"கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு"..
நன்றி திரு.ராகவேந்திரன் சார்! இதோ.. நீங்கள் எதிர்பார்த்தபடியே உங்கள் பார்வைக்கும், மற்றும் அனைத்து நண்பர்களின் பார்வைக்கும் அந்த அற்புதப் பாடலான,
"கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு".
அன்பு நண்பர்களே!
பக்ஷிராஜாவின் "மரகதம்" 53-ஆவது உதய தினம். 53-வருடங்கள். அடேயப்பா!... ஆனால் நடிகர் திலகத்தை இங்கு உங்கள் 'கண்ணுக்குள்ளே' பாருங்கள். கருப்பு-வெள்ளை-யில் தான் அவர் முகம் எவ்வளவு வசீகரம்! பத்மினியும் கூடத்தான்...இதோ...அந்த அற்புதப் பாடல் காட்சி. உங்களுக்காக...
http://www.youtube.com/watch?v=z7110...yer_detailpage
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்.
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்.
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
தேசிய நடிகருக்கு நினைவஞ்சலி
இன்று 22.08.2011 மறக்க முடியாத நாள். நம் அன்புச் சகோதரர், தேசிய நடிகர் சசிகுமார் அவர்களின் நினைவு நாள். நானிலம் போற்ற வாழ்ந்த அந்த நல்லவருக்கு நமது திரியின் சார்பாக 37வது ஆண்டு நினைவாஞ்சலியை கண்ணீரோடு காணிக்கை ஆக்குகிறோம்.
இதோ...சசிகுமார் அவர்கள் "பாரத விலாஸ்" திரைக் காவியத்தில் நடித்துள்ள உணர்ச்சி மயமான ஒரு காட்சி ஒலி-ஒளி வடிவில்.
இந்தக் காட்சியில் சசிகுமார் அவர்கள் சொல்லுவதாக வரும் ஒரு வசனம் நம் கண்களைப் பனிக்கச் செய்கிறது. ("கசாப்புக் கடையிலே வெட்டுப் படுற ஆட்டுக்குக் கூட நாம ஏன் சாகப் போறோம்கிற காரணம் தெரியுமே") என்கிற வசனம் தான் அது. அது போல் தானும் தன் அன்பு மனைவியும் நெருப்புக்கு இரையாகப் போகிறோம் என்று முன்னமேயே காரணம் தெரியாமல் போய் விட்டதோ நம் தேசிய நெஞ்சத்திற்கு?..
http://www.youtube.com/watch?v=aerN6j-Q99o&feature=player_detailpage
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.