சென்சர் போர்டு ஒன்னு கத்திரியும் கையுமா அலையும் போது, அழகை வர்ணிப்பதாவது ஒண்ணாவது? கஷ்ட பட்டு ஒப்பேத்துகிறேன். எனக்கு நிஜமான சோதனை உயர்ந்த மனிதனில் இருந்து இளைய தலைமுறை வரையே. பார்க்கலாம் அவர்களா,நானா என்று!!!
Printable View
2-10-2013 'குமுதம்' இதழில் வெளிவந்த மேஜர் தாசன் அவர்களின் 'பேசும்படம்' கட்டுரை.
http://i812.photobucket.com/albums/z...ps20c3dea2.jpg
http://i812.photobucket.com/albums/z...ps422b332f.jpg
http://i812.photobucket.com/albums/z...ps8f9d2806.jpg
நன்றி திரு. வாசுதேவன் நான் படிக்க முடியாத புத்தகங்களில் இருந்து நியூஸ் தந்தமைக்கு.
திரியில் புதிய பதிவுகள் இல்லாதபோது, பழைய பதிவுகளை மீண்டும் முதல் பக்கத்திலிருந்து பார்த்து வருவது என் வழக்கம். அப்படிப் புரட்டிக்கொண்டு வரும்போது ஏற்கெனவே பார்த்த பல்வேறு புதையல்களை மீண்டும் பார்த்து அசந்து போகிறேன். அதில் குறிப்பாக இந்த 11-வது பாகத்தில் 1051-வது பதிப்பாக, "என்.டி.360 டிகிரி" அவர்களின் பதிப்பு ரொம்பவே அசர வைத்தது / வைக்கிறது.
நடிகர்திலகத்தின் சண்டைக்காட்சிகள் என்ற தலைப்பில் நெய்வேலி வாசுதேவன் அவர்கள் அளித்திருந்த என் தம்பி, திருடன், ராஜா, சொர்க்கம், தர்மம் எங்கே, காத்தவராயன், தங்க சுரங்கம் ஆகிய படங்களின் வீடியோக்களை ஒரே பதிவில் தந்து அசத்தியிருக்கிறார். என்ன ஒரு அட்டகாசமான பெர்பாமென்ஸ்.
அதிலும் தர்மம் எங்கே படத்தின் சண்டைக்காட்சியைப் பார்த்து கண்ணில் நீர் வந்துவிட்டது. தடி தடியான நான்கு பயில்வான்களுடன் அடி வாங்குவதும் அடி கொடுப்பதுமாக, என்ன சுறுசுறுப்பு. என்ன விறுவிறுப்பு. அதிலும் அவர் முகத்தை தீயில் கருக்கும்போது நம் மனம் பதறும். (இந்தக்காட்சிகளை பார்க்கும்போது இங்கே பதிவிட்ட ஒருவரை நினைத்துக் கொண்டே பார்த்தேன்).
1972-ல் அவர் மிக சிரத்தையும் சிரமமும் எடுத்து நடித்த படம் தர்மம் எங்கேதான்.
நீங்கள் அனைவரும் மீண்டும் காண வேண்டும் என்பதற்காகவே எழுதியுள்ளேன். மறவாமல் பாருங்கள். பதிவு எண் 1051....
கார்த்திக் குறிப்பிட்ட பதிவு எண் 1051க்கான இணைப்பு
http://www.mayyam.com/talk/showthrea...=1#post1058757
Dear Ragavendran Sir
From today 09-10-2013 onwards Daily 3 Shows Jamindar Ananth Visit at PERALAM - VISWALAKSHMI
From 18-10-2013 onwards at Trichy Ponnagar - VVV Theatre
Thalaivar's Vasantha maligai (35mm) continuously Screening almost all theatres in TT Area with great support of fans and public
C.Ramachandran.
Dear Vasudevan Sir
Thank you for Kumudham Article about NT. Nice Memories. Super
C.Ramachandran
திரைப்படப் பட்டியல் திரியில் தற்போது ..... எல்லாம் உனக்காக -
அசைந்து குலுங்கும்
இப்பாடலைப் பற்றிய ஆங்கில விளக்கவுரை யூட்யூப் இணைய தளத்திலிருந்து...
This is a classic example of subtle acting. Sivaji and Savithri simply steal your hearts in the scene. This should be completely watched to understand the situation and hence the song is preceded and followed by the related narration. Anand (Sivaji) happens to marry Sarala (Savithri), physically handicapped. This is the first night scene. See how to the understanding between husband and wife is explored in this situation. She plays the visuals of her dance performance and both husband and wife look each other on seeing the visual. There is so much of mind expressed in their looks. At one stage Sarala sings along the song which moves Anand.
An outstanding performance in a intricate relationship sequence stands testimony to the genius in Sivaji and Savithri.
Film: ELLAM UNAKKAGA
Direction: Athurthi Subba Rao
Cast: Sivaji Ganesan, Savithri, Ranga Rao, T.S. Balaiah, C.K. Saraswathi and others.
Music: K.V. Mahadevan
தற்போது திரைப்படப் பட்டியல் திரியில் நடிகர் திலகத்தின் உன்னதமான நெஞ்சை உருக வைக்கும் மென்மையான நடிப்பில் எல்லாம் உனக்காக திரைப்படம் இடம் பெற்றுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள இப்பாடல் காட்சி என் வாழ்நாளில் எப்போதுமே நான் மிகவும் விரும்பிப் பார்க்கும் பாடல் காட்சியாகும். உலகத்திலிருக்கும் அத்தனை விதமான நடிப்புப் பள்ளிகளிலும் பாடமாக வைக்கப் பட வேண்டிய காட்சி. இந்தப் பாடலைத் தனியாகப் பார்ப்பதை விட அதன் முன்னும் பின்னும் தொடர்புடைய காட்சிகளோடு பார்த்தால் தான் இதன் மகத்துவம் விளங்கும் என்பதற்காக காட்சிகளுடன் தரவேற்றப் பட்டுள்ளது. குறிப்பாக திரையில் தன்னுடைய நாட்டியத்தைப் பார்த்தவாறே சாவித்திரி கலங்குவதும் சாவித்திரியை திரையிலும் அருகிலுமாக மாற்றி மாற்றிப் பார்த்து தன் மன ஓட்டத்தை முகத்தில் பிரதிபலிப்பதும், உலகத்தில் இவர்களை மிஞ்சிய நடிக நடிகையர் இருப்பார்களா என்ற கேள்வியைக் கட்டாயம் ஒவ்வொருவர் நெஞ்சிலும் எழுப்பும். தவறு செய்யும் சுபாவம் மனிதனுக்குத் தான் இருக்கும் என்று நினைத்திருந்தேன், இப்போது தான் புரிகிறது, அது இறைவனுக்கும் உண்டு என்று நடிகர் திலகம் சொல்லும் போது நெஞ்சில் ஊடுருவிச் சென்று இதயத்தைப் பிழிந்து விடும். ஒரு வினாடி கடவுளையே நம்மை மறந்து திட்டுவோம், அந்த அளவிற்கு அவருடைய குரலில் இரக்கமும் ஏக்கமும் சோகமும் இழையோடும். மீண்டும் மீண்டும் இக்காட்சியை நீங்கள் பார்க்கப் போவது நிச்சயம். சாவித்திரியின் குரலில் அந்த வேதனையை மீறியும் ஒரு சந்தோஷத்தை வெளிப்படுத்துவார். மிக மிகச் சிறந்த காட்சியாக இதனையும், மிகச் சிறந்த நடிகர் திலகத்தின் படங்களில் ஒன்றாக இப்படத்தையும் நான் கருதுவதற்கு இக்காட்சியும் ஒரு முக்கியமான காரணம்.
http://youtu.be/aDMB2fTqLaQ
இப்படத்தில், குறிப்பாக இக் காட்சியில் திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின் பங்கு பிரமிக்கத் தக்கது. அவருக்கு சிறப்பாக நம் பாராட்டுக்கள்.
நடிகர் திலகத்தின் காதல் பாடல்கள் தொடரைத் துவக்கியிருக்கும் கோபால் சாருக்கு இக்காட்சி சமர்ப்பணம்