Originally Posted by
chinnakkannan
ரொம்ப நாளா கேட்க நினைத்திருந்த கேள்வி..
உத்தம புத்திரன் படத்தில் வரும் யாரடி நீ மோகினி பாடல் பல காலம் முன் இசைக்களஞ்சியத்தில் கேட்ட போது - அன்பே வா வா ..என் அன்பே வா வா வா வரிகள் முடிந்த பிறகு..
நானும் நீயும் நல்ல ஜோடி
தேனும் பாலும் போன்ற ஜோடி
கூட்டமாகப் பாட்டுப்பாடி
ஆசையாக ஆடி ஆடி...
.... அப்புறம் பலவரிகள்..மன்னா இங்கே நீயே வாவா என முடிந்து பின் அன்பே வா வா..வந்து க்ளாப்ஸில் முடியும்
ஐ திங்க்..அதற்கப்புறம் தான் நினைவு தெரிந்து கல்லூரிப் பருவத்தில் பரமேஸ்வரியில் படம் பார்த்தேன்.. அந்த வரிகள் இல்லை..பின்னும் இன்று வரை இல்லை..
கேள்வி.. அப்படி வரிகள் இருந்தது தானே..?