வெளியானது
பாவை விளக்கு - 19.10.1960
பெற்ற மனம் - 19.10.1960
(சாதனைகள் தொடரும்)
அன்புடன்
Murali Sir,
தொடர்ந்து பொழியட்டும் உங்கள் தகவல் மழை :D
Murali sir,
இந்தத் தகவல்களையெல்லாம் படிக்கும போது ஒரே மலைப்பாக இருக்கிறது. நன்றிகள் பல.
Now sorry for deviating from the sub. You remember sir, the other day we were discussing about Endhan pon vanname & Thirutheril.. where 2 singers had rendered their voice for NT. In this case both were quite comfortable for NT.
When I was watching Raja, I was surprised to note that SPB had sung " Irandil ondru.....ennai vittu veru yaaru unnai thoduvar ". But here there was a sea of difference between TMS & SPB's voice with regards to NT's looks. Other songs in the same film like Kalyana ponnu, Nee varuvai ena naan kathirundhen etc, suited NT to the T. But, IMO the timbre was missing in SPB's voice and it sounded so tender and sort of naive to me.
I used to get the same feeling while listening to Pottu vaitha mugamo, also.
Murali-sar, looking at your efforts I think we need a separate forum for NT alone. Thank you and here's me spurring you on for more.
Rangan, you may be right.
But as Murali-sar narrated elsewhere, this time it was NT who compromised and acted according to SPB's voice.
:exactly:Quote:
Originally Posted by joe
Murali,Quote:
Originally Posted by Murali Srinivas
Sorry for the late response. நடிகர் திலகத்தின் கட்டபொம்மன் சாதனை, நிஜ கட்டபொம்மனின் சாதனையை காட்டிலும் மிக பிரமிக்கதாக உள்ளது.
One question: Did Kattabomman run 189 or 181 days at Madurai New Cinema? I remember I saw a picture frame in New Cinema tea stall celebrating 189 days run of Kattabomman.
Another thing I wonder with Kattabomman: Though GG-Padmini has got a duet song, it is totally an NT show in Kattabomman. It looks like NT is the only hero in tamil cinema history who never cared about duet songs, still delivered a gigantic performance and success.
Some more tidbits about Kattabomman re-run at Madurai Alankar: As Murali mentioned, Kattabomman rerun was hugely successful and never occurred before in Madurai (still wonder if some other actor has beaten this rerun performance in Madurai). A group of fans who lived around Alankar used to go the theater every day evening to see whether the show was full or not. The fans were so wild that they even broke and crushed the ticket counter to get an entry. Additionally, the Kattabomman craze was so huge that the fake tickets were in circulation for this re-released movie.
By next September, we will be celebrating 50th year golden jubilee of Kattabomman release. Though the film is 50 years old, one can still see that NT's performance and the film are so fresh in the minds of fans and general public. This one and only performance has proved that NT is Kattabomman and Kattabomman is NT and thus got an unique entry in tamil film history.
Finally, how did this movie fare at Tirunelveli? Please keep up your great writings.
Regards
Saradha,Quote:
Originally Posted by saradhaa_sn
Great writings. NT must have had a great fan following in 1959. Though the political party that you mentioned was a great force, didn't NT fans counter them?
I read somewhere that during Deiva piravi (1960 release as Murali covered) run in Madurai, NT and SSR fans clashed and it ended in கத்திக்குத்து.
Regards
Joe, Mohan, Rakesh & Prabhu,
Thanks. Will do.
tac,
Thanks for your comments. About the no of days of Kattabomman, I too had that doubt. But it is your area people [Arasamaram Siavji Groups] who had confirmed that it is 181. If it is indeed 189, nothing like that.
Kattabomman's golden Jublie celebration falls in May 2009 as the date of release is 16.05.1959. A function is being planned for that.
Regards
[html:a51ced0d9c]
http://www.dinakaran.com/cinema/engl...97/sivaji1.GIF
[/html:a51ced0d9c]
நடிப்புலக சக்கரவர்த்தி 80-வது பிறந்த தினம் .
வாழ்க ஐயா நின் புகழ்!!
சிவாஜியின் சாதனை சிகரங்கள்
தொடர்ச்சி
வருடம் - 1961
1. நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல தமிழ் ரசிக பெருமக்கள் அனைவருக்கும் மறக்க முடியாத ஆண்டு இது. காரணம் காலங்களை கடந்து அமர காவியங்களாக அனைவர் மனதிலும் இடம் பெற்றிருக்கும் படங்கள் வெளியான வருடம்
பாவ மன்னிப்பு
பாச மலர்
பாலும் பழமும்
கப்பலோட்டிய தமிழன்
2. 1959 -ஐ போலவே இந்த வருடத்திலும் இரண்டு வெள்ளி விழா படங்கள்.
பாவ மன்னிப்பு
சென்னை - சாந்தி
பாச மலர்
சென்னை - சித்ரா
3. முதன் முதலாக சென்னை சாந்தி திரையரங்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் - பாவ மன்னிப்பு
4. முதன் முதலாக சென்னையில் பிரம்மாண்டமான பலூன் மூலமாக விளம்பரம் செய்யப்பட்ட படம் - பாவ மன்னிப்பு.
இடம்- சென்னை சாந்தி திரையரங்கம்
5. முதன் முதலாக பாடல்கள் அடங்கிய இசை தட்டுகள் அதிகளவில் விற்ற சரித்திரம் படைத்தது நடிகர் திலகத்தின் பாவ மன்னிப்பு தான்.
6. முதன் முதலாக ஒரு திரைப்படத்தின் பாடல்களில் சிறந்தவற்றை தேர்ந்தெடுக்கும் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மக்களுக்கு பரிசு வழங்கப்பட்டதும் பாவ மன்னிப்பு படத்திற்கு தான்.
7. தமிழ் திரைப்பட வரலாற்றிலே முதன் முதலாக டூரிங் டாக்கிஸ் அரங்கில் 100 நாட்கள் ஓடிய தமிழ் படம் - பாவ மன்னிப்பு
ராமநாதபுரம் - சிவாஜி டூரிங் டாக்கிஸ்
இது முதன் முதல் மட்டுமல்ல இன்று வரை முறியடிக்க முடியாத சாதனையை செய்த ஒரே நடிகன் நடிகர் திலகம் தான்
8. 1961- ம் வருடத்திய தேசிய திரைப்பட விருது குழுவால் அகில இந்திய அளவில் இரண்டாவது சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு வெள்ளி பதக்கம் பரிசு பெற்ற முதல் தமிழ் படம் நடிகர் திலகத்தின் பாவ மன்னிப்பு
1961 -ம் வருடத்திய வெற்றி சரித்திரம் தொடரும்
(சாதனைகள் தொடரும்)
அன்புடன்
நடிப்புக்கு இன்று வயது எண்பது
தெய்வமே தெய்வமே நன்றி சொல்வோம் தெய்வமே
நடிப்பு கலையின் தவப்புதல்வனை
தமிழ் தாயின் தெய்வ மகனை
தமிழ் நாட்டிற்கு தந்த தெய்வதிற்கு
நன்றி சொல்வோம்.
உலகத்திலே ஒருவன் என உயர்ந்து நிற்கும் கலைத்தாயின் தலை மகனுக்கு இன்று அகவை எண்பது.
இன்னும் பல நூற்றாண்டு வாழும் உன் புகழ்.
அன்புடன்
His fame shall remain as long as Tamil is spoken in some part of the world...or as long as Movies are being watched......
I hope many of you have decided to come over to the function at 6.30 PM at Anna Arivaalayam.....
Happy Birthday to Acting as Murali so well put it.
நடிப்பு சக்கரவர்த்திக்கு இன்று வயது 80 - வாழ்க NT புகழ்!!
Wish a great success to this function at Anna Arivaalayam. Could someone please upload the b-day function clips here?
I am hardly a great NT fan compared to the fervency of the participants on this thread. But as a fan of thamizh cinema, Sivaji has had a profound effect on my life. Given below is a brief on how and I offer this as thanks on the 80th birthday of this unmatched thespian.
-------------------------------------------------------------------------------------
கோவையில், பட்டுநூல்க்காரர் தெருவில், அதிகாலை பல் தேய்ப்பதற்கு முன்னே பால் கரந்து, பத்து மைல் தள்ளி இருந்த அரசு பள்ளிக்கூடம் வரை நடந்து சென்று தமிழ் மீடியத்தில் பாடம் கற்றவர்கள் எனது வீட்டார். இன்று நான் தானியங்கி பல் துலக்கியால் பல் தேய்த்து, பரவசமாக பாடல் கேட்டுக்கொண்டே எனது சொகுசு வண்டியில் பணிக்குச் சென்று, அங்கே அமெரிக்க ஆங்கிலத்தில் அனாயாசமாக பேசுகின்றேன் என்றால் அதில் அவர்களது பங்கே அதிகம். அவர்களுடன் கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் இதை மறுத்தலாகாது. ஒன்றரை வருடங்கள் முன்பு இதை அறிந்திருந்த போதும் நான் உணர்ந்த பாடில்லை. எனக்கு அதை உணர்த்தியது விழுப்புரம் சின்னையாபிள்ளை கணேசன் என்ற மாநடிகன்.
சிறு வயதில் எனது வீட்டில் பயங்கர கெடுபிடி, சினிமா விஷயத்தில். காரணம் இல்லாமல் இல்லை. சரித்திரப் பாட புத்தகத்தில் விகடனும், குமுதமும் மறைத்து சினிமா துணுக்கும், சிறுகதையும் படித்தவன் தான் நான். இரு இடங்களில் மட்டும் கெடுபிடி தளரும். ஒன்று இசை. எங்கள் வீட்டில் அனைவரும் மெல்லிசை மன்னர்களின் இசைக்கும், கண்ணதாசனின் தமிழுக்கும், சௌந்தரராஜன் மற்றும் ஸ்ரீனிவாசின் கந்தர்வ குரல்களுக்கும் அடிமை. மற்றொன்று காவியப்படங்கள். குறிப்பாக சிவாஜி கணேசன் நடித்த காவியப்படங்களுக்கு தடை தளர்த்தப் படும். கர்ணன் படத்தின் ஓடி ஓடித் தேய்ந்துப் போன பதிவு ஒன்று தான் சிவாஜியுடனான எனது முதல் அறிமுகம். ஆங்கிலத்தில் சொல்வது போல் அதை விட நல்ல அறிமுகம் கிடைத்தல் அரிது. மகாபாரதத்தின் முழுக் கதையையும் அறிந்திருந்த போதிலும், இறுதியில் கணேசன் என் கண்ணில் நீரை வரவழைத்துவிட்டார். அதற்க்குப் பின் அதிகம் முறை பார்த்த படம் திருவிளையாடல்.
எனது பதிமூன்றாவது (சும்மாவா அதை ராசியில்லாத எண் என்கிறார்கள்?) வயதில் கணேசனும் நானும் பாதைகள் பிரிந்தோம். பன்னிரண்டு வருடங்களுக்கு அதிக பேச்சு வார்த்தை இல்லை. அதனால் இழப்பு முழுவதும் எனக்கே என்று நான் உணரவும் இல்லை. எனது இருபத்தி ஐந்தாவது வயதில் நான் மனதளவில் முழுமையான அமெரிக்க-வாசி ஆகிவிட்டேன், காலையில் சவரம் செய்யும் பொழுது கண்ணாடியில் ஒரு இந்தியனை பார்த்து திடுக்கிடும் அளவுக்கு. வீட்டாருடன் நடக்கும் தொலைப்பேசி உரையாடல்கள் பொதுவாக சண்டையில் சென்று முடிந்தன. கணேசனுக்கு யாரோ சொல்லி இருக்க வேண்டும். தற்செயலாக மீண்டும் சந்தித்த பொழுது, அவர் பெரிய தேவர், நான் சக்தி. "ஏய் சக்தி, நான் தேய்ந்" - அசரீரீ போல் ஒரு குரல். "அந்த காட்டு மிராண்டிக் கூட்டத்திலே ங்கோப்பனும் ஒருத்தன் தேய்ந்னு மறந்துடாதே" - எனக்கு ஐந்து வயது இருக்கும்போது மறைந்து போன எனது தந்தையின் உருவம் கொண்டார். "வாழுறது முக்கியம்தேன் இல்லேன்னு சொல்லலே. ஆனா மத்தவங்களுக்கு பயனுள்ள வாழ்க்கையா வாழ்ந்துட்டு செத்து போறது தான் அந்த சாவுக்கே பெருமெ. வெதை வெதைச்சொடனே பழம் சாப்பிடணும்னு நெனைக்க முடியோமா? இன்னைக்கு நான் வெதைக்குறேன், நாளைக்கு நீ பழம் சாப்பிடுவே, அப்பறோம் உன் மகன் சாப்பிடுவான், அதுக்கு அப்பறோம் அவன் மகன் சாப்பிடுவான். இதெல்லாம் என்ன பெருமையா? கடமை, ஒவ்வொருத்தனோட கடமை" - கணவன் இழந்த எனது தாயையும், தகப்பன் இழந்த என்னையும் தாங்கிய எனது மாமாவின் உருவம் கொண்டார். முன்கோபத்துடன் சட்டையை பிடித்து பிறகு கைவிட்ட போது சுள்ளென்று சீற்றம் கொள்ளும் எனது தாயை நினைவூட்டினார். கர்ணனைப் போலவே பெரிய தேவரும் கண்ணீர் துளி பெருக்கினார்.
இந்தக் காட்சி சிவாஜியைத் தவிர எவர் நடித்தாலும், சிறப்பாக அமைவது கடினம். என் சிந்தையை ஆட்கொள்வது அதை விடக் கடினம். எனது பெற்றோரையும் அவரது ஏக்கங்களையும் எனக்குப் புரிய வைத்து, அவர்களை எனக்குத் திருப்பித் தந்ததில் ஒரு பங்கு சிவாஜியைச் சேரும். மேற்கூறிய விஷயங்கள் எதுவும் நான் முன்பே அறிந்திராதவை அல்ல, உணர்ந்திராதவை மட்டுமே. என் அறிவிற்கும் உணர்விற்கும் பாலம் கட்டிய ஆசானாகிய கணேசனின் எண்பதாவது பிறந்த நாள் அன்று என் மனமார்ந்த நன்றியை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
Remembering Sri Sivaji Ganesan on the day he appeared in this world.
:bow:
http://www.youtube.com/watch?v=F318_2ASXzo
நம் அன்புக்குரிய நடிகர் திலகத்திற்கு இன்று 80ம் ஆண்டு பிறந்த தினம்.
தமிழ்த்திரையுலகில் ஓரு சூறாவளி போல் தோன்றி எண்ணற்ற சாதனைகள் படைத்து வீறு நடை போட்டவர் நம் நடிகர் திலகம்.
அவர், தான் ஏற்று நடித்து, சாகா வரம் பெற்ற பலப்பல கதாபாத்திரங்கள் மூலம் கோடான கோடி ரசிகர்களின் நினைவுகளில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை.
என்றென்றும் மக்கள் மனதில் பசு மரத்தானி போல பதிந்திருக்கும் நடிப்பின் சிகரமே, ஓங்குக உமது புகழ்!!! :bow: :bow: :bow:
My views on Anbai thedi can be found here http://awardakodukkaranga.wordpress.com/
A Legend, an unparalleled actor who gave immense joy and happiness by his extraordinary perfomances and became a part of our life & an Immortal. Remembering Dr Shivaji Ganesan, :D :notworthy: :notworthy:
:notworthy: :notworthy:
Nadigar Thilakathirkku Pirantha Thina vaazhthukkal :notworthy:
complicateur, very touching write-up. I am not talking about just the content - adhai ezhudhina vidham. Ippadi ezhudha mudiyaradhu oru varam dhaan.
You should post more on the Sivaji movies that impacted you.
Murali, no wonder paava mannippu is a high-grossing audio album. Enna our album. One of my favourite V-R-Sivaji combo. Also, I believe this movie captured Sivaji at his handsomest best. (appodhiya vazhakkapadi, theeyile eriya vachu, Silar Sirppar Azhuvarnu second-half-la kanner pizhiya vechu sodhappitaanga is my feeling but that intro - I cant remember if it was Vandha Naal mudhal or Ellorum Kondaduvom but in either case - simply mesmerising style and I think he had the optimum weight and shape in this movie.)